Wednesday 11 July 2012

ஐடிஐ படிப்புகள் வாழ்க்கைக்கு உதவுமா ? ....



கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்! கவலை உனக்கில்லை ஒத்துக் கொள். என்கிற பழமொழிக்கேற்ப பாரம்பரியமாய் அப்பா செய்கிற அதே தொழிலையே மகனும் செய்ய வேண்டும் என்று தலைமுறை தலைமுறையாய் ஒரே தொழிலையே செய்கிற நிலை மாறி, இன்று வாழ்க்கையின் அடிப்படையே முதலில் படிப்பு. அதற்குப் பிறகு தொழில் என்று வந்துவிட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் அதிக சதவிகிதம் பேர் தேர்வில் வெற்றி பெறுகின்ற போதும், பலரும் குறைவான மதிப்பெண்களையே  எடுக்கிறார்கள். அதாவது 80சதவிகிதத்திற்கும்  குறைவான மதிப்பெண்களை எடுக்கிறார்கள். மேற்கொண்டு படிக்க ஆர்வம் கொண்டவர்களாகவும், அதேசமயம் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருந்தும் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் சதவிகித்தத்தைப் பொறுத்து அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களோடு சதவிகித அடிப்படையில் தான் சேரவிரும்பும் பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கோர்சில் அவர்களால் சேர முடியாமலும், கல்லுõரியில் படிக்க விருப்பம் இல்லாமலும், ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமா என்று யோசிப்பவர்களுக்காகவே மத்திய அரசாங்கத்தால் அகில இந்திய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றன.இதுதவிர தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் வாழ்க்கைக்கு தொழில் அடிப்படை என்ற நோக்கில் ஒவ்வொருவரும் சுயமாக வாழக்கையில் ஒரு தொழிலைக்கற்றுக் கொண்டு முன்னேறும் விதமாக அதற்கேற்ப தொழில்களை வகைப்படுத்தி அதற்கான பயிற்சிகளை இந்த நிறுவனங்கள் அளிக்கின்றன. அப்படி வாழ்க்கைக்கு உதவும் படிப்புகளாக வடிவமைத்து அதில் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பிளஸ்2 வில் இருக்கிற பல்வேறு குரூப்புகளுடன் வொக்கேஷனல் டிரேடு எனப்படுகிற தொழிற்பயிற்சி படிப்புகளும் அகில இந்திய அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மிக விரிவாகவே கற்றுக் கொடுக்கப்படுகின்றன.












அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஆண்களும், பெண்களும் பயிற்சி பெறும் படியாக ஒரு வருட பயிற்சி, இரண்டு வருட பயிற்சிகளும் இருக்கின்றன. தொழிற்சாலைகளில் கடுமையான பணிகளை மேற்கொள்ளும் படியாக ஆண்களுக்கென வடிவமைக்கப்பட்ட டிரேடுகளும், பெண்களுக்கு என இலகுவாக பயிற்சி பெறும் டிரேடுகளும் இருக்கின்றன.
பெண்கள் வீட்டிலிருந்து கொண்டே குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு வேலைப்பார்ப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளாக துணி வெட்டுதல் மற்றும் தைத்தல், சிகை அலங்காரம் மற்றும் முகபராமரிப்பு, எம்பிராய்டரி, ஆடைகள் வடிவமைப்பு, அழகுக்கலை நிபுணர், புக் பைண்டர்,சமையல் கலை, பூங்காவை பராமரிப்பவர் போன்ற பயிற்சிகள் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. இவைதவிர கட்டிட படவரைவாளர், மோட்டார் மெக்கானிக்,கணிணி சார்ந்த படிப்புகளையும் பெண்கள் ஆர்வமாக கற்றுக் கொள்கிறார்கள். இந்த பயிற்சிகளை ஆண்களும் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை பெண்கள் சேர்ந்து படிப்பதற்கு 7 அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் சென்னையில் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்திலும், திருவள்ளூர், கடலுõர், நாகப்பட்டினம், சேலம், தேனி, கன்னியாகுமரி(நாகர்கோவில்) ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையங்கள் தொழிற்சாலைகளைப்போலவே முதலாமாண்டு மாணவர்கள் காலை ஒன்பது மணிக்கும், இரண்டு ஆண்டு மாணவர்கள் காலை ஏழு மணிக்கும் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்து பயிறசி பெறும் படியாக அமைத்திருக்கிறார்கள்.
பிளஸ்2, பத்தாம் வகுப்பு பாடங்களைப் போலவே பணிமனைக் கணக்கீடுகள், அறிவியல், குறிப்பிட்ட டிரேடு சம்பந்தமான பாடங்கள், இயந்திர உற்பத்திப் பொருட்களின் முப்பரிமாணப் படங்கள் வரைதல், சமூக அறிவியல் போன்ற பாடப்பகுதிகள் இருக்கின்றன. இவைதவிர செய்முறை பயிற்சிகள் அடங்கும். மொத்தம் இதற்கு 700 மதிப்பெண்கள்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் இரண்டாண்டு பயிற்சிகளை முடித்ததும் அவர்களுக்கு அகில இந்திய பொதுத்தேர்வுகள் இந்திய அளவில் நடத்தப்படுகின்றன. இது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஈடாக நடக்கிறது. இந்த தேர்வுகளை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு என்சிவிடி(நேஷனல் கவுன்சில் ஒக்கேஷனல் டிரெயினிங்) எனப்படும். அகில இந்திய தொழிற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதுவும் தற்காலிக (புரவிஷனல் சான்றிதழ்) மதிப்பெண் பட்டியல் பதிவு செய்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழைக்கொண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடித்த மாணவர்கள் அப்ரண்டீஸ் (தொழில் பழகுனர் பயிற்சிக்காக ) அரசு சார்ந்த , சாராத தொழிற்சாலைகளில் ஐடிஐ தொழிற்பழகுனர் பயிற்சி பெறுவதற்கென அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் சேர்ந்து ஒரு வருடம் அல்லது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற பாடங்களின் கால அளவைப்பொறுத்து தொழில் பழகுனர் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
இந்த பயிற்சியை பெற மாணவர்கள் தொழில் பழகுனர் பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வதைப் போல பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆர்ஐ சென்டர்கள் மாணவர்களின் முகவரிக்கு கடிதம் அனுப்பி சம்பந்தமப்ட்ட தொழிற்சாலைகளில் தொழிற்பழகுனர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து தருகின்றன.
இதற்கான சேர்க்கைகள் ஒரு ஆண்டு பயிற்சிக்கு பிப்ரவரி மாதத்திலும், இரண்டு ஆண்டு பயிற்சிகள் ஆகஸ்டு மாதத்திலும் தொடங்கப் படுகின்றன. இந்த நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்பு என கல்வித் தகுதிகளை நிர்ணயித்திருக்கின்றன.

இந்தப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் தொழில் உற்பத்தியாளர்களுக் கான தகுதியை வளர்த்துக் கொள்வதோடு, தொழிற் சாலைகளுக்கு தேவையான திறன் படைத்த தொழிலாளர்களையும், உற்பத்தி பெருக்கத்திற்கான வழிமுறைகளையும், தொழிற்சாலை சார்ந்த பணிகளையும் கற்றுத் தருகின்றன. அப்படி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்குகின்றன. அவைகள் கற்றுத்தரும் தொழில் பாடப்பிரிவுகளாக கடைசலர், இயந்திரவேலையாள், எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், மோல்டர் என 280க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சிகள் பிரிவு வாரியாக இருக்கின்றன. இதில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயின்று பயிற்சி பெற்றுக் கொள்ளும்படியான வாய்ப்புகளை அரசு பயிற்சி நிறுவனங்கள் வழங்குகின்றன.அப்படி தொழிற்சாலைகளில் பயிற்சி பெறும் போது அங்கு அவர்கள் பயிற்சி நிறுவனத்தில் கற்றுக் கொண்ட பாடங்களையும், பயிற்சிகளையும் ஒருசேர கற்றுக்கொண்டு இங்கு செய்முறை பயிற்சியை தொழிற்சாலைகளில் முழுமையாக பெறுவார்கள். அதற்கு அவர்கள் பயிற்சி பெறுகிற ஒவ்வொரு மாதமும் பயிற்சிக்கான ஊக்கத் தொகையாக (சம்பளம் ) அரசாங்கமும், தொழிற்சாலை நிறுவனமும் சேர்ந்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். சில தொழிற்சாலைகள் ஒரு மாத சம்பளமாக அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலான ஊக்கத் தொகையினை வழங்குகின்றன. காரணம் அங்கு பயிற்சிக்கு மேல் ஒரு தொழிலாளருக்கான உற்பத்தியையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். இத்தகைய பயற்சியை மேற்கொள்ளும் போதே (ஆர்ஐ சென்டர்) எனப்படும் மண்டல தொழிற்பழகுனர் பயிற்சிமையத்தில் வாரம் ஒரு நாள் வகுப்புகள் நடத்தப் படுகின்றன.
ஐடிஐயில் தொழிற்பயிற்சி பெறும் போது படித்த பாடங்களான பணிமனைக் கணக்கீடுகள், அறிவியல், பயிற்சி பெற்ற டிரேடு சம்பந்தமான பாடங்கள், இயந்திர உற்பத்திப் பொருட்களின் முப்பரிமாணப் படங்கள் வரைதல், சமூக அறிவியல் போன்ற பாடப்பகுதிகள் மீண்டும் நடத்தப் படுகின்றன. செய்முறை பயிற்சியை மாணவர்கள் தொழிற்சாலையிலேயே பெற்றுக்கொள்வார்கள்.பயிற்சி பெறும் தொழிற்சாலையிலும் மாணவர்களுக்கு செய்யவேண்டிய உற்பத்திப் பொருளின் மாதிரிப்படங்கள் தரப்படும். அவைகளை கொண்டு தான் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டியிருக்கும்.
ஓராண்டு, ஈராண்டு அப்ரண்டீஸ் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கிற மாணவர்களுக்கு, அகில இந்திய அளவில் மீண்டும் ஒரு தேர்வு நடக்கிறது. தொழிற்பழுகுனர் பயிற்சியின் முடிவில் நடத்தப்பெறும் தேர்விலும் மொத்தம் மதிப்பெண்கள் 700.அகில இந்திய தொழிற்பழகுனர் பயிற்சி தேர்வினை முடித்ததும் , தேர்வ முடிவுகள் வந்த சில மாதங்களில் இப்போதும் தொழிற்பழகுனர் பயிற்சி மையங்கள் (ஆர்ஐ) அடிப்படையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவையும் அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில் பழகுனர் சான்றிதழ் ( புரவி ஷனல்) வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழைக் கொண்டு மாணவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த வேலைவாய்ப்புக்களை வழங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பித்து வேலைக்கு சேரும் தகுதியை பெறுகிறார்கள். மத்திய அரசு சார்ந்த ரயில்வேதுறை, ஆயுதத்தொழிற்சாலை, துப்பாக்கித் தொழிற்சாலை, அணுஆராய்ச்சி நிறுவனம், கப்பல் துறை சார்ந்த பணிகள், பாரதமிகுமின் நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் காலி இடங்களுக்காக நடத்தும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியில் சேரலாம்.
சொந்தமாக சிறு தொழிற்கூடம் அமைத்து மேலும் சிலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம். பிரபல கம்பெனிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பினை பெற்று சொந்த தொழிற்சாலையில் பொருள் உற்பத்தி செய்து மேலு<ம் சிலருக்கு வேலைவாய்ப்பை தரலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இப்படி பல்வேறு வாய்ப்புகளை தொழிற்பயிற்சி படிப்பினை பயில்வதன் மூலம் மாணவர்கள் பெறலாம்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் காலங்களிலேயே கேம்பஸ் தேர்வுகள் மூலம் பிரபல கம்பெனிகள் மாணவர்களை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு அளிப்பதும் உண்டு.
ஐடிஐ படிக்கும் மாணவர்கள் மேலும் படிக்க விருப்பம் இருந்தால் அவர்கள் பாலிடெக்னிக் கல்லுõரிகளில் சேர்ந்து படிக்கலாம். அப்போது அவர்களுக்கு ஐடிஐ யில் பயிற்சி பெற்றதால் பாலிடெக்னிக்கில் சொல்லிக் கொடுக்கும் பாடங்களும், பெறும் பயிற்சிகளும் புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் மிகவும் சுலபமாக இருக்கும்.
இப்படி பல்வேறு வாய்ப்புகளை தொழிற்பயிற்சி படிப்பினை பயில்வதன் மூலம் மாணவர்கள் பெறலாம்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் காலங்களிலேயே கேம்பஸ் தேர்வுகள் மூலம் பிரபல கம்பெனிகள் மாணவர்களை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு அளிப்பதும் உண்டு.


ஐடிஐ படிக்கும் மாணவர்கள் மேலும் படிக்க விருப்பம் இருந்தால் அவர்கள் பாலிடெக்னிக் கல்லுõரிகளில் சேர்ந்து படிக்கலாம். அப்போது அவர்களுக்கு ஐடிஐ யில் பயிற்சி பெற்றதால் பாலிடெக்னிக்கில் சொல்லிக் கொடுக்கும் பாடங்களும், பெறும் பயிற்சிகளும் புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் மிகவும் சுலபமாக இருக்கும்.

No comments:

Post a Comment