Tuesday 7 December 2010

யூதர்கள் வரலாறு......

யூதர்கள் எனக்கு என்றும் ஆச்சர்யத்தையே தருகிறார்கள்,உலக மக்கள் தொகையில் வெறும் 0.2 வீதமான யூதர்கள் உலகில் ஆதிக்கம் செலுத்தாத துறை எதுவுமே இல்லை என்று சொல்லாம்,உலக அளவில் வழங்கப்படும் நோபல் பரிசாக இருந்தாலும் சரி,ஆஸ்கார் விருதாக இருந்தாலும் சரி ஏன் கிராமி விருதாக இருந்தாலும் சரி யூதர்களை தவிர்த்து ஒரு லிஸ்ட் தயாரிக்க முடியாது என்பது போல எங்கும் எதிலும் யூதர்களின் ஆதிக்கம் அதிகம்.ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் தொடங்கி 


"ஸ்டார்ட்ஸ் வார்ஸ்" புகழ் பிரபல நடிகர் ஹாரிசன் போர்ட்,



"ஜுராசிக் பார்க்" புகழ் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பேர்க்



,பிரபல இயக்குனர் ஒலிவர் ஸ்டோன் என சாதித்த சாதித்து கொண்டிருக்கிற யூதர்களின் பட்டியல் அபாரமானது.

சரியாக சொன்னால் யூதர்களின் வரலாறு ஒரு இரத்த சரித்திரம்,நான் தொடராக எழுத விரும்பும் இந்த தொடர் மூலம் யூதர்களின் முழு வரலாறையும்,அவர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களையும்,அவர்களின் வரலாற்றில் இருந்து உலகம் பெறக்கூ டியதையும்  ஒரு நாவல் பாணியில் சொல்ல முயற்சிக்கிறேன்.உங்களின் ஆதரவையும் எதிர் பார்க்கிறேன்.

நான் நூலுருவில் முதலில் கொண்டுவர விரும்பும் தொடர் இது   
  
காட்சி ஒன்று 



யூதர்களை கொல்வதற்கென்றே பிரத்தியோகமாக தனிக் கவனிப்புடன் உருவாக்கப்பட்ட "Gestapo" என்கிற ரகசிய காவல்ப் படை முன்பு நின்று கிட்டத்தட்ட கொக்கரித்துக் கொண்டிருந்தார் ஜேர்மானிய சக்கரவர்த்தி ஹிட்லர்.

ஜேர்மானிய சாம்ராச்சியத்தை உலகெங்கும் பரப்ப பெரும் தடையாக உள்ள நச்சுக்கிருமிகள் யூதர்கள்,ஒவ்வொரு யூதனும் கொல்லப்பட வேண்டியவன்,அவர்கள் துரோகிகள்,யூதர்கள் உடலில் ஓடுவது கெட்ட ரத்தம்,ஜேர்மானிய ஆளுகைக்கு உட்படப் போகிற இந்த உலகிற்கு எந்த வகையிலும் தேவை இல்லாதவர்கள் யூதர்கள்.யூதர்களை கொல்வதை ஒவ்வொரு படை வீரனும் மனச் சந்தோசத்துடன் செய்ய வேண்டும்,

யூதக் குழந்தைகளையுமா?

ஆம்,அதில் என்ன சந்தேகம் 
  
அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?அவர்களை ஏன் கொல்ல வேண்டும்? , மனதில் சிறிதளவு ஈரம் எஞ்சி உள்ள ஒரு ஜேர்மானிய அதிகாரி கேட்டார்

 அவர்கள் யூதர்கள் என்பதே அவர்களைக் கொல்வதற்கு போதுமானது, எந்திரன் வில்லன் கணக்காக சிரிப்பு சிரித்தார் ஹிட்லர்.  



இடிக்கிறது பிரபு,ஜேர்மானியர்களை திருமணம் செய்து காலம் காலமாக ஜேர்மானியர்கள் போல வாழும் யூதர்களையுமா கொல்ல வேண்டும்?  

ஒரு ஜெனரல் நாலேஜ் இல்லாமல் இப்படி,குழந்தைப் பிள்ளை போல டவுட் கேட்கிறானே என தனது படை அதிகாரியை கவலையாக பார்த்தபடி சொன்னார் ஹிட்லர், ஜேர்மானியர்களை திருமணம் செய்து இருந்தாலும் அவர்களது சந்ததிகளின் உடலில் ஓடுவதும் கொடிய யூத ரத்தம்,அவர்களும் துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள்

சுருங்க சொன்னால்.......

தனது குட்டி மீசைக்குள் ஒரு கொடூரப் புன்னகையை படர விட்டபடி ஹிட்லர் சொன்னார்

ஒருவன் பிறப்பால் யூதனாக இருக்கலாம்,இல்லை யூத தாய்க்கோ இல்லை தந்தைக்கோ பிறந்தவனாக இருக்கலாம்,இல்லை  யூத மதத்தில் இருந்து மதம் மாறி கிறிஸ்தவனாக கூட இருக்கலாம்,ஒருவனது உடலில் கொடிய யூத ரத்தம் சிறிதளவு ஓடினாலும் அவன்/அவள் கொல்லப்பட வேண்டியவர்கள்,

ஏனேன்றால்,யூதர்கள் துரோகிகள்,அவர்கள் உடலில் ஓடுவது கொடிய யூத ரத்தம்,வாழப் பழக்  காமெடி போல மீண்டும் சொன்னார் ஹிட்லர்.

யூதர்கள் துரோகிகள், அவர்களைக் கொல்லவேண்டும்!....

கொல்ல வேண்டும்!.... 

தலைவனது வழியில் கொக்கரித்தது கூட்டம்        

யூதர்கள் மேல் கிறிஸ்தவர்களிற்கு இருந்த வெறுப்புக்கு பிரதான காரணம்,அவர்கள் மேல் துரோகிகள்,காட்டிக் கொடுப்பவர்கள் என்கிற அவப்பெயர் வர காரணம்

அதற்கு ஒரு சிறிய பிளாஷ் பாக்,சிறிது அல்ல சற்றே பெரிய இரண்டாயிரம் வருடங்களிற்கு முற்ப்பட்ட கிளைமாக்ஸ்                          

காட்சி இரண்டு 



சன்மானமாகப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகள் கொண்ட ஒரு பையை கையிலே வைத்த படி புதிய வானம் புதிய பூமி ரேஞ்சிற்கு பாடியபடி மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தான் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ்,முப்பது வெள்ளிக் காசுகளை வாழ்வில் ஒரே தடவையில் பார்த்ததை அவனால் துளியும் நம்ப முடியவில்லை,முப்பது காசுகள் அதுவும் வெள்ளிக்காசுகள்..

யூதாஸ் இது நீயா?,உன்னிடமா முப்பது வெள்ளிக் காசுகள்,நம்ப முடியாதவனாக தனது கையை தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறான்,அவனிற்கு அந்த முப்பது வெள்ளிக் காசுகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை வடிவேலிற்கு கிரி படத்தில் பேக்கரி கிடைத்ததைப் போன்றது வடிவேல் அடகு வைத்தது அக்காவை என்றால் யூதாஸ் அடகு வைத்தது இயேசுவை ஆம் மனித குலத்தை மீட்க வந்தவராக கிறிஸ்துவர்களால் நம்பப்படும் இயேசுவை, 

அன்னா,கயபா என்கிற இரண்டு யூத மதகுருமார்களின் முன்பாக கொண்டுவந்து  நிறுத்தப்பட்டான் யூதாஸ்

பை தி வே அன்றைய பாலஸ்தீனின் ரிமோட் கொன்றோல் யூத மத குருமா ரிடமே இருந்தது,மன்னன் என்பவன் சும்மா பெயர் அளவிற்கே இருந்தான்,மத குருமார்கள் வாயால் எடுத்த முடிவுகளை தலையால் செய்து முடிக்கும் அளவிற்கே மன்னனின் அதிகாரங்கள் இருந்தன,எங்கும் எதிலும் மத குருமார்களின் அதிகாரங்கள் கொடி கட்டிப் பறந்தது.மன்னன் என்பவன் சும்மா ஜஸ்ட் போர் நேம் சேக்.

தங்களின் முன்னால் நிறுத்தப்பட்ட யூதாசைப் பார்த்துக் இருவரும் ஒரே நேரத்தில் கேட்டார்கள் 

நீதான் இயேசுவின் நண்பனா?

மன்னிக்கவும்,நான் இயேசுவின் சீடன்

நல்லது தங்களின் பெயரை அறிந்து கொள்ள ஆவல்?

"யூதாஸ் இஸ்கேரியாத்"  [judas iscariot]

இயேசுவைக் கைது செய்வதாக எமது யூத மதகுருமார் சபை முடிவு செய்து உள்ளது,நீதான் அவரை அடையாளம் காட்ட வேண்டும்   

என்ன இயேசுவைக் கைது செய்யப் போகிறீர்களா?,அவர் யார் தெரியுமா இந்த உலகத்தை மீட்க வந்த மீட்பர்,மோசஸுக்கு பிறகு எம்மை மீட்க வந்த தேவ தூதர்,ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இறை தூதன் தோன்றி எம்மைக் காப்பார் என்பது தானே எமது மதத்தின் அடிப்படை நம்பிக்கை, மோசஸூக்கு பிறகான தேவ தூதனை என்னைக் கா ட்டிக் கொடுக்க சொல்கிறீர்களா?,அய்யோ அந்தக் கொடிய செயலை நான் செய்யமாட்டேன்.

நீ செய்யப் போகும் உதவிக்கு நாம் உனக்கு சன்மானம் தருகிறோம் 

என்னை விலை பேச நினைக்காதீர்கள்,என்னை விலை பேச உங்களால் முடியாது 

முப்பது வெள்ளிக் காசுகள் [அந்தக் காலத்தில் மிகப் பெரிய பணம்]

இயேசுவா கொக்கா,எங்கே,எப்போது  காட்டிக் கொடுக்க வேண்டும்

நாளை இரவு.

சீடர்களிற்கு மத்தியில் உள்ள அவரை நீதான் தொட்டு அடையாளம் காண்பிக்கவேண்டும் 

தொட்டு என்ன கட்டியணைத்து,கன்னத்தில் முத்தம் இட்டே அடையாளம் கண்பிக்கிறேன்

யூதாஸ் பேசவில்லை,முப்பது வெள்ளிக் காசுகள் பேசின 
    
இயேசு தனது சீடர்களுடன் தங்கி இருந்த கேத்சமனி தோட்டம்,கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம்,இயேசுவின் பதினோரு சீடர்களும் அழ்ந்த உறக்கத்தில் இருக்க யூதாஸ் மாத்திரம் மிஸ்ஸிங்,வாங்கின காசுக்கு நேர்மையாக சொன் ன படி சொன்ன நேரத்துக்கு படை வீரர்களை இயேசு தங்கி இருந்த    கேத்சமனி தோட்டத்திற்கு அழைத்து வந்து விட்டான் யூதாஸ்



இயேசு மாத்திரம் தூங்காமல் கண்களில் நீர் வழிந்தோட சேபித்துக் கொண்டிருந்தார்,

தந்தையே பாவிகளை மன்னியும்,என்னைக் கைது செய்து சித்திரவதை செய்யப்போகிறவர்களையும் மன்னியும்

மனம் உருகப் பிராத்தனை செய்து கொண்டிருந்த இயேசுவின் முன்னால் வந்தார்கள் யூத மதகுருமார்கள் அனுப்பிய படையும் கூடவே யூதாசும் 

நீங்கள் யாரை எதிர்பார்த்து வந்துள்ளீர்கள்?,மெல்லிய குரலில் அன்பு ததும்ப அவர்களைப் பார்த்துக் கேட்டார் இயேசு  

நாங்கள் இயேசுவைக் கைது செய்ய வந்துள்ளோம்

சடுதியாக யூதாஸ் இயேசு முன் வந்தான்,இயேசுவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான்



"ஒரு மனுஷ குமாரனை  [son of man] முத்தமிடுவதன் மூலம் காட்டிக் கொடுத்து விட்டாய் யூதாஸ்"

 யூதாசைப் பார்த்து அன்பு ததும்ப சிரித்தார் இயேசு.
பின்பு இருவரும் ஒரு  அறையில் சென்று  கதவை மூடிவிட்டார்..கடவுள் இயேசுவை வானத்தில் உயர்த்திக்கொண்டார். யூதாஷிற்குமுகத்தை இயேசுவுடைய  மாற்றிவிட்டார் , முஹமஹா  
முகமாக  மாற்றிவிட்டார்.
யூதாசை வைத்து யூதர்கள் என்றாலே காட்டிக் கொடுப்பவர்கள் என முடிவெடுத்த பலர் வசதியாக ஒன்றை மறந்து  விட்டார்கள்

அது இயேசுவும் பிறப்பால் ஒரு யூதர் என்பதை ....

No comments:

Post a Comment