Thursday 30 September 2010

Leadership in Energy and Environmental Design (LEED) Awareness for Engineers, Contractor & Consultants..

What is LEED?

Leadership in Energy and Environmental Design (LEED) is a rating system devised by the United States Green Building Council (USGBC) to evaluate the environmental performance of a building and encourage market transformation towards sustainable design. The system is credit-based, allowing projects to earn points for environmentally friendly actions taken during construction and use of a building. LEED was launched in an effort to develop a “consensus-based, market-driven rating system to accelerate the development and implementation of green building practices.” The program is not rigidly structured; not every project must meet identical requirements to qualify.

These LEED products are currently available:

  • LEED - v3.0 for New Construction and Major Renovations
  • LEED - for Homes
  • LEED - for Core and Shell
  • LEED – for Existing Buildings: Operations and Maintanance
  • LEED – for Commercial Interiors
  • LEED - for Schools
  • LEED - for Retail
  • LEED - for Healthcare
  • LEED - for Neighborhood Development (in pilot stage)


Detailed information on the LEED program and project certification process is available from USGBC at http://www.usgbc.org/. The program outlines the intent, requirements, technologies, and strategies for meeting each credit. Credits are broken down into individual points. A building requires at least 40 points for certification in LEED-NC v3.0. Silver, gold, and platinum levels are also available.

LEED Certification Levels..

  • Certified 40 - 49 Points
  • Silver 50 - 59 Points
  • Gold 60 - 79 Points
  • Platinum 80-110 Points

How Does Concrete Help Achieve LEED Certification?

Using concrete can help increase the number of points awarded to a building in the LEED system. The following table provides suggestions for earning LEED-NC v3 points through the use of cement and concrete products. The credit categories and the credit numbers are those in the LEED rating system. Points must be documented according to LEED procedures in order to be earned. The USGBC website, http://www.usgbc.org/, contains a downloadable “letter template” that greatly simplifies the documentation requirements for LEED v3.0. The potential available points that can be earned with the help of concrete range from 25 to 34.

How Concrete Can Contribute to Points..

PROJECT CHECKLIST - LEED New Construction (NC) v3

Sustainable SitesPoints
Credit 3Brownfield Redevelopment1
Credit 5.1Site Development, Protect or Restore Habitat1
Credit 5.2Site Development, Maximize Open Space1
Credit 6.1Stormwater Design, Quantity Control1
Credit 6.2Stormwater Design, Quality Control1
Credit 7.1Heat Island Effect, Non-roof1
Credit 7.2Heat Island Effect, Roof1
Energy and Atmosphere
Prerequisite 2Minimum Energy PerformanceRequired
Credit 1Optimize Energy Performance1 - 19
Materials and Resources
Credit 1.1Building Reuse, Maintain 55%, 75%, 95% of Existing Walls, Floors, and Roof up to 3
Credit 2Construction Waste Management, Divert 50% or 75% up to 2
Credit 4Recycled Content, 10% or 20% (post-consumer plus ½ pre-consumer) up to 2
Credit 5Regional Materials, 10% or 20%up to 2
Innovation and Design Process
Credit 1Innovation in Design1-5
Credit 2LEED Accredited professional 1
Project Totals25 - 34


Why Use LEED?

LEED is a voluntary program; however, obtaining a LEED certification projects a positive environmental image to the community. Additionally, using many green building practices can result in energy and cost savings over the life of the structure. Other advantages include better indoor air quality and plenty of daylight. Studies have shown that workers in these environments have increased labor productivity, job retention, and days worked. These benefits contribute directly to a company’s profits because salaries—which are about ten times higher than rent, utilities, and maintenance combined—are the largest expense for most companies occupying office space. In addition, students in these environments have higher test scores and lower absenteeism. Retail sales are higher in daylit buildings.
Who Uses LEED?

Many cities and states either provide tax credits or grants for green buildings, or requiregreen building certification for public buildings. The U.S. government is adopting LEED or similar green building standards for the General Services Administration (which owns or leases over 8300 buildings), the U.S. Army, the Department of State, the Department of Energy (DOE), and the Environmental Protection Agency (EPA). Numerous states including California, New York, Oregon, and Washington have adopted LEED for public buildings. Many agencies are requiring LEED silver certification as a minimum. Thirteen countries have expressed interest in LEED including China and India; these countries have exceptionally high levels of new building construction. Conditions vary and the list is growing, so please contact local jurisdictions or USGBC for details. Support for green buildings has increased rapidly each year over the last five years.
How is LEED certification in India administered? 
To strengthen global consistency of the LEED rating system, effective June 5 2014, GBCI began managing the certification process for all LEED rating systems in India, including the LEED India rating system, which was previously managed by the Indian Green Building Council (IGBC).


 
To become a LEED Accredited Professional, you need to fulfill the following requirements,
 
LEED Green Associate:

Eligibility Based on Education: 
·         A course explaining the Green Building Principles or LEED. (Green International provides the training)

OR

Eligibility Based on Employment:
·         A letter from the company that explains the applicant's Profession relates to the Green building Industry.

OR

Eligibility Based on Project:
·         A letter from the company must provide the name of a specific LEED Registered project, and also the letter must affirm that the applicant was involved with the LEED Registered project.

 
LEED Accredited Professional:
  • Complete the LEED Green Associate.
  • Must have an experience in Green Building Projects for last 3 years
  • If you are joining in our Organization's training Sessions(Green International), you can fulfill the requirements for the LEED Green Associate and Accredited Professional.
Green International will provide you the training on Green Building Principles by Facilitator/Faculty with LEED Professional Credentials.
 
The Exam Objective & Format:
 
The LEED AP exam is a 4 hour Computer Based Exam facilitated by the Prometric Centres.
You can take the Exam in 2 ways.

1.    Combined (LEED GA&AP) Exam:
The LEED AP Exam is for 4 hours with Two(2) part exam designed to assess your understanding and knowledge of the LEED Rating System and your ability to facilitate the certification process.

The first part of the exam is the LEED Green Associate Section, is designed to measure your ability to understand and support green design, construction, and operation. The LEED Green Associate section is comprised of 100 randomly delivered multiple choice questions and must be completed in the first two hours of the exam appointment.
The second part of the exam is the LEED AP specialty section.

Each LEED AP specialty section is comprised of 100 randomly delivered multiple choice questions and must be completed in the second two hours of the exam appointment.
Candidates must pass both sections of exam for the LEED AP with specialty credential. Total sitting time for the combined exam (both Part 1: LEED Green Associate Exam and Part 2: the AP Specialty Exam) is 4 hours and 20 minutes including an optional tutorial and short satisfaction survey.\
 
2.    Separate Exams:
Candidates who wish to take the LEED AP exam in two separate two hour exam sessions must first apply for the LEED Green Associate Exam. After they pass the LEED Green Associate Exam, they can then apply for the LEED AP with Specialty exam and they will automatically be assigned the specialty section only.
 
Hence we are providing the both LEED Green Associate & AP Preparatory courses in Chennai for 24 hours. The LEED exams are facilitate by the Prometric Centers in all over the world. So you can take the exam anywhere in the world. We are facilitating to provide the training, assisting the candidates with exam application process and also you can take the exam in Chennai itself. If you are joining the course in our iOrganisation, we will provide the required  course materials, which will be helpful and useful for the exams preparation.
 
The course schedule are as follows,
 
Course Title: LEED Green Associates & LEED AP(BD&C)
 
Course Duration: 24 hours (4 Sessions)
 
The course fee includes the following:
  • Complete course materials
  • Experience Certificate for the Green Building Project from the Third party.
  • Course completion Certificate from Green International
  • Complete assistance for the Exam Application Process.
  • Mockup Exams for LEED – Green Associates & AP
 
 In addition to the above course fee, You need to pay the Exam Fee through USGBC On-line System :
 
Combined Exam Fee LEED Green Associate &AP(Specialty)
 
Exam Application Fee: $100/-
Exam Fee for GA & AP: $450/-
 
 Separate Exams:
 LEED Green Associate:                  Exam Application Fee: 50
                                                               Exam Fee for Green Associate: $ 200
 
 LEED Accredited Professional:   Exam Application Fee: $50
                                                             Exam Fee for AP: $ 250
 
 If you are planning to join this  Certification...

INDIA:
Green International Project Management (P) Ltd, Chennai.
Website: www.greenmtc-intl.com
Phone No: +91 44 42077053 / 54
Mobile No: +91 9566074433
 
SINGAPORE:
GreenPM Training & Consultancy (S) PTE.Ltd
Mobile No:+65 82466649
E-mail : 
info@greenmtc-intl.com
KUWAIT
GreenInternational W.L.L, 
Phone:+965 25623841
Fax:+965 25623841
Mobile No: +965 6077 4066
E-mail : 
info@greenmtc-intl.com 

Prepared & Collection by M.AjmalKhan.
 
 

Thursday 23 September 2010

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?-ஒரு சிறப்பு பார்வை ...

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்...
ஆரோக்கியமாக இருங்கள்
முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

சரியான விதத்தில் சாப்பிடுங்கள்
மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

தீய பழக்கங்கள் கூடாது
புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சரியான நேரம்
ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.
பாலியல் அறிவு அவசியம்
படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்..
கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். 

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்றுஅர்த்தம். 

ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. 

இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். 

சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவதுமுறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். 

எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம். 

பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. 

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம். 

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை,பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.


இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து தோராயமாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் செலுத்தப்பட்டு 72 மணிகள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.


கர்ப்பம் தரிக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை :
1.இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.
2.செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது (சோடா போன்றவை)
3.பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை
4.போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது
5.பரசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது
6.வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்
7.எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக( எக்ஸ் -ரே ) முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
8.இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 
9.உங்களுக்கு நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர் போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 
10.மேலே சொன்ன நோய்களுக்கு மாத்திரைகள் பாவிக்கும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும் முன்னமே வைத்தியரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.


கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை..


மணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.
இந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது.

உண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும்.

பொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும் ஹார்மோன் இருப்பதை வைத்தே கர்ப்பம் ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது. இந்த ஹார்மோனைக் கண்டு பிடிப்பதற்காக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய குச்சிகள் (STRIPS) இப்போது எல்லா பார்மசிகளிலேயும் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தியே பெரும்பாலும் வைத்தியர்களும் உங்கள் கர்ப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்.


இதை நீங்களும் இலகுவாகக் வீட்டில் இருந்தே செய்யலாம். முதலில் பார்மசியில் இருந்து அந்தக் குச்சி (STRIP) ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்குவதற்கு எந்த வைத்தியரின் பரிந்துரையும் தேவை இல்லை. வெறுமனே கர்ப்பம் சோதிக்கும் குச்சி(PREGNACY TESTING STRIPS) அல்லது URINE hcG STRIP என்று கேட்டாலே பார்மசி வேலை ஆட்களுக்குத் தெரியும். அதன் விலையும் வெறும் 50 ரூபாய்க்கும் குறைவுதான்.

அந்த குச்சி அனேகமாக வெள்ளை நிறமாக இருக்கும் அதன் ஒரு எல்லையில் ஒரு சிவப்பு நிறக் கோடு இருக்கும்.( நிறக் குறியீடு சில குச்சிகளிலே வேறுபடலாம்.)

நீங்கள் செய்ய வேண்டியது அந்தக் குச்சியின் குறிப்பிட்ட முனையை உங்கள் சிறுநீரில் அமிழ்த்திப் பிடிக்க வேண்டியதுதான். பிடிக்க வேண்டிய நேரமும் நீங்கள் வாங்கிய குச்சியைப் பொறுத்து வேறுபடலாம். பொதுவாக 1-2 நிமிடங்கள்.

பின்பு குச்சியை வெளியில் எடுத்து பாருங்கள், அந்தக் குச்சியில் ஏற்கனவே இருந்த சிவப்பு நிறக் கோட்டுக்குப் பக்கத்தில் இன்னுமொரு கோடு புதிதாக தோன்றி இருந்தால், உங்கள் சிறுநீரில் hcG என்ற ஹார்மோன் இருக்கிறது அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..

கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதிவு செய்துகொள்ளவும். 

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Monday 20 September 2010

பெண் சிசுக் கொலைகள் -ஒரு இஸ்லாமியப் பார்வை...


embryo1


பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

அரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.
இவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப் பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
கல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று என்று வேறு அழைக்கின்றனர்.

பெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: -
“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?” (அல்-குர்ஆன் 16:58-59)
வேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல! இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.

நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -
‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)
இன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே! அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான்! அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.

‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)
இஸ்லாம் ஒரு மதமல்ல! மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இறைவன் கூறுகிறான்: -
‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)
‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)
எனவே, என தருமை சகோதர, சகோதரிகளே! நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக! இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக!

Tuesday 14 September 2010

சேலம் பற்றிய ஸ்பெஷல்...

நீண்ட நாட்களாகவே சேலம் பற்றி எழுத வேண்டும் என்று யோசனை, ஆசை. ஆனால் நம்ம ஊர்தானே, நாளைக்கு எழுதலாம், நாளன்னைக்கு எழுதலாம் என்று விட்டால் ஒரேயடியாகத் தள்ளிப்போகிறது. ஆஹா இப்படியே விட்டுப்போனால் நன்றாயிருக்காது. அது தாய் மண்ணுக்குச் செய்யும் துரோகம் இல்லையா? இதோ பிடியுங்கள் சேலம் ஸ்பெஷல். (இந்த வாரம் டிரான்ஸ்போர்ட் மட்டும்) 

சேலத்தில் மிக முக்கியமான கேந்திரம் என்றால் அது சேலம் புதிய பஸ் நிலையம் தான். "பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்" என்ற பெயரை யாரும் வாசிப்பதே இல்லை. அனைத்து வெளியூர் பஸ்களும் வந்து புறப்பட்டுச் செல்லும் இடம் இதுதான். எந்நேரத்திலும் பஸ் உண்டு இங்கே. புதிய பஸ் நிலையம் இப்போது இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் ஒரு அழகான ஏரி இருந்ததாம். (past tense) அச்சுவான் ஏரி என்று அழைக்கப்பட்ட அந்த ஏரியைத் தூர்த்து தான் புதிய பஸ் நிலையம் ஆக்கப்பட்டதாம்... அதற்கு முன் அதெல்லாம் புறநகர்ப்பகுதியாம். 


இருபத்தைந்து ரூபாய் காசு வைத்திருந்தால் வழிப்பறி நடக்குமாம் (இருபது வருடங்களுக்கு முன்பு) ஐம்பது ரூபாய் வைத்திருந்தால் ஆள் காலி. இப்போது என்னடாவென்றால் அது சேலத்தின் மையப்பகுதி ஆகிவிட்டது. அங்கே நிலத்தின் மதிப்பும் கன்னா பின்னாவென்று ஏறிப்போய்விட்டது. இப்போது அங்கே நிலம் வைத்திருந்தால் நீங்கள் ஒரு வி.ஐ.பி. சுத்தி முத்தி விவசாயம் நடந்து கொண்டிருந்த ஏரியாக்கள் எல்லாம் விடாமல் விலைக்கு வாங்கப்பட்டு வரிசையாக அடுக்குமாடி வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 

புதிய பஸ் நிலையத்தைத் தாண்டி எல்லா ஊர்களுக்குமான பை-பாஸ் சாலைகள் ஐந்தாகப் பிரியுமிடம் ஒன்று ஐந்து ரோடு என்ற பெயரில் உள்ளது. இதுவும் பயங்கர பிஸியான ஏரியா. இதனுடன் சேர்ந்து புதிய பஸ் நிலையம் மிக அதிக டிராஃபிக்கில் சிக்கித்திணறும். போதாக் குறைக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜாய் ஆலுக்காஸ், கஸானா, லோக்கல் ஏ.வி.ஆர் ஸ்வர்ண மகால், ஏ.என்.எஸ் என்ற ஐந்து பெரிய நகைக்கடைகளும், நான்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும், இரண்டு பெரிய ஹோட்டல்களும், இரண்டு மிகப்பெரிய ஜவுளிக் கடைகளும் அந்த ஏரியாவில் வந்து சேர்ந்ததால் கார் பார்க்கிங் மிகப்பெரிய பிரச்சினை. அவர்களால் நம் போன்ற நார்மல் டூ வீலர் பார்ட்டிகளுக்கும் பிரச்சினை. 

லோக்கல் பஸ்களுக்கென்று பழைய பஸ் நிலையம் உள்ளது. ஆனால் சென்னையிலும், கோவையிலும் இருப்பது போல ஆம்னி பஸ்களுக்கென்று தனி பஸ் நிலையம் கிடையாது. திருப்பாச்சி படம் வரை ஃபேமஸான கே.பி.என் டிராவல்ஸின் தலைமையிடம் எங்கள் ஊர்தான். புதிய பஸ் நிலையத்திற்கு நேரெதிரில் அதன் அலுவலகம். ஒன்றன் பின் ஒன்றாக ஷெட்யூல் போட்டு வண்டிகள் வரும், ஒன்று கிளம்பியவுடன் மற்றொன்று. ஏனென்றால் பார்க்கிங் பிரச்சினை... 

பழைய பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் விக்டோரியா தியேட்டர் என்று ஒன்று இருந்ததாம். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அது இடிக்கப்பட்டு விக்டோரியா மைதானம் என்ற பெயரில் இருந்தது. இப்போது அங்கே அரசு வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு கடைகள் இயங்கி வருகின்றன. பயங்கர பிஸி ஏரியா ஆகி விட்டது. நான் அங்கே போவது ஆங்கிலப்பட டிவிடிக்கள் வாங்க மட்டும் தான். அண்ணன் ஜாக்கியாரின் பதிவில் ஏற்றப்படும் படங்களையெல்லாம் அங்கே தான் வாங்குவது வழக்கம். டிவிடி ஒன்று முப்பது ரூபாய் (நான் ஒரே டிவிடியில் நான்கைந்து படங்கள் இருக்கும் காம்போ பேக் தான் வாங்குவேன்)

தற்போதைய மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பழைய கட்டிடத்திலேயே பழைய பஸ் நிலையம் இயங்கி வருவதால் அங்கே எப்போதும் கூட்டம் பிதுங்கித் தள்ளும். சுற்றியிருக்கும் பதினெட்டு (சும்மா ஒரு ஃபுளோவில் சொன்னேன், உண்மையில் நிறைய) பட்டிகளில் இருந்து வரும் பட்டிக் காட்டான், ஸாரி, பட்டிக் காட்டு ஜென்டில் மேன் மற்றும் ஜென்டில் உமன்களின் கூட்டம் நெறித்துத் தள்ளும். அதுவும் எதிரில் உள்ள (நேதாஜி சுபாஷ் சந்திர) போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி போட்டு (கூடவே மழையும் வந்து) விட்டால் சூப்பராக இருக்கும். 

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் சென்னையில் கலைஞர் சுமார் 800 புதிய லோக்கல் பேருந்துகளையும், சுமார் 20 ஏஸி பஸ்களையும், 21 டிரெயிலர்களையும் அறிமுகப்படுத்தினார் அல்லவா? (இரண்டு பஸ்களை வரிசையாக ரயில் போல இணைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் டிரெயிலர்) அந்த டிரெயிலர் வண்டிகள் இங்கே சேலத்தில் இப்போது தான் நுழைந்திருக்கின்றன. 

அவையும் மண்புழு, மரவட்டை கணக்காக பழைய பஸ் நிலைத்தை சுற்றிச் சுற்றி ரிவர்ஸ் எடுத்து பொஸிஷனுக்கு வரும் அழகைக்காணக் கண்கோடி வேண்டும். மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை வர்ணணை செய்வதற்கு ஒப்பான திறமை வேண்டும் அவற்றை வர்ணிக்க. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் சென்னை மாதிரி இல்லாமல் இங்கே லோக்கல் பஸ்களில் தனியாரும் உண்டு. இதுபோக மிகக் குறைந்த ஏரியாக்களை மட்டும் சுற்றி வரும் "களவாணி" ஸ்டைல் மினி பஸ்களும் உண்டு. 

அம்பானி கணக்காக அதன் ஓனர்களும், அம்பானிகளின் அடிப்பொடிகளும் சேலத்தை சுற்றிச்சுற்றி வருவார்கள். அவர்களும், அரசு பஸ் ஊழியர்களும் கொஞ்சிக்கொள்ளும் அழகை நாள் முழுக்க ரசிக்கலாம். (டைமிங் மிஸ்ஸானால் ஒருத்தரையொருத்தர் கிழித்து தொங்கப்போடுவார்கள்). ஆனால் உண்மையாகவே அரசு டிரைவர்களுக்குப் பெருந்தன்மை கொஞ்சம் அதிகமே. எந்த ஏரியாவாக இருந்தாலும் தனியார் பஸ்ஸூக்கு வழி விட்டே போவார்கள். தன் பஸ்ஸில் கூட்டமே இல்லையென்றாலும் சரி.

பழைய பஸ் நிலையத்திற்கு கொஞ்சம் தள்ளி…………. இரண்டு ஆட்சிகள் முன்பு, வட்ட வடிவத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அது எதற்காக அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்தவுடன் காட்சிகள் மாறிப்போய் விட்டன. இப்போது அந்த பஸ் நிலையம் மட்டும் பாழடைந்து எதிரே உள்ள ஒயின் ஷாப்புக்கு நிரந்தர கஸ்டமர்கள் பெற்றுத்தரும் இடமாக மாறிப்போயிருக்கிறது. கீழே கால் வைக்க முடியாத அளவு நிரந்தர சேறும், சகதியும், கோரைப்புற்களும் மண்டிப்போய்…………. வா என்கிறதா, வராதே என்கிறதா என்று பிரித்தறிய முடியாத இருட்டு நம்மை வெறித்துப்பார்க்கும். பூத் பங்களா மாதிரி இருக்கும்.

அப்புறம்..... சேலம் முழுக்க ஷேர் ஆட்டோக்கள் உண்டு. ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரமல்ல, பத்தாயிரம் ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அடுத்த வருடம் எலக்ஷன் வரை இன்னும் ஒரு மூவாயிரத்தைநூறு ஆட்டோக்களை இறக்கப் போகிறார்களாம். எங்கேயாவது மாடியில் இருந்து கீழே பார்த்தீர்களானால் ஆட்டோக்கள் எல்லாம் சேர்ந்து தர்ணா, பேரணி நடத்துவது போலவே இருக்கும். ஊரே மஞ்ச மஞ்சேர் என்று. இத்தனை ஆட்டோக்கள் இருந்தால் பயணிகளிடம் எப்படி அதிக கட்டணம் வாங்க முடியும்? பயணிகளான நம்மிடமும் ஒரு தெனாவட்டு வருமல்லவா? 

அதனால் அந்த வண்டிகள் திருவாளர் பேஸஞ்சர் சொல்லுகிற இடத்திலெல்லாம் நின்று இறக்கி விடும், கைகாட்டும் இடத்திலெல்லாம் பிரேக்கடித்து ஏற்றிக்கொள்ளும். நோ ஸ்டாப்பிங், நோ ரூல்ஸ். உங்களுக்கு ஒரு டிப்ஸ். வெளியூரில் இருந்து சேலத்திற்கு வந்தால் தனி ஆட்டோவுக்கு நூறு, நூற்றைம்பது என்று பைஸா அழுவாதீர்கள். அந்த ஏரியாவில் ஷேர் ஆட்டோ சர்வீஸ் உண்டா என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். (பெரிய சைஸ் பியாஜ்ஜியோ ஆபே வண்டி) மூன்று ரூபாய் முதல் அதிகபட்சம் ஆறு ரூபாய் தான் கட்டணம். 

அந்த ஆட்டோ ஓட்டும் பசங்களைப்பார்க்க வேண்டுமே, அடா, அடா, அடா. ஒரு காக்கி பேன்ட்டும், பட்டன் திறந்து பறக்கும் காக்கி சட்டையும், முக்கா சீட்டை காலியாக விட்டு விட்டு கால் சீட்டில் உட்கார்ந்து, பான்பராக்கையும், குட்காவையும் போட்டு எச்சில் துப்பியபடி, அவர்கள் ஒருத்தருக்கொருத்தார் ரேஸ் விட்டு வண்டி ஓட்டும் அழகே அழகுதான். (நாற்பது வயதிற்கு மேற்பட்ட டிரைவர்களிடம் கேட்டால் வண்டி வண்டியாக அள்ளி விடுவார்கள்) எல்லாருமே ரஜினி தான், விஜய் தான், தனுஷ் தான். உள்ளே ஒரு ஹீரோ வந்து புகுந்து கொள்வான், அந்த சந்தோஷத்தில் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் யார் நினைத்துப்பார்க்கப்போகிறார்கள்?

கட்டணம் விஷயத்தில் (லோக்கல்) பஸ் மட்டும் என்னவாம்? பயங்கர சீப். சேலத்துக்குள் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் அதிகபட்சமே மூன்று ரூபாய்தான் டிக்கெட். நான் சென்னையில் மூன்று வருடங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டிய போது (வேறென்ன? குப்பைதான்) மினிமம் டிக்கெட்டே அங்கு நான்கு ரூபாய். அதனால் எனக்கு எங்க ஊரைப்பற்றி பயங்கர பெருமைதான் எனக்கு. 


அதே போல் எங்கே இருந்து சேலத்திற்கு வந்தாலும், சேலம் ரயில்வே ஜங்க்ஷன் தான் மையப்புள்ளி. தற்போது பாலக்காட்டில் இருந்து தனியாகப்பிரித்து சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் மெயின் ஆபீஸ் ஜங்க்ஷனில் அல்ல, உள்ளூர் டவுன் ரயில்வே ஸ்டேஷனில். கொஞ்சம் கொஞ்சமாய் ஹெடெக்காக மாறிக்கொண்டிருக்கிறது. டச் ஸ்கிரீன், வரிசையாய் நிற்கும் கம்ப்யூட்டர் புக்கிங் கவுண்டர்கள், அழகழகான வெளிக்கட்டிட அமைப்பு என்று இப்போது சில மாதங்களாய்த்தான் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது டவுன் ரயில்வே ஸ்டேஷன். ஆனாலும் முக்கிய டிரெயின்கள் அனைத்தும் ரயில்வே ஜங்க்ஷனுக்கே வருவதால் அங்கே தான் கூட்டம் அம்மும். சென்னையில் சென்ட்ரல் மாதிரி ஜங்க்ஷன், எக்மோர் மாதிரி இங்கே டவுன் ரயில்வே ஸ்டேஷன். புரிகிறதா? 

அது போக சேலத்தில் ஏர்போர்ட்டும் ஒன்று உண்டு. அட்டெண்டென்ஸ் போட்டு ஒன்றிரண்டு விமானங்கள் போய் வருகின்றன. நிறைய விமானங்கள் கிடையாது. ஒரே பிரச்சினை என்னவென்றால் சென்னை போல் இங்கே பெரிய நிறுவனங்கள் ஏதும் கிடையாது. கோவை போல் சுற்றிச் சுற்றி முக்கியமான ஊர்களும் கிடையாது. சேலத்தில் உள்ள ஒரே பெரிய நிறுவனம் ஸ்டீல் பிளாண்ட் என்று பெருமையுடன் அழைக்கப்படும் SAIL நிறுவனம் தான். அதனால் பெரிய தலைகள் யாரும் வர, போக இருப்பதில்லை. ஸோ, நோ ரெகுலர் சர்வீஸ். திருச்சிக்கு BHEL மாதிரி எங்களுக்கும் ஒரு பெரிய்ய்ய்யய கம்பெனி இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். BHEL ஐ வைத்து திருச்சி வளர்ந்தா மாதிரி நாங்களும் பேர் சொல்லும் பிள்ளைகள் ஆயிருப்போம். (என்ன செய்ய? நாங்கள் சொல்லிக்கொள்ள மேட்டூர் அணைதான் உண்டு.) 

தமிழ் கஜினி படத்தில் சூர்யா ஏர்போர்ட்டில் தனி விமானத்தில் இறங்கி நடந்து வருவார் அல்லவா? அது சேலம் ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட காட்சி தான். அதன் கஜினி தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் என்பதால் பர்மிஷன் வாங்கிக்கொடுத்தார் என்று கேள்வி. படத்தில் அந்தக் காட்சியைப்பாருங்களேன். சைடில் எல்லாம் ஒரே புதர் மயமாக இருக்கும். சென்னை அல்லது கோவை ஏர்போர்ட் சாயலே இருக்காது. அதை வைத்தே நீங்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஏர்போர்ட் சர்வீஸ் நிறுத்தப்படவில்லை. நடுவில் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டுவிட்டதாம்.

சேலத்தின் ஆரம்ப கால ஒரே டிரான்ஸ்போர்ட்டாக இருந்தவை குதிரை வண்டிகள் தான். ஏமி ஜாக்ஸனை வைத்து ஆர்யா பாடிக்கொண்டே வரும் "வாம்மா துரையம்மா" வில் சில வண்டிகள் வருமே, அந்த சீனை நினைவு படுத்திக்கொள்ளுங்களேன். பத்து வருடங்கள் முன்பு வரை படு பிரபலமாக இருந்த அவை ஷேர் ஆட்டோக்கள், பிராணி வதை தடுப்புச் சங்கங்கள் உபயத்தில் காணாமல் போயின. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடியபடியேதான் ஓட்டுவார்கள் வண்டிக்காரர்கள். நாங்கள் சைக்கிளில் குரங்குப்பெடல் போட்டபடி ஸ்கூலுக்குப்போன காலத்தில் (மேனுவல்) சிக்னல்களில் கண்டிப்பாக ஒரு குதிரை வண்டியவாது நிற்கும். இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக டவுன் போலீஸ் ஸ்டேஷன், செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பஜார் போன்ற ஏரியாக்களில் மட்டும் தட்டுப்படுகின்றன. வண்டியோட்டிகள் ரிட்டையர் ஆகி விட்டார்கள் போலிருக்கிறது. செவ்வாய்ப்பேட்டையில் ஒரு இடத்திலும், பட்டைக் கோவில் ஏரியாவில் பெருமாள் கோவில் பின்புறம் குதிரைகள் தண்ணீர் குடிக்க கட்டி வைத்த (தெரு விளைக்கைச் சுற்றிய) தண்ணீர் தொட்டி அமைப்பு இன்றும் உள்ளது. 

எனக்குத் தெரிந்து டாக்ஸி இங்கே கிடையாது. எங்கேயா ஒன்றிரண்டு பார்த்தது போல் ஞாபகம். இப்போது மெள்ள மெள்ள கால் டாக்ஸிக்கள் முளைக்கத் துவங்கியிருக்கின்றன. சைக்கிள் ரிக்ஷாக்களும் முழுக்க வழக்கொழிந்து போய் விட்டன. வேறென்ன டிரான்ஸ்போர்ட் மிச்சமிருக்கிறதுதுதுது???? யோசியுங்கள். வருகிறேன்...


நேற்றைய (13 செப்டம்பர் 2010) உயிரோசை டாட் காமில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.