Wednesday 15 October 2008

திருக்குர்ஆனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் ஏன்திருக்குறளை பின்பற்றக் கூடாது ?

ஓர் மாற்று மத நண்பர் கேட்ட கேள்வி. திருக்குறள் 2000 ஆண்டிற்கு முந்தையது ஏன் நீங்கள் திருக்குறளை பின் பற்றி வாழக்கூடாது?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செல்களை பற்றி அறிவியல் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர் நீங்கள் குர்ஆன் இறைவேதம் என்பதற்கு அறிவியலை சான்றாய் எடுத்து அதை பின் பற்றுங்களேன் ....என்று கேட்கிறார்.இதுகுறித்து விளக்குங்களேன் !

ஒரு மிக்சியோ கிரைண்டோ பைக்கோ எதுவாக இருந்தாலும் அதை விலை கொடுத்து வாங்கிய நம் இஷ்டப்படி பயன்படுத்தினால் அதிலிருந்து கிடைக்கவேண்டிய பலனைப் பெற முடியாது ! அதை தயாரித்த நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி பயன்படுத்தினால்தான் அதன் பலனைப் பெறமுடியும் அதுபோலத்தான் மனிதனும் தன் மனோஇச்சையில் உருவான வழிகாட்டுதலின் படி நடந்தால் பலனிருக்காது ! மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டுதலின் படி நடந்தால் தான் பிறவிக்கான பயனை அடையமுடியும்!
முஸ்லிகளாகிய நாங்கள் முக்காலங்களையும் உணர்ந்த இறைவனுடைய திருக்குர்ஆன் எனும் இறைவழி காட்டலின்படி வாழ்கிறோம்!
ஆனால் திருக்குறள் என்பது திருவள்ளுவர் எனும் மனிதருடைய வழிகாட்டுதல்! அதில் ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு இல்லாமை என நிறைய இஸ்லாத்துக்கு உடன்பாடான கருத்துக்கள் உள்ளன ! ஆனால் அது ஒரு மனிதன் அன்றைக்கு தன காலத்தில் இருந்த அறிவைக் கொண்டு கூறி இருப்பதால் அது இன்றைய வாழ்வுக்கு முழுமையாகப் பொருந்தாது !
உதாரணமாக அறிவியலுக்கு முரணாக சந்திரனை பாம்பு விழுங்குவதால் கிரஹணம் ஏற்படுவதாக கூறுகிறது!
கொல்லாமை புலால் உண்ணாமை பற்றிப் பேசுகிறது உலகின் 80 % மக்கள் புலால் உண்ணாமல் இருந்தால் என்னாகும் ! ஆடு மாடெல்லாம் பல்கிப் பெருகி மனிதன் வாழ இடமின்றி போகும்! துருவப் பிரதேசங்களில் மீனை மட்டும் உண்டு வாழும் மக்களும் , மீனவர்களும் வாழ முடியாது!
பிற தெய்வம் தொழாது தன் கணவனாகிய தெய்வத்தைத் தொழுது துயில் எழுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யுமாம்! என்று பெண்ணடிமைத்தனமான கருத்து மட்டுமில்லாமல் அறிவியலுக்கு முரணான இது போன்ற ஏராளமான கருத்துக்கள் உள்ளன ! இதுபோன்ற எந்த முரணையும் நீங்கள் குர்ஆனில் காணமுடியாது
மேலும் சித்தர்கள் என்ன செல் ஆராய்ச்சி செய்தார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்! அப்படி ஓரிரு விஷயங்கள் இருக்கலாம்! பிறப்பு முதல் இறப்பு வரை முழு மனித வாழ்வுக்கும் வழி காட்டும் மறையா அது ? இல்லை!
ஒரு தத்துவம் எல்லாக் காலத்திற்கும், எந்த நிலப்பகுதி க்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்! எந்த ஒரு மனிதனும் பின்பற்றக் கூடியதாக இருக்க வேண்டும் !
மேலும் இஸ்லாம் மனிதர்கள் சுயசிந்தனையில் உதித்த சட்டதிட்டங்களைக் கொண்டதில்லை! அது காலத்திற்கு ஏற்ப மாறுவதில்லை ! அது எந்நாளும் எவ்விடமும் பொருந்தும் இறைவன் வகுத்த சட்டங்கள் !
படைத்த இறைவன் தந்த இறை வழிகாட்டுதல்!
மேலும் அறிவியலை துணைச் சான்றாக கூறுகின்றோமே தவிர அதுவே முழுச் சான்றாக கூறுவதில்லை ! இஸ்லாம் இறைவழிகாட்டுதல் தான் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன!

No comments:

Post a Comment