Friday 30 September 2016

நவராத்திரி கொலுவின் தத்துவம் மற்றும் கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறை !!

நவராத்திரி கொலுவின் தத்துவம்;  

நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதென்பது ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் குட்டி திருவிழா தான். நவராத்திரி முழுவதும் வீட்டை அலங்கரித்து, மாவிலை தோரணத்தால் வீட்டை அலங்கரித்து கொலு படிகட்டுகள் அமைத்து பொம்மைகளால் அவற்றை அலங்கரிப்பதே ஒரு தனி கலைதான்.அந்த கலை எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது.கொலு என்றால் அழகு என்று பொருள்.ஒன்பது படிகள் அமைத்து கொலு வைக்க படுகிறது.இவை ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.
Image result for கொலு பொம்மைகொலு பொம்மை தத்துவம் என்ன வென்றால் மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது.
*முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது.
*இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள் ஆகும்.
*மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை மனிதனுக்கு வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.
* நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
*ஐந்தாம் படியில் மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.
*ஆறாம்படியில் மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் ஆகலாம் என்பது பொருளாகும்.
*ஏழாம்படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள்.
*எட்டாம்படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது.
* ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதி பராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது.

கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறை:  
1. கொலு பொம்மைகளை கொலு படியில் அடுக்கும் முன் முதலில் படிகளை நன்றாக சரிபார்க்கவும்
2. கொலு படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்தவும. ( பட்டு துணிகள் வேண்டாம்)
3. கொலு பொம்மைகளை மேல் படியில் இருந்து அடுக்கிகொண்டு வரவும் .
4. கொலு பொம்மைகளை அடுக்கும் முன் படிகளை அலங்கரிக்கும் வேலைகளை முதலில் செய்துவிடவும்.
5. கொலு பொம்மைகளுக்கு நவராத்திரி நாட்களில் சாம்பிராணி புகைகளை அதிகம் காட்டவேண்டாம்.
6. கொலு பொம்மைகளில் லேசாக மண் படிந்து இருந்தால் அதை ஒரு காட்டன் துணியால் தட்டவும். ( அதன் மீது துடைத்து தேய்க்க கூடாது)
7. தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிக்கு கீழ் எந்த ஒரு தின்பண்டகளையும் வைக்க கூடாது .
8. உங்கள் வீட்டு கொலுவை பார்க்க வருபவர்கள் கொடுக்கும் பொம்மைகளை கீழ் படியில் மட்டும் வைக்கவும்.
9. நவராத்திரி நாட்களில் கொலு வைக்கும் இடத்தில் காற்றாடிகளை பயன்படுத்த வேண்டாம்.
10. கொலு முடிந்த பிறகு இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்ளவும்.
11. உங்கள் வீட்டு கொலுவில் இருக்கும் பொம்மைகளின் பெயர்களை தயவுசெய்து எழுதிவைத்து கொள்ளவும் . அடுத்தமுறை கொலுவைக்கும்போது உங்களிடம் இல்லாத பொம்மைகளை வாங்க இந்த குறிப்பு உதவியாக இருக்கும் .
12. கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடிக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதிவைத்துகொள்ளவும் .
13. உங்கள் வீட்டு கொலுவில் மிகவும் பழைய ( வர்ணம் இல்லாத) பொம்மைகள் இருந்தால் அதனை தனியாக ஒரு பெட்டியில் கட்டி வைக்கவும் . ( புதியதாக வர்ணம் பூச ஏதுவாக இருக்கும்)
14. கொலு பொம்மைகளை கட்டிவைக்கும் போது முதலில் பொம்மைகளுக்கு பைகளை போடவும்.( polythin cover) அதன்பிறகு காகிதங்களை வைத்து பொம்மைகளை மடிக்கவும்.
15. கண்டிப்பாக பழைய துணிகளை பொம்மைகளுக்கு பயன்படுத்தகூடாது . அது பொம்மைகளின் மேல் உள்ள பளபளப்பை குறைத்துவிடும்
16. பொம்மைகளை பெட்டிகளில் அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிர்க்கவைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்ககூடாது.
17. பொம்மைகளை அடுக்கும்போது அடுத்து அடுத்து மேல் நோக்கி அடுக்கும்போது காகிததூள்களை (cut piece) பயன்படுத்தவும்.
18. எந்த ஆர்வத்துடம் கொலு வைகின்றோமோ அதே ஆர்வத்துடன் பொம்மைகளை நன்றாக அடுக்கி முறையாக பராமரிக்கவேண்டும்,
19. இந்துகளின் பண்டிகைகளில் 10 நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி திகழ்கிறது , அப்படி கொண்டாடப்படும் இந்த நவராத்திரியில்தான் நம் வீட்டிற்கு அணைத்து தெய்வங்களும் குடிபுகுந்து நம்மை காக்கிறது. அப்படி நாம் கொலு பொம்மைகளை நல்லபடி பராமரித்தால் நமக்கு அணைத்து அனுக்ரஹம்களும் வந்து சேர்வது நிச்சயம்.
தொகுப்பு   : அ.தையுபா அஜ்மல்.

Saturday 24 September 2016

தோல்வியே காணாத ஒரே தமிழ் மன்னன் வரலாற்றை படிக்காத எந்த இனமும் வாழாது !!

சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். *தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.
கி.பி.930  யில் தொடங்கி கி.பி.1305 வரை கிட்டத்தட்ட 375 ஆண்டுகள் தொடர்ந்து கொங்குநாட்டை சுயாட்சியாகவும் 275 ஆண்டுகள் தஞ்சை பேரரசாக ஆட்சி செய்தவர்களே இந்த சோழர்கள். நாம் அனைவரும் சோழர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம், பாடபுத்தகத்தில் படித்திருப்போம். அதுமட்டுமில்லாமல் சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தஞ்சை சோழர்கள் மட்டுமே !!
ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1014 ஆம் ஆண்டு மன்னராக முடி சூடி கொண்டார். மன்னரான பின்னர் புதிய தலைநகரை ஏற்படுத்தினார். கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த நகரிலிருந்தபடி பல வெற்றிகளைக் குவித்தார். சோழ ராஜ்ஜியத்தையும் வளம் கொழிக்கும் சொர்க்கபூமியாக மாற்றினார். 30 ஆண்டுகள் மகத்தான ஆட்சி புரிந்தார்.

தோல்வியே காணாத ஒரே தமிழ் மன்னன், பல நாடுகளை வென்றெடுத்த ஒரே இந்திய மன்னன், சோழ ராஜ்ஜியத்தை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன்  மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.
*வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு.*
இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது.

ராஜேந்திரசோழன் தனது பெரும் கடல் படையுடன் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியா, வங்கம், மாலத்தீவு,ஜப்பான்,சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வென்று சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்தார். கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.


உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.
மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். *உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.
கிட்டத்தட்ட 11 லட்சம் வீரர்களை கடல் கடந்து கொண்டு சென்றிருப்பானேயானால் எத்தனை நாடுகளை வென்றிருக்க முடியும்? அத்தனை பேருக்கும் எப்படி சாப்பாடு போட்டிருப்பான்? இது மாதிரியான போர்களை உலகத்தில் இதுவரை யாருமே நிகழ்த்தியதே இல்லை. *இதற்கெல்லாமே போதிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.*
இன்றைய நிலையில் அமெரிக்கா, இந்தியா ராணுவத்தையும் சேர்த்தால்கூட 2 லட்சம் துருப்புகளைத் தாண்டாது.
ஏதோ ஒரு காரணத்தினால் ராஜேந்திர சோழன் தவறவிட்டதன் விளைவுதான் கஜினி முகமது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டான்.
மாவீரன் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2015, மார்ச் 15ம் தேதி தபால் தலை வெளியிட்டுள்ளது. அந்த தபால்தலையில், ‘உலகில் கப்பலை முதன்முதலாக உருவாக்கியவனும், பயன்படுத்தியவனும் ராஜேந்திரசோழன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல்.

தாசியை மனைவியாக்கிய பெருமைக்குரியவர் சாதாரண தாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணை கோவில் வாசலில் சந்தித்து அவரைப் பிடித்துப் போய் மணந்து அவருக்குரிய மரியாதைகளை, வசதிகளைச் செய்து கொடுத்தவரும் கூட. அவரது பெயர் பாவை. இந்த பாவையின் சிலை கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இப்போதும் கூட உள்ளது.
ஏரி வெட்டிய சோழன் அத்துடன் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்கை வளம்பெற மேற்கு பகுதியில் சோழகங்கம் என்னும் மிகப்பெரிய ஏரியை வெட்டி இந்த பகுதியில் விவசாயம் செழிக்க செய்தார். இந்த ஏரிதான் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. கங்கை வரை சென்று வென்று வந்தபோது அங்கிருந்து குடம் குடமாக கொண்டு வந்த தண்ணீரை இந்த ஏரியில் ஊற்றினார்களாம்.

ராஜேந்திர சோழன்.. முடிசூடிய 1000–மாவது ஆண்டு நிறைவு விழா!
2014ஆண்டு ஆயிரமாவது ஆண்டு நிறைவு இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாமன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறி 1000 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடல் கடந்தும் தமிழனின் ஆட்சியை நிறுவிய ராஜேந்திரனை கொண்டாடும் விதமாக கங்கை கொண்ட சோழபுரத்தில் இரண்டு நாட்கள் விழா நடைபெற்றது.விழாவையொட்டி ஆயிரமாவது ஆண்டு விழா மலர் வெளியீட்டு விழா நடந்தது. இதன் முதல் பிரதியை தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர் சுந்தரமூர்த்தி, குலோத்துங்கன் ஆகியோர் வெளியிட சென்னை கிறிஸ்தவ கல்லூரி தமிழ் துறை தலைவர் அசேந்திரன் பெற்றுக்கொண்டார்.தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தீபச்சுடர் ஓட்டம் நடந்தத, இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைக்கிறார். தீப ஜோதியை எழுத்தாளர் பாலகுமாரன் ஏற்றி வைத்தார். இந்த ஓட்டத்தில் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர் .


நாம்தான் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுகிறோம். ஆனால் வட இந்தியாவில், இன்றைக்கும் கப்பலை கண்டுபிடித்தவன் சிவாஜிதான். அதே வட இந்தியன்தான் ராஜேந்திர சோழனுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறான். எனில், நான் ஏன் அவுரங்கசீப்பை படிக்கணும்? நான் ஏன் அக்பரை படிக்கணும்? நான் ஏன் அசோகரைப் படிக்கணும்?
தமிழ் அரசர்கள் மட்டுமின்றி தென்னிந்திய மன்னர்கள் பற்றிய பாடங்கள் எதுவுமே வடஇந்திய பாடப்புத்தகங்களில் இல்லை.
இந்தியாவின் 60 சதவீத பகுதிகளை ஆட்சி செய்தவன் அசோகன். காஞ்சியில் உள்ள அசோகர் ஸ்தூபி கல்வெட்டில், ‘என்னால் தெற்கு பகுதியில் மட்டும் நுழைய முடியவில்லை. காரணம், சோழர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அப்படி இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இன்னும் அக்பரையும், அசோகனையும், ஷாஜகானையும் படிக்க வேண்டும்?*
அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள்?
பெரிய கேள்வி எழவில்லையா? முதன்முதலாக *இப்போதுதான் ஒரு தமிழ் புத்தகத்தில் பென்னி குயிக் ஃபோட்டோ போட்டுள்ளனர்.வள்ளுவனையே நம்மால் அட்டையில் வைத்துக்கொள்ள முடியவில்லை.அப்புறம் எப்படி வரலாறை சொல்லிக்கொடுக்க முடியும்?
உலகையே ஆண்ட ராஜேந்திர சோழனுக்கு இதுவரை அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்படவில்லை.* இப்படி எவ்வளவோ சொல்ல முடியாத ஆதங்கங்கள் இருக்கின்றன.

மேலும் அறிய ..
https://www.youtube.com/watch?v=6-IkRGI4BCg

இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.
அவர்களாவது, பண்டைய காலத்து வரலாறுகளை நினைவு கூறும் செப்பேடுகளை, தொல்லியல் துறை சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. நாணயங்கள் கண்காட்சியைத் தொடர்ந்து, செப்பேடுகள் பற்றிய கண்காட்சியை நடத்துவது சிறப்பு. சோழ, பாண்டிய, பல்லவர் உள்ளிட்ட அரசர்களின் வரலாற்றை விளக்கும் செப்பேடுகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அரசர்களின் ஆட்சி முறை, கொடை, நிபந்தனைகள் பற்றி விளக்கும் வரலாற்று ஆவணமாக இந்த செப்பேடுகள் விளங்குகின்றன. பண்டைய வரலாறு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உண்மையான வரலாற்றை படிக்கட்டும், வரலாற்றை படைக்கட்டும்,
வரலாற்றில் வாழட்டும் !!

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Thursday 22 September 2016

சவூதி அரேபியாவில் புதிய சட்டம் !! ஒரு தவகல்..


சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியல் இந்த விபரங்கள் பின்வருமாறு:
1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.
✔மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்
2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.
✔மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.
✔மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் ‘வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்
8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.
✔மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.
9. ஹஜ் ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.
✔மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.
10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது – பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் ‘கஃபாலத் – ஸ்பான்ஸர்ஷிப்’ மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.
✔மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது
11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.
✔மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்
12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.
✔மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.
13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.
✔மீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்
✔மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.
15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.
✔மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை
16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்…
✔ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.
17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.
✔மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்….

Monday 19 September 2016

Redmi 3S 32GB Mobile Phone at Just Rs599 on Amazon !!

Image result for www.amazonsales.co.in Redmi 3s at Rs.599Beware, it's a scam! Xiaomi Redmi 3S 32GB at just Rs 599 on Amazon

 The Amazon website information this is fake. Such sites only work when you open them on the phone and they fool unsuspecting internet users into buying them. But you money will go into a black hole.
Amazon India only sells from Amazon.in so please check the url you are going to before you decide to buy.

The fraudsters have very cunningly made a shadow copy of Amazon's website in which it is offering Redmi 3S 32GB at just Rs 599. Many users have found this message circulating on social platform like Facebook, WhatsApp, Hike etc.
If not handled carefully, these sites can easily trick you into sharing your valuable data –from phone number, email, personal details etc.
Be very careful while you feed in your details.

Wednesday 14 September 2016

பொறுமை கடலினும் பெரிது !! பொறுமை பற்றி இஸ்லாமிய பார்வை..

Image result for பொறுமைஇன்னைக்கு உங்களுக்கு மூணு கதை சொல்லப் போறேன்.

1.முதல் கதையில ஒரு அப்பா ஆபீஸ் விட்டு வர்றாரு.

வீட்டுக்குள்ள நுழையும் போது அவரு பொண்ணு போகோ சேனல் பாத்துகிட்டிருக்கிறா. அடுத்த நாள் பரீட்சை. அவ என்ன செய்தா காலையில இருந்து படிச்சிட்டு இருந்தா.

அப்புறம் அம்மா கிட்ட கேட்டுட்டு பத்து நிமிசம் ரிலாக்ஸ் பண்ண டிவி பாத்துகிட்டு இருந்தா. ஆனா அவ அப்பா கண்ணுல என்ன பட்டுச்சி. டிவி பாக்குறது மட்டும்தான் பட்டுச்சி. சட்டுன்னு வந்தாரு. படிக்காம டிவியா பாக்குறன்னு அவர் பையால டிவி மேல வீசினார்.

அது டிவி மேல பட்டு டிவி ரிப்பேர் ஆகுது.

2.இரண்டாவது கதையில ஒரு அம்மா தன் குட்டிக் குழந்தையோட ஒரு கீரிப்பிள்ளையையும் வளக்குறாங்க
.

ஒருநாள் குழந்தைக்கு காவலா கீரிப்பிள்ளைய வெச்சிட்டு ஆத்துல தண்ணி எடுக்கப் போறாங்க. அப்போ குழந்தைக்கு பக்கத்துல ஒரு பாம்பு கொத்த வருது. உடனே கீரிப்பிள்ள பாம்பு கூட சண்டைப் போட்டு கடிச்சி கிழிச்சி போட்டிருது. கீரிப்பிள்ளை வாயெல்லாம் ரத்தம்.

ஆத்துல இருந்து குடத்த எடுத்துகிட்டு வந்த அம்மாவ நோக்கி கீரிப்பிள்ள ஒடிவருது. அம்மா பாக்குறா.

கீரிப்பிள்ள வாயில இருந்து ரத்தம். வாய் ரத்தம். ரத்தம் வாய். உடனே முடிவு செய்யுறா. ஆஹா நம்ம குழந்தையைத்தான் கீரி கொன்னுட்டு வருதுன்னு என்ன பண்றா.

அந்த தண்ணிக் குடத்த கீரி மேல போடுறா. தண்ணி குடம் எவ்வளவு வெயிட்டு, அதுவும் பூமி கீழ இழுக்கிற வேகமும் சேர்ந்து பெரிய எடையா கீரிபிள்ள தலையில் விழுது. கீரிப்பிள்ள அடிபட்டு கிடக்குது. உள்ளப் போய் பாத்தா அங்க பாம்பு கிழிஞ்சி கிடக்குது. குழந்தை தூங்கிகிட்டிருக்கு.

3.மூணாவது கதையில ஒருத்தன் ஒரு நாய ஆசையா வளத்துட்டு வந்தானாம். அவனுக்கு ரொம்ப கஷ்டம் வர, அந்த நாய அடமானம் வெச்சி காசு வாங்கினான்.

நாயை வைச்சிகிட்டு காசு கொடுத்த வியாபாரி கேட்டாராம் “என்னப்பா நாய என்கிட்ட விட்டுட்டு போற. அது என்ன விட்டு உன்கிட்ட ஒடிவந்திராத” அப்படின்னார்.

உடனே இவன் அப்படி வராதுன்னு, நாய் கண்ணப் பாத்து அப்படி வந்திராதன்னு பார்வையில கெஞ்சினான். அன்னையில இருந்து நாய் வியாபாரிக்கு ரொம்ப விசுவாசமா இருந்துச்சி.

ஒருநாள் வியாபாரி இல்லாத நேரம் ஒரு திருடன் வர, நாய் திருடன கடிச்சி விரட்டிட்டாம். உடனே வியாபாரி நாய் மேல அன்பு அதிகமாகி “சரி நீ இனிமே உன் எஜமானன் கிட்டையே போயிரு. எனக்கு சேவை செய்தது போதும். நான் கடன் பத்திரத்த கிழிச்சிப் போட்டிறேன்னு அனுப்பி வெச்சான்.

நாய் ஆசை ஆசையா எஜமானன தேடி வருது. இங்க நம்ம ஆள் நாயை மீட்டுக்கிறதுக்கு காசு சேத்துட்டு வேகமா வர்றான். எதுத்தாப்புல நாய் வால ஆட்டிக்கிட்டு வருது.

அதப் பாத்து தப்பா நினைச்சிர்ரான் “ஏய் நாயே. நாந்தான் உன்ன நா வர்ற வரைக்கும் வியாபாரிக்கு விசுவாசமா இருன்னு சொன்னேனே, நீ துரோகம் பண்ணிட்டு தப்பிச்சி ஒடிவர்றியா”என்று சொல்லிட்டு தன் கையில இருக்கிற கம்ப வெச்சி நாய் மேல ஒரே அடி.

நாய் பாவமா அடிபட்டு தரையில கிடக்குது.

இதுல பாருங்க மூணு கதையிலையுமே நாம் கண்ணால பாக்குற காட்சிய அப்படியே நம்புறோம். கண்ணு பாக்குது, டக்குன்னு முடிவெடுக்குறோம்.

அப்பா பொண்ணு மேல கோபப்படுறார்.
அம்மா கிரிப்பிள்ள மேல குடத்தைப் போடுறாங்க.
எஜமானன் நாய் மேல கம்பு வீசுறான்.

இன்னொன்னயும் கவனிங்க மூணு பேரையுமே மூணுபேருக்கும் ரொம்ப பிடிக்கும்.

அப்பாவுக்கு பொண்ணப் பிடிக்குது.அம்மாவுக்கு கீரிபிள்ளைய பிடிக்குது. அதனாலத்தான் குழந்தைக்கு காவலா வெச்சிட்டு போறாங்க.
எஜமானனுக்கு நாயை ரொம்ப பிடிக்குது.

இவ்வளவு பிடிச்சிருந்தாலும் ஏன் கண்ணால பாக்குற காட்சியை நம்புறாங்கன்னு யோசி.


ஏன் கண்ணால பாக்குற காட்சியை நம்புறாங்கன்னா அவுங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள ரொம்ப நம்பல.

ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க மேல ரொம்ப ரொம்ப நம்பிக்கை இல்லை.

என்னைக்குமே நமக்கு ரொம்ப பிடிச்சவங்க மேல நம்பிக்கை வைக்கணும். நமக்கு பிடிக்காத ஒண்ண அவுங்க செய்தாக கூட டக்குன்னு அந்த அப்பா மாதிரியோ, அந்த அம்மா மாதிரியோ, அந்த எஜமானன் மாதிரியோ டக்குன்னு உணர்ச்சிவசப்பட்டிரக் கூடாது.

பொறுமையா அவுங்கள நம்பி மெல்லமா அன்பா விசாரிக்கணும்.

அவசரப்பட்டா அது பெரிய இழப்புல கொண்டு விட்ரும்.

இதுதான் இன்னைக்கு உங்களுக்கு சொல்ல விரும்புற கதைகள்....
பொறுமை கடலினும் பெரிது.



பொறுமை பற்றி இஸ்லாம் என்ன  கூறுகிறது ?

வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் "பொறுமை" என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. பொறுமை என்பது இறைவனிடத்தில் இருந்து வருகின்ற ஓர் அருள் (ரஹ்மத்) ஆகும். பொறுமைக்கெதிரான குணங்கள் "உணர்ச்சிவசப்படுதல்" அல்லது "கோபம் கொள்ளுதல்" என்பதை நன்கு அறிந்திருந்தாலும், நடைமுறையில் இவற்றிற்கே பலர் அடிமையாக உள்ளனர்.
மனிதனுக்கு ஏற்படும் பல துன்பங்களுக்கு மூல காரணம் இக்கோபம் தான். இன்று உலகெங்கிலும் நடக்கும் அநியாய சண்டை, சச்சரவுகள் மற்றும் பேரிழப்புகளுக்குக் காரணம் இக்கோபமே!
காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்! ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) எனும் அல்குர்ஆனின் (103:1-3) திருவசனத்தின் மூலம் இறைவன் உணர்த்தும் விஷயம் என்னவென்று நாம் சிந்தித்ததுண்டா?
இறைநம்பிக்கையுடன் நற்காரியங்களைச் செய்வது, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் நல் உபதேசம் செய்வது ஆகிய குணங்களை இறைவன் இவ்வசனத்தின் மூலம் உணர்த்துகின்றான்.
இவ்வுலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு மனிதன் மேற்கண்ட இவற்றைச் சரியான முறையில் கடைபிடித்தால் ஏற்படும் உலக அமைதிக்கான அடிப்படை விதிகளை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறான். அத்துடன், இம்மை, மறுமை எனப்படும் ஈருலகிலும் நஷ்டங்களைத் தவிர்க்கும் சிறந்த வழிகளையும் தெளிவுபடுத்துகிறான்.
நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் (சஹீஹ் புஹாரி, முஸ்லிம்) என்பதை அறிவித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்தைத் தடுக்க இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடும் முறையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பது தமிழ் மக்களிடையே வழக்கில் உள்ள சொல்லாகும். கோபத்தால் புத்தி பேதலித்து சிந்திக்காமல் செயல்படுவதனால் வரும் பின் விளைவுகள் வருத்தங்களாக, இழப்புகளாக முடிவதைக் காண்கிறோம்.
உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்துத் தவறாக எண்ணத்துடன் உணர்ச்சி வசப்படுவானாயின் பின் விளைவுகளைப் பற்றி அக்கணத்தில் சிந்திக்காமல் பலாத்காரத்திற்குத் துணிந்து விடுகிறான். தேர்விலோ, அல்லது வேலை வாய்ப்புகளிலோ தோல்வியைத் தழுவும் ஒருவன் தவறுகளுக்கான காரணங்களைச் சிந்திக்காததினால் தற்கொலைக்குச் சென்று விடுவதைக் காண்கிறோம்.ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று உள்மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடையில்லாமல் இல்லை. ஏனெனில், அறிவுள்ள சிந்தனைக்குத் தடை விதித்து கட்டுப்பாடற்று உணர்ச்சி வசப்படவைக்கும் ஷைத்தானின் ஆட்சி மனிதனின் மனதிற்குள் நடந்து கொண்டிருக்கிறது. அலைபாயும் மனதினைக் கட்டுப்படுத்த உணர்வலைகள் அடங்கி அறிவு மேலோங்கும் ஒரு நிமிட நேரம் போதும். அதன் பின் தவறு இழைக்க எண்ணும் மனிதனின் மனதிற்குக் கடிவாளம் கிடைத்துவிடும்.


கோபத்தைத் தணிக்க உங்களில் ஒருவருக்கு தான் நின்று கொண்டிருக்கும் போது கோபம் ஏற்பட்டால் உடனே அமர்ந்து விடுவீராக: இன்னமும் கோபம் அவரை விட்டு நீங்கவில்லை எனில் அவர் படுத்துக் கொள்ளட்டும்! - அபூதர்(ரலி) நூல்: திர்மிதி என இறைத்தூதர் கூறிவிட்டுச் சென்றிருப்பதை நினைவு கூர்வோம்.
கோபம் என்பது இறைவன் மனிதனுக்களித்த பண்புகளில் ஒன்றாக இருப்பினும், அக்கோபம் கடுமையான நோயாக மாறி விளைவுகளை விபரீதப்படுத்துவதிலிருந்து தவிர்க்க பொறுமை என்ற மருந்தைக் கொண்டு தீர்க்க வேண்டும். சகிப்புத்தன்மைக்கு மற்ற பெயரான பொறுமையை நாம், நம் குடும்பத்தினரிடமிருந்து துவங்கி பழகிய பின்பு சமுதாய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.


எவனொருவன் (தன் வாழ்வில்) துன்பங்கள் நேரிடும்போது அதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் சகிப்புத் தன்மையை வழங்கி விடுகிறான். (துன்பங்களைச்) சகித்துக் கொள்ளும் தன்மையை விட சிறந்த ஒரு அருட்கொடையை எவரும் பெற்றதில்லை. அபூசையித் அல் குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லிம்
பொறுமையுடன் சகித்துக் கொள்வது இறைவனின் அருட்கொடை என்றால் அதனைப்பெற நாம் முயற்சிக்கவேண்டாமா? கோபத்தை மனிதனுக்கு அளித்த இறைவனே அதனை முறியடிக்கும் மருந்தான பொறுமை பற்றியும் கூறுகிறான்.
2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
3:134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:200 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
11:11 ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
11:115 (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
மேலும் அல் குர் ஆனில் பொறுமையின் அவசியத்தை விவரிக்கும் மேலும் ஏராளமான இறைவார்த்தைகள் காணக்கிடைக்கின்றன. (பார்க்க: 2:45, 2:155, 2:156, 2:177, 2:249, 3:17, 3:120, 3:125, 3:142, 3:146, 3:186, 3:200, 4:25, 7:87, 7:126, 7:128, 8:46, 8:65, 8:66, 10:109, 11:11, 12:18, 12:83, 13:22, 13:24, 16:42, 16:96, 16:110, 16:126, 16:127, 17:44, 18:28, 18:68, 19:65, 20:132, 22:35, 23:111, 25:75, 28:54, 29:59, 30:60, 32:24, 33:35, 38:17, 40:55, 40:77,41:35, 42:33, 46:35, 50:39, 54:27, 70:5, 74:7, 76:12, 76:24, 90:17)
எத்தகைய சூழலையும் பொறுமையோடு சிந்தித்து செயல்பட்டால் வெற்றியைத் தான் தருவதாக இறைவன் வாக்களிக்கிறான். ஆதலால், இறைவா! நாம் அனிச்சையாய் கோபப்படும் சமயத்தில் கூட ஷைத்தானை விரட்டியடித்து நீ கூறிய அருட்கொடையாம் பொறுமையை எனக்குத் தந்தருள்வாயாக என்று நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். அதற்கான பலன்களை ஈருலகத்திலும் அடைவோம்!


நன்றி : ஷர்புத்தீன் உமரி .

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல் .

Friday 9 September 2016

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் இந்து கடவுளான விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா? ஒரு சிறப்பு பார்வை ...

Image result for விநாயகருக்கு ஊர்வலம்

இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால்....... 
*மதுரையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் லட்சகனக்கனக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை*, *பரபரப்பு இல்லை.*
*திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் திருவிழாவில் லட்சகனக்கனக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை*.
* திருச்சி,கும்பகோணம்  மஹாமகம் திருவிழாவில் லட்சகனக்கனக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*
* பழனி முருகனுக்கும், திருசெந்தூர் முருகனுக்கும் நேர்த்திக்கடன் செலுத்த பல ஆயிரம் மசூதிகளை கடந்து லட்சகனக்கனக்கான இந்துக்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*
*நெல்லையிலும், தஞ்சையிலும் லட்சகணக்கான இந்துக்கள் கூடி பல மசூதிகள் வழியாக தேர் இழுத்து செல்கிறார்கள் பதட்டம் இல்லை,*
*பரபரப்பு இல்லை*
*🕉வருடாவருடம் தீபாவளி வருகிறது, பொங்கல் வருகிறது கோடிக்கணக்கான இந்துக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.*
*தினம், தினம் இந்துக்களின் சவ ஊர்வலங்களும், சாமி ஊர்வலங்களும் பல நூறு மசூதிகளை கடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பதட்டம் இல்லை பரபரப்பு இல்லை.*????

இப்போது கேள்விக்கு வருவோம்....
*இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நம்முடைய கடவுளான விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா?*
இந்த கேள்வியை கேட்டு தான் பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்கிறார்கள் காவிகள். இவர்கள் கேட்கும் உரிமை என்ன தெரியுமா???
வினாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள மசூதிகளையும், இஸ்லாமியர்களின் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் கல்வீசி தாக்கவும், செருப்புகளை வீசி அவமதிக்கவும். "துலுக்கனை வெட்டு, துலுக்கச்சிய கட்டு", "பத்து பைசா முருக்கு, பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற மதவெறி கோஷங்களை எழுப்பும் உரிமையையும் தான் இவர்கள் கேட்கிறார்கள்.
 "நம்முடைய கடவுளான விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா?" என்கிற இந்த கேள்விக்கு பின்னால் இவ்வளவு அடங்கி இருக்கிறது. இவர்கள் கேட்கும் இந்த உரிமையை எத்தனை இந்துக்கள் ஆதரிக்கிறீர்கள். மேல் குறிப்பிட்ட எத்தனையோ இந்து பண்டிகைகளும், திருவிழாக்களும், ஊர்வலங்களும் அமைதியாக நடக்கும்போது இந்த விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் ஏன் இத்தனை பதட்டங்களும், பரபரப்புகளும்?
காரணம் இவர்கள் இந்த விநாயகர் ஊர்வலத்தை தங்கள் வளர்சிக்கும், சிறுபான்மையினரை அச்சுறுத்தவும் பயன்படுத்த முனைகிறார்கள். இந்து கடவுளான விநாயகரை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் இந்துத்வாவினரின் இந்த விநாயகர் ஊர்வலங்களை முஸ்லிம்கள் எதிர்ப்பதை விட விநாயகரை கடவுளாக மதிக்கும் உண்மையான ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும். அதுதான் நீங்கள் விநாயகருக்கு செய்யும் உண்மையான பக்தியாக இருக்கும்.
இந்துத்வாவினர் நடத்தும் இந்த மதவெறி ஊர்வலங்களை பெரும்பான்மையான இந்துக்கள் ஆதரிப்பதில்லை என்பதற்கு, இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் செய்தி நிறுவனம் எடுத்துள்ள இந்த கருத்து கணிப்பே சாட்சி. இருந்தாலும் "விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா?" என்ற இந்த கேள்வி சரியான கேள்வி தானே என்று 14.81% சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அந்த மக்களும் இந்த கேள்விக்கு பின்னால் உள்ள மதவெறி அரசியலை விளங்கி கொள்ள வேண்டும் என்பதற்காவே இந்த பதிவு.

 நன்றி  : k.M குமார்.

எனது கருத்து : இப்படித்தான் விநாயகர் சதுர்த்தியை கடந்த 25 ஆண்டுகளாக வேதாரண்யம் அருகேஉள்ள செட்டிகுளம்  கிராம   மக்கள்.மத ஒற்றுமையை வளர்க்கும் வகையில், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மதத்தினர்  மதநல்லிணக்க விநாயகர் ஊர்வலம் கொண்டாடி வருகிறார்கள்.இஸ்லாமியர்கள் பிள்ளையாருக்கு   எதிரிகள் அல்ல, இதை பத்திரிக்கைகளும், இந்துவா இயக்கங்களும் புரிந்துக்கொள்ள வேண்டும், பிள்ளையார் இந்துக்களின் கடவுள், கடவுளின் வீதிஉலா பயபக்கிதியோடு மந்திர கோஷங்கள் முழங்க உலா வருவதில் எவருக்குமே ஆட்சேபனை இல்லை, சிலர் வேண்டும் என்றே மற்ற கடவுளை ஏளனம் செய்கின்றனர் அதை மற்றவர்கள் தடுத்துவிட்டாலே மிகசிறப்பாக ஊர்வலம் அமைந்துவிடும்.இந்தநாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

தொகுப்பு  : மு,அஜ்மல் கான்.

Thursday 8 September 2016

மூளை இறக்குமா?...இப்படி கூட நடக்குமா என்ன???

Image result for மூளை இறக்குமாஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம் ...பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...
ஆனால்?...........இன்றோ!!!?
மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!
இரத்த ஓட்டம் இருக்கின்றது!
நாடி துடிப்பு இருக்கின்றது!
இதயத்துடிப்பும் இருக்கின்றது!
இருந்தும்...
மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது...
உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள் ...
மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்...
மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...
மூளை இறக்குமா?
அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?
மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...
நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...
பதில் சொல்லுங்கள்...
இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...
காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது...
மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது
இயங்கி கொண்டுதானிருக்கும்...
சிந்தியுங்கள்... மக்களே!...
இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!
இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை...
உறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல...
இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை...
உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை...
நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்...
இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை!
பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை!!!
பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!
இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...
இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது...
அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது...
காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...
இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?...
செய்ய மாட்டார்கள்...
மக்களே!
எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின் நோக்கம் பணம் தான்...
மக்கள் நலமல்ல!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...
கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.
கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.
உலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால் இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.
1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம் விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும்...
அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையானதின் விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்...
இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை குணப்படுத்தும் சீன மருத்துவமான அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கில மருத்துவத்தின் கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் உலகுக்கு வழங்கிய ஹோமியோ மருத்துவம்"இது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக இவர்களை பின் பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்...
இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் ஆங்கில மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான் இந்த அவலங்களை, கொடுமைகளை
நாம் அனுபவிக்கின்றோம்.
இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய மருத்துவமும் இல்லை...
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை...
மக்களே சிந்தியுங்கள்!...
நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும் புரிந்து கொள்ளுங்கள்...
திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை படித்த பல இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில் தெரியமல் போனதற்கும் அவர்கள் திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும் மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம்.
இந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும்.
சமீபத்தில் 198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்!...
அரசும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்!...
மேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில் கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க வேண்டும்.
ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை பெற நாம் தெளிவு பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.
நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்...

அதாவது,
"கழிவின் தேக்கம் வியாதி..."
"கழிவின் வெளியேற்றம் குணம்..."
"Accumulation of waste / toxins in our body is disease Elimination of waste / toxins is cure"
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" -திருக்குறள்.

அதாவது,
"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்."
நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்...
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.
அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.
ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்
பின்வருமாறு:-
1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).
மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது.
மக்களே! இனிமேலாவது விழிப்படையுங்கள்!!!
உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்!...
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

இல்லத்தரசிகள்நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!

Image result for நலமான வாழ்விற்கு1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்
4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)
5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.
6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .
12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது
15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.
18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.
23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.
25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.
29. எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
30. ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சென்று வாருங்கள் !!
தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Tuesday 6 September 2016

What is TRACE 700

TRACE 700 is a Windows based program used to construct a virtual building, calculate it’s air conditioning loads, and simulate its hourly operation, over the course of 1 year. It can also perform a life cycle cost analysis.

TRACE 700 simulates a virtual building, but it does not display a visual image of the building. While this is a commonly requested feature, nearly all surfaces in TRACE are currently entered using two dimensions. A visual image, requires additional input and thus more work.
TRACE 700 was first a load calculation program, and then an energy calculation program. While all energy-simulations must first calculate building loads, most energy-modeling programs do not accurately determine building design. Therefore, TRACE 700 can be used in both the Design phase of a project, and the analysis phase. Nearly all things in TRACE are customizable. While we will get into more details later, for now it will suffice to say that all equipment, materials, and schedules are 100% customizable and can be created, edited and kept in the TRACE 700 library database.
TRACE is able to model over 33 different airside systems, plus many HVAC plant configurations and control strategies, including thermal storage, cogeneration, and fan-pressure optimization, and daylighting controls. Customizable libraries and templates simplify data entry and allow greater modeling accuracy.
Documentation includes detailed online Help and a printed modeling guide. Experienced HVAC engineers and support specialists provide free technical support.Templates provide a fast, easy way to analyze the effects of changes in building loads such as airflows, thermostat settings, occupancy, and construction. An extensive library of construction materials, equipment, and weather profiles (nearly 500 locations) enhances the speed and accuracy of your analyses. Choose from seven different ASHRAE cooling and heating methodologies, including the Exact Transfer Function.

Prerequisite Experience Use TRACE 700

General knowledge of HVAC engineering principles, building geometry, and the Microsoft Windows operating system

Who Developed TRACE 700?

TRANE Inc., now a subsidiary of Ingersoll Rand.

How to get TRACE 700 Training?

$1,995 USD for a standard single license; $3,990 USD for a site license. $3,990 USD for a Network (LAN) license plus $75 per seat; the amount of seats purchased represents the amount of simultaneous users allowed. Special pricing available for educational institutions and during promotions. Annual renewal fee (23 percent of purchase price) entitles licensee to unlimited technical support, plus automatic updates and documentation. All Trane C.D.S. software carries an unconditional, 30-day, money-back guarantee.

TRACE 700 Development and Updates

Trane TRACE is updated periodically.

TRACE 700 Reports

Display, print, graph, or export any of 61 monthly/yearly summary reports and hourly analyses, including system "checksums," system component selection, psychrometric state points, peak cooling/heating loads, building envelope loads, building temperature profiles, equipment energy consumption, and ASHRAE 90.1 analysis.
Trace 700 Course Learn More From below Link..