Thursday 18 February 2016

சமுதாய அவலங்களை தட்டிக்கேட்கும் யார் இந்த வெங்கடேஷ்?



வெங்கடேஷ் போன்ற சமுதாய அவலங்களை தட்டிக்கேட்கும் பொருப்புள்ள இளைஞர்கள் நம்மில் பலர் உள்ளார்கள். சமுதாய அக்கரையும் ஊழலை ஒழிக்கும் வல்லமை படைத்த இளைஞர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இவர்கள் கையில் தான் எழுச்சி மிகு பாரதத்தின் எதிர்காலம் உள்ளது. காலமௌ காலமாக மக்களை ஏமாற்றி அஆதாயம் அடையும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து சாமானியரையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் பெரிய பொருப்பு இன்றைய இளைஞர்களிடம் உள்ளது என்பதைஉணர்ந்து செயலாற்ற வேண்டும்.


யார் இந்த வெங்கடேஷ்.?

ஒல்லீயான தேகம். விடாமுயற்ச்சி. அசாத்திய துணிச்சல் யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட இளைஞர்.
சமுதாய அவலங்கலை சகித்துக்கொள்ள முடியாமல் ஊர் ஊராய் பிரச்சனைகளை தேடி பயணிக்கிறார். தினம் RTI போடுகிறார். சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடப்பில் கிடக்கும் அரசு வேலைகளை ஏன் செய்யவில்லை என்று குடிமகனுக்கு உள்ள மக்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கேள்வி கேட்கிறார். எந்த காரியம் யாரால் முடியும் எந்த அதிகாரியால் இந்த பணி தாமதமாகிறது. அந்த பணி முடிய என்ன செய்ய வேண்டும். என்பதெல்லாம் விரல் நூனியில் வைத்துள்ளார்.


பட்ட படிப்பு படித்த இவர் அனைத்துறைகள் பற்றி ஆணி வேர் முதல் அறிந்து வைத்திருக்கும். இவர் திருநெல்வெலி மாவட்டத்தில் அனைத்து அதிகாரிக்கும் பரிச்சயமானவர். இவர் நூழைந்தாலே தவறு செய்த அரசு அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைக்க வைத்துவிடுகிறார். இவர் இடுக்குபிடியில் தப்பிக்க முடியாமல் ஓரு நகராட்சியே கூடி சிறையில் தள்ள தீர்மானம் போட்டது.
சுயஒழுக்கத்தில் சிறப்பானவரான வெங்கடேஷ் எதிலும் சிக்க வைக்கமுடியவில்லை. எதிரிகளை விட 9 அடி கூடுதல் பாய்கிறார். ரோடு போடுறாங்களாம்பா.! பாலம் கட்டுறாங்களாம்ப்பாம்.! ஆக்கிரமிப்பை அகற்றுராங்களாம்பா.! லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாராம்ப்பா.! பொய் சான்றிதழ்ல வேலையில் சேர்ந்து மாட்டிகிட்டாராம்ப்பா .! என்று திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் பேசும் இந்த பேச்சின் அடித்தளத்தின் அஸ்திவாரம் வெங்கடேஷ் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது என்பது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.

சுதந்திர போராட்டத்தின் போது இத்தகைய இஞைஞர்களை பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். இந்த நூற்றாண்டிலும் சொந்த வாழ்க்கையை பற்றி கவலைபடாமல் தேசப்பற்று கொண்ட இளைஞராக வலம் வருகிறார்.

தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கதவுகளை உரக்க தட்டும் இளைஞர் எந்த ஓரு பிரச்சனையும் சிங்கம் போல சிங்கிளாக சந்தித்து வெற்றி பெரும் வரை விடுவதில்லை. அரசியல் கட்சிக்கோ அதிகாரிகளுக்கோ விலை போகாத இவர் இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவி நாட்டு பற்று கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தி வருகிறார்.

வெங்கடேஷின் ஆசை ஓன்றே ஒன்று மட்டும் தான். என்னைப்போல சமூக அக்கரை உள்ள இளைஞர்கள் ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனர். முதலில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டுவிட்டேன் என்றால் நாட்டை கொடியவர்கள் கையில் இருந்து காப்பாற்றி விடமுடியும் என்று முழு நம்பிக்கையோடு சொல்கிறார்.
சமூக அக்கரை கொண்ட இளைஞர்கள் இந்த நெல்லை மைந்தனுடன் கரம் கோர்கலாமே.!

வெங்கடேஷ் - 9500 922 922


No comments:

Post a Comment