Wednesday 24 December 2008

வளைகுடாவில் வாழும் வாழ்க்கை யாருக்காக ?

இந்த பதிவு தமிழ் நாட்டிலுள்ள ஒரு  முஸ்லிம் ஊரில் நடந்த சம்பவம் ஆகும் .

துபாயிலிருந்து  ராஜா முஹமது , மனைவி ஜலீலாவின் கடிதத்திற்கு கண்ணீர் மல்க பதில் எழுதிக்கொண்டிருக்கின்றான்.

அன்புள்ள மனைவிக்கு,

நமது தெருவிலேயே நமது வீடுதான் இரண்டு அடுக்கு மாடி வீடு என்று நீ எழுதிய செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். 
சொந்த வீடே இல்லாமல் ஒரு ஓட்டு வீட்டில் கஷ்டப்பட்டு வாடகைக்கு குடியிருந்த நாம் இப்பொழுது தெருவிலேயே பெரிய வீடாக கட்டியிருக்கிறோம். அவ்வளவு பெரிய வீடு கட்டுவதற்கு நான் இங்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..? நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நான் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு வரலாமென இருக்கின்றேன். இது பற்றி உன் முடிவைச் சொல்..


என்று மனைவிக்கு கடிதம் எழுதி அனுப்பிவிடுகின்றான். ஒருவாரம் கழித்து மனைவி ஜலீலாவிடமிருந்து பதில் கடிதம் வருகின்றது

அன்புள்ள கணவனுக்கு..
தங்களுடைய கடிதம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல நமக்கு சொந்தமாக வீடு வருவதற்கு அயல்தேச மண்ணில் நீங்கள் பட்ட கஷ்டங்களை நானும் அறிவேன்.
அதற்கு ஈடு இணையே இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் இழந்து நமக்கொரு வீடு உருவாவதற்கு பாடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக எழுதியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம் . நமக்கென்று ஒரே ஒரு கார் எனது அக்கா மாப்பிள்ளை வாங்கியது போல வாங்க வேண்டும் என்று விருப்பம். ஆகவே அதற்கு மட்டும் எப்படியாவது வழிசெய்தீர்கள் என்றால் நாம் அவர்களுக்கு இனையாக இருக்கலாம்.

மனைவியின் கடிதத்தைக் கண்டு "அய்யோ மனைவியின் இந்த விருப்பத்தை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமே . இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம். அவள் விருப்பப் படி காருக்காகவும் கொஞ்சம் உழைப்போம்" என்று நினைத்து இன்னும் ஒரு வருடம் கழித்துச் செல்லலாமென முடிவெடுக்கின்றான்.

பின்னர் பல மாதம் கழித்து மனைவியின் விருப்பப்படி மனைவியின் அக்கா மாப்பிள்ளை வாங்கியதை விடவும் அழகான விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி விடுகிறான். பின் பதில் கடிதம் எழுதுகின்றான்.



அன்புள்ள மனைவிக்கு..

நீ கூறியபடி நமக்கென்று ஒரு கார் வாங்கியது உனக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும் என்று நினைக்கின்றேன். நீ கூறியபடி நாம் ஆடம்பரமாக வாழலாம் . கவலைப்படாதே.
நான் இன்னும் சில மாதங்களில் ஊருக்கு வருகின்றேன். உனக்கு என்ன என்ன தேவை என்பதை எனக்கு தெரியப்படுத்து.

உடனே மனைவியும் ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்த தேவைகளை கணவனுக்கு பதிலாக எழுதிவிட்டு கணவனின் வருகைக்காக காத்திருக்கின்றான்.

கணவன் வரும் நாள் அன்று மிக மகிழ்ச்சியாக புது வீட்டில் - புதிய காருடன் காத்திருக்கின்றாள். அப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் 
 ராஜா முஹமதின் விபத்துக்குள்ளாகி மரணமடைந்து விட்டான் என்றும் பிணத்தை வாங்கிச் செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

அப்படியே இடிந்து போய் உட்காருகின்றாள் ஜலீலா. பின்பு நிலைமை உணர்ந்த உறவினர்கள் அந்தப் புதிய காரை எடுத்துக்கொண்டு சுல்தானின் பிணத்தை எடுக்க தயாராகும்பொழுது உறவினர்களுள் ஒருவர் ,

அட! புதுக்கார்ல பிணத்தை எடுக்கக் கூடாதுப்பா..ஏதாவது பழைய வண்டியை வாடகைக்கு பிடிச்சிட்டு போங்க எனக்கூற பின்பு பழைய வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துச் சென்றனர்.

புதிய வீட்டில் முதன் முதலில் பிணத்தைக் கொண்டு வரக்கூடாது என்றும் சில அறிவுஜீவி உறவினர்கள் கூற அவர்கள் வாழ்ந்த பழைய வீடொன்றில் 
ராஜா முஹமதின் பிணம் கொண்டு வரப்பட்டு மனைவி உறவினர்கள் கதறலுக்குப்பிறகு ராஜா முஹமதின் பிணம் அடக்கப்பட்டுவிட்டது

மனைவி ஜலீலா அந்தப் புதியகாரையும் - வீட்டையும் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றாள்.
எங்கிருந்தோ அப்பொழுது திருக்குர்ஆனின் வாசகங்கள் காதில் வந்து விழுகின்றது
மண்ணறை செல்லும் வரையிலும் செல்வத்தை தேடிக்கொண்டே இருப்பீர்கள் என்று. மனிதனை இறைவன் படைப்பதற்க்கு முன்னே அவனுககு தேவையான அனைத்தையும் படைத்து விட்டான் இது தெரியாத மனிதன் இறைவனை குறை கூறுகிறான்!

இக்கட்டுரையைப் படித்ததும், நெஞ்சில் ஒரு நெருஞ்சிமுள் குத்தும் உணர்வை தவிர்க்க முடியவில்லை.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Monday 22 December 2008

2050 இல் ரஷ்யா ஒரு இஸ்லாமிய நாடு! Russia becoming a Muslim state!

 Russia becoming a Muslim state!

 இந்தக் கட்டுரை 2006 இல் ASIAN TRIBUNE  இல் வெளியானதாகும்.

 இன்ஷா அல்லாஹ் 2050 இல் ரஷ்ய ஒரு இஸ்லாமிய நாடாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ் இந்தக் கணிப்பு ரஷ்ய அரசியலில் மிகப் பெரிய அளவில் தலைவலியை உருவாக்கியுள்ளது.முஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரிப்பு 1989 இல் 40 - 50 ற்கும் இடைப்பட்டதாக இருந்தது.இன்று ரஷ்யாவில் 8000 பள்ளிவாசல்கள் உள்ளன இது 15 வருடத்துக்கு முன்னாள் வெறும் 300 ஆகவே இருந்துள்ளது,இன்ஷா அல்லாஹ் 2015 காலப்பகுதிகளில் ரஷ்யா முழுவதும் 25000  க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.சத்திய இஸ்லாத்தை தழுவுவதில் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே முன்னிப்பதாகவும் இஸ்லாமிய NGO க்கள் இஸ்லாத்தைப் பரப்ப பாரிய அளவில் உழைப்பதாகவும் கூறப்படுகிறது.மேலதிக தகவல்கள் கீழே ஆங்கிலத்தில்..................
 
Imagine Russia in 2050! According to Paul Goble, a specialist on ethnic minorities in the Russian Federation has predicted that within the next several decades, Russia will become a Muslim majority state. There is another bad news with fast decline in country’s population. This has already become a headache for Russian politicians and policy makers. President Vladimir Putin has called already for Russian women to have more children, because demographers predict that Russia’s population will fall from 143 million to 100 million by 2050. This situation has alarmed Russians as well Western leaders, more so because analysts estimate that Muslims will comprise the majority group in Russia’s population in few decades.

The Muslim population growth rate since 1989 is between 40 and 50 percent, depending on ethnic groups. Today Russia has about 8,000 mosques while 15 years there were only 300 mosques. According to statistics, by the end of 2015, number of mosques in Russia will cross 25,000. These statistics are frightening for many ethnic Russians who associate Islam with the Kremlin’s war against insurgents in Chechnya. Russia is shrinking. Alarmed by the situation, Putin has offered incentives to women who will have more children.

He said that the government would offer 1,500 roubles for the first child, and 3,000 roubles for the second child. He further said that the government will offer financial incentives to those couples who will adopt Russian orphans. But, response to Vladimir Putin’s call is almost zero. Main reason behind fast decline in non-Muslim population in Russia is, particularly larger section of young females in the country is not in favor of having even any child. If someone has, that is also limited within one only. On the other hand, almost all the Muslim couples have at least three children. The number generally ranges between 3-5.

Talking to Blitz, a leader of Moscow’s most populated area said, if the growth of Muslim population continues in the present trend, with the serious decline in population of other religious communities, Russian might ultimately end up as a Muslim state in next two decades. He suggested massive propaganda in favor of having more children in country’s mass media as well increase in the amount of incentives. He also pointed to the fact that, in most cases, such incentives might again go to the Muslim mothers, who generally have more than one child. This is not the question of incentives; it is a matter of realization for the entire non-Muslim Russian population. They should understand that by limited number of children, they are gradually pushing the fate of the country towards an Islamic federation.
Commenting on the issue, a former diplomat said, after the fall of Soviet Union, unfortunately, the entire Russian nation has lost their nationalist spirit, because of poverty and other socio-political adversities. Now they fear in having more than a single child in the family as the cost of living has become extremely expensive, while in most cases, female members of the families are rather forced to work in various fields to bring extra money for their families.
He said, not only the number of Muslim population in Russia is on fast growth because the Muslim women have more than one child, but in recent years, a large number of Islamist NGOs are actively working in the country, which are playing desperate role in having very large number of newly converts in Islam from other religion. He further said, especially the atheist groups are gradually getting inclined towards Islam because of extensive propaganda and activities of the Islamist NGOs.

Highly educated scholars are engaged in giving sermons in mosques and other public places on a regular basis, which is putting tremendous impact on the minds of the people, especially the younger generation. These Islamic clerics are even with suits and clean shaven face. They speak different languages fluently, which is a very strong point for them to attract the attention of already educated Russian people, who are in serious economic and social distress.
He said, in contrary to activities of Islamist NGOs, there are virtually no or very few activities of missionaries of other religious faiths in Russia. Although the Islamist clerics and missions have their hidden and open missions in mind, from their faces and sermons, it is really difficult to identify anything. They initially spread the message of peace, and end up with the poison of religious hatred and jihad. These groups are even gradually capturing Russian media, through investments via Western countries, which are actually Arab money. They are even spending money in giving voice and strength to Muslim leadership, with the ultimate goal of taking over the power of Kremlin.

Comparing the new converted Russian Muslims with Muslims in other countries, he said, they are more fanatics and their beliefs are deep rooted in their minds and thoughts. They openly pronounce that, the main reason behind accepting Islam was as salvage. Poison of hatred has greatly influenced their minds. They instantly take the example of Chechnya, where Kremlin forces committed serious massacre. In their inner thoughts, there is a kind of hatred for Russian leaders and for the non-Muslims, and they want to take revenge of Chechnya case.
A senior journalist with Russian Interfax news agency told Blitz Afro-Arab sources are putting millions of dollars behind Islamist NGOs in Russia. In near future, quite a number of important seats in Russian parliament will also go into the hands of Muslim leaders. He said, in Russian press clubs, number of Muslim journalists is increasing steadily. He said, millions of dollars are spent for building mosques and Islamist institutions in different parts of Moscow and other parts in Russia. The Islamist NGOs even operate orphanages, where children from various religions are adopted and later converted to Islam.
- Asian Tribune -

ARTICLE BY  Salah Uddin Shoaib Choudhury.

 
 

Sunday 21 December 2008

India Customs Rules for Transferring Residency to India

The normal person doesn't even know how to calculate the duty tax, and on top of it a person returning from abroad would have a lot of items like good furniture and working electrical goods. It would make a lot of sense to just sell those items and buy new ones in India. Best part of our customs department is they just find ways to get money out of peoples pocket. There is tax everywhere and in everything. Every year we get to see a new tax. A person even can't bring is personal laptop or computer. The Baggage rules are just crazy. The best solution just takes the number of clothes needed and buy the rest of things when you get back that's how it is. It's their way of increasing local trade, which completely makes no sense. So the best solution for NRI's sell your goods and buy new ones in India that is a good solution, but if you want to pay then well just do it without complaining.


Indian Customs Rules for Residency Transfer 

The Following rules will apply to the people who are Transferring their Residency to India apart from the usual allowances applicable to Indian residents or foreigners residing in India. 


Check the Latest Transfer Rule Updates from cbec.gov.in 



I. Articles not allowed free, but at a concessional rate of duty of 30% :

  1. Colour TV/Monochrome TV.
  2. VCR/VCP/Video Television Receiver/VCD Player.
  3. DVD Player
  4. Video Home Theatre System
  5. Washing Machine.
  6. Electrical/Liquefied Petroleum Gas Cooking Range (other than Electrical/Liquefied Petroleum Gal stoves with not more than two burners and without any extra attachment)
  7. Dish Washer.
  8. Music System.
  9. Personal Computer/Desktop Computer.
  10. Air Conditioner.
  11. Refrigerator.
  12. Deep Freezer.
  13. Microwave Oven.
  14. Video Camera or the combination of such video camera with one or more of the following goods, namely:
    1. Television Receiver;
    2. Sound recording or reproducing apparatus;
    3. Video reproducing apparatus.
  15. Word Processing Machine.
  16. Fax machine.
  17. Portable Photocopying Machine

Conditions :
  1. Passenger to affirm by a declaration that the goods (Items 1 to 14 of above) have been in his/her possession abroad or the goods are purchased from the duty-free shop by him/her at the time of his/her arrival but before clearance from Customs.
  2. Unaccompanied goods were shipped or despatched or arrived within the prescribed time limits (within two months before arrival and within after one month of arrival - see rules regarding unaccompanied baggage for details)
  3. Only one unit of each item (Items 1 to 14 of above) per family is allowed and total value of these items should not exceed Rs.1.5 Lakhs.
  4. The person claiming this benefit affirms by declaration that no other member of the family had availed, or would avail this benefit. The term "family" includes all persons in the same house and forming part of the same establishment.
  5. Passenger has not availed this concession in the preceding three years.
  6. Minimum stay of two years abroad, immediately preceding the date of the passenger's arrival on transfer of residence. Shortfall of upto 2 months in stay abroad can be condoned by Assistant Commissioner of Customs if the early return is on account of -
    1. Terminal leave or vacation being availed of by the passenger, or
    2. Any other special circumstances.
  7. Total stay in India on short visits during the 2 preceding years should not exceed 6 months. Commissioner of Customs may condone short visits in excess of 6 months in deserving cases.
Note 1:Transfer of Residence entitlements are applicable to returning Indians as well as Foreigners transferring their residence to India subject to the fulfillment of prescribed eligibility conditions

Note 2:Earlier there was a clause of minimum stay in India of 1 year after taking TR. This has since been abolished.

Depreciation of value on old and used items..

Though there are no specific guidelines in the Baggage Rules for according depreciation benefits to old and used items of baggage for the purpose of their valuation, as a matter of practice, the following depreciation benefits are given on the purchase value of old and used items:
  1. For every quarter during 1st year - 4%
  2. For every quarter during 2nd year - 3%
  3. For every quarter during 3rd year - 2.5%
  4. For every quarter during 4th year & after - 2%
Since there are no specific guidelines, the assessing officer uses his / her judgement and discretion for determining the maximum limit. The depreciation for each year is supposed to be calculated on the reduced value of the previous year and not on the original value. However, for quick calculation and clearance, sometimes the straight line method of calculation of depreciation is followed at the airport, which incidentally is more beneficial for the passenger.

Prepared & Collection by M.AjmalKhan.

Saturday 13 December 2008

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள் பற்றிய சிறப்பு பார்வை

கொழுப்புச் சத்தில் நல்லது, கெட்டது என இரண்டு வகை உண்டு. "மோனோ சாச்சுரேடட்" கொழுப்புச்சத்து உடலுக்கு நல்லது. அதே சமயம், கொலஸ்ட்ரால் போன்றவை கெட்டது.  ஆலிவ் எண்ணெய் இந்த நல்ல கொழுப்பை நமக்கு அளிக்கிறது.  கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதனால் ஆலிவ் எண்ணெயைத் தொடர்ந்து பயன் படுத்த, நமது இளமை நீட்டிக்கப்படும்.ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. 

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்..


ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.
லிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்..
ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.
ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது.வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.


உடல்நல நன்மைகள்...
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்..

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ...
தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்...
மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.

அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார்.

உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.


ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.அது மட்டுமல்ல......

  1.  கேன்சர், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கிறது.
  2.  ஆலிவ் ஆயில் அல்சர், வாயுக் கோளாறைச் சரிசெய்யும். மூளை, எலும்பு வளர்ச்சியை வேகப்படுத்தும்.
  3. ஆலிவ் ஆயில் வைட்டமின் ஏ.சி, ஈ போலிக் ஆசிட், செலினிய, துத்தநாக சத்துக்களின் செழுமை கொண்டதால் சருமம் மினுக்கும், கூந்தல் மிளிரும்
  4. சிறுநீரகக் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது
  5. ஆரஞ்சுப் பழச்சாற்றில் ஆலிவ் எண்ணெய் சில சொட்டுகள் விட்டுக் கலக்கி, தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் பாதிப்புக்கள் தீரும்.
  6. ஆலிவ் எண்ணெயில் கருஞ் சீரகத்தைப் பொடி செய்து போட்டு, அதை முகம் முழுவதும் தடவி,பத்து நிமிடத்திற்குப் பிறகு கழுவினால், முகம் அழகு பெறும்.
  7. ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து கண்ணின் கீழ் பூசி வர கருவளையம் மறையும்.
  8. தலைமுடி உதிரும் தொந்தரவு உள்ளவர்கள் இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் நன்றாக மசாஞ் செய்து, ஊறிய பின் குளித்தாள், முடி உதிர்வது நிற்கும்.
  9. கைகள் சொரசொரப்பாக, பார்ப்பதற்கு அழகற்றுக் காணப்படுகின்றதா? ஆலிவ் எண்ணெய்யுடன், சிறிது பொடி உப்பைக் கலந்து கைகளில் நன்கு தேய்த்தால், கைகள் மென்மை பெறும்.
  10. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Thursday 11 December 2008

சங்ககால தமிழரின் நீர் மேலாண்மை பற்றிய வரலாற்று பார்வை..

மழைநீர் சேகரிப்பு என்பது இந்தியாவில் மிக பழமையானது.கி.மு.4500 ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட மகத்தான நீர்தேக்க திட்டங்களே மழை நீரை தேக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பசுமை பிரதேசங்களை ஒட்டியே பல எளிய வடிவிலான நீர்தேக்க திட்டங்கள் வளர்ந்து வந்து உள்ளன. ஓடி வரும் வெள்ளத்தை தேக்கி வைத்து பரமாரிப்பதோடு,புயல் மழை வெள்ளம்,நிலத்தடி நீரோட்டம், நிலத்துக்கு அடியில் இருக்கும் ஆறுகள் ஆகியவற்றை அறிந்து அதை வெகு சிறப்பாக பயன்படுத்திய 'பள்ளர்கள்' (நீர் மேலாளர்கள்) பல ஆயிரம் வருடங்களாக மிகுந்த மரியாதை செய்யப்பட்டு வந்து உள்ளனர். (ஆற்றுக்காலாட்டியார்,மடை வாரியார்,நீராணிக்கர்,நீர்கட்டியார் என்று பல்வேறு பள்ளர் பிரிவுகள் வழக்கில் இருந்து உள்ளனர்.). நீர் மேலாண்மை என்பது இந்தியாவை பொருத்தவரை மிக பழமையான தொழில் நுட்பமாகும். அதுவே இந்தியாவின் முக்கிய அடையாளமும்,கலாச்சார வடிவமும் ஆகும். இந்த தொழில் நுட்பம் இல்லை எனில் இந்தியா என்ற பிரதேசம் இருந்திருக்காது.இந்தியாவின் நீர் மேலாண்மை வேத காலத்துக்கும் முந்தியது. காரணம் தார் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நீர் தேக்க திட்டங்கள் எல்லாம் ஹரப்பா நாகரிகத்திற்கும்(கி.மு.2600) முந்தியது.

வீட்டு கூரை,வெட்ட வெளி, கிணற்று பாசனம்,ஆற்று வெள்ளம் என வியக்கத்தக்க வகையில் பாசனத்துக்கும், புழக்கத்துமான நீரை பரமாரித்து வந்துள்ளனர். நீர் மேலாண்மையாளர்களே இந்த பெருமைக்கும், புகழுக்கும் உடையவர்கள் தாங்கள் வாழும் இடத்திற்கு தகுந்தார் போல தமது திறமைகளை பயன்படுத்துகின்றனர். தமிழர்கள் உலகில் உள்ள எந்த ஒரு பல்கலை கழகத்திலும் படித்து இந்த நீர் மேலாண்மை நுட்பத்தை கற்கவில்லை. தலை முறை தலைமுறையாக நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தை கற்றும், அதை செழுமை படுத்தியும், தாங்கள் கற்றதை தங்கள் தலைமுறைகளுக்கு கற்று கொடுத்து வந்துள்ளனர். வரலாற்றில் எப்போதெல்லாம் தண்ணீருக்கான தேவையும், அந்த தண்ணீருக்கான வாழ்வாதாரமும் இக்கட்டான சூழலில் மக்களின் வாழ்வை பாதித்து உள்ளதோ, அப்போதெல்லாம் தமிழர்களின் புத்தி கூர்மையும், அவர்களின் புதிது புதிதான நீர் மேலாண்மை உக்திகளும் தான் மக்களை காத்து உள்ளது என்பதை நுணுக்கி ஆராய்ந்தால் அறியலாம்.


தமிழரின் பாசன நுட்பங்கள் குறித்து மேலைநாட்டு அறிஞர்கள்..

செருமானி அறிஞர் எஃப். டபள்யூ. ஃபிளமிங் (F.W.Fleming) : 
தென்கிழக்கு ஆப்ரிக்கா, பிலிபைன்சு காணப்படும் நெல் சாகுபடி முறையிலும் பாசன அமைப்புக்களிலும் தமிழரின் தாக்கம் தெரிகின்றது.

ஆய்வறிஞர் பார்க்கர் (Parker) :
ஏரிகளுக்கு மதகு அமைப்பதை 2400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வடிவமைத்தவர்கள். அய்ரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டில்தான் மதகுகள் அமைக்கப்பட்டன என்று கூறுகிறார்.

சர் ஆர்தர் காட்டன்:
“ஏரிக்கரைகளை ஈரமான களிமண் கலவையில் அமைப்பது அவசியம் என்ற ஆங்கிலேய பொறியாளர்களின் கருத்துக்கு மாறாக பண்டைய தமிழர்கள் எல்லாவிதமான விளைநிலங்களின் மண் எடுத்து பல்லாயிரக்கணக்கான ஏரிகளை மண் கரை (Earthern Bund) கொண்டு கட்டியுள்ளனர்”.

தமிழ்இலக்கியத்தில் நீர் மேலாண்மை...

நீர்மேலாண் மையைப் பொறுத்தவரை பண்டையத்தமிழர்களின் பண்பட்ட அறிவும் ஆற்றலும் நம்மை வியக்க வைக்கின்றன .மேலும் இரண்டாயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பே நீர் மேலாண்மை குறித்த தெளிவு தமிழர்களிடத்து இருந்துள்ளமையைச் சங்க இலக்கியம், கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து சான்றுகளை அறியலாம்..

  • நீரியல் சுழற்சி முறை:
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்.
உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை 126-131.

  • தமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன.
  •  நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையையும் அறிந்து நம் முன்னோர் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர்.
  • இரண்டு பக்கப் பாறைகளை இணைத்து எட்டாம் நாள் பிறை போன்று குளக்கரை அமைத்தனர் (புறம். 118).
  •  கல்கொண்டு அணை கட்டப்பட்டதை ‘வருவிசைப் புனல் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமையாலும்’ (தொல். பொருள். 65) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறிகின்றோம்.
  • அரசன் பெயரில் குளம் இருந்ததைக் “கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர்” (நற். 340) என்று நற்றிணை தெரிவிக்கின்றது.
  • குளங்களுக்குக் காவலர்கள் (மடை வாரியர்கள்,கண்மாய் குடும்பன்) நியமிக்கப்பட்டிருந்தனர் (அகம். 252).
  • “நீர் மோதும் மதகுகளை உடைய உறையூர்” (அகம். 237) என நீர் வளத்தோடு இணைத்து ஊரைச் சிறப்பிக்கும் முறையைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

1000 ஆண்டுகளை கடந்த சில ஏரிகள்..

மதுரை மாவட்டத்தில் மட்டும் 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளைக் கடந்தும் இவை பயன்பாட்டில் உள்ளன. 

செம்பரம்பாக்கம் ஏரி
தூசிமாமண்டூர் ஏரி
காவேரிப்பாக்கம் ஏரி
தென்னேரி
வீராணம் ஏரி
உத்திரமேரூர் ஏரி
இராசசிங்கமங்கலம் ஏரி
பெருமாள் ஏரி
மதுராந்தகம் ஏரி
கடம்பா குளம்

மேலும் திண்டுக்கல்லை அடுத்துள்ள ஆத்தூரில் உள்ள கருங்குளம் பகடைக்குளம் புல்வெட்டிக்குளம் என்ற மூன்றடுக்கு குளம் உள்ளது. 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்குளம் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.

ஆக்கம் மற்றும் 
தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் எனப்படுவது பகிர்ந்து கொள்ளுதல், இணைந்து கொள்ளுதல் அல்லது கூட்டமைத்தல் என்று அர்த்தப்படும். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செயல் ஆகும். ஷிர்க்கை மன்னிக்க முடியா பெரும் பாவம் என்று அல்லாஹ் கீழ்வரும் திருமறை வசனத்தில் கூறுகிறான் :
"அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள்” (திருக்குர் ஆன் 4 :36)
“”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். இதை தவிர மற்றதை தான் நாடியவர்களுக்கு மன்னிக்கிறான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெரும் பாவத்தையே கறபனை செய்கிறார்கள்” (திருக்குர்ஆன் 4 :48)

ஷிர்க்கின் வகைகள்
ஷிர்க் அர்ருபூபியா – அல்லாஹ்வின் ஆளுமையில் செய்யப்படும் இணைவைப்பு
ஷிர்க் அல் அஸ்மாஃவஸ்ஸிஃபாத் – அல்லாஹ்வின் குணங்கள் மற்றும் தன்மைகளில் செய்யப்படும் இணைவைப்பு
ஷிர்க் அல் இபாதா – அல்லாஹ்வுக்கு உரித்தான வணக்க வழிபாடுகளில் செய்யப்படும் இணைவைப்பு
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும் கப்ருகளை வணங்குவதும்
சூனியமும் ஜோசியமும்
ராசி பலன் பார்ப்பது தாயத்து கட்டுவது
இறந்தவர்களுக்காக!
ஈமானை பாழாக்கும் செயல்கள்
ரகசிய ஞானம்?
இணை வைத்தல் அன்றும் இன்றும்
சாத்தான் வேதம் ஓதுகிறது
இறைவனுக்குமா இடைத்தரகர்
மன்னிக்கப்படாத பாவம்
ஆயிரம் முறை அழைத்தால்
சமாதி வழிபாடு
நல்லடியார்கள்
இஸ்லாத்தின் பெயரால் போலிச்சடங்குகள்
அவ்லியாக்கள்
நல்லடியார்களின் கப்ருகளின்மீது...
உயிரே ஓடி வா!
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது




Saturday 6 December 2008

இளைகர்களே!! வாழ்க்கையில் உங்களுக்கு பெண் பார்க்கும் போது என்ன செய்ய வேண்டும்?


திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.

அதுவும்  வாழ்க்கையில் உங்களுக்கு பெண்  பார்க்கும்  போது  பிடிக்காதது மணமகனுக்கல்ல. அவனது குடும்பத்தினர்க்கு என்பது கசப்பான உண்மை. அதேபோன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பெண் பார்த்துவிட்டு வந்ததன் பின் கடைசியாக மணமகன் பெண்ணை பார்த்துவிட்டு தனக்கு பிடிக்கவில்லை என்கிறான்.

இவ்வாறு பலமுறை பெண் பார்த்துவிட்டு கடைசியில் பிடிக்கவி ல்லை என்பதால் அந்தப் பெண் எவ்வளவு மனவேதனை அடை வாள் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா?அது மட்டுமல்லாமல் அந்த பெண் வீட்டினர் வசதியற்றவர்களாக இருந்தால் எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும், அவர்கள் சில வேளைகளில் கடன் பெற்றும் ஏற்பாடு களை செய்திருப்பார்கள்.

நாம் பலமுறை சென்று மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு கடைசியில் பெண்ணை பிடிக்கவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். எனவே யார் மணமகனோ அவன் முதலிலேயே சென்று பெண்ணை பார்த்து சம்மதம் சொல்லவேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். திருமணம் என்பது ஊருக்கல்ல, எமது குடும்பத்திற்கல்ல. நாம்ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதென்றால் நாம்தான் பெண்ணை பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

பெண் பார்க்கும் இன்னுமொரு முறைதான் மணமகனின் ,மணமகளின் போட்டோவை பார்த்து முடிவெடுப்பது. இன்றைய காலகட்டத்தில் போட்டோக்களில் ஒருவரை எவ்வாறு வேண்டுமானாலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம்.

எனவே ஒருவர் போட்டோவை பார்த்து சம்மதம் சொல்லிவிட்டு நேரில் பார்த்ததும் திகைத்துவிடுகின்றார். குறிப்பாக வெளி நாடுகளில் வேளை செய்பவர்கள் அங்கிருந்துகொண்டு இன்டர்நெட்டில், போட்டோவில் பெண் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை நேரில் பார்ப்பதின் மூலமே மிகச் சரியாக அறிந்துகொள்ளலாம்.


பெண் பார்க்கும் வைபவத்தில், "பையனுக்கு பொண்ணுகிட்ட பத்து நிமிஷம் தனியா பேசனுமாம்" என்று மாப்பிள்ளை வீட்டு கூட்டத்தில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார், உடனே பெண்ணையும், பையனையும் தனியாக பேச அனுமதிப்பார்கள்.

பையன் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு......பெண்ணிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்பார், பொண்ணும்....

"ஆங்"..."ஆமா"...."இல்லை" என்று ஒரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு,

"உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசனுமா.....கேட்கனுமா?"அப்படின்னு மாப்பிள்ளை பையன் பேச சந்தர்ப்பம் கொடுத்தா கூட, பேசாம 'பெப்பே பெப்பே' என்று முழிப்பாள்.


எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????


பெண்ணும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,பையனிடம் பேசி, சில பல கேள்விகள் கேட்டு பையனை பற்றி தெரிந்துக்கொள்ளலாமே!!!

  •  பையன் பெண்ணிடம் தனியா பேச விருப்பப்படுறான்னு சொன்னா, அவனுக்கு பெண்ணின் தோற்றம்[appearance]பிடிச்சு போய்டுச்சு, அடுத்து அனுகுமுறை[approach] எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா பேசனும்னு சொல்லுவார்.


  • ஸோ.....உங்களுக்கு[பெண்ணிற்கு] அவரோட தோற்றம் மனசுக்கு பிடிச்சிருந்தா, அவருடைய பெர்ஸனாலிட்டி/approach எல்லாம் எப்படின்ன்னு தெரிஞ்சுக்க பேசிப் பாருங்க.


  • 'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது? ''பேசினா தப்பா நினைப்பாறோ??'அப்படின்னு எல்லாம் தடுமாறாம......இயல்பா இருங்க.அதான் உங்க appearance test ல பாஸ் ஆகிட்டீங்களே.......ஸோ நோ மோர் டென்ஷன்!!

  • ஆனால் என்ன பேசுறதுன்னு முன் யோசனை இல்லாம."உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்"னு அசட்டுத்தனமான கேள்வி எல்லாம் கேட்காம..கிடைச்ச 5 நிமிஷத்துல உருப்படியா பேசனும்.


  •  முதல் முதலா கேட்கிற கேள்வி.?அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.....அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.


  • தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.

  • [ 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']


  • அடுத்து அவருக்கு, பிடித்தமான பொழுதுபோக்கு[hobby] என்னன்னு கேட்கலாம்.......அந்த ஹாபி விளையாட்டு சம்மந்தமானதாக இருந்தால், உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.அப்படியே 'ஜிம்' க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.


  • நீங்க வேலைக்கு சென்று கொண்டிருப்பவராக இருந்தால், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் அவரது விருப்பம் என்ன என்பதை பேசி தெரிந்துக் கொள்வது நலம்.                                              
  • வேலை பார்க்கும் இடம் காரணமாக இருவரும் வெவ்வேறு ஊரில் பணிபுரிந்தால், இடம் மாறுதல் சாத்தியமா?அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

அடுத்த முக்கியமான விஷயம், அவரது பழக்க வழக்கங்கள்....


  • உங்களுக்கு சிகரெட், மது பழக்கங்கள் சுத்தமாக பிடிக்காது என்றால், அவருக்கு அந்த பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.


  • "கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விட ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்..........கல்யாணத்துக்கு அப்புறமா முழுசா விட்டுறுவேன்" அப்படின்னு டயலாக் விட்டா.......உஷார்!!!


  • பழக்கத்தை கைவிடனும்னு நினைச்சா..........கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்லையே!
  • ஸோ.....எந்த காரணத்தை கொண்டும் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காதீங்க.


  • [ஸ்மோக்கிங் & occational drinking .......ஆணின் மேனரிஸமாக நீங்க கருதினா, இந்த கேள்வி உங்களுக்கு முக்கியமானதாக இருக்காது]


  •  உங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், லட்சியங்கள் இருந்தால், அதனை அவரிடம் தெளிவாக வெளிப்படுத்துங்கள்.

  • உதாரணமாக.... பாட்டு, டான்ஸ்.........போன்ற கலைகளில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமானால், திருமணத்திற்கு பின்பு உங்கள் கலை ஆர்வத்தை எந்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துவது நல்லது.



* இதுவரை கேட்ட கேள்விகளும், உரையாடலும்.......உங்களுக்கு அவரிடம் ஒருவித மனம் ஒத்துபோன இயல்பான சூழ்நிலையை[comfort zone] ஏற்படுத்தியிருக்குமானால்,அவரது கடந்த கால காதல் விவகாரம், அல்லது உங்கள் வாழ்க்கையில் அவ்விதம் ஏதும் இருந்தால் அவரிடம் மனம் விட்டு பேசலாம்.தனியாக பேச கிடைத்த 10 நிமிஷ சந்தர்ப்பத்தில், ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாவிட்டாலும்,
"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.


இதுவே ஒரு முஸ்லிம் ஆண், திருமணம் செய்யும் நோக்கத்தில் பெண்ணைப் பார்க்க சென்றால் பெண் மார்க்கப்பற்று உள்ளவளா என்பதைத் தான் பார்ப்பான், அதை விடுத்து சினிமா நடிகை போன்று இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பார்க்க சென்றால் அவன் முஸ்லிமாக நடிக்கும்பெயரளவு முஸ்லிம் என்பதில் சந்தேகம் இல்லை.


இளமையில் வழி தவறி விடக்கூடாது என்ற நோக்கமும் திருமணத்திற்கு முக்கியம் என்பதால் மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண் தேவை என்ற நோக்கம் முதலில் இருக்க வேண்டும்,பெண் மார்டனாக, ஸ்லிம்மாக, பேசியல் செய்த முகத்துடன் இருக்கவேண்டும்என்று எண்ணுபவன் பெண்ணை மணமுடித்து சினிமாவில் நடிக்கவைத்து சம்பாதிக்கப்போகிறானா? அல்லது மார்டன்செய்து கேட் வாக் செய்து சம்பாதிக்க வைக்கப்போகி றானா? ஹிஜாப் இன்றி ஜோடியாக கைகோர்த்து வெளியில் சுற்றி பார்க்கிறவர்களுக்கு அருமையான ஜோடியாக தெரிய வேண்டும் என்று எண்ணுகிறானா?


  • ஐவேளை தொழுகையை நிறைவேற்றி வரும் பெண் பேசியல் செய்து கொள்வாளா?


  • ஐவேளை உளூ செய்து வரும் பெண்ணின் முகம் அல்லாஹ்வுக்குப் பொருத்தமானஇருக்கும் பொலிவு போதாதா?


  • அல்லாஹ்வை விட அல்லாஹ்வுக்கே சொல்லித்தரக்கூடியவர்கள் இந்த உலகில் உள்ளார்களா? 


  • சினிமா நடிகை போன்று ஸ்லிம்மாக திருமணம் செய்து ஒரு குழந்தை பெற்ற பின்குண்டாவது இயற்கை. குண்டாகிவிட்டால் தலாக் சொல்லி அனுப்பிவிடுவாயா?
  • ஆண்களும் கூட்டாக சேர்ந்து பெண்ணை பார்ப்பது கூடுமா? 


இஸ்லாமிய பெண் திருமணத்திற்காக தன்னை காண வரும் மணமகனுக்கு இஸ்லாம் வரையறுக்கப்பட்ட அளவில்தன்முகத்தைக் காட்டுவதற்கு அனுமதி இருக்கிறது ஆனால், அவனின் மாமன் மச்சான் எல்லாம்அப்பெண்ணை பார்க்க மார்க்கம் அனுமதிக்கிறதா என்றால் மார்க்கத்தில்அனுமதி இல்லை .

தலையை மறைத்து வைத்திருக்கும் பெண்ணை தலையில் இருந்து துணியை நீக்கச் சொல்லி மாப்பிள்ளையாக தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் மிருகத்தின் மாமன் மச்சான் எல்லாம் அன்னியப் பெண்ணை அப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இதனாலேயே இஸ்லாம் ஒரு பெண்ணை திருமணம் செய்வதென்றால் நேரில் சென்று பார்த்துக்கொள் என்று கட்டளையிடுகிறது என்பதை புரிந்து செயற்படுவோம்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு (நோக்கங்களு) க்காக ஒரு பெண் மணமுடிக்கப்ப டுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.
ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)
கொண்டு வெற்றி அடைந்துகொள்!(இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2905)

இளைகர்களே!! வாலிபர்களே ! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்..

Wednesday 3 December 2008

ஈழத் 'தமிழர்கள்' குறித்து இனி பேசப்போவதில்லை !

ஏப்ரல் ஒன்றுக்காக எழுதவில்லை. தலைப்பு பொய்யையும் பேசவில்லை. பள்ளிக் கூடம் படிக்கும் போது நாம் எடுக்கும் உறுதி மொழி என்ன ? இந்தியனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன், எனது தாய் திருநாடான பாரதத்தை நேசிக்கிறேன். அதன் கண்ணியம் காப்பேன். நான் இந்தியனாகவே என்னை நினைக்கிறேன்.

நான் என்னை தமிழனாக நினைத்தால் நான் ஒரு பிரிவினைவாதி - இதுதானே அந்த உறுதி மொழியை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் மறைமுகமாக ஏற்றுக் கொள்வது ?

இலங்கையிலோ, மலேசியாவிலோ இந்திய வம்சாவளியினர் நசுக்கப்படும் பொழுது இந்தியாவில் வாழும் இந்தியர்கள் அவர்களை தமிழனாகப் பார்த்ததன் விளைவோ ? இவர்கள் பிரிவினை வாதிகள் என்று கூறி இந்தியாவில் தமிழர்கள் அல்லாத நாய் கூட அது குறித்து கவலைப்படுவதில்லை. தலிபான் தீவிரவாதி ஒரு விமானத்தைக் கடத்திச் செல்கிறான். அதில் ரூபன் கத்தியால் மற்றும் 100 பேர் இந்தியர்களாக பயணம் செய்தார்கள், அவர்களை இந்திக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தோமா ? அல்கொய்தாவின் பிடியில் சிக்கி அல்ஜெசிரா தொலைகாட்சியில் மரண பயந்துடன் தெரிந்த முகங்களுக்கெல்லாம் மாநில அடையாளத்தைப் பார்த்து தமிழர்கள் மகிழ்ந்தார்களா ? பிஜிதீவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இந்திய வம்சாவளியினர் சிறைபிடிக்கப்பட்ட போது எந்த மாநிலத்துக்காரர்கள் அது தங்களுக்கு தொடர்பில்லாதது போல் பார்த்தார்கள் ?

வெளிநாட்டில் தமிழன் அவமானப்படுவது அவன் தலைவிதியாகவே இருக்கட்டும்? இந்தியாவுக்குள் ஏன் இந்த இழிநிலை ? காரணம் இந்தியாவுக்குள்ளும் தமிழன் இந்தியன் அல்ல, தமிழன் அடிவாங்கினால் இந்திய அரசாங்கமும் அதை கண்டுகொள்ளாது ?

இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி இந்தியர்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியாவில் தமிழன் தவிர வேறு எவனும் அலட்டிக் கொள்வதே இல்லை. ஒருவேளை ஈழத்தமிழர்கள் என்று சொல்லாமல் ஈழவாழ் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசு இலங்கை அரசை அடக்கி வைத்திருக்குமோ? அது போல் மலேசிய தமிழர்கள் என்று சொல்லாமல் மலேசிய வாழ் இந்தியர்கள் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசாங்கம் வெகுவிரைவாக பேசி இருக்குமோ ? எங்கு தமிழனுக்கு பிரச்சனை என்றாலும் தமிழக முதல்வர்கள் ஞாபகப்படுத்தவில்லை என்றால் இந்திய அரசாங்கத்தையே எழுப்ப முடியாது என்றே நினைக்கும் படியே எல்லாம் நடக்கிறது. இதில் கர்நாடகா முதல் பிறமாநிலக்காரர்களைக் குறைத்து சொல்ல என்ன இருக்கிறது ?

வெளிநாட்டில் தமிழன் தமிழனாகத்தான் பார்க்கப்படுகின்றனா ? எந்த நாட்டிலும் தமிழன் தமிழனாகப் பார்க்கப்படுவதில்லை, இந்தியன் என்றே பிறரால் அழைக்கப்படுகிறார்கள். சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள், மலேயா வாழ் இந்தியர்கள், மாலத்தீவு இந்தியர்கள் என்றே சொல்லப்படுகின்றனர். அவர்களுக்கு பிரச்சனை என்றால் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவே அது தமிழர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல் நினைப்பது ஏன் ? மொழிப்பெரும்பான்மை என்பதைத் தவிர்த்து தமிழன் எந்தவிதத்தில் தான் இந்தியன் இல்லை என்று காட்டிக் கொள்கிறான்? தமிழன் என்கிற மொழி பண்பாடு அடையாளத்தை ஒரு இனத்தின் அடையாளம் போல் சித்தரிக்கப்பட்டுவிட்டு புறக்கணிக்கப்படுகிறோம் என்பது கர்நாடகத்திலும் பிற மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆண்டாண்டு காலம் பிறமாநிலங்களில் வாழ்ந்தாலும் நம்மை ஒரு தனி இனமாக கருதி ஒதுக்கப்படுவதால் நமக்கு தமிழ்த்தாய் வாழ்த்து போதுமே! தேசிய கீதமும், இந்தியன் என்ற அடையாளமும் நமக்கு எதற்கு ?


ஈழத்தமிழர்கள் என்ற 'தமிழ்மொழி' அடையாளத்தில் இலங்கையில் போராட்டம் நடைபெறாமல் ஈழவாழ் இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தில் போராடி இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா ?

தற்பொழுது கூட ஈழ இந்தியர் பிரச்சனைகள் என்று பெயர் மாற்றிக் கொண்டால் முழு இந்தியாவையே அதற்கு ஆதரவாக திரட்ட முடியுமா ? தேசியவாதிகளே மற்றும் தமிழ் தேசியவாதிகளே ஈழத்தமிழர்கள் வாழ்க்கை கண்டுக் கொள்ளப் படாமல் போனதற்கு அவர்கள் தமிழர் என்பது தான் காரணாமா ? அவர்கள் இந்திய வம்சாவளியினர் இல்லையா ?

நீங்கள் இந்தியரா ? என்று ஒரு சிங்களரிடம் கேட்டுப் பாருங்கள் . இல்லை நான் ஏசியன் அல்லது சிங்களன் என்றே சொல்லுவார் ஒருகாலும் இந்தியன் என்றோ இந்திய வம்சாவளியினர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். வெளிநாடுவாழ் தமிழர்கள் அவ்வாறெல்லாம் சொல்லிக் கொள்வது இல்லை. இந்தியாவில் அவர்களுக்கு தொப்புள் கொடி உறவு என்றும் இருக்கிறது.

ஈழப்பிரச்சனை தீரததற்கு தமிழ்தான் அடையாளம் என்ற ஒரு காரணமிருந்தால், நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளாமல் இந்தியன் என்றே சொல்லிக் கொள்கிறேன். ஈழப்பிரச்சனை ஈழவாழ் இந்தியர்களின் போராட்டமாக மாற்றி நினைத்துக் கொள்கிறேன். ஈழவிடுதலைக்கு தமிழன் என்ற அடையாளம் தடையாக இருந்தால் எனக்கும் அது தேவையற்றதே.

முட்டாள்கள் தின சிந்தனையாக, இந்தியாவுக்குள்ளும் தமிழன் என்ற ஒரே காரணத்தால் பக்கத்து மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தும் போது நாம் 'இந்தியர்' என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா ? இல்லை... நீங்கள் இந்தியர்கள் அல்ல, தமிழர்கள் என்று அவர்கள் ஒரு இனமாக அடையாளப்படுத்துவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோமா ?