Wednesday 21 May 2014

பிளாஸ்டிக் குறியீட்டு எண்களும் அதன் விளக்கம் பற்றிய விழிப்புணர்வு தவகல்!!

மளிகைக் கடை முதல் கம்ப்யூட்டர் நிறுவனம் வரை பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.பிளாஸ்டிக் தயாரிப்புகளை இன்றைய நிலையில் முற்றிலுமாகத் தவிர்ப்பது இயலாது. பிளாஸ்டிக் ஒன்றும் உயிரை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கும் நீக்கமற நிறைந்து, எளியவர்களின் கைக்கெட்டும் சிக்கனப் பொருள். வேண்டுமானால் இதன் விளைவைப்பற்றி விழிப்புணர்வு செய்து மக்கும் தன்மை அற்றவற்றை தடை செய்யலாம். பிளாஸ்டிக் பொருள்களால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டி மக்களுக்கு புரியவைக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம் அங்கங்கு நடத்தி மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம். 

பிளாஸ்டிக் குறியீட்டு எண்களும் அதன் விளக்கமும் பற்றி காண்போம்.
நாம் வாங்கும் எந்த பிளாஸ்டிக் பைகள் அல்லது டப்பாக்கள் அல்லது பாட்டில்கள் அல்லது எந்த பொருட்களிலும் அதனடியிலோ அல்லது ஏதாவது ஒரு இடத்திலோ ஒரு முக்கோண வடிவமும் அதனுள்ளே ஒன்று முதல் ஏழு வரை ஆன ஏதாவது ஒரு எண்ணோ அச்சிடப்பட்டு இருக்கும். 
அதன் விளக்கம் கீழ்கண்டவாறு.....




  1. எண் -1  ஒன்று என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில்தண்ணீர் பாட்டில்கள்,குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.
  2.  எண்-2 இரண்டு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் ஷாம்பு டப்பா மற்றும் சில கடினமான பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.
  3. எண்-3 மூன்று என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப்பொட்டலங்கள் கட்டும்  பைகள் ,பைப்புகள்,கிளினிங் பவுடர்கள் அடைத்துள்ள டப்பாக்கள்,போன்றவைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும்.இது ''டையாக்ஸின்''போன்ற நச்சு வாயுக்களை வெளியேற்றுவதால் நம் உடலுக்கு கலவிதமான தீங்குகளை விளைவிக்கும்.சூடான பொருட்கள் எதுவும் இதில் வைக்கக்கூடாது.
  4. எண்-4 நான்கு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொருட்களும்,கேரியர் பைகளும் தயாரிக்கப்படும்.
  5. எண்-5 ஐந்து என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில்  சூடான உணவுப்பொருட்களை வைக்கவோ,பயன்படுத்தவோ கூடாது.மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தலாம்.
  6. எண்-6 ஆறு என குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப்பொருட்களை வைத்து சாப்பிடலாம்.ஆனால் எடுத்துச்செல்லக்கூடாது.
  7. எண்-7 ஏழு என்ற எண் பொறிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உலக நாடுகள் தடை செய்து உள்ளன.ஆனால் இந்தியாவில் மட்டும் இல்லை.இதிலிருந்தே எத்தகைய தீங்கானது என அறியலாம்.


  •  1முதல் 4 வரை உள்ள எண் பொறித்த பிளாஸ்டிக்குகள் உணவு எடுத்துச்செல்ல பயன்படுத்தக்கூடாது.அவை வெப்ப சூழல் மாறும்போது'கார்சினோசின்' எனப்படும் வாயுவை வெளியிடுவதால் புற்றுநோய்கள் வரும் 
  •  5 மற்றும் 6 எண் பொறிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தண்ணீர் மற்றும் உணவுப்பொருட்களை வைக்கவோ,அல்லது எடுத்துச்செல்லவோ கூடாது.


என் கருத்து :
மண்ணுக்கு அடியில் புதைக்கப்படக்கூடிய அல்லது சுவரில் மாட்டக்கூடிய இடங்களில் பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்துவது தவறாகாது. துருப்பிடிக்கும் தன்மை இரும்புக்கு இருப்பதால் அதற்குப் பதிலியே பிளாஸ்டிக்.அந்த அளவுக்குப் பிளாஸ்டிக் பயன்பாடு வளர்ந்துவிட்டது. அரசு அனுமதிக்கும் வகையான பிளாஸ்டிக்கை மட்டுமே  பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள் வரும்வரை, அதன் உபயோகம் தவிர்க்க இயலாதது. மேலும் துணிகளால் செய்த பைகளை பலர் கேவலமாய் எண்ணுகிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். அன்றாட வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களான வாளி, குடம், தட்டு போன்ற ஏராளமான பொருள்களுக்கு உலோகங்கள், மரம் ஆகியவற்றை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும். அனைத்திலும் மேலாக விற்பனையைத் தடை செய்வதைவிட உற்பத்திக்குத் தடை விதிப்பது பயனளிக்கும் செயலாகும்.

ஆக்கம் & தொகுப்பு :  மு.அஜ்மல் கான். 

No comments:

Post a Comment