Monday 29 November 2010

தெரியாத தமிழக சுற்றுலா தலங்கள்-ஒரு பார்வை..

 1. பிச்சாவரம் 
தனிச்சிறப்பு:
மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளுக்கு நிகரான கடல் முகத்துவாரம். மாங்குரோவ் வகைக் காடுகள்.

அருகாமை:
சிதம்பரத்திலிருந்து 16கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

தங்குமிடம்:
தமிழ்நாடு வனத்துறையின் கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் அக்‌ஷயா போன்ற இடங்கள்.




2. மன்னார் வளைகுடா

தனிச்சிறப்பு:
டால்பின், ட்யூகாங், பவளத்திட்டுகள் என கடல் உயிரின வளம் செழித்த , யுனெஸ்கோ கவுரவம் பெற்றப் பகுதி.

அருகாமை:
மண்டபத்துக்கு அருகே உள்ளது. ராமநாதபுரம் வழியாக செல்லலாம்.

தங்குமிடம்:
ராமேஸ்வரத்தில் தேவையான தங்குமிட வசதிகள் உண்டு.

3.ஏலகிரி

தனிச்சிறப்பு:
சாகச சுற்றுலாப் பயணிகளுக்கான பாரா க்ளைடிங், ட்ரெக்கிங் செல்லலாம்.

அருகாமை:
ரயில்மார்க்கமாக ஜோலார்பேட்டையில் இறங்கி பேருந்து கார் மூலமாக செல்லலாம்.( கிருஷ்ணகிரி அருகில் - எங்க ஏரியாவாச்சே. :) )

தங்குமிடம்:
மிகக்குறைவான விலையில் தொடங்கி சிறந்த அனுபவம் தரும் ஹோட்டல் வரை.

4.முதலியார் குப்பம்:
தனிச்சிறப்பு:
நீர்ப்படுமை நடுவே 20 நிமிடங்கள் படகில் பயணித்து கடற்கரையை அடைய வேண்டும்.

அருகாமை:
சென்னை - புதுச்சேரி நெடுஞ்சாலையில் சுமார் 50கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

தங்குமிடம்:
கிழக்குக் கடற்கரை சாலை முழுதும் ஹோட்டல்கள்.

5.முட்டம் கடற்கரை

தனிச்சிறப்பு:
சூரியனின் உதயம், அஸ்தமனத்தை அழகாக பார்க்க முடியும்.

அருகாமை:
நாகர்கோவிம் மற்றும் கன்யாகுமரிக்கும் அருகில்.

தங்குமிடம் :
முட்டத்திலேயே தங்குவதற்கு நல்ல ஹோட்டல்கள் உண்டு.



6. வட்டக் கோட்டை


டச்சுக் கடற்படையை மார்த்தாண்ட வர்மா வீழ்த்திய இடம். க்ரேன் அளவு உயரத்தில் நீலக் கடலை ரசிக்கலாம்.

நாஞ்சில் நாட்டில் குமரி முனையின் வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் உள்ளது.

கன்னியாகுமரியில் தங்குமிடம்.



7.கொல்லிமலை
அழகான கொண்டை ஊசி வளைவுகள். அறப்பளீசுவரர் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. சித்தர்கள் உலவுகிறார்களாம்.

சேலம் ரயில் நிலையத்திலிருந்து 100 கிமீ. திருச்சி விமான நிலையத்திலிருந்து 90கிமீ.

கொல்லிமலை ஹில்ஸ், நல்லதம்பி ரிசார்ட் போன்ற தங்குமிடங்கள்.






8.மேகமலை

வர்த்தகமயமாகாதலால் சீர்கெடாத மலைப் பகுதி. காஃபி தோட்டங்களும் நடுவில் ஓடும் அழகிய நதியும்.

மதுரையிலிருந்தும் தேனியிலிருந்தும் செல்லலாம். சின்னமனூரிலிருந்து 2 மணி நேரம் மலைப் பயனம்.

பஞ்சாயத்து போர்ட் விடுதியில் ஆறு அறைகள். தேனியில் தங்கலாம்.( ஃபாரஸ்ட் ரிசார்ட் இருப்பதாக எங்க டீலர் ஒருத்தர் சொன்னார் )

9.பைக்காரா
வெள்ளி அருவியாக பைக்காரா நதி பள்ளத்தில் வீழ்வதும் அணைப் பகுதியில் படகு சவாரியும்.

கோவையிலிருது சாலை மார்க்கமாக செல்லலாம். மேட்டுபாளையத்திலிருந்து ரயில் பயணம் மூலமும் வரலாம்.

தங்குமிடங்கள் ஏராளம். ரூ.200 முதல் ரூ.20,000 வரை.




10.திற்பரப்பு அருவி


தென் தமிழகத்தில் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத கூட்டம் இல்லாத அருவி.

குழித்துறை வரை ரயிலிலும் நாகர்கோவிலிலிருந்து ரயில் மற்றும் சாலை வழியாகவும் செல்லலாம்.

திற்பரப்பில் தங்கும் வசதி அதிகமில்லை. நாகர்கோவில், கன்னியாகுமரியில் தங்கலாம்.


11.முண்டந்துறை
பாபநாசம் மலையின் அழகிய அருவிகளைத் தாண்டினால் புலிகள் சரணாலயம். ட்ரெக்கிங்கிற்கு ஏற்ற இடம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து 200 கிமீ.

அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித் துறை, களக்காட்டில் மின்வாரியம், முண்டந்துறையில் வன இலாகா கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கலாம்.




12. வால்பாறை


மலை முழுதும் பச்சைப் பசேல் தோற்றம். தேயிலை, காபி எஸ்டேட்டுகள்.

பொள்ளாச்சியிலிருந்து 64 கிமீ. கோவை வரை ரயில் பயணம்.

தங்கும் வசதிகள் உண்டு. ஹோம் ஸ்டே வசதியும் உள்ளது.




13.கங்கை கொண்ட சோழபுரம்


ராஜேந்திர சோழனின் தலைநகர். யுனெஸ்கோ உலக மரபுச் சின்னம் கவுரவம் பெற்றது.

ஜெயங்கொண்டத்துக்கு அருகில் உள்ளது. திருச்சியில் இருந்து பஸ் வசதி உண்டு.

ஜெயங்கொண்டத்தில் தங்குமிட வசதிகள் உண்டு. ஒரு நாள் பயணமென்பதால் வேறு இடங்களிலும் தங்கலாம்.( எனக்கு 2 நெருங்கிய நண்பர்கள் இருக்காங்க. அவங்க வீட்டுக்கும் போகலாம்:) )

14. தரங்கம்பாடி

200 ஆண்டுகளுக்கு மேல் டச்சுக்காரர்கள் கட்டுபாட்டிலிருந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரம்.

நாகப்பட்டினத்திலிருந்து 35 கிமீ. கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லலாம்.

நாகப்பட்டினம் மற்றும் திருக்கடையூரில் தங்கலாம்.






15. கோடியக்கரை


250 வகைகளைச் சேர்ந்த 1 லட்சம் பறவைகள். வெளிமான், டால்பின்களைக் கண்டு ரசிக்கலாம்.

நாகப்பட்டினத்திலிருந்து 55 கிமீ. திருத்துறைப் பூண்டி வரை ரயில், பஸ் வசதிகள் உண்டு.

கோடிக்கரை வனத்துறை கெஸ்ட் ஹவுஸ். நாகப்பட்டினத்தில் ஹோட்டல்கள்.

16.கூந்தங்குளம்

நவம்பர் முதல் ஜூலை வரை 140 வகையான பறவைகளைக் காணலாம்.

திருநெல்வேலியில் மூலக்கரைப்பட்டி வழியாக பஸ்ஸில் செல்லலாம்.

திருநெல்வேலியில் தங்கலாம்.






17. ஜவ்வாதுமலை


அதிசயங்களை உள்ளடக்கிய மலை. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நேரடியாக உணரலாம்.

திருவண்ணாமலையில் இருந்து 75 கிமீ தூரத்தில் வானியம்பாடி அருகில் உள்ளது.

மலையில் ஃபாரஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் மட்டும் உண்டு. அடிவாரத்தில் உள்ள ஊர்களில் தங்கலாம்.



18.கல்வராயன் மலை


1976 வரை ஜாகிர்தார்களின் கட்டுபாட்டில் கட்டுப்பாட்டில் இருந்ததால் பழமை மாறாமல் இருக்கும் ஊர்.

கள்ளக்குறிச்சி & உளுந்தூர்ப் பேட்டை சென்று அங்கிருந்து கல்வராயன் மலைத்தொடர் ஏறலாம்.

தங்குவதற்கு சாதாரன ஹோட்டல்களே உள்ளன. அடிவார ஊர்களில் தங்கலாம்.

19.ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி என்ற பெருமை. ஊட்டியைப் போன்ற க்ளைமேட். சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள்.

சேலத்திற்கு அருகில். பல பகுதிகளில் இருந்தும் சேலத்திற்கு ஏராளமான ரயில்கள் உண்டு.

ஏற்காட்டில் சிறிய பெரிய ஹோட்டல்கள் ஏராளமாக உள்ளன.





20. வேடந்தாங்கல்


115 வகை வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகள் நவம்பர் முதல் இங்கு ஆயிரக்கணக்கில் வருகின்றன.

சென்னையில் இருந்து 86கிமீ. தாம்பரத்தில் பஸ் வசதி உண்டு.

வனத்துறை ரெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. பறவைகள் பார்க்க காலை நேரம் உகந்தது.

கவல்கள் : இந்தியா டுடே.
படங்கள் : பல்வேறு இணையதளங்களில் இருந்து எடுத்தது. 

No comments:

Post a Comment