Saturday 16 July 2016

வட்டியில்லா கடனுக்காக பைத்துல்மால் !!

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

சமுதாயத்திலிருந்து வட்டியை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தின் மர்க்கஸ்களில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தினை அமுல்படுத்தி மக்களை பெரும்பாவமான வட்டியிலிருந்து மீட்கும் பணியினை இவ்வமைப்பு செய்து வருகிறது.தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர் ஜமாத் நிர்வாகிகளும் கண்டிப்பாக இந்த பைத்துல்மால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்..!!
ஒரு கடுத்த புஸ்த்தகமும், ஒரு சந்தூக்கும், கபர்ஸ்த்தானையும் மட்டும் முதலீடாக வைத்துக் கொண்டு....
கல்யாணம் செய்து வைப்பதும், மைய்யத்து வந்தால் அடக்கம் செய்வதும், பஞ்சாயத்தில்... பொதுமக்களிடம் ஏதாவது அபராதத் தொகை விதித்து வசூலிப்பதும்...
விருந்து வீடுகளுக்கு சென்று வயிற்றை நிறைப்பதும் மட்டும் ஜமாத்தார்களின் வேலையாகி விடாது..!
உள்ளூர் மக்களின் மீதும் அக்கரை கொள்ள வேண்டும்.
அவர்களை கந்து வட்டி கொடுமையிலிருந்தும் மீட்க்க முயற்சி செய்ய வேண்டும்.
வட்டியிலிருந்து நம் சமுதாயத்தை மீட்டெடுப்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமையாகும்..!
எனவே தங்கள் ஊரிலும் இது போன்ற பைத்துல்மால் ஏற்படுத்திட, அரசு சலுகைகளையும் பெற்றிட...
வரும் 30ம் தேதி... இந்நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ளவும்..!
இந்த தகவலை காணும்.. இளைஞர்கள், சமுதாய சொந்தங்கள் உங்கள் ஊர் ஜமாத் நிர்வாகிகளிடம் உடனடியாக இதை தெரிவிக்கவும்..!!
அதுவே இதை படிப்பவர்களின் கட்டாய கடமையாகும்...!
(காரணம்: முகநூல், Whatsapp, போன்ற சமூக ஊடகங்கள் பல ஊர் ஜமாத்தார்களிடமும் இருப்பதில்லை. இது தொடர்பாக பத்திரிகை விளம்பரங்களும் நாம் செய்திடவில்லை)
தென் மாவட்டத்தினர் அவசியம் உங்கள் ஜமாத்தாரை இதில் வந்து கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.


அன்பான... பைத்துல்மால் சொந்தங்களே!

அருளாளன் அல்லாஹ்வின் கட்டளைப்படி, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி,
தமிழகத்தில் இதுவரை சுமார் "1,400" ஜகாத் & வட்டியில்லாக்கடன் வழங்கும் பைத்துல்மால்கள் (இஸ்லாமிய உள்ளூர் ஜமாத் வங்கிச் சேவை) செயல்பட்டு வருகின்றன.
இந்த பைத்துல் மால்களை ஒருங்கிணைப்பது மற்றும் பைத்துல்மால்கள் இல்லாத ஊர்களில் புதிய பைத்துல்மால்களை ஆரம்பிப்பது சம்பந்தமாக,
பைத்துல்மால் ஆலோசகரும், தஞ்சை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் பிரமுகருமாகிய...
அல்ஹாஜ் SM.ஹிதாயதுல்லா அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்ஸா அல்லாஹ்! வரும் 30.7.2016 (சனி) அன்று மதுரையில் "தென் மாவட்ட பைத்துல்மால்களின் கருத்தரங்கம்" நடைபெறவுள்ளது.
எனவே... இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு
பைத்துல்மால் நிர்வாகிகள், மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள்,
தங்களது பெயர், ஊர், மாவட்டம், செல் நம்பர் ஆகியவற்றை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..!
தனி நபர்கள் யாரும் எங்களை தொடர்பு கொண்டு கடன் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்..
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.. உங்கள் ஊர் ஜமாத் நிர்வாகத்தின் காதுகளுக்கு இந்த தகவலை கொண்டு சென்றால் போதும்..!
அப்போதுதான் உங்கள் பகுதியில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வட்டியில்லாமல் கடன் கிடைக்க கூடும்..
இதில் மாவட்டம் தோறும் தமிழக அரசு மூலமாகவும் மானிய நிதி கிடைக்கும்.
மேலும் விபரங்கள் அறிய... தொடர்புக்கு: 9840040067, (ஹிதாயத்துல்லா)
மற்றும்...
9363013894,
9344101150,
9789283744,
9443191276,
9443005494.
தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment