Friday 13 March 2015

இஸ்லாத்தில் தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ்செய்வது கூடுமா? ஒரு சிறப்பு பார்வை..

திக்ர் செய்வது என்பது ஓர் வணக்கமாகும். வணக்கங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் அழ்ழாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. அவனால் அறிவிக்கப்படும் சட்டங்களை மனிதகுலத்திற்கு ஒளிவு, மறைவின்றி எடுத்துரைப்பதுதான் நபிகளாரின் கடமையாகும். 
முஸ்லிம்களாகிய எம்மை திக்ர் செய்யுமாறு பணித்த அழ்ழாஹ் தஸ்பீஹ் மணியினால் அதனைச் செய்யுமாறு அல்குர்ஆனில் எங்குமே கூறவில்லை. திக்ர் செய்வதை ஆர்வமூட்டி அதை தன்வாழ்வில் அமுல்படுத்திய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்  தஸ்பீஹ் மணிகளைப் பயன்படுத்தி இறைவனை நினைவு கூர்ந்ததாக எவ்வித ஆதாரமும் ஹதீஸ் கிரந்தங்களில் காணக் கிடைக்கவில்லை.
இன்று மக்கள் பயன்படுத்தும் தஸ்பீஹ் மணி போன்ற சாதனங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் இருக்கவில்லை. ஆனாலும் பேரீத்தங் கொட்டைகளை வைத்தாவது திக்ர் செய்திருப்பார்களா? என ஹதீஸ் நூற்களில் தேடிப்பார்த்தால், எவ்விதச் சான்றையும் அதற்கும் காணவில்லை.
அழ்ழாஹ்வோ, அவனது தூதரோ சம்பந்தப்படாத எந்த வணக்கமும் அழ்ழாஹ்வின் பார்வையில் உண்மை வணக்கமாக அங்கீகரிக்கப்படமாட்டாது. இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்கின்ற போது தஸ்பீஹ் மணியினால் திக்ர் செய்யும் நடைமுறை மிக அண்மைக்காலத்தில்தான் முஸ்லிம் சமூகத்தினுள் புகுந்தது என்பதை அறிய முடிகின்றது.
இந்துக்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்த இந்திய முஸ்லிம்களிடமிருந்துதான் இக்கலாசாரம் முஸ்லிம் களுக்குள் தோன்றியுள்ளது. இந்து முனிவர்களிடம் காணப்படும் ‘ஜெபமாலை’ யின் மறுவடிவமே ‘தஸ்பீஹ் மணி’ என்பது வெளிவராத உண்மையாகும்.
அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீத்களில் அறவே இடம் பெறாத இந்தக் காரியம் வழிகேடானதும் நரகிற்கு அழைத்துச் செல்வதுமாகும். இக்காரியத்தை எவ்வகையிலும் நாம் அங்கீகரிக்க முடியாது. தஸ்பீஹ் மணியைப் பயன்படுத்தி திக்ர் செய்வது வழிகேடானது என நாம் கூறுவதால் அழ்ழாஹ்வை திக்ர் செய்வதை மறுக்கின்றோம் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
திக்ர் செய்யுமாறு கூறிய நபிகளார் தன் வாழ்வில் பேரீத்தங் கொட்டைகளைக் கூட பயன்படுத்தாமல் விட்டுள்ளார்கள் என்பது பிற சாதனங்களைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இருந்துங்கூட தன் கைவிரல்களினாலேயே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திக்ர் செய்துள்ளார்கள் என்பதை எமக்கு துல்லியமாக விளக்குகின்றது.
மேற்படி கைவிரல்களால் திக்ர் செய்யும் நடைமுறையே நபிவழியில் ஆதாரபூர்வமானதாகும். நபிகளாரை நேசிக்கும் ஒருவர் கைவிரல்களினாலேயே திக்ர் செய்ய வேண்டுமேயன்றி தஸ்பீஹ் மணியையோ இன்ன பிற சாதனங்களையோ பயன்படுத்தக் கூடாது.
அபூஹுரைரா, இப்னு மஸ்ஊத், அபூபக்கர் (ரழி) போன்ற நபித் தோழர்கள் கற்களினாலும் பேரீத்தங் கொட்டைகளினாலும் திக்ர் செய்ததாக தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின் தஃலீம் தொகுப்பு எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. மேற்படி இத்தகவல் முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்டதும் பலவீனமான செய்தியுமாகும்.
ஆதாரமற்ற இவ்வாறான போலித்தகவல்கள் முஸ்லிம் களிடம் அதி வேகமாகப் பரவியிருப்பதனாலேயே தஸ்பீஹ் மணியினால் திக்ர் செய்யும் பிழையான, ஸுன்னாவுக்கு மாற்றமான கலாசாரம் தோன்றியது. மார்க்க விடயத்தில் போதிய தெளிவின்மையால் இந்துக் கலாசாரமான ‘ஜெபமாலை’ அழ்ழாஹ்வின் ஆலயங்களில் ஆணிகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் துர்ப்பாக்கியத்தைக் காணுகின்றோம்.
இந்நடைமுறை மாற்றப்பட வேண்டும். இறையச்சத்தை நினைவூட்டுகின்றது என்றும், நல்லவர்களின் அடையாளமெனவும் இந்த தஸ்பீஹ் மணி இன்று உலமாக்களால் போதிக்கப்படுவது மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். கைவிரல்களினால் நாம் திக்ர் செய்தால் கரங்கள் பேசும் அந்த மறுமை நாளில் நிச்சயம் அவைகள் எமக்கு சார்பாக சாட்சி சொல்லும் என்பதை நன்றாக சிந்தித்தால் தஸ்பீஹ் மணியை நாம்  கையில் எடுக்கமாட்டோம்.

தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம்என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக்காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.


நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம்பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபி (ஸல்)அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, "இதைக்கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?''
என்று கேட்டு விட்டு, "இதைக் கொண்டு நீ செய்யும்தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக்கற்றுக் கொடுக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். நான்சரி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்"ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்'' என கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
நூல்: திர்மிதீ 3477


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக்கொண்டு தஸ்பீஹ் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள்எந்தத் தடையையும் செய்யவில்லை; மேலும்அவர்களின் மனைவி பேரீச்சம் கொட்டைகளைக்
கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபி (ஸல்) அவர்கள்அங்கீகரித்துள்ளதால் தற்போது நவீன காலத்தில் தஸ்பீஹ்மணி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் தஸ்பீஹ்செய்யப்படுகிறது. எனவே இதைக் கூடாது என்று கூறமுடியாது என்று வாதிடுகின்றனர்.


இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! 

இந்தச்செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள்
இச்செய்தியின் இறுதியில், "இது அறியப்பட்டஅறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை''என்று குறை கூறியுள்ளார்கள்.மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம்பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர். அதன்இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரெனஅறியப்படாதவர். எனவே இந்தச்செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்தச்செய்தியை வைத்துக் கொண்டு சட்டம் எடுக்கமுடியாது.இதைப் போன்று இன்னொரு செய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம்சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள்தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம்கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன.அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்)இதை விட உனக்கு இலகுவான
அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்...
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491


இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!
இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறிப்படாதவர். இவர்
நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா? என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜர் மற்றும் தஹபீ ஆகியோர் இவரை யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர்.எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது.


மேலும் தஸ்பீஹ் மணி என்பது மாற்று மதத்தவர்களின் வழிபாடுகளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும்.
அங்கு தான் சில கொட்டைகளை வைத்து பின்னப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தித் துதிப்பார்கள்.
எனவே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவது கூடாது."யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக
நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்:
பஸ்ஸார்) மேலும் கைகளால் தஸ்பீஹ் செய்ய வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளும் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.


"உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்!அந்த விரல்களும் (மறுமையில்)விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யுஸைரா (ரலி), நூல்கள்: அஹ்மத்
25841, திர்மிதீ 3507


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி சிலஅறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.இரண்டாவது அறிவிப்பாளர் ஹுமைளா பின்த் யாஸிர்என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹானீ பின்உஸ்மான் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள்.இவ்விருவரையும் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை; இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென அறியப்படாதவரையும் நம்பகமானவர் பட்டியலில் இணைத்து விடுவார் என்பதால் அவரின்
கூற்று மதிப்பற்றது என்று விமர்சனம்செய்யப்படுகிறது.


இந்தச் செய்தி பலவீனமானதாக இருந்தாலும் நஸயீ என்ற நபிமொழித் தொகுப்பு நூலில் ஆதாரப்பூர்வமான செய்தி இடம் பெற்றுள்ளது.நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளால் தஹ்பீஹ்செய்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: நஸயீ 1331


இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர்அதா பின் யஸீத் என்பவர் மூளை குழம்பியவர் என்ற விமர்சனம், இந்த ஹதீஸில் எந்தப் பலவீனத்தையும்ஏற்படுத்தாது. ஏனெனில் அதா பின் யஸீத் என்பவரிடம்இந்தச் செய்தியில் செவியுற்ற ஹம்மாத் பின் ஸைத்என்பவர், இவர் மூளை குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர்கேட்டவர் என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிடும் செய்தி "தஹ்தீபுத் தஹ்தீப்' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி விரல்களால் தஹ்பீஹ்செய்வதே நபிவழியாகும்.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment