Tuesday 30 October 2007

எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!

வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.

பூனை
பூனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.


புதினா
எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.


மனிதனின் முடி
மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.


நாப்தலின் உருண்டை
நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.


அம்மோனியா
எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.


மாட்டு சாணம்
எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.


ஆந்தை
கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.


மிளகு
எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.


பிரியாணி இலை
பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.


வெங்காயம்
எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.


பேபி பவுடர்
பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.

Monday 22 October 2007

ஆங்கில கடிதங்கள் எழுத கற்றுக்கொள்வோம்!...

 
ஆங்கில கடிதங்கள் எழுதும்போது நாம் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவை பின்வருமாறு

1)HEADING (தலைப்பு)
இதில் கடிதம் அனுப்புவரின் விலாசமும், தேதியும் இருக்கவேண்டும். வியாபார நிறுவனங்களில் அச்சடிக்கப்பட்ட Letter heads (முகவரிக் கடிதத்தாள்கள்) இருக்கும். அவற்றில் தேதியை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
2) SALUTATION(வணக்கவுரை)
அ) வியாபாரக் கடிதங்களில் தனிப்பட்ட ஒரு வணிகராய் இருந்தால் Dear sir (அன்புள்ள ஜயா) என்றும் பலருள்ள நிறுவனமாக (Company) இருந்தால் Dear sirs (அன்புள்ள ஜயன்மீர்) எனவும் எழுதுவேண்டும். மாதிரி (model) கடிதம் இம்முறைய நன்கு விளக்கும். அதனைக் காண்க.
ஆ) தந்தை, தாய் மற்ற உறவினர், பெரியவர்களுக்கு:

Dear Mother
Dear Mother
Dear uncle
Dear aunt
Dear sir
அன்புள்ள அப்பா
அன்புள்ள அம்மா
அன்புள்ள மாமா
அன்புள்ள அத்தை
அன்புள்ள ஜயா
            எனக்குறிப்பிட வேண்டும்.

இ) இரு நண்பர்களுக்கு:
Dear Murugan , Dear Sekar , Dear Thaiyuba என்று Dear வுடன் தோழன் அல்லது தோழியின் பெயரை எழுத வேண்டும். Dear Friend (அன்புள்ள நண்பரே) என எழுதகூடாது.

3) MESSAGE (கடிதச் செய்தி)
இதில் கூற வேண்டிய முக்கிய செய்தியை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதவேண்டும். செய்தி நீளமாக இருந்தால் பகுதிகளாக (Paragraph) பிரித்துக் கொள்ளவேண்டும்.

4) SUBSCRIPTION (வணக்க முடிவரை)
அ) இதில் தாய் தந்தை உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு:
Yours affectionately (தங்கள் அன்புள்ள) அல்லது Yours lovingly (தங்கள் அன்புள்ள) அல்லது Your affectionate son (தங்கள் அன்புள்ள மகன்) இவ்வாறு எழுதவேண்டும்.

ஆ) வயது முதிர்ந்த நண்பர்கள், பெரியவர்களுக்கு:
Yours sincerely (தங்கள் உண்மையுள்ள) Your truly (தங்கள் உண்மையுள்ள)

இ) வியாபாரிகள்:
Yours faithfully (தங்கள் நன்றியதிதலுள்ள) Yours truly (தங்கள் உண்மையுள்ள)
 
ஈ)அலுவலகம் :
 
 Best Regards,Kind Regards,Warm Regards   போன்றவை   போடவேண்டும்.

குறிப்பு: பலர் பங்குதாராக இருக்கும் வணிக நிறுவனத்தில்“For Rubber stamp” (ரப்பர் முத்திரை) இருக்கும். அதை Your faithfully க்கு கீழே பதிவு செய்து பிறகு கையொழுத்தினைப் போடவேண்டும். Model Letter யை நன்கு கவனிக்கவும். இவ்விஷயம் நன்கு தெளிவாகும்.

5) SIGNATURE(கையெழுத்து)
கடிதம் அனுப்புபவர் தெளிவாகத் தன் கையெழுத்தைப் போட வேண்டும். கையெழுத்து ஒழுங்கில்லாமல் இருந்தால், அதன்கீழ், தெளிவாக எழுத்துகளில் பெயரை எழுதுதல் நல்லது.

6) SUPERSCRIPTION (கடிதம் பெறுபவரின் விலாசம்)
விலாசத்தைக் கீழ்கண்டபடி தெளிவாக எழுதவேண்டும். அதில் அஞ்சல் எண் வீட்டு எண் முதலியன தெளிவாய் இருக்கவேண்டும்.
உதாரணம்:

வியாபார நிறுவனம் 
A.K.Kasi & Brothers Merchants,
No.37, Kallukatti South,
Karaikudi.             

தனிப்பட்டவர்
Karaikudi.LIC.M.Muthalibu,
45,pallivasal Street,
Muthuppattanam.

மேற்கூறிய ஆறு பகுதிகளைப் பற்றி நன்கு கவனித்து ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதும் போது இதனைப் பின்பற்றவும்.

Saturday 20 October 2007

மலேசியாவில் எனக்கு பிடித்த 50....



படிமம்:KL Composite2.jpgமலேசியா என்று சொன்னதுமே நாம் பார்த்ததில் பிடித்ததில் ரசித்ததில் சில எப்போதுமே நம் மனதில் ரீங்காரமிடும். மலேசியாவை பற்றிய 50 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். மலேசியாவை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று சோதிக்கலாமா? உங்களுக்கு இதில் எத்தனை வகை தெரியும்? பார்த்திருக்கிறீர்கள்? ருசித்திருக்கிறீர்கள்?

நீங்கள் மலேசியா வந்தால் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் பார்த்து, ருசித்து, அனுபவிக்க தவறாதீர்கள்!

 
உணவு

1- நாசி லெமாக் (Nasi Lemak)
2- நாசி கண்டார் (Nasi Kandar)
3- ரொட்டி சானாய் - (Roti Canai)
4- தே தாரேக் (Teh Tarik)
5- காஜாங் சாத்தே (Kajang Satay)
6- ரம்லி பர்கர் (Ramly Burger)
7- சார் கொய் தியாவ் (Char Koay Teow)
8- ஏ.பி.சி - (ABC - Air Batu Campur)
9- ரோஜாக் - (Rojak)
10- யீ சாங் (Yee Sang)

உச்சரிப்பு (தினமும் அதிகம் பயன்படுத்துவது)

11- லா (Lah)
12- மச்சான் (Machan)
13- அலாமாக் (Alamak)
14- தா பாவ் (Ta Pau)
15- சின் சாய் (Cin Cai)
16- அய்யோ (Aiyo)
17- மலேசியா போல்லே (Malaysia Boleh)
18- யாம் சேங் (Yam Seng)

பிரமுகர்கள்

19- துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman)
20- துன் டாக்டர் மகாதீர் முகமது (Tun Dr Mahathir Muhamad)
21- தான் ஸ்ரீ பி.ரம்லீ (Tan Sri P.Ramlee)
22- சூடீர்மான் (Sudirman)
23- மாட் ரெம்பிட் (Mat Rempit)
24- ஆ லோங் (Ah Long)
25- லாட் (Lat)

கட்டிடங்கள் & இடங்கள்

26- கெந்திங் ஹைக்லண்ட்ஸ் (Genting Highlands)
27- 24 மணி நேர மாமாக் ஸ்டால்ஸ் (24 Hour Mamak Stalls)
28- பத்துமலை (Batu Caves)
29- பெத்ரோனாஸ் இரட்டை கோபுரம் (Petronas Twin Tower)
30- பினாங்கு பாலம் (Penang Bridge)
31- புத்ராஜயா (Putrajaya)
32- கினாபாலு மலை (Mount Kinabalu)
33- சவ் கிட் ரோடு (Chow Kit Road)
34- குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம் ( KL International Airport)
35- மலாக்கா (Malacca)
36- டத்தாரான் மெர்டேக்கா (Dataran Merdeka)
37- இரவு சந்தை (Pasar Malam)

கலாச்சாரம் & மற்றவை

38- ப்ரோட்டோன் (Proton)
39- பாலீக் கம்போங் (Balik Kampung)
40- திறந்த வீடு உபசரிப்பு (Open House)
41- பாஜூ கூரூங் (Baju Kurung)
42- நீண்ட வீடு (Long House)
43- பாபா & ஞோஞ்ஞா (Baba & Nyonya)
44- மலேசியரின் விருந்தோம்பல் (Malaysian Hospitality)
45- "மலேசியன் நேரம்" - "Malaysian Time"
46- மை காட் - MyKad
47- 2020 தொலைநோக்கு திட்டம் (Vision 2020)
48- பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports)
49- வாயாங் கூலிட் (Wayang Kulit)
50- பல வர்ணங்களில் அங் பாவ் ( Ang Pow in many colours) - சீனர்கள் (சிவப்பு), மலாய்க்காரர்கள் (பச்சை), இந்தியர்கள் (மஞ்சள்)
தொகுப்பு: மு.அஜ்மல் கான்.

Friday 19 October 2007

இப்னு ஸினா (AVICENNA)அவர்கள் ஆற்றிய மருத்துவ சேவை பற்றிய சிறப்பு பார்வை ..

பிறந்த இடம் : கஜகஸ்தான்.
வாழ்ந்த காலம்: கி.பி 980- கி.பி1037
இறைவனின் வழிகாட்டுதல்களை பேணி நடந்தவர்கள் வாழ்வின் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதற்க்கு வரலாறு ஒரு சாட்சி.
இவ்வழியில் நடந்து மருத்துவ துறையில் மகத்தான இடம் பிடித்தவர் நம் முன்னோர்களில் ஒருவரான இப்னு ஸினா அவர்கள். 
இளவயதிலேயே இறைமறையை கற்று தேர்ந்த இவர் தன்னுடைய 17 வது வயதியதில் மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்து 4 வருடத்திற்க்குள் மருத்துவ நூலை எழுதும் அளவிற்க்கு தேர்ச்சி பெற்றார்.
இப்னுஸினா பல்துறை அறிவு சார்ந்த ஒரு மருத்துவர் ஆவார். இவர் வேதியியல் , தொல்லியல், இயற்பியல், உளவியல் , நிலவியல்,அறிவியல், கவிதை போன்ற துறைகளில் வல்லுனராக திகழ்ந்தார்.
இவர் முந்தையகால நவீன மருத்துவத்தின் தந்தையாக போற்றபடுகிறார். இப்னு ஸினா ஏறத்தாள 450 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவற்றில் கிதாபுல் ஷிஃபா ( THE BOOK OF HEALING) மற்றும் கானுன் (THE CANONE OF MEDICINE) ஆகிய இரண்டு நூல்களும் உலக பிரசித்து பெற்றவை. இவர் எழுதிய கானூன் நூல் இன்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது என்பது இதன் சிறப்பு.
இன்னும் மருத்துவ துறைகளில் பல அறிய சாதனைகளை நிகழ்த்தியும், முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
இப்னு ஸினா வின் இவ்வள பெரிய சாதனைகளிலால் தான் அவர் மருத்துவர்களின் மருத்துவர் (DOCTOR of DOCTOR)என்று போற்றபடுகிறார்.
மருத்துவ உலகில் அளவுகடந்த பல சாதனைகளை நிகழ்த்திகாட்டியும், முன்னோடியாகவும் இருந்து காட்டியவர் இப்னு ஸினா என்ற முஸ்லிம் நபர் என்பது நம்மில் எத்தனை நபருக்கு தெரியும்...????

Thursday 18 October 2007

மன்னிக்கப்படாத பாவம்!

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.
அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.
1) இணைவைத்தலின் தீமைகள்: -
  1. ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
  2. இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
  3. இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
  4. இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)
இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )
இணை வைத்தவனின் கதி: -
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)
இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.
இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் ‘சிலைகளை வணங்குவது’ என்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.
2) ஷிர்க் என்றால் என்ன?
ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.
அதாவது ஷிர்க் என்பது,
- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது
- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது
ஆகியவையாகும்.
ஷிர்கின் வகைகள்: -
ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: -
  1. பெரிய ஷிர்க்
  2. சிறிய ஷிர்க்
  3. மறைமுக ஷிர்க்
பெரிய ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.
சிறிய ஷிர்க் என்றால் என்ன?
அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது
பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது
இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.
மறைவான ஷிர்க் என்றால் என்ன?
மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.
3) ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம்: -
இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.
ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.
நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ஷிர்க் என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர். வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். வணக்கம் என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.
உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.
  • துஆ (பிரார்த்தனை) செய்தல்
  • ருகூவு / சஜ்தா செய்தல்
  • அழைத்து உதவி தேடுதல்
  • பாதுகாவல் தேடுதல்
  • நேர்ச்சை செய்தல்
  • தவாபு செய்தல்
  • சத்தியம் செய்தல்
  • குர்பானி கொடுத்தல்
  • ஆதரவு / தவக்குல் வைத்தல்
  • அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்
ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.
மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.
இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு உதாரணம் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
உதாரணம் -
ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: -
1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -
அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை, துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்
அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்
2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.
சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.
துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)
மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)
மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -
  • துஆ ஒரு வணக்கமாகும்.
  • அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.
  • பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.
  • அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்
எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.
நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -
நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.
எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -
ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -
திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.
யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.
அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“வரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 4:134)
இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)
நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (அல் குர்ஆன் 21:110)
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -
  • உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,
  • இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,
  • மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.
இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)
மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை ‘இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே’ என்ற தலைப்பில் பார்க்கவும்.
பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -
நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: -
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல் குர்ஆன் 40:60)
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)
‘உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்’ என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 35:14)
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)
‘எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்’ என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.’ (அல் குர்ஆன் 18:52)
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -
  • பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே
  • அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்
  • அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.
  • கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது
  • கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.
  • ல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை

Monday 15 October 2007

INFORM ALL YOUR FRIENDS & FAMILY ABOUT BANNED DRUGS.

    DEAR FRIENDS,
                               *Make a checklist, see whether this medicine is in your home or
whether it has been recommended by your doctor...
                                  **Please** **DO NOT** useit**... **

**Read Carefully **- **INFORM ALL YOUR FRIENDS & FAMILY *
*India** has become a dumping ground for banned drugs; also the business
for production of banned drugs is booming. Plz make sure that u buy drugs
 only if prescribed by a doctor(Also, ask which company manufactures it,
this would help to ensure that u get what is prescribed at the Drug Store)
and that also from a reputed drug store. Not many people know about these
banned drugs and consume them causing a lot of damage to themselves. We
forward Jokes and other junk all the time.... This is far more important.

DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA.... The most common ones are action 500 & Nimulid. **
**PHENYLPROPANOLAMINE:**
**Cold** and cough. Reason for ban : stroke**.**
Brand name : **Vicks Action-500**
________________________________________________________________________**
ANALGIN:**
This is a pain-killer.**Reason for ban: Bone marrow depression**.
Brand name:!** **Novalgin**
___________________________________________________________
CISAPRIDE:
Acidity, constipation.**Reason for ban : irregular heartbeat
Brand name : **Ciza, Syspride**
____________________________________________________________
DROPERIDOL:
Anti-depressant.**Reason for ban : Irregular heartbeat**.
Brand name :**Droperol**
______________________________________________________________
FURAZOLIDONE:
Antidiarrhoeal.**Reason for ban : Cancer**.
Brand name :**Furoxone, Lomofen**
_____________________________________________________________
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure..
Brand name : **Nise, Nimulid**
________________________________________________________________________**
NITROFURAZONE:**
Antibacterial cream.**Reason for ban : Cancer**.
Brand name :**Furacin**
________________________________________________________________________
PHENOLPHTHALEIN:
Laxative...**Reason for ban : Cancer**.
Brand name :**Agarol**
________! ______________________ __________________________________________
OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug.**Reason for ban : Bone marrow
depression**.
Brand name :**Sioril**
_______________________________________________________________________**
PIPERAZINE:**
Anti-worms....**Reason for ban : Nerve damage**.
Brand name :**Piperazine**
________________________________________________________________________
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal.**Reason for ban : Damage to sight**.**
Brand name:**Enteroquinol *
*=============================================================*
*PLZ SPREAD THE INFO.... YOU MAY JUST SAVE SOMEONE'S LIFE.*
*Prof.Jagdish Bhatia, MPH;Ph.D (UCLA)
Consultant Health Systems Management
Former Professor & Chairman Research & Publications, Indian Institute of
Management Bangalore
10 Bhuvaneshwari Nagar, C.V.Raman Nagar Post, Bangalore 560093, India
Telephone/Fax: 91-80-41481932*



Source: http://livedr.org/dangerous-drugs-have-been-globally-discarded-but-are-available-in-india/
       http://articles.timesofindia.indiatimes.com/2004-10-16/india/27146154_1_ban-reason-anti-inflammatory-drug

Tuesday 2 October 2007

Method of Statement For Installation of HVAC Equipment.


TABLE OF CONTENTS


1.        Scope of Work………………………………………………………………………Page No
2.        Reference…………………………………………………………………………...Page No
3         Responsibilities.....................................................................................................Page No
4.        Control Measures………..………………………………………………..….....Page No                
5.        Sequence of Activities……………………………………………………………….Page No
6.       Attachment…………………………………………………………………………...Page No
  
            * JSA (Job Safety Analysis)
            * SATIP
            * SAIC

           
             



1.               Scope of Work


1.1  This method statement explains the installation of HVAC units (AHU, ACCU & Ventilation Fan), including shifting the equipments and accessories at required location, assembling and installation of equipments.

2.            Reference Documents


2.1  Approved Drawings

2.2  Manufacturer’s Catalogues, Vendor Drawing
2.3   General Specifications for HVAC System
                                     

3.            Responsibilities


3.1  Mechanical / HVAC Engineer
    
·         He shall be overall responsible for the complete activity including, but not  limited to:

3.1.1 Assigning workman crew
3.1.2 Sequence of activities to be carried out for the work as per this Method
         Statement.
3.1.3 Stage inspection & surveillance
3.1.4 Notification to client engineer for inspection and daily commissioning activities.
3.1.5 Provide day to day guidance and delegate works as necessary.
3.1.6 Ensure that the equipment and tools required for carrying out the test are
         available, maintained and  used in safe manner.
3.1.7 Produce all necessary records for the confirmation of testing works completed
         and pass to QC inspector as required.

3.2 Mechanical/HVAC Supervisor

·         He shall be overall responsible for the activity including, but not limited to:

3.2.1      Assigning worksman crew.
3.2.2      Sequence of activities to be carried out for the work.
3.2.3      Ensure the quality levels are maintained.
3.2.4      Ensure that the equipment and tools required for carrying out the test are
available, maintained and used in safe manner.

                        3.3  QA/QC Inspector
                             
                         3.3.1 Maintain records of quality control ckeck sheets / report formats for the site
                                  Tests and inspection.
                         3.3.2 Carry out surveillance so as to ensure that the personel are working i accor-
                                   Dance with the approved standards.
                          3.3.3 Assurances of approved methods are being used for testing and material
                           receipt inspection.
                           3.3.4 Verification of material approval and vendor certification.

4.               Control Measures

4.1  Quality Control

4.1.1      Ensure availability of latest released for construction drawings and specifications.
4.1.2      Ensure the tools/equipment used for testing & commissioning purpose is calibrated and certificates available.

4.2  Safety

4.2.1      All equipment and accessories have been certified for their capacity
And integrity.
4.2.2      All personnel are issued with Personal Protective Equipment.
4.2.3      Care should be taken while lifting loads. Proper tagline must be used
          for guiding while lifting loads.
4.2.4      Should not impose any appreciable mechanical strain on fixing of th
connection and shall not cause any harmful mechanical damage
to the equipment.
4.2.5      Transfort material in stacked condition and secure all loads adequately
before transport. In case of loading by a loader,  no one shall be
present inside the vehicle. Do not keep the truck in running condition
while loading.
4.2.6      Inspect crane and all lifting tools & tackles before use. Never overload
any equipment/tools beyond their recommended SWL. Ensure no
overhead lines abstract the equipment movements in case it  happens proper isolation permit to be obtained from responsible
project engineer.
4.2.7      No one should move under load at any circumtances. Engage only
experienced person to make lifting arrangement.
4.2.8      Select correct type of fulling/lifting equipment and do not overload the
tackles.
4.2.9      Provide hand gloves  and educate workers for safe operation.
4.2.10   Always use trolley for gas cylinder keeps vertical position.
4.2.11   Always use fire blanket barricade and keep fire extinguisher during  brazing.

5.            Sequence of Activities


5.1 Installation Procedure (AHU)
                 
                    5.1.1 Check approval of IFC drawing.
                    5.1.2 Check approval of manufacturer and model.
                    5.1.3 Check equipment visually for any physical damage.
                    5.1.4 Lift and place the AHU by using crane or forklift.
                    5.1.5 Ensure that the pedestal for the equipment as per approved
                             drawing.
                   5.1.6 Assemble the AHU as per vendor drawing.
                   5.1.7 Ensure the anti-vibration rubber pads between the foundation and
                           units are provided.
                   5.1.8 Check the level of the unit.
                   5.1.9 Check the pulley alignment and belt tension for units.
                   5.1.10 Connect the refrigerant piping in the units.
                   5.1.11 Connect drain pipe to the units and P traps will be made according to
                              manufacture standard.
                   5.1.12 Connect final duct connections to the units.
                   5.1.13 Terminate the electrical cables as per manufactures instruction.
                   5.1.14 Check related all duct works are completed, building air conditioning
                              area is completed with doors, windows and partitions fixed and area
                              is dust free, as applicable.
                   5.1.15 Carry out the pre-commissioning checks and commission the units
                              and record the data.

5.2 Installation Procedure (ACCU)

                   5.2.1 Check approval of IFC drawings.
                   5.2.2 Check approval of manufacturer and model.
                   5.2.3 Check equipment visually for physical damage.
                   5.2.4 Ensure that the pedestal for the equipment as per approved drawing.
                   5.2.5 Ensure that the free air movement is available around the units without
                            any obstruction and provision for the refrigerant piping for the units as
                            per the approved drawing.
                   5.2.6 Install the condensing unit as per drawing.
                   5.2.7 Ensure units are mounted on pedestal/platform with foundation pads.
                   5.2.8 Check the level of the equipment.
                   5.2.9 Connect the refrigerant piping and terminate electrical connection and
                            control wiring to the units as per  the electrical wiring provided on the
                            unit.
                   5.2.10 Perform pipe flushing and pressure test as described in method
                              statement for copper pipe. When finish the above activities the
                              system is ready for commissioning.
                   5.2 12 Carry out the pre-commissioning checks and commission the  units
                             and record the data.

5.3 Installation Procedure (Exhaust Fan)

                   5.3.1 Check approval for IFC drawings.
                   5.3.2 Check approval of manufacturer and model.
                   5.3.3 Check wall/slab opening as per approved drawings.
                   5.3.4 Carry out the visual inspection of fan for any physical damage.
                   5.3.5 Install the fans and tighten the nuts and bolts tightly.
                   5.3.6 Ensure fans are mounted on the floor with foundation pads.
                   5.3.7 Check the position, levels of the extract fan as per approved drawings.
                   5.3.8 Carry out the pre-commissioning checks and commission the units
                             and record the data.


5.4 Installation Procedure for (Chemical Filtration Unit)

     5.4.1. Check approval of IFC drawings.
     5.4.2 Check approval of manufacturer and model
     5.4.3 Carry out the visual inspection of the unit for any physical damage.
     5.4.4 Lift and place the CFU by using crane or forklift.
     5.4.5 Ensure that for the equipment as per approved drawing.
     5.4.6 Ensure the anti-vibration rubber pads between the foundation and
              units are provided.
     5.4.7 Check the level of the unit.
     5.4.8 Check the pulley alignment and belt tension for unit.
     5.4.9 Connect final duct connection to the units.
     5.4.10 Terminate the CFU fan electrical cables as per manufactures
                instruction.
     5.4.11 Carry out pre-commissioning check and commission the units and
                record data.
    
5.5 Installation Procedure for (Package Air Handling Unit)

     5.5.1 Check approval of IFC drawings
     5.5.2 Check approval of manufacturer and model.
     5.5.3 Check equipment visually for any physical damage.
     5.5.4 Lift & place the PACU by using crane or forklift.
     5.5.5 Ensure that the pedestal for the equipment as per approved drawing.
     5.5.6 Ensure the anti-vibration rubber pads between the foundation and units
              are provided.
     5.5.7 Ensure that the free air movement is available around the compressors
              without any obstruction.
     5.5.8 Check the level of the unit.
     5.5.9 Check the fully alignment and belt tension for units.
     5.5.10 Connect drain pipe to the unit and P traps will be made according to
                manufacturer standard.
     5.5.11 Connect final duct connection to the units.
     5.5.12 Terminate the electrical cables as per manufacturer instruction.
     5.5.13 Check related all duct works are completed, building air conditioning
                Area is completed with doors, windows and partitions fixed and area is dust
                free ass applicable.
     5.5.14 Carry out the pre-commissioning checks and commission the units and record  
                the data.
    
5.6 Installation Procedure for (DX-Fan Coil Unit)

      5.6.1 Check approval of IFC drawing.
      5.6.2 Check approval of manufacturer and model.
      5.6.3 Check the equipment visually for any physical damage.
      5.6.4 Mark the location of the unit as per the approved drawing and mark the
               location for holes. Drill the hole with appropriate drill bit and install
               appropriate threaded rod of required length.
      5.6.5 Install the unit and ensure that it’s secured while lifting and bolting to
              anchor rod. Level the unit and check it as per drawing. Check the provision
               For the drainage and ensure the free flow of drainage water.
      5.6.6. Connect final duct connections according to the approved drawing.
      5.6.7 Install the outdoor compressor unit and connect the refrigerant pipes (refer
               To 5.2).
      5.6.8 Connect drain pipe to the unit and P trap will be made according to the
               Manufacture standard.
      5.6.9 Terminate the electrical and control wiring as per approved drawing and
               Wiring diagram provided on the units respectively.
      5.6.10 Carry out the pre-commissioning checks and commission the units
                 Prior to start up.

5.7 Installation Procedure for (Split Unit)

     5.7.1 Check the approval of IFC drawing.
     5.7.2 Check the approval of manufacturer and model.
     5.7.3 Check equipment visually for any physical damage.
     5.7.4 Mark the location of the unit as per approved drawing and mark the location
              for holes. Drill the hole with appropriate drill bit and install the unit direct on
              the wall as per manufacture recommendation method.
     5.7.5 Level the unit and check it as per the drawing. Check the provision for the
              drainage and ensure the free flow of drainage water.
     5.7.6 Install the thermostat on the wall.
     5.7.7 Install the outdoor compressor unit and connect the refrigerant pipes (refer
              to 5.2)
     5.7.8 Connect drain pipe to the unit and P trap will be made according to the
              manufacture standard.
     5.7.9 Terminate the electrical and control wiring as per the approved drawing
               and wiring diagram provided on the units respectively.
     5.7.10 Carry out the pre-commissioning checks and commission the units
                prior to start up.

        6.    Attachment

·         JSA (Job Safety Analysis)
·         SATIP-K-001-01 (Centrifugal Fan)
·         SATIP-K-001-06 (Packaged Air Conditioning Unit (PACU) System)
·         SATIP-K-001-02 (Air-Handling Unit (AHU) )
·         SATIP-K-001-11 ( A/C Split System-Direct Expansion (DX) Type)
·         SAIC-K-4001 ( Exhaust and Supply Fan Receiving Inspection/Handling, Storage and Preservation Inspection)
·         SAIC-K-4004 (AHU Receiving Inspection/AHU Handling, Storage and Preservation Inspection )
·         SAIC-K-4037 (Air Cooled Condenser/Air Cooled Condenser Handling< Storage and Preservation

·         SAIC-K-4038 (Fan Coil Handling, Storage and Preservation)