Monday 30 January 2012

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் : பைபிள் இறை வேதமா ?

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும். மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாகிர் நாயக் மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparitive study ) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, சாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர்.

சாகிர் நாயகின் அமைப்பின் பிரிவுகளில் ஒன்றான IREF அமைப்பின் பொறுப்பாளர் ஒருவருடன் திரு. ஜெர்ரி தாமஸ் விவாதம் ஒன்றையும் நடத்தியுள்ளார். இந்த வகையில், தாங்கள் தான் சரியான கொள்கையை கொண்டுள்ளோம் என்றும், இஸ்லாமியர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிஞராக அவர்கள் எண்ணி வைத்துள்ள சாகிர் நாயகிடமே சவால் விடுத்துள்ளோம் என்றும் இறுமாப்புடன் பிரசாரம் செய்து வந்துள்ளனர் இந்த கூட்டத்தினர்.
கேரளா மாநிலத்தில், அதிகமான திருசபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்கிற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம் , குர் ஆனா பைபிளா என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.

அந்த அடிப்படையில் , பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் வருகிற 28 , 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கில புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாத்தினர், அதற்கும் தயாரானார்கள்.


விவாதத்தை குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம் - இந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்ககூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

என்ன காரணதால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?
மனித கையாடல் பல, பைபிளில் இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?
இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?


என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றார்ப்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.


ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது, அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவ பார்வையாளர்களையும் கூட வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தை கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தை போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்த பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடைய செய்தது என்பதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது !!

சரி, பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்த திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள்.
எப்படி?

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே, இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே, நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே, உங்கள் இறைவன் இவ்வளவு மட்டரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது.

இவைகளுக்கு முறையான பதில்களை சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், அதற்க்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர் ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர் ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காம களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைபழங்கலாக ஒப்பீடு செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்கு பதில் சொல்லி உங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர் ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே, விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்துக்கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படி தான் பைபிளிலும் ஆபாசம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?

இதை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்து பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர் ஆனிலும் தானே அடிமைப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளது என்று அடுத்து சொல்லலாயினர். பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தி உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலை சொல்லாமல், குர் ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம். இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்பதை தனி தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர் ஆனை குறித்து கேளுங்கள், இப்போது பைபிளுக்கு பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.

இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த சகோ. பிஜே, இதற்குரிய மூல ஆதாரங்களை தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.

ஹதீஸ் என்று எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.

அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தல் இல்லை. விடாமல், சகோ. பிஜே, அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை - பொய் சொல்கிறார்கள் என்றனர்.
பின்னர், இல்லை, நாங்கள் onlinepj தளத்தில் பார்த்தோம் என்றனர். onlinepj தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தை திறப்பது முடியாது , ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சகோ. பிஜே.

அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதை தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்க கடமைப்பட்டவர்கள், அதை செய்யாமல், உங்கள் குர் ஆனில் தவ்ராத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறதே, இன்ஜீலை குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே, அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (ஜீசுஸ்) கொடுத்ததாக சொல்கிறானே, அப்படியானால், இந்த கால பைபிளில் மனித கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது என்று கேள்வி வைத்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை ! பைபிள் இறை வேதம் தான் என்பதை பைபிளை கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர் ஆனை கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ஒரு போடு போட்டார் சகோ. பிஜே.
மேலும், குர் ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கினார்.

இது உங்கள் சுயக்கருத்து, இதற்க்கான ஆதாரத்தை தர முடியுமா என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, எந்த குர் ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர் ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்களையும் சொல்லபட்டிருக்கிறது என்றார்.
ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர் ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தார் சகோ. பிஜே.
இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்த கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பை திசை திருப்பி, சகோ, பிஜே எழுதிய இது தான் பைபிள் நூலில் அது தவறு, இது தவறு என்று சம்மந்தமில்லாமல் பேச துவங்கினர்.

முதல் நாளின் இறுதி அமர்வில், சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்து இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்ப்ரதிகள் எவ்வாற இருந்தன, ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அது எவ்வாறு மனித கையாடல்கள் மூலம் திருத்தப்பட்டன, எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூல பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர்க்கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த ஆழமான ஆதாரங்களை கண்டு குலை நடுங்க துவங்கினர் என்பது, விவாதத்தை கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது .

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும், உங்களை விட எல்லாம் மிகப்பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.

சரி, மறுப்பு நூல்களை தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களில் இருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

உங்கள் சுய சிந்தனையை உபயோகித்து தான் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை , குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் ?, உங்களிடம் மறுப்பு இல்லை ! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாக சொல்கிறேர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டியிருக்கிரோமே, அந்த குற்றச்சாட்டுகள் இல்லை ! அதனால் தான் எங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதில் இல்லை, என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், சரி, பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை, நானே same side goal போட்டு, உங்களுக்கு பாயின்ட் எடுத்து தருகிறேன் என்று துவங்கினார் சகோ. பிஜே.

என்ன வித்தியாசமாக சொல்கிறாரே என்று பார்த்தால்,

பைபிளில், எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் பூ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷயத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்த கொள்வார், என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர முடியாது - இதோ இந்த பேப்பர் வெயிட் - இதை பூ என்று ஊதி தள்ளி விடுங்கள், நான் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்த சகோ. பிஜே, இதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள் என்றார்.

இந்நேரம் வயிற்ரை கலக்கியிருக்கும் அவர்களுக்கு. ஆத்திரத்தில் எடுத்து குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர் ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ , எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே , நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டு காட்டுங்கள் என்று திருப்பி கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை ! இதை அடுத்த வார தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். சரி, இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்சனை இல்லை என்றனர் !

இதற்கு பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்து பார்க்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதை பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்த சகோ. பிஜே, இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களை தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீஎங்கள் திரித்துள்ளீர்களா என்பதை தான் பரீட்சிக்கிறோம் என்று கூறினார்.
அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்து பார்க்க கூடாது என்று ஏசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்த பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சகோ. பிஜே சுட்டிக்காட்டினார்.
அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே, அந்த பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத்தான் வேண்டும், பைபிளும் அருந்த தான் சொல்கிறது என்று ஒரே போடாக போட்டார் பிஜே.

வெலெவெலெத்துப் போன பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.. இறுதியாக பேசிய சகோ. பிஜே, தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தை கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்க்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது என்றார்.
பைபிளில் உள்ள ஆபாசங்கள் என்றும் முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்றும் எத்தனை விஷயங்களை அள்ளிப்போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் உங்கள் குர் ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிரீர்களே, குர் ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்ப்பதை போன்று அன்று நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களை நாங்கள் தருவோம் என்று கூறி முடித்தார்.

ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கிற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்கு பெற்றுதந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் !!

நன்றி : http://www.jesusinvites.com/content/content.aspx?i=9pDYdvZ9MnM=

டாக்டர் அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை!! ஒரு சிறப்பு பார்வை ..

ப்துல் காலம் என்பவர் மிகப் பெரிய ஆளுமை,எத்தனையோ ஏழை இளைஞர்களுக்கு அவர் ஆதர்சனம்.இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த  அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் எனும் பெயருடைய ஒரு ஏழைச் சிறுவன்,இந்தியாவின் அணு சக்தித் துறைக்கே தந்தை எனும் நிலையை அடைந்தான்  என்றால் அது incredible ,அப்துல் கலாம் தனது இன்றைய நிலையை அடைவதற்கு அவர் கடந்த நெருப்பாறுகள் அதிகம் .உண்மையில் அப்துல் கலாம் ஒரு ஜீனியஸ் ,எத்தனையோ கோடிக் கணக்கான இளைஞர்களின் ரோல் மாடல்.சில நாட்களுக்கு முன்பு I am Kalam எனும் ஒரு ஹிந்தி மூவி பார்த்தேன்,ராஜஸ்தான் பாலை வனத்தில் உள்ள ஒரு சிறிய தேநீர் கடையில் வேலை செய்யும் ஒரு ஏழைச் சிறுவன்  அப்துல் காலமைப் பற்றி அறிந்து அவர் போல ஆக வேண்டும் என நினைப்பது  தான் படத்தின் ஒன் லைன்,நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று,அந்தப் படத்தில் வரும் சிறுவனைப் போல எத்தனையோ   இளைஞர்களை நான் பார்த்துள்ளேன். எனது ஒன்று விட்ட தம்பியின் நோட் புக்கை நான் ஒரு முறை பார்த்த போது அதில் அப்துல் கலாமின் சுய சரிதை ஆன அக்கினிச் சிறகுகளில் தனக்கு பிடித்த சுய ஆளுமை வசனங்களை குறித்து வைத்திருந்தான் அப்போது அவன் ஏழாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான் , எனக்கும் மிக மிகப் பிடித்த முதல் ஜந்து புத்தகங்களில் அக்கினிச் சிறகுகளும் ஒன்று . பெங்களூரில் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தருணுக்கு அப்துல் கலாம் தான் ஆதர்சனம்,வெட வெடக்கும் பெங்களுர் குளிரில் ஒவ்வொரு நாளும் காலை நான்கு மணிக்கு எழுந்து இருப்பான் கேட்டால் அப்துல் கலாம் நான்கு மணிக்கு எழுந்து இருப்பார் எனக் கூறுவான்,இந்தியாவின் வேறு ஒரு மூலையில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த எனது நண்பன் தருணுக்கு இந்தியாவின் இன்னொரு மூலையில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் ஆதர்சனம் என்றால் அப்துல் கலாம் எனும் மேதையைப் பற்றி நான் வார்த்தைகளால் விளங்கப்படுத்த முடியாது,அப்துல் கலாம் உண்மையில் ஒரு மாமனிதர் [அந்த மாமனிதர் அல்ல], அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை எத்தனையோ இளைஞர்களின் சிந்தனைப் போக்கை மாற்றி இருக்கும் ஆராவது ஒருத்தனாவது அப்துல் கலாம் போல வர வேண்டும் என சபதம் பூண்டு இருப்பான்,அவ்வாறு  சபதம்  பூண்டு இருந்தால் மிக மிக வரவேற்கப் பட வேண்டிய விஜயம் ,அப்துல் கலாம் ஏன் புலிகள் ஆண்ட போது வர வில்லை என சிலர் லாஜிக் கேட்கிறார்கள் ,இந்தியாவின் பிரதமரைக் கொன்றவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்துக்கு அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் வர முடியாது என்பது நாலாம் கிளாஸ் படிச்சவனுக்கும் தெரியும் [இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த படுகொலைகள் எவ்வளவு தூரம் கண்டிக்கப்பட வேண்டியதோ அதே அளவுக்கு கண்டிக்கப்பட வேண்டியது ராஜீவ் காந்தியின் படு கொலை ],இதே போல ஒரு வாதம் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்ற போதும் பரவியது , என்னுடன் பேசிய ஒரு அன்பர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் மேடையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து சொல்லி இருக்க வேண்டும் என க் கூறினார் , அப்படி கூறாத ஏ ஆர் ரகுமான் துரோகி எனவும் பொங்கி இருந்தார் , வெளி உலகத்தில் அதுவும் வெளி மேடையில் விடுதலைப் புலிகளை ஆதரித்து ஒருவனும் கருத்து சொல்ல முடியாது என்கிற அளவிற்கு தான்  விடுதலைப் புலிகளைப் பற்றியும் எமது போராட்டம் சார்ந்த உண்மையான நீதிகளையும் நாம் மிக கேவலமான முறையில் தான் வெளி உலகத்துக்கு கொண்டு சென்று உள்ளோம் ,எமது போராட்டம் தோற்றுப் போக மிக மிகப் பிரதான காரணமும் அது தான் ..

கூடங்குளம் அணு உலைக்கு அப்துல் கலாம் ஆதரவு தெரிவித்து இருந்தார் ,ஆகவே அப்துல் கலாம் ஒரு துரோகி என ஒரு அன்பர் எனக்கு கூறினார் ,மேலும் அப்துல் கலாம் காங்கிரஸின் அஜன்டாவிற்கு ஏற்ப செயற்படும் இத்தாலி அன்னையின் அடிவருடி எனவும் என்னிடம் கொந்தளித்து இருந்தார் ,அப்துல் கலாம் ஏதோ காங்கிரஸ் கேட்டுக் கொண்டதுக்கு ஏற்ப நேற்று திடீர் என முளைத்து அணுசக்தி மின்சாரத்தை ஆதரிக்கிறார் என கூறுவது அடி முட்டாள்  தனம் ,அப்துல் கலாமை சரியாக பின் பற்றுபவர்களுக்கு தெரியும் அப்துல் கலாம் எத்தனை ஆண்டுகளாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் என்று , ஒரு அணு வி ஞ்ஞனி  அணு உலையை எதிர்த்தால் தான் அது அதிசயம் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை சொல்வார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாக்கு சென்ற சிலர் இந்தியாவில் மாருதிக் காரைப்  பார்த்தவுடன் தங்களுக்குள் ஆச்சரியப்பட்டார்களாம் அட அட டே ..........இந்தியாவிலும் மாருதிக் கார் இருக்கு என்ன ...........? ,

ஏறத் தாள இதைப் போலத் தான் இருக்கிறது,அணு மின் விவகாரத்தில் அப்துல் கலாமை துரோகி என்பவர்களின் நிலையும், அப்துல் கலாம் இன்று நேற்று அல்ல ஆண்டு ஆண்டு காலமாக அணு சக்தியை ஆதரித்து வருகிறார் , நான்  பெர்சனலாக எனது அறிவுக்கு ஏற்ற படி அணு மின்சாரத்தை எதிர்கிறேன் [அணு சக்தி சம்பந்தமான எனது அறிவு பூச்சியம் என்பது வேறு விடயம்]
அணு சக்தி இந்தியர்களின் பிரச்னை அதை விடுத்து எமது மக்களின் பிரச்சனைக்கு வருவோம் ........

அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகையை யார் எதிர்கிறார்கள் என்று பார்த்தல் அவர்களில் பெரும் பாலானவர்கள் புலம் பெயர் தமிழர்கள்,இன்னும் சிலர் இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்கள் , இந்தியாவில் உள்ள தமிழ் ஈழ ஆதரவாளர்களை விடுவோம் அவர்களுக்கு சில விடயங்கள் இந்த உலகம் அழியும் வரை விளங்காது , விளங்கப்படுத்தவும் முடியாது,அவர்களில் பெரும் பாலானவர்கள் இன்னும் சேர சோழ பாண்டிய மன்னர்  காலங்களில் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசுகின்றனர் ,அவர்களுக்கு போரின் வலி தெரியாது அவர்களில் பெரும் பாலானவர்கள் போரை விஜயின் சுறா படம் போல நினைக்கிறார்கள்,ஆனால் பெரும் பாலான  புலம் பெயர் தமிழர்களுக்கு போரின் வலி தெரியும் ஆனால் அவர்கள் அதனை இலகுவாக மறந்து விடுகிறார்கள்,இவர்கள் ஈழத்தில் இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விடுகிறார்கள் ,அவர்களின் பாஷையில் சொன்னால் கொடிய அரக்கன் மகிந்தவின் ஆட்சியில் ஈழத்தில் இன்னும் லட்சக் கணக்கான தமிழர்கள் இருகிறார்கள் , ஈழத்திற்கு யாருமே போகக் கூடாது என்றால் என்ன  சார் நியாயம் ,ஈழத்துக்கு எவனுமே போகக் கூடாது என்ற ஒருவரிடம் அப்ப யாராம்  போறது என்று கேட்டதுக்கு நாங்கள் லீவில போவம் தானே ,அது போதாதா என்றார் .

சுருங்க சொன்னால் இன்றைய ஈழத்து இளம் சந்ததியின் போர்க் குணத்தை மாற்றும் எந்த விஜயத்தையும் புலம் பெயர் சில அன்பர்கள் விரும்புவது இல்லை,அவர்களுக்கு எமது இளம் சந்ததி எப்போதும் போர்க் குணத்துடன் தான் இருக்க வேண்டும் ,போராட வேண்டும் சாக வேண்டும் தாம் வளமாக வாழ வேண்டும் , அவர்களுக்கு தமது பாக்கெட்டை  நிரப்ப ஈழத்தில் போர் அவசியம். 


நாம் ஈழ தமிழர்கள் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் முற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிப்  பார்த்து விட்டோம் உலகின் அத் தனை துயரங்களும் ஈழத்தமிழனுக்கு தெரியும் நாம் மேற்கொண்ட நீதிக்கான  போர் எமது தவறாலும் சர்வதேசத்தின் தவறாலும் படு தோல்வியில் முடிந்துள்ளது,ஆம் ஈழத்தமிழர்கள் நாம் தோற்று விட்டோம் என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,எமக்கு முன்னால் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வி தான் 

அடுத்தது என்ன..............?

போராடிப் பார்த்தாகி விட்டது,முள்ளி வாய்கால் வரை எமது மக்கள் பார்த்து விட்டனர்,இனி ஒரு போராட்டம் எந்த விதத்திலும் சாத்தியம் இல்லை என்கிற உண்மை பெரும் பாலான ஈழத்தமிழனுக்கு விளங்கிவிட்டது,ஆனால் புலம் பெயர் சில புலிப் பினா மிகளுக்கும் இந்தியாவில் உள்ள சில அன்பர்களுக்கும் விளங்க வில்லை ,மாற்றிச்  சொன்னால் அவர்களுக்கு உண்மை நிலை விளங்கினால் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகி விடும்,ஈழத்தமிழனை முதலாக கொண்டு செய்து வரும் பிஸினெஸ் எல்லாம் என்ன ஆகும்,ஆகவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ "பிரபாகரன் திரும்பி வருவார்' "தமிழர் மானம்" "வீரம்" லொட்டு லொசுக்கு என்று கண்ட மேனிக்கு அடித்து வருகிறார்கள்,சில புலம் பெயர் தமிழர்களுக்கு எமது இளம் சந்ததியின் இர த்தம் இன்னும் கேட்கிறது தாம் பாதுகாப்பாக வெளி நாடுகளில் இருந்து கொண்டு எமது அப்பாவி இளைஞர்களை சாகடித்தது   போதாது என்று அவர்கள் இன்னும் மனித உடல்களை பலியாக கேட்கிறார்கள்,வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழ் ஈழம் அடையாமல் வெளிக்கிருக்க மாட்டாதவர்கள் வெளிக்கிருக்காமல் இருக்கட்டும்,இல்லை என்று இன்னும் முக்குபவர்களை போராட தமிழ் ஈழம் அன்போடு வரவேற்கிறது.....!
ஆனால் ஈழத்தில் உள்ள இன்றைய இளம் சந்ததி உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் ,இனியொரு போராட்டம் எம்மால் சாத்தியம், இல்லை ஆனாலும் நாம் போராட வேண்டும் அதுவும் முழு மூச்சாக , முன்னயதை விட தீவிரமாக,ஆனால் வேறு விதமாக 

எவ்வாறு.........?அந்தப் போராட்டம் கல்வியால் மாத்திரம் தான் முடியும்.. 

ஈழத்தமிழன் கல்விக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் ,பொதுவாக எந்த இனத்தையும் விட ஈழத் தமிழர்களின் கல்வி அறிவு அசாதாரணம் ஆனது , எம்மில் பலர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகிறார்கள் ,அவர்களை தடுக்க வேண்டும் என சிங்கள பேரினவாத அரசு கிரிமினலாக சிந்தித்து கொண்டு வந்த தரப்படுத்தல் தான் ஈழத்தில் போரை  ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது,இன்றும் கூட உலகின் எத்தனையோ  பெரும் பதவிகளில் ஈழத்தமிழர்கள் அசால்ட்டாக இருக்கிறார்கள்,இனி நாம் எடுக்க இருக்கும் போராட்டம் அல்லது எடுக்க இருக்கும் ஆயுதம் "கல்வி"யாக இருக்க வேண்டும்.குழந்தைப் போராளிகளை , தற்கொலைப் போராளிகளை உருவாக்கியதை விடுத்து நாம் இப்போது மேதைகளை  உருவாக்க வேண்டிய நிலையில் / கட்டாயத்தில் இருக்கிறோம்.எம்மால் எமது இழந்த பெருமையை மீண்டும் பெற கல்வியால் மாத்திரம் தான் முடியும் எமது அடுத்த சந்ததி தமக்கு இருக்கும் வரலாற்றுக் கடமையை உணர்த்து கல்வியில் முழு நாட்டம் செலுத்த வேண்டும்,எமது அடுத்த சந்ததியாவது சுயமாக சிந்திக்கக் கூடிய ,பிரச்சனைகளை சரியான முறையில் எதிர்கொள்ளக் கூடிய சந்ததியாக மாற வேண்டியது அல்லது மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம் அல்லது...இனிவரப் போகும் வரலாறுகளில் "ஈழத்தமிழர்கள் எனும் ஒரு இனக் குழுமம் இலங்கையில் இருந்தார்கள்" என பதியப் படப் போவதை யாராலும் தடுக்க முடியாது"........

நான் அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயத்தை அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வின் ஒரு படியாகத்தான் பார்க்கிறேன்,அப்துல் கலாமிற்கு எமது யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த தடல் புடலான வரவேற்பை பார்க்கும் போது எமது இளம் சந்ததியின் மனம் சிறிதளவேனும் கல்வியின் பக்கமாக திரும்புகிறது என்பதை நினைக்க சந்தோசமாக உள்ளது,


மேதகு அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தின் தலை சிறந்த பாடசாலைகளில் ஒன்றான யாழ் இந்துக் கல்லூரியில் இளைஞர்கள் புடை சூழ வழங்கப்பட்ட தடல் புடல் வரவேற்பின் சிறு படத் தொகுப்பு..  














ஒரு அட்வைஸ் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று சொல்வார்கள்,போரால் கெட்டு நொந்து சிக்கி சீரழிந்து உள்ள ஈழத்தமிழனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லக் கூடிய தகுதி அப்துல் கலாம் எனும் பெரியவரிடம் மட்டும் தான் இருக்கிறது ஏன் என்றால் அப்துல் கலாம் தனது வாழ்வின் ஆரம்ப காலங்களில் போரை  சந்திக்கா விட்டாலும் போரின் விளைவுகள் என்று சொல்லக் கூடிய வறுமை தனிமை முதலிய அனைத்தையும் அனுபவித்து தான் இன்று அப்துல் காலமாக மிளிர்கிறார்,அப்துல் காலாமின் யாழ்ப்பாண வருகை எமது இளம் சந்ததியில் ஒருவரது மனத்தை மாற்றி ,அவனது போர்க் குணத்தை  மாற்றி அவனைக் கல்வியின் பக்கம் திருப்பி இருந்தால் அப்துல் கலாம் ஈழமக்களுக்கு நன்மை செய்த உத்தமர்களின் பட் டியலில் முதல் இடம் பிடிப்பார்

அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங்கிவிடுமா !!

அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக.

அதிகமா சாப்பிடாதீங்க

மிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

கட்டாயம் காலை உணவு

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை பாதிப்பிற்கு காரணமாகும். மேலும் புகை பிடிப்பதால் மூளை சுருங்குகிறது இது அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

சுற்றுச் சூழல் சீர்கேடு

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். நீண்ட நாட்களுக்கு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள் ஏனெனில் நன்றாக தூங்குவது நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதேபோல் தலையை மூடிக்கொண்டு தூங்குவதும் ஆபத்தானதாம். இதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரித்து சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. இதனால் மூளை பாதிப்படைகிறது.

ஓய்வு அவசியம்

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

மூளைக்கு வேலை தராமல் இருப்பதும் ஆபத்தானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

நிறைய பேசுங்க

அதிகம் பேசாமல் இருப்பதும் மூளையை பாதிக்குமாம். எனவே அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

Friday 27 January 2012

ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். .

இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.



” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது,
வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.”

சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.
------------------ 


ஸ்பெயினில் இஸ்லாமிய சரித்திர விளக்க படதொகுப்பு.

இஸ்லாம் ஸ்பெயினில் பரவி 800 வருடங்கள் இஸ்லாமியஆட்சி
செய்து என்னென்ன சாதனைகள செய்தது?

இது ஒரு இஸ்லாமிய சரித்திர ஆவண விளக்க படதொகுப்பு.

அரேபிய மண்ணில் இஸ்லாம் தோன்றி
அது எவ்வாறு வையகமெங்கும்
எந்தெந்த காலகட்டங்களில் பரவியது.

ஐரோப்பியாவில் இஸ்லாம் எப்படி பரவியது.?

ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 1


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 2



ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 3


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 4


Iஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 5


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 6



ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 7



ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 8


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 9


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 10

=========


ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன்னாட்சி முடிவுக்கு பின் ஸ்பெய்னில் இஸ்லாமியர்கள் ஐரோப்பியர்களால் மிக கொடுமையான இன அழிப்பு செய்யப்பட்டார்கள் .Muslims in Spain 1 ஐரோப்பியர்களால் இஸ்லாமிய இன அழிப்பு.


Muslims in Spain 2


=======================




Great Mosque of Cordoba, Spain - BBC World Wonders

The Cathedral and former Great Mosque of Córdoba, in ecclesiastical terms the Catedral de Nuestra Señora de la Asunción (English: Cathedral of Our Lady of the Assumption), and known by the inhabitants of Córdoba as the Mezquita-Catedral (English: Mosque--Cathedral), is today a World Heritage Site and the cathedral of the Diocese of Córdoba.

The site was originally a pagan temple, then a Visigothic Christian church, before the Umayyad Moors at first converted the building into a mosque and then built a new mosque on the site.

It is located in the Andalusian city of Córdoba, Spain. The Mezquita is regarded as perhaps the most accomplished monument of the Umayyad Caliphate of Córdoba. After the Spanish Reconquista, it once again became a Roman Catholic church, with a plateresque cathedral later inserted into the centre of the large Moorish building.

The Alhambra, Granada, Spain - BBC World Wonders




The Alhambra, the complete form of which was Calat Alhambra, is a palace and fortress complex constructed during the mid 14th century by the Moorish rulers of the Emirate of Granada in Al-Andalus, occupying the top of the hill of the Assabica on the southeastern border of the city of Granada in the Autonomous Community of Andalusia.

The Alhambra's Moorish palaces were built for the last Muslim Emirs in Spain and its court, of the Nasrid dynasty. After the Reconquista by the Reyes Católicos in 1492, some portions were used by the Christian rulers.

Wednesday 25 January 2012

சூரிய கதிரியக்கத்தால் பூமிக்கு ஆபத்தா ? ஒரு இஸ்லாமிய விழிப்புணர்வு!!

இன்றைய சூரிய கதிர்களின் தாக்கமும்,சுனாமியும், பூகம்பங்களும் அழிவிற்கு சில உதாரணங்கள். ஏனெனில் இவை பூமியில் மேல்பரப்பிலும், நீர்ப்பரப்பிலும் மட்டுமே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் அன்று...? வானத்திலிருந்து வரும் பாதிப்புகளும், மலைகள் சிதறி ஏற்படுத்தும் விளைவுகளும் நம்மால் கற்பனை செய்யதால் மனம் தாங்குகிறதா? திருமறைக் குர்ஆனை பொய்ப்பிப்பவர்கள் இனியாவது சிந்திக்க மாட்டார்களா? அனுபவங்களின் அடிப்படையில்கூட‌ மனிதன் பாடம் படிக்கவிட்டால்..... அந்த இறைவனுக்கா நஷ்டம்? 



திருக்குர்ஆனின் மற்ற எச்சரிக்கைகளையும் பார்ப்போம்!
  • வானம் பிளந்துவிடும்போது..நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது.. கடல்கள்கொதிக்கவைக்கப்படும்போது..மண்ணறைகள்புரட்டப்படும்போது... ஒருவன் தான் முற்படுத்தியதையும் பிற்படுத்தியதையும் அறிந்துக் கொள்வான்! (அல்குர்ஆன்: 82: 1-5)
  • சூரியன் சுருட்டப்படும்போது... நட்சத்திரங்கள் உதிரும்போது... மலைகள் பெயர்க்கப்படும்போது... கருவுற்ற‌ ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும்போது... காட்டு விலங்குகள்ஒன்றுதிரட்டப்படும்போது... கடல்கள் தீ மூட்டப்படும்போது.... உயிர்கள் மீண்டும் (உடல்களோடு)ஒன்றிணைக்கப்படும்போது...(அல்குர்ஆன் 81:1-7)
  • பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும்போது... பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது... இதற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று மனிதன் கேட்கும்போது... அந்நாளில், தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்!(அல்குர்ஆன் – 99:1-5)

  • நாசா வெளியிட்ட ஆரோரா புகைப்படங்கள்.


மின் காந்த புயல் ஆரோரா (AURORA) என்று அழைக்கப்படும் இந்த புயல் பூமியை கடந்த 23ம் தேதி 03.59 முதல் 24ம் தேதி 03.59 வரை பூமியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது . இந்த வகை கதிர்கள் தாக்கம் M9 என்ற அறிவியல் வகைபாடுகளின் கீழ் விவரிக்கபடுகிறது. கடந்த 23ம் தேதி ஏற்பட்ட கதிர் தாக்குதல் உலகின் மிக நீண்ட நேர மற்றும் கடுமையான தாக்குதல் ஆகும். நாசாவின் சூரிய டைனமிக்ஸ் ஆய்வகம் கைபற்றிய கதிர்வீசுகளை ஆய்வு செய்து கூறும்போது இந்த வகை தாக்கம் X-Flare எனப்படும் X வகை கதிர்கள் என்றும் இதனால் மனிதர்களுக்கோ மற்ற உயிர்களுக்கு ஆபத்து நேரிடாது என்றும் மின் காந்த கருவிகளுக்கும் , செய்தி தொடர்புக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியது. இதை முன்னிது உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் காந்த கருவிகள் தொடர்பை நிறுத்தி வைத்தன பல விமானங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது . மேலும் நாசா கூறும்போது இந்த கதிர்கள் ஏற்படுத்திய மாற்றத்தை இரவு நேரங்களில் ஆர்டிக் எனப்படும் பூமியின் காந்த புலத்தில் மிக துல்லியமாக பார்க்கலாம் என கூறியது . சூரியனில் இருந்து வெடித்து மிக வேகமாக வெளியேறும் கதிர்களை பற்றி ஆய்வு செய்துவரும் Solar and Heliosphere Observatory (SOHO) மற்றும் STEREO-Behind spacecraft ஆய்வகம் கூறுகையில் இந்த மின்க காந்த கதிர்கள் சுமார் 2200 KM வேகத்தில் பூமியை தாக்கியது . மேலும் இதை பற்றிய முதல்நிலை ஆய்வில் இந்நிறுவனங்கள் கூறியது , மேக கூட்டங்கள் சரியான பாதையில் தான் பயணிக்கின்றனவா என்பது விஞ்ஞானிகளுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறின .மேலும் வலிமையான தாக்கத்தை ஆரோரா ஏற்படுத்தி இருக்கும் என்று கூறுகின்றனர். ஆர்டிக் கடல் பகுதியில் இதன் தாக்கம் மிக தெளிவாக உணரப்பட்டதாக தெரிவிக்கின்றனர். கோடார் (CODAR or COSTAL RADAR) எனப்படும் கடல் ஆளவீட்டு கருவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் ஆளவீட்டில் சுமார் 4543 KHz  மாற்றம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர். இன்னும் என்ன என்ன இதைபற்றிய ஆய்வுகள் தெரிவிக்கிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம், 

OSLO பல்கலைக்கழக இயற்பியல் துறை வெளியீட்டுள்ள ஆரோரா கதிர்கள் தாக்குதல் அனிமேஷன்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

கேசினோக்கள்(CASINO) மூலம் இந்தியாவுக்குள் வரும் தீவிரவாத பணம்!! ஒரு தவகல்..


இந்தியாவின் சூதாட்ட தலைநகரம் என்றால் அது கோவா தான். இங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் பல சாதாரண ஹோட்டல்களிலும் ஏராளமான கேசினாக்கள் உள்ளன. மேலும் கோவா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இதற்கெனவே மிதக்கும் கேசினோக்களும் இயங்குகின்றன.  

டாலக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு (casinos) வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.



இந்தியாவை பொறுத்தவரை கேமப்ளிங் என்ற வார்த்தையையே பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேம்ப்ளிங் விளையாட விரும்பினால், கோவாவில் உள்ள கேசினோ ராயலுக்கு வருவதை தவிர வேறு வழி இல்லை. அதுமட்டுமல்லாமல் இது தான் இந்தியாவில் இருக்கக் கூடிய ஓரே மிதக்கும் கேசினோ.
கேசினோ ராயல் அமைந்திருக்கும் கப்பல், கடலில் தன்னுடைய பிரயாணத்தை தொடங்கிய உடனேயே அனைத்து கேம்ப்ளிங் விளையாட்டுகளும் களைகட்ட தொடங்கி விடும்.
அதோடு இங்கு பெரும்புள்ளிகளுக்கென தனியறையும் இருக்கிறது.
கேசினோ ராயலின் கேளிக்கைகள் வெறும் கேம்ப்ளிங் விளையாட்டுகளுடன் முடிந்துவிடாது. இந்தக் கப்பலில் உள்ள சைனா கார்டன் என்ற உணவகத்தில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை ருசிக்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது. அதோடு இந்த உணவகத்தில் நடத்தப்படும் ரஷ்ய குழுவினரின் பெல்லி நடன நிகழ்ச்சி அட்டகாசத்தின் உச்சம்.
கேசினோ ராயலுக்குள் நுழைவதற்கு ஒரு இணை 4000 ரூபாய்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு மது மற்றும் உணவுடன், 3000 மதிப்புள்ள திரும்பப்பெற இயலாத கூப்பன் ஒன்று தருவார்கள்.
அதை வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கலாம். குறிப்பாக தொடக்க நிலை கேம்ப்ளர்களுக்கென்று பிரத்தியேகமாக எளிமையான விளையாட்டுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் அனுபவ கேம்ப்ளர்கள் ஸ்லாட் மெஷின்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.
மேலும் இங்கு குழந்தைகளோடு வரும் பயணிகள் கவலை கொள்ள அவசியமே இல்லை. ஏனென்றால் உங்கள் குழந்தைகள் தூங்குவதற்கும், விளையாடுவதற்கும் இங்கு தனிப்பட்ட பகுதிகள் உள்ளன. எனவே ஜோடியாக நீங்கள் உங்கள் நேரத்தை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு இங்கு வரும் நட்சத்திர தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகம்.
எப்படி பார்த்தாலும் உங்களுடைய மாலை நேரம் முழுவதும் கேளிக்கையும், கொண்டாட்டமுமாக கழியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதுமட்டுமல்லாமல் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் இந்தியாவில் இருப்பதையே மறந்து போய் விடுவீர்கள்.


இதைத் தவிர சிக்கிம் மாநிலத்திலும் ஏரளமான கேசினோக்கள் உள்ளன. கோவா, சிக்கிமில் தான் சூதாட்ட விடுதிகளை அந்த மாநில அரசுகள் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மகாவ் பகுதி தான் சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் போனது. அடுத்த இடத்தில் உள்ளது சிங்கப்பூர்.

ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால், இந்த நாடுகளை விட இந்தியாவில் சூதாடுவது 'சீப்' ஆகிவிட்டது. இதனால், கோவா மற்றும் சிக்கிமை நோக்கி வரும் வெளிநாட்டு சூதாட்டப் பேர்வழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

ஆனால், இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் பணத்தை கண்காணித்து வரும் மத்திய அரசின் நிதித்துறையின் உளவு அமைப்பான Financial Intelligence Unit (FIU), சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யும் அமைப்புகளும், இந்த கேசினோக்கள் மூலமாக நாட்டுக்குள் பணம் அனுப்பி வருவது தெரியவந்துள்ளது.

கடந்த ஓராண்டில் கேசினோக்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு பணத்தில் 7,006 பணப் பரிமாற்றங்கள் சந்தேகத்துக்குரியவை (Suspicious Transactions) என எப்ஐயு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதலே இந்திய கேசினோக்கள் அன்னிய செலவாணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீன் கொண்டு வரப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வதைத் தடுக்க Financial Action Task Force என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் இந்திய உளவுப் பிரிவுகளும் நிதித்துறை உளவு அமைப்பும் இணைந்து இந்தியாவுக்குள் வரும் அன்னிய செலவாணியை கண்காணித்து வருகின்றன.

இந்த அமைப்புகள் கடந்த ஓராண்டில் மட்டும் 7,006 சந்தேகத்துக்கிடமான நிதிப் பரிமாற்றங்களை கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் வெளிநாட்டு நிதியை மேலும் கண்காணிக்க வசதியாக, இது தொடர்பாக சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
English summary
Indicating signs of possible funds related to crime and terror trickling into the Indian casino sector, a government report has said that more than 7,000 instances of suspicious transactions have been detected in the elite gaming business during the last financial year. A total of 7,006 Suspicious Transaction Reports (STRs) during the 2010-11 fiscal have been reported by the casino business and allied payment operators to the Financial Intelligence Unit (FIU), an enforcement agency under the Union Finance Ministry. The casino business in the country was brought under anti-money laundering laws in 2009 and the operators primarily provide slot machines and electronic games to customers.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.