Wednesday 31 October 2012

402 வது மைசூர் தசரா விழா!! ஒரு பார்வை...






உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவில் லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க யானைகள் ஊர்வலம், தீப்பந்த ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. 
அரசு விழாவாக நடத்தப்படும் தசரா விழாவையொட்டி, 10 நாள்களாக மைசூரில் பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
யானை ஊர்வலம்: அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த தங்க அம்பாரியைச் சுமந்து நின்றிருந்த அர்ஜுனா தலைமையிலான யானை ஊர்வலத்தை மலர்தூவி பூஜை செய்தபின்னர், காவிரி, சைத்ரா உள்ளிட்ட 9 யானைகள் முன்னால் செல்ல, யானைப் படை, 116 கலைக் குழுக்கள், 36 வாகனங்கள் பின்னால் அணிவகுத்தன. ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னி மண்டபம் நோக்கிப் புறப்பட்டது.
மூன்று ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற பூஜாகுனிதா, தொல்லுகுனிதா, கோலாட்டம், கம்சாலே, கருடகொம்பே, நகரி, கேலுகுதிரே, லம்பானி நடனம் உள்ளிட்ட கிராமிய, கலாசார நடனங்கள், ஆடல் பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்தின.
மக்கள் வெள்ளம்: தசரா விழாவின் அங்கமாக நடைபெற்ற யானைகள் ஊர்வலத்தைக் காண இந்தியா தவிர, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரண்டிருந்தனர். சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து யானைகள் ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். இடம் கிடைக்காதவர்கள் மரக்கிளைகள், கம்பங்கள், உயரமான கட்டடங்கள், பஸ்கள் மீது நின்று பார்த்து மகிழ்ந்தனர்.
தீப்பந்த ஊர்வலம்: பன்னி மண்டபத்தை அடைந்த யானைகள் ஊர்வலத்தைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸôர் திணறினர். பன்னி மண்டபத்தில் தசரா விழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த  ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

அரண்மனையானது மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை மக்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.







வீடியோவை பார்க்க..




தொகுப்பு: மு.அஜ்மல் கான்.

Monday 29 October 2012

நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படப்போகும் விளைவு!!- ஒரு சமுதாய பார்வை ...




 கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.சிறுவணிகத் துறையில் அதாவது மளிகைப் பொருட்களை விற்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இந்த அனுமதியை அளித்துள்ள மத்திய ஆட்சியாளர்களின் செயலைப் பற்றி இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், தமது ஓட்டு சீட்டு அரசியலுக்கு ஏற்ப பல வண்ண கருத்துகளை தெரிவித்துள்ளன. இதன் மூலம் மத்திய அரசு எந்த கொள்கையின் அடிப்படையில், இந்த அனுமதியை அளித்துள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.தாய 



”காங்கிரசு ஆட்சியாளர்கள் என்பதனால்தான் இந்த அனுமதியை அளித்துள்ளனர். நாங்கள் ஆட்சி ஆண்டால் இப்படி ஒரு அனுமதியை வழங்கியிருக்க மாட்டோம்”, என்பதை போன்று நமது காதில் பூ சுற்றுகின்றனர். தாங்கள்தான் மக்கள் நலனிலும், நாட்டின் நலனிலும் அக்கறை உள்ளவர்களைப் போன்று நாடகமாடுகின்றனர்.

அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதில் காங்கிரசு கட்சிக்கும், ஏனைய கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காங்கிரசு அரசின் இந்த முடிவை எதிர்ப்பதாக கூறும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஆளும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டுக் கம்பெனிகளின் வாசலில் தவமிருக்கிறார். மேற்குவங்கத்தை ஆண்ட போலிகம்யூனிஸ்டு முதல்வர் அமெரிக்காவிற்கே சென்று பன்னாட்டு கம்பெனிகளின் காலில் விழுந்துவிட்டு வந்தார்.

தமிழக முதல்வர் ஜெயா மக்களுக்கே மின்சாரம் இல்லாவிட்டாலும், பன்னாட்டு கம்பெனிகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இலவசமாக, தடையில்லாமல் மின்சாரம் தந்து தனது விசுவாசத்தைக் காட்டி வருகிறார். இவரைப் போன்றவர்தான் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி. ஆனால் இவர்களோ சில்லரை வணிகத்துறையில் தங்களது மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்!

எந்த உலகமயமாக்களின்படி சிறப்பு பொருளாதாரமண்டலங்களை கொள்கை ரீதியாக இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, அந்தக் கொள்கையின் இன்னொரு பகுதிதான் சில்லரை வணிகத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதுமாகும்.

மளிகைக்கடை வைக்க அன்னிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை, மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம் என்கிறார் மத்திய மந்திரி மாமா நாராயணசாமி. மாமாவின் இந்த பேச்சு மத்திய அரசின் ஜனநாயகத் தன்மையை காட்டுவதாக தவறாக நினைத்துவிடாதீர்கள்! இந்த அறிவிப்பு நயவஞ்சகம் நிறைந்தாகும். மத்திய அரசின் இந்த நயவஞ்சகத்தைப் பற்றியும், சில்லரை வணிகத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றியும் இனி பார்ப்போம்.


1,பல நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை விற்கும் கடைகள் என்றால் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்யலாம்.

2,ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை மட்டும் விற்பதாக இருந்தால் 100 சதவீதம் முதலீடு செய்யலாம்...

என்று மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வணிகத்துறை அமைச்சர் மாமா ஆனந்த் சர்மா, சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், ஏற்படப் போகும் நன்மைகள் என்று சிலவற்றை பட்டியலிட்டார்.அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்களை கட்டுபடுத்தும் விதிமுறைகளையும் வகுத்துள்ளதாகவும் கூறினார்!

1. பத்துலட்சம் மக்கள் தொகைக்கும்  மேற்பட்ட நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

2.ரூபாய் 300/- கோடி முதலீடு செய்ய தகுதியுள்ள நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

3.பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு விவசாயிகளிடம்தான் பொருட்களை கொள்முதல் செய்யவேண்டும். போன்ற நிபந்தனைகளை நமது மாமாக்கள் விதித்துள்ளார்களாம்!

10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் மளிகை கடை வைக்க அனுமதிப்போம்”, என்பது முதற்கட்ட நடவடிக்கைதான்.அன்னிய நிறுவனங்களை முதலில் பெரிய நகரங்களில் அனுமதித்த பின்னர்,அந்த நகரங்களில் உள்ள சிறுவியாபாரிகளை விட சிறிது குறைவான விலைக்கு பொருட்களை அவர்கள் விற்பார்கள்.இதனால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அந்நகரங்களில் சிறுவணிகர்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள்.

பெரு நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளில் குறைவான விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக அறிந்துகொள்ளும் ஏனைய நகரங்களில் உள்ள  மக்களும், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டுள்ள தூண்டிலில் சிக்கிக்கொள்வார்கள்.இதன் பிறகு அனைத்து இடங்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்துவிடும்.சிறிது காலத்தில் இங்கே உள்ள சிறுவணிகர்களும் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள்.இதன் பிறகு உலகில் உள்ள மாபெரும் நிறுவனங்களாக உள்ள ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டுமே சில்லரை வணிகத்தில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்துவார்கள்.

சில்லரை வணிகத்தில் உள்ள கோடிக்கணக்கான வணிகர்கள் மட்டுமல்ல,அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ள பரந்து, விரிந்த வலைப்பின்னலும் முற்றாக அறுத்தெரியப்பட்டுவிடும்.

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும், இந்த வலைப்பின்னலைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.சிறுவணிகர்கள் ஒழித்துக்கட்டப் படுவதை விட, இந்த வலைப்பின்னலை அறுத்தெறிவதுதான் மிகவும் அபாயகரமானதாகும்.இந்த வலைப்பின்னலில் நான்கு கோடி சிறு வணிகர்கள்,அக்கடைகளில் வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,80 கோடி விவசாயிகள்,லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள்,லாரி ஓட்டுனர்கள்,சுமை தூக்கும் தொழிலாளார்கள்,சிறு தொழில் துறையில் உள்ள கோடிக்கணக்கானோர்,நெசவாளர்கள் என்று நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இந்த வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் அனைவரின் வாழ்க்கையையும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு சூறையாடிவிடும்.

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்வதால்,விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்,இதனால் மக்களுக்கு குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் மத்திய  அமைச்சர் ஆனந்த் சர்மா நமக்கு பொறி வைக்கிறார்.

மத்திய  அமைச்சர் ஆனந்த் சர்மா இந்த வாதம் முழு பொய்யுமல்ல,முழு உண்மையும் அல்ல.அரை உண்மையாகும்.முழு பொய்யை விட அரை உண்மை ஆபத்தானது.

பன்னாட்டு நிறுவனங்களை சில்லரை வணிகத்துறைகளில் அனுமதிப்பதன் மூலம் சிறு வணிகர்கள் முற்றாக ஒழிக்கப் படும் வரை, ஒப்பீட்டளவில் இவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் சிறிது விலை குறைவாக மக்களுக்கு கிடைக்கும்.விவசாயிகளுக்கும் இதே போன்று சிறிது கூடுதல் விலை கிடைக்கும்.

சிறு வணிகத்துறை மூலம் பிணைக்கப்பட்டுள்ள வலைப்பின்னல் அறுத்தெரியப் பட்ட பின்னர், பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் அனைத்து அம்சங்களிலும் ஏகபோக ஆதிக்கம் பெற்று விடுவார்கள்.இதனால் இப்போது இருப்பதைவிட பன்மடங்கு பொருட்களின் விலையை அதிகரித்து விடுவார்கள்.விவசாயிகளின் விளை பொருட்களின் விலையையும்,தங்களின் விருப்பத்திற்கும், கொள்ளை லாபத்திற்கும் ஏற்ப குறைத்து விடுவார்கள்.

நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளையும்,தமது பிடிக்குள் கொண்டுவந்து அவர்கள் விரும்புகிற படிதான் உற்பத்தி செய்ய ஆட்டுவிப்பார்கள்.இவர்களின் நிபந்தனைகளை நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் பெரும்பான்மையாக உள்ள சிறு விவசாயிகள் ஏற்க முடியாமல் ஒன்று விவசாயத்தில் இருந்தே விரட்டி அடிக்கப்படுவார்கள்.அல்லது தமது நிலங்களிலேயே பன்னாட்டு 
நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுவிடுவார்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.

இதன் பிறகு ஆட்சியாளர்களே நினைத்தாலும் இவர்களைகட்டுப்படுத்த முடியாது.ஏனேன்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சில்லரை வணிகத்திற்கும்,விவசாயம் மற்றும் ஏனைய துறைகளுக்குமான வலைப்பின்னல் அறுத்தெறியப்பட்டு, இவற்றின் மீதான முழுக்கட்டுப்பாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும்.இந்த சூழலில் ஆட்சியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த நினைத்தால்,தாங்கள் உருவாக்கிய வலைப்பின்னலை அவர்கள் சிறிது சிக்கலுக்கு உள்ளாக்கினாலும், நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும்.இதை தவிர்ப்பதற்கு மீண்டும் உள்நாட்டு வலைப்பின்னலை உருவாக்குவதும் உடனடி சாத்தியம் இல்லை.ஏனென்றால் உள்நாட்டு வலைப்பின்னலை உருவாக்குவதற்கான மூலதனம் உட்பட அனைத்து ஆற்றலையுமே  அப்போது நாம் நாம் இழந்து போயிருப்போம்.

எனவே பன்னாட்டு நிறுவனங்கள்தான் நாட்டின் சமூகம்,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும்,கட்டுப்படுத்தும் சக்திகளாக உருவெடுத்திருப்பார்கள்.
நாட்டின் தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவானதுதான்.தொழிற்துறையில் சில கோடி தொழிலாளர்கள்தான் பாதிக்கபடுவார்கள்.தொழிற்துறையின் வலைப்பின்னல் எப்போதுமே ஏகாதிபத்தியங்களோடுதான் பிணைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் ஒட்டுமொத்த நாட்டையே நிலைகுலைய வைக்கும் அளவிற்கு அது வலிமையானது அல்ல.  


இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.

 வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.

 அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்! எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் ""கொள்முதல் பாணி'' இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.


 உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த ""மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த'' நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக ""பாடுபட்ட சக்திகள்'' வென்றுவிட்டன. ஆனால், ""இந்தியா'' தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.

 பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

 இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

  இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.

 பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.

 அதேசமயம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.

 இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.


 இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.

 வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் "கொள்முதல் பாணி' ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.

 விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

 நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.

 மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.

 சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

 கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: ""சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் - அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்''.

 இதைவிட முக்கியம், சிறு - குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.

 கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.

 இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.

 இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, ""நகர்ப்புற விலை நிர்ணயம்'' கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.

 நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?

 அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.

 இப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.

 கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.

 சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்!

 இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.

 கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.

 இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.

 வார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.

 ஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.

 மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.

 மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.

 இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர்.

 இங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.

 கால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத்தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.

 அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.

 விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு.

 கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.

 அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.

 எனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.

 இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் ""எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது'' என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்பட

குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்!


  
ஆனால்,சில்லரை வணிகத்தின் வலைப்பின்னலோடு ஏறத்தாழ நூறுகோடி மக்களும் பிணைக்கப்பட்டுள்ளதால், நாடே அன்னிய சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும், அதிகாரத்திற்குள்ளும் சென்றுவிடும்.ஆகவே சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்பது நாட்டை மீண்டும் காலணியாக்கும் உச்சகட்ட செயலாகும்.1947-க்கு முந்தைய காலணி ஆதிக்கத்தை விட இப்போதைய இந்த வடிவிலான காலணி ஆதிக்கம் கோரமானதும்,அழிவை மட்டுமே உள்ளடக்கியதுமான செயலாகும்.

எனவே மத்திய அரசின் இந்த துரோகத்திற்கு எதிராக இந்த நிமிடமே மக்களை   அமைப்பாக அணிதிரட்டி போராடுவது அவசர,அவசிய தேவையாகும். 

   நன்றி: அசோக் சாவ்லா, எஸ் .குருமூர்த்தி, செந்தில் குமார், சுரேஷ்குமார்.

  தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

ஏலச்சீட்டு : நேர்மைக்கு ஒரு சோதனை!


மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்த ஒரு செய்தி. "தீபாவளி சீட்டுக்கு பொருட்கள் தர முடியாததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த, எட்டு பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் ". தீபாவளி சீட்டு நடத்திய இருவரால் - சொன்னப்படி, சொன்ன நேரத்தில் பணத்தை தர இயலவில்லை. விளைவு, ஊராருக்கு பயந்து சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திலிருந்த எட்டு பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இது குறித்த தினமலர் இணைய செய்தி. ​

"வேலூர் மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது தம்பி வெங்கடேசன். விவசாயிகளான இருவரும் அக்கா, தங்கைகளான சுகந்தி, 40, இறைமதி, 30 ஆகியோரை திருமணம் செய்து கொண்டனர். சுகந்திக்கு, இரண்டு மகள்களும், இறைமதிக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுகந்தியும், இறைமதியும் தீபாவளி சீட்டு நடத்தினர். இவர்களிடம் மாதம், 250 ரூபாய் வீதம் கட்டினால், ஆண்டு கடைசியில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன், கால் பவுன் தங்கம், மூன்று பிளாஸ்டிக் நாற்காலி, 1,500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு, தலா, இரண்டு கிலோ இனிப்பு, காரம், ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர் கொடுப்பதாக கூறினர்.

இவர்கள் பேச்சை நம்பி, வேப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,356 பேர் பணம் கட்டினார். அதற்கு ரசீதும் கொடுத்தனர். மாதா, மாதம் சேர்ந்த பணத்தை வட்டிக்கு விட்டு, தீபாவளி சீட்டுக்கான பொருட்களை கொடுப்பது வழக்கம். அதே போல் இவர்களிடம் சேர்ந்த பணத்தை வட்டிக்கு விட்டனர். வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. பவர் ஊரை விட்டும் ஓடி விட்டனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சீட்டுக்கான பொருட்களை சீட்டு கட்டியவர்கள் கேட்க துவங்கினர்.

பலரிடம் கடன் கேட்டும் கிடைக்காத காரணத்தினால், சுகந்தி, இறைமதி, சங்கீதா, கோமதி, ஹேமலதா, லாவண்யா, கோவிந்தராஜ், வெங்கடேசன் ஆகியோர் நேற்று அதிகாலை அரளி விதை அரைத்து குடித்தனர். மேலும், தூக்க மாத்திரையை சாப்பிட்டனர். இதில், எட்டு பேரும் மயங்கி விழுந்தனர். காலை, 10:00 மணிக்கு மேல், வீட்டு கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டுக்கு சென்று பார்த்தனர். வீட்டில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்டு, வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களது உடல் நிலை, மேலும் கவலைக்கு இடமானதால், அங்கிருந்து, சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்" என்கிறது செய்தி. நிச்சயம் "வாழ்க்கையும், வாழுவதும் எளிதன்று..." அதற்காக மரணமும் நமக்கு சுலபமாகிவிடாது. மேற் கூறிய சம்பவம் சீட்டு நடத்தி தம் வாழக்கையை தொலைத்தவர்களின் ஞாபகங்களை கிளறியது.

நானும் கூட நண்பர்களிடம் பணம் போட்டு இழந்திருக்கிறேன். தொழில் நிமித்தமாக பழகுபவர்கள், "நான் ஒரு ஏலச்சீட்டு நடத்தறேன். போடுங்க" எனும் போது தவிர்க்க இயலாது. "சிறிய தொகை. வந்தா வருது - போனா போகுது" சீட்டு போடவில்லை எனில் பழக்கத்தில் ஓட்டை விழுந்து தொழில் பாதிக்கும். ஒருவர் ஏலச்சீட்டு, மாதந்திர சீட்டு போன்றவற்றை துவங்கும்போதே - நம்மால் யூகித்து விட முடியும். இவரால் இதை ஒழுங்காக நடத்த முடியுமா, முடியாதா என்று.

"அதீத செலவாளிகளால் இவற்றை திறம்பட நடத்தவே இயலாது" ஏலச் சீட்டு, மாதந்திர, வாரந்திர சீட்டு பிடித்து ஜெயித்தவர்களை விட தோற்றவர்களே அதிகம். தன் வரை சிக்கனமாக உள்ளவனால், பண விஷயத்தில் மிகுந்த மனக்கட்டுப்பாடு உள்ளவனால் மட்டுமே -இத்தகைய தொழிலில் ஜெயிக்க முடியும். "எவ்வளவு பணம் கையில் புழங்கினாலும் அது நம் பணம் இல்லை" என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏலச்சீட்டு மட்டும் எந்த நிதி நிறுவனமாயினும் திவாலாக இரண்டே காரணம். ஒன்று நிறுவனம் நடத்துபவர்களால், மற்றது வாடிக்கையாளர்களால்.

ஒரு உதாரணம். ஓரளவுக்கு வளர்ந்துள்ள ஒரு ஏலச்சீட்டு நிறுவனத்தில் அவர் பணி புரிந்தார். அவருக்கு குறைவான சம்பளம் என்பதால் - வருமானத்திற்கு வேறு தொழில் செய்ய நினைத்தார். தாமே சிறிய அளவில் ஏலச்சீட்டு நடத்தினால் என்ன என்று நினைத்தார். பெரிய தொகையை நிறுவனத்திற்காக போடுபவர்கள், தனக்காக சிறிய தொகையை போட மாட்டார்களா என்ன என்று நினைத்து, தான் பணிபுரியும் நிறுவன வாடிக்கையாளர்களிடமே கேட்டார். பலன் இருந்தது. ஏலச் சீட்டு நிறுவனத்திற்கு மாதம் பத்தாயிரம் கட்டுபவர்கள், இவரிடம் ஆயிரம் ரூபாய் கட்ட மறுக்கவில்லை.


ஏலச்சீட்டு எதிர்பார்த்ததற்கு மேல் சிறப்பாக போனது. ஆனால் அவரின் நேர்மைக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அந்த சோதனையில் - பண விஷயத்தில் தோற்று போனார். திடீரென்று மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வைத்திய செலவு வளர்ந்ததில், செலவுக்கு சீட்டு பணத்தை தொட்டார். விளைவு. வாடிக்கையாளர்களை எதிர் கொள்வதில் சிரமம். "பையன் ட்ரீட்மெண்டக்கு தானே செலவு பண்ணினேன். ஆனால் யாரும் என் சிரமத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க" என்றார். "இந்த பணம் இல்லேன்னா வைத்திய செலவுக்கு நீங்க என்ன பண்ணி இருப்பீங்க." என்று கேட்டேன்.

அவருக்கு புரிந்தது. வேறு ஒரு வழியை நாடி இருப்பார். பணம் கையில் இருந்ததால் அந்த வழியை சிந்திக்கவில்லை. விளைவு. கெட்ட பெயர். வாடிக்கையாளர்கள், "சொன்னப்படி பணம் நீங்க தரலன்னா - உங்க ஆபீஸ்ல வந்து சொல்லி உங்க வேலைக்கே உலை வைச்சிடுவோம்" என்றதும் தான் சம்பவத்தின் வீரியம் புரிந்து - சிலரிடம் கடன் வாங்கி, மனைவி நகையை விற்று பிரச்சனையை தீர்த்தார். இதை முதலிலேயே செய்திருந்தால் - வெற்றிக்கரமாக ஏலச்சீட்டை தொடர்ந்திருக்கலாம். இப்போது இவரை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள் வாடிக்கையாளர்கள்.

பெரும்பாலும் சீட்டு நடத்துவோர் "எவ்வளவு பணம் கையில் புழங்கினாலும் அது நம் பணம் இல்லை" என்கிற எண்ணம் இல்லாததால் தான் அவர்கள் தரப்பில் தோற்பது. மேற் கண்ட சம்பவத்தில் நண்பர் மருத்துவ செலவு செய்தார். பலர் நிறுவன பணத்தில் 'உல்லாசமாய்' இருந்து வீணாய் போகிறார்கள். அடுத்து வாடிக்கையாளர்களால் திவாலாகும் மனிதர்கள். தினமலர் செய்தியில் நிகழ்ந்தவை போல வாடிக்கையாளர்கள் வாங்கிய பணத்தை சரி வர கட்டாமை. பெரிய ஏலச் சீட்டு நிறுவனங்கள் வீட்டு பத்திரம் மற்றும் வசதி படைத்தவர்களின் ஜாமின் கையெழுத்தை பெற்று கொண்டு தான் பணம் தருகிறார்கள்.

வாங்கிய பணத்தை ஒழுங்காக தரவில்லை எனில் அடியாளை விட்டு மிரட்ட தவறுவதில்லை. அதனால் பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களால் திவாலாகும் வாய்ப்பு இல்லை. ஆனால் வீட்டில், அதுவும் பெண்களால் நடத்தப்படும் சீட்டுகளில் - அவர்களால் கறாராக பேச முடியாது. "வாடிக்கை கெட்டுவிடும்" என்பதனால். மேலும் முகத்தாட்சண்யம் பார்ப்பார்கள். விளைவு. வடிவேல் "காத்தவராயன்" படத்தில் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அலைந்தது போல அலைய வேண்டியது தான்.
அதனால் சரியான வாடிக்கையாளர்களை தேர்வு செய்வதில் புத்திசாலித்தனம் வேண்டும். நீங்கள் கறார் பேர்வழியாக இருக்கும்பட்சத்தில் உங்களை ஏமாற்றும் நோக்கத்தில் உங்களை யாரும் அணுகவே மாட்டார்கள. எல்லாவற்றுக்கும் மேலாக, சீட்டு நடத்துபவர்கள் "இது ஏழைகள் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணம். உயிரினும் மேலாக பாதுகாக்க வேண்டும்" என்று நினைக்க வேண்டும். பணம் பெற்றவர்களோ "வாங்கியது மாதிரி திருப்பி கொடுக்க வேண்டும். கொடுக்காமல் எத்தனையோ அவலங்களுக்கு காரணமாவோம்" என்று நினைத்திட வேண்டும்.  "யாரிடம் பணம் போடுவது" என்று வாடிக்கையாளர்களும் "யாருக்கு பணம் கொடுப்பது" என்று நிர்வாகமும்- சரியான புரிதலை அறிவுணர்ச்சியுடன் கொண்டால், எங்கும் எப்போதும் ஏமாற வாய்ப்பில்லை.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

Saturday 27 October 2012

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!


மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். “காதிரியா தரீகா” என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது. 
ஜனனம
எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, காதிரியா தரிக்காவின் ஸ்தாபகர், மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்,( 18 March 1077)ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள். 
ஜனனத்தின் மகத்துவம்
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். 
கல்வி
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். 
ஷைக்கின் சகவாசம் 
எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள். 
துறவு நிலை 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள். 
*காதிரியா தரீக்காவின் உருவாக்கம்* 
ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு “ராத்திப்” என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள். 
முஹியித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை
ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார். 
அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல்
கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள். 
குடும்ப வாழ்க்கை
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள். 
மறைவு
40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள்.





என் கருத்து :

ரபீவுல் ஆகிர் மாதம் வந்து விட்டால் அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அநாச்சாரங்களில் முஹ்யித்தீன் அப்துல்; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் தான் கொடுமையிலும் கொடுமை. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் அந்தந்த ஊர்களில் தான் நடக்கின்றன. ஆனால் தமிழகமெங்கும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் கேளிக் கூத்துக்கள் சொல்லி மாளாது. அப்துல்   காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் பள்ளிகள் தோறும் பரவசமாக முஹ்யித்தீன் மௌலிது ஓதப்படுவது ஷிர்க்கின் உச்சக் கட்டம்.

அல்லாஹ்வை வணங்க கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் என்னும் இறையில்லங்களில் அல்லாஹ்வை அழைத்துப் பிராத்திப்பதை விட்டு விட்டு ஒரு மனிதரை அழைத்துப் பிரார்த்திப்பது பச்சையான ஷிர்க் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இதை உணர மாட்டீர்களா?

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும் (திருக் குர்ஆன் 7:194)


நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளையே கொண்டாட மார்க்கத்தில் அனுமதி இல்லாத போது, அவர்களை தம் உயிரினும் மேலாக மதித்த சத்திய சஹாபாக்கள் கொண்டாடாத போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது மிகப் பெரும் வழிகேடல்லவா? நான்கு கொடியை பக்தி சிரத்தையுடன் தூக்கி ஊர்வலம் செல்வதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும், அதற்காக நேர்ச்சை செய்வதும் இவை யாவும் நரகப் படுகுழியில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.



அறிந்துக் கொண்டே பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்பவன் பிடிபட்டு தண்டிக்கப்பட்டால் அது நியாயம் தான். ஆனால் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்று மிகவும் ஆடம்பரமாகப் பயணத்தை மேற்கொள்ளும் போது பரிசோதனையில் அது போலியானது எனத் தெரிய வந்து நீங்கள் தண்டிக்கப்பட்டால் எவ்வளவு வேதனைப்படுவீர்கள்?

அறிந்து கொண்டே தவறுகளைச் செய்தவன் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவது உறுதி. நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் உரைகல்லாக அல்லாஹ்வின் திருமறையும் அவனது திருத்தூதரின் வழிகாட்டுதல்களும் தௌ;ளத் தெளிவாக நம் முன்னே இருக்கும்போது அவற்றை ஏரெடுத்துப் பார்க்காமலும், செவி தாழ்த்திக் கேட்காமலும் ‘முன்னோர்கள் காட்டிய வழி’ என்று அநாச்சாரங்களிலும், வழிகேடுகளிலும் பிடிவாதம் காட்டுவீர்களானால் அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.

இது நாள்வரை அறியாமையினால் இந்த கொடிச்சீலை விழாவைக் கொண்டாடி இருந்தால் அறியாமல் செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் அழுதழுது மன்னிப்புக் கேளுங்கள். இந்த அநாச்சார விpழாவை இனி கொண்டாடுவதில்லை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சபதம் செய்யுங்கள்.


அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)

தொகுப்பு : மு.அஜ்மல் கான் 

Thursday 25 October 2012

Expatriate Jobs in Oil and Gas Sector...

Many companies are now successfully hitting targets on graduate and trainee recruitment, the real problem facing the industry is the recruitment of those with five years or more relevant experience – personnel able to ‘hit the ground running’ and drive forward major projects quickly and competently.

The UK oil & gas industry’s training body, recently reported that 44% of companies are expecting significant growth this year – so where will the staff come from to fill these gaps in engineering expertise and management of project development and delivery? Skills shortages were the biggest challenge to the sector’s growth, the report found, and with around 15,000 more jobs potentially being filled in the next five years, the demand for engineers with the necessary skill set was greater than ever. Without it, wage inflation could run out of control.

Jobs: Advantages and Disadvantages...
Good salary is certainly the greatest advantage. Another great thing is that you can build a great career in this filed, if you work hard. There are all kinds of training courses, and you will be able to improve your skills.
There are certain disadvantages, too. For example, workers share living spaces (in fact, they share almost everything). This also means that you won’t have much privacy.Oil rigs are located far away from urban areas. This means you will be surrounded by the same people every day.

How to Find an Overseas Oil Job....
The best way to do this is to visit some of the websites specialized in jobs and careers in oil industry. You need to have a good CV! Remember, your CV is your first step towards getting a job.If you have any relatives of friends living abroad, you can talk to them and learn as much as you can about that particular country. In case your skills are not needed there, you can find skill lists of other countries and see if they need workers in this field.

Contacting U.S. companies that have branches in other countries may be helpful. They may hire you and give you the opportunity to live abroad. If you get a job in one of such companies, you will get considerable help with your documentation. You can ask your employer if there is any relocation assistance. In most cases, there is. Many companies will provide free housing or camps.
If you are looking for a job in Europe, you can visit some of the numerous forums about oil and gas industry of the European countries. Before you start looking for an overseas job, you need to learn more about the current trends in oil industry in this part of the world.

If you have always wanted to work in a leading multinational oil and gas organization, now may be the time to look into it. Expatriate life can be challenging and exciting especially when working within a global leader in this industry. It is also very rewarding, the pay is excellent, the benefits very generous and they really look after your welfare.
     
There are always opportunities available in the Oil industry, even in times of economic challenge. Companies are expanding their scope, both on-shore and off-shore, as well as developing further in their traditional exploration areas. Top Oil and Gas jobs are available in Central Asia, particularly in Kazakhstan, throughout Central and West Africa and in other developing regions in Asia. 

In the upstream sector, the exploration and production companies and their sub-contractors are always looking for both specialists in engineering and technical disciplines as well as support staff. Technical specialist roles include drilling, process flow, seismic testing at all levels of experience. Petroleum engineering professionals and those in Geo sciences are in short supply and may attract a premium salary or additional bonuses. There are also openings for people in the conventional business functions of finance, marketing, logistics and telecommunications.

The downstream sector, the refining and marketing petroleum companies and their associates, have opportunities across a wide range of business skills. They need chemical engineers, construction and pipeline specialists, supply chain managers and traders.  Language skills in either French or Portuguese are additional recommendations when applying for Oil jobs in Africa, both in upstream and downstream.


There are many recruiting companies offering oil and gas jobs on behalf of clients but you need to select an established and experienced service provider. There are some pitfalls that can be avoided. Choose a company that understands the global expatriate business environment and one that and can respond to your personal needs when you are looking for jobs in the oil and gas sector. 

Are you want to switch over to oil & Gas plat form? Are you working in Design engineering, construction, EPC, Petroleum,  Automotive and Aerospace Industry?
If yes, There are more offer short term training courses around the globe  to enhance your skills. please choose one of the following domains.


PDMS – piping
Basic Piping Design
Smart Plant Instrumentation – Corporate Training Only
Basic process design for Chemical engineers
Structural design
HSE/NEBOSH
PMP Certification
Caesar – II – Stress Analysys course for mechanical engineers
CAD/CAM/CAE – Hypermesh/LS Dyna/Abaques –  Automotive and Aerospace domain
SAP – IS – Oil and Gas
Basic Petroleum Engineering Practices
ASNT  NDT – Training, Level II, Level III
NACE Level  I, II,- Painting certification  Course
AWS/CSWIP Level 3/ 3.1/3.2 -  Welding Inspector certification  Course 
API 510  PRESSURE VESSEL INSPECTOR CERTIFICATION EXAMINATION,
API 570 ,AUTHORIZED PIPING INSPECTOR CERTIFICATION EXAMINATION
 API 653 ABOVE GROUND STORAGE TANK INSPECTOR .
 API TEST TANK ENTRY SUPERVISOR CERTIFICATION PROGRAM EXAMINATION PACKAGE.
 CSWIP  /ASME  PLANT INSPECTOR CERTIFICATION EXAMINATION


 We are  good in the world's most comprehensive engineering recruitment portal, so start exploring and see what possibilities you can engineer!!
Their gives you the opportunity to access the best International engineering jobs, faster career progression and the ability to explore opportunities in your field all over the world. You can search thousands of job vacancies including engineering, construction, civil engineering, mining, oil and gas and other engineering related employment. 



According to recent findings from the international job board for the oil and gas industry, Oil Careers.com, recruitment activity in the sector is the most active since as far back as early 2009, for both recruiters and candidates.Do you need or looking for a job? This site is FREE for all job seekers to apply for as many jobs as they want, add their CV to our resume database so you can be head-hunted and includes FREE advice, interview and application tips. 
 International job site specifically focussed on the oil and gas industry, was on hand at Monday's event to provide advice for candidates as well as employers.
The Oil and Gas Industry Salary Checker works by searching through our database for salary information that matches your query. This should give you good idea of what people in specific situations are being paid and will allow a direct comparison with your own position. The salary information is entered directly by people when they enter their CV/resume. The results show how many people match your query, the average salary for all those matching and detailed salary data for 20 people around the median result. The detailed information displayed includes salary, job title, age, experience, qualification and country of residence. 

http://www.oilcareers.com/content/community/salarysearch.asp