Monday 23 July 2007

மறுகாலனிய எதிர்ப்புப் போரில் நமது வரலாற்றுக் கடமையை உணர்வோம்!



23/03/2011 - ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் தூக்கிலிடப்பட்ட 80வது நினைவு தினம். காந்தி தன்னுடைய போலியான அகிம்சை முகத்தை, ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடிவருடித்தனத்தைத் தக்க வைத்து கொள்வதற்காக, மாவீரன் பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை "இவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்று சொல்லி வஞ்சம் தீர்த்து கொண்ட நாள்.

நமது விடுதலைப் போராட்ட மரபில், கட்டபொம்மன், திப்பு, மருது சகோதரர்கள் என்று நீளும் வீரத்திற்கான நீண்ட பட்டியலில் பகத்சிங் வரை, தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறும் போது அந்தந்த காலகட்டத்தின் துரோகிகளையும் நினைவு கூற் வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எட்டப்பனை இகழாமல் கட்டபொம்மனை மட்டும் தனியே புகழ முடியாது. ஏனெனில் துரோகத்தால் தான் தியாகத்தின் இன்றியமையாத தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. காந்தியின் துரோக அரசியலிலிருந்து புரட்சிகர தோழர்களின் போராட்டங்களை, தியாகங்களைத் தனியே பிரிக்கமுடியாது. மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளாக களம் காணவிருக்கும் நமக்கு எதிராக எட்டப்பன் முதல் காந்தி வரையிலான துரோகிகளின் வாரிசுகளும் அணிவகுத்து நிற்கிறார்கள். குறிப்பாக காங்கிரசு - பா.ஜ.க - போலி கம்யூனிஸ்டுகள் துரோகத்தின் வாரிசுகளாக, நமக்குச் சவாலாக களத்தில் நிற்கின்றனர். தியாகத்தையும் துரோகத்தையும் "இரண்டும் ஒன்று தான்" என்பதாக உருவகப்படுத்துகிறார்கள். பகத்சிங்கும் காந்தியும் வெவ்வேறு வழியில் நம் தேச விடுதலைக்காக போராடியவர்கள் தான் என்று மோசடியான சித்திரத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

தியாகத்தையும் துரோகத்தையும் சமமாக மதிப்பிடுவதன் மூலம் உண்மையான தியாகிகளை கீழ்மைப்படுத்தியும் துரோகிகளை மேன்மைப்படுத்தியும் பேசுவதன் மூலம் வரலாற்றைத்
திருத்திவிடலாம் என்று துடிக்கிறார்கள். கம்யூனிசத் திருத்தல்வாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் தான் நம்முடைய வாலாற்றில் துரோகிகளின் பங்களிப்பையும் திருத்திவிடத் தவிக்கிறார்கள். இதன் மூலம் பெயரில் மட்டும் 'கம்யூனிசத்தை'க் கொண்டிருக்கும் அவர்கள் துரோகத்தின் வாரிசுகளாகத் தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்து கொள்கிறார்கள்.

சேகுவேராவையும் பகத்சிங்கையும் காட்சிப்படுத்துவது இளைஞர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். தக்கவைக்கப்பட்ட அணிகள் காந்தியின் வாரிசாக வார்த்தெடுக்கப்படுகிறார்கள். பகத்சிங்கின் மீது நேசம் கொண்டவர்கள், புரட்சியை நேசிப்பவர்கள் போலிக்கம்யூனிச அரசியலிலிருந்து விலகி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துக்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்தை படைப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த போலிகள், இப்போதைய இழிந்த சமூக நிலைமைகளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை, தேவை ஆட்சிமாற்றம் மட்டும் தான் என்று அதுதான் தமது இறுதி இலக்கு என்றும் சொல்லிவருகின்றனர்.

போலிச் சுதந்திரத்திற்கு முந்தைய காலனிய இந்தியாவில், தேவை சமூகப் பொருளாதார மாற்றம், அரசியல் அதிகாரம் மட்டும் போதாது என்றும் சொல்லி புரட்சிக்கான அவசியத்தை
வலியுறுத்துகிறார் பகத்சிங். ஆனால், காந்தி புரட்சியெல்லாம் தேவையில்லை ஆட்சி மாற்றம் நமது தேசத்தை மறுகாலனிய நாடாக்குவதற்குத்தான் வழி செய்திருக்கிறது. போலி சுதந்திரத்துக்கு முந்தைய காந்தியின் "ஆட்சி மாற்றம் போதும்" என்கிற கோரிக்கை இன்றைய மறுகாலனிய சூழலில் போலி கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையாக மாறியிருக்கிறாது. காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தமது தலைமையிலான ஆட்சி மட்டும் தான் இலக்கு. தமது தலைமையில் ஆட்சியமைவதே "மக்கள் ஜனநாயகப் புரட்சி"யாகும் என்றும் பிதற்றிவருகிறார்கள்.

1920-ல் கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி காங்கிரசுக்கு வால்பிடித்துக் கொண்டிருந்தனர் போலி கம்யூனிசத்தின் முன்னோடிகள். ஆனால், தோழர் பகத்சிங், தனது சொந்த புரிதலின் மூலம் மார்க்சிய - லெனினியத்தை உள்வாங்கி கொண்டு கம்யூனிசப் பண்புகளில் படிப்படியாக வளர்ந்து, சோஷலிசம் குறித்தும், சமூக முழுமைக்குமான விடுதலை குறித்தும், சமதர்மம் தழைக்க வேண்டும் என்றும் பேசுகிறார். அப்படிப்பட்ட சமூகத்தைப் படைக்க ரஷ்யாவைப் போன்ற புரட்சி ஒன்றை விடுதலை போராட்டத்தினுடாக நமது நாட்டிலும் நடத்த வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்திகிறார். 'புரட்சி ஓங்குக!' என்ற விண்ணதிரும் முழக்கத்தை விடுதலைப் போர்க்களத்தில் ஒலிக்கச் செய்த பெருமைக்குரியவராக பகத்சிங் திகழ்ந்தார்.

சீக்கிய மதப் பழமைவாத குடும்ப பின்னணியிலிருந்து வந்த பகத்சிங், ஒரு கம்யூனிச புரட்சியாளனாக வளர்ந்து கொண்டிருந்த அதே நாட்களில், நம்ம 'காம்ரேடுகள்' கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி - காங்கிரசின் ஏகாதிபத்திய எடுபிடி அரசியலுக்கு துணைபோயினர். காந்தியின் பார்ப்பனிய பிற்போக்கு வாதங்களில் கிறங்கிப் போய்க்கிடந்தது அன்றைய போலிக்கம்யூனிசத்தலைமை. அதற்கு இப்போதைய போலிகம்யூனிஸ்டுகள் சொல்லும் அருமையான விளக்கத்தையும் கொஞ்சம் கேளுங்கள். பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் காந்தியை விமர்சித்தால், தமது கட்சி மக்களிடமிருந்து தனிமைபட்டுவிடும் என்று அஞ்சியே வேறு வழியின்றி காந்திக்கு வால்பிடித்தார்களாம். இது போன்ற மொன்னைத்தனமான காரணங்களைச் சிறிதும் கூசாமல் சொல்வதற்கு போலிகள் தயங்குவதேயில்லை.

'பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட' காந்தியை, தீண்டாமைச் சவடால்களையும் போலியான மதச்சார்பின்மையையும் பேசித் திரிந்த காந்தியை, ஒரு வருணாசிரம வெறியன் தான் காந்தி என்று பண்பாட்டுத்தளத்தில் திரைகிழித்து அம்பலப்படுத்தினாரே அண்ணல் அம்பேத்கர், அவர் என்ன தனிமைப்பட்டுவிட்டாரா?

பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கர் காந்தியை அம்பலப்படுத்தியதைப்போல, விடுதலை போராட்ட அரசியல் களத்தில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் 'மகாத்மா'வின் போலி அகிம்சையை, ஏகாதிப்பத்திய எடுபிடித்தனத்தை, பிர்லாவின் மாளிகையில் படுத்துக்கொண்டு எளிமையை போதிப்பதை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தினார்கள். காந்தியை துணிந்து அம்பலப்படுத்தியதற்காக பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் யாரும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை. மாறாக காந்தியின் போலிபிம்பம் தான் மக்கள் மத்தியில் அம்பலமானது. அதனால் தான் காந்தி பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் மரண தண்டனைக்கு துணை போனதோடு, "அவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்றும் சொன்னார்.

இவ்வாறாக புரட்சிகர தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட காந்திக்கு முன்வாயும் பின்வாயுமாக இருந்துகொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தார்கள் போலிகள். இந்தியாவின் போலி கம்யூனிச வரலாறு தொடக்க காலம் முதல் இன்றைய மறுகாலனியச் சூழல் வரை காந்தி - காங்கிரசோடு கூட்டணி கட்டிக்கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. தேர்தலுக்குத் தேர்தல் நடைபெறும் அணிமாற்ற நாடகமெல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இல்லாமல் ஒரே அணியாக, துரோக அணியாக காங்கிரசோடு தம்மை போலிகள் நிலைப்படுத்தி வருகிறார்கள்.

துரோகி காந்தியையும் தியாகத்தோழன் பகத்சிங்கையும் தேச விடுதலைப் போராளிகள் என்று சமமாக மதிப்பிடும் போலிகள், அகிம்சையா? ஆயுதமா? என்ற ஒன்றில் மட்டும்தான் இவர்கள் வேறுபடுவதாகச் சித்தரிக்கிறார்கள். இதே முறையைத்தான் தமது போலி கம்யூனிச அரசியலுக்கும் புரட்சிகர அரசியலுக்கும் இடையிலுள்ள வேறுபாடாகவும் சித்தரிக்க முயலுகிறார்கள். இந்தியாவின் 'அக்மார்க்' இடதுசாரிகளான தமக்கும் மார்க்சிய - லெனினிய புரட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடும் ஆயுதப்பாதையா? அமைதிப்பாதையா? என்பது மட்டும் தான் என்பதாகச் சொல்லி, போலி கம்யூனிஸ்டு கட்சியின் பெரும்பாலான அணிகள் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக முழுமைக்கான விடுதலையையும் வலியுறுத்துகிற புரட்சிகர அரசியலுக்கும், வெறும் ஆட்சிமாற்றம் மட்டும் போதுமானது என்ற காந்திய - காங்கிரசு அரசியலுக்கும் இருந்த பாரதூரமான வேறுபாடுதான் இன்றைய புரட்சிகர சக்திகளுக்கும் போலிகளுக்குமான வேறுபாடாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்துடன் கரம் கோர்த்துக் கொண்டு செயல்படும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கமான போலி கம்யூனிஸ்டு கட்சிக்கும், ஏகாதிபத்தியத்தை இந்த மண்ணை விட்டு துரத்தியடிக்கும் மறுகாலனிய எதிர்ப்புப் போராளிகளுக்கும் அடிப்படையிலேயே எதிரெதிரான கருத்துக்கள் இருப்பதை போலி கம்யூனிச அணிகளுக்கு நாம் புரியவைக்க வேண்டியிருக்கிறது.

சிபிஎம் கட்சியின் ஈ.எம்.எஸ். என்கிற சங்கரன் நம்பூதிரி முதற்கொண்டு பி. ராமமூர்த்தி வரையிலான தலைவர்களின் பார்ப்பனிய - காந்திய - காங்கிரசு பாணியில் தமது கட்சியை வழி நடத்தியிருப்பது தத்துவார்த்த ரீதியில் 'புதிய ஜனநாயகம்' இதழால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய மறுகாலனிய சூழலில், மறுகாலனிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சற்றும் சளையாதவர்களாக களத்தில் நிற்கிறார்கள் போலிகள். ப. சிதம்பரம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக உள்நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள "காட்டு வேட்டை" எனும் உள்நாட்டுப் போரில் போலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசு அரசுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் தோளோடு தோள் நின்று, அந்த பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையிட வழிவகை செய்துகொடுக்கிறார்கள்.

இன்றைய மறுகாலனியத்திற்கு எதிரான சமர்க் களத்தில் பகத்சிங்கின் உண்மையான அரசியல் வாரிசுகளான புரட்சிகர சக்திகள் இதர ஓட்டுப்பொறுக்கி கும்பலை நேரதிராகச் சந்திக்க வேண்டிய சூழலை வரலாற்று ரீதியான தொடர் நிகழ்வுகள் நமக்கு வழங்கியுள்ளன. எதிரிகளையும் துரோகிகளையும் சந்திக்கின்ற வாய்ப்பை நமக்கு வரலாறு வழங்கியிருக்கிறாது. பகத்சிங்கின் வாரிசுகளான நமக்கு வரலாற்றுக் கடமை குறித்து சொல்லியா கொடுக்க வேண்டும்!

Tuesday 10 July 2007

மஹ்தீ என்பவர் யார்?



மஹ்தீ என்பவர் யார் எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சில போலிகள் முஸ்லிம் சமுதாயத்தை ஒவ்வொரு காலத்திலும் வழி கெடுத்து வருகின்றனர்.
முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் மஹ்தீ என்பவருக்கு மார்க்க அடிப்படையில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் ஆன்மீக குருவாகவோ மார்க்கச் சட்ட நிபுணராகவோ திகழ்வார் என்றோ ஆதாரப்பூர்வமான எந்த முன்னறிவிப்பும் இல்லை. அவர் வலிமை மிக்க மன்னராக இருப்பார் என்பது தான் முன்னறிவிப்பின் முக்கிய சாரம். அவரது ஆட்சி பரந்து விரிந்து இருக்கும். அவரது ஆட்சியில் செல்வம் செழித்து ஓடும். நீதியும் நேர்மையும் கோலோச்சும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும்.
4284 - حدثنا أحمد بن إبراهيم ثنا عبد الله بن جعفر الرقي ثنا أبو المليح الحسن بن عمر عن زياد بن بيان عن علي بن نفيل عن سعيد بن المسيب عن أم سلمة قالت : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول " المهدي من عترتي من ولد فاطمة " ت / 6 م قال عبد الله بن جعفر وسمعت أبا المليح يثني على علي بن نفيل ويذكر منه صلاحا . قال الشيخ الألباني : صحيح سنن أبي داود [2 /509]

மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்
நூல் அபூதாவூத்
4282 - حدثنا مسدد أن عمر بن عبيد حدثهم ح وثنا محمد بن العلاء ثنا أبو بكر يعني ابن عياش ح وثنا مسدد قال ثنا يحيى عن سفيان ح وثنا أحمد بن إبراهيم قال ثنا عبيد الله بن موسى أخبرنا زائدة ح وثنا أحمد بن إبراهيم قال حدثني عبيد الله بن موسى عن فطر المعنى واحد كلهم عن عاصم عن زر عن عبد الله : عن النبي صلى الله عليه و سلم قال " لو لم يبق من الدنيا إلا يوم " قال زائدة في حديثه " لطول الله ذلك اليوم " ثم اتفقوا " حتى يبعث [ الله ] فيه رجلا مني " أو " من أهل بيتي يواطىء اسمه اسمي واسم أبيه اسم أبي " زاد في حديث فطر " يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا " وقال في حديث سفيان " لا تذهب أو لاتنقضي الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يواطىء اسمه اسمي " ت / 4 م قال أبو داود لفظ عمر وأبي بكر بمعنى سفيان . قال الشيخ الألباني : حسن صحيح سنن أبي داود [2 /508]

பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் அபூதாவூத்

2230 - حدثنا عبيد بن أسباط بن محمد القرشي الكوفي قال حدثني أبي حدثنا سفيان الثوري عن عاصم بن بهدلة عن زر عن عبد الله قال : قال رسول الله صلى الله عليه و سلم لا تذهب الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يواطئ اسمه اسمي قال أبو عيسى وفي الباب عن علي و أبي سعيد و أم سلمة و أبي هريرة وهذا حديث حسن صحيح هذا حديث حسن صحيح قال الشيخ الألباني : حسن صحيح سنن الترمذي [4 /505]
அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் திர்மிதி

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மஹ்தீ என்ற பெயரில் ஒரு மன்னர் வருவார் என்று முன்னறிவிப்புச் செய்கின்றன. இந்த முன்னறிவிப்பில் நாம் செயல்படுத்துவதற்கு ஒரு விஷயமும் இல்லை. நமது காலத்தில் அப்படி ஒருவர் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிபு நிறைவேறி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அப்படி வராவிட்டால் எதிர்காலத்தில் அவர் வருவார் என்று கருதிக் கொள்ள வேண்டும். இதைத் தவிர மார்கக் ரீதியாக மஹ்திக்கு எந்த முக்கியத்துவமும் இல்ல.

மிர்சா குலாம் காதியானி என்பவன் தன்னை மஹ்தீ என்று சொல்லிக் கொண்டான். வாக்களிக்கப்பட்ட மஹ்தீ என்று வாதிட்டான். அவன் பொய்யன் என்பதற்கு மேறகண்ட நபி மொழிகள் போதுமான ஆதாரமாகும்.
அவனுடைய பெயர் முஹம்மத் அல்ல. அஹ்மதும் அல்ல. அவனுடைய பெயர் குலாம் அஹ்மத் (அதாவது அஹ்மதின் அடிமை.) நபிகள் நாயகத்தின் அடிமை என்பது தான் இவனது பெயர் என்பதால் இவன் நிச்சயம் மஹ்தீ அல்ல. மேலும் இவனது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் அல்ல. எனவே இவன் மஹ்தீ கிடையாது என்பது தெளிவாகி விட்டது. மேலும் இவன் அரபு நாட்டை ஆளவும் இல்லை. நீதியால் பூமியை நிரப்பவும் இல்லை. இவன் பாகிஸ்தானில் கூட ஆளவில்லை. முஸ்லிமல்லாத சிறுபான்மை பிரிவாகத் தான் இவனும் இவனைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். எனவே இவன் மஹ்தீ அல்ல என்பது நூறு சதவீதம் உண்மை.
இது போல் ஷியாக்கள் முஹம்மத் பின் அல்ஹசன் அலஸ்கரீ என்பவர் தான் மஹ்தீ என்று கூறுகின்றனர். இவர் அல்காயின் எனவும் குறிப்பிடப்படுவார். இவரது பெயர் நபிகள் நாய்கத்தின் பெயராக இருந்தாலும் இவரது தந்தை பெயர் ஹசன் என்பதாகும். அப்துல்லாஹ் அல்ல. எனவே இவர் மஹ்தீ அல்ல என்பது உறுதி. மேலும் அவர் பூமியை ஆளவுமில்லை; நீதியால் நிரப்பவுமில்லை.
இது போல் நம் தமிழகத்தில் கூட கிருஷ்னகிரி மாவட்டம் பாலக்கோட்டிலும் ஈரோட்டிலும் மஹ்தியாக்கள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். யாரோ ஒருவர் ஒரு காலத்தில் தன்னை மஹ்தீ எனக் கூற அதை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் இதுவும் கட்டுக்கதையாகும் இவர் ஃபாத்திமாவின் வழித்தோன்றல் என்பதற்கு ஆதாரம் இல்லை. இவரும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது அல்ல.மேலும் இவர் பாலக்கோட்டைக் கூட ஆட்சி செய்யவில்லை.

மஹ்தீ என்பவர் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு மன்னரே தவிர முரீது கொடுத்து மக்களை வழி கெடுப்பவர் அல்ல. இந்த உண்மை விளங்காத மக்களிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் தான் மஹ்தீ என்று வாதிட்டு மக்களை வழிகெடுத்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.


மஹ்தி பற்றிய உண்மை நிலை என்ன?

ஷீஆக்களிடையே மஹ்தி பற்றி பல வகையான நம்பிக்கைகள் உள்ளன. 

முஹம்மத் இப்னு அல்ஹனபிய்யா என்பவர்தான் மஹ்தி என்று கைஸானிய்யாக்களும், முஹம்மத் இப்னு அல் ஹஸன் அல் அஸ்கரி தான் மஹ்தி என்று இமாமிய்யாக்களும், இன்னும் பலர் உண்டு என்று மற்ற பிரிவினர்களும்; நம்புகிறார்கள்.

உண்மையில் மஹ்தியைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மஹ்தியைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.மஹ்தி பற்றிய உண்மைச் செய்திகளை விட அதிகமாக பொய்யும், புரட்டும், கட்டுக்கதைகளும்தான் உள்ளன.

இந்தக் கட்டுக்கதைகள் மூலமாகத்தான் போலிகள் பன்னெடுங் காலமாக முஸ்லீம் சமுதாயத்தை ஏமாற்றி வருகிறார்கள்.இந்த ஏமாற்றுப் பேர்வழிகளில் மிக முக்கிய இடம் வகிப்பவர்கள் ஷீயாக்கள் தான்.

மஹ்தீ'யை பின்பற்ற ஆதாரமா? 'அறிவீனமா?


மஹதீ'யாக்களுக்கு விவாத அறைகூவல் விடுத்துள்ள அண்ணன் ஜமாஅத், ''நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த மஹதீ அவர்கள் இன்னும் வரவில்லை. மஹதீ என்பவர் உண்மையில் வந்துவிட்டார் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக இவர்கள் நிரூபித்து விடுவார்களேயானால் நாம் அனைவரும் அந்த மஹதீயை பின்பற்றத் தயாராக உள்ளோம் என்று கூறியது. 
அப்போது நாம் மஹதீ வந்துவிட்டார் என்று ஒருவேளை மஹதி'யாக்கள் நிரூபித்து விட்டால் அந்த மஹதியை பின்பற்றத் தயார் என்று அண்ணன் ஜமாஅத் சொன்னது எந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்? எந்த ஹதீஸின் அடிப்படையில் என்று அண்ணன் ஜமாஅத் சொல்லத் தயாரா? மஹதி அவர்களை முஸ்லிம்கள் பின்பற்றலாம் என்பதற்கு  என்ன ஆதாரம்? என்று கேட்டோம்.
அதோடு, மஹ்தீ என்பவர்  வந்து விட்டார் என்று மஹதி'யாக்களால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்பதால் ஒரு பேச்சுக்கு அவரை பின்பற்றத் தயார் என்று சவால் விட்டோம் என்று அண்ணனின் தம்பிகள் ஜகா வாங்கக் கூடாது.ஏனெனில் மஹதீ அவர்கள் இன்றல்ல என்றாவது கண்டிப்பாக வரக் கூடியவரே! அப்படி வந்தால் அண்ணன் ஜமாஅத் அவரை பின்பற்றுவோம்  என்று சொல்வது எந்த ஆதாரத்தின்  அடிப்படையில் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் நாம் கூறியிருந்தோம்.


இதற்கு வழக்கம் போல துள்ளி வந்த பொய்ஜேயின் பினாமி, ஆதாரம்  என்ற பெயரில் பல விதண்டாவாதங்களை  வைத்துவிட்டு,  மஹதியை பின்பற்ற ஆதாரம் என்று ஒரே ஒரு குர்'ஆன் வசனத்தையும் வைத்துள்ளது. அந்த  வசனம் இதுதான்;



قُلْ إِن كَانَ لِلرَّحْمَنِ وَلَدٌ فَأَنَا أَوَّلُ الْعَابِدِينَ

(நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"[அல்-குர்'ஆன்43:81 ]


இந்த வசனத்தை எழுதிவிட்டு 'இப்ப என்னடா செய்யப்போற' என்று தனது தலைவனின் பாணியில் 'மரியாதையான' வார்த்தையில்  கேட்டுள்ளது பொய்யன் தளம். இந்த வசனத்தின் மூலம் பொய்ஜேயின் பினாமி சொல்ல வருவது என்னவென்றால், 'அல்லாஹ்விற்கு சந்ததியிருந்தால் நான் வணங்கத் தயார் என்று நபியவர்கள் எப்படி சொன்னார்களோ, அதே பாணியில் மஹ்தீ வந்து விட்டார் என்று நிரூபித்து விட்டால் அவரை பின்பற்றத்  தயார் என்று நாங்களும் சொன்னோம் என்று சொல்ல வருகிறது இந்த பினாமி. இதன் மூலம் தனது தலைவனைப் போல   மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடப் பார்க்கிறது  இந்த பினாமி. 

நன்றாக சிந்திக்கக் வேண்டும். அல்லாஹ்விற்கு சந்ததியுண்டு என்று கியாமநாள் வரைக்கும் எவராலும் நிரூபிக்க முடியாது என்பதால் தான், நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு தனது தூதருக்கு கட்டளையிடுகின்றான் இறைவன். 

ஆனால் மஹ்தீ நிலை அவ்வாறல்லவே! அவர் இன்றல்ல என்றாவது நிச்சயமாக வரக்கூடியவராயிற்றே! கியாமநாள் வரை வரவே செய்யாத  அல்லாஹ்வின் சந்ததிக்கு சொன்ன வசனத்தை இன்றோ நாளையோ அல்லது உலகம் அழிவதற்குள் நிச்சயமாக வரவிருக்கிற மஹ்தீ அவர்களுக்கு பொருத்துவது இவர்களுக்கு மண்டையில் எதுவுமில்லை என்று காட்டுகிறதல்லவா?


இன்னும் தெளிவாக இந்த மூளையை அடகு வைத்த கூட்டம் விளங்கிக் கொள்ளும் வகையில் சொல்வதாக இருந்தால், 'குழந்தைப் பேறு அறவே சாத்தியமில்லை என்ற நிலையில் உள்ள மலடியிடம், 'நீ பிள்ளை பெற்றுக் காட்டி விட்டால் நீ மலடியில்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன் என்று சவால் விடுவது அறிவுடமை. அதே சவாலை கருவுற்று நிறை மாசமாக இன்றோ நாளையோ பிள்ளை பெறும் நிலையில் இருக்கும் பெண்ணிடம் விட்டால் இது அறிவாளியின் செயலா? அடி முட்டாளின் செயலா? என்பதை அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் விளங்கிக் கொள்வார்களா?   

அண்ணனுக்கும், அவரை பின்பற்றும் தம்பிகளுக்கும் நேர்வழி கிடைத்திட இந்த புனித ரமலானில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை தவிர வேறு ஒன்றும் நம்மால் செய்ய இயலாது.


இலங்கையில் ஷீஆக்கள் தங்கள் மதத்தைப் பரப்ப எடுக்கும் முயற்சிகள் தொடர்பாக நாம் எழுதி வருகிறோம்.அதில் முதல் கட்டமாக ஷீஆக்களின் வழிகேடுகள் தொடர்பான செய்திகளை தருகிறோம்.தொடர்ந்து இலங்கையில் இவா்கள் செய்யும் அட்டகாசங்கள் தொடர்பாக ஆதாரத்துடன் விளக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

அன்பின் சகோதரர்களே ! இலங்கையில் ஷீயாக்களின் நடவடிக்கைகளின் உச்சகட்டமாக இலங்கையில் பல இணையதளங்கள் அவா்கள் மூலம் நடத்தப் படுவதும் , அதில் இஸ்லாத்திற்கு மாற்றமான ஷீயாக்களின் மதப் பிரச்சாரங்கள் வேகமாக முன்னெடுக்கப் படுவதும் தெரிய வந்துள்ளது. அதே போல் இலங்கை ஈரானிய தூதுவராலயத்தின் மூலம் செய்யப் படும் மதப் பிரச்சாரம் ,இஸ்லாமிய ஜமாஅத் என்ற பெயரில் நடக்கும் ஷீயாப் பிரச்சாரம் ஆகியவையும் நமக்குத் தெரிய வந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இதன் தொடரில் அது தொடர்பாக நாம் ஆதாரத்துடன் எழுதுவோம்.

Wednesday 4 July 2007

சகோதரத்துவத்தின் உன்னதம் - ரக்க்ஷா பந்தன்...

உறவுகளில் உள்ள உன்னத உறவான சகோதர உறவை கொண்டாடும் ஒரு பண்டிகை இது.

ஒரே கருவறையில் உறங்கி, ஒரே தொப்புள் கொடியில் இணைந்து, ஒரே மார்பில் அமுதுண்டு, ஒரே தொட்டிலில் உறங்கி, ஒரே தட்டில் உணவுண்டு, ஒரே பாயில் தூங்கி என இணைந்திருப்பதற்காகவே பிறந்தது போல் இருக்கும் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள பாசப் பிணைப்பை புனிதமாக மதித்து, அதை கொண்டாடும் ஒரு நன்னாள்.

இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதைக் குறித்த பல அனுமானங்கள் இருக்கிறது.

மகாபலி என்னும் அசுரன் விஷ்ணுவின் தீவிர பக்தனாயிருந்ததால், அவரும் வந்து "பக்தா என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொன்னதும், அவன் "என் நாட்டுக்கு காவல் காரனாயிரு" என்று சொன்னவுடன், அவர் வைகுண்டத்தை விட்டுவிட்டு, மகாபலியின் நாட்டுக்கு வாட்ச்மேன் வேலைக்கு போய்விட்டார். எத்தனை நாள்தான் லக்ஷ்மி தேவியும் தனிமையில் நாட்களை கழிப்பது. ஒரு நாள் "எங்கே போனாய் என் நாதா" என தேடிக்கொண்டே வந்து மகாபலியின் நாட்டில் நாதனைக் கண்டதும், அவர் இருந்த கோலத்தைப் பார்த்து, வேதனைப்பட்டு, ஒரு துன்புறும் பிராமிணப் பெண்ணாக வேடம் போட்டு, மகாபலியின் அரண்மனையில் ஐக்கியமாகிவிட்டார்.

இந்த ஆடி மாதத்து (ஹிந்தியில் ஷ்ராவண மாதம்) பௌர்ணமி தினத்தன்று, மகாபலியின் கையில் ஒரு சிறு கயிறைக் கட்டி, தான் யாரென்று வெளிப்படுத்தி, னது நாதனை தன்னோடு அனுப்ப வேண்டுமென கேட்கவே, மகாபலியும் சரி, விஷ்ணு, இனி நீ போகலாம் என சொல்லிவிட்டாராம். விஷ்ணுவும் தனது மனைவியுடன் வைகுண்டத்துக்கு சென்று விட்டாராம்.

இங்கு லக்ஷ்மி தேவி மகாபலியின் கையில் கட்டினாரே ஒரு கயிறு, அது தான் இன்றளவும் ராக்கி என்று எல்லோராலும் கட்டப்படுகிறதாம். ஆனால் இன்னொரு சுவையான கதையும் உண்டு.

டெல்லியை ஹுமாயூன் ஆண்ட காலமது. சித்தூர்கட் மகாராஜாவின் விதவை மனைவி ராணி கர்ணாவதி ஹுமாயூனுக்கு ஒரு ராக்கி அனுப்பி அத்துடன் ஒரு செய்தியும் அனுப்பினார். குஜராத்தின் ராஜாவான பகதூர் ஷா என்னை அதிகம் சீண்டிப்பார்க்கிறான், நீங்க எனக்கு அண்ணன் மாதிரித்தானே, கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன் என்று சொன்னதும், ஒரு இஸ்லாமியனான தனக்கு, ஒரு இந்து அரசப் பெண்ணிடமிருந்து வந்த சகோதர பாசத்திற்கான அழைப்பிற்கு மதிப்பளித்து, ஹுமாயூன் பகதூர்ஷாவை ஒரு தட்டு தட்டி வைத்தாராம். அன்றிலிருந்து ராக்கி என்பது சகோதர, சகோதரி உறவின் ஒரு உன்னத அடையாள சின்னமாகிவிட்டது.

இன்னும் கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இருந்த சகோதர பந்தம் போன்ற நிறைய கதைகள் இருந்தாலும், இன்றுவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு இந்த சகோதர சகோதரி உறவு தான்.

இந்த நாளில் சகோதரி தனது சகோதரனின் தீர்க்காயுளுக்காக இறைவனை வேண்டுகிறாள். சகோதரனுக்கென தனது கையால் இனிப்புகள் செய்து, சகோதரனை ஆரத்தி எடுத்து முத்தம் செய்து வாழ்த்தி, அவனுக்கு இனிப்பூட்டுகிறாள். அவனது கையில் தனது அன்பின் கயிறாகிய ராக்கியை கட்டி, நீ எனது சகோதரன், எனது அன்பிற்குரியவன், என்னை நேசிப்பவன், எனது பாதுகாவலன் என்பதை உணர்த்துகிறாள். சகோதரனும், தனது சகோதரியை கட்டியணைத்து, முத்தம் செய்து, என் வாழ்நாள் முழுக்க நான் உனக்கு பாதுகாவலனாயிருப்பேன் என உறுதியளிக்கிறான். சகோதரி அவனுக்கு இனிப்பு ஊட்டுகிறாள். சகோதரன் அவளுக்கு அன்பளிப்புகளை கொடுக்கிறான்.

நினைத்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான உறவு இது. இதுவரை எனக்கும் எத்தனையோ பெண்கள் ராக்கி கட்டியிருக்கிறார்கள் என்றாலும், எனது நெஞ்சைத் தொட்டவள் மறைந்த என்  மாற்றுமத சகோ தரி  சங்கீதாதான். கர்நாடகாவில் நான்  பெங்களூரில் வேலை செய்யும் போது போன் பூத்தில் பகுதி நேர  பணியாளரான  அவளை, நான் கர்நாடகா மாநிலத்தில் சந்தித்தேன். எப்படி அவளுக்கு அண்ணனானேன் என இன்று வரை புரியவில்லை. இன்றும் போன் பூத்இல் வேலை செய்யும்   ஒவ்வொரு  பெண்ணிலும் என் தங்கையை காண்கிறேன். அவளுக்கு இந்த ரக்க்ஷா பந்தன் பதிவு சமர்ப்பணம்.

இந்த பதிவை வாசிக்கும் நீங்களும் இந்த வருட ரக்க்ஷா பந்தன் நாளில் (ஆகஸ்ட் 5 ம் தேதி) உங்கள் சகோதரிகளிடம் உங்கள் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்துங்களேன். ஐடியாக்கள் பின்னூட்டத்தில வரவேற்கப்படுகின்றன.