Wednesday 18 January 2012

வயிற்று போக்கு(DIARRHEA)

DIARRHEA IN CHILDREN

* உணவிலும்  , நீரிலும்   உள்ள   நோய்  கிருமிகள்(VIRUS, BACTERIA, PROTOZOA)   வயிற்றில்  சென்று  வயிற்று  போக்கை   ஏற்படுத்தும் .

*பாட்டில் பாலே இதற்கு முழு  முதல்  காரணம் .இதர  காரணங்கள் : மூடி வைக்காத  உணவு , ஊட்டி எனப்படும்  சூபான் (கீழே  விழுந்தபின்  கழுவாமல்   உடனே வாயில்  வைப்பது ),சுகாதர  குறைவு ....

* குழந்தைகளுக்கு   வரும்  வயிற்று  போக்கிற்கு   பெரும்பாலும்  வைரஸ் காரணம் . 
* பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு  ஒவ்வாமை   - இதர  காரணங்கள்


* வைரசில் ROTA VIRUS  முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும்  வயிற்றுபோகில்  அதிகபடியான  நீர் இழப்பு  ஏற்படும் . மற்றும்  சுரம்  அதிகமாக  இருக்கும் .

* இரத்தம், சளி போன்ற  MUCUS ,  இருந்தால்  அது  -DYSENTRY -- எனப்படும் .இதில்  வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம்  போகுதல் ஆகிய அறிகுறிகள்  காணப்படும். இதில் நீர் இழப்பு  குறைவாக  இருக்கும் .



*வெறும்  நீராக  மற்றும் பாதி நீராக  போனால்  அது  DIARRHEA-- எனப்படும் .இதில் நீர்  இழப்பு  அதிகமாக  இருக்கும் .

* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை   பட்டினி  போடுதல் கூடாது , நீர் இழபிற்கு தகுந்தால் போல்  ஊட்டம்  அளிக்கவேண்டும் .

*வயிற்றுபோகின் போது  நீர் சத்தும் , ஊப்பு  சத்தும்  குறைவதால்  அதை  சரிசெய்ய  வேண்டும் .

* பால் குடிக்கும்  குழந்தைக்கு  விடாமல்  தாய்ப்பால்  தரவேண்டும்

*வீட்டிலேயே  முதல்  உதவி அளிக்க  முடியும்
# ஒரு  தம்ளீர்  காய்ச்சிய  நீர்  எடுத்துகொள்ளவும்
#இரண்டு  விரலில் சிக்கும்  அளவு   உப்பு  சேர்க்கவும்
#மூன்று  விரலில்  சிக்கும்  அளவு  சர்க்கரை  சேர்க்கவும்
# நன்கு  கலக்கி   அடிக்கடி  தரவும்


*பாட்டிலில்  பால் தருவதை  உடனே  நிறுத்தவேண்டும் .

*திட  , திரவ  உணவை  நிறுத்தாமல்   கொடுத்துகொண்டே  இருக்க வேண்டும் .
* வயிற்று போக்கு  குறைய  மூன்று முதல்  ஐந்து நாட்கள்  ஆகலாம். எனவே பொறுமையுடன்  மருத்துவர் ஆலோசனை  பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை  தடுப்பதே  மிக முக்கிய  மருத்துவம் ஆகும் .


*போக்கை  உடனே நிறுத்த  சில மருந்துகள்  உள்ளன , அவற்றை  குழந்தைகளுக்கு  தரக்கூடாது . LOPERAMIDE (andial, loperate,loperatil,)  என்ற   மாத்திரையை   தந்தால் போக்கு உடனே  நின்று விடும் , ஆனால் வயிறு  வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த  மாத்திரையை  பெரியவர்களுக்கு  தரலாம் , ஆனால்  12  வயதிற்கு  குறைந்த  குழந்தைகளுக்கு  தரக்கூடாது .



*எனவே  வயிற்று போக்கை  அதன் போக்கிலேயே  விட்டு  மருத்துவம் செய்ய வேண்டும் .

* இப்பொழுது  ORS எனப்படும்  உயிர் கரைசல்  கிடைக்கிறது. அதை  வாங்கி வீட்டில்  வைத்திருந்தால்  தேவை படும்  போது  முதல் உதவியாக  தரலாம்

No comments:

Post a Comment