Thursday 31 January 2008

உங்கள் குணத்தை சொல்லும் பெயரின் முதலெழுத்து A முதல் z வரையான முதல் எழுத்தின் பலன்கள் !!

A ...
உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள் ,அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள்.மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயட்சிபீர்கள் .வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும் ,.
B .....
உணர்சி பூர்வமனவர்களாக இருப்பீர்கள்,தையிரியசாலியகவும் அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள் ,அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பருசுகலை சந்தோசத்துடன் பெற்றுக்கொள்வீர்கள்,உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்சம் வேண்டும் என நினைப்பெர்கள்,
C ,,,,
உங்கள் பெயர் Cயில்தொடங்கினால் , பல்துறை அறிவு வாய்ந்த ,தகுதி வாய்ந்த ,திறமை சாலியாக இருப்பீர்கள் மென்மையானவர்,சொல்வன்மை பேச்சு ஆற்றல் உள்ளவர்களாக விளங்குவீர்கள் .
D ....
அளவுக்கு அதிகமான மனத்திண்மை .வணிகம் புரியும் அறிவு .ஆளுமை போன்ற குணங்களை கொண்டு இருப்பீர்கள் .சுத்தத்தின் மீது அதிக கவனம் செலுத்து வீர்கள் ,நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டு இருப்பீர்கள் ,
E ......
பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள் .மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள் .
நண்பர்களை சுலபமாக பெறுவர்கள்.காதல் என்று வரும் போது அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.
F .....
திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும்,நம்பிக்கை மிக்கவராகவும் ,விளங்குவீர்கள் .பிறரின் மீது அக்கறை கொள்வதிலும் உங்களை சுற்றி உள்ளவர்களை சந்தோசமாக வைத்திருப்பதிலும் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள் .சிறந்த நகைசுவை உணர்வோடு விளங்கு வீர்கள் .
G .....
புதுமை .இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள்.மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள் ,உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள் ,உங்கள் விசயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் .
H .....
நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள் ,புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து .சுயமாக ஊக்கு வித்து பிறரை சிறப்பான முறையில் கட்டு படுத்துவீர்கள்,,
I .....
நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள் .மேலும் தைரிய சாலியாக திகழ்வீர்கள்.அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள் .பேசன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்...
J .....
என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும் உங்களுக்கு தேவ யானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல் அதை அடைய ஓடுவீர்கள்.
K ...
வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள்.உணர்சி பூர்வமாக இருப்பீர்கள் ,சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும் ,பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்கு வீர்கள் , ,வாழ்கையில் அர்த்தமுள்ளதாக செய்ய வேண்டும் என நினைப் பீர்கள் .
L ,,,,.
வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள் ,அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டர்கள் .தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில் அமையும்...

M .....
உண்மையான நட்பை உங்களால் கண்டு பிடிக்க முடியாது .நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள்.அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருப்பீர்கள் ,உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும்.
N ,,,,,
துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும் .அனைத்திலும் முழுமையை எதிர்பாக்கும் நீங்கள் உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்ளுவீர்கள்
O ,,,,,
அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள் .ஆசிரியராகவோ. எழுத்தாளராகவோ வருவர்கள்,
ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ அதன் பக்கமே நிப்பீர்கள்.மற்றவர்களிடமும் அதே குனங்களைத்தான் எதிர் பார்ப்பீர்கள் .
P ....
திறமைசாலியாக அறிவுக் கூர்மை மிக்கவராக புதுமை மிக்கவராக இருப்பீர்கள்.பட பட வென பேசும் உங்களுக்கு எப்பிடி குதூகலமாக இருப்பது என்றும் தெரியும்.உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் நல்ல அழகான துணையை தேடுவீர்கள்..
Q ,,,,
நல்ல எழுத்தாளராகவும் பேச்சு சாலரா கவும் இருப்பீர்கள். திடமான கருத்துகள் இருக்கும்.தனித்துவமான பெர்சனநாளிட்டி இருக்கும் .புதுமை விரும்பிகள்.
R ....
உண்மையான கருணையான மற்றும் அன்பு மிக்க மனிதராக இருப்பீர்கள் ,சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும்.அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்து கொள்ளுவீர்கள் .அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள் உங்களுக்கு ஏற்ற நல்ல துணையை தேடுவீர்கள்,
S ..
உங்களுக்கு கவர்சி என்றால் பிடிக்கும் .அனைவரினதும் கவனத்தை ஈர்க்கவே விரும்பிவீர்கள்,கடினமாக உழைப்பீர்கள் .கனவு காணும் நபராக இருப்பீர்கள்,அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது .சிறந்த அரசியல் வாதி நடிகன் அல்லது மாடலாகலம்.
T .....
எப்போது சுறு சுறுப்பாக இருப்பீர்கள் ,உங்கள் தொழில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு நினைத்தபடி வேலை நடைபெறவில்லை .என்றால் மன வலிமை உண்டாகும் .மனதளவில் திடமனவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்,
U ...
அறிவு மிக்க தனித்துவமான இந்த நபர்கள் ,சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள்.எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவீர்கள் ,அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமானதாக விளங்கும்,
V ....
ஒரு நடைமுறை வாதியாக திகழ்வீர்கள்.உண்மையுள்ள.காதல் உள்ளம் கொண்ட.மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள்.ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பீர்கள் வாழ்கையில் பலவற்றை சாதிப்பீர்கள் ,
W ,,,,
கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள் .சிறந்த காதல் உள்ளம் கொண்டவராக இருப்பீர்கள்,வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம், மனதில் பட்டத்தை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை..
X ,,,,,
சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழிநடத்தலாம் ,ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ம்பமாட்டர்கள், வாழ்க்கையில் சொகுசையும் சுகத்தையும் எதிர்பர்ப்பர்கள்.இயற்கையாக வே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக விழுவீர்கள்.
Y ,,,,,
நீங்கள் ஒரு துணிசல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள் .எந்த ஒரு இடர்பாட்டை எடுக்க தயங்க மாட்டர்கள் .செயல் திட்ட முன்னேற்றமுடைய ஜோசிப்பலரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள் சுத்தரிக்கப்பட்ட இவர்கள் வாழ்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.
Z ....
இந்த எழுத்த உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த தலைமையாக இருப்பார்கள்.பிறரை நன்கு புரிந்து கொல்வர்கள்.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Tuesday 29 January 2008

புளியம்பழத்தில் இத்தனை நன்மைகளா !!

புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள். வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும். தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.
நாம் உபயோகிக்கும் புளியைத் தரும் புளியமரம் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது. ஆனால், தொன்று தொட்டு இந்தியாவில் உபயோகப்பட்டு வருவதால் இந்தியாவிலேயே தோன்றியதாக, கருதப்படுகிறது. புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று. பசுமையான மரம் 80 அடி உயரம் வரை வளரும் அதனை சுற்றி 30-35 அடி விட்டத்துக்கு பரவும் கிளைகளுடைய பெரிய மரம்.
விஞ்ஞான ரீதியாக Leguminosae (Fabaceae) குடும்பத்தை சேர்ந்த Tamarindus India 'L' என்று குறிப்பிடப்படுகிறது. உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு வளரும் புளியமரம், குளிரைத் தாங்காது. ஆனால் கடற்கரை ஓரங்களில் கூட வளரும். அதிகமான கவனிப்பும் தேவையில்லை. சிறு செடிகளாக இருக்கும் போது உரங்கள் தேவை. விதையை நட்டு உருவாகும் புளிய மரங்கள் 6-8 வருடங்களில் பலன் தரும். செடியாக நடப்பட்ட மரங்கள் காய்க்க 3-4 வருடங்கள் போதும். மெதுவாக வளரும் புளியமரம் அதிக ஆயுள் உள்ளது.

தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பரவலாக காணப்படும் புளியமரங்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் ஓங்கி வளர்ந்து நிழல் தருகின்றன.

‪‎புளியம்பழம்‬ 3-8 அங்குல வளைந்த மேல் ஓட்டுக்களில் அடங்கியிருக்கும். ஒரு ஓட்டில் (Pods) ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரை விதையை மூடிய விழுதாக பழங்கள் இருக்கும். புளிப்பும் இனிப்பு கலந்த பழங்கள், அமிலமும் சர்க்கரையும் சேர்ந்தவை. நன்றாக பழுத்தவுடன் மேலோடுகள் உடையும் நிலையில் இருக்கும். சுலபமாக மேலோட்டை உடைக்கலாம். நன்கு வளர்ந்த புளியமரம், ஒரு வருடத்திற்கு 160 கிலோ வரை, சராசரியாக தரும்.

நாம் புளி என்று வழக்கமாக சொல்வது புளியம் பழத்தைத்தான். புளியில் கால்சியம், வைட்டமின் 'பி' நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணமூட்டவும், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது.

புளி தென்னிந்தியாவின் ஆதார உணவுகளில் ஒன்று. ரசம், குழம்பு, சாம்பார், புளிக்குழம்பு, புளியோதரை, சட்னி வகைகள். ஆந்திராவில் புளியால் ஆன "பச்சிபுளுஸ" பிரசித்தம். தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் இங்கெல்லாம் புளியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
தென் அமெரிக்காவில் புளியால் ஆன "Tamarindo" எனும் பானம் மிகவும் விரும்பப்படுகிறது.
புளி மட்டுமல்ல, கொழுந்து‬, புளி இலைகளும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. ஆப்பிரிக்க தேச ஜிம்பாப்வேயில் இலைகள் சூப்பிலும், பூக்கள் சலாட்களிலும் உபயோகப்படுகின்றன.

புளியங்கொட்டைகள்‬ . . .
இவற்றில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன. வறுக்கப்பட்ட கொட்டை, காப்பிக் கொட்டைகளுக்கு பதிலாக கலப்படம் செய்யப்படுகிறது.
புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன் ஸில் இலைகள் 'டீ' யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுகிறது. ஆயுர் வேதத்தில் வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு புளி பயன்படுகிறது. அமெரிக்கா மருந்துகள் தயாரிக்க வருடத்தில் 90,000 கிலோ புளியை இறக்குமதி செய்கிறது.


மருத்துவ பயன்கள் . . .
* புளி சூட்டைத் தணிக்கும். புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும். புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.
* புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது.
* புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.
* புளியிலை ஒரு பங்கு, வேப்பிலை ஒரு பங்கு எடுத்து நன்றாக இடித்து, 8 பங்கு நீர்விட்டு காய்ச்சி 4 பங்காக வற்றியதும் வடிகட்டி, அதைக்கொண்டு புண்களை கழுவிவர ஆறாத ரணங்கள் ஆறிவிடும்.
* புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.
* இளம் பச்சை நிறத்தில் இருக்கும் புளியங்கொழுந்து இலைகளை பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட உடலுக்கு பலம் உண்டாகும்.
* புளியங்கொழுந்தை பறித்து பச்சையாக சாப்பிட கண்களைப் பற்றிய நோய்கள், புண்கள் ஆறும்.
* புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, ‪#‎கண்‬ வலி ஆகியவை நீங்கும்.
* புளியம்பூவை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டுவர பித்தம்‬வாந்தி‬, வாய்க் கசப்பு ஆகியவை தீரும்.
* புளியை குழம்புபோல் கரைத்து, அதனுடன் 2 பங்கு உப்பு சேர்த்து காய்ச்சி கொதிக்க வைத்து, இளம்சூடாக இருக்கும் நேரத்தில் அடிபட்டதால் ஏற்பட்ட ‪ வீக்கத்தில்‬ தடவிவர இரண்டொரு வேளையில் அது கரைந்துவிடும்.
* புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள்‬நாக்கில் தடவிவர அதன் வளர்ச்சி கரையும்.
* புளியம்பழம், கரிசலாங்கண்ணி இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு 8 நாட்கள் சாப்பிட்டு வர அடிதள்ளல் குணமாகும்.
* புளியை தினமும் ரசத்தில் சேர்ப்பதால் மிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றின் வேகத்தை அது கட்டுப்படுத்தும். உணவில் அளவோடு புளியை சேர்த்துவர ஜீரண சக்தி அதிகரிக்கும்.
மது‬ அருந்தியதால் ஏற்பட்ட வெறி, மயக்கத்திற்கு புளியை கரைத்து உட்கொள்ள கொடுக்க அது குணமாகும்.
* புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள்‬ கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.
* புளியங்கொட்டையின் மேல் தோலை பொடித்து‪ சீதக்கழிச்சலுக்கு‬ உட்கொள்ள கொடுக்க அது தீரும். இதனுடன் மாதுளம் பழத்தோலையும் பொடித்து உட்கொள்ள கொடுக்கலாம்.
* புளியங்கொட்டையின் மேல் தோலை காய வைத்து தூளாக்கி, 250 & 300 மில்லி கிராம் அளவு தேன் அல்லது சர்க்கரையில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை உட்கொண்டுவர‪ புண்கள்‬நீர்க்கடுப்பு‬வெள்ளை‬வெட்டை‬கழிச்சல்‬ஆகியவை குணமாகும்.
* புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.
* புளிய மரப்பட்டையையும், சிறிது உப்பையும் ஒரு பாத்திரத்தில் இட்டு எரித்து சாம்பலாக்கி, அதில் 100 - 200 மில்லி கிராம் அளவு தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்றுப்புண்‬ ஆகியவை குணமாகும்.
* புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர‪ தொண்டைப்புண்‬ குணமாகும்.
* புளியம்பட்டையை பொடி செய்து புண்களின் மீது தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசிவர அந்த புண் ஆறும்.
* புளிய மரப்பட்டையும் மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு 'டானிக்' புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள்குஷ்டரோகத்திற்கு‬ உபயோகப்படுகின்றன.
* புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி,  பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர‪ தாதுவிருத்தி‬ உண்டாகும்.
* புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும். புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம்‬தலைச்சுற்றல்‬தீரும்.
* புளியம் பூக்களை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும்.
* ஜீரண சக்தியை உண்டாக்கும் புளி மலத்தை இளக்கக் கூடியதும் கூட! என்றாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால் ‪‎நரை‬ , வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை விரைவில் ஏற்படும்.

தொழிலியல் பயன்கள் . . .
புளியம்பழம் பாத்திரங்களை துலக்க உபயோகிக்கப்படுகிறது. துணிகளுக்கு சாயம் போடுவதில், மஞ்சளுடன் சேர்ந்து புளி உபயோகிக்கப்படுகிறது. பழச்சதையிலிருந்து பெக்டின் (Pectin) எடுக்கலாம். பழத்திலிருந்து புளிப்பொடி, புளிச்சத்து, புளி ரசம் தயாரிக்கப்படுகிறது.
புளிக்கொட்டையிலிருந்து பொடி எடுக்கப்பட்டு துணிக்கு மெருகூட்டவும். சணல் நூல் தயாரிப்பிலும் செயற்கை இழைகள் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரி உபயோகத்திற்கு சோளமாவை விட புளியம் பொடி 300 பங்கு மலிவானதாகவும், மேலானதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

புளியங்கொட்டை தோலிலிருந்து 'டானின்' எடுக்கப்பட்டு தோல் பதனிடல், ஓட்டு பலகை தயாரிப்பில் பயனாகிறது. புளியங்கொட்டை எண்ணெய் வார்னிஷ், பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

புளியமரம் கடினமான பலமான மரம். புழு, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாதது. எனவே, ஃபர்னிச்சர் (Furniture) தயாரிப்பில் நன்கு உபயோகப்படுகிறது.

புளியை பற்றிய சில நம்பிக்கைகள் . . .
புளிய மரத்தின் கீழே வேறு செடிகள் வளராது. இரவில் புளி மரத்தின் கீழே படுத்து உறங்குவது கூடாது. ஆடு, மாடுகள், குதிரை இவற்றை இம்மரத்தின் கீழ் கட்டக் கூடாது.

புளி அதிகமாக காய்த்தால், மாங்காய் உற்பத்தி குறையும்.
புளிய மரம் அதன் சுற்றுப்புறத்தை இன்னும் சூடாக்கும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி.
..

தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

Wednesday 23 January 2008

மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு பற்றிய ஒரு சிறப்பு பார்வை..

தை ஒன்று அன்று பொங்கல் திருநாள் உழவுக்கு உதவிய மாடுகளுக்கும், வேளாண்மைக்கு ஒத்துழைத்த சூரியனுக்கும் நன்றி சொல்லும், பண்டிகை,பொங்கல் தினத்தில் காலை வேளையில் வீட்டில் உள்ள காளை மற்றும் காலங்கன்றுகளை குளிப்பாட்டி வண்ணங்கள் பூசி ஊருக்கு பொதுவில் உள்ள தொழுவில் மாடுகளை அடைத்து விரட்டி விட்டு ஒத்திகை பார்ப்பார்கள்,, பொங்கல் அன்று பொங்கல் முடிந்து, மறுநாள் மாட்டு பொங்கள், பல ஊர்களில் கட்டு தறியில் பொங்கல் வைப்பார்கள், 


ஆனால் மிக அதிகமான ஊர்களில் குறிப்பாக காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை பக்கம் உள்ள 500 ஊர்களிலும் மாட்டு பொங்கல் அன்று சாதி சாதியாக தெருக்கல் பிரிந்து இருக்கும் ஒவ்வொரு சாதிக்கும் தனி கோவில் இருக்கும், அங்கு அந்த ஒட்டு மொத்த சாதி காரவர்கள் அனைவரும் பெருங்கூடையில் பானை பச்சரிசி வெள்ளம் ஒரு கரும்பு உழவுக்கு உதவிய நகத்தடி,மாட்டு தும்பு, எல்லாத்தையும் பெண்கள் எடுத்து வருவார்கள், ஆண்கள் பசு காளை கன்று எருது என்று எல்லா மாட்டை பிடித்து சாதி பொதுப்பட்டியில் அடைப்பார்கள்,, பொங்கல் அனைவரும் வைத்து இறக்கியவுடன்,மேல தாளத்துடன் மாடுகளை அழைத்து ஊரணியில் குளிப்பாட்டி பொட்டு வைத்து மாலை அணிவித்து மறுபடியும், சாதி பொதுப்பட்டயில் அடைத்து கோவிலில் பூசை முடித்தவுடன் மாடுகளுக்கு பொங்ச்சோறை ஊட்டி மகிழ்வார்கள், அடுத்து காற்று கற்றாளையில் மஞ்சி செய்து வர்ணம் பூசி காய வைத்து இருப்பார்கள் அதை அழகுக்கு கட்டி எல்லா மாட்டையும் விரட்டி விடுவார்கள், எல்லா மாடு சுதந்திர மாக ஓடி அவர் அவர் பட்டிக்கு சென்று விடும். 

இது இவ்வளவுதான் இதற்க்கு பின் தை மூன்றிலிருந்து ஒவ்வொரு ஊர் மஞ்சு விரட்டு நடக்கும், இதில் காளைகள் மட்டுமே பங்கு பெரும், சுத்துப்பட்டியில் 200 ஊர்களில் மஞ்சுவிரட்டானது நடக்கும், தை மாசி பங்குனி சித்திரை. வைகாசி வரை, மஞ்சு விரட்டு நடக்கும் எப்படி தெரியுமா? 

எந்த ஊரில் மஞ்சுவிரட்டானாலும் மற்ற ஊர்களில் காளைகள் வைத்திருப்பவர்களிடம் பாக்கு வைப்பார்கள், இன்ன தேதியில் மஞ்சுவிரட்டு இந்த தேதியில் மாடு எங்க வீட்டுலே கட்டி கெடக்கனும்னு பாக்கு வைப்பாங்க, எல்லா சாதி கார ஆட்களும் தங்கள் ஊரில் மஞ்சு விரட்டு என்றால் வேறு ஊரில் யார் மாடு வைத்திருந்தாலும் பாக்கு வைப்பார்கள், மாடுகள் பாக்கு வைத்தவர்கள் வீட்டில் வந்து கட்டிபோடுவார்கள், ஊரே கறி வாசம் மீன் வாசமடிக்கும், கறியும் சோறும் காய்கறிகளும் ஆக்கி தங்கள் வீட்டுக்கு மாடி ஓட்டி வந்த ஆட்களுக்கு சாப்பாடு போடுவார்கள், ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்க்கு மாடு ஓட்டி வந்த உயர்ந்த சாதி ஆட்கள் சாப்பிட மாட்டார்கள் அனைத்திற்க்கும் காசு கொடுத்து விடுவார்கள், கிருஷ்தவர்களும் இசுலாமியர்கள் பொது பாக்கு வைத்து விடுவார்கள்.அடுத்து பதினொரு மணி அளவில் மாட்டுக்காக வாங்கி வைத்த வேட்டிகளை மாட்டு காரர்களிடம் கொடுப்பார்கள் மாட்டு காரர்கள் மாட்டுக்கு அழகு சோடித்து வீட்டு காரவர்கள் எடுத்து கொடுத்த வேட்டியை மாட்டிற்க்கு கட்டி வீட்டின் முன் வந்து நிறுத்துவார்கள், வீட்டு கார ஆணும் பெண்ணும் மாட்டிற்க்கு பச்சரிசி வைப்பார்கள் இன்னும் சில காய்கறிகளை நறுக்கி மாட்டிற்க்கு ஊட்டுவார்கள், ஊட்டிய பின் வீட்டு சார்பில் விபுதியும் பணமும் கொடுத்து மாட்டிற்க்கும் எதுவும் ஆக கூடாது, மக்களுக்கும் எதுவும் ஆக கூடாது எங்க வீட்டுக்கு வந்த மாடி எந்த கெட்ட பேரும் எடுக்காமே நல்ல பேரு எடுத்து குடுக்கனும்னு சொல்லி வேண்டி வபுதி குடுத்து, அடுத்த வருசமும் நம்ம வீட்டுக்கே மாடு வரனும்னு வழியனுப்பி வைப்பாங்க, மாட்டு காரவங்க மாட்டே புடுச்சுகிட்டு தொழுவுக்கு போவாங்க, அதுக்குள்ளே ஊரு மக்கள் எல்லாறும் தொழுவுலே படையெடுத்து வேடிக்கை பாக்க கட்டுன மதிலுலே ஏறி வேடிக்கை பாப்பாங்க.. 


ஒரு ஊருக்குன்னு ஒட்டு மொத்த ஊருக்கும் பொது கோவில் இருக்கும் பொது சாமி இருக்கும் அந்த கோவில் காளையே தொறப்பாங்க தொறக்கும்போது சொல்லிருவாங்க முதன்முதலில் கோவில் காளை வருகிறது யாரும் கட்ட கூடாது தொடக்கூடாது என்று, சுத்துப்பட்டி ஊரே ஒரு நிமிசம் புள்ளரிச்சு போகும் கோவில் காளை சீரி வரும்போது, அதுக்கு அப்புரம் ஒவ்வொரு காளையா தொறந்து விடுவாங்க, இது எப்படி என்றால் இந்த 200 ஊர்களிலும் அம்மன் கோவில்கள் இருக்கும், திருவிழா 15 நாட்களுக்கு முன் பூச்சொறிதல் நிழகழச்சியன்று,மஞ்சு விரட்டு வைத்து திருவிழா தொடங்கும் இல்லை திருவிழாவிற்க்கு எட்டு நாள் முன்பு காப்பு கட்டுதல் அன்று மஞ்சுவிரட்டு வச்சு திருவிழா தொடங்கும்..


சிவகெங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு!!

1.சிராவயல் (பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள் விழா)
2.கண்டிப்பட்டி (பொங்கல் பண்டிகையின் ஐந்தாம்நாள் விழா கிறிஸ்தவர்களால் மதநல்லிணக்கத்தோடு நடைபெறும் விழா)

3.தேவபட்டு (கிராம தேவதையான அருள்மிகு அந்தரநாச்சியம்மன் கோயி லில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நன்றி தெரிவித்து செவ்வாய்ப்பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.மாசி மகத்திற்கு முந்தைய வாரத்தில் நடைபெறும் விழா)

4.கோட்டூர்

5.செவரக்கோட்டை

6.கல்லல்

7.மரிங்கிப்பட்டி

8.கண்ரமாணிக்கம் (முத்து முருகையா கோவில் திருவிழாவை முன்னிட்டு சித்திரை பவுர்ணமியில் மஞ்சுவிரட்டு )
9.குருந்தம்பட்டு

10.வைராபட்டி

11.கீழப்பூங்குடி

12.வேப்பங்குளம்

13.புரண்டி

14.பாகனேரி

15.ஆலவிலாம்பட்டி

16.செம்பனூர்

17.ஆலங்குடி

18.பொய்யலூர்

19.நெடுமரம்

20. அரளிபாரை

20. தெண்ணீர் வயல்

21. நல்லேந்தல்

22. திருவேகம்பத்து

23. கண்ணங்கோட்டை

24. கண்டுப்பட்டி

25. நெற்குப்பை

26. மருதூர்

27. வேப்பங்குளம்

28. இடையமேலூர்

29. கோட்டூர்

30. இருமதி

31. பட்டமங்களம்.

32. மதகுபட்டி

33. பதிணெட்டாங்குடி

34. காயாவயல்

35. மாங்கொம்பு

36.திருப்பத்தூர்,

37.கோவிலூர்,(பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள்)

38.அரளிப்பாறை 

39.வேந்தன்பட்டி

40.கண்டுப்பட்டி

41.தண்ணீர் வயல், 

42.இலுப்பக்குடி, 

43.வேலாயுதபட்டணம்

44.ஆத்தங்கரரைப்பட்டி

45.அறிகுறிஞ்சி

46.அமரவதிபுதூர் 

47.ஆலங்கூடீ மேழமானம்

48பொய்யலூர்

49.தரியம்பட்டி

50.நைனாப்பட்டடி

51.ஏல்மாபட்டி

52.குன்றக்குடி

53.நேமத்தான்பட்டி

54.வைரம்பட்டடி

55.வலையபட்டி

56.கம்பனூர்

57.நாச்சங்குளம்

58.பனங்குடி

59.காரைக்குடி பேயம்பட்டி

60.ஆத்திக்காடு

61.தெக்கூர்

62.மைவலம்பட்டி


புதுக்கோட்டைமாவட்டத்தில் மஞ்சுவிரட்டு!!

1.திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவில் மஞ்சுவிட்டு,

2.நார்த்தா மலை முத்துமாரியம்மன் கோவில் மஞ்சு விரட்டு,

3.கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் மஞ்சுவிரட்டு,

3.எழஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோவில் மஞ்சு விரட்டு,

4.அன்னவாசல் மஞ்சுவிரட்டு,

5..கூத்தினிப்பட்டி மஞ்சு விரட்டு,

6.இலுப்பூர் மஞ்சு விரட்டு,

7.வயலோகம் மஞ்சு விரட்டு,

8.புல் வயல் பதினெட்டு பட்டி மஞ்சு விரட்டு,

10.வெள்ளஞ்சார் மஞ்சு விரட்டு,

11.தாண்டீசுவரம் மஞ்சுவிரட்டு,

12.மாங்கடி நான்கு ஊர் மஞ்சுவிரட்டு,

13.கீரனூர் மஞ்சுவிரட்டு,


திண்டுக்கல், திருச்சி, மதுரை,புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 500 கிராமங்கள் சிற்றூர்கள் இணைந்து நடத்தும் மஞ்சு விரட்டு திருவிழாக்கள் , தை 1ஆம் தேதியில் தொடங்கி வைகாசி 30 ம் தேதியுடன் அனைத்து மஞ்சு விரட்டுகளும் அம்மன் கோவில் திருவிழாக்கலும் முடிந்து மஞ்சுவிரட்டு இனிதே நிறைவுரும்.



மஞ்சுவிரட்டுக்கு நாம் பார்க்க செல்வதற்க்கான காரணங்கள் !!

1.மரமேறி நின்று மாடணைய பார்ப்பது ஒரு காரணமென கொள்ளலாம்.

2.கொல்லையில் நுழைந்தால் சாராயம்.வாசலில் நுழைந்தால் கறிச்சோறு எல்லாவீட்டிலும்.

3.வாடாமல்லி பூச்சூடிய சிறுசுகளை டிராக்டர் வண்டிகளில் வேறெப்போதும் காணகிடைக்காதுதானே.

4.ஆலை கரும்பு தின்று சக்கையை மச்சான்களின் மேல் எறிய மச்சினிகளும் வருகிறார்கள்.

5.ஐஸ் வியாபாரிகளின் அதட்டல் மீறி ஹாரன் அடித்து சிரிக்கிற சிறுவர்கள் வேறொரு ஓவியம்.

6.பிரியம் தவறக்கூடாதென போகலைன்னா ஆத்தா கோவிக்கும் காரணங்களை காட்டிஇடுப்பு குழந்தைகளோடு வந்து சிரித்து "இறங்கி புடி....ஆம்பளை" எனச்சீண்டும்கன்னக்குழி கறுப்பிகளும் காணக்கிடைப்பதுண்டு கூடுதலாக.

7.அனைத்து மதத்தினரும் கண்டுகளிக்கும் பொது இடமாகவும் உள்ளது இவ்வாறு மஞ்சு விரட்டு என்னும் ஜல்லி கட்டு எந்த சாதிக்கும் சொந்த மில்லை.

இது போக,வேறு சிலவும் உண்டு.


என்ன நண்பர்களே புரிந்ததா ? எங்கள் பகுதியில் மஞ்சு விரட்டு என்ற பெயரே பிரசித்தம் தான் !!


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


.

Tuesday 22 January 2008

விமானத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் கருப்பு பெட்டி பற்றிய விழிப்புணர்வு தவகல்!!

விமானத்தில் உள்ள கறுப்பு பெட்டி என்றால் என்ன ?


“கறுப்புப் பெட்டி” என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.

விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும்.
 அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம். 

இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும்.
 
ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும்.
 
பெரிய கறுப்புப் பெட்டிக்கு ஆங்கிலப் பெயர் Flight data recorde r (பறப்பின் தகவல் பதியி). இது விமானம்
 பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்கு ஆங்கிலப் பெயர் (Voice recorder) இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும். 

கறுப்புப் பெட்டி உருவான வரலாறு: 
கறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார்.
 
ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆய்வில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார். 


கறுப்புப் பெட்டி குறித்த அதிசயத் தகவல்கள் : 
* கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கறுப்பு அல்ல, செம்மஞ்சள் நிறம். 
* ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். 
* கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிக்கா, டைட்டானியம் (Titanium) “ஸ்டைன்லெஸ் ஸ்டீல்” (Stainless steel) ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான். 
* விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து “பீப்” (Beep) சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது. 
* இது 2000 பாரன்ஹீட் (2000 °F) வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது. 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday 17 January 2008

கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது பற்றிய வரலாற்று பார்வை !!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சாய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வரும் இதன் விலை எரிபொருள் விலையில் பல மாற்றத்ததை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

கச்சா எண்ணெய் என்பது பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் மற்றும் கரிம பொருட்களின் கலவையாகும். நீர்ம நிலையில் உள்ள எண்ணெய் பொருளான, இது பல்வேறு நாடுகளிலில் பல கால கட்டங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஒரு இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்காக தோண்டிய குழியில் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய் கிடைத்ததாக சுட்டிக்காட்டுகின்றன வரலாற்று பதிவுகள்.

இதனை தொடர்ந்தே அரபு நாடுகள் முழுவதும் எண்ணெய் வளங்கள் குறித்து ஆராயப்பட்டது.

அதில் baku என்ற இடத்தில் அதிகளவிலான எண்ணெய் வளங்கள் இருந்ததை வல்லுநர்கள் கண்டறிந்தனர்.

அதன் பிறகு கச்சாய் எண்ணெய் பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மண்ணெண்ணெய்யாக பயன்படுத்தப்பட்டது.

கிபி 826 -ல் பெர்சியன் ரசவாதி ஒருவர் கச்சா எண்ணெய்யை அலம்பிக் என்ற வடிகலனை பயன்படுத்தி எரியும் திரவமான பெட்ரோலை கண்டறிந்தார். இப்படி பலவகையான எரிபொருட்கள் கச்சா எண்ணெயிலிருந்து புழக்கத்திற்கு வந்தன.

அதன் பிறகு பல வணிக ரீதியான பயன்பாட்டில் கச்சா எண்ணெய் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 1856 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் தான் முதன் முதலில் வணிக ரீதியான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டது. ?சர்வதேச சந்தையில், கச்சாஎண்ணெய் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. எனினும் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகளை அந்த அளவிற்கு குறைக்காமல் வெறு மனே ஒரு ரூபாய், 2 ரூபாய் என கண்துடைப்புக்காக குறைக்கும் அறிவிப்புகளை மோடி அரசு வெளியிட்டு வருகிறது.கடந்த 2014 ஜூன் முதல் இதுவரை கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் குறைந்துள் ளது. கடந்த 7 வாரங்களில் மட்டும் விலை 36 சதவீதம் குறைந்துள்ளது.

அதிக சப்ளை மற்றும் தேவைப்பாடு குறைவு காரணமாக எண்ணெய் விலை குறைந்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் சீனா இரண்டாவது இடத் தில் உள்ளது. அந்நாடு கடந்தடிசம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்துள் ளது. விலை சரிவை வாய்ப்பாக பயன்படுத்தி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் அந்நாடு இறக்குமதியை அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் ஒரு பீப்பாய் அமெரிக்க கச்சா எண்ணெய் சராசரி விலை 40 டாலர் என்ற அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தியை குறைத்து, அளவுக்கதிகமான சப்ளையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது.

படிப்படியாக விலை குறைந்துதற்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பேரல் விலை 45 டாலர் என்ற அளவிற்கு பெருமளவில் சரிந்துள்ளது.சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி தொடர்ந்து நீடிக்கும் நிலையில் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மக்கள் சீனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஆனால் அப்படியொரு முயற்சியை இந்தியாவில் மோடி அரசுஎந்தவிதத்திலும் மேற் கொள்ளவில்லை.

ஏற்கெனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது அதிகரித்துக் கொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங் களுக்கு அனுமதி அளித்து, அரசு தனது கட்டுப்பாட்டை கைவிட்டது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு பெட் ரோல் விலை தொடர்பாக இந்த மோசமான காரியத் தை செய்தது. அரசு வந்ததும் டீசல் விலை கட்டுப் பாட்டு அதிகாரத்தையும் கைவிட்டது.

இதன் விளைவாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தபோ தெல்லாம் இந்தியாவில் தாறுமாறாக பெட்ரோல் – டீசல் விலைகள் அதிகரிக்கப் பட்டன. அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.93 என்ற அளவை தொட்டது. இது சில்லரை விற்பனையில் 80ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு சர்வ தேச விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், அந்த வீழ்ச்சிக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகள் குறைக்கப்பட வில்லை.

மாறாக, இன்னும் கடுமை யான தாக்குதலை அரசு கட்டவிழ்த்துவிட்டது. சர்வதேச விலை வீழ்ச்சியால் தானாகவே பெட்ரோல் – டீசல் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டபோதிலும், அவற்றின் மீது அதிகப்படி யான உற்பத்தி வரியையும் கலால் வரியையும் அடுத் தடுத்து மூன்றுமுறை விதித்துஉத்தரவிட்டது. இதன் விளைவாக பெட்ரோல் – டீசல் விலைகள் பெருமளவுக்கு குறையாமல் உச்சத்திலேயே நீடிக்கின்றன. இதன்காரண மாக ஏற் கெனவே ஏற்றப்பட்ட அனைத்துவிதமான விலை களும் அதே உயர்விலேயே நீடிக்கின்றன.

இதனிடையே விலைக் குறைப்பு என்ற பெயரில் அவ்வப்போது ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை குறைப்பதாக அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது ரூ.2 குறைக்கப்படும் என தெரிகிறது. அப்படியே குறைக்கப் பட்டாலும், சர்வதேச சந்தை மதிப்பின்படி உள்ளூரில் வெறும் ரூ.30 முதல் 40 வரைவிற்கப்பட வேண்டிய பெட் ரோலுக்கு இரண்டு மடங்கு கூடுதல் விலை தரவேண்டிய நிலையே நீடிக்கிறது.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்

Tuesday 15 January 2008

மகர ஜோதி என்ற பெயரில் ஆன்மீக மோசடி....?

பொய்யைக் காப்பாற்ற இன்னொரு பொய்.
மகர ஜோதி என்ற பெயரில் ஆன்மீக மோசடி செய்யும் ஐயப்ப தேவஸ்தானமும், கேரள அரசாங்கமும்.

மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து அதன் மூலம் தம் குடும்ப வாழ்க்கையை நடத்திச் செல்ல முற்படுபவர்கள் பலர்.


இப்படிப் பட்டவர்கள் பல மதங்களிலும் இருக்கிறார்கள் ஆனால் பெரும்பாலான மதங்களே மூட நம்பிக்கையாகவே இருக்கிறது என்பதும் நிதர்சனம்.

கத்தம், கந்தூரி, மந்திரித்தல், பேயோட்டுதல், தர்காவில் கூப்பாடு போடுதல் என்று முஸ்லீம் பெயர் தாங்கிகள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதைப் போல் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றுவதற்குப் பல வழிகளைக் கையால்கிறார்கள்.

அந்த வகையில் இந்து மதத்தைச் சேர்ந்த சில புரோகிதர்கள் மக்களிடம் இருந்து பணத்தைக் கரந்து கொள்ள ஏற்படுத்திக் கொண்ட வழிதான் இந்த மகர ஜோதி.

மகர ஜோதி என்ற இந்தப் பொய் ஜோதியைப் பற்றிய உண்மையான தகவலை அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் இது கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட நாடகமாகும்.

மகர ஜோதி என்றால் என்ன?

இந்தியாவின் தென் மாகாணமான கேரளாவில் இருக்கும் சபரி மலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குக் கிழக்கே மலை நடுவில் தெரியும் ஒளிக் கற்றையை மகர ஜோதி என்று அழைக்கிறார்கள்.

ஐய்யப்பனை கடவுளாக(?) வணங்கும் இந்து மக்கள் இந்த ஒளியை கடவுள்தான் ஒளியாகத் தெரிகிறார் என்று நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளும் கேரள திருவிதாங்கூர் சபரி மலையான் கோயில் தேவசம் போர்ட்டுக்கும் கேரள அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.

பக்தர்களிடமிருந்து காணிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் தங்க ஆபரணங்களும் இந்த போர்டுக்கு வருவாயாக கிடைக்கிறது.

ருசி கண்ட தேவசம் போர்ட்டு நிர்வாகமும் இந்த ஒளியை கடவுளின் ஒளியாகத்தான் இதுவரைக்கும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது.

மகர ஜோதி கடவுளின் செயலா? அல்லது காடையர்களின் செயலா?


மகர ஜோதி என்ற பெயரில் கடவுளுடன் தொடர்பு படுத்தப் படும் குறிப்பிட்ட தீப்பந்தம் எவ்வாறு தோன்றுகிறது என்ற உண்மைச் செய்திகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பலரால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டும் மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கை காரணமாக ஐயப்பனை தரிசிக்க வரும் பக்க கோடிகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறது.

உலகத்திலேயே அதிகமான கடவுள்(?)களை கொண்ட ஒரு மதமாக அல்லது அதிகமான கடவுள்களை(?) வணங்கும் மதத்தினராக இந்துக்கள் தான் இருப்பார்கள்.

கண்டதையும் கடவுளாக வணங்கும் இவா்களின் மடமைத் தனத்தினால் தான் இந்த ஐயப்ப(?)னும் கடவுளாக மாறிவிட்டார்.

(மலையில் (மனிதர்களினால் எறிக்கப்படும்) மகர ஜோதி - படத்தைப் பார்க்கவும்.)


கடவுள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட அற்ற ஐயப்ப தேவசம் போர்டும் கேரள அரசும் ஐயப்பனை கடவுள்(?) என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் அதே நேரம், ஐயப்பன் பெயரால் பொய்யான தீப்பந்தத்தை உருவாக்கி அது பொய்யன்று தங்களுக்கு தெரிந்த நிலையிலேயே மக்களை ஏமாற்றுவதுதான் வேடிக்கையான விஷயம்.

பூனைக் குட்டி வெளியில் வந்தது எப்படி?

கடவுளின் செயல் என்று கண்ணாம் பூச்சி ஆட்டம் காட்டப்பட்ட ஐயப்பனின் மகர ஜோதி பற்றிய உண்மை மக்களுக்கு மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதும் ஆடிப்போனது. ஐயப்பனின் தேவசம் போர்டும், கேரளாவின் ஆளும் அரசும்.

மகர ஜோதி பற்றிய ஆய்வை மேற்கொண்ட கேரளாவின் மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ் கே பெரிய விலார் அவர்களை இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி சேவையான விஜய் டி.வி மகர ஜோதி தொடர்பாக ஒரு பேட்டி எடுத்தது அந்தப் பேட்டியில் மகர ஜோதி என்ற பெயரில் ஐயப்ப கோவில் நிர்வாகம் நடத்தும் நாடகத்தை தாம் எவ்வாறு வெளியில் கொண்டு வந்தோம் என்ற தகவலை அவர் எடுத்துரைத்தார் அந்த வீடியோவை இங்கே பதிவு செய்கிறோம்.


மகர ஜோதியின் உண்மைத் தன்மை பற்றிய கேரள மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ் அவர்களின் பேட்டியின் வீடியோவைக் காண.....


மகர ஜோதி என்ற பித்தளாட்டம் பாகம் 01

மகர ஜோதி என்ற பித்தளாட்டம் பாகம் 02




கேரள ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு நிர்வாகத்தின் ஆலோசனையின் பிரகாரம் கேரளாவின் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் கேரள வனத்துறை ஊழியர்களுடன், அரச தரப்பினரும் சேர்ந்து ஆடும் நாடகமே இந்த மகர ஜோதி என்பது.


சபரி மலையின் பொன்னம்பல மேட்டில் எறியும் இந்த மகர ஜோதி என்ற பொய்யான ஜோதியை மேற்கண்ட அணைத்து தரப்பினரும் சேர்ந்து திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

(மகர ஜோதி பித்தளாட்டம் நடக்கும் இடம் இதுதான் - படத்தைப் பார்க்கவும்.)


ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி ஐய்யப்ப பக்தர்கள் இந்த மகர ஜோதியைக் காண்பதற்காக கேரளா, ஆந்திரா, கர்னாடகா, தமிழ்நாடு, புதுவை, டெல்லி என்று இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக் கணக்கான மக்கள் வந்து கேரளாவின் இடுக்கி மாவட்டம் புல்மேடு வனப்பகுதியில் இருந்து இந்த மகர ஜோதியை(?) காண்பார்கள்.

புல் மேடு பகுதியில் இருந்து பார்க்கும் போது வானத்தில் இருந்து தீபம் தெரிவதைப் போன்ற காட்டி உருவாகுவதினால் அங்கு வரும் பக்தர்கள்(?) அந்த காட்டி வானத்தில் இருந்துதான் தெரிகிறது என்று நம்புகிறார்கள்.

ஆனால உண்மையில் அது கேரள வனத்துறை மற்றும் காவல் துறையின் உதவியுடன் நடத்தப் படும் நாடகம் தான்.

தீபம் உருவாகும் விதம்.

கேரள வனத்துறை மற்றும் காவல் துறை உதவியுடன் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி மலை உச்சியில் கற்புரகக் கற்றைகளை பெரிய பாத்திரித்திற்குள் வைத்து எறிக்கிறார்கள். மூன்று முறை எறிக்கப்படும் இந்த கற்புரக தீ உருவாக்க நிகழ்ச்சியில் முதல் தடவை எறித்ததும் கொஞ்ச நேரத்தில் வேறு ஒரு பாத்திரத்தினால் அதனை மூடி விடுவார்கள்.

பின்பு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவைகளும் முதல் தடவை செய்ததைப் போலவே செய்வார்கள்.

மூன்ற தடவை இப்படி செய்ததும் அதனை அனைத்து விடுவார்கள்.

இந்த நிகழ்வை இரகசியமாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டார் கேரள பத்திரிக்கையாளர் மனோஜ் கே பெரியவிலார்.

அதன் பின்னர் கேரளாவைச் சோ்ந்த சில அமைப்புகள் இந்த மகர ஜோதி ஏற்றும் நிகழ்வைத் தடுக்க முற்பட்ட போதும் போலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டார்கள்.

அதே போல் இன்னும் சில அமைப்புகள் பத்திரிக்கையாளர் மனோஜ் உடன் சென்று அதே தினத்தில் மகர ஜோதி எறிக்கப்படும் முன்பு தாங்கள் ஒரு தீயை எறித்தார்கள் இதுதான் மகர ஜோதி என்று அன்றும் மக்களும் நம்பினார்கள். பல மீடியாக்களும் இதனை ஒளிபரப்பினார்கள்.

ஆனால் தேவசம் போர்ட் நிர்வாகமோ அது மகர ஜோதி அல்ல என்று மறுத்துறைத்தது. ஏன் என்றால் அந்த தீயை அவா்கள் செட்அப் செய்தவர்கள் எறிக்கவில்லை என்பது அவா்களுக்குத் தான் தெரியும்.

மனிதக் கேடிகளின் வேலையே மகர ஜோதி !

சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்'' என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், ""வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு'' என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பொய் ஜோதி தொடர்பாக டெகல்கா இணையதள ஆங்கில பத்திரிக்கை (21.06.208) அன்று வெளியிட்ட பரபரப்புத் தகவல் இதோ.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம்; இக்குடும்பத்தின் பி.ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலாகாவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடியை ஆரம்பித்தனர்.

கற்பூரத்தை மூட்டை மூட்டையாகத் கொட்டி கொளுத்தி மகரவிளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்கு கோயிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மனோஜ் அவா்களின் குழு முயன்றது.

1973-இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சி செய்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது, கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச்சட்டப் படி எந்தக் குற்றமும் அந்தக் குழு செய்யவில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து பொன்னம்பலமேடு வந்து, வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தியது அந்தக் குழு..

இப்போது ஐய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரரு மகேஸ்வரர், ஆம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்துகிறார் என்று ஒப்புக்கொண்டார்; தேவஸ்வம்போர்டு தலைவர் கி.கே.குப்தனும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத் துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் ஆமோதித்துவிட்டார்.

ஆக மொத்தத்தில் ஒரு பொய்யை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு அரசாங்கமே இந்த நாடகத்தை முன்னின்று நடத்துகிறது.

பொது மக்களே ! அறிவு ஜீவிகளே !




இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளையும், பொய்யையும், அயோக்கியத்தனத்தையும் தன் கொள்கையாக கொண்ட மதங்களை நம்புவதை விட்டு விட்டு மூட நம்பிக்கைகளற்ற தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி உங்களை அழைக்கிறோம்.




விரைந்து வாருங்கள் உங்களுக்கான நேரான வழி தூய்மையான திருமறைக் குர்ஆனிலும் நபியவர்களின் வாழ்கை வழிகாட்டுதலிலும் நிறைந்திருக்கிறது.


அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் வாழச் செய்வானாக!

-RASMIN M.I.Sc.
 source-http://rasminmisc.blogspot.com/2011/03/blog-post.html

Sunday 13 January 2008

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு/ மஞ்சுவிரட்டு பற்றிய சிறப்பு பார்வை..

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு,கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப்பட்டு நடத்தப்படுகின்றது. 

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு(ஜல்லிக்கட்டு) :
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு.ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும்.
ஜல்லிக்கட்டு பெயர்க்காரணம் :

ஜல்லிக்கட்டு என்ற சொல் "ஜல்லி" (Salli) என்னும் மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்கிறது சொல்லாக்க வரலாறு. காசு (Kasu) என்பது Coins என்பதாகவும் Kattu என்பது பரிசுத்தொகையின் கோர்ப்பாகவும் பொருள்படுகிறது.புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது.பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனதாகவும் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எண்ணற்ற சான்றுகள் சங்கத்தமிழ் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதைச் சங்கத் தமிழ் நூல்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
தமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை பண்டைக் கால இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வாள், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களை கையாள்வதில் மட்டுமின்றி, துள்ளித்திரியும் காளைகளை துணிந்து அடக்கும் இளைஞர்கள் பற்றி கலித்தொகையில் கொல்லேறு தழுவல் என குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை அறியலாம். 

வரலாறு 

15ஆம் நூற்றாண்டில் எருதுச்சண்டை ஸ்பெயின் நாட்டில் உருவானது. மெக்சிகோ, பெரு, கொலம்பியா மற்றும் வெனின்சுலா போன்ற நாடுகளுக்கும் பரவியது. அங்கு மாடோ மனிதனோ இறப்பது பொதுவானதென்றே கருதப்படுகிறது.எனவே, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் விளையாட்டுபோல் அல்ல ஜல்லிக்கட்டு. 
ஸ்பெயின் நாட்டில்கூட 15ஆம் நூற்றாண்டிலிருந்துதான் "Bull Bitting" என்ற பெயரால் குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது. எனவே, இவ்விளையாட்டில் நமக்கு மட்டுமே மரபுரீதியான தொன்மையான நீண்ட அனுபவம் உள்ள விளையாட்டுக்கு மட்டுமே பிரதானமான இடமுண்டு. இதில் மனிதனுக்கோ காளைக்கோ மரணம் சம்பவிக்காமல் காக்கப்படுகிறது. முழுக்க முழுக்கப் பார்வையாளர்களின் விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு என்பதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.ஜல்லிக்கட்டு எப்படி துவங்கியது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வீர விளையாட்டாகவே இன்றளவும் கருதுகின்றனர். எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் தை மாத துவக்கத்தை தென் மாவட்ட மக்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.


ஜல்லிக்கட்டு சிறப்பம்சம்: 
இவ்விளையாட்டு உண்மையில் காளைகள் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கெனவே தனிக்கவனம் கொண்டு வளர்க்கப்படுவது இதன் சிறப்பம்சம். இந்தக் காளைகள் வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பது அவற்றின் மீதான கற்பனைகளை விரிக்கிறது. இயல்பாகவே காளைகளை அடக்கத் துடிக்கும் வீரமறவர் குல இளைஞர்களின் குருதியோடும் சுவாசத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஜல்லிக்கட்டு. இக்கூற்று மிகையாகத் தெரிந்தாலும் தைமாதம் முழுவதும் இந்த இளைஞர்களின் சுவாசமே வீரத்தை விருத்திப்படுத்துவதில் மையம் கொள்கிறது. மதுரை மாவட்டத்திலுள்ள அநேக கிராமங்களில் உள்ள "கோவில்மேட்டுப்" பகுதி இவ்விளையாட்டினை நிகழ்த்தும் களப் பரப்பாகவே கண்ணுக்குத் தெரிகிறது. மேலும் இந்த விளையாட்டின் மூலம் காளைகளுக்குத் தேவையற்ற வலியோ தீங்கோ இரத்தக் காயங்களோ ஏற்படுவதில்லை. அந்த அளவிற்கு இதனை நடத்தும்போது விதிமுறைகளில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு பார்வையில், மேலோட்டமாக மனிதன் காளைகளோடு மோதும் முரண்பட்ட விளையாட்டாகத் தோன்றினாலும் உண்மை அதுவன்று. எதிரிக்கு எதிரி போர்க்களத்தில் நண்பனாவதுபோல் இரண்டு வீரர்களும் வீரம் காட்டி விளையாடும் நுட்பம் இதில் மறைந்துள்ளது. வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளைப் பின்தொடர்ந்து வீரர்கள் குறித்த தூரத்தில் ஓடி விளையாட்டுக் காட்டி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறார்கள். இதனை மாடு பிடிக்கும் விழா என்றும் கூறுவதுண்டு. உண்மையில், பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது மூன்றாம் நூற்றாண்டில் அவர்களது நாள்காட்டியில் இந்த விழா பற்றிய குறிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த மேட்டுப்பட்டி எனும் இடத்தில் காணப்படும் குகைச்சித்திரத்தில் ஒரு தனி மனிதன் ஒரு காளையை அடக்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறம் மஞ்சு விரட்டு :
'மஞ்சு விரட்டு' என்று மறுபெயரிட்டு இது அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டிலிருந்து வேறுபடுகிறது இவ் விளையாட்டு என்பதே இதன் மீதான சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது. திறந்த மைதானத்தில் 'காளை' தனிமையில் விடப்படுகிறது. ஆயுதங்கள் இல்லாத மனவலிமை கொண்ட வீரர்கள் அதனை விரட்டிப் பிடித்து அடக்குவார்கள் என்பது நிஜம். அப்போது காளையின் இரண்டு கொம்புகளையும் தமது உரமேறிய கைகளால் மடக்கிப் பிடித்து அடக்கும் வீரர்கள், கொம்பில் கட்டப்பட்டுள்ள மஞ்சள் துணியிலுள்ள பரிசை வென்று மகிழ்வார்கள். வலிமையைப் பறைசாற்றும் இவ்விளையாட்டில் ஆண்களுக்கு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பெண்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவதுகூட ஒருவகையில் காதல் பயிரிடும் களமாகிறது. ஒரு நல்ல வீரம் நிறைந்த ஆண்மகனைக் காதலனாகப் பெறவே இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு நம்நாட்டில் நடத்தப்பட்டுவருகிறது. எனக்குச் சரியாக நினைவில்லையென்றாலும் உலகின் பல நாடுகளிலும் இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்துள்ளதை நான் அறிகிறேன்.






காளையை அடக்கும் வீரதமிழர்கள் :
பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன்பின்
இவர்கள் களம் காணும் வீரத் திருவிழாதான் இந்த ஜல்லிக்கட்டு. நூற்றுக்கணக்கான காளைகள், ஆயிரக்கணக்கான காளையர்கள், லட்சக்க ணக்கான பார்வையாளர்கள் கூடுவதால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமமே களை கட்டும். இதில் வீரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு
கவுரவமும் அடங்கியிருக்கிறது. ஒரு வீரர் ஒரு காளையை அடக்கும் முயற்சி யில் வெற்றி பெற்று விட்டால் அவருக்கு பரிசுகளும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் காளையை அடக்க முயன்று தோல்வியை தழுவிவிட்டால் விழுப் புண் அல்லது உயிரிழப்பு கூட நேரிடலாம்.
மாடுபிடிப் போரில் காளையை அடக்கிய வீரன் காதல் நிரம்பிய அழகிய கன்னிகையிடமிருந்து காதல் பரிசாக மோதிரத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்கிறது நமது பழைய வரலாறு. காதலும் வீரமும் தமிழர்களின் ஒழுக்கமாகும். அதனையே இந்த விளையாட்டு உலகிற்கு உணர்த்துகிறது.


காளை வளர்க்கும் உரிமையாளர்பயிற்சி!!
நாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.

அதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆவதாக அவற்றின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இத்தனை பயிற்சிக்கு பின் களமிறங்கும் காளைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை கலக்கி விட்டு கம்பீரமாக வெளியேறினால் அவற்றின் மவுசு பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிறப்பு பெற்ற பல காளைகள் ரூ1.5 லட்சத்திற்கும் அதிகமாக கூட விற்பனையாகின்றன. அதேசமயம் பிடிபட்டு விட் டால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதி அதனை அடிமாட்டு விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். எனவே தான், ஜல்லிக்கட்டு தமிழர் களின் வீரத்தோடு மட்டுமின்றி உணர்வோடு கலந்ததாகவும் விளங்கி வருகிறது.
அதேபோல், தான் வளர்க்கும் காளை யாரிடமும் பிடிபடாமல் வந்து விட்டால் அதன் உரிமையாளர், அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கி, தனது கவுரவம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக வெளியே வருவார். மாறாக காளை அடக்கப் பட்டு விட்டால் பெரும் அவமானத்துடன் வீடு செல்ல நேரிடும். எனவே தான் கவுரவம், வீரம் ஆகிய இரண்டையும் மனதில் கொண்டு ஜல்லிக்கட்டு தொடங்கும் சீசனுக்கு ஒரு மாதம் முன்னதாக காளைகள், காளை யர்களுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்துவதே தனி கலை

பயிற்சிக்கு பின் அரங்கேற்றம் தொடங்கும் காளைகள் சுமார் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. அதன்பின் அந்த காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லாமல் தொடர்ந்து வீட்டில் வைத்தே குடும்பத்தில் ஒருவரை போல் பராமரிக்கின்றனர். பாசமாக வளர்த்த காளை இறந்து விட்டால், அவற்றிற்கு வீட்டருகே கோயில் கட்டி வழிபாடு நடத்துவதையும் பல கிராமங்களில் காண முடிகிறது. இப்படி சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே நடந்து வரும் (கி.மு.2000) ஜல்லிக்கட்டிற்கு எதிராக தற்போது கிளம்பியுள்ள அத்தனை தடைகளையும் தாண்டி, அதனை தொடர்ந்து நடத்தும் ஆற்றல் தமிழர்களுக்கு கிடைத்ததற்கு காளைகள் மீதான பாசம், காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரம், காளைகளால் கிடைக்கும் கவுரவம் ஆகியவை தான் காரணம் என்பதை உணர முடிகிறது.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை.ஆவரங்காடு, மற்றும் தேனீமலை , தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன ஏறுதழுவல் புகழ்பெற்றது.



ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டின் பல முறைகள்:

சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. 

1. வாடி மஞ்சுவிரட்டு: மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று  அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். இம்முறை தஞ்சாவூர், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

2. விரட்டு மஞ்சுவிரட்டு அல்லது 
வேலி மஞ்சுவிரட்டு: இம்முறையில், பல காளைகள் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஓட விடப்படும்.அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும்,  இந்த காளைகளை அடக்க பல இளைஞர்கள் களத்தில் இறங்கி தத்தம் வீரத்தை காட்டுவர். இது பொதுவாக மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் விளையாடப்படுகிறது.

3. வட மஞ்சுவிரட்டு: 
தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
என் கருத்து :


1. காளைகளை சித்திரவதை செய்வதாக கூறப்படும் கருத்தை மாற்ற, காளைகளை திடலில் விடும் முன்பு, மருத்துவர்கள் அவைகளை பரிசோதித்து அவை எவ்வித சித்திரவதைகளுக்கும் உட்படவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.

2. இந் நிகழ்ச்சிகளை வீதிகளில் நடத்த விடாமல் ஒரு விளையாட்டு திடலில் தக்க பாதுகாப்புடனும், பார்வையாளர்களை உயரிய இடங்களில் பத்திரமாக அமர வசதிகளுடன் நடத்தப்படவேண்டும்.

3. இதை ஒரு சமுதாய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாற்றி, இதற்கு ஒரு புது வடிவத்தையும், புதுப்பொலிவையையும் அளிக்க வேண்டும்.

4. பிற விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்று இவைகளை நடத்தவும் பெரிய வர்த்தக அமைப்புகள் நிதியளித்து ஊக்குவிக்கவேண்டும்.

5. கேரளத்தில் நடைபெறும் படகு விழா போன்று இந்த விளையாட்டையும் பிற நாட்டினர் வந்து கண்டு களிக்க ஆண்டுதோறும் நடக்கும் ஒரு சுற்றுலா நிகழ்ச்சியாக அமைக்கவேண்டும்.
இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்து மதத்தோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதக்கூடியது அல்ல என்பதைத் தங்களுக்கு முன்வைக்கிறேன். கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்திவருவதால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.