Saturday 27 February 2016

பெண்களின் வாழ்வில் டீன் ஏஜை விடவும் மிகவும் ஆபத்தான தருணம் நாற்பது வயது !!இதோ அதிர்ச்சி அளிக்கும் அட்வைஸ்...



தூக்கம் வரல... உருப்படியா என்ன செய்யலாமென்று யோசிக்கும் போது, இதைச் செய்யலாமே என்ற நல்லெண்ணத்திலும், பெண்களின் பாதுகாப்பிற்கும் உதவலாமே என்ற நற்சிந்தனையிலும் கைவலிக்க நானே டைப் செய்த பதிவு....


பொதுவாக பெண்களுக்கு20 -25 வயதில் திருமணமாகிவிடும் .பின் கணவன், குழந்தைகள், குடும்பம், school, வேலை என நாற்பது வயது வரை மிகவும் busy யாக இருப்பார்கள்,


நாற்பதை தொடும்போது 20 வருட குடும்ப வாழ்க்கை முடிந்திருக்கும், அஜித் மாதிரி கனவு கண்டவர்கள் எல்லாம் அப்புகுட்டி போன்றவருக்கு வாக்கப்பட்டு, அவர் சாயலில்
இரண்டு மூன்று குழந்தைகளையும் பெற்றிருப்பார்கள்,

அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் +2 படிக்கும் வரை பின்னாலேயே சுற்றிவந்துவிட்டு college ல் கால் வைத்ததும் அவர்களுக்கு என தனியாக நண்பர்கள், அவர்களோடு வெளியே போவது அம்மாவிடம் share பண்ணிய விஷயங்கள் எல்லாம் இப்போது நண்பர்களிடம் share பண்ணுவார்கள்

அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தவிர்க்கமுடியாத ஒரு இடைவெளி உருவாகும்,

குழந்தைகள் வளர்ந்து வர வர அவர்களின் எதிர்காலம், படிப்பு என சிந்தனை திசைதிரும்பி கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான நெருக்கமான தருணங்களும், காதலும் ரொமான்ஸ் ம் கூட குறைந்து இரண்டு பேருக்கும் இடையேவும் ஒரு இடைவெளி உருவாகும்,

இருந்த தோழிகளையும் கல்யாண மேடையிலேயே கழட்டி விட்டிருப்பீர்கள்!

கணவன் பணம் சம்பாதிக்க ஓட, குழந்தைகள் மார்க்கை தேடி ஓட பெண்கள் மட்டும் அந்த ஆபத்தான நாற்பது வயதில் தனிமையில் இருப்பார்கள்

தன்னுடன் நேரம் செலவழிக்கவோ, தன் சமையல் குறித்தோ தனித்தன்மை குறித்தோ பாராட்ட ஆள் இருக்காது இதுபோன்ற தனிமையில் தூக்கம் வருவது தடைபடும்

இந்த தனிமையின் கொடுமை போதாதென்று.. ப்ரீ மெனொபாஸ் சங்கடங்கள் வேறு வரிசை கட்டி நிற்க..

TV, phone தவிர்த்து கொஞ்சம் படித்தவர்கள் நண்பர்கள் சோல்லியோ அல்லது தனக்கே தெரிந்தோ இன்டர்நெட் பயன்படுத்த தொடங்குவார்கள்

அதிலும் Facebook போன்ற சமூக வலைதளங்கள் தான் முதல் choice, முன்பின் தெரியாத நபர்களுடன் பொழுதுபோக்காக பேச ஆரம்பித்து நாளடைவில் அதற்கு அடிமையாகி நள்ளிரவுவரை பேச்சுக்கள் போட்டோ பறிமாற்றங்கள் என தான் என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத அளவுக்கு அந்த நட்பு சென்றுகொண்டு இருக்கும்

பெரும்பாலும் பெண்கள் தான் அதில் பாதிக்கப்படுகிறார்கள் நன்கு பழக்கமான நம்பிக்கையான நண்பர்களிடம் எந்த நேரத்தில் பேசினாலும் தவறில்லை, ஆனால் இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு புதிதாக வருவோர் நள்ளிரவில் online ல் இருப்பது மிகுந்த ஆபத்தான ஒன்று,

பொதுவாக இரவு 10 மணிக்கு மேல் நன்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் chat பண்ணும் பெண்களை ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்,

குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாத ஒரு பெண் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசவேண்டிய அவசியமே இல்லை என்பது ஆண்களின் கணக்கு,

பெண்கள் குடும்ப பிரச்சனையிலோ, மனஅழுத்தத்திலோ இருக்கும் போது யாராவது ஆறுதல் சொன்னால் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும்,

அதே நேரத்தில் சொல்பவரின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்

ஆடு நனைவதற்காக ஓநாய் ஆறுதல் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும், நள்ளிரவில் online ல் இருக்கும் பெண்களை ஆறுதல் வார்த்தை சொல்லியோ, அன்பாக இருப்பதுபோல் நடித்தோ, அழகாக இருப்பதாக பொய்சொல்லியோ, பணத்தாசை காட்டியோ, ஆபாசமாக பேசியோ தன் வலையில் சிக்கவைக்க ஆயிரக்கணக்கான ஓநாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன,

முன்பின் தெரியாதவர்களின் புகழ்ச்சிக்கு ஒருபோதும் மயங்காதீர்கள், உங்கள் குடும்பத்து பிரச்சனையில் மற்றவர்களை குளிர்காய அனுமதிக்காதீர்கள், உங்கள் தனிமைக்கு குடைபிடிக்க சாத்தான்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்,

தனிமைக்கு குடைபிடிக்கும் அதே நேரத்தில், உங்கள் குடும்பம்,உங்கள் மதிப்பு,
உங்கள் குழந்தைகள் எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல நண்பர்களை
மட்டும் உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் தற்காலிக ஆறுதல் தேடல் நிரந்தரமான குடும்பத்தில் சலசலப்பை எற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனம் கொள்ளுங்கள்!


உஷார் தாய்க்குலமே! உங்களுக்கு ஒரு எடுத்துகாட்டை சொல்ல ஆசைபடுகிறேன்

உண்மையில் என் தோழியின் friend listல் இருந்த Veronica என்ற சகோதரிக்கும், Meena மாமிக்கும் ஏற்பட்ட விபரீதம். Now, Both are not in FaceBook.

பெண்களே! தேவையா உங்களுக்கு இந்த அவல நிலை:

கணவர் முன்போ, ஈன்றெடுத்த பெற்றோர் முன்போ, நீங்கள் ஈன்றெடுத்த வயது வந்தக் குழந்தைகள் முன்போ இப்படிக் கூனிக் குறுக வேண்டுமா? அவர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டுமா?

West Bengalலிருந்து, பல வருடங்கள் கழித்துத் தன் பிறந்த வீட்டிற்குப் போவதை ஒரு பெண், Facebookல் update செய்கிறார்.

அதை Facebook இப்படிக் காட்டுகிறது.

Jaya Bachchan travels with Amitab Bachchan & 16others to Chidambaram, TamilNadu.

இதற்கு 999 likes, 110 comments. அத்தனையும் வெட்டி., டம்மி, உடான்ஸ்.

அதில் அப்பெண்ணின் ஆண் நண்பர்கள் கேட்கும் எப்படி வாறீங்க, என்ன color dress ல் வாறீங்க, Saree or chudi, bus or train or flight எத்தனை மணிக்கு Reach ஆகும் போன்ற கேள்விகளுக்குப் பொறுமையாக, துல்லியமான முறையில் அப்பெண் பதிலளிக்கிறார்.

இதன் விபரீத விளைவு, அப்பெண் வந்து reach ஆகக் கூடிய இடத்திற்கு, அந்த கேள்விகள் கேட்ட ஆண்கள் கூட்டமே வந்து நின்று, ஒருத்தன் luggage தூக்குகிறான், ஒருத்தன் face dullஆ இருக்கீங்க, wash பண்ணிக்கோங்க என்று சொல்லி Water Bottle கொடுக்கிறான்.

இது அத்தனையும் அப்பெண்ணுடன் பயணம் செய்த கணவர், குழந்தைகள்,உறவினர் முன்பே நடக்கிறது.

அவ்விடத்திலேயே, கணவர், குழந்தைகள் முகம் கோவத்தால் கருகி, வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அப்பெண்ணுக்கு அவள் பெற்ற மகன், மகள், உட்பட அனைவர் முகத்தையும் பார்க்க கூசுகிறது.

என்ன ......க்கு status போடுற? அவன் யாரு... எனக்கு மேல அக்கறையா இருக்கான்? இது போன்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கும் போது, சந்தோஷம் சிதறுகிறது. என்ன purposeக்காக ஊருக்கு வந்தோமோ அது..... ஏன் டா வந்தோம் என்று மாறுகிறது!

உங்களுக்கு இது தேவையா?

Likes & Commentsக்கு ஆசைப்பட்டு, life & commitmentsஐத் தொலைத்துவிடாதீங்க தாய்க்குலமே...

இன்னொரு மீனா, இன்னொரு வெரோனிகா வேண்டாம்.

கணவன் மனைவி அந்நியோன்யத்தைப் Publicல் கை பிடித்து அல்லது கை கோர்த்துக் கொண்டு அல்லது bikeல் போகும்போது இறுக்கிக் கட்டிக் கொண்டு போவது போன்ற செய்கைகளால் பறைசாற்றலாமா?

கணவன் மனைவி கருத்தொருமித்தக் காதலை, அன்பை ஊருக்குத் தெரியப்படுத்த அவசியமோ, கட்டாயமோ இல்ல. public places ல் எப்படி கண்ணியமாக நடக்கனுமோ அப்படி நடந்தால் போதும்.

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்?
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்.

இதை விட இன்னொரு கேவலமான விஷயம் என்னவென்றால், TVல் ஒருத்தி/ஒருவன் Mike எடுத்துட்டு வந்து பேட்டி எடுப்பான்.

நீங்கள் முதன் முதலாக பார்த்த படம்?

முதலில் யார் propose செய்தீங்க?

யார் ரொம்பக் கோவப்படுவீங்க? யார் விட்டுக் கொடுத்துப் போவீங்க?

இது போன்ற கேள்விகளுக்கு, உண்மையான கருத்தொருமித்தத் தம்பதியராக இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?

நான் என் மனைவியை நேசிப்பது அவளுக்குத் தெரியும்.
அவள் என்னை நேசிப்பது எனக்குத் தெரியும்?

நடுவுல நீ யாரு நாயே இதை மைக், video camera எடுத்துட்டு வந்து ஊரு பூரா போட்டுக் காட்டுற என்று நம்ம வில்லன் ரகுவரன் மாதிரி சொல்லி விரட்டி அடிப்பாங்க.

This is the original bond between husband &wife.

அந்தரங்கம் புனிதமானதுங்க. அதை வெளியே சொல்லிக் கேவலப்படுத்தாதீங்க.

கணவன்-மனைவிக்குள் இருக்கும் எந்தவொரு விஷயமும், பெர்சனல் டைரி போல இருக்கனுமே தவிர, சுவரொட்டி போல இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment