Saturday 29 September 2012

தர்பூசணி பழம் புத்துணர்ச்சி தரும் கோடைக் கனி...

கோடைக்காலத்தில் அதிகமாக விற்கப்படும் தர்ப்பூசணி கோடைக் கனி என்றும் கூறப்படும்.100 டிகிரி வெப்பத்தைத்தாண்டி கோடைக்காலம் மக்களை வாட்டி எடுக்கும் இந்நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு குளு குளு பழம் சந்தேகமில்லாமல் தர்பூசணிதான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்ட தர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது இவைகள் சிவந்த நிறத்தில் மட்டுமல்லாமல் வெண்மையாகவும் கூட காணப்படும். நிறம் எதுவாயினும் இதை உண்ணலாம். சில இனிப்பாகயிருக்கும். சில ருசியே இல்லாமல் சப் பென்றும் இருக்கும். இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது. இது வைட்டமின் சி, பி. ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
பழத்தில் பல நன்மைகள் உள்ளது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமணி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.
தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போ ஹைட்ரேட் மற்றும் பைர் ஆகியவை உள்ளது. உடல் நலத்திற்கு ஊட்டசத்து வழங்க கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதை பழமாக வாங்கியும் அல்லது பழச்சாறாகவும் சாப்பிடலாம். 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போ ஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.
இதய நோய்கள் மற்றும் புற்று நோய் ஆண்டியாக்ஸிடண்ட் விகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
கண்களை பராமரிக்க வைட்டமின் ஏவும், மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சி யும் கொண்டு செயல்படுகிறது. உடலின் முக்கிய உறுப்புகளான தமணி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் அர்ஜினைன் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும். மேலும் தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரக்கூடியது.
தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது. நம் ஊரில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.
ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே மிஞ்சக் கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தர்பூசணியில் உள்ள பைட்டோ - நிïட்ரின்ட்ஸ் என்ற சத்துக்கள் உடம்பை ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
அதாவது ஒரு வயாகரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்சபூணி பழத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது. தர்பூசணியில் அது போல் உள்ள `சீட்ரூலின்' என்ற சத்து பொருள், வயாகராவை போல் ரத்த நாளங்கள் விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனான' எனும் வேதிப் பொருளாக மாற்றப்படுகிறது.
அது இதயத்துக்கும், ரத்தம் ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில் முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல் பகுதி அதாவது வெண்மை பகுதியில் தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
தர்பூசணியின் பலன்கள்:
கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, இரும்பு சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்பு சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச் சிறந்த வைட்டமின் சி, வைட்டமின் ஏ இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு வைட்டமின் பி6ம், பி1ம் கணிப்புக்களான பொட்டாசியம் மாங்கனீசும் உண்டு.
பழத்தின் சிவப்பு பகுதியை மட்டும் கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத் தூளும் அதன் மீது தூவியும் சாப்பிடலாம். மிகவும் எளிமையாக புத்துணர்ச்சிïட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்ட தர்பூசணித் துண்டுகளை, மிக்சியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓட விட்டு குளிர் பதனப்பெட்டியில் வைத்து பரிமாறலாம். விரும்பினால் சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
தர்பூசணியின் பூர்வீகம்.......
தர்ப்பூசணியின் பூர்வீகம் தென்ஆப்பிரிக்காவில் உள்ள கலகரி பாலைவனப்பகுதியை சேர்ந்ததாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் நைல் வெளிப்பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டது. பின்னர் 10-ம் நூற்றாண்டு காலவாக்கில் சீனாவில் பயிரிடப்பட்டது. 13-ம் நூற்றாண்டு பொழுதுகளில் மூர்கள் அதனை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினர்.
.

தர்பூசணிக்கு என்ன சிறப்பு?
தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், 'ஐயையோஇவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே...!" என்று அங்கலாய்க்கும் தகவல் இது.
அதாவதுதர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ராஎன்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர்இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படிதர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள்உடம்பை ஆரோக்கியமாகவும்சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.
இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
அதாவதுஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்திதர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளதுஅதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்தர்பூசணிக்கு`ஆசையைஅதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும்பழங்களிலும் உள்ளனதர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்என்ற சத்துபொருள்வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்துரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்தர்பூசணியை சாப்பிட்ட பிறகு,ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்', `அர்ஜினைனாகஎனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறதுஅது இதயத்துக்கும்ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
வெள்ளை பகுதியில்தான்...
இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானதுசர்க்கரை நோய்க்காரர்களுக்கும்இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம்இதில்முக்கியமானது என்னவென்றால்தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவதுவெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள்வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல்,தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம்உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடுஇரும்புச் சத்தும் நிறைந்ததாகும்இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவுபசலைக் கீரைக்கு சமமானதாகும்.
பழத்தின்சிவப்பு பகுதியை மட்டும்கத்தியால் செதுக்கி எடுத்துமுள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டுதுண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும்மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையானபுத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்டதர்பூசணித் துண்டுகளைமிக்ஸியில் போட்டுஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டுகுளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்விருப்பமானால்சிறிது சர்க்கரை,எலுமிச்சம் பழச்சாறுஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம்உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடுஇரும்புச் சத்தும் நிறைந்ததாகும்இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவுபசலைக் கீரைக்கு சமமானதாகும்.
மிகச்சிறந்த விட்டமின் யும் விட்டமின் A (ஒரு துண்டு பழத்தில் 14.59 மில்லி கிராம் விட்டமின் Cமற்றும் 556.32 IU of விட்டமின் A) இதில் உண்டுஇதைவிட தேவையான அளவு விட்டமின் B6ம் விட்டமின் B1 ம்கனியுப்புக்களான பொட்டாஷியம் மற்றும் மக்னீஷியமும் உண்டு.
பழத்தின்சிவப்பு பகுதியை மட்டும்கத்தியால் செதுக்கி எடுத்துமுள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டுதுண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும்மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையானபுத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
விதை நீக்கப்பட்டதர்பூசணித் துண்டுகளைமிக்ஸியில் போட்டுஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டுகுளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்விருப்பமானால்சிறிது சர்க்கரை,எலுமிச்சம் பழச்சாறுஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.
வெப்பத்தை தணிக்கஇந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள்.

இந்த தர்பூசணி பற்றி சுவையான தகவல் ஒன்று:
ஜப்பானில் சில்லறைக்கடைகளும்பழங்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஒரு பிரச்சினையைச் சந்தித்தன.அவர்களது கடைகள் மிகப்பெரியதாக இல்லை.ஆகவே கடையிலிருக்கும் சிறிய இடமும் வீணாகக் கூடாது எனக் கருதினர்.
தர்ப்பூசணிப் பழங்கள் பெரிய உருளைவடிவானவை.வாடிக்கையாளர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுபவை.ஆனால் கடைகளில் மிகப்பெரும் இடத்தை அவை அடைத்துக்கொண்டன.
இதனால் விவசாயிகளிடமிருந்து கடைச் சொந்தக்காரர்களால் அவை வாங்கப்படும் வீதம் குறைந்தது.
எனவே விவசாயிகள் ஒன்று கூடிச் சிந்திக்கத் தொடங்கினர்.தர்ப்பூசணிகளை பெட்டி வடிவில் வளர்த்தெடுப்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர்.அதன் முடிவில் தர்ப்பூசணிகள் சிறிதாக இருக்கும்போதே பெட்டியில் அடைக்கப்படுமிடத்து அது பெரிதாகும் போது பெட்டி வடிவிலேயே இருக்குமெனக் கண்டறிந்தனர்.
அதன்படியே காய்களை உருவாக்கத்தொடங்கினர்.கடையிலும்,வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியிலும் பெரும் இடத்தை அடைக்காத காரணத்தால் கடைக்காரர்களாலும்,வாடிக்கையாளர்களாலும் விரும்பி வாங்கப்பட்டன அப்பெட்டி வடிவக் காய்கள்.
சில்லறை விற்பனையில் அதிக விலை
சென்னைகோடைகாலம் துவங்கவுள்ள நிலையில் தர்பூசணி வரத்து சென்னைக்கு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதுமொத்த விற்பனையில் தர்பூசணி விலை குறைந்துள்ள நிலையில்,சில்லறை விற்பனையில் அதிக விலையில் விற்கப்படுகிறது.
கோடைகாலம் துவங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் கடுமையாகவுள்ளதுவெயிலை சமாளிப்பதற்காக பழரசம்குளிர்பானம்இளநீர் ஆகியவற்றை பருகி வருகின்றனர்நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கோடை தாகத்தை தீர்ப்பது தர்பூசணி.
தர்பூசணி வரத்து சென்னைக்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுகோயம்பேடு மார்க்கெட்டிற்கு திண்டிவனம்விழுப்புரம்விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள் தோறும் 15லாரிகள் மூலம் 150 டன்களுக்கு மேல் விற்பனைக்கு எடுத்துவரப்படுகிறதுநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் சென்று மொத்த விலையில் அவற்றை வாங்கிச் சென்று,விற்பனை செய்து வருகின்றனர்.
கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் ஒரு டன் தர்பூசணி 6,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறதுகடந்தாண்டு இதே நாட்களில் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.கோயம்பேடு சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி முதல் ரூபாய்க்கு விற்கப்படுகிறதுஅவற்றை வாங்கி செல்லும் வியாபாரிகள் ஒரு கிலோ தர்பூசணியை 10 முதல் 12ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
உலகிலேயே விலை அதிகம் 2.5 லட்சத்துக்கு கறுப்பு தர்பூசணி ஏலம்
ஒரே ஒரு தர்பூசணி பழத்தை எவ்வளவு விலை கொடுத்து வாங்குவீர்கள்ம்...ம்.. அதிகபட்சமாக50 ரூபாய்ஆனால் ஜப்பானில் ஒரே ஒரு தர்பூசணி ரூ.2.5 லட்சத்துக்கு ஏலம் போய் உள்ளது.
டென்சுகே என்ற கறுப்பு நிற தர்பூசணி ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் மட்டும்தான் விளைகிறதுஅதற்கு நல்ல மவுசு இருந்து வருகிறதுஜப்பானில் பரிசுப் பொருட்களாக கூட தர்பூசணி தரப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் முறையாக 65 கறுப்பு நிற தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளது.அதில் ஒன்றுதான் இதுமுதல் முறையாக விற்பனைக்கு வருவதை ஏலம் விடுவது ஜப்பானில் வழக்கம்.அதை ஏலம் எடுப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.
இந்தாண்டு ஏலம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டதுஅதில் ஒரு கறுப்பு டென்சுகே தர்பூசணி ரூ.2.5 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளதுஇதுவரை நடந்த கறுப்பு தர்பூசணி ஏலங்களில் இதுதான் அதிகபட்சம்மேலும் ஒரே ஒரு கறுப்பு தர்பூசணி இந்த அளவு விலை போயுள்ளது உலகில் வேறெங்கும் இல்லை எனவும் கருதப்படுகிறது.
கடல் உணவுகளை வியாபாரம் செய்யும் ஒருவர் இந்த விலை கொடுத்து தர்பூசணியை வாங்கியுள்ளார்.இதற்கு காரணம் தர்பூசணி மீது உள்ள காதல் அல்லஉள்ளூர் விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.
இந்த தர்பூசணி 7.7 கிலோ எடை உள்ளதுஏப்ரல்மே மாத காலநிலை காரணமாக இதில் இனிப்பு அதிகமாக இருக்கிறதாம்.
பிற வகை தர்பூசணிகள் விலை இன்னும் அதிகமாக இருக்கிறதுகடந்த மாதத்தில் யுபாரி வகையை சேர்ந்த இரண்டு தர்பூசணிகள் ரூ.96 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment