Wednesday 28 March 2012

மனைவியை மயக்க தாரக மந்திரம் என்ன?- ஒரு அலசல்...


கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் எப்படி மயக்குவது என்பதை 60 டெக்னிக்குகளாக விவரிக்கும் புத்தகம் ஒன்று தமிழில் வெளிவந்துள்ளது. அந்த புத்தகத்தை ஒவ்வொரு திருமணத்தம்பதியும் அவசியம் படிக்கவேண்டும். ஏன் எனில் இன்று காமம்-மனைவியைப்பற்றி- அவளை/அவனை எப்படி வளைத்துப் போடுவது என்பது பற்றி சொல்லித்தர ஆளில்லை. அப்படியே இருந்தாலும் சொல்லித்தருபவர்கள் அவமானம் அடைகிறார்கள் அல்லது அவமானமாக கருதுகிறார்கள்.

அந்த புத்தகத்தை விகடன் பிரசுரம் ரூ.100க்கு வெளியிட்டுள்ளது.அந்த புத்தகத்தின் பெயர்:ரொமான்ஸ் ரகசியங்கள்.

இதில் விளக்கப்பட்டுள்ள 60 டெக்னிக்குகளில் 20 மட்டும் பின்பற்றினாலே கணவன் மீது மனைவிக்கும் மனைவி மீது கணவனுக்கும் காமவெறியே உண்டாகும்.முடிவாக சிறந்த தம்பதியாக வாழ்வார்கள்.இது அனுபவ உண்மை.

இதே புத்தகம் 60 வயதைக்கடந்த தம்பதிக்கும் பல அரிய யோசனைகளைக்கூறுகிறது.

தம்பதிகளுக்கு திருமணமான 7ஆம் வருடம் செவன் இயர் இட்ச் ( 7 years hitch ) என்ற ஒன்று உருவாகிறது என மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்துள்ளனர். 7ஆம் வருடம் தனது இல்லற வாழ்வில் ஒருவித சோர்வு உண்டாகிறது. சிலருக்கு இது 7ஆம் வருடம் உண்டாகாமல் 9 அல்லது 10 அல்லது 12 ஆம் வருடம் உண்டாகிறது. இந்த சமயத்தில்தான், மூன்றாம் ஆள் உள்ளே நுழைந்து கள்ளக்காதல் பிறக்கிறது. இதை சரிசெய்ய, அந்த வருடங்களில் 7,9,10,12 ஆம் வருடங்களில் 10 நாட்களுக்கு ஏதாவது கடலோரம் அல்லது மலையோரம் உள்ள சுற்றுலா ஸ்தலம் ஒன்றிற்குச் சென்று அங்கே ஜாலியாக இருந்துவிட்டு வர வேண்டும்.குழந்தைகளை உடன் அழைக்காமல் சென்றால் நல்லது.

உயரில் பாதியாக இருந்தவர் , இன்னொருவருடன் சென்று விட்டால் நெஞ்சம் நொறுங்கிப் போகும்  அல்லவா... உங்கள் வேலைப் பளுவை மறந்து கொஞ்சம் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்...

மலர்ந்த பூவை போல் மனைவி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எல்லா கணவர்களுமே ஆசைபடுகின்றனர். ஆனால் அந்த மாதிரியான சூழலை கணவர்தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகின்றனர்.


கல்யாணம் ஆயி பல வருஷம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் ஆணினமே!

கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!

ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!

மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பின்னிட்ரீங்க இல்ல. அதுபோல ''இது அப்பாவி ஆண்களுக்கு மட்டும்!'' அப்படீன்னு சொன்னா பெண்கள் இதை படிக்காமல் விட்டு விடப் போகிறார்களா என்ன! ரெண்டு பேரும் சேர்ந்து படிச்சா ஒரே கலகலப்புதான்! சரி, மேட்டருக்கு வருவோம்...   

எப்படித்தான் மனைவியை மயக்குவது ? 


1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு" உனக்கு ஹல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் "செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!"என்ன சரியா?

2. மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!

காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக.

4. மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.

5. மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் "இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே" அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை"" இப்படிச் சொல்லனும்!

6. ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும். அதே சமயம் சீரியலிலேயே அவர்கல் மூழ்கும்படி விட்டுவிடாதீர்கள்.

7. அம்மிணிக்கு ஸ்கூட்டி இருந்தால், வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க. அவர்களின் முகம் அதைவிட பளபளப்பாக ஆசையான காதல் பார்வையுடன் உங்களை நன்றியுடன் நோக்கும் என்பதற்கு நூற் சதவீதம் கேரண்டி!

8. ''வீட்டில் ஆணி அடிக்கணுமா?''ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

9. அடுப்படிசாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது!!

10. ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

11. எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

12. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!

13. வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க.நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

14. வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடணும். ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.

15. அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.

16. ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளனும்.

17. மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..

18. மனைவியைப் பற்றியோ உங்கள் கலயாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.

19. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து "இப்ப என்ன சொன்னே"ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

20. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.



தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment