Wednesday 31 July 2013

பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL)

APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்

BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா

CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்

DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்

EUGENIA RUBICUNDA - சிறுநாவல்

GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்

HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி

JACKFRUIT - பலாப்பழம்
JAMBU FRUIT - நாவல்பழம்
JAMUN FRUIT - நாகப்பழம்

KIWI - பசலிப்பழம்

LYCHEE - விளச்சிப்பழம்

MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி

O - வரிசை
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்

PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்

QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி

SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்

TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்

UGLI FRUIT - முரட்டுத் தோடை


WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE - விளாம்பழம்

Monday 29 July 2013

விருந்தோம்பல் பற்றி தமிழர் Vs இஸ்லாம்!! ஒரு சிறப்பு பார்வை..


பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க இலக்கியங்களிலும் பெரிய புராணத்திலும் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் போதெல்லாம் எல்லோருக்கும் விருந்து அளிக்கப் பெற்றிருப்பதாகக் காண்கின்றோம்.  

ன்றைய சூழலில் நன்கு அறிமுகமான உறவினர்களோ, சுற்றத்தாரோ, நண்பர்களோ கூட நம் தமிழர் இல்லங்களுக்குச் சென்றால் இல்லத்தில் உள்ள அனைவரும் வரவேற்கும் பண்பினைக் காணமுடிவதில்லை! கணவரின் உறவு அல்லது நண்பர் என்றால் மனைவிக் கூட வந்து வரவேற்பது அரிதாகிவிட்டது. பிள்ளைகளோ விருந்தோம்பலில் சற்றும் தொடர்பில்லாதவர்களாய், ஒரு  "சலாம் /வணக்கம்” அல்லது புன்னகைக் கூட பூக்காமல் அவரவர் பணிகளில் கருத்தாய் இருக்கின்றனர். இன்னும் சிலர் வரவேற்புக்கூடத்தில் இருந்தாலும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு அவர் அப்பாவின் விருந்தினர்தான் நம் விருந்தினர் அல்லர் என்று கண்டுக்கொள்ளாமலும் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

விருந்தோம்பல் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை  இங்கு பார்போம்...

1, நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் எவர் அல்லாஹுவைத் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் தமது விருந்தினரை ஓர் இரவும் பகலும் உணவளித்துக் கண்ணியப்படுத்தட்டும் விருந்தென்பது ஸதகா என்னும் அற்புதத்தைச் சார்ந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
2,மேலும் அல்லாஹ் எந்தக் கூட்டத்தவர்களின் மீது நலவை நாடுகின்றானோ அக்கூட்டத்தவர்களிடம் விருந்தினரை அனுப்பி வைப்பான். தமது ரிஸ்கை கொண்டு வருவார் தம்முடைய ரிஸ்கை கொண்டு போவார்.
(அதாவது விருந்தாளி வீட்டிற்கு வருவதன் மூலம் இறையருளைக் கொண்டு வருகின்றார்.செல்லுகின்றபோது வீட்டனரின் நல்ல உபசரிப்பைப் பெற்றுச் செல்கின்றார்.)
3, விருந்தாளி மன மகிழ்வுடன் விடை பெற்றுச் செல்வதன் மூலம் வீட்டிற்குறியவர் பிழை பொறுத்தலுக்குரியவராக மாறிவிடுகின்றார்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
4, விருந்து வைப்பதற்வைத்திருக்கும் சஹன் வீட்டில் இருக்கும் காலமெல்லாம் வானவர்கள் அவ்வீட்டினரின் பிழைகள் மன்னிக்கப்பட அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கொண்டேயிருப்பார்கள்.
5, எவர் தமது விருந்தாளியை கண்ணியப்படுத்துவதற்காக ஆடு, மாடு போன்றவைகளை அறுத்து விருந்தளிப்பாரோ அவை அவரை நரகத்தில் இருந்து காப்பதற்கு… பித்யாவாக அமைந்து விடுகின்றன எனவும் விருந்தளிக்காதவனின் வாழ்வில் நலவில்லை என்றும் கூறியுள்ளார்கள் அனஸ் (ரழி) கூறுகின்றார்கள் விருந்தாளி நுழையாத வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்.
வானவர்கள் நுழையாத வீட்டில் எவ்வாறு இறையருள் இறங்கும்? என்பதைச் சிந்திப்போமாக! நபி (ஸல்) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று வினவப்பட்டது.
 அதற்கு அவர்கள் கூறினார்கள். விருந்தளிப்பதும், ஸலாமைப் பரப்புவது மாகும் என்றார்கள். சிந்தித்துப் பாருங்கள் இன்றைக்கு நம்மக்களிடே விருந்தினரை வரவேற்றிடும் (உபசரிக்கும்) நற் பண்பும் சாந்தியளித்திடும் ஸலாமைப் பரப்பிடும் உயரிய பண்பும் எந்த அளவிற்கு தாழ்ந்து பேய் விட்டிருக்கிறது ஏழை அழைக்கப்படாத விருந்து விருந்தல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நடைமுறையில் இன்று என்ன நடக்கிறது. ‘விருந்திற்கு அழைப்பிதழ் அழிப்பவர்கள் இரண்டு வகையாக அடிக்கின்றனர்.
அதில் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் கொக்கப்படும் அழைப்பிதழில் சிறிய தாள் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அந்த தாள் உள்ளவர்கள் மட்டும் தான் விருந்துண்ண வரவேண்டும் அந்த இணைப்புத் தாள் இல்லாத அழைப்பிதழ் பெற்றவர்கள் விருந்திற்கு வரக்கூடாது என்றெல்லாம் பல சட்டங்கள் வைத்துள்ளார்கள். இது எவ்வளவு கஞ்சத்தனம்!
6, மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். விருந்தாளி இல்லாமல் உண்ணாதீர்கள் விருந்தாளி கிடைக்காவிடின் உங்கள் மனைவி மக்களுடன் அமர்ந்து உண்ணுங்கள் மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சுவர்க்கத்தில் சில மாளிகைகள் உள்ளன. அதன் உள் பகுதி வெளிப்பகுதியிலும் வெளிப்பகுதி உள்ளேயும் தெரியும். ஆம்மாளிகை மூன்று சாராருக்காக தயார் செய்யப்பட்டோருக்கும் அவர்கள் யார் தெரியுமா?
1. மென்மையாகப் பேசுகின்றவர்களுக்கும்
2. பசித்த வயிற்றுக்கு உணவளித்தவர்களுக்கும்
3. மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் நின்று வணங்கியவர்களுக்குமாகும் என்று கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்பிக்கையாளர்கள் தங்களிடையே நேசம் கொள்வதற்கும் கருணை காட்டுவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் உதாணரம் ஒரே உடலைப்போல!ஊடலில் ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால் அனைத்து உறுப்புகளும் காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் முறையிடுகின்றன.

முடிவு நம் தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளை போலவே மறைக்கப்பட்ட/மறுக்கப்பட்ட முக்கிய பண்பு விருந்தோம்பல்.Pizza மற்றும் buffet கலாச்சாரத்திற்கு மாறி விட்ட நம்மால் இதை பெரியதாக உணர முடியாது.நாம் தொலைத்து விட்ட அடையாளங்களில் ஓன்று விருந்தோம்பல்.விருந்து புறத்திருக்கச் சாவா மருந்தெனினும் தனித்து அருந்தாமை”.. என்பதே தமிழர்களின் உயர்ந்த பண்பாடு. இல்லத்திற்கு வந்த விருந்தாளி முன்புறமோ அல்லது வரவேற்பறையிலோ இருக்க, அமிழ்தம் என்று சொல்லக் கூடிய உணவே ஆயினும் அதனை வீட்டின் அடுக்களையிலோ அல்லது மறைவான இடத்திலோ, விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பது என்பது தமிழர் பண்பாடு ஆகாது என்று தெளிவாகிறது.எனவே விருந்தோம்பல் எனும் இறையுலகிற்கு வழிகாட்டும் உயரிய பண்பினை நம் இளைய தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோமாக! 

Saturday 27 July 2013

General Guidance on How to Join Merchant Navy After 12th or 10th Students!!

Merchant navy photos

Want to know as how you can join merchant navy? Well, this fascinating career drags huge amount of people, especially young lads all across the globe towards it, So what is so special about this?, how is life out there, what you will do and what not, how much you will  earn- read more about it here.
In a planet where water covers major part, its use for transportation, food and mining are enormous. From the early days of human civilizations, water is one thing which is common to all of them and most of the flourished around them. This is the reason, today; most of the renowned cities in the world are near the sea like New York, London, Tokyo, and Dubai etc.
For quite a long time, humans have been part of the business related to the sea. Let’s see how Shipping world is divided

Division of Shipping World

Ship movement, Cargo Transport
i
1)     Cargo Transportation
2)     For Food
3)     Mining process
4)     For leisure
5)     Security
6)     Other areas like energy harnessing.
As you can see there is so much to this part of earth, with so many options and opportunities, it is natural for people to be attracted to it. Merchant Navy is the major part of it. In this age of globalization each and every country is dependent on other for some resources. And to keep these resources moving from one place to another, sea transportation is mainly used.

What Actually Merchant Navy is?

Well Merchant Navy, as name suggests, is that part of shipping world, which is involved in transportation of cargo and passenger from one place to another through sea. It is totally different from the Defense Navy. From ships that carries ore from one country to another, to the ships that carry oil to and fro-it is about these and more than that.

Cargo types can be any like Ore, Oil, and Gas etc. And since sea route is much cheaper than the air route, this is the preferred choice when it comes to transporting goods from one place to another. 


How can I be part of Merchant Navy?

This is among the most common questions. The reasons why so many people joining this field are that, there is so much to explore in terms of opportunities and also in terms of roaming around this world. There is no end to the numerous prospects in this sector that it offers. Plus pay and perk are also better as compared to the other sectors. 

After completing your school or college you can go for degree or diploma courses related to the marine field. There are two side of merchant navy, one is those who are officers and others are ratings.

Officers are generally those who complete their studies majorly in this field and start their career at sea as cadet or trainee. Ratings are support staff required at sea. After successful sea time, they too can become the officers.

There are two departments in merchant navy, one are those, who are dealing with the technical aspects of the ships called as Engineers and other part is Deck, who look after the navigation and cargo handling. As per the type of vessel you are working in, you can do different work also like quality management, but these are the only two sides

What type of Life in Merchant Navy or as Sailor?

Those days are completely gone, when sailors are having wooden ships, and using major manpower to row and navigate the ships, with damp condition and no aids for navigation. It is more of a highly organized and advance sector, with not much of manpower used.
How to make boat

Ships are provided with all sorts of facilities that you get on land or more than that. Only downside will be that, you might be out of your house for 3 to 6 months. This is compensated by the salary that you get here plus part to visit different places. Since this is a global sector, you get to work with different kind of nationalities. English is the common language that is spoken worldwide in the shipping sector, unless the ship is sailing in the local region.

Engineer work involves maintaining all the machineries on board like engine and auxiliary machinery. Keeping record of stores that are used onboard and making sure that ship keep on moving, by keeping all machineries in good condition. Navigation officer’s look after the cargo operations, and navigating the ship to her destination safely. Planning how to load cargo and maintaining the positive condition of ship.

2009 recession surely hit hard the shipping sector, but it has survived it and has come out of it now. As compare to the previous times, there is competition of jobs in this sector.

Can Women Join Merchant Navy?

Sure, why not. Although this is a men dominated sector, no doubt in that, but slowly and steadily women are making their way. In fact as per the estimates, numbers of women enrolling for the courses related to the merchant navy have increased several folds as compare to the previous times. Many Women are now at the top positions both of offshore and on ship. This is a profession where each and everybody respects each other for their work and contribution towards transporting billion dollars of cargo from one place to other or helping in generating this much world cargo like food, oil etc.

Life after Merchant Navy?

When you get into it, you tend to learn lot of things. You share and exchange your views with so many people out there. You understand how things work in shipping and how you can be the best part of it. What you learn there, might help you when you come back and want to work offshore. There are so many live examples of successful sailors who are now either have their own shipping company or doing really good in other sectors. That is totally a case which depends on people to people. So are you planning to join merchant navy?


If you had a good time reading this article, then share with others. This was all from How to Join Merchant Navy.

Collection & Prepared by : M.Ajmal Khan.

Thursday 25 July 2013

கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு!! ஒரு சிறப்பு பார்வை...


நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறது.
பொழுது போக்கிற்காக இங்கிலாந்திலுள்ள ஆடுமேய்ப்பர்கள் ஆரம்பித்த விளையாட்டே கிரிக்கெட் விளையாட்டு என்று நம்பப்படுகிறது. வாசல்கதவின் முன்னால் ஆடுமேய்ப்பவர் ஒருவர் நிற்க, இன்னொருவர் கல்லை அவரை நோக்கி எறிய குச்சியால் கல்லை அடித்து விளையாடும் விளையாட்டாகத் தான் கிரிக்கெட் ஆரம்பமாகியிருக்கிறது. ஆடுகளை மேய விட்டுக்கொண்டு இடையர்கள் குச்சிகளை வைத்து  விளையாடத் துவங்கிய கிராமிய விளையாட்டான கிரிக்கெட் அதன் பின் பல இடங்களுக்கும் பரவி இன்று உலகெங்கும் பரவிவிட்டது.

உலகெங்கும் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் இந்த கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் கடும் போட்டியிருகின்றன. காரணம் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் ! சாதாரணமாக ஆட்டிடையர்கள் ஆரம்பித்த விலையாட்டு இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் விளையாட்டாய் மாறியிருக்கும் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால் பல ஆச்சரியங்கள் நமக்கு முன்னால் விரிகின்றன.

கிரிக்கெட் விளையாட்டைக் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழமையான குறிப்பு 1598ம் சேர்ந்தது என்கிறார் பீட்டர் வின் தாமஸ். இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் தொன்மையை ஓரளவு கணிக்க முடிகிறது. எனினும் பதினேழாம் நூற்றாண்டுகளில் தான் இது பரவலாக ஒரு விளையாட்டாக விளையாடப்பட்டிருக்க வேண்டும் என்பது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.

1760களில் கிரிக்கெட் விளையாட்டுக்கான முதல் மன்றம் ஹாம்ஷயர் மாவட்டத்திலுள்ள ஹாமில்டனில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆரம்பிக்கப் பட்ட முதல் மன்றம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மன்றமே கிரிக்கெட் என்னும் விளையாட்டு ஒருவித அங்கீகாரத்துக்குட்பட்ட ஒரு விளையாட்டாக அறியப்படக் காரணமாயிற்று.

இந்த ஹாமில்டன் மன்றமே பந்துவீச்சாளர், மட்டையாளர்களுக்கான நுட்பங்கள், மற்றும் விதிமுறைகளை ஆரம்பித்து வைத்தது. இந்த மன்றத்தினர் வகுத்த விதிமுறைகளே பல ஆண்டுகள் இந்த விளையாட்டின் முதுகெலும்பாக இருந்தன.

அதன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மையம் மாறியது. லண்டனிலுள்ள லாட்ஸ் மைதானத்தைத் தலைமிடமாகக் கொண்டு 1787ல் மேலிபோன் மன்றம் எனும் பெயரில் ஒரு மன்றம் இயங்கத் துவங்கியது. இந்த மன்றம் ஹாமில்டன் மன்றத்திடமிருந்து அதிகாரத்தையும், தலைமையையும் பெற்றுக் கொண்டது. இப்போது கிரிக்கெட் விளையாட்டுக்கு லாட்ஸ் மைதானம் தலைமையிடமானது.

இந்த எம்.சி.சி என்று அழைக்கப்படும் மெலிபோன் கிரிக்கெட் மன்றம் மிகவும் அதிகாரம் வாய்ந்ததா செயல்பட்டு வந்தது. இன்று வரை கிரிக்கெட் சட்டங்களை அந்த மன்றமே காப்புரிமை பெற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது. எனவே இன்றும் கூட ஏதேனும் திருத்தம் கிரிக்கெட் விதிமுறைகளில் செய்ய வேண்டுமெனில் அது எம்.சி.சி மூலமாகத் தான் செய்ய வேண்டும். இந்த எம்.சி.சி யே 1967 வரை இங்கிலாந்து கிரிக்கெட்டையும், உலக அளவிலான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தி வந்தது.

கிரிக்கெட் விளையாட்டின் முதல் நாயகனாக இங்கிலாந்தின் டபிள்யூ.ஜி.கிரேஸ் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆட்டக்காரராக இருந்த அவர் பல்வேறு திருத்தங்களை கிரிக்கெட் விளையாட்டில் செய்தார். தற்போதைய கிரிக்கெட் விளையாட்டின் துவக்கம் அவரே. அக்காலத்தில் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த நபராக இவர் இருந்தார் என்பதே இவருடைய புகழை வெளிப்படுத்தும்.

அதன்பின்னர் ஆஸ்திரேலியா நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டு ஆரம்பித்தது. ஆஸ்திரேலியா ஏராளம் உள்ளூர் போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து அணி 1877ல் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து அங்குள்ள மெல்போர்ன் விளையாட்டு அரங்கில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதுவே உலகில் நடைபெற்ற முதல் அதிகார பூர்வமான டெஸ்ட் போட்டி.

1877ம் ஆண்டு நிகழ்ந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆண்டுகள் நூறு கடந்தன. 1977ம் ஆண்டும் அதே இரு அணிகளும் அதே மைதானத்தில் மோதின. இப்போதும் வென்றது ஆஸ்திரேலியா அணி தான். அதுவும் அதே 45 ரன்கள் வித்தியாசத்தில் ! இந்த பரபரப்பான் அபோட்டியே ஆஷர் தொடர் என்று அழைக்கப்பட்டது. இதுவே இன்றைய உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் ஆரம்பம் எனலாம்.

பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளிலெல்லாம் கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்பட்டது. இந்தியாவிலுள்ள ராணுவ வீரர்கள் கூட இந்த விளையாட்டை விளையாடிய வரலாறு உள்ளது. இவ்வாறு பிரிட்டிஷ் மக்களால் உலகின் பல பாகங்களுக்கும் இந்த விளையாட்டு பரவியது. அதுவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கின.

1721 – பிரிட்டிஷ் மக்கள் முப்பையில் வந்த ஆண்டுகளிலேயே கிரிக்கெட் விளையாடப்பட்டதற்கான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் மக்கள் கிரிக்கெட் விளையாட்டை கற்றுக் கொடுத்தபின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் கிரிக்கெட் ஆதிக்கம் தளர்ந்தது. இந்தியாவை பிரிட்டிஷ் மக்கள் ஆட்சி செய்து வந்ததால் அந்த கால கட்டத்திலேயே இங்கிலாந்து மக்களை வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை இந்தியர்கள் மனதில் அதிகமாய் இருந்ததில் வியப்பில்லை.

இந்திய அணியின் முதல் வெளிநாட்டுப் பயணம் 1932ல் நிகழ்ந்தது. அப்போது தான் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதி வழங்கப்பட்டது. இங்கிலாதுடனான விளையாட்டுக்காக அந்த அணி லண்டன் சென்றது. இதுவே டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் முதல் வெளிநாட்டுப் பயணம்.

1950 களில் உலகின் மிகப்பெரிய அணியாக இருந்தது இங்கிலாந்து அதன் பின்னர் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் முன்னணிக்கு வந்தன. இங்கிலாந்தின் அதிகாரமும், ஆதிக்கமும் பிற நாடுகளின் வரவால் குறைந்தன.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டில் மிக உயரிய இடத்தை முன்பே அடைந்து விட்டிருந்தது. உலகமே வியக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரரான டான் பிராட்மேன் – ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தான். அன்றைய நாட்களில் இங்கிலாந்து அரச குடும்பத்துக்குப் பிறகு உலக அளவில் தெரியப்பட்ட ஒரு மனிதராக இவர் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இவருடைய டெஸ்ட் சராசரி சுமார் 99.94.

டான் பிராட்மேன் களத்தில் நிற்கிறார் என்றால் பந்துகளைச் சிதறடித்து அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்று நம்பலாம். இவரை ரன் மெஷின் என்று வர்ணித்தார்கள். இவரை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என்பதை அறியாமல் எதிரணி வீரர்கள் திகைத்துப் போயிருந்த காலத்தில் ஒரு புதிய உத்தியைக் கண்டு பிடித்தனர் இங்கிலாந்து நாட்டினர்.

பாடி லைன் என்று சொல்லப்படும் உடலைக் குறி வைத்து பந்து எறியும் முறையை இவர்கள் ஆரம்பித்தார்கள். இடது பாகம் விழுந்து உடலை நோக்கி வேகமாய் வரும் பந்துகளைச் சமாளிப்பதில் மட்டுமே பிராட்மேன் சற்று தடுமாறுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த முறை பிராட்மேனை அவுட்டாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்பது கவனிக்கத் தக்கது. இந்த முறை வெற்றியும் பெற்றது. 32 – 33ம் ஆண்டைய தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் பிராட்மேன் சராசரி 56 மட்டுமே.

ஆனால் இந்த பந்து வீச்சு முறை மிகப் பெரிய சர்ச்சையை எழுப்பியது. ஆட்களைக் குறி வைத்து எறியும் முறை வழக்கத்துக்கு மாறானது, இது ஆபத்தானது என்று ஆஸ்திரேலிய அரசு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இங்கிலாந்து ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே மிகப்பெரிய பிரச்சனையாக இது உரிவெடுத்ததால் இந்த முறையில் பந்து வீசுதல் சட்ட விரோதமானது என தடை செய்யப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த அணியில் ஆறு தீவுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இந்த ஆறு தீவுகளும் கலாச்சார, வாழ்க்கை முறை, நாணயம், ஆட்சி என அனைத்து விதங்களிலும் வேறுபட்டு நின்றாலும் கிரிக்கெட் விளையாட்டில் இவை அனைத்தும் ஒன்று பட்டு நிற்கின்றன.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டை ஏற்றுமதி செய்தது இங்கிலாந்து அணி தான். காலனி ஆதிக்கத்திலுள்ள பகுதிகளில் தோட்ட முதலாளிகளின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இந்த விளையாட்டு முதலில் விளையாடப்பட்டது. பின்னர் இது மற்ற இடங்களுக்கும் பரவியது. எனினும் கிரிக்கெட் விளையாட்டுக்கு வெள்ளையர்களே முன்னிலை வகித்தார்கள்.

முதன் முதலாக மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை வகித்த கறுப்பினத்தைச் சேர்ந்தவர் ஃப்ராங்க் ஓரல் என்பவர். இவருடைய வரவே இன அடிமைத்தனத்திலிருந்து அணியை மீட்டது எனலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் மாபெரும் எழுச்சி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 1950ல் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று வியக்க வைத்தது.

கிளைவ் லாயிட் வரவுக்குப் பின் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலக அளவில் மிகப்பெரிய கவனத்துக்குள்ளானது. மிகவும் திறமையாக விளையாடி பல்வேறு சாதனைகளையும் வெற்றிகளையும் அவர்கள் குவித்தார்கள். வெறும் ஐம்பது இலட்சம் மக்களைக் கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலகை அசைக்கும் வலிமையுள்ள அணியாக மாறியது.

கிரிக்கெட்டின் தாக்கம் உலகெங்கும் பரவ ஆரம்பித்தபின் உலக கிரிக்கெட் சங்கம், ஐ.சி.சி 1909ல் ஆரம்பிக்கப் பட்டது. பல்வேறு போட்டிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று உலகக் கோப்பைக் கிரிக்கெட். இது 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இந்தியா இந்த கோப்பையை ஒருமுறை கைப்பற்றியுள்ளது. 1983ம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிகளுக்கு அறுபது ஓவர்கள். அதன் பின்பே அது ஐம்பதாகக் குறைக்கப் பட்டது.
உலகின் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டாலும் தெற்காசியப் பிராந்திய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் இந்த விளையாட்டுக்கு அதிக மரியாதை. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் நேசிக்கப் படும் விளையாட்டாய் இருக்கிறது. பல கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பார்க்கும் இந்த விளையாட்டில் இந்தியா தோற்றுப் போனால் பல ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், சிலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்பது அதிர்ச்சித் தகவல்.

இந்தியாவுக்கு டெஸ்ட் அந்தஸ்து ஆறாவதாக வழங்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், நீயூசிலாந்து போன்ற அணிகளுடன் அது தன்னை இணைத்துக் கொண்டது.

இங்கிலாந்தை வெல்ல வேண்டும் என்னும் எண்ணம் எல்லா இந்திய வீரர்களின் மனதிலும் அப்போது ஆழப் பதிந்திருந்தது. அந்த வாய்ப்பு 1952 – ல் கிடைத்தது. இந்தியாவில் நடந்த போட்டியில் அது இங்கிலாந்தை வீழ்த்தியது. கண்ணியத்துக்குப் பெயர் போன இந்திய ஊடகங்கள், அந்த கால கட்டத்தில் இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் ஜார்ஜ் மரணமடைந்தது தான் இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணம் என எழுத, அடக்கு முறை இங்கிலாந்து நெகிழ்ந்தது.

சர்வதேசப் போட்டிகளிலேயே மிகவும் அதிக ஆர்வமுடன் பார்க்கப்படும் போட்டி எனும் பெருமையை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் பெற்று விடுகின்றன. இந்த போட்டிக்கு இருக்கும் வரவேற்பும் ஒரு ஆக்ரோஷமான ஆர்வமுமே இதன் காரணம்.

இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட கிரிக்கெட் இன்று மிகவும் புகழ் பெற்ற ஆட்டமாக உருமாறியிருக்கிறது. இதை விளையாட்டு என்று கருதிக் கொண்டாலும் கூட தனி மனித வாழ்க்கைப் பொறுப்புகளை பல வேளைகளில் இது பாதிக்கிறது என்பதும், கிரிக்கெட் நட்சத்திரங்கள் அளவுக்கு அதிகமாக வணங்கப்படுகிறார்கள் என்பதும், இது மிகப்பெரிய வர்த்தகத் தளமாகி சூதாட்டத்தின் இருப்பிடமாகி விட்டது என்பதும் இந்த விளையாட்டின் மீது வைக்கப்படும் சர்ச்சைகளாக உள்ளன. எனினும் விளையாட்டை விளையாட்டாய் பார்த்தால் பிரச்சனை இல்லை என்பதே நிஜம்.
தொகுப்பு : மு. அஜ்மல் கான்.