Wednesday 27 June 2012

அணு உலையில் இருந்து வரும் அணுக்கழிவு-ஒரு விழிப்புணர்வு ஆய்வு....



கூடங்குளம் அணு உலை, படித்ததில் பிடித்ததுதினம் அணு உலையின் பயன்களைப் பற்றி பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக படித்து எல்லாம் அறிந்த விஞ்ஞானியைப் போன்று நண்பருக்கு விளக்கி சொல்லும்போது எனக்கே மிகவும் பெருமையாக இருந்தது. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நண்பர் கடைசியில் அதிலிருந்து வரும் கழிவுகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று ஒரு விடை தெரியாத கேள்வியை எழுப்பினார். அப்பொழுது தான் எனக்கே உரைத்தது நான் படிக்கும் எந்த பத்திரிக்கையும் அணுக்கழிவைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று சத்தியம் செய்து இருப்பது போன்று அதைப் பற்றி மட்டும் எந்த செய்தியும் எழுதுவதில்லை என்பது.

அதனால் என்ன நாமே ஆராய்ச்சியில் இறங்கிடலாம் என்று ஆறாயத் தொடங்கினோம். பின்னர் தான் தெரிந்தது அணு உலையில் இருந்து வரும் மின்சாரம் எல்லாம் பக்க உற்பத்தி தான், அங்கு நடக்கு மொத்த உற்பத்தியே அணுக்கழிவு தான் என்பது. அதற்கு எதற்கு அணு உலை என்று பெயர் வைத்திருக்கிறார்களோ, அணுக்கழிவாலை என்றே பெயர் வைத்து இருக்கலாம்.
ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் ஆண்டிற்கு 20 முதல் 30 டன் அணுக்கழிவு வெளிப்படுகிறது. இந்த அணுக்கழிவுகளை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். முதலாவது அதிகதிரியக்க கழிவு (High Level Waste), இரண்டாவது டிரான்சுரானிக் கழிவு (Transuranic Waste), மூன்றாவது குறைகதிரியக்க கழிவு (Low Level Waste).



அணுக்கழிவுகளில் அதிகதிரியக்க கழிவு வெறும் ஒரு சதவிகிதமே, ஆனால் உலகில் வெளிவரும் கதிரியக்கத்தில் 95 சதவிகிதம் இந்த அதிகதிரியக்க கழிவுகளில் இருந்து தான் வெளிவருகிறது. அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவு தான் இந்த அதிகதிரியக்க கழிவு.

இரண்டாவதான டிரான்சுரானிக் கழிவு உரேனியத்தைவிட கனஉலோகங்கலான புளுட்டோனியம், நெப்டுனியம் போன்றவைகளை உள்ளடக்கியது.

குறைகதிரியக்க கழிவுகள் பெரும்பாலும் உடைகள், நீர் வடிகட்டிகள், குழாய்கள் மற்ற அணு உலை அன்றாடப் பொருள்களை உள்ளடக்கியன. இவற்றிலிருந்து வரும் கதிரியக்க அளவு மற்ற கழிவுகளை விட குறைந்த அளவு எனினும், நமக்கு உடனடி ஆபத்து விளைவிக்கும் அளவிலானதே.

செறிவூட்டிய உரேனியத்தை சிறு சிறு உருண்டைகளாக நீள தடிக்குள் நெருக்கமாக அடுக்கி அணு உலை எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருள் அணு உலைக்குள் ஒரு வருடம் எரிந்த பின்னர் எரிதிறன் குறைந்து விடுகிறது என்று கழிக்கப்பட்டு விடுகிறது. இப்படி கழிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மிகவும் அபாயகரமான அளவு கதிரியக்கம் உடையது. இந்த அதிகதிரியக்க கழிவுகள் அருகில் பாதுகாப்பு இன்றி சில வினாடிகள் இருந்தாலே உடனடி மரணம் தான்.

அணு உலை எரிபொருள் பயன்படுத்தப்படும் போது யுரேனியம்-235 அணுக்கள் பிளக்கப்பட்டு சீசியம், சிராண்டியம் போன்ற கன உலோகங்கள் தோன்றுகின்றன. இதனால் எரிபொருள் பயன்படுத்துவதற்கு முன்னர் இருந்த கதிரியக்க அளவை விட பயன்படுத்தப்பட்ட பின் கதிரியக்க அளவு பத்து இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருள் பல ஆண்டுகளுக்கு கொதிக்கும் வெப்ப நிலையில் இருக்கும். இவற்றை செயற்கையாக குளிரூட்டப்பட்ட தண்ணீர் குளத்திற்குள் சேகரித்து வைப்பார்கள். இது போன்ற குளங்கள் ஒவ்வொரு அணு மின் நிலையத்திலும் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பத்து முதல் இருபது ஆண்டுகள் குளிரூட்டிய பின் மறுசீராக்கலுக்கு (reprocessing) அனுப்புவார்கள்.

ஒரு வழியாக மறுசீராக்கலுக்குப் பின் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து அனைத்து கதிரியக்கமும் வெளியேறி சாதாரண கழிவாகி விடுமா என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. இந்த மறுசீராக்கலே ஒரு கண்கட்டி வித்தை போல தான் இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை துண்டு துண்டாக வெட்டி நைட்ரிக் அமிலத்தில் கரைக்கிறார்கள். பின்னர் இந்த கரைசலில் இருந்து புளுட்டோனியத்தையும் (ஆயுதம் செய்ய) உரேனியத்தையும் பிரித்து எடுக்கிறார்கள். எஞ்சி இருக்கும் கரைசல் மிகுந்த கதிரியக்கம் உடைய கழிவாக இருக்கிறது. சிறிதளவு இருந்த கழிவை கரைத்து அதிகளவாக்கிவிட்டு கதிரியக்க வீரியத்தை குறைத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்போழுது கழிவின் அளவு அதிகரித்து விட்டதே, ஆதலால் மொத்த கதிரியக்க அளவு அதே தானே இருக்கப்போகின்றது என்று வினவினால் பதில் தராமல் மழுப்புகிறார்கள்.

எப்போழுது தான் இந்த கதிரியக்கம் முழுக்க ஒழிந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சாதாரண குப்பையாக மாறும் என்று கேட்டால் சுமார் ஏழரை இலட்சம் ஆண்டுகள் பொறுங்கள் என்று பொறுமையாக பதில் தருகிறார்கள்.  நாம் அதிர்ச்சி அடைந்து நன்றாக சரி பார்த்து விவரமாக கூறுங்கள் என்று வினவினால் பாதி ஆயுள் (half life) என்று விவரிக்க தொடங்கி விட்டார்கள்.

கதிரியக்க மூலகங்கள் தொடர்ந்து கதிரியக்கத்தை பரப்பி வருவதால் நாளடைவில் வலுவிழந்து படிப்படியாக பாதியாக அளவில் குறைந்து விடுகின்றன அல்லது வேறு மூலகங்களாக மாறிவிடுகின்றன. இப்படி கதிரியக்க மூலகங்களின் வலு பாதியாக குறைவதற்கான காலத்தை அரை ஆயுள் காலம் என்று கணக்கிடுகிறார்கள். அரை ஆயுள் காலத்தை வைத்து கதிரியக்க கன உலோகங்கள் எவ்வளவு விரைவாக தேய்கின்றன என்று கணித்துவிடலாம்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருக்கும் புளுட்டோனியம்-239 கனஉலோகத்தின் அரை ஆயுள் 24,000 ஆண்டுகளாகும். இந்த 24,000 ஆண்டுகளுக்கு பின்னர் புளுட்டோனியம்-239, யுரேனியம்-235 ஆக மாறுகிறது. இந்த யுரேனியம்-235 கனஉலோகத்தின் அரை ஆயுள் 7,03,800 ஆண்டுகளாகும். பின்னர் இந்த யுரேனியம்-235 தோரியம்-231 ஆக மாறுகிறது. இப்படி படிப்படியாக பல கனஉலோகங்களாக மாறி இறுதியில் ஈயம்-207 என்கிற கதிரியக்கம் இல்லாத கொடிய நச்சுப்பொருளாக நிலைப்பெறுகிறது.

கூடங்குளம் அணு உலை, படித்ததில் பிடித்தது

இவ்வாறு இலட்ச்கணக்கான ஆண்டுகள் கதிரியக்கத்தோடு இருந்தால் அதுவரை எப்படி இந்த கழிவுகளை நாம் பாதுகாப்பது? அரசாங்கம் எல்லாம் எங்களுக்கு தெரியும், நாற்பது ஆண்டுகளாக நாங்கள் பாதுகாக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் என்று நமக்கு தானே தெரியும்.

ஜூலை 1998 இல் நம் சென்னையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் மூன்று பொறியாளர்களை கைது செய்தார்கள். என்ன என்று விசாரித்தால் எட்டு கிலோ யுரேனியம் வைத்து இருந்தார்களாம். அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து திருடி வந்துவிட்டார்களாம்.

நவம்பர் 7, 2000 அன்று சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு இந்தியாவில் காவல்துறை 25 கிலோ யுரேனியம் கடத்த முயன்ற இரு கடத்தக்காரர்களை கைது செய்திருப்பதாக அறிவித்தது.

டிசம்பர் 2009 இல் மும்பை காவல்துறை ஐந்து கிலோ யுரேனியம் வைத்திருந்ததாக மூவரை கைது செய்தது.

இவை எல்லாம் நம் சிற்றறிவிற்கு எட்டியவைகள். நாம் அறியாமல் இது போன்று எவ்வளவு யுரேனியம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. உலகத்திலேயே ஒரு பலவீனமான பாதுகாப்பு அமைப்பை வைத்துக்கொண்டு, மேலும் கையூட்டு கொடுத்தால் எதையும் செய்து கொடுக்கின்ற அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு நம்மால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இந்த அணுக் கழிவுகளை பாதுகாக்க முடியும்? இதெல்லாம் நமக்கு தேவையற்ற சுமைகள் என்றே தோன்றுகிறது.

மின்சாரம் வேண்டுமா இல்லை புற்றுநோய் வேண்டுமா என்று கேட்டால் மின்சாரம் எங்களுக்கு, புற்றுநோய் உங்களுக்கு என்று தெளிவாகத்தான் பதில் சொல்கிறார்கள் நகரவாசிகள். அவர்களுக்கு தெரியவில்லை பாதிப்பு என்பது அணு உலை இருக்கின்ற ஊர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்து ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்காவது பாதிப்பிருக்கும் என்று. இரசியாவில் செர்நோபில் விபத்து நடந்த போது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுவிடன் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் மறந்து விட முடியாது.

இப்படித்தான் முதன் முதலில் கதிரியக்க பொருள்கள் கண்டறியப்பட்ட போது ஆர்வமாக முகப்பூச்சு, தண்ணீர், மருந்து என்று அனைத்திலும் பயன்படுத்தினர். இப்போழுது யாரையாவது சிறிது உரேனியத்தை முகத்தில் பூசிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். அது போன்று தற்போது ஐம்பது வருடமாக அணு ஆற்றல் என்று ஆர்வமாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனேகமாக நூறு வருடத்திற்கு பின்னால் உலகத்தில் எங்குமே அணு உலைகள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் அணு உலைகள் வெடிக்கும் பட்சத்தில் உலகமே இல்லாமல் போய்விடும்.





Tuesday 26 June 2012

மதுரைக்கு "கை' நழுவிய சர்வதேச விமானநிலையம் !!ஒரு சிறப்பு பார்வை..

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு முதல் கொழும்பு - மதுரை இடையே விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதால், மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கும், விமானங்களை ஏர் இந்தியா மூலம் இயக்க மத்திய அரசு முன்வர வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.விமான போக்குவரத்து: மதுரை விமான நிலையத்தில், இமிகிரேஷன் எனப்படும், வெளிநாட்டவர்களை சோதனை செய்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதியன்று, மதுரை - கொழும்பு இடையில், விமான போக்குவரத்தை ஏர்லங்கா நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இதனால், ஏர் இந்தியாவும் சர்வதேச விமான சேவையை மதுரையிலிருந்து துவக்க வேண்டும். மதுரை மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மிக அதிகமான மக்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு மதுரையில் இருந்து, ஏர் இந்தியா விமானங்களை இயக்க முன்வர வேண்டும். வெளிநாடுகளுடன் இந்தியா ஒப்பந்தங்களை போடும் போது, அவற்றில் மதுரை விமான நிலையத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஓடுதளம் உயர்கிறது: மதுரை விமான நிலையத்தின் ஓடுதள நீளம், 7 ஆயிரத்து 500 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 610 ஏக்கர் நிலம் கூடுதலாக கையகப்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், ஓடுதளத்தின் நீளம், 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து, 12 ஆயிரம் அடியாக உயரும். எனவே, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்திட, மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அஜித்சிங், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றவுடன், மே மாதம் கடைசியில் மதுரை வருவதாக உறுதியளித்துள்ளார்.


பிரதமர் மன்மோகன் சிங் அடிப்படை கட்ட மைப்பு துறை தொடர் பான அமைச்சகங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், புதிதாக நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங் கள் பற்றி அறிவித்தார். அவர் கூறிய தாவது:-


"சிவில் விமான போக்குவரத்து துறையில் நவி மும்பை, கோவா மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும். கோவை, திருச்சி மற்றும் லக்னோ, வாரணாசி, காயா ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப் படும். நடப்பு நிதியாண்டில் டெல்லி மற்றும் சென்னை யில் புதிய விமான சேவை மையங்கள் அமைக்கப்படும். என்றார்


சர்வதேச விமான நிலையம் விரிவாக்கி உருவாக்கும் பிரதமரின் பட்டியலில் திருச்சி, கோவை இடம் பெற்றுள்ளன.மதுரை பட்டியலில் இல்லை இதனால் மதுரையில் சர்வதேச விமான நிலையம் உருவாகும் திட்டம் கானல் நீர்தானா என்று தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தென்மாவட்ட வளர்ச்சிக்காக மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருந்தது. இதன் முதற்கட்டமாக சர்வதேச தரத்தில் ரூ.130 கோடியில் டெர்மினல் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இங்கு சுங்கத் துறை வசதியை தொடர்ந்து, மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை நியமிக்கப்பட்டதும் சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சர்வதேச விமான நிலையமாகி, ஏர் பஸ் போன்ற பெரிய ரக விமான போக்குவரத்துக்கு விமான ஓடு தளத்தை தற்போதுள்ள 7 ஆயிரத்து 500 அடியில் இருந்து 12 ஆயிரத்து 500 அடியாக விஸ்தரிக்க வேண்டும். இதற்காக 630 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து தரும்படி விமான ஆணையம் தமிழக அரசிடம் கோரியது. அதன்படி அரசு நில ஆர்ஜித நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு விட்டன. நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு வழங்க வேண்டிய விலை நிர்ணயம் ஆகாததால், நிலம் விமான ஆணையத்திடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை.

நிலம் ஒப்படைக்கப்பட்டதும், ரிங்ரோட்டை மண்டேலா நகரில் இருந்து சிறிது தூரம் துண்டித்து மாற்றுப் பாதையில் அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டது.

விரைவில் சர்வதேச விமான நிலையம் கனவு நனவாகும் சூழல் நிலவியது. பயணிகள் விமானம் மட்டுமின்றி சர்வதேச அளவில் சரக்கு விமான போக்குவரத்தும் தொடங்கி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அதில் தமிழகத்தில் திருச்சி, கோவை இடம் பெற்று மதுரை இடம் பெறாதது இங்கு சர்வதேச விமான நிலையம் உருவாகும் திட்டம் கானல் நீராகி விடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. தென் மாவட்டமே புறக்கணிக்கப்பட்டு விட்டதோ? என்ற எண்ணமும் உருவாகி உள்ளது.


காரணம் என்ன?

தமிழகத்தின் 2வது பெரிய நகரம் மதுரைதான். தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. இங்கு சர்வதேச விமான நிலையம் உருவாக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென்று மதுரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை விரிவாக்க தமிழக அரசு 630 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

என் கருத்து:

தென் மாவட்டத்தின் தொழில் வ‌ள‌ர்ச்சிக்கு பெரும் உத‌வியாக‌ இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌துரை ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் க‌ன‌வுதான் என்ற‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.குறிப்பாக ம்துரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால் ராமநாதபுரம்,சிவகங்கை ,திண்டுக்கல் விருதுநகர்  மாவட்ட மக்கள் பெரும் பயனடைவர். தென் மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரும் உட‌ன‌டியாக‌ ம‌துரை ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் அமைக்க‌ ஒருமித்த‌ குர‌ல் எழுப்ப‌ வேண்டும்.ஏற்கென‌வே சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் கிட‌ப்பில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து. தென் மாவ‌ட்ட‌ங்க‌ள் தொட‌ர்ந்து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டுகிறது என்பதை இதன் மூலம் தெளிவடைகிறது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

சீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு


இந்த கட்டுரையை படித்து 

பயன்பெறுகின்ற அணைத்து 

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் 

சுகபிரசவம் அடைய என்னுடைய 

வாழ்த்துகளை தெருவித்து 

 கொள்கிறேன்-.தையுபா அஜ்மல்.
கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்)
இயற்கையாக பெரும் முறைகள
கால்சியம் மாத்திரைகள்
பால்மோர்பால்கட்டிமுட்டை மஞ்சள் கரு,முளைக்கீரைவெந்தயக் கீரைபருப்பு வகைள்கிழங்குகள்எள்கேழ்வரகு,மக்காச்சோளம்கோதுமைகைகுத்தல் அரிசி,இறைச்சி

இரும்புச் சத்து மாத்திரைகள்
பேரீச்சம்பழம்அரைக்கீரைதண்டுக்கீரை,இறைச்சிகல்லீரல்முட்டை மஞ்சள் கரு,வெல்லம்பச்சை காய்கறிகள்சுண்டைக்காய்,உருளைக்கிழங்குகருவேப்பிலை
அயோடின்
மீன் எண்ணெய்கடல் மீன்கள்கீரைகள்,பழங்கள்
குளோரின்
உப்புபச்சை கீரைகள்தக்காளிஅன்னாசி பழம்வாழைப்பழம்பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ்
பால்மோர்முட்டைவெள்ளரிக்காய்,பசலைக்கீரைகேரட்முள்ளங்கிஇறைச்சி,மீன்கைகுத்தல் அரிசிஎண்ணெய்வித்துக்கள்
மக்னீசியம்
பீன்ஸ்பட்டாணிபருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம்
வாழைப்பழம்உருளைக்கிழங்குகீரைகள்
சோடியம்
இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன
குரோமியம்,செலினியம்,மாங்கனீஸ்
எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.
விட்டமின் ஏ (ரெட்டினால்)
மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள்ஈரல்வெண்ணெய்முட்டைபால்,பச்சை நிற கீரைகள்கேரட்மாம்பழம்
விட்டமின் டீ (கால்சிடெரால்)
கொழுப்புள்ள மீன்கள்மீன் எண்ணெய்ஈரல்,முட்டைபால்பால் பெருட்கள்வெண்ணெய்,மாலை சூரிய ஒளி
விட்டமின் ஈ (டோகோபெரால்)
தாவர எண்ணெய்கோதுமை எண்ணெய்,முட்டையின் மஞ்சள் கரு,பச்சைநிறக்கீரைகள்காய்கறிகள்ஆட்டு ஆண் விதைகள்கிட்னி
விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்)
புதிய பச்சை நிறக் காய்கறிகள்கீரைகள்,பழங்கள்தக்காளிசோயா எண்ணெய்
விட்டமின் பி 1 (தயாமின்)
கைகுத்தல் அரிசிதவிடுபருப்புவகைகள்,கோதுமைஎள்நல்லெண்ணெய்,வேர்கடலைஇறைச்சிபால்முட்டைஈரல்,ஈஸ்ட்டு
விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்)
ஈரல்இறைச்சிமுட்டைபால்கீரைகள்,பருப்பு வகைகள்தானியங்கள்
விட்டமின் பி 3 (நியாசின்)
ஈரல்இறைச்சிமுட்டைபால்மீன்இரால்,பருப்பு வகைகள்வேர்கடலைசோளம்,கோதுமை
விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்)
ஈரல்இறைச்சிமீன்தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட்
ஈரல்முட்டைகீரைகள்
விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்)
ஈரல்இறைச்சிமுட்டைபால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12கிடைக்கின்றன)தாவரங்களில் இவை இல்லை
விட்டமின் சி (அஸ்கார்பிக் 



சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார்அவரது சகோதரி திருபணத்திற்குபிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார்அதற்கு அப்பெண் மருத்துவர் நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும்நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.

சம்பவம் 2:

தஞ்சையிலுள்ள எனது தி ஹெல்த் ரிசோட்’ மருத்துவமனைக்குதிருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள்வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும்,மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன்இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள்ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று,மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.

சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள்அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்குஅவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?

உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.

அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையாஎன்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும்சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.

தேவையில்லாத இரசாயன பொருட்கள்:

கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரிதேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள்,இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.


சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார்இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.

தேவையற்ற கட்டுபாடுகள்:

கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானதுசில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம்கர்ப்பிணி பெண்கள் தலையிலும்இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும்எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால்அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?

திட்டமிட்ட சதியா?

பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றதுமக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று,இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறிஅதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள்அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.

சிசேரியன் மோசடிகள்

அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள்நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.

உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார்அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன்அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்செய்திருப்பதாக கூறினார்இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.

அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’ என்றேன்.

அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவாஎன்றதும் நான் வியந்தே போனேன்உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றதுஎத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.

தேவையில்லாத மருத்துவ செயல்கள்:

விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லைஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது. உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது,இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன்,டெஸ்டுகள்மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.

சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:

சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள்பதிய நோய்கள் உண்டாகும்.

தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல்சிறுநீர் கசிவுபடியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல்,கர்பப்பை இறங்குதல்அடிவயிறு வீங்கி போகுதல்.

தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

வயிற்றுவலிஅதிகமான மாதவிடாய்குடல் இறக்கம்கட்டிகள் உருவாகுதல்கற்பபை இறங்குதல்சீதபேதிசிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல்வயிற்று போக்கு,சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல்மலச்சிக்கல்குடல் வீக்கம்செரிமான கோளாறு,விலாவலிதொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.
சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும்இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.

சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?:

கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள்விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள்அவசியமில்லா ஓய்வுகள்வேலை செய்யமல் இருப்பதுஅவசியமில்லாத ஸ்கேன்அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.

கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோஅதே போன்று இயற்கையான காய்கறிகீரைபழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.

ஆதிவாசிகள்குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள்சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன்விட்டமின் மாத்திரைடானிக்டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.

இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:
கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லைபிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லைஉடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றதுஅதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும்சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.

வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:
கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும்பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் அல்லது நிமிடம் கசக்கி விட்டாலே போதும்பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.

பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .

கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:

கணவன்மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது.

 ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும்காது இப்படி வேண்டும்கை இப்படி வேண்டும்முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை,அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லைஎல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும்,தேவையில்லாத தொல்லைகள்மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம்,அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்.

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
   Zhejiang University, Hangzhou, (China)
   (Chinese Traditional Medicine).



தொகுப்பு : .தையுபா அஜ்மல்.