Monday 31 December 2012

புத்தாண்டும் மலரும் நினைவுகளும் !! ஒரு சிறப்பு பார்வை..







ஒரு வருடம் ஓடி போய்விட்டது, வருடங்கள் ஆரம்பிப்பது மட்டுமே நினைவில் இருக்கிறது, பிறகு அந்த வருடம் முடியும் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது, அட இவ்வளவு சீக்கிரமா ஒரு வருஷம் ஆகிப்போச்சா?






வழக்கம் போலவே இதோ இன்னொரு புதுவருடம், ஒவ்வொரு வருடத்திலும் என்ன சாதிக்க போகிறேனோ? முடிந்து போன வருடத்தில் எதை செய்து முடித்தேனோ? தெரியாது, ஆனால் புதுவருடம் ஆரம்பமாகும் காலங்களில் மனதில் ஒரு புது விதமான மகிழ்ச்சி மட்டும் வருடம்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.






அந்த மகிழ்ச்சியானது புதுமனைவியை கொண்டாடும் கணவனின் பார்வையோடுதான் முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆரம்பமாகிறது, ஆனால் கடைசியில் தானே புயல் கரை கடந்ததை போல ஓரிரு மாதங்களிலேயே வலுவிலந்தும் விடுகிறது.






ஒவ்வொரு வருடங்களும், புத்தாண்டு சங்கல்பங்களும் காற்றிலும், நீரிலும் மட்டுமே எழுதி வைக்கும்படி எனக்கு வாய்த்திருக்கிறது, சலித்து போய் இப்பொழுது அது போல எதுவும் நினைக்கக்கூடாது என்பதே புத்தாண்டு நினைவாக மாறிவிட்டது.






முந்தைய கடந்து போன வருடத்திற்கு இந்த வருடம் எவ்வளவோ பரவாயில்லை, பழைய வருடத்தின் தாங்கமுடியாத சோகங்களை இந்த வருடம் மறக்கடித்தது, இன்னும் சொல்லப்போனால் கடைசியில் வந்தமைந்த சொந்தம் என் வாழ்க்கையையே அர்த்தப்படுத்தியது என சொல்லலாம்.






ஒவ்வொரு கடந்துபோன நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களும், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை விதைத்து விட்டுதான் போயிருக்கின்றன, அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.






துன்பத்திலும், கஷ்டத்திலும், ஏக்கத்திலும், தேவைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், மக்களுக்கும் ஒரே எதிர்பார்ப்பு வரப்போகும் வருடமாவது ஒரு நல்ல வருடமாக அமையாதா என்பதே.






அந்த சராசரி மனிதர்களில் ஒருவனாக எனது எதிர்பாப்பும் அதுவே, எதிர்பார்ப்பும், ஏமாற்றங்களும் தொடர்கதையாகி போய் நடப்பது நடக்கட்டும் என்ற எனது சராசரி மனநிலையை மாற்றிப் போட்டிருக்கிறது கடந்த வருடம், புது வருடத்தில் எனக்கான தேவைகளும், செல்ல வேண்டிய தூரங்களும் நிறையவே இருக்கிறது.












அதற்காக அதிகமாக உழைக்க சொல்கிறது காலம்.




பார்ப்போம், காலம் சொல்லும் பதிலை..!


நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதுவருடத்தை தொடங்க இருக்கிறேன்… நான்..!

















வரப்போகும் 2013 ஆம் வருடத்தில், அனைவரது வாழ்விலும் உள்ள சங்கடங்கள் விலகி, சந்தோசம் பெருகி, நினைத்தது நடந்து, எல்லோருக்கும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் வருடமாக அமையட்டும்.என வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.இறைவனை பிரார்த்திக்கிறேன்.























இந்த பதிவினை படிக்கும் நண்பர்கள், சகோதர, சகோதரிகள், சக வலையுலக நண்பர்கள், மற்றுமுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Sunday 30 December 2012

வேற்றுக் கிரக மனித எலும்புகளா ?


மெக்சிக்கோ நாட்டில் நேற்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்ட 
எலும்புக்கூடுகளால், உலகமே பரபரப்பில் மூழ்கியுள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த எலும்புக்கூடுகளை
 அகழ்வாராட்சி செய்பவர்கள் இன்னும் முழுதாக தோண்டி எடுக்கவில்லை. அதன் மேற்பரப்பை சுத்தம் செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் வேற்றுக்கிரக மனிதர் அமைப்பைப் போன்ற தோற்றமுடைய பல எலும்புக்கூடுகளும் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளது. முதல்கட்டமாக அவற்றை தோண்டி எடுத்து பின்னர் பகுப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மெக்சிக்கோ தெரிவிதுள்ளது. இச் செய்தி வெளியாகிய சில மணிநேரத்திலேயே உலக நாடுகள் பலவற்றில் இருந்து விஞ்ஞானிகள், பகுப்பாய்வாளர்கள் தொல்பொருள் நிபுனர்கள் எனப் பலர் மெக்சிக்கோவுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

இது இவ்வாறு இருக்கையில், இது மனிதர்களுடைய எலும்புகூடுகளாக
இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் பெண்கள் தமது கழுத்து நீளமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில இருப்பு ஆபரணங்களை அணிவது உண்டு. இதேபோல தமது தலை சற்று நீளமாக (நீள் வட்டமாக) இருக்க பண்டைய காலத்தில் சில இன மக்கள், செயற்கையாக தமது மண்டை ஓட்டை வளரவைத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. எமது உடலில் உள்ள எலும்புகளை இம் முறை மூலம் வளைக்க முடியும். மற்றும் நீளமாக்கவும் முடியும். சில இருப்பு அச்சுக்களைப் பாவித்து இவ்வாறு மண்டை ஓட்டை நீளமாக்குவதை இவர்கள் பாரம்பரிய வழக்கமாகக் கொண்டிருந்தார்களா ? என்ற கோணத்திலும் ஆய்வாளர்கள் தமது ஆராட்சிகளை நடத்தி வருகின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 
மண்டை ஓடுகளில் உறைந்துள்ள இரத்தத்தில் உள்ள டி.என்.ஏ வை பரிசோதனை செய்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

Friday 28 December 2012

குடிநீர் பாட்டில்கள்!! ஒருசமூக பார்வை...


380612_353078248087820_336448263084152_878439_1393921865_n
வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.

Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை.அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை.
இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள்.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது.


அப்படி வைப்பதால் பாட்டிலின் வேதிப்பொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது. இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயர் மற்றும் பாட்டிலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது.
தண்ணீர் காலியானதும், பாட்டிலை, சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது.
More Detail..
                 http://www.colorado-recycles.org/pdf/recyclingtips/newresincodes.pdf

போலிகார்பனேட் பாட்டில்..
போலிகார்பனேட்டில் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களைப் பள்ளிக்கூட மாணவர்கள் உபயோகிப்பது தடை செய்யப்பட வேண்டும். இந்த போலிகார்பனட் பாட்டில்கள் எதிர்கால சந்ததயினருக்கு சொல்லொணா கேடுகளை உண்டாக்கும்போலிகார்பனேட் தண்ணீர் பாட்டில்கள் தக்கென்று, நீண்ட நாட்களுக்கு உழைக்கும் வண்ணம் பல வித வண்ணங்களில் அழகாக இருக்கும். இவை பேரங்காடிகளிலும், புத்தகக் கடைகளிலும் பரவலாக விற்கப்படுகின்றன. இந்த போலிகார்பனேட் உறுதியாக இருக்கும். இதனுள் முக்கோண வடிவத்தில் பிசி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் இவை போலிகார்பனேட் பாட்டில்கள் என்று அடையாளம் காணலாம்.

ண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் இந்த போலிகார்பனேட்  பாட்டில்களை வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். போலிகார்பனேட் பாட்டில்கள், உடலில் ஹார்மோன்களின் இயக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் பிஸ்பெனோல் ஏ என்ற இரசாயனத்தை போலிகார்பனேட் பாட்டில்கள் வெளியாக்குகின்றன. இவை பல்வேறுவிதமான ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இன உற்பத்தி உறுப்புக்களில் சேதம், புற்றுநோய் திசுக்கள் உருவாகுதல், பெண்களுக்குப் பரவலாக ஏற்படும் மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கு விரைப் புற்றுநோய் மற்றும் விந்துக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புக்களுக்கும் போலிகார்பனேட் பாட்டில் உபயோகத்திற்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனிதர்களின் சீரான உடல் இயக்கத்திற்கு உடலில் பல்வேறுவிதமான ஹோர்மோன்கள் சுரக்கின்றன. ப¢ஸ்பெனோல் ஏ இந்த சுரப்பிகளின் சீரான இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அவற்றின் வேலையைக் கெடுக்கிறது. இதனால் உடல் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

போலிகார்பனேட் பாட்டில்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அவற்றை வெப்பமான இடங்களில் வைக்கும்பொழுதும், சூடான திரவத்தை அவற்றில் ஊற்றும்பொழுதும் அவற்றின் உள்ள பிஸ்பெனோல் ஏ வெளியாகி அந்தத் திரவத்தோடு கலக்கிறது.

மிசோரி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் சாதாரண வெப்ப நிலையில் கூட பிஸ்பெனோல் வளியாவதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 18லிருந்து 74 வயதுக்கு உட்பட்ட 1,455 பேரின் சிறுநீர் மற்றும் இரத்தத்தைப் பரிசோதனை செய்தபொழுது, 25 விழுக்காட்டினருக்கு உடலில் பிஸ்பெனோல் ஏ அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

பிஸ்பினோல் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு, போலிகார்பனேட்டால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் ப¡ட்டில்களை பள்ளிக்கூடங்களில் உபயோகிப்பதைக் கல்வி அமைச்சு தடை செய்ய வேண்டும்

நம் நாட்டிலும் பெற்றோர்கள் இந்த போலிகார்பனேட் பாட்டில்களை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக்கெ¡டுக்காமல் இருப்பது நன்மை பயக்கும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday 27 December 2012

ரஜினிகாந்த் சொத்து பற்றிய பேட்டிVs பிறந்தநாள் கொண்டாட்டம் !!! ஒரு சிறப்பு பார்வை....

ரஜினிகாந்த் அளித்த பேட்டி :


எனது உயிரிலும் மேலான ரசிக்க பெருமக்களே பேருந்தில் நடத்துனராக இருந்த நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆயிரங்களில் ஆரம்பித்த எனது வாழ்க்கை உங்கள் அன்பினால் ஆயிரங்கள் இலட்சங்களாகின அது போதாதென்று உங்கள் அன்பு அதிகரிக்க அதிகரிக்க இலட்சங்கள் கோடிகளாகி.ஈழ தமிழர்களின் இடம்பெயர்வாலும் இன்று கோடிகள் பல்கிபெருகிவிட்டன. உங்கள் அன்பினால் சேர்த்த பணத்தில் எனது முதல் மகளுக்கு சீதனம் மட்டும் 100 கோடியும் அடுத்த மகளுக்கு அதை விட அதிகமாகவும் கொடுத்து கல்யாணமும் செய்து வைத்தேன் . அதை விட இன்னும் பல கோடிகள் சேர்த்து வைத்துள்ளேன். எந்திரனில் மட்டுமே எனது வருமானம் உங்களுக்கே தெரியும். எத்தனை கோடிகள் என்று. 

எனது பல்லாயிரம் ரசிகர்கள் நான் உடல் நலம் இல்லாமல் இருந்த போது மண்சோறு சாப்பிடுவது , தீச்சட்டி எடுத்தது, அலகு குத்தி காவடி எடுத்தது , இப்படியாக பல வேண்டுதலை செய்ததை நான் அறிவேன். உங்கள் இந்த அன்பை நான் இதுவரை காலமும் எனது வியாபாரத்துக்கு பயன் படுத்திவிட்டேன் என்று நினைக்கும் போது மிகவும் மனது வேதனை படுகிறது. 

எனது படம் வெளியாகும் நேரங்களில் பல ரசிகர்கள் எனது பல அடி உயரமான படங்களுக்கு ஏறி மாலை போடுவதும்,பாலபிசேகம் செய்வதுவும் எனக்கு தெரிந்தும் தெரியாமல் இருந்துவிட்டேன். மேலே ஏறும் நீங்கள் விழுந்தால் உங்கள் வைத்திய செலவுக்கு கூட உங்களிடம்  பணம் இல்லை என்பதுவும் தெரியும், எனது படத்துக்கு பாலபிசேகம் செய்யும் ரசிகர்களின் வீட்டில் குடிப்பதுக்கு பால் இல்லாமல் கூட இருந்திருக்கும் அது எல்லாமே தெரிந்திருந்தும் எனது சுய நலத்துக்காக உங்களை பயன் படுத்திவிட்டேன். அதை விட கொடுமையான விடயம் என்னை பார்த்து புகை பிடிக்க பழகிப்போன சிறுவர்கள் எத்தனையோ பேர் என்று தெரிந்தும் அது எனது "ஸ்டைலுக்கு"  கிடைத்த வெற்றியாக கருதினேனே தவிர அதை படங்களில் நிறுத்தவே இல்லை நான் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது நீங்கள் பட்ட மன வேதனையை, உங்கள் புகை பழக்கம் உங்கள் ஆயுளை குறைக்கும் என்று தெரிந்தும் நான் தடுக்காமல் எவ்வளவு சுயநலத்துடன் இருந்துவிட்டேன்.

பாடல் வரிகளில் தத்துவங்களை சொல்லி சொல்லி சேர்த்த பணத்தை கோடிகணக்கில் மகள்களுக்கு சீதனமாகவும் எனது குடும்ப சுக போகத்துக்கும் செலவழித்து விட்டேன்.மற்றயவற்றை சேமிப்பிலும் வைத்து இருக்கிறேனே தவிரஉங்களை பற்றி சிந்திக்கவே இல்லை. அது மட்டும் அல்ல எனது பிறந்த மாநிலத்தில் தொழில்சாலைகளை அமைத்து என்னை உயர்த்தி அழகு பார்த்து ஏணியை போல இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுக்காமல் துரோகம் செய்தேன். இப்படியாக எனது மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்லாமல் நான் உடல் நலம் இல்லாமல் வைத்திய சாலையில் இருக்கும் போது மிகவும் பயந்துவிட்டேன் எனது உயிர் போய்விடுமோ என்று பல சிந்தனைகள் வந்தன வாழ்க்கையே அப்போதுதான் புரிந்தது அது மட்டும் அல்லாமல் அப்போதுதான் உங்கள் அன்பு எனக்கு முழுசாக புரிய தொடங்கியது எனக்காக இவளவு செய்யும் உங்களுக்கு எதுவுமே செய்ததில்லையே என்று மனம் ஏங்கியது. அதை நான் வைத்திய சாலையில் இருந்து வெளியிட்ட அறிவிப்பில் தெரிந்து இருபீர்கள். என்னடா சுடலை ஞானம் போல வைத்திய சாலையில் இருக்கும் போது சொன்னானே உடல் நிலை சரியாகியதும் கொடுத்த பொருளையும் கொடுத்த வாக்கையும் திருப்பி வாங்கினதே இல்லை என்று வசனம் பேசியவன் உடல் நிலை சரியாகியதும் எல்லாவற்றையும் தூக்கி போட்டுட்டு அடுத்த படத்தில நடிக்க போய்ட்டானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியாமல் இல்லை. இந்த வாக்கும் அரசியலுக்கு வருவானா, மாட்டானா என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருப்பதை போல நினைத்திருப்பதுவும் எனக்கு புரியாமல் இல்லை.

ஒருவனுக்கு அதுவும் எனக்கு என் மனைவிக்கும் காலாம் பூராவும் சுகபோகமாக வாழ எதனை கோடி வேண்டும் அனால் என்னிடம் எத்தனை கோடிகள், சொத்துகள் இருகின்றன இவற்றை எல்லாம் நான் சேர்த்து வைத்து இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனை தமிழர்கள் பசியால் துடித்துக்கொண்டு இருப்பார்கள் என்பதுவும் எனக்கு தெரியாமல் இல்லை. நானெல்லாம் என்ன தலைவன் என்னை அரசியலுக்கு வருவேனா மாட்டேன என்று எல்லாம் எதிர்பார்கிறார்கள் இத்தனை ஏழைகள் பசியால் துடிக்கும் போது பல கொடிகளை ஒதுக்கி வைத்து இருக்கிறேனே என் பணம் என்ற சுய நலத்தில் தானே ? என்னை எல்லாம் எந்த நம்பிக்கையில் அரசியலுக்கு அழைக்கிறார்கள்? என் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவன் நான் அரசாங்க பணத்தில் உதவி செய்வேன் என்று நம்பி வர சொல்கிறார்களோ!!! இப்படியான பாமர முட்டாள் ரசிகர்களை இப்படி இத்தனை காலமும் ஏமாற்றியது எனக்கு மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

என்னிடம் இருக்கும் பணத்தில் எத்தனை ஏழைகளின் குடும்பத்துக்கு கடன் உதவி செய்யலாம், தொழில் செய்ய உதவி செய்யலாம் அது மட்டும் அல்ல ஒரு படம் நடித்தால் குறைந்தது 25 கோடி கிடைக்கும் ஒருவனுக்கு 2 லட்சங்கள் படி கொடுத்தாலே ஒரு படத்தின் மூலம் 1250 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியும் என்னால் மட்டுமே இப்படி என்றால் மொத்த நடிகர்களும் சேர்ந்தால்? நடிகர்கள் மட்டும் அல்ல என்னை போன்ற பணக்காரர்கள் எல்லோரும் சேர்ந்தால் தமிழ் நாட்டையே  மாற்றிவிட முடியாதா? எனது இரு மகள்களுக்கு மட்டும் கொடுத்த சீதன பணத்தில் 12 ,500 குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுத்து இருக்கலாம். இதை எல்லாம் சிந்தித்து பார்க்கும் போது நானெல்லாம் எவ்வளவு சுயநலவாதி என என் மனச்சாட்சியே என்னை பார்த்து துப்புகிறது.

முத்து படத்தில் சொத்துகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது போலவும், சிவாஜி படத்தில் மற்றவர்களுக்காக வாழ்வது போல,இப்படி சமுக சிந்தனையாளன் போல  நடித்து சேர்த்த காசை நான் மட்டும் எனது குடும்பம் மட்டும் அனுபவிக்கிறோம். ஒரு மனிதாபிமானமுள்ள மனிதனாக நியவாழ்விலும் நடிப்பது வேதனையளிக்கிறது.நானும் எவ்வளவு நாளாத்தான் நல்லவனாவே நடிக்கிறது?????? 

இன்று புதுவருட நாளிலே எனது மனச்சாட்சி விளித்து கொண்டது, எனது மகள்கள் திறமையானவர்கள் சொந்த காலில் நிக்கும் தகுதி தன்னம்பிக்கை உள்ளவர்கள் அது மட்டும் அல்ல அவர்கள்  கணவர்கள் இருவரும்  நிறையவே சம்பாதிக்கிறார்கள் அத்துடன் நான் கொடுத்த பல கோடிகள் அவர்களிடம் இருகின்றன எனவே அவர்களை பற்றி இனி எனக்கு கவலை இல்லை. என்னுடைய கவலை எல்லாம் என்மேல் ஒப்பற்ற பாசம் வைத்து இருக்கும் உங்களை பற்றியதே!!!அதனால் தான் இந்த முடிவு எனது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை எடுத்துகொண்டு மீதமாக உள்ள பணத்தை உங்களுக்காக பயன் படுத்த போகிறேன்.

இப்படிக்கு உங்கள் தொண்டனாக இந்த நிமிடம் முதல்.
ரஜினிகாந்த்.




ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்...

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 63வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்த ஆண்டு 12-12-12 என்ற அரிய நாளில் பிறந்த நாள் வந்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ரஜினியின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடினர்.

நீரில் மிதந்து ரசிகர் தியானம்
தேனி அருகே வீரபாண்டியில், நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழவும், உலக அமைதி வேண்டியும், புதன்கிழமை 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு ரஜினி ரசிகர் தியானம் செய்தார்.
கோம்பை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் விஜயன் (50). இதே ஊரில் உணவகம் நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, இவர் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், கண்ணீஸ்வரமுடையார் கோயில் ஆகியவற்றில் வழிபாடு நடத்தினார். பின்னர், வீரபாண்டியில் உள்ள கிணற்றில் கைகளைக் கூப்பி நீரில் மிதந்தவாறு 3 மணி நேரம் வரை தியானத்தில் ஈடுபட்டார்.
ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழவும், உலக அமைதி வேண்டியும் தண்ணீரில் மிதந்தவாறு தியானம் செய்ததாகவும், இதுவரை ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காத எனக்கு, விரைவில் அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும், இறைவனை வேண்டிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.


ரஜினி பிறந்த நாள்: மாணவர்களுக்கு உணவு
பாளையங்கோட்டையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் புனித கபரியேல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது.
மன்ற மாவட்டத் தலைவர் எஸ். பானுசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எஸ். பகவதிராஜன் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. சக்திசுப்பிரமணியன், ஆசிரியை எஸ். ஈஸ்வரி, சூரியா கணேசன், வீரமணிகண்டன், அம்பலவாணன், மணி, தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டியில் ரஜினி பிறந்த நாள் விழா
ஆண்டிபட்டி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில், ரஜினியின் 63-வது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, ஆண்டிபட்டி பாலவிநாயகர் திருக்கோயில், மீனாட்சியம்மன் திருக்கோயில் மற்றும் சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
விழாவுக்கு, ஆண்டிபட்டி ரஜினிகாந்த் மன்ற நகரச் செயலர் ராஜஹரிகாந்த் தலைமை வகித்தார். நகரத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில், ரஜினிகாந்த பூரண நலம் வேண்டி பிரார்த்தனை மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், நகரப் பொருளாளர் பிருந்தாவனம், சுரேஷ், தெய்வேந்திரன், ரஜினி பிரபாகர், குருமூர்த்தி, காசிராஜன், கவுன்சிலர் முருகன், படையப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டுகட்டணமில்லா பேருந்து இயக்கம்

பழனியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர் மன்றங்கள் சார்பில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட்டது.
வித்தியாசமான நாளான 12-12-12 அன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். இதையொட்டி, பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்த தர்மத்தின் தலைவன் ரஜினி ரசிகர் மன்றம், மாவீரன் ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் பாயும்புலி ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் சார்பில், கட்டணமில்லா பேருந்து இயக்கப்பட்டது.
பழனியில் இருந்து பாலசமுத்திரம் செல்லும் மினி பஸ்ûஸ ஒப்பந்த முறையில் வாடகைக்கு எடுத்த ரசிகர் மன்றத்தினர், ரஜினியின் பிறந்தநாளான புதன்கிழமை முழுவதும் அந்த பஸ்ஸில் எங்கு ஏறி, இறங்கினாலும் கட்டணம் இல்லை என அறிவித்திருந்தனர்.
இதன்மூலம், ஏராளமான கூலித் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெற்றனர்.
பாலசமுத்திரத்தில் கேக் வெட்டி பஸ் இயக்கத்தை, மாவட்டத் தலைமை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பாணி, பழனி நகரத் தலைவர் முருகானந்தம், பொறுப்பாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
மேலும், முரட்டுக்காளை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மலைக்கோயிலில் ரஜினிகாந்தின் 63-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
தேவகோட்டை மலைக்கோயிலில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவி லில் சுவாமிக்கு ரஜினி பெயரில் விஷேச அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகர்மன்ற துணைத் தலைவர் சுந்தரலிங்கம், நகர் செயலாளர் படையப்பா ரவி, இணைச் செயலாளர் ரஜினி மகேஷ், அமைப்பாளர் சரவணன், பொறுப்பாளர் மலைச்சாமி, ரஜினிகுமார், கணேசன், அழகுமளிகைகண்ணன், மதியழகன், ராமநாதன், விஜயேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாள் திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 63-வது பிறந்த நாளையொட்டி, திருச்சியில் அவரது ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தும் புதன்கிழமை கொண்டாடினர்.
ரஜினிகாந்த்தின் இந்த பிறந்தநாள் 12.12.12 என்ற நாளில் வந்துள்ளதை சிறப்பு நிகழ்வாகக் கருதி ரசிகர்கள் ஆராவாரத்துடன் இந்த விழாவைக் கொண்டாடினர்.
ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், திருச்சி புத்தூரில் உள்ள பார்வையற்ற மகளிருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
ரஜினி பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த சிவாஜி திரைப்படம் 3டி தொழில்நுட்பத்துடன் புதன்கிழமை திரையிடப்பட்டது.
திருச்சி சோனா திரையரங்கில் இத்திரைப்படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை மாநகர்முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.
ராசிபுரத்தில் ரஜினி காந்த் பிறந்த நாள் விழா
ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 நாளன்று இடம் பெற்றதால், அவரது ரசிகர்கள் இதை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ராசிபுரம் ரஜினி காந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் ரஜினியின் 30 அடி கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து, திரளான பெண்கள் பங்கேற்ற 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவியில் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தினர்.

நமக்கு விழிப்புணர்வு வேண்டும் !! விழித்துக்கொள் தமிழா!! இன்னுமாய் தூங்குகிறாய் ....
ஒரு நடிகனை நடிகன் என்ற வட்டத்தை விட்டு வெளியேயும் அதுபோலவே என நம்பும் ஒரு ரசிகனின் கற்பனையாக இந்த பதிவை இங்கு பதிகிறேன். ஒரு நடிகன் நடிகனாக இருந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வது அவசியம் அற்றது அது அவ ரது சொந்த பிரச்சனை. விமர்சனம் செய்வது தவறு. ஒரு நடிகனை அந்த துறையை விட்டு அரசியல், நாடு, தலைவன் என அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வத்துக்கு முன்பு அதுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை பார்க்கவேண்டும். போது தொண்டு போது வாழ்கையின் சமுதாய அக்கறை படத்துக்கு வெளியேயும் இருக்கிறதா என்று சிந்திக்கவேண்டும். இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியலில் வேறு எந்த நாடிலும் இல்லாத கொடுமை இருக்கிறது எல்லா தேர்தலிலும் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தெரிவு செய்து வாக்களிப்பார்கள். தமிழ் நாட்டில் மட்டும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை தெரிவு செய்துவிட்டு பின் போடுகிறார்கள் ஏனெனில் யாருக்கு போட்டாலும் ஒன்றுதான் அப்போதைய நிலவரப்படி யார் அதிக கேட்டவர்கள் என பார்த்து அவர்களுக்கு போட கூடாது   என நினைத்து மற்றவர்களுக்கு போடுகிறார்கள்.

இந்த பதிவை பார்த்து எனக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு கோபம் என்று நினைக்கவேண்டாம் ஒரு ரசிகனாக ரஜினி படத்தை நானும் ரசிப்பேன். என்றும் வெறியனாகியதில்லை. இது ஒரு ஆதங்கம் ரஜனியை ஒரு சிறு உதாரணமாக எடுத்தேன் இப்படியான பல பணக்காரர்கள் நாளும் எங்களை சுரண்டுகிறார்கள் சினிமா காரர்களாக மட்டும் அல்ல அரசியல் வாதியாக, முதலாளியாக இப்படியானவர்களுக்கு மனிதாபிமானமே இருப்பதில்லை. வெளியில்  தேனொழுக பேசி பேசியே அவர்கள் குடும்பம் பல தலைமுறை சுகபோகமாக வாழ வழி செய்து விடுவார்கள் இது தெரியாமல் நாமஎல்லாம்  அவர்கள் சொல்லும்   வார்த்தையை  நம்பி அவர்கள் பின்னால் சென்று எங்கள் வாழ்கையை தொலைக்கிறோம்.எங்கள் அறியாமைதான் அவர்கள் மூலதனம்.

மக்களே சிந்தியுங்கள். உங்களால் தான் சமுதாய சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வரவே பயப்பிடுகிறார்கள்.

இந்த சினிமா, அரசியல் இதை ஒரு எல்லையுடனே வைத்து கொள்ளுங்கள் இல்லை உங்கள் வாழ்கையை அழித்துவிடும்.



உங்கள் மு.அஜ்மல் கான்.

Tuesday 25 December 2012

Best collection of Christmas greetings & Merry Christmas!!


Christmas is the biggest festival for mankind. Every year December millions of people celebrate the birthday of Jesus Christ as Christmas .






What Is Christmas


Christmas is also sometimes known as Xmas. Some people don't think it's correct to call Christmas 'Xmas' as that takes the 'Christ' (Jesus) out of Christmas. (As Christmas comes from Christ-Mass, the Church service that celebrated the birth of Jesus.)
But that is not quite right! In the Greek language and alphabet, the letter that looks like an X is the Greek letter chi / Χ (pronounced 'kye' - it rhymes with 'eye') which is the first letter of the Greek word for Christ, Christos.
The early church used the first two letters of Christos in the Greek alphabet 'chi' and 'rho' to create a monogram (symbol) to represent the name of Jesus. This looks like an X with a small p on the top: ☧
The symbol of a fish is sometimes used by Christians (you might see a fish sticker on a car or someone wearing a little fish badge). This comes from the time when the first Christians had to meet in secret, as the Romans wanted to kill them (before Emperor Constantine became a Christian). Jesus had said that he wanted to make his followers 'Fishers of Men', so people started to use that symbol.
When two Christians met, one person drew half a basic fish shape (often using their foot in the dust on the ground) and the other person drew the other half of the fish. The Greek word for fish is 'Ikthus' or 'Ichthys'. There are five Greek letters in the word. It can also make up a sentence of Christian beliefs 'Ie-sous Christos Theou Huios So-te-r' which in English means "Jesus Christ, Son of God, Saviour". The second letter of these five letter is X or Christos!
So Xmas can also mean Christmas; but it should also be pronounced 'Christmas' rather than 'ex-mas'!


Why is Christmas Day on the 25th December?

No one knows the real birthday of Jesus! No date is given in the Bible, so why do we celebrate it on the 25th December? The early Christians certainly had many arguments as to when it should be celebrated! Also, the birth of Jesus probably didn't happen in the year 1AD but slightly earlier, somewhere between 2BC and 7BC (there isn't a 0AD - the years go from 1BC to 1AD!).
Calendar showing 25th December
The first recorded date of Christmas being celebrated on December 25th was in 336AD, during the time of the Roman Emperor Constantine (he was the first Christian Roman Emperor). A few years later, Pope Julius I officially declared that the birth of Jesus would be celebrated on the 25th December.
There are many different traditions and theories as to why Christmas is celebrated on December 25th. A very early Christian tradition said that the day when Mary was told that she would have a very special baby, Jesus (called the Annunciation) was on March 25th - and it's still celebrated today on the 25th March. Nine months after the 25th March is the 25th December! March 25th was also the day some early Christians thought the world had been made, and also the day that Jesus died on when he was an adult.
December 25th might have also been chosen because the Winter Solstice and the ancient pagan Roman midwinter festivals called 'Saturnalia' and 'Dies Natalis Solis Invicti' took place in December around this date - so it was a time when people already celebrated things.
The Winter Solstice is the day where there is the shortest time between the sun rising and the sun setting. It happens on December 21st or 22nd. To pagans this meant that the winter was over and spring was coming and they had a festival to celebrate it and worshipped the sun for winning over the darkness of winter. In Scandinavia, and some other parts of northern Europe, the Winter Solstice is known as Yule and is where we get Yule Logsfrom. In Eastern europe the mid-winter festival is called Koleda.
The Roman Festival of Saturnalia took place between December 17th and 23rd and honoured the Roman god Saturn. Dies Natalis Solis Invicti means 'birthday of the unconquered sun' and was held on December 25th (when the Romans thought the Winter Solstice took place) and was the 'birthday' of the Pagan Sun god Mithra. In the pagan religion of Mithraism, the holy day was Sunday and is where get that word from!
Early Christians might have given this festival a new meaning - to celebrate the birth of the Son of God 'the unconquered Son'! (In the Bible a prophesy about the Jewish savior, who Christians believe is Jesus, is called 'Sun of Righteousness'.)
The Jewish festival of Lights, Hanukkah starts on the 25th of Kislev (the month in the Jewish calendar that occurs at about the same time as December). Hanukkah celebrates when the Jewish people were able to re-dedicate and worship in their Temple, in Jerusalem, again following many years of not being allowed to practice their religion.
Jesus was a Jew, so this could be another reason that helped the early Church choose December the 25th for the date of Christmas!
Christmas had also been celebrated by the early Church on January 6th, when they also celebrated the Epiphany (which means the revelation that Jesus was God's son) and the Baptism of Jesus. Now the Epiphany mainly celebrates the visit of the Wise Men to the baby Jesus, but back then it celebrated both things! Jesus's Baptism was originally seen as more important than his birth, as this was when he started his ministry. But soon people wanted a separate day to celebrate his birth.
Most of the world uses the 'Gregorian Calendar' implemented by Pope Gregory XIII in 1582. Before that the 'Roman' or Julian Calendar was used (named after Julius Caesar). The Gregorian calendar is more accurate that the Roman calendar which had too many days in a year! When the switch was made 10 days were lost, so that the day that followed the 4th October 1582 was 15th October 1582. In the UK the change of calendars was made in 1752. The day after 2nd September 1752 was 14th September 1752.
Many Orthodox and Coptic Churches still use the Julian Calendar and so celebrate Christmas on the 7th January. And the Armenian Church celebrates it on the 6th January! In some part of the UK, January 6th is still called 'Old Christmas' as this would have been the day that Christmas would have celebrated on, if the calendar hadn't been changed. Some people didn't want to use the new calendar as they thought it 'cheated' them out of 11 days!
Christians believe that Jesus is the light of the world, so the early Christians thought that this was the right time to celebrate the birth of Jesus. They also took over some of the customs from the Winter Solstice and gave them Christian meanings, like Holly, Mistletoe and even Christmas Carols!
St Augustine was the person who really started Christmas in the UK by introducing Christianity in the 6th century. He came from countries that used the Roman Calendar, so western countries celebrate Christmas on the 25th December. Then people from Britain and Western Europe took Christmas on the 25th December all over the world!
The name 'Christmas' comes from the Mass of Christ (or Jesus). A Mass service (which is sometimes called Communion or Eucharist) is where Christians remember that Jesus died for us and then came back to life. The 'Christ-Mass' service was the only one that was allowed to take place after sunset (and before sunrise the next day), so people had it at Midnight! So we get the name Christ-Mass, shortened to Christmas.

So when was Jesus Born?

There's a strong and practical reason why Jesus might not have been born in the winter, but in the spring or the autumn! It can get very cold in the winter and it's unlikely that the shepherds would have been keeping sheep out on the hills (as those hills can get quite a lot of snow sometimes!).
During the spring (in March or April) there's a Jewish festival called 'Passover'. This festival remembers when the Jews had escaped from slavery in Egypt about 1500 years before Jesus was born. Lots of lambs would have been needed during the Passover Festival, to be sacrificed in the Temple in Jerusalem. Jews from all over the Roman Empire travelled to Jerusalem for the Passover Festival, so it would have been a good time for the Romans to take a census. Mary and Joseph went to Bethlehem for the census (Bethlehem is about six miles from Jerusalem).
In the autumn (in September or October) there's the Jewish festival of 'Sukkot' or 'The Feast of Tabernacles'. It's the festival that's mentioned the most times in the Bible! It was when the Jewish people remember that they depended on God for all they had after they had escaped from Egypt and spent 40 years in the desert. It also celebrated the end of the harvest. During the festival people lived outside in temporary shelters (the word 'tabernacle' come from a latin word meaning 'booth' or 'hut'). Many people who have studied the Bible, think that Sukkot would be a likely time for the birth of Jesus as it might fit with the description of there being 'no room in the inn'. It also would have been a good time to take the Roman Census as many Jews went to Jerusalem for the festival and they would have brought their own tents/shelters with them!
The possibilities for the Star of Bethlehem seems to point either spring or autumn.
So whenever you celebrate Christmas, remember that you're celebrating a real event that happened about 2000 years ago, that God sent his Son into the world as a Christmas present for everyone!
As well as Christmas and the solstice, there are some other festivals that are held in late December. Hanukkah is celebrated by Jews; and the festival of Kwanzaa is celebrated by some Africans and African Americans takes place from December 26th to January 1st.
Find out why Christmas is sometimes called Xmas!

Christmas ornaments 
Christians worldwide make a christmas tree on the occasion of Christmas. They decorate christmas tree with various Christmas ornaments made of glass, metal, wood or ceramics. Same Christmas Ornaments can be used year after year at every christmas.

Here are the photos of Christmas Ornaments used to decorate Christmas tree.

Christmas Ornaments 1



Christmas Ornaments 2



Christmas Ornaments 3


Christmas Ornaments 4



Christmas Ornaments 5



Christmas Ornaments 6


Christmas Ornaments 7



Christmas Tree
Christmas tree is bought and decorated by crores of Christians around the world. Here are the photos of Christmas tree.



Christmas Tree Photo with red santa cap



Christmas Tree Lighting



Beautiful Lighting Christmas Tree at Night



Green Christmas Tree



Nice Christmas Tree




Christmas Tree Photo



Green Christmas Tree Photo



Christmas Tree Photo


Collection of Christmas greetings.....

Free Christmas cards 1 : Nice Colourful Christmas greetings Card
Greeting card for Orkut Scrap


Free Christmas cards 1 : Nice Artistic Bell Christmas greetings Card
Greeting card for Orkut Scrap


Free Christmas cards 2 : Nice Colourful Christmas greetings Card
Greeting card for Orkut Scrap A Merry Christmas and a Happy New Year To You

Free Christmas cards 3 : Nice Decorated Christmas greetings Card





Merry Christmas Invitation!

Heartfelt Christmas!







Love 'N Joy On Christmas...


The Joy That Christmas Brings...










Christmas Lights!






Nation may rise and fall,
Kings may rule and fade,
But Christmas will stay for ever until he will returns
Because it is the birthday of Most Influential of Prophet,
Merry Christmas and seasons greetings.






Here’s sharing you the best collection of Christmas greetings to send to your family and loved ones this coming Christmas 2012.

By M.Ajmal Khan.