Wednesday 22 August 2012

உங்க செல்போனுக்கு இன்னிக்கு 18 வயசு... தெரியுமா?

 
இந்தியாவில் செல்போன்கள் எனப்படும் மொபைல் போன்கள் அறிமுகமாகி இன்றுடன் 17 ஆண்டு முடிந்து, 18வது ஆண்டு பிறந்துள்ளது.

ஒரு காலத்தில் தகவல் சொல்ல வேண்டுமென்றால் யாராவது ஆளை அனுப்ப வேண்டும். பிறகு தொலைபேசி வந்தது. பின்னர் டிரங்க் கால் வந்தது. அதன் பிறகு தொலைபேசியில் நவீனம் புகுந்தது. பின்னர் தந்தி வந்தது, பேக்ஸ் வந்தது. அதன் பின்னர் பேஜர் வந்தது. கட
ைசியாக வந்த தொழில்நுட்பம்தான் செல்போன் எனப்படும் மொபைல் போன்.

செல்போன் வந்ததற்குப் பிறகு உலகமே தலைகீழாக மாறி விட்டது. நினைத்ததை நினைத்த நேரத்தில் எங்கிருந்தாலும் பேச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதிலும் குறுந்தகவல் எனப்படும் எஸ்எம்எஸ் வந்த பிறகு அடேங்கப்பா... எப்படியெல்லாம் டெவலப் ஆயிட்டாங்க நம்மாளுங்க. லவ்வை சொல்வதிலாகட்டும், வதந்திகளைப் பரப்புவதிலாகட்டும், பின்னிப் பெடலெடுத்து வருகிறோம்.

உலக நாடுகளில் எப்போதோ செல்போன்கள் வந்து விட்டாலும் கூட இந்தியாவைப் பொறுத்தவரை 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதிதான் செல்போன் அறிமுகமானது. அப்போதெல்லாம் செல்போன் சாதனங்கள் செங்கல் சைஸுக்கு இருந்தது. செங்கல் போன் என்றுதான் பலரும் அப்போது செல்லமாக சொல்லிக் கொள்வர். பெரிய பெரிய சைஸில் செல்போன்களை வைத்துக் கொண்டு அந்த சமயத்தில் நிறையப் பேர் கர்வத்துடன் அலைந்த காலம் அது.

ஆரம்பத்தில் பணக்காரர்கள் கையில்தான் செல்போன் இருந்தது. காரணம், இன்கமிங்குக்கும் ஏகப்பட்ட காசைக் கொட்ட வேண்டியிருந்ததால். பின்னர் செல்போன் சேவைகள் மேம்பட்டு, சாதனங்களின் விலையும் குறைந்து, கட்டணங்களும் குறைந்த பின்னர் இப்போது மாட்டு வண்டி ஓட்டும் மன்னாரு முதல் மாடி வீட்டு கோடீஸ்வரர்கள் வரையில் ஒரே மாதிரியான செல்போன்களைப் பார்க்க முடிகிறது.

சாதாரண கொத்தனார் கூட கொரியா போனுடன்தான் பாட்டு கேட்டபடி -பெரும்பாலும் இளையராஜா பாட்டுதான் - கலவை சுமக்கிறார், வீடு கட்டுகிறார்.

இன்று ஏகப்பட்ட வசதிகளுடன் எக்குத்தப்பாக வளர்ந்து நிற்கும் செல்போனுக்கு இந்தியாவில் இன்று 18வது பிறந்த நாள். உங்களுக்கு  சில தகவல்கள் ...




ன்று எல்லோரது கைகளிலும் செல்போன் தவழ்கிறது. அழகழகான வடிவங்களில், விதவிதமான வசதிகளுடன் செல்போன்கள் கிடைக்கின்றன. அழைப்புகள், முகம் பார்த்து பேசும் வசதி, எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்., விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள் இருப்பதால் அனைவருக்கும் செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டன. அவை நீண்ட காலம் பயன்தர வேண்டுமா?
***
பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வதையும், நீண்ட நேரம் (விடியவிடிய) சார்ஜ் செய்வதும் கூடாது. இடையில் நிறுத்தி விடாமல் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகுதான் உபயோகப்படுத்த வேண்டும்.
***
`புளூடூத்’ மெனு உள்ள செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். எனவே தேவையான நேரங்களில் பயன்படுத்திவிட்டு இணைப்பை துண்டிப்பது பேட்டரி சார்ஜை சேமிக்கும். புளூடூத் வழியாக வைரஸ்களும் பரவ வாய்ப்பிருப்பதால் அதை ஆப் செய்து வைத்திருப்பது செல்போனுக்கும் நல்லது.
***
தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்’, `ஸ்டார்ட் அப் டோன்’ ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம். அதேபோல வைப்ரேஷன் அதிர்வு மீட்டிங் நேரத்திலும், சத்தம் நிறைந்த தியேட்டர் போன்ற இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டிய வசதி. இதை எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருப்பது பேட்டரி சார்ஜை வீணாக்கும்.
***
`பவர் சேவர் லைட்’, `பேக் லைட்` ஆகியவற்றை அணைத்து வைத்திருப்பது பேட்டரியின் ஆற்றலை மிச்சப்படுத்தும். `பேக் லைட்’ என்பது கீபோர்டின் பின்புறம் ஒளிரும் லைட் ஆகும். `டோன்’கள் உபயோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற `லைட்’கள் அவசியமில்லைதான். இரவு நேரத்தில் மட்டும் தேவைப்படுபவர்கள் `ஆன்’ செய்து பயன்படுத்தி பேட்டரியின் ஆயுளை காக்கலாம். `டிஸ்பிளே செட்டிங்ஸ்’-இல் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.
***
பயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்’-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்’ செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும். இது செல்போனுக்கு மட்டுமல்லாது அனைத்துவிதமான எலக்ட்ரானிக் டிவைஸ்களுக்கும் பொருந்தும்.
***
ம்ப்யூட்டர், செல்போன்களில் உள்ள வேடிக்கை நிறைந்த எலக்ட்ரானிக் விளையாட்டுகள் எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதனால்தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் `கேம்ஸ்`களில் மூழ்கி விடுகிறார்கள். நிஜத்தில் விளையாடுவது எப்படி உடலில் அதிகப்படியான கலோரிகளை எரிக்குமோ, அதுபோலவே செல்போனில் விளையாடுவது அதிக அளவில் பேட்டரி சார்ஜை காலியாக்கி விடும். பேட்டரி நலன் கருதினால் குறைவாக விளையாடுங்கள்.
***
தேவையற்ற ஆப்ஷன்களை எப்படி `ஆன்’ செய்து வைக்கக்கூடாதோ, அதுபோலவே பயன்படுத்தாத நேரங்களில் செல்போன்களையும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் செல்போன்களை அணைத்து வைப்பதே கிடையாது. அவசர உதவி எண்கள் போல எல்லா நேரத்திலும் ஆனிலேயே இருக்கிறது. இதுவும் பேட்டரி சார்ஜை வீணாக்கும் செயல் தான். குறைந்தபட்சம் தூங்கும் நேரத்திலாவது அணைத்து வைக்கலாமே!
***
வர்ச்சிகரமாக தோன்றுவதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் ஆகியவற்றை பயன்படுத்துவதை பலரும் விரும்புகிறார்கள். இவை அதிகமாக சார்ஜ் உறிஞ்சுபவை. சாதாரண படங்களை வால்பேப்பருக்கு பயன்படுத்துவதன் மூலம் அதிக சார்ஜை மிச்சப்படுத்தலாம். அதேபோல `டவர்’ குறைவாக உள்ள இடங்களில் போன்களை உபயோகித்தால் நிறைய பேட்டரி ஆற்றல் வீணாகும். அப்போது `ஆப்’ செய்து வைக்கலாம்.
***
நீண்ட நேரம் நிலைத்து நிற்கக்கூடிய பேட்டரிகள் கொண்ட நவீன செல்போன்கள் நிறையவே கிடைக்கின்றன. எளிதாக சார்ஜ் செய்யும் வசதிகளுடைய போன்களும், பயன்படுத்தாத, தேவையற்ற ஆப்ஷன்களை தானாக ஆப் செய்துகொள்ளும் நவீன மொபைல்களும் கூட விற்பனைக்கு கிடைக்கின்றன. எனவே விலை குறைவாக இருக்கிறது என்று எண்ணி தரமற்ற செல்போன், பேட்டரிகளை வாங்கி விட்டு அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment