Monday 21 May 2007

இறைவனைக் காண முடியுமா?...

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே கேட்கப்பட்டு இன்றுவரை சற்றும் அசராமல் நிலைத்திருக்கும் கேள்வி இது. இறைவனை பற்றி சிந்திக்காத மனிதர்கள் இருப்பது சந்தேகமே.
ஒவ்வொரு மனிதனும் "தன்னையும்" "தன்னைச்சுற்றியுள்ள உலகத்தையும்" "உணர்கிறான்". இது" என்ன?", "ஏன்?" , "எப்படி வந்தது?" என்ற கேள்வியால் தோன்றியது தான். " இறைவன் " என்ற சொல். இந்த சொல்லுக்கு உரிய பரம் பொருள், கண்ணால் காணவோ, அறிவால் உணர்த்தவோ முடியாத தன்மயுடையது. ஆனால் உணரமுடியும். உணர முடிந்த ஒரு சிலராலும் பிறருக்கு விளக்கமுடியாத தன்மை உடையது. அறிவை விளக்கலாம். உணர்வை அப்படி முடியாது. ஏன் இந்த சிக்கல். அறிவின் அடிப்படத்தகராறு இது. ஒன்றை புதிதாக அறிந்து கொள்ள வேண்டுமானால் அதன் வெவ்வேறு தன்மைகளை கொண்ட குறைந்தபட்சம் வேறு இரு பொருட்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒன்றை பற்றிய அறிவை எப்பொதும் இன்னொன்றை தொடர்பு படுத்தியே பெற முடியும். அது மட்டுமல்ல அறிவை வெளிப்படுத்துபவர் மட்டுமின்றி பெறுபவரையும் பொறுத்து தான் பெறப்படும் அறிவு அமைகிறது.

 அறிவு என்பது சார்பானது . சார்பான ஒன்றால் ஒருபோதும் முழுமயான பரம் பொருளை விளக்க முடியாது "ரோஜா மாம்பழம்" என்றதும் என்ன அறிந்து கொள்வீர்கள். இதற்கு முன் "ரோஜாப்பூ நிறம்"" மற்றும்"மாம்பழம்" உங்களுக்கு தெரிந்திருந்தால் ரோஜா நிறமுள்ள மாம்பழம் என்று அறிந்து விடுவீர்கள். மாம்பழ ரோஜா என்றால் அது வேறு அர்த்தம். நீங்கள் ரோஜா அல்லது மாம்பழத்தை இதற்கு முன் அறிந்திருக்காவிட்டால் "ரோஜா மாம்பழத்தை உங்களுக்கு விளக்கவே முடியாது. ஒன்று இன்னொரு ரோஜா என்றோ அல்லது இன்னொரு மாம்பழம் என்று தான் அறிந்திருப்பீர்கள். மட்டுமல்ல நீங்கள் மஞ்சள் நிற ரோஜாப்பூ மட்டுமே இதற்கு முன் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நான் ரோஜா மாம்பழம் என்று சொன்னதை மஞ்சள் மாம்பழமாகவே அறிவீர்கள். பிறவியிலேயே  பார்வையற்றவ்ரிடம் "நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா" என்று பாடினால் எப்படி பொருள் கொள்ளுவார்.

அன்பு, காதல் இதெல்லாம் உணர்வது. அறிவது அல்ல. எல்லோரும் இதை தனிதனியாக உணர்ந்திருந்தாலும், ஒருவருடையா அன்பை , காதலை பிறருக்கு சொல்வதில் எவ்வளவு கஸ்டம்.. ஒரு ப்ளேட் மட்டன் பிரியானியானியின் சுவை சமையல்காரரை பொறுத்துத்து மட்டுமல்ல .சாப்பிடுபவரின் பசியையும் பொறுத்தது

இறைவனை பற்றி, பரம்பொருளை பற்றி எவரிடமும், எந்த வேதங்களிலும், எந்த மஹான்களிடமும் கேட்காதீர்கள், அப்படி அறிய முடியாது அறிவித்து கொடுக்கவும் அவர்களால் முடியாது. இந்த கேள்வி எங்கிருந்து தோன்றியதோ அங்கேயே கேளுங்கள். கேட்டு உங்களால் அறிய முடியாது என்றாலும் உணர முடியும்.

மெய்ஞான அறிவு என்பது விண்ணிலிருந்து பூமியை பார்ப்பது போல் என்றால் மனிதனின் சாதாரண பவுதீக அறிவு என்பது ஒரு இடுங்கிய 14 " டீ வி யில் உலகக் காட்சிகள் பார்ப்பது போன்றது. இங்கே காட்டப்படுவதை தான் பார்க்கிறோம். உள்ளதை உள்ள படி அறிவதில்லை.  காட்சிகளுக்கு எல்லை உண்டு..நாம் உண்மை என்று உணரும் எல்லாமே மற்றொரு உண்மை நம் கருத்தில் உண்டாக்கும் விளைவுகளேயே..  இந்தகைய காட்சிப் பிழைக்கு காரணம் நம் புலன்களின் குறைபாடே, முனனே  இருக்கும் கண்ணாடி போன்றது உணமை அதை உணராமல் அதன் பிதிபலிப்பு  எனும் விளைவால் தெரியும் காட்சி தான் நாம் உண்மையென்று உணருவது.மனம் இந்த மயக்கத்திலிருந்து  மீளும் போது அதுவரை தெரிந்த காட்சிகள் மறைந்து கண்ணாடி மட்டுமே தெரி்யும்.

ஒரு நாத்திகன் தன் வீட்டு வாசலில் GOD is No where என்று எழுதி வைத்தானாம். அதைப் பார்த்து ஒரு துறவி அந்த வீட்டுக்குள் வந்து எங்கே கடவுள் என்று தேடினான். நாத்திகனோ துறவியிடம் ஏன் "நீ வாசலில் போர்டை சரியாகப் படிக் வில்லையா? என்றானாம். அதற்கு அந்த துறவி சொன்னார் "படித்தேன் God is now here என்றிருந்தது அதனால் தான் வந்தேன் . பார்வைகள் பல விதம்.

ஒன்றைத் தேடும் முன் எதை தேடுகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.
உதாரணமாக கூகிளில் ஒன்றைத் தேடும் போது எதைப் பற்றி தேடுகிறோம் என்பதை டைப் செய்தால் தான் தேட முடியும். இதுவரை எந்த டிக்ஸ்னரியிலும் காணப்படாத ஒன்றை dfdoaiuetjhzdckldsditekl என்று தேடினால் என்ன கிடைக்கும்.

இறைவன் என்று நம்மால் கற்பனை செய்யக்கூடிய எல்லாமே இறைவன் படைத்ததாக நம்பப்படும் இந்த பூமியில் நம் மூளை உணரக்கூடிய உருவங்களை மட்டும் தான் . படைத்தவனும் படைப்பும் ஒன்றாகாது..இந்த உலகத்தின் காட்சிகளை ,பண்புகளை மனம் தான் உருவாக்கி அறிந்து கொள்கிறது,எனவே இறைவனை இந்த உலகத்தில் தேடுவது அபத்தம்

எத்தனை மனங்கள் இருக்கிறதோ அத்தனை விதமாக.மனிதர்கள் இறைவனை கற்பனை செய்கிறார்கள். இறைவன் உருவமற்றவன் என்று சொன்னாலும் கூட இறைவனை ஏதாவது மனித அடையாளங்களில் தான் உள்ளத்தில் உருவகப்படுத்துகிறார்கள். அதுவே அந்த இறைவனுக்கு இணை வைக்கும் ஒன்றாகி விடுகிறது..ஒரு தலைவரை  நாம் பார்த்ததிலை. ஆனால் நம்மை அவர் எப்போதும் அருகிலிருந்து கவனிக்கிறார். என்று வைத்துகொள்வோம்..அவரை கவுரவிக்க விரும்புகிறோம் .தலைர் எப்படியிருப்பார் என்று தெரியாது என்பதற்காக   தெரிந்த இன்னொருவரை  அல்லது  ஒரு அடையாளத்தை அவர் முன்னிலையிலே கவுரவித்து மாலையிட்டால் அது தலைவரை அவமதிப்பதாகாதா?

மனித அறிவால் உணர்ந்து கொள்ள முடியாததை எப்படி உருவகப்படுத்தி வணங்குவது. எல்லோரும் அவரவருக்கு தோன்றிய உருவகத்தில் இறைவனை நம்புகிறார்கள். அனால் அந்த இறைவனுக்கும் உண்மைக்கும் தூரம் மிக அதிகம். இதில் உன் கடவுள் என் கடவுள் என்று அடித்துக்கொண்டு உயிரை விடுகிறார்கள். ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஒரே இறைவனையா நம்புகிறார்கள். இல்லை அவர்களது கடவுளின் பெயர் தான் ஒன்றாக இருக்கும். கடவுளைப் பற்றிய அகக் காட்சிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தான்.

கடவுள் உண்டு என்று ஆத்திகனும் கடவுள் இல்லை என்று நாத்திகனும் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்டு என்றும் இல்லையென்றும் கூறும் முன் அந்தக் கடவுள் எது என்பதில் ஒத்த கருத்து கொள்கிறார்களா? இல்லை. ராமசாமி ஆணா? பெண்ணா? என்று விவாதிக்கலாம். ஆடு கத்துவதை எந்த மொழி என்று வகைப்படுத்துவது. இறைவன் உண்டு என்பதும் உண்மை தான் இல்லை என்பதும் உண்மை தான் . இறைவன் என்பதற்கு நாம் கொள்ளும் பொருளைப் பொறுத்தது அது.

இறைவன் எப்படி இருக்க முடியும் என்று சிந்திப்பது நம் அறிவால் அமைத்துப் பார்க்க முடியாத விஷயம் . ஆனால் இறைவன் எப்படியெல்லாம் இருக்க முடியாது என்று கூடவா அறிவுக்கு எட்டாது.  அறிவுக்கும்  முரண் பாடாக தெரிந்தும் பிடிவாதமாக மனித குணாதிசயங்களுடன் மனிதச் சாயலாகவே கடவுளை உருவகப்படுத்துவது  பகுத்தறிவல்ல

Sunday 20 May 2007

ஆரோக்கியமான வாழ்வை பெற மூன்று நாட்களில் நுரையீரலை எளிதாக சுத்தம் செய்வது எவ்வாறு ? ஒரு சிறப்பு தவகல்..

புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.
✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.
முதல் நாள்:
✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.
✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப்புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.
✔ மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.
✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.
✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும்.
அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.
✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.
✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.