Wednesday 31 August 2016

கொடூர நோய்களை பரப்பும் மரபியல் மாற்றிய வாழைப்பழம் !! ஓர் அதிர்ச்சி தகவல்..

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப் பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய நீளமான மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும்.
நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.


இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள்தான்.இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகி விடும்.இயற்கையான மஞ்சள், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.


மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.




கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை  ஏழ்மையிலும் பசி,பட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.
முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் *பெங்களூர் வாழைப்பழம்* என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.


மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்  இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.


இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.*பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

*
பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.
இந்நிலையில் *இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.


எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.
திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.
விரைவில் உணவு பஞ்சம்வரும்.அதன் முதல்படதான் பர்மா தான்சானியா பிரசிலுடன் ஒப்பந்தம் போட்டு நமக்கு தேவையான பயறு வகை களை பயிரிடப்போகிறார்களாம்.நமது நாட்டில் விவசாயத்தை ஒழித்துகட்டிவிட்டு அடுத்த நாட்டிடம் கையேந்துவது பேராபத்து!இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் மனிதனை மலடாக்கும்.. நல்ல எதிர்காலத்தை உருவாக்க BT விதையை தவிர்ப்போம்!
ஆண்மை,பெண்மை இழக்காமல்!!

வாழ்க வளத்துடன்...

தொகுப்பு  :   அ .தையுபா அஜ்மல்.

Friday 26 August 2016

எலும்பு தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம் !!

Image result for எலும்பு தேய்மானத்தைவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை.ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.
எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.
மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.
இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும்.
எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.
கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது.
இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.
இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும்.
காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும்.
மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.
எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது.
இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும்.
இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.
இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.
எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு முறை:
சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும்.
எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும்.
இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.
எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.
ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
ரெசிபி
பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.
ஓட்ஸ் குருமா:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
பிரட் தோசை:
தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும்.
பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.
டயட்
பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.
சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும்.
காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும்.
சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.
அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.
அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.
மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.
ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.
உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை வைத்தியம் அவசியம்"
"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"
"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"

தொகுப்பு  :  அ.தையுபா அஜ்மல் .

Sunday 21 August 2016

உன்னத கலைஞனுக்கு உலகத்தரத்தில் ஒரு செவாலியே விருது !!

Kamal hassan


உலக நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது சிறந்த நடிப்பாற்றலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்த உயரிய விருது மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தமிழில் களத்துார் கண்ணாம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் திரைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.
இந்திய அரசின் விருதுகள்...

ஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.



 பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே...

தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

செவாலியே
த்தமிழர்கள்!!


முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.சத்தமில்லாமல் பல தமிழர்கள் ஏற்கனவே விருது வேண்டிவிட்டார்கள்... கமல் ஆறாவது தமிழர்... இதில் இருவர் ஈழத்தமிழர்கள்...

1. அஞ்சலி கோபாலன் செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண் (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக

2. சிவயோகநாயகி இராமநாதன் செவாலியர் விருது பெற்ற முதல் ஈழத் தமிழ்ப்பெண். ஆசிரியர், அதிபர்.

3. சிவாஜி கணேசன் (கலைத்துறை பங்களிப்பிற்காக - 1995

4. ஷெரீன் சேவியர் (மனித உரிமைசார் பணிகளுக்காக)

5. நாகநாதன் வேலுப்பிள்ளை - யாழ் பருத்தித்துறை ஆத்தியடி

6. கமல்ஹாசன்(கலைத்துறை )பங்களிப்பிற்காக - 2016




கமல்ஹாசன் பன்முகத் திறமையாளர்...

கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் இந்த விருதை சினிமா பிரபலங்களான நான்கு பேர் இதுவரை பெற்றுள்ளனர். ஐந்தாவதாக இந்த விருதுப் பட்டியலில் கமல் தற்போது இணைந்துள்ளார். இதேபோல், தமிழில் இந்த விருது கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையையும் கமல் பெற்றுள்ளார். இதுவரை செவாலியே விருது பெற்ற இந்திய திரைப்பிரபலங்களின் விபரமாவது:

1987ம் ஆண்டு வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே

1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்

2014ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்

2016 ஆண்டு நடிகர் கமல்ஹாசன்



வாழ்த்துரை !! 

ஈடு இணையற்ற கலைஞன் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் !
செவாலியே விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அயராத உழைப்பு, தனித்தன்மை, சினிமாத் துறையின் பன் முகத்திலும் கால் பதிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றியே கண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். சிவாஜிக்குப் பிறகு 'செவாலியர்' விருது பெரும் நேரத்தில் ஒப்பிட்டும் நோக்க வேண்டியுள்ளது. சிவாஜியைப் போல புராண, இதிகாச, சரித்திரப் படங்களிலோ, அல்லது தேச பக்தர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படங்களிலோ தடம் பதிக்க அவர் இன்னமும் முயலவில்லை என்பது உண்மை. இருப்பினும், மேலும் விருதுகள் பெற நல் வாழ்த்துக்கள்..

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


Saturday 20 August 2016

JOB HAZARD OR JOB SAFETY ANALYSIS ( JHA/JSA0 ACTIVITY FOR REFRIGERANT PIPE TESTING

NO.
ACTIVITY
POTENTIAL HAZARDS
RISK RATING
PREVENTIVE MEASURES
RESIDUAL RISK
RESPONSIBLE PERSON
1
Prepare work area and material arrangement for the job.
·     Untrained crew
·     Tools and equipment failure
·     Slips, Trips and Fall Hazards
M


·   All personnel shall be undergone for SSA Safety induction and required necessary training prior to enter revamping areas
·   All employees shall be aware of the emergency evacuation plan and also shall be familiar that how to react in an emergency. Location of assembly point areas and emergency number.
·   Specific work permit shall be obtained prior to start the activity.
·   Before commencing job, JHA shall be communicated to all involve person and available at worksite with other required documents.
·   All workers shall wear appropriate P.P.E as per the recommendation of HSE department according to the hazards.
·   All tools and material shall be in good condition and shall be color coded. Found damage shall be mark “do not use” and shall be remove from site.
·   Only skilled workers shall perform the activity.
·   All access ways shall be properly identify and maintained in good condition
·   SSA shall allocate dedicated person to conduct regular housekeeping in each designated location.
·   All tools and materials shall be kept in approved designated storage area.
·   Proper cable management shall be implemented.
L
Task Supervisor/ PTWR 
2
Setting up and connecting of test manifold, nitrogen cylinder, hoses to  to pipe system
·     Tools are inappropriate, defective, and fabricated
·     Hoses obstructing access ways
M
·   Ensure that all hand tools are properly inspected with current monthly color code.
·   Supervisor shall ensure that all tools are in the standard prior to its use. Fabricated tools are not allowed to be used.
·   All workers shall wear the appropriate PPE at all times.
·   Access to the work locations shall be clear and free from any obstruction.
·   Manifold must accordance in client pressure testing standards and requirements and obtained valid testing certificate.
·   Manifold should be mark with testing pressure capacity, indemnification number and other details
L
Task supervisor
Worker
3
Line pressurizing
·     Loose /not properly tightened connections
·     Un-calibrated test manifold and gauges
·     Unavailability of whip lash installed on hoses connections
·     Nitrogen leak
M
·   Supervisors shall ensure that all connection is properly tightened.
·   Work notification shall be convey to all affected and responsible departments.
·   All affected area will be provided with barricade and appropriate, safe distance shall be in accordance with LLOYDS’s Registry Standards.
·   Pressurization shall be stop immediately and pressure shall be gradually reduced to zero gauge reading in case of pipe failure. Nitrogen cylinder valve shall also be immediately turned off
·   Pressurization shall be immediately cancelled when a leak is detected.
·   Workers shall immediately vacate the area when leak is observed.
·   Only approved and calibrated gauges shall be used for the test. Calibration shall be done within one month of the test and the ranges shall be 30 to 80% of the gauge’s full range.
·   There shall one pressure gauge installed on both the manifold and system under test.
·   Test manifold shall be tested separately to 1.2 times of actual test pressure. Valid 3rd party certificate shall be attached with the test package.
·   Relief valves shall be tested, dated, and tagged within 1 week prior the testing
·   All hoses connection shall be tight and secured by whiplash arrestor
·   Rated capacity of hose shall be more than the test pressure
·   Testing crew shall obtain required training for pressure testing.
·   There shall be a person dedicated to monitor the pressurization progress
·   Holding pressure shall be as per the test procedure approved by Client
·   A person shall be assign to operate the outlet valve of the nitrogen cylinder.
·   All workforces shall be aware on potential hazards in exposed of nitrogen such as frostbite and displacement of oxygen amount.
L
Task supervisor
Worker
4
Leak Checking
·     Unauthorized personnel
M
·   Trained and authorized crews only are allowed to do the leak inspection.
·   Observation to be made away from the joints. At any cost do not stand in front of the end joint.
·   If any leak observed, immediately reduce the pressure to zero.
·   Reduce the pressure to design pressure before start the leak checking
L
Task supervisor
Worker
5
Depressurizing
·     Untimely release of pressure
M
·   Open the vent valve slowly until the pressure was reduced.
·   Coordinate with the other worker. Give notice prior the release of pressure
·   Task supervisor to ensure no person in line of fire at vent area.
L
Task supervisor
Worker

நாட்டு நாய்களே நமக்கேற்ற நாய்கள் !!

ஷிரின் மெர்ச்சன்ட், - நாய்களுக்குப் பிரியமானவர். நாய்களை நேசிப்பவர். இதுவரை 3000க்கும் மேற்பட்ட நாய்களைக் கையாண்டு வெவ்வேறு வகைகளில் பயிற்சி கொடுத்தவர். இந்தியாவிலுள்ள நாய்களுக்கான வெகுசில பெண் பயிற்சியாளர்களில் இவருக்கே முதலிடம்.

சமீபத்தில் சென்னையில் ‘திங்க் டாக்’ என்னும் நிகழ்ச்சியை நடத்த வந்திருந்தவரிடம், நாய்களைப் பற்றியும், நாய்களுடனான அவரது உறவைப் பற்றியும் உரையாடியதிலிருந்து...
‘‘ஷிரின், டாக் ட்ரெயினர் ஆனது எப்படி?’’

‘‘எங்கள் வீட்டில் பெட் டாக் வளர்த்தோம். அதுதான் நாய்களுடனான என் பிரியத்திற்கு அடிப்படை. 1995ல் உலகப் புகழ்பெற்ற நாய்ப் பயிற்சியாளர் ஜான் ரோஜார்சனை சந்தித்தேன். நாய்கள் மீதான என் ஈடுபாட்டைக் கண்டு அவர் என்னை நாய்களைப் பற்றி மேலும் படிக்க இங்கிலாந்து அழைத்தார். பயிற்சி முடித்து வந்தபோது, மிகவும் மனநிறைவாக இருந்தது. உரிமையாளர்களுக்கு, நாய் வளர்ப்பைக் கற்றுக் கொடுக்கும் டாக் டிரெயினராக பணியாற்றத் தொடங்கினேன்.’’ 


‘‘நாய்களைப் பயிற்சிப்படுத்தும் முறை பற்றிக் கூற முடியுமா?’’


‘‘நாய்களுக்கும், அதன் பயிற்சியாளர்களுக்குமான உறவு ‘டெலிபதி’ மூலம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று கருதிய மக்கள் கடந்த சில வருடங்களாகத்தான் அது அறிவியல் சார்ந்தது என உணர ஆரம்பித்திருக்கிறார்கள். நாயின் பயிற்சியாளர் நாயின் குணநலன்களையும், பழக்க வழக்கங்களையும், சுற்றுப்புறத்தையும் ஆராய்ச்சி செய்த பின்னரே அதை முழுமையாகப் பயிற்றுவிக்க முடியும். ஆரம்பத்தில் நாயைப் பார்த்துக் கத்த வேண்டும், பேச வேண்டும். ஒரு பந்தம் உருவான பின், நம் சத்தம்தான் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்பதில்லை; நம் கண்கள், விரல் அசைவுகளைக் கூட அது புரிந்துகொள்ளும். இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு முறைகளைக் கொண்டு நாய்களுக்கு பயிற்சி கொடுக்கலாம்.’’
‘‘ஒரு லேடி டாக் டிரெயினராக, இத்துறை தந்த அனுபவம்?’’

‘‘20 வருடங்களுக்கு முன் நாய் பயிற்சியாளராகப் நான் பணியைத் தொடங்கியபோது, ஆண்களால் மட்டுமே இதைச் செய்திட முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் காட்டினேன். முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது பல பெண் பயிற்சியாளர்கள் இத்துறையில் வெற்றி நடை போட்டு வருவதைக் காணும்போது, பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம் உள்ளதால், இந்த வேலை ஆண்களைவிட பெண்களுக்கு எளிமையானது.’’

“ ‘திங்க் டாக்’ நிகழ்ச்சியின் குறிக்கோள்?’’


‘‘நாய் உரிமையாளராக இருந்தும் நாய்களைப் பற்றி சரிவரத் தெரியாதவர்களுக்கு அந்நாயின் குணங்களையும், பழக்கவழக்கங்களையும் இன்னும் தெளிவாக கற்பிப்பதே இதன் நோக்கம். இதன் மூலம் அவர்கள் தங்கள் நாயைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதுடன், அதற்கு பயிற்சி அளிப்பது எவ்வளவு உற்சாகமான விஷயம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். சென்ற வருடம் இந்நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியாவில் ஐந்து நகரங்களில் நடத்தினோம். இப்போது 23 நகரங்களில் நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.’’
‘‘ஏதேனும் சுவாரஸ்ய அனுபவம்..?’’

‘‘ஒரு நாய் தன் உரிமையாளரின் தலையணையில் அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அந்த உரிமையாளர் அந்நாயை தனியாக விட்டுச் சென்றதன் காரணமாக கோபத்தில் இப்படி செய்திருக்கலாம் என நினைத்தார். ஆனால் நாங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அந்த நாய்க்கு உரிமையாளரின் மேலுள்ள நிலை கொள்ளாத பிரியம் காரணமாக அவரை விட்டுப் பிரிந்திருக்க முடியாது தவித்ததும், பின் அவர் வாசனை அதிகமுள்ள தலையணையின் மீது சிறுநீர் கழித்ததும் தெரிய வந்தது. அந்த உரிமையாளருக்கு அவர் அந்த நாயை விட்டுப் பிரியும் சமயங்களில், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அந்நாய்க்குப் பழக்குமாறு ஆலோசனை கொடுத்து சில யுத்திகளையும் கையாளச் சொன்னோம். அதன் பிறகு, அந்த நாய் அவர் தலையணையில் சிறுநீர் கழிக்கவில்லை!’’ 


‘‘இந்தியாவின் சீதோஷண நிலைக்கு வளர்க்க ஏற்ற நாய் ரகம் எது?’’


‘‘ ‘ஸ்டேட்டஸ்’ வேண்டி பலரும் வெளிநாட்டு நாய் ரகங்களையே வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், உண்மையில் நம் நாட்டு நாய்களே நல்ல ரகங்கள்தான். அதைப் பழக்கப்படுத்துவதும், புரிந்துகொள்வதும் எளிது என்பதுடன், குறைந்த உடல்நிலைக் குறைபாடுகள் கொண்டவையாகவும் இருக்கும். நம் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற நாய் வகையும் அவையே!’’

Thursday 18 August 2016

ஜோக்கர்ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் !! ஒரு சமூக பார்வை..



ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம்அரசியல்வாதிகளை மட்டும் அல்ல.அரசியலை ஒரு கண்ணாகவும் அன்பை மறு கண்ணாகவும் சிரிப்புடன் கலந்த யதார்த்தத்துடன் படைத்த படம். பத்திரிக்கைகளின் விபச்சார முகத்தையும் டார் டாராக கிழித்த படம் சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை இப்படியொரு கருவை யோசித்தற்காகவே, இயக்குநர் ராஜூ முருகனுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள். அமைச்சர்கள் ஹெலிகாப்டரை வழிபடுவது, நாக்கைத் துருத்துவது, ஏ/சியில் உண்ணாவிரதம், கலாய்க்கும் இணைய பிரபலங்களின் பெயர்கள், முப்பாட்டனின் மதம் என வசனங்களில் முருகேஷ் பாபுவோடு இணைந்து சரவெடி கொளுத்திப் போட்டுள்ளார் ட்ராஃபிக் ராமசாமியின் செயற்பாடுகளையும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்தும் ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் பாத்திரத்தில் பேராசிரியர் மு.ராமசாமி அசத்தியுள்ளார். காம்ரேட் இசையாக காயத்ரி கிருஷ்ணா கவனத்தை ஈர்க்கிறார். பின் தொடர்பவனைக் கை பிடிப்பதோடு, கணவனை விருப்பத்திற்காக வேலையை விடும் மல்லிகாவாக வரும் ரம்யா பாண்டியன், அவரது முக பாவனைகளாலும், மேக்கப்பற்ற எளிய அழகாலும் ஈர்க்கிறார்..


தீ பறக்கும்   கீழ் கண்ட வசனங்கள்  படத்திற்கு மேலும் மெருகேற்றுகின்றன !!

மேகிய தடை பன்னுனா சீனாவுக்கு பிடிக்கல
குளிர்பானத்த தடை பண்ணுனா அமெரிக்காவுக்கு
பிடிக்கல,


ஹெலிகாப்டரா ஏன் கும்பிடுறீங்கனு அமைச்சர்கிட்ட
சொன்னா ஆளுங்கட்சிக்கு பிடிக்கல,

அரநாள் உண்ணாவிரத்த்துக்கு 10 ஏர்கூலரானு கேட்டா எதிர்கட்சிக்கு பிடிக்கல,

சாதி மறுப்பு திருமணம் பண்ணி வச்சாசாதிவெறியன்களுக்கு புடிக்கல

குண்டு வைக்கிறவன விட்டுங்க, கோயில்ல உண்டக்கட்டி வாங்குறவன் பிடிங்க?

கக்கூஸ்ல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணையை எப்படி எதிர்பார்க்கிறது?

ஹீரோவைவிட வில்லனைத்தான் இப்போ ஜனங்களுக்கு பிடிக்குது

நிம்மதியா வாழவும் விடல பேளவும் விடல இவிங்க

எந்த போலீஸ் ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’

கக்கூஸ் கட்டுன காசு நாறாது சகாயம் பண்ணல.. அட்லீஸ்ட் சகாயம் மாதிரி பண்ணுங்க

நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?

உங்களுக்கு நல்லது பண்ணினா நான் பைத்தியக்கரனா? போங்கடா போய் பீயை தின்னுங்க.? லாட்ஜ்ல பிராத்தல் பண்ணுங்க

நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா….?

இது போன்ற வசனத்துக்காகவும்..


அரசியல் வாதிகள் மற்றும் கார்ப்பரேட்கள் சம்பாதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட மோடியின்கிளீன் இந்தியா திட்டத்தின் உண்மை தன்மையை கிழி,கிழி என கிழித்தமைக்காகவும. பல இடங்களில் அம்பேத்கர் ,பெரியார் ,பகத்சிங் போன்ற முற்போக்காளர்களின் புகைப்படம் மட்டுமல்ல அவரது கருத்துக்களும் படம் நெடுகிலும் பேசப்படுவதற்கும்‪ ‎ஜோக்கரை‬ பல முறை ரசிக்கலாம்...

இலவச கழிப்பறைத் திட்டத்தைப் பற்றி, அரசு அலுவலகத்தின் வெளியே நின்றவாறு ஓர் அதிகாரி, யாருக்கு எவ்வளவு கமிஷன் போகவேண்டும் என்பது போல் ஃபோனில் பேசிக் கொண்டிருப்பார். அந்த அலுவலகத்தின் அவலமான கழிப்பறையை இயக்குநர் ராஜூ முருகன் காட்டுவதோடு, ஓட்டை பக்கெட் மூலமாக தண்ணீர் வேகமாகப் போவதாகவும் காட்டியிருப்பார்ஒட்டு மொத்த மக்களுக்கு போராடுகிறவங்கள பார்த்து வெட்டியா கத்துறாங்க,
ரோட்ல டிராபிக் ஜாம் பண்றாங்க,,ஜோக்கருங்க என நெனச்சவங்க பல பேர்கிட்ட  
சின்ன மாற்றத்தனாலும் ஏற்படுத்தும் இந்த படம் நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த சிஸ்ட்டத்தை சிரித்துக்கொண்டே, கரைத்த சாணியில் பிஞ்ச செருப்பை முக்கி பளார் பளார் என அறைகிறார் ராஜு முருகன். ரோட்டோரம் போராட்டம் செய்யும் ஒருவரின் வலி இனி சாலையை கடக்கும் ஒருவருக்கும் எளிமையாய் புரியும்.... (டிராபிக் ராமசாமி போன்றவர்களை இனி மதிக்க கற்போம்)...

இன்று  விகடன்‬ 50/100 என்ற  மார்க் கொடுத்திருக்கிறது என்றால் ‪ஜோக்கர்‬ ஒரு வெற்றிப்படமாக அந்தஷ்து பெற்றுவிட்டது. 

நல்ல படங்களை ஆதரிப்போம் சின்ன படங்களை ஆதரிப்போம் இல்லயேல் ... நாம்தான் ஜோக்கர்!!

ஆக்கம்   மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday 17 August 2016

என் மனைவி தையுபாவிற்க்கு 11ம் திருமண நாள் கவிதை !!

நிலம் அழகு நீர் அழகு 
மீன் போன்ற உன் கண் அழகு!
பூ அழகு பொட்டழகு
உன் இதழ் சிந்தும் தேன் அழகு!
உடை அழகு இடை அழகு
நளினமான உன் நடை அழகு!
மண் அழகு விண் அழகு
பௌர்ணமியாய் உன் முகம் அழகு!
பகல் அழகு இரவு அழகு
கார்கூந்தலாய் உன் முடி அழகு!
கை அழகு விரல் அழகு
அதற்க்கு மகுடமாய் உன் நகம் அழகு!
மயில் அழகு குயில் அழகு
தேன் தெவிட்டும் உன் குரல் அழகு!
சினம் அழகு சிரிப்பழகு
உன் கன்னத்தில் விழும் குழி அழகு!
கவி அழகு மொழி அழகு
நீ பேசும் தமிழ் அழகு!
நெளிவழகு சுளிவழகு
உன் கால்களில் சிலம்பழகு!
நனி அழகு நகை அழகு
பொன்நகையாய் உன் சிரிப்பழகு!
அலை அழகு கடல் அழகு
கடல் போன்ற உன் மனம் அழகு! 
தூண் அழகு துரும்பழகு
குறும்பான உன் குணம் அழகு!
இரவு அழகு கனவு அழகு
எனை வாட்டும் உன் நினைவழகு!
மனம் அழகு சினம் அழகு
நீ வசிக்கும் என் உள்ளம் அழகு!
நதி அழகு மதி அழகு
நீ பாடும் ஜதி அழகு!
வான் அழகு மண் அழகு
இறைவன் படைப்பில் பெண் அழகு!
என் அழகு எது அழகு
பெண் இனத்தில் நீ அழகு!

உன் கணவன் ; மு . அஜ்மல் கான் .