Monday 31 December 2012

புத்தாண்டும் மலரும் நினைவுகளும் !! ஒரு சிறப்பு பார்வை..







ஒரு வருடம் ஓடி போய்விட்டது, வருடங்கள் ஆரம்பிப்பது மட்டுமே நினைவில் இருக்கிறது, பிறகு அந்த வருடம் முடியும் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் தோன்றுகிறது, அட இவ்வளவு சீக்கிரமா ஒரு வருஷம் ஆகிப்போச்சா?






வழக்கம் போலவே இதோ இன்னொரு புதுவருடம், ஒவ்வொரு வருடத்திலும் என்ன சாதிக்க போகிறேனோ? முடிந்து போன வருடத்தில் எதை செய்து முடித்தேனோ? தெரியாது, ஆனால் புதுவருடம் ஆரம்பமாகும் காலங்களில் மனதில் ஒரு புது விதமான மகிழ்ச்சி மட்டும் வருடம்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.






அந்த மகிழ்ச்சியானது புதுமனைவியை கொண்டாடும் கணவனின் பார்வையோடுதான் முதல் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆரம்பமாகிறது, ஆனால் கடைசியில் தானே புயல் கரை கடந்ததை போல ஓரிரு மாதங்களிலேயே வலுவிலந்தும் விடுகிறது.






ஒவ்வொரு வருடங்களும், புத்தாண்டு சங்கல்பங்களும் காற்றிலும், நீரிலும் மட்டுமே எழுதி வைக்கும்படி எனக்கு வாய்த்திருக்கிறது, சலித்து போய் இப்பொழுது அது போல எதுவும் நினைக்கக்கூடாது என்பதே புத்தாண்டு நினைவாக மாறிவிட்டது.






முந்தைய கடந்து போன வருடத்திற்கு இந்த வருடம் எவ்வளவோ பரவாயில்லை, பழைய வருடத்தின் தாங்கமுடியாத சோகங்களை இந்த வருடம் மறக்கடித்தது, இன்னும் சொல்லப்போனால் கடைசியில் வந்தமைந்த சொந்தம் என் வாழ்க்கையையே அர்த்தப்படுத்தியது என சொல்லலாம்.






ஒவ்வொரு கடந்துபோன நொடிகளும், நிமிடங்களும், நாட்களும், வருடங்களும், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்றை விதைத்து விட்டுதான் போயிருக்கின்றன, அது நல்லதோ, கெட்டதோ, அதற்கான பயனை, அறுவடையை அடுத்து வரப்போகும் வருடங்கள்தான் தீர்மானிக்கின்றன.






துன்பத்திலும், கஷ்டத்திலும், ஏக்கத்திலும், தேவைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும், மக்களுக்கும் ஒரே எதிர்பார்ப்பு வரப்போகும் வருடமாவது ஒரு நல்ல வருடமாக அமையாதா என்பதே.






அந்த சராசரி மனிதர்களில் ஒருவனாக எனது எதிர்பாப்பும் அதுவே, எதிர்பார்ப்பும், ஏமாற்றங்களும் தொடர்கதையாகி போய் நடப்பது நடக்கட்டும் என்ற எனது சராசரி மனநிலையை மாற்றிப் போட்டிருக்கிறது கடந்த வருடம், புது வருடத்தில் எனக்கான தேவைகளும், செல்ல வேண்டிய தூரங்களும் நிறையவே இருக்கிறது.












அதற்காக அதிகமாக உழைக்க சொல்கிறது காலம்.




பார்ப்போம், காலம் சொல்லும் பதிலை..!


நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதுவருடத்தை தொடங்க இருக்கிறேன்… நான்..!

















வரப்போகும் 2013 ஆம் வருடத்தில், அனைவரது வாழ்விலும் உள்ள சங்கடங்கள் விலகி, சந்தோசம் பெருகி, நினைத்தது நடந்து, எல்லோருக்கும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் வருடமாக அமையட்டும்.என வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.இறைவனை பிரார்த்திக்கிறேன்.























இந்த பதிவினை படிக்கும் நண்பர்கள், சகோதர, சகோதரிகள், சக வலையுலக நண்பர்கள், மற்றுமுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

1 comment:


  1. I have read your article, it is very informative and helpful for me.I admire the valuable information you offer in your articles. Thanks for posting it.

    Jabong cashback offer
    Cashback Coupons.in

    ReplyDelete