Thursday 31 March 2011

பறிக்கப்பட்ட பன்னிரண்டாயிரம் பள்ளிவாசல்கள்....

வரலாற்றின் இடைக் காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தான் இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்ற தவறான சரித்திரம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் பதிந்திருக்கின்றது; படிந்திருக்கின்றது. இது இந்துத்துவா சக்திகள் நீண்ட காலமாகப் பரப்பி வரும் விஷக் கருத்தாகும்.
ஆனால் சரியான வரலாற்று ஆய்வாளர்கள், கோயில் இடிப்பை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அவர்களின் ஏக போக உரிமையாக்குவது அக்கிரமும் அநீதியுமாகும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர்.
 
1.முஸ்லிம் மன்னர்கள் வருவதற்கு முன்னாலேயே இந்தியாவிலிருந்த ஒவ்வொரு மன்னரும் தங்கள் வெற்றியை நினைவு கூரும் விதமாக பரஸ்பரம் தங்கள் எதிரிகளின் தெய்வங்களை, வழிபாட்டுத்தலங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர்; அழித்து ஒழித்திருக்கின்றனர்.
2. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்யும் போது அரசாங்க வருவாயில் அல்லது அரசு நிலத்தில் கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால் கோயில்களின் துணையுடன் கலவரத்தில் ஈடுபட்ட போது அந்தக் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதை இஸ்லாத்துடன் முடிச்சு போடக் கூடாது.
இவ்விரு காரணங்களால் கோயில் இடிப்பை முஸ்லிம்களுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பேச முடியாது என்று அந்த வரலாற்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கின்றனர்.
இதல்லாமல் இந்துக் கொத்தனார்கள், கல் செதுக்கும் சிற்பிகள் தான் பள்ளிவாசல்களைக் கட்டினார்கள். இதைத் தான் இந்துத்துவா சக்திகள் பழங்கால இந்துக் கோயில்களின் இடிபாடுகள் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
எழுப்பிய கட்டடங்களில் கண்ணைக் கவருகின்ற வகையில், உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற விதத்தில் கலை நுணுக்கங்களையும் கைவண்ண வேலைப்பாடுகளையும் அந்தக் கொத்தனார்கள் மற்றும் சிற்பிகள் மூலம் முஸ்லிம்கள் செய்தனர்.
இந்தக் கொத்தனார்களுக்கும் சிற்பிகளுக்கும் இஸ்லாமியக் கலை நுணுக்கமோ, இஸ்லாமிய கட்டடக் கலை வடிவமைப்போ தெரியாது. இருப்பினும் அவர்கள் கட்டிய கட்டடங்களில் தங்கள் கைவண்ணத்தையும் கலை நுணுக்கத்தையும் மிகத் திறம்படப் பதிய வைத்தனர்.
இந்துக் கட்டட அமைப்பிற்கும் இந்துக் கலை நுணுக்கத்திற்கும் அவர்களுடைய கட்டட அமைப்பு ஒத்திருக்கின்றது என்பதை அறவே அவர்கள் பொருட்படுத்தவில்லை.
சில கட்டடங்களில் கை கழுவப்பட்ட, கண்டு கொள்ளாமல் விடப்பட்ட, பாழான பழைய கோயில்களில் உள்ள கட்டடப் பொருட்களை தாங்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்களில் பயன்படுத்தியிருக்கின்றனர். இது பிற மத வழிபாட்டுத்தலங்களை அவமதிக்கும் அடிப்படையில் அமையவில்லை. தாங்கள் ஆள்கின்ற, வாழ்கின்ற பகுதியில் கட்டடக் கலையை தங்கள் கட்டட அமைப்பில் பதிய வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.
இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் கோயில்களை இடித்தார்கள் என்பது அபத்தமாகும் என்று வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். உண்மையில் அவர்களின் கருத்துப்படி இது சங்பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபு வாதமாகும்.
வளைத்து, வளைத்து இந்துக்களின் வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள் இடித்தார்கள் என்று சதாவும் குற்றம் சாட்டுகின்ற சங்பரிவார்களுக்கும் அவர்களது சார்பாளர்களுக்கும் நாம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.
முஸ்லிம் மன்னர்கள் ஒரு வாதத்திற்குக் கோயில்களை இடித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேச்சுக்கு இதை ஒப்புக் கொள்வோம். முஸ்லிம் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் மதச் சார்பின்மை என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியா, மதச் சார்பின்மையை உயிர் மூச்சாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்துத்துவா சக்திகள், அவற்றின் சார்பு சக்திகள் எவற்றை விமர்சனம் செய்தார்களோ அது, அதாவது வழிபாட்டுத் தலங்களை இடிப்பது இப்போது மதச் சார்பின்மை அடிப்படையிலான அரசாங்கத்தின் ஆசியுடன், அனுமதியுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அந்த அக்கிரம, அநியாய அத்தியாயத்தை இப்போது பார்ப்போம்.
1984ல் பாதிப்புக்குள்ளான பொற்கோயில்
1992ல் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித்
1995ல் காஷ்மீரில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பாதிப்புக்குள்ளான சரார்-இ-ஷெரீஃப்
இந்த வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே நமக்கு வெளியில் தெரிபவை.
இவை தவிர்த்து இன்னும் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், எதிரிடை அனுபவத்தில் அபகரிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றது.
சண்டிகர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய பகுதிகள் அடங்கிய பழைய பஞ்சாபில் 12,000 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன; அல்லது இந்துக் கோயில்களாக, கடைகளாக, வீடுகளாக, மாட்டுத் தொழுவங்களாக அதை விடவும் கேடாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்குக் கூறப்பட்ட காரணமும், கற்பிக்கப்பட்ட நியாயமும் என்ன?
1947ல் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ள குருத்துவாராக்கள், கோயில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத் தான் என்று பதில் தரப்படுகின்றது.
முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளில் வாழவில்லை என்ற பொய்யான, போலியான காரணங்களைச் சொல்லி, பள்ளிவாசல்களை அவற்றின் பழைய பயன்பாட்டுக்குக் கொண்டு வர விடாமல் அரசியல்வாதிகள் தடுக்கின்றனர்.
ஆனால் உண்மை நிலை என்ன? பீகாரிலிருந்தும் உத்தர பிரதேசத்திலிருந்தும் அதிகமதிகம் முஸ்லிம்கள் பஞ்சாபிற்குக் குடிபெயர்ந்து பண்ணைத் தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் மன்னர் மாநிலங்கள் என்று அழைக்கப்பட்ட ஆல்வார், பாரத்பூர் மாநிலங்களில் இருந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் அண்டை மாநிலமான பஞ்பாப் பள்ளிவாசல்கள் சந்தித்த அதே கதியைத் தான் சந்தித்தன.
நாடு விடுதலையின் போது டெல்லியில் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டன. லாகூரில் உள்ள கோயில் மற்றும் குருத்துவாராக்கள் தாக்கப்பட்டதற்குப் பழி வாங்கும் படலம் தான் என்று இந்த அக்கிரமத்திற்குக் காரணம் சொல்லப்பட்டது.
1947க்குப் பின் நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
1979ல் மத்திய பிரதேசத்தில் 55 பள்ளிவாசல்கள்!
1989ல் பாகல்பூர் இரத்தக் களரியில், வகுப்புக் கலவரத்தில் 57 பள்ளிவாசல்கள்!
1990ல் ஹைதராபாத் கலவரத்தில் பலியான 77 முஸ்லிம் கட்டடங்கள்!
2002ல் குஜராத் இனப் படுகொலையில் 236 பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் புனிதத் தலங்கள், தர்ஹாக்கள் தகர்த்தெறியப்பட்டன.
குஜராத்தைப் புகழ்ந்து கவிதை பாடிய "வலி தக்கானி' என்பவரின் நினைவுக் கோபுரமும் பெருக்கெடுத்து ஓடிய காவி பயங்கரவாத வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்டது.
தொல்லியல் துறையின் துரோகத்தனம்
இதல்லாமல் தொல்லியல் துறையும் தன் பங்குக்கு நினைவுச் சின்னம் என்ற பெயரில் முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடைக் கல்லாக நிற்கின்றது.
தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் 118 பள்ளிவாசல்களை வைத்திருக்கின்றது. அந்தப் பள்ளிகளில் தொழுகைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நிஜாம் ஆட்சி செய்த ஹைதராபாத்தின் எல்லைகளில் உள்ள பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முஸ்லிம் மக்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி பள்ளிவாசல்களைத் தொல்லியல் துறை பூட்டி வைத்திருக்கின்றது. ஆனால் அவ்வூர்களில் முஸ்லிம்கள் வாழத் துவங்கிய பின்னரும் பள்ளிவாசல்களை முஸ்லிம்களிடம் தர மறுக்கின்றது.
மத்திய அரசின் பெரும் துரோகம்
1979ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தொல்லியல் துறையின் கீழிருக்கும் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடையை நீக்குவதாக வாக்களித்தது. அந்த வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அந்தப் பள்ளிகளில் மீண்டும் தொழச் செல்லும் போது அந்த வாக்குறுதி பொய் என்று புலனானது.
ஒரு பக்கம் தொல்லியல் துறையின் சதி! மற்றொரு பக்கம் இந்துத்துவா சக்திகளின் சதி! மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி தலைமையில் சுமார் 2000 பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், முன்னாள் இந்துக் கட்டட அமைப்புகள் என்று ஒரு பட்டியல் திரட்டி வைத்திருக்கின்றார்கள். முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் மிகப் பெரிய தலங்களும் அவற்றில் உள்ளடங்கும்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் தவ்லதாபாத் கோட்டையில் இருக்கும் இடைக்கால வரலாற்றுப் பள்ளியான ஜும்ஆ மஸ்ஜிதின் மிஹ்ராபில் சிலைகளைக் கொண்டு வைத்து அதைப் பாரத மாதா கோயில் என்றாக்கி விட்டனர். அதன் பிறகு இதே பாணியை இந்துத்துவா சக்திகள் ஏனைய பள்ளிவாசல்கள் விஷயத்திலும் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.
ஒரு கட்டடத்தின் தூண் அல்லது அமைப்பு இந்துக் கோயிலுக்கு ஒத்திருக்கின்றது என்றோ, அல்லது அந்தக் கட்டடம் இடிக்கப்பட்ட இந்து ஆலயத்தின் மீது கட்டப்பட்டது என்றோ ஒரு கதை கட்டி விட்டால் போதும். அடுத்த கணம் அது முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும்.
இந்த அடிப்படையில் தான் ஆந்திராவில் 1970ல் கட்டப்பட்ட பாக்கியலட்சுமி கோயில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சார்மினார் மீது துருத்திக் கொண்டிருக்கின்றது. அலெ நரேந்திரா என்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்.பி. சார்மினாரை இந்துக் கோயிலாக மாற்றுவேன் என்று மிரட்டல் விடுத்தான்.
பி.ஜி. கெஸ்கார் என்பவன் மக்கா மஸ்ஜிதைக் குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று கொக்கரித்தான்.
இவை இந்துத்துவா சக்திகளின் வெறித்தனத்திற்குரிய எடுத்துக்காட்டுகளாகும்.
பள்ளிவாசல்களில் ஒரு தடவை சிலைகள் கொண்டு வைக்கப்பட்டால் போதும். மறுகணம் பூஜை புணஸ்காரம் தொடங்கி விடும். அரசு அதிகாரிகள் அரசியல் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியச் சின்னத்தை அழித்து அதில் இந்துச் சின்னத்தைப் பதிய வைத்து விடுகின்றனர்.
அதிகாரிகளின் ஓர வஞ்சனை
இந்துக்கள் ஆட்சேபணை செய்து விட்டால் போதும். முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி தர மறுத்து விடுகின்றனர்.
இந்தத் தடை எங்கோ இருக்கும் கிராமத்தில் நடைபெறவில்லை. நாட்டின் தலைநகரத்திலேயே நடக்கின்றது. மொத்தத்தில் இந்தப் பாணியும் பணியும் இந்தியாவில் இஸ்லாம் இல்லாத இந்து மயமாக்கும் நாடு தழுவிய சதியாகும்.
இந்துத்துவா சக்திகள் இஸ்லாத்தை வெறுக்கலாம். ஆனால் அவர்கள் பின்பற்றுவதோ அவர்கள் யாரை எதிரிகள் என்று கருதுகிறார்களோ அவர்களுடைய வழியைத் தான்.
டிசம்பர் 21, 2010 அன்று, உண்ள்ழ்ங்ள்ல்ங்ஸ்ரீற் ச்ர்ழ் தங்ப்ண்ஞ்ண்ர்ய் ண்ய் உங்ம்ர்ப்ண்ற்ண்ர்ய் - "ஆலய இடிப்பில் அவமதிக்கப்படும் மதம்' என்ற தலைப்பில் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமர் காலித் என்ற கட்டுரையாளர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது!
இந்தியாவில் பாழாக்கப்பட்ட, பறிக்கப்பட்ட 12,000 பள்ளிவாசல்களைப் புள்ளி விபரங்களுடன் தருகின்றார். அதையே இங்கு நாம் ஏகத்துவம் இதழில் தந்திருக்கின்றோம்.
இந்தக் கட்டுரையில் தர்ஹாக்கள் பறிப்பும் இடம் பெற்றுள்ளது. அதனால் தவ்ஹீத் ஜமாஅத், தர்ஹாவை ஆதரிக்கின்றது என்று யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
தர்ஹாக்களை அபகரிப்பதை, முஸ்லிம்களின் சின்னத்தை அழிப்பதாக இந்துத்துவா சக்திகள் பார்க்கின்றனர். எனவே ஒரு சொத்து அநியாயமாக முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டால் அதை மீட்பது ஒரு முஸ்லிமின் கடமை என்ற அடிப்படையில் தான் இதைத் தவ்ஹீத் ஜமாஅத் பார்க்கின்றது என்பதை இங்கே பதிய வைக்கின்றோம் 

 நன்றி: ஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2011

Sunday 27 March 2011

KFC and Mc Donold's are Dominated Indians!!

 I was just remembering my Dubai moments past 10 years ago, During This  period  I had a friend from China is staying  same Apartment in Al Shaab Colony, Hor Al Anz, Dubai.. I want to share the information regarding KFC, McDonald like  companies providing the Fast Foods..

KFC and McDonald’s  are a leading Chicken and Fast food restaurant Offers varieties of Fried chicken, Hot and crispy chicken, 'Kentucky fried Chicken' and 'finger licking good' fried chicken recipes and menus, popcorn Chicken, variety bucket of chicken and much more .Order french fries or hot wings at a McDonald's Or a KFC  Chicken in India   and You're more likely to get a super-sized helping of artery-clogging trans fats Then you would be at their restaurants in all over the world.  Countries. Trans fat raises bad cholesterol and lowers Good cholesterol. Eating just 5 grams of it per day increases the risk of heart Disease 25 percent, research shows.

I was very surprised See a difference in trans fatty acids in these uniform products," said one Of the researchers, Dr. Steen Stender, a cardiologist at Gentofte University Hospital in Hellerup, Denmark, and former head of the Danish Nutrition Council. "It's such an easy risk factor to remove."

Many of us have heard the Urban legend about “Kentucky Fried Chicken” having to change their name to KFC Because they didn’t use real chickens, and the government wouldn’t let them Falsely advertise that they served real chicken. A friend of mine told me that Story in a KFC in a big city, where I used to Dubai  in UAE. He refused to eat the chicken. I Didn’t believe the story. I’m a tough sell. I will put a story like that in a Little cloud in my head where it can float around until I have a chance to Verify it. Research, for example, established that the story about enterprising Chinese businessmen using a chemical cocktail to convert pork to beef was true.
And, just today I learned that a cockroach really can survive For 9 days with it’s head cut off. There’s actually an article in Scientific American is verified  his. If I’d had to bet, and I would have put money down on this one, I’d have Said “absolutely not”. I know a thing or two about insects, and that just Sounds like the kind of story someone who didn’t know anything about insects Would believe. I was wrong.

Now there’s a new KFC story that hasn’t been Debunked yet. It comes from a local Chinese newspaper in Shaanxi Provence, and Hasn’t been popularized yet, so there’s nothing in English on the internet About it that I can find. I got the info from a science teacher who worked as a University affiliated with the one I worked at in Dubai, and who I’d met at a Social gathering and have kept in contact with. He translated the document for Me and sent me the pic. According to the article, a girl named Yang Pei, who Worked in a “chicken factory” which raises chickens for KFC in china, had heard Rumors that the chickens were mutants. Initially, the girl, who was a university Educated, didn’t believe the stories of multi-winged, multi-legged, beakless, Featherless freak birds. But over time she began to wonder. Interestingly, the Chickens at this facility were off limits to general workers like her, which Raised her suspicions. She thought it was extremely unusual that you needed Special clearance to see the chickens, when her own family had their own Chicken farm and anyone and everyone could come and see the whole Process 

First Know about KFC and McDonald’s..


KFC..
KFC began with Colonel Harland Sanders. He discovered his penchant for cooking when he was only 9 years old. Through the years he grew up to become a personage the world knows as Colonel Sanders, founder of KFC.
KFC Corporation is the largest fast-food chicken operator, developer, and franchiser in the world. KFC, a wholly owned subsidiary of PepsiCo, Inc. until late 1997, operates over 5,000 units in the United States, approximately 60 percent of which are franchises. Internationally, KFC has more than 3,700 units, of which two-thirds are also franchised.

Kentucky Fried Chicken was founded by Harland Sanders in Corbin, Kentucky. Sanders was born on a small farm in Henryville, Indiana, in 1890. During the 1930s an image that would become known throughout the world began to develop. First, Sanders was named an honorary Kentucky Colonel by the state's governor; second, he developed a unique, quick method of spicing and pressure-frying chicken. Due to his regional popularity, the Harland Sanders Court and Cafe received an endorsement by Duncan Hines's Adventures in Good Eating in 1939.
He reached celebrity status in 1952, when he decided to franchise his famous Kentucky Fried Chicken recipe blends of 11 herbs and spices to the rest of America. 

KFC (Kentucky Fried Chicken) is a fast food restaurant chain. which specializes in fried chicken and is headquartered in Louisville, Kentucky. It is the world's second largest restaurant chain overall (as measured by sales) after McDonald's, with over 18,000 outlets in 120 countries and territories as of December 2012. The company is a subsidiary of Yum! Brands, a restaurant company that also owns the Pizza Hut and Taco Bell restaurant chains.




 McDonald's

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6rn75D5HY3EMZWQtMDkXucTTWYs27KlgD0MnpQTgd0DD5tVXWl5Be3tY-8fNJ0R0Z9smtX7N1htoB9ywOglQsGTiO3zY8DbQzQnFT8y1hH9ZS-xtviy7bWmYElpW_Iq-XEqV24GA5PtXt/s170/mcdonalds-1.jpg
Since its incorporation in 1955, McDonald's Corporation has not only become the world's largest The corporationtione restaurant organization, but has hellit corporation mericans' Organization-and increasingly the habits of non-Ameorganization. On Increasingly, more than 46 million people eat at one of the company's more than 31,000 restaurants, which are located in 119 countries on six continents. Whichwhich 9,000 of the restaurants are company owned. McDonald's Corporation opened its first restaurant in Des Plaines, Ill. in 1955 and began to expand internationally in 1967, with restaurants in Canada (try a McLobster roll here) and Puerto Rico (where flan has appeared on the menu). 
Today, McDonald's international restaurants can be found on every continent except Antarctica; their popularity is due to menu variations that recognize cultural differences, as well as to such international favorites as French fries (nine million pounds are served every day). 


Written By M.Ajmal Khan.

Friday 25 March 2011

பப்பாளி!விவசாயத்தில் நாட்டமுள்ள சகோதரர்களுக்காக ஒரு சிறப்புப் பதிவு...

ஏக்கருக்கு ரூ.2இலட்சத்து 10 ஆயிரம்…ஜீரோ பட்ஜெட் பப்பாளி!


வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இத்தகைய சூழலுக்கு நடுவே… சிவகங்கை சூரக்குளம் கிராமத்தில், ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பப்பாளி சாகுபடி!
புதுச்சேரி மாநிலத்தில் கூரியர் நிறுவன முகவராக இருக்கும் சிவா என்பவருக்குச் சொந்தமான பண்ணைதான் இது.
ஒரு காலத்தில் இந்தப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தற்போது தன் தொழிலைப் பார்த்துக் கொண்டே… விவசாயத்தையும் கையில் எடுத்திருக்கிறார். தோட்டத்தை முழுக்க கவனித்துக் கொள்வதற்காக செல்வம் என்பவரை பண்ணை மேலாளராக நியமித்திருக்கிறார் சிவா. இங்கே… பண்ணையை நமக்குச் சுற்றிக. காட்டியபடியே விஷயங்களைப் பகிர்கிறார் மேலாளர் செல்வம்.

“உரிமையாளர், வாரம் ஒரு முறை தோட்டத்துக்கு வந்து செல்கிறார். தினமும் செல்போன் மூலமாக அவர் சொல்கிற ஆலோசனைப்படி விவசாயம் நடக்கிறது. இங்க 5 ஏக்கரில் ‘ரெட்லேடி’ ரக பப்பாளியைக் கூட்டுப்பயி்ரோடு சோர்த்து ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த பப்பாளியோட வயது இரண்டு வருடம் தான். இப்ப மகசூல் முடிகிற நேரம்” என்றவர், ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி சாகுபடி செய்யும் முறைகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார்.
‘செம்மண் மற்றும் செஞ்சரளை பூமியில் பப்பாளி ந்னறாக வளரும். முதல் கடவை பப்பாளி விதையை கடையில் வாங்கலாம். அடுத்த தடவைகளில் இருந்து நதமே நாற்று தயாரித்துக் கொள்ளலாம். 4X7 இஞ்ச் அளவுள்ள பிளாஸ்டிக் பையில், பப்பாளி விதைகளை நட்டு, நிழலில் வைத்து தினமும் இரண்டு வேளை பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீரில் ஜீவாமிர்தத்தையும் கலந்து தெளித்தால்… நோய் எதிர்ப்புச் சக்தியோடு நாற்று வளரும். விதைத்த 10-ம் நாளில் முளைக்கத் தொடங்கும். அரையடி உயரத்துக்கு மேல் செடிகள் வளர்ந்ததும், நடவு செய்யலாம். அதிகபட்சம் 40-ம் நாளுக்குள் நடவு செய்து விடவேண்டும். நாற்றுத் தயாராகும் நேரத்தில் நடவுக்கான நிலம் தயாரிக்கும் வேலைகளை முடித்துவிட வேண்டும்.

நிலத்தை நன்றாக உழது கொள்ள வேண்டும். பின்பு, ஒரு ஓரத்திலிருந்து வயல் தயாரிப்புப் பணிகளை செய்ய வேண்டும். வரப்பிலிருந்து ஒரு அடி தள்ளி, இரண்டு அடி அகலம் மற்றும் ஆழத்தில் நீளமாக கால்வாய் வெட்ட வேண்டும். அந்தக் கால்வாய்களிலிருந்து 24 அடி தள்ளி அதே போல மற்றொரு கால்வாய் எடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு 24 அடிக்கும், வயலின் அளவைப் பொறுத்து கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். பிறகு, அவற்றில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக் காலங்களில் மேல்மண் அரித்துச் செல்வதைத் தடுப்பதோடு, மழை நீர் நிலத்திலேயே சேகரமாவதற்கும் இந்தக் கால்வாய்கள் உதவும். இரண்டு கால்வாய்களுக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில், வசதிக்கு ஏற்ப மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதே போல வயல் முழுவதும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

வயலில் உள்ள காய்ந்த புற்களைக் கொண்டு மேட்டுப் பாத்திகளில் மூடாக்கு போட வேண்டும். பின்பு, சணப்புச் செடிகளைப் பாத்திகளில் பரவளாக நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 9 அடி இடைவெளியும் வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும் வருவது போல பப்பாளிச் செடிகளை நட வேண்டும். (முதல் வரிசையில் பாத்தியின் ஆரம்பத்தில் ஒரு பப்பாளிச் செடியும், அடுத்த வரிசையில் 9 அடி தள்ளி ஒரு பப்பாளியும், நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 9 அடிக்கு 6 அடி இடைவெளியில் முக்கோண முறையில் செடிகள் இருக்கும்.) இந்த முறையில் ஏக்கருக்கு 600 செடிகள் வரை நடலாம்.
பப்பாளிக்கு இடையில் ஊடுபயிராக முருங்கை அல்லது வழையை நடவு செய்யலாம். பாத்தியில் இரண்டு பப்பாளிச் செடிகளுக்கு மத்தியில் ஒன்று என் முருங்கை அல்லது வாழையை நட வேண்டும். மீதமுள்ள இடங்களில் செண்டுமல்லி, மக்காச்சோளம், சணப்பு, தட்டைப் பயறு, அகத்தி, காய்கறிகள் போன்றவற்றை பயிர் செய்து கொள்ளலாம். செண்டுமல்லி நடுவதால், மாவுப் பூச்சித் தாக்குதலில் இருந்து பப்பாளியைக் காப்பாற்றலாம். காற்றிலுள்ள நைட்ரஜன் சத்துக்களை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையை தட்டைப் பயறு போன்ற வேர்முடிச்சுப் பயிர்கள் செய்துவிடும். சணப்பு, வேகமாக வளர்ந்து, வயலில் ஒரு நிழல்வலையைப் போல் செயல்படுவதால் பப்பாளிச் செடிகள் பாதுகாப்பாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

வழக்கமாக பாத்திகளின் மேல் சொட்டுநீர்க் குழாய்களை அமைப்பது போல் இல்லாமல், ஒவ்வொரு பப்பாளிச் செடிக்கும் அருகில் குழாய்கள் வருமாறு குறுக்குவசத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு புறமும் வாய்காலில் உள்ள தண்ணீர், சொட்டுநீர் மூலம் கசியும் தண்ணீர் மற்றும் பாத்திகளில் உள்ள மூடாக்கு ஆகிய காரணங்களால் பாத்திகள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். எனவே, ஊடுபயிர்களுக்கு என்று தனியாக நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை.

வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 100 விட்டர் ஜீவாமிர்தத்தை ஒரு வாரம் பாசனத்தின் மூலமாகவும், மறுவாரத்தில் தெளிப்பு முறையிலும் மாற்றி மாற்றி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். இலை வழியாக தெளிக்க பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டாட ஜீவாமிர்தம் வீதம் கரந்து தெளிக்க வேண்டும். பயரின் தேவைக்கு ஏற்ப எத்தனை டேங்க் என்று முடிவு செய்து கொள்ளலாம். 20 நாட்களுக்கு ஒரு தடவை 200 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் மோரைக் கலந்து செடிகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடவு செய்த முதல் 5 மாதம் வரை அக்னி அஸ்திரத்தைத் தெளிக்க வேண்டும். நடவு செய்த 6-ம் மாதம் பப்பாளி பூக்கும். பொதுவாக, பூக்கும் தருணத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். தொடர்ந்து மோர்க்கரைசலை தெளித்தால் பூச்சித் தாக்குதல் சுத்தமாக இருக்காது.

நடவு செய்த 8-ம் மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை வீதம் காய்களை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 16 மாத காலம் வரை மகசூல் கிடைக்கும். நன்கு பெருத்த, முனையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்களை மட்டுமே பறிக்க வேண்டும். ஒரு மரம் 50 கிலோ முதல் 150 கிலோ வரை மகசூல் கொடுக்கும். 16 மாத காலத்தில் ஒர மரம் குறைந்தபட்சம் 50 கிலோ மகசூல் கொடுப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஏக்கரில் உள்ள 600 மரங்களில் இருந்து 30 டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சம் 7 ரூபாய்க்கு விற்பனை செய்தால்… 2 இலட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதில் செலவு போக ஏக்கருக்கு ஒரு செலவு போக ஏக்கருக்கு ஒர லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஊடுபயிராக சாகுபடி செய்யும் முருங்கை அல்லது வாழைக்குத் தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. வாழையைத் தாக்கும் நூற்புழுவை செண்டுமல்லி கட்டுப்படுத்திவிடும். வாழையைத் தாக்கும் வைரஸ் நோயை, வயலில் ஆங்காங்கே உள்ள அகத்தி விரட்டிவிடும். மோர்க் கரைசலும், அக்னி அஸ்திரமும் முருங்கையில் புழு தாக்காமல் செய்கிறது.

ஒரு ஏக்கர் பப்பாளிக்கு நடுவே ஊடுபயிராக 600 வாழை அல்லது 600 முருங்கையை நடலாம். ஒரு முருங்கைச் செடியிலிருந்து குறைந்தபட்சம்15 கிலோ காய் கிடைக்கும். ஆக, 600 முருங்கைச் செடிகளில் இருந்து, 9,000 கிலோ மகசூல் கிடைக்கும். செலவு போக 30 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.
மற்றொரு ஊடுபியிரான செண்டுமல்லி, குறைந்தபட்சம் 1,600 கிலோ என்கிற அளவில் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். காய்கறிகள் மூலமாக 10 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். தட்டைப்பயறு மகசூலை ஜீவாமிர்தம் தயாரிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

“பப்பாளி, தட்டைப்பயறு, செண்டுமல்லி, முருங்கை என்று சொல்லும் போது மலைப்பாக இருந்தாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது விவசாயம் என்பது எளிமையான இலாபகரமான விவசாயம். பப்பாளி மற்றும் ஊடுபயிரின் மூலமாக ஒரு ஏக்கரில், 24 மாதத்தில் குறைந்தபட்சம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.
பண்ணை உரிமையாளர் சிவா கூறியது: சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி பக்கத்திலிருக்கிற முத்தூர் இவரது பூர்வீகம். விவசாயம் தான் பரம்பரைத் தொழில். இடையில் எல்லோரும் படிப்பிற்காக குடிபெயர்ந்துவிட்டனர். ஆனாலும் விவசாயத்தின் மீது தனி ஈடுபாடு.

இவரது நிலம் செம்மண் சரளை பூமி. மழை வந்தால் தண்ணீர் தேங்காது. மண்ணை அரித்துக் கொண்டு ஓடிவிடும். இப்படி பல பிரச்சனைகளால், ஆரம்பத்திலிருந்தே பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும் பெரிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இதற்கு தீர்வாக தனக்கு கிடைத்தது ஜீரோ பட்ஜெட்.

அவர் அறிவுரைப்படி 5 ஏக்கரில் ரெட்லேடி பப்பாளியையும், இடையில் முருங்கை, செண்டுமல்லி, சணப்பு, தட்டைப் பயறு என பல பயிர்களைக் கலந்து பயிர் செய்தார். கூட்டுப்பயிரா செய்வதால் நோய் தாக்குதல் இல்லை. மேட்டுப்பாத்தி அமைத்ததால் களை எடுக்கும் செலவு இல்லை. ஜீரா பட்அஜட்டில் விளையும் காயின் தோல் கெட்டியாக இருப்பதால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.

வழக்கமாக பப்பாளி இலை சுருங்கி, காய் சின்னதாக இருக்கும். செண்டுமல்லி நட்டதால் அந்தப் பிரச்சனையும் இல்லை. கால்வாய் வெட்டி, நிலத்தைத் தயாரிக்கிற தொழில்நுட்பம் அவருக்கு மிகசும் உதவியாக இருக்கிறது. இவரது செஞசரளை பூமியில் மழை பெய்தால் தண்ணீர் வயலையே அரித்துவிடும். இப்போது எல்லாத் தண்ணீரும் சத்தும் நிலத்திற்குள்ளேயே சேகரமாகிறது என்கிறார்.
இவர் பண்ணையில் விளைகிற பப்பாளியை சென்னையில் இருக்கும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு கொடுக்கிறார். இயற்கை முறையில் பப்பாளிக் கூழையும் தயாரிக்கிறார். பப்பாளியைப் பொருத்தவரைக்கும் விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளூர் பழமுதிர்சோலையிலேயே விற்றிடலாம். இயற்கை முறையில் பப்பாளியை விளைவிக்கும் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத நிலையிருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் தான் விற்பனைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார்.

தொடர்புக்கு
சிவா, 98942-40000

ஆதாரம் : http://www.vikatan.com/

தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

Tuesday 22 March 2011

கொடைக்கானல் - மலைகளின் இளவரசி( kodaikanal-Queen of Mountஒரு பார்வை ....ain)-


மலைகளின் அரசி ஊட்டியைப் பற்றி முன்னரே விளக்கியிருந்தேன். இப்போது மலைகளின் இளவரசியைப் பற்றி பார்க்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல்,  தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.


கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்.


வெள்ளி நீர்வீழ்ச்சி:
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.


Silver Falls
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.


இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.


Kodaikanal Lake
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.


150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
Bryant Park
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.  


வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).


Coaker's walk




டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. 


இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம்   எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.


Dolphin's nose
பசுமை பள்ளத்தாக்கு(suicide point):
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.
Suicide பாயிண்ட்


லையர் நீர்வீழ்ச்சி:
      இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது.  இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.


Thalaiyar falls




குணா குகைகள்:
      கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.  அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம். 


Guna caves
Pine forest:
      இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.  கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.


Pine forest
பியர் சோழா அருவி(Bear shola Falls):
        கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது.  அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.


Bear shola falls
Kodaikanal solar observatory:
         கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார். 


Solar observatory
திறந்திருக்கும் நேரம் 

  • காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
  • சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
        இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
Pillar rocks
பாம்பர் அருவி:
         இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
Pambar falls
குறிஞ்சி ஆண்டவர் கோவில்:
       1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். தற்போது பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில். 
      12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை இங்கு பார்க்கலாம்.
Kurinji Andavar Temple
செண்பகனூர் அருங்காட்சியகம்:
           இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது.  கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும். 


Shenbaganur Museum
விழாக்கள் - வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா நடத்தப்படுகிறது.

செல்ல உகந்த நேரம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை

எப்படி செல்வது?
  • கொடைக்கானலுக்கு திண்டுக்கல், பெரியகுளம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80 கி.மீ தொலைவில்
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121 கி.மீ தொலைவில்.