Saturday 29 August 2009

சுவர்க்கம் செல்வதறக்கான பாதைகள்....

1- ஏகத்துவமும் தூதுத்துவமும் ...
 அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
(நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)
2- அல்குர்ஆன்அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் தூய்மையான கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)
கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)
அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதிய மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அது அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதி)
குல் ஹுவல்லாஹு அஹத் சூராவை யாரேனும் பத்துத் தடவை முழுமையாக ஓதிமுடித்தால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அஹ்மத்)
3- அஸ்மாவுல் ஹுஸ்னாநிச்சயமாக அல்லாஹ்வுக்கு -நூறில் ஒன்று குறைய- 99 அழகிய பெயர்கள் உள்ளன. யார் அதனை மனனம் செய்துள்ளாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)
4- திக்ருகள்ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : திர்மிதீ)

உங்களில் யாரேனும் ஒருவர் முறையாக உளுச் செய்து, பிறகு
அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு
என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பி வாயிலில் நுழைந்து கொள்ளலாம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம்)

"லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்பது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)


5- பிரார்த்தனைசொர்க்கத்தை வேண்டி மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், இறைவா! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், இறைவா! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது.(நபிமொழி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ)

6- கல்வியாரேனும் ஒருவர் கல்வியைத் தேடிச் சென்றால் அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு சொர்க்கப் பாதையை எளிதாக்கிவிடுகின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)
7- வணக்க வழிபாடுகளும் பொதுப்பணிகளும்மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் -எழுந்து- வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்!.
(நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ்-ரலி, நூல் : திர்மிதீ)

8- பள்ளிவாயில் கட்டுதல்காட்டுப் புறாவின் கூட்டைப் போன்றோ அல்லது அதனை விட சிறிய அளவிலோ யாரேனும் அல்லாஹ்வுக்காக பள்ளிவாயில் கட்டிக் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : இப்னுமாஜா)

9- அறப்போர்சொர்க்கம், வாள்களின் நிழல்களுக்கு கீழே உள்ளது.
(நபிமொழி, அறிவிப்பவர் : இப்னு அபீ அவ்ஃபா -ரலி, நூல் : புகாரீ)


10- தர்மம்அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது. (நபிமொழி, அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி, நூல் : அஹ்மத்)

11- இரக்க சிந்தனைஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி ஊற்றி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ)

12- அநாதைகளுக்கு ஆதரவுதன் உறவினருடைய அனாதைக்கோ, அல்லது பிறருடைய அனாதைக்கோ பொறுப்பேற்றவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு -அருகில்- இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா-ரலி, நூல்: முஸ்லிம்)

13- பெண் பிள்ளைகள்இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ)
14- இறையச்சமும் நற்குணமும்எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள்? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள். எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக நரகத்தில் நுழைவார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நாவின் காரணத்தாலும் இச்சை உறுப்பின் காரணத்தாலும்! என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ)

15- கோபம் கொள்ளாமைதன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்பிய ஹுருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்குவான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அபூதாவூத்)

16- பெற்றோரைப் பேணல்முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவனுடைய மூக்கு மண்ணோடு மண்ணாகட்டும்!
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)

17- மார்க்கச் சகோதரனை சந்திக்கச் செல்தல்யாரேனும் நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது அல்லாஹ்வுக்காக மார்க்கச் சகோதரனைச் சந்திக்கச் சென்றால் -மலக்குமார் களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் இதனால் நீ சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! என்று கூறுவார். (நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி. நூல்:திர்மிதீ)
18- குழந்தைகளை இழந்தவர்கள்மூன்று குழந்தைகளை இழந்தும் பொறுமையை கடைபிடித்தவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, இரண்டு குழந்தைகளை இழந்தவர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டு குழந்தைகளை இழந்தவரும் தான் என்று கூறினார்கள். நான் ஒரு குழந்தையைப் பற்றிக் கேட்டிருக்கக் கூடாதா? என்று அப்பெண் கூறினார். (நூல் : நஸாயீ)
19- சோதனையில் பொறுமைஆதமின் மகனே! சோதனை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையைக் கடைபிடித்து, என்னிடத்தில் கூலியையும் எதிர்பார்த்தால் அதன் கூலியாக சொர்க்கத்தை தவிர வேறு எதனைத் தரவும் நான் விரும்ப மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : இப்னுமாஜா)
20- பெருமையும் கடனும் வேண்டாம்பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூல் : திர்மிதீ)

21- ஈமானுடன் மரணம்யார் நரகத்தை விட்டும் தூரமாகி, சொர்க்கத்தில் நுழைய விரும்புகின்ரோ அவருக்கு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கும் நிலையில் மரணம் வரட்டும். மேலும் தன்னிடம் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ் -ரலி, நூல் : முஸ்லிம்)

Tuesday 25 August 2009

What is Isometric Drawing and How to Make..

  1. Isometric drawing is way of presenting designs/drawings in three dimensions. In order for a design to appear three dimensional, a 30 degree angle is applied to its sides. The cube opposite, has been drawn in isometric projection.
    Isometric projection is a method for visually representing three-dimensional objects in two dimensions in technical and engineering drawings. It is an axonometric projection in which the three coordinate axes appear equally foreshortened and the angles between any two of them are 120 degrees.
    Designs drawn in isometric projection are normally drawn precisely using drawing equipment. However, designers find ‘free hand’ sketching in isometric projection useful. 

    These drawings are quick sketches, that allow the designer to put his / her thoughts down on paper rapidly. This helps him/her develop an idea or design concept quickly, without the need for complex drawings, at an early stage in the design process.
    In engineering, a technique called orthographic projection is used to show a three dimensional object as a two dimensional drawing.Isometric drawings give 3D views but don't give enough information about an object's true look because you can't see the exact shape and size of each feature.Orthographic projection allows all possible views of a three dimensional object to be shown in a two dimensional drawing. It uses multiple views of the object, taken from points of view rotated about the object's center through increments of 90°.
    Orthographic projection showing all views of 3 dimensional object in a two dimensional drawingProcedure of making isometric Drawing: 
    1. Created on isometric paper. 
    2. "Shop Isometric" should be prior precedence than "field isometric". 
    3. Each line must be able to show a clear information. 
    4. Drawing should be clear and easy to read. 
    5. Piping each path can be made when necessary in some isometric drawing. 
    6. Pipe line routes should be made thicker from other lines. 
    7. If there is any doubt in how the image, then information, in order to review prior to construction . 
    8. Isometric drawing generally does not scale, but may make seproporsional. 
    9. Each reference image should be indicated. 
    10. Direction of image needs to be listed as well as the number isometric. 
    11. Type of pipe support should be clear. 
    12. Description repairs (revision) should be clear also the last. 
    13. General description must be clear and specific. 


    Isometric drawings should show this: 
    1. Title of the pipe line. 
    2. Channel pipe, which is the number, size, classification, direction 
    flow and to repair. 
    3. Dimensions or the size of each material. 
    4. Coordinates, orientation, ELEVATION, each piping path and equipment. 
    5. Reference image a connection or a connection piping path. 
    6. Size gasket or gasket. 
    7. Symbols, specifications, codes, standards must be clear and 
    engineering division has been set previously. 
    8. Forms of employment. 
    9. If there is a change in the form of work or limit the work must be clearly indicated. 
    10. Coordinates, orientation, ELEVATION and type of pipe support. 
    11. Nozzle and pressure on the pressure valve savty. 
    12. Coordinates, orientation, and type of instrument Nyasa ELEVATION. 
    13. Form of connection, such as with pengelasan, thread, weld and thread, and so forth. 
    14. Not need to brace the branch connection is used. 
    15. Slope to a vertical direction with the "V" and horizontal with code "H". 
    16. Signs of curvature and curvature broken. 
    17. O'let or communicator as weldolet, and sockolet - other. 
    18. Number of the spool at a desired image isometric. 
    19. Is stress relief or not. 
    20. Type of insulation. 
    21. Boiler piping codes such as pressure, temperature and service. 
    22. Other references such as LDT (Designation table line), P & ID, image vendors, a special reference case required field. 


    After the isometric drawing is declared finished after checking through some phase or examination, then He is ready to send this picture as a guide to the field of employment in the field, but must remain checking against a P & ID, LTD, models and other reference.
    Prepared by: M.Ajmal Khan.

தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன் புரூஸ் லீ வரலாறு -ஒரு பார்வை ...



நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது.

1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ.
1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்ட பெயர் லீ ஜுன்பேன்'  அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர். சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலான சிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது. சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார் புரூஸ் லீ.  

இயற்கையாகவே நன்றாக சண்டைபோடும் திறமை அவருக்கு இருந்ததால் ஒரு கும்பலுக்கு தலைவனாகவும் இருந்தார். புரூஸ் லீயின் தந்தையோ நன்கு படித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் சண்டைபோட்டு எல்லோரையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ. சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு நல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. தன் தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டார். அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் கொட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர் அவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர். 

அப்போதுதான் 18 வயது இளைஞனாக அமெரிக்கா வந்து சேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கிக்கொண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில் வேலையும் பார்த்தார். அவரது எண்ணம், செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப் பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, குத்துச்சண்டை ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து அவர் சொந்தமாக ஒரு தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். அவரிடம் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்து கொண்டார் புரூஸ் லீ. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த புரூஸ் லீக்கு ஹாலிவுட்டில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் ஹாலிவுட் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோர்ந்துபோன புரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார்.

தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றி கவலைப்படாத புரூஸ் லீ 1972 ஆம் ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த டிராகன்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்த புரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம் ஆனால் புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.
அதுவரை ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின் விசிறிகளாக இருந்தனர். “தி ரிட்டன் ஆஃப் த டிராகன்” படத்திற்கு பிறகு அமெரிக்க இளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாயினர். அந்தப்படம் தந்த வெற்றிக்களிப்பில் “கேம் ஆப் டெத்” என்ற தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும் வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக்கொண்டனர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டவராயிற்றே அவர். உடனே தனது சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹாலிவுட்டுக்காக “என்டர் தி டிராகன்”  என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். அசுர வேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் அனைத்தும் இரண்டே மாதங்களில் முடிவடைந்தன.

“என்டர் தி டிராகன்” என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாரத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடைபெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப்படமான “கேம் ஆப் டெத்” என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில் சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போது அவருக்கு வயது 33 தான். அவர் இறந்தது பெடிட் டிங் பே என்ற ஒரு நடிகையின் வீட்டில் அதனால் புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட சண்டைக்காட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார் என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவிலை.
புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு வெளிவந்த “என்டர் தி டிராகன்”  படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலை அள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளை முடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின் கவணத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையே சேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமான இளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்கு சான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம் என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவது,எடை தூக்குவது என்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள், ஜின்செங், ராயல் ஜெல்லி போன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார்.
அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல் இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும் தான் தேர்ந்தெடுத்த துறையில் அவர் செலுத்திய முழு கவணமும் காட்டிய ஆர்வமும் கொட்டிய உழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே வானத்தை வசப்படுத்தின. நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல தேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடா முயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக் கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்!!!

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

Wednesday 19 August 2009

சூரியனின் ஒளி

சூரியனின் ஒளி அதன் மேற்பரப்பில் நிகழும் ஒருவித இரசாயன் செயல் முறையினால்தான் (Chemical Process) ஏற்படுகின்றது. இந்த இரசாயன செயல்முறை கடந்த 500 கோடி வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இரசாயன செயல் முறை முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது சூரியன் தன் ஒளியை முழுமையாக இழந்து அணைந்து விடும். இதனால் புவியில் உயிரினங்கள் யாவும் அழிவை சந்திக்கும்.

சூரியன் வாழ்வு நிரந்தரமானது அல்ல என்பதை பின் வரும் வசனம் கூறுகிறது.
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையறைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவற்றையும் மிகைத்தோனும், நன்கறிந்தோனுமாகிய (இறை)வன்
விதித்ததாகும். 36:38 سورة يس

இங்கு கையாளப்பட்டுள்ள ‘முஸ்தகர்’ என்ற சொல்லுக்கு பொருள் தீர்மானிக்கப்பட்டு விட்ட ஓர் இடத்தை அல்லது காலத்தைக் குறிப்பதாகும். எனவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் சூரியனானது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சென்றிடும். அதன் பின்னர் அது ஒரு முடிவுக்கு வந்து விடும் அல்லது அணைந்துவிடும். இக்கருத்தினை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்கள். 13:2, 35:13, 39:5

அனைத்துப் பொருட்களிலும் இணைகள் அனைத்துப் பொருட்களிலும் இணைகள்
وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம்
படைத்தோம். 51:49 سورة الذاريات
இந்த இறைவசனம் மனிதர்கள், மிருகங்கள் செடிகொடிகள் பழவகைகள் என்ற இனங்களையும் கடந்து
மற்றவற்றிலும் பாலினம் இருக்கிறது என்பதை கூறுகிறது. நாம் அன்றாடம் பயன் படுத்தும்
மின்சாரம் கூட Negative, Positive என அமைந்திருப்பதை காணலாம்.

سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ
أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்)
எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப்
படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 36:36 سورة يس
இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் இணைகள் உள்ளடங்கி நிற்கின்றன என்பதை இறைமறை கூறுகின்றது. ஆனால் சில உண்மைகளை இப்பொழுது அறியாமல் இருக்கலாம். எதிர் வரும்
காலங்களில் அவன் அவற்றைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிவிக்கக்கூடும்.
முதுகந்தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையே
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِن مَّاء دَافِقٍ يَخْرُجُ مِن بَيْنِ
الصُّلْبِ وَالتَّرَائِبِ மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகந்தண்டிற்கும், விலா
எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. 86:5-7 سورة الطارق

கரு வளர்ச்சியின் படிநிலையில் ஆண் மற்றும் பெண்ணுடைய உற்பத்தி உறுப்புகள், அதாவது ஆணிண் விதைப்பையும் (Testicles) பெண்ணின் கருவகமும் (Ovary) சிறுநீரகத்திற்கு (Kidney) அருகிலிருந்தே வளர்ச்சி அடையத் தொடங்குகின்றன. இச்சிறுநீரகம் முதுகந்தண்டிற்கும் 11வது, 12வது விலா எலும்புகளுக்குக் நடுவே அமைந்துள்ளது.

பின்னர் இந்த உறுப்புகள் கீழ்நோக்கி அமைகின்றன. பெண்ணின் கருமுட்டைப்பை இடுப்பருகில் அமைந்துள்ளது. ஆணின் விதைப்பை பிறப்பிற்கு முன்பிருந்தே தொடைக்கும் அடிவயிறுக்கும் இடையிலுள்ள (Groin) பாதை வழியே அண்ட கோசத்தை (Scrotum) நோக்கி கீழறங்கி விடுகிறது. ஆயினும் ஆணின் உற்பத்தி ஊறுப்புகள் அடிவயிறு பகுதியில் அமைந்துள்ள முக்கிய இரத்த நாளத்திலிருந்தே நரம்பு மண்டலத்தையும், இரத்த ஓட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றன. இந்த இரத்த நாளம்
முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் நடுவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கருவறையின் மூன்று இருட்திரைகள்
خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم
مِّنْ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ
خَلْقًا مِن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ
الْمُلْكُ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُصْرَفُونَ سورة الزمر 39:6
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காகக் கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகள்) ஜோடி, ஜோடியாகப் படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத்தவிர, வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுவீர்கள்? سورة الزمر 39:6

டாக்டர் கீத் மூர் அவர்களின் ஆய்வுப்படி திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் இவையே!
தாயின் அடிவயிறு (Abdominal wall)
கருப்பையின் சுவர் (Uterine wall)
குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் (Amniotic membrane)
உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டிகள் ‘முக்தா’ படிதரத்தில் கரு உள்ளபோதே அதனை ஒரு கத்தியைக் கொண்டு வெட்டினால், அதன்
உள்ளுறுப்பு இருகூறாக வெட்டப்பட்டு விடும். அப்பொழுது அக்கருவிற்குள் பெரும்பாலான உறுப்புகள் உருவாக்கப்பட்டதையும், அதே நேரத்தில் வேறு சில உறுப்புகள்
உருவாக்கப்படாமலும் இருப்பதை கண்டு கொள்ளலாம்.  எனவே அக்கரு ஒரு முழுமையான படைப்பா அல்லது முழுமையடையாத படைப்பா என்ற கேள்வி
எழுகின்றது. கரு உருவாக்கம் (Ebroyogenesis) பற்றிய படித்தரத்தை அதாவது உருவாக்கப்பட்டது உருவாக்கப்படாததும் எனும் நிலையை திருக்குர்ஆன் தரும் வர்ணனைத் தவிர சிறந்ததொரு வர்ணனை காண இயலாது இதனை பின் வரும் வசனத்தை பாருங்கள்.

يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم  مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ
ُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்டுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்)
மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்.) 22:5 سورة الحج
விஞ்ஞான ரீதியாகவே கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் உயிரணுக்களில் (Cells) சில வித்தியசாபடுத்தப்பட்டும் சில வித்தியாசப்படுத்த படாமலும் உள்ளதை பார்க்கிறோம்.  செவி,பார்வைப் புலன்கள் செவி,பார்வைப் வளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனேயாகும். 24வது வாரத்திற்கு பின்னர்
கருக்குழந்தை (Foetus) ஒலிகளை கேட்கத் தொடங்குகிறது. இதனைப் பின் தொடர்ந்து பார்வைப்புலனும் 28வது வாரத்த்தில் கண்ணின் விழித்திரை (Retina) வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பெறுகின்றது. கருவில் உருவாகும் இப்புலணர்வை இறைமறை இப்படி எடுத்துறைக்கிறது.

وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்: (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும். 32:9 سورة
السجدة إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக; அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும்
ஆக்கினோம். அத்தஹர் 76:2
இந்த வசனங்களிலிருந்து பார்வைப் புலனுக்கு முன்பு செவிப்புலனை குறிப்பிடுவதை பார்க்கலாம். எனவே நவீன கருவியல் கண்டுபிடிப்புகள் குர்ஆன் வர்ணனைகள் பொருந்திப் போவதை காணலாம்.

தோலில் அமைந்திருக்கும் வலி உள்வாங்கிகள் தோலில் அமைந்திருக்கும் வலி உள்வாங்கிகள் (Pain-receptors) உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூலையில்தான் உள்ளது என்று எண்ணினர். ஆனால் அண்மைக்கால கண்டுபிடிப்புகள், வலி உள்வாங்கிகள் (Pain-receptors) தோலில் அமைந்திருப்பதால்தான் ஒரு மனிதன் வலியை உணர்கிறான் என்று நிரூபித்துள்ளன. இந்த (Pain-receptors) இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்திட இயலாது.
தீக்காயங்களால் துன்புறும் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர், அந்நோயாளியின் தீக்காயத்தின் அளவை கண்டறிய ஒரு குண்டூசியால் குத்திப் பார்க்கின்றனர். நோயாளி வலியை உணரும் பட்சத்தில் நோயாளி லேசான தீக்காயங்களோடு தப்பினார் என டாக்டர் மகிழ்ச்சி அடைகிறார். காரணம் தீக்காயங்களால் உள்வாங்கிகள் (Pain-receptors) பழுதாகாமல் நல்ல நிலையில் உள்ளது என்பதை எடுத்துகாட்டுகின்றது. இதற்கு மாறாக நோயாளி குண்டூசியினால் வலியை உணராமல் இருந்தால் அந்த தீக்காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதோடு உள்வாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
إِنَّ الَّذِينَ كَفَرُواْ بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُواْ الْعَذَابَ إِنَّ اللّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதெற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்- நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4: 56
سورةالنساء

தாய்லாந்தில் உள்ள (Chieng Mai University) பல்கலைகழகத்தில் உடர்கூறு துறையின் தலைவர் Prof. Tagatat Tejasen என்பவர் தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நீண்ட காலம் ஆய்வு மேற்கொண்டவர். 1400 ஆண்டுகளுக்கு முன் இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளதை அவரால் ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லை. இந்த மிகத் துல்லியமான அறிவியல் பேருண்மை திருக்குர்ஆனில் பொதிந்து கிடப்பதை கண்ட பேராசியரியர் தெஜாசன் ஆச்சரியப்பட்டார்.

Tuesday 18 August 2009

பல ஆண்டுகள் வாழ 10 எளிய வழிமுறைகள்..

1. நாம் வசிக்கும் இடத்தில் சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் ஏராளமாகக் கிடைக்க வேண்டும்.

2. பல் ஈறு இவற்றைத் தினமும் காலை,மாலை இரு வேளையும் பல் துலக்கியால் தேய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

3. நிற்கும் போதும், நடக்கும்போதும் நமது உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

4. உடற்பயிற்சி உயிர்காக்கும்; உடற்பயிற்சியை தின்மும் திறந்த வெளி அல்லது காற்றோட்டமான இடங்களில் செய்ய வேண்டும்.

5. நோய்க் கிருமிகள் உடலில் நூழையா வண்ணம் சுகாதர விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

6. கோபம், உணர்ச்சி வசப்படுதல், கவலை இவைகளைத் தவிர்த்து, மன அமைதியுடன் இருக்க வேண்டும்.

7. உழைப்பிற்கு ஏற்ற உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று, மெதுவாக, அளவோடு சாப்பிட வேண்டும். (நொறுங்க தின்றால் நூறு வயது).

8. பச்சை காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

9. கொழுப்பு, காரம், புளிப்பு சேர்ந்த உணவுப் பொருட்களை அளவோடு சாப்பிட வேண்டும்.

10. இரவு மன ச்சிக்கல் இன்றி படுத்து, காலை மலச்சிக்கல் இன்றி எழல் வேண்டும்.
 
மனிதன் மனிதனாக வாழ சில  அம்சங்கள்

* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை

* மிக மிக நல்ல நாள் - இன்று

* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு

* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

* மிகக் கொடிய நோய் - பேராசை

* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

* கீழ்த்தரமான விடயம் - பொறாமை

* நம்பக் கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

* செய்யக் கூடியது - உதவி

* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

* பிரியக் கூடாதது - நட்பு

* மறக்கக் கூடாதது - நன்றி


 இவைகளை மனிதர்கள் *பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்...

Monday 17 August 2009

Indian Customs Baggage Rules for Gold & Silver ...





Rules in India,Maximum gold which you can carry exempted customs duty is INR 10000, which is equal to 1 gram value, But  females can wear the ornaments an earring avoiding the official customs duty. Is there any one who can change these stupid rules made in 18th century. My dear NRI's officially you can bring only 1 gm of gold avoiding official duty.

Can NRIs bring gold into India? 

Yes. 
NRIs can bring into India gold upto 10,000 grams as part of their baggage once in 
six months provided they have stayed abroad for a continuous period of six months. 



In what form can the gold be brought into India? 
The gold may be brought into India in any form, including ornaments (other 
ornaments studded with stones and pearls). 



Are NRIs required to pay customs duty on the gold brought by them into India? 
Yes. They are required to pay customs duty in any convertible foreign currency at a rate equivalent to Rs.220/- per 10 grams of gold. (may change from time to time)



How often can a NRI bring gold into India? 
A NRI can bring gold into India once in six months. 



Is it necessary that the NRI should have stayed abroad at least for a minimum period of six months prior to his return to India for being eligible to bring gold? 
Yes.





Import of Silver by NRI's 


Can NRIs bring silver into India? 
Yes. NRIs can bring to India silver upto 100 kilograms as part of their personal baggage. 

What is the rate of duty payment on such import? 
The rate of duty on import of silver is Rs. 500 per kilogram which is payable in foreign currency. (may change from time to time) 



Can NRI's bring both gold and silver? 
Yes. 


Can NRIs sell gold/silver imported by them to residents? 

Yes. Gold/silver so brought by NRIs can be sold to residents against payment in rupees. Reserve Bank has granted general permission to persons resident in India to make payment to NRIs in Indian rupees by means of a crossed cheque in India and that such rupees are credited to Ordinary Non-resident Rupee (NRO) account of the NRI seller. 








Rules & Regulations 

Jewellery which is in addition to the duty free jewellery otherwise allowed 
without payment of duty only is liable to payment of duty

(a) Who can import Gold as Baggage
  • Any passenger of Indian origin or
  • Any Passenger holding a valid passport issued under the Passport Act 1967


(b) Eligibility Conditions and Customs Duty
Short visits if any during this 6 months is ignored if the duration on such short visit does not exceed 30 days and the passenger has not availed of the exemption under this scheme at the time of such short visit.

  • The duty at the rate of Rs. 250 per 10 gm should be paid by the passenger in convertible Foreign currency
  • The weight of Gold (including ornaments) should not exceed 10 Kg per passenger
  • The gold is carried by the eligible passenger at the time of his arrival in India or is imported by him within 15 days of his arrival in India
  • Ornaments studded with stones and pearls will not be allowed to be imported under this scheme.
  • The passenger can also obtain the permitted quantity of gold from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the gold from the Customs bonded warehouse and pay the duty before clearance. Customs bonded warehouse and pay the he passenger can also obtain the permitted quantity of gold from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii)He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the gold from the duty before clearance.



Note: The jewellery, which is in addition to the jewellery otherwise allowed without payment of duty, only is liable to payment of duty under the above mentioned scheme for import of gold/silver. 




Clearence of Silver on payment of duty 



(a) Who can import Silver
  • Any Passenger of Indian Origin or
  • Any passenger holding a valid passport issued under the Passport Act 1967.

(b) Eligibility conditions and Customs Duty
Short visits if any during this 6 months is ignored if the duration on such short visit does not exceed 30 days and the passenger.has not availed of the exemption under this scheme at the time of such short visit.
  • The duty at the rate of Rs. 500 per Kilogram should be paid by the passenger in convertible Foreign currency
  • The quantity of Silver should not exceed 100 Kilogram per passenger
  • The Silver is carried by the eligible passenger at the time of his arrival in India or is imported by him within 15 days of his arrival in India
  • Ornaments studded with stones and pearls will not be allowed to be imported under this scheme.
  • The passenger can also obtain the permitted quantity of silver from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the silver from the Customs bonded warehouse and pay the duty before clearance.Customs bonded warehouse and pay the he passenger can also obtain the permitted quantity of silver from Customs bonded warehouse of State Bank of India and Metal and Mineral Trading Corporation subject to conditions (i) and (iii). He is required to file a declaration on the prescribed Form before the Customs Officer at the time of arrival in India stating his intention to obtain the silver from the duty before clearance.

Collection by M.Ajmal Khan.

Sunday 16 August 2009

Pipe Fittings & Types..

Fitting is a piping component that functions as a connective pipe with the pipe, the pipe direction, create a branch pipe, the pipe size, etc.. 
1. Elbow 
Elbow is the type of fitting used to alter the pipe direction retire to a corner 45 or 90 degrees. Review of radius elbow elbow is available in the following types: 
a. Long radius: radius = 1.5 x Diameter 
b. Short radius: radius = 1 x Diameter 

Method of connection can be: buttweld, Weld socket, and threaded 

2. Tee 
Is the type of tee fitting 3-hole (3-way fitting) is shaped like the letter "T" used to create a branch perpendicular to the main pipe. There are 2 types in common use in piping as follows: 

a. Stright Tee: Has 3 openings with the same cut size. 
b. Reducing Tee: Having a branch with the size of a small section of main pipe. 

Method of connection can be: buttweld (BW), Weld socket (WS), and threaded.

3. Reducer 
Reducer is a kind of fitting that be used for reducing piping size. There are 2 types reducer as follows: 

a. Concentric reducer: have a central axis (centerline) of the section between the large and small. 


b. Eccentric reducer: the central axis has a different (offset) between a large section and small. 

Concentric reducer is most commonly used and often eccentric reducer used in piping in about pump and piperack area. 

4. Cap 
Cap is the type of fitting used to close the ends of the pipe. 
Method of connection can be: butt Weld, Weld socket, treaded. 

5. Weldolet 
Weldolet is the type of fitting used to create a branch with the smaller size of main pipe. Weldolet usually used in piping with high pressure and temperature where the connection with the joint type buttweld. The use of reinforcing pad is not required on weldolet. 

6. Miter 
Miter is sometimes used to replace the elbow. Miter is fabricated material from the pipe. Use miter for large size pipes can be cheaper than the elbow. However, lack of which has a higher pressure drop and vulnerable to overstress. With the lack of consideration, the miter is usually used to piping with large size and low pressure. 

7. Coupling 
Coupling is the type of fitting used to create a branch (half coupling) on the pipe size 2 "up and to connect straight pipe (full coupling). 
Method of connection can be: Socket Weld, and treaded. 

8. Plug
 
The plug is the type of fitting used to close the open end of the part of the coupling or the tip of the valve from the vent or drain. 

9. Swage 
Swage is the type of fixture that has a function similar to the reducer. Swage used if pipe size reduction up to 1-1/2 "and smaller. Swage is also available in two types, namely concentric and eccentric. Form depending on the end of the continuation method is needed, as follows: 
a. Plan End (PE) 
b. Tread End (TE) 
c. Bevel End (BE) 


Usually the end of the swage in the form of combination, for example; BLE - TSE (Bevel large end - Thread small end)  BLE - PSE (Bevel large end - Plain small end), etc.. 

10. Union 

Union is basically used for the purpose of removing the fixture, and in some cases be used to connect (assemble) piping. 

11. Thredolet & Sockolet 
Threadolet and sockolet is fitting that has the same function, namely to make weldolet smaller branches from the main pipe. The difference is that in addition to the design end of the connection with the method and socketweld thread. 

12. Stub-In 
Stub-in is not the type of fitting but is a way to create a branch to the main pipe. Branch can be the same size or smaller than the main pipe. Stub-in with the use of fitting can be avoided only because the regular pipes. Use Stub-in only very limited services on piping with pressure and temperature because the concentration of low-voltage high enough on the draw. To strengthen the connection, usually can be added reinforcing pad.


Prepared by M.Ajmal Khan.

Thursday 13 August 2009

மதுரையில் ஏழு ரோடுகளை ரூ.257 கோடிகளில் விரிவாக்கும் திட்டங்கள் எப்போது ?

Image result for 4 way road in tamilnadu மதுரையில் போக்குவரத்துநெரிசலை குறைக்கும் வகையில், ஏழு ரோடுகளை ரூ.257 கோடிகளில் விரிவாக்கும் திட்டங்கள் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. சட்டசபை தேர்தல் நடப்பதற்குள் இப்பணிகளை துவக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  


மதுரை உத்தங்குடி - கப்பலூர் இடையே 27 கி.மீ., தூரத்திற்கு ரிங் ரோடு அமைக்கப்பட்டும், நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. இதை தவிர்க்க, 133 கி.மீ., தூரத்திற்கு புது ரிங் ரோடு அமைக்கும் திட்டம் அரசுக்கு அனுப்பி ஓராண்டாகியும் இன்னும் கிடப்பில் உள்ளது. இதற்கிடையே இருவழிச்சாலையாக (12 மீ.) உள்ள ரிங் ரோட்டை, நான்கு வழிச்சாலையாக மாற்ற முன்பே, 30 மீ., அகலத்திற்கு இடம் கையகப்படுத்தப்பட்டது. நான்குவழிச்சாலையாக மாற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தும், இத்திட்டம் கிடப்பில் உள்ளது. நில ஆர்ஜித பணிகளால் உத்தங்குடி - சமயநல்லூர் இடையே, 21 கி.மீ., தூரத்திற்கு ரோடு அமைக்கும் திட்டம் பத்து ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. 

இதற்கிடையே மதுரையில் ஏழு ரோடுகளை ரூ.257 கோடியில் விரிவு படுத்தும் பணி பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. இதில், அழகப்பன்நகர், டி.வி.எஸ்.நகர், ஜீவாநகர், முத்துப்பட்டி வழியாகவும் விமான நிலையத்திற்கு (9.70 கி.மீ.,) புதிய பாதை அமைக்கும் திட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. இப்பாதை அமையும் பட்சத்தில், ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் குறையும்.

மூன்றுமாவடி, அய்யர்பங்களா, ஆனையூர், அலங்காநல்லூர் ரோடுகளை 9.50 கி.மீ.,க்கு விரிவுப்படுத்தும் பணியும், 5.20 கி.மீ., தூரத்திற்கு நிலையூர், பெருங்குடி, விமான நிலைய ரோடு விரிவுப்படுத்தும் பணியும் கிடப்பில் கிடக்கின்றன.

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பின்புறத்தில் 2 கி.மீ.,க்கு அண்ணா நகர் 80 அடி ரோடு, ரிங் ரோடு இணைக்கும் பணியும், 2.10 கி.மீ.,க்கு திருநகர், தென்பழஞ்சி ரோட்டை விரிவுப்படுத்தும் பணியும் முடங்கி கிடக்கின்றன. ஐந்து கி.மீ., தூரம் உடைய புதுக்குளம், மாடக்குளம் ரோடு மற்றும் மேலக்கால் ரோடு வளர்ச்சிபணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொலைநோக்குடன் தயாரிக்கப்பட்ட இத்திட்டங்கள், பல ஆண்டுகளாக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், இப்போதே இதற்கான முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்..

மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அடுத்த வாரம் கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமையிலான குழு டில்லி செல்கிறது. ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், புதிய ரிங் ரோடு மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி எதிர்புறத்திலிருந்து அழகர்கோவில் ரோடு, கடச்சனேந்தல் பாலம், ஜெயவிலாஸ் கார்டன், ஊமச்சிக்குளம் வடபுறம் ஒரு கி.மீ., வழியாக அலங்காநல்லூர், சமயநல்லூர் மேம்பாலம் வழியாக அமையும்.



தொகுப்பு : அ . தையுப அஜ்மல்.