Saturday 12 September 2015

சவூதி அரேபியாவின் புனித நகரமான மெக்கா மசூதியில் கிரேன் முறிந்து விழுந்து 118 பேர் பலி !!

சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வேகத்துடன் காற்று வீசி வருகிறது. முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்கா மசூதியில் கிரேன் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில், 118 பேர் பரிதாபமாக பலியானார்கள். 394–க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த காற்றில் நிலை தடுமாறிய கிரேன், மசூதியின் மேற்கூரை மீது மோதி இரண்டு துண்டாக உடைந்தது. மேற்கூரை உடைந்து உள்ளே இருந்த ஹஜ் பயணிகள் மீது விழுந்ததில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக சவுதி அரேபிய சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.


ஆண்டுதோறும் ஹஜ் பயணம் ..

சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள்ஹஜ்புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கானஹஜ்பண்டிகை, 22–ந் தேதி தொடங்கி 27–ந் தேதி வரை நடக்கும்.

இருப்பினும், முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்கு சென்றவண்ணம் உள்ளனர். வழக்கம்போல், இந்த ஆண்டும் 25 லட்சம் 
முஸ்லிம்கள்  மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் திரண்டு தங்கள்ஹஜ்கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக, அந்த மசூதியில் கட்டிடத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிக்காக மிகப்பெரிய கிரேன் ஒன்று மசூதி  வளாகத்தில் மர்வா  கேட் அருகில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கிரேன் முறிந்து விழுந்தது..


Image result for crane falls in meccaமெக்கா நகரில், நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. எதிர்பார்த்தது போலவே, நேற்று இரவு பலத்த காற்று வீசியது.சவுதி நேரப்படி மாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் நல்ல மழை பெய்ததாகவும், இதனால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

அதைத் தொடர்ந்து, பெரிய மசூதியில் வெளியே உள்ள  மர்வா  கேட் அருகில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன், காற்றின் வேகத்தால் திடீரென முறிந்து விழுந்தது. மசூதியின் கூரைப்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அதனால், கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. அப்போது அருகில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் 2 துண்டாக முறிந்து மசூதி மீது விழுந்ததில் உள்ளே இருந்த 118 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த கிரேன் விபத்துக்கு பலத்த காற்று வீசியதே காரணம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
.

118 
பேர் ஹஜ்யாத்ரீகர்கள்  சாவு.. 

மெக்காவில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள் அங்குள்ள பெரிய மசூதியில் குழுமியிருந்தனர். இதனால், மசூதிக்குள் இருந்த நூற்றுக்கணக்கானஹஜ்யாத்ரீகர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில், 118 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியானார்கள். 300–க்கும் அதிகமானோர் பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்தவுடன், சவுதி செம்பிறைச் சங்கத்தைச் சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரண படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பலியானவர்களின் உடல்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தன. அந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அவை, பார்த்தவர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தன. இதில் பலியானவர்களில் 2 இந்தியர்கள் மற்றும்  படுகாயம் அடைந்த 238 பேரில் 15 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்களை பாதுகாக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

மக்காவில் நடந்த விபத்தில் காயம் மற்றும் வாபாதானவ்ர்களை பற்றி அறிய கிழே உள்ள நம்பரில் ஜிதாஹ் இந்திய தூதரதிர்க்கு அழைக்கவும்,

24 மணி நேர சேவை   போன்  :00966125458000 
மொபைல் : 00966125496000 
டோல் ப்ரீ  நம்பர் :  8002477786 

இந்த  விபத்தை நீங்கள் நேராக கிழே பார்க்கலாம்
ஆக்கம் மற்றும் தொகுப்பு :  மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment