Tuesday 15 November 2016

இந்த மோசக்காரர் மோடியின் செயலால் இந்தியா சந்திக்க போகும் பின் விளைவுகள். :

1. கருப்பு பண பதுக்கல் பெரு முதலாளிகளுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு அவர்கள் அசையா சொத்துக்களாக பினாமி பெயர்களில் மாற்றி வெகு நாட்கள் ஆகி விட்டது.... ஆகவே அவர்களிடம் இருந்து ஒரு செல்லா காசு கூட இந்த அரசாங்கத்தால் பிடுங்க இயலாது.
Queue at Bank to Exchange INR 500 and 1000 Notes - Salt Lake City - Kolkata 2016-11-10 02103.jpg2. அந்த பணக்கார கருப்பு பண முதலைகளுக்கு தங்கள் அசையா சொத்துக்களை விற்ற பொது மக்களிடம் அது கருப்பு பணமாக இருக்கும். விற்றவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்யாண செலவுக்கோ அல்லது வேறு இடம் வாங்காவோ அல்லது வீடு கட்டவோ வைத்திருக்கும் அந்த பணத்தை தான் இந்த அரசாங்கம் பிடுங்க போகிறது...
3. சிறு கருப்பு பண முதலைகள் பெட்டியில் பூட்டி வைத்திருக்கும் அவர்கள் பணத்தை வட்டி இல்லாமல் பொது மக்களிடம் புழங்க விட்டு அவர்களிடம் இருந்து ரூ100 மற்றும் ரூ.50 ஆக பெற்று அந்த 100 ஐயும் 50 ஐயும் ப்துக்க போகிறார்கள் ... இவ்வாறு இவர்கள் பதுக்கல் தொடரும் நிலையில் மிக பெரிய சில்லறை தட்டுபாடில் இந்திய சிக்க போகிறது....
4. 2000ம் நோட்டாக வாங்கி செல்லும் பொது மக்கள் சில்லறை வாங்க இயலாத நிலையில், முதலில் பொருட்களை விற்க முடியாத சில்லறை வியாபிரிகள் கொஞ்சம் குறைத்து பார்ப்பார்கள்.ஆனாலும் பொது மக்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு அழுவும் பொருட்கள் சேதமாகும், சில்லறை வியாபாரிகள் நஷ்டத்தை சந்திப்பனர்.... ஆனால் ஒரு கட்டத்தில் பொது மக்கள் வாங்கியே தீர வேண்டிய கட்டாயம் வரும் பொழுது, ஒட்டு மொத்த 2000 த்திற்கு பொருட்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.... செயற்கையாக ஒரு சில.நாட்களில் ரூ.100 க்கு வாங்க வேண்டிய பொருட்களை ரூ.2000 த்திற்கு வாங்கி குவிப்பதன் மூலம் செயற்கையாக பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி விண்ணை முட்டும், பண வீக்கம் அதிகரிக்கும்..... ஒட்டு மொத்த இந்திய பொருளாதரத்தையும் சீர் குலைக்கும்....
5. சரி அனைவரும் தங்களது டெபிட்/ கிரெடிட் கார்ட் மூலம் பொருட்களை வாங்குவதாக வைத்து கொண்டால்.... காலம் காலமாக சில்லறை வணிகத்தில் இருக்கும் வியாபாரிகளிடம் வாங்க இயலாமல், மறைமுகமாக இந்த கேடு கெட்ட அரசாங்கத்தால் பொதுமக்கள் அனைவரும் கார்புரேட்டுகள் நடத்தும் Department Store கள் பக்கம் திருப்பி விடப்படுவர்கள்....அது மட்டும் அல்ல கார்ட் சுவைப் செய்யும் பல இடங்களில் 2 சதவிகித கமிஷன் எடுக்கப்படுகிறது, தேவையில்லாமல் வரிசுமையுடன் இந்த 2 சதவிகித சுமையும் பொதுமக்கள் தலையில் விழும்... இச்செயல் மூலம் அனைத்து சில்லரை வியாபாரிகளும் நசுக்கப்பட்டு ஓரம் கட்ட படுவார்கள்... அவ்வாறு அனைத்து சில்லறை வியாபாரிகளும் விலகிய நிலையில் இந்த corporate முதலாளிகள் தங்கள் தாக்குதலை பொதுமக்கள் மீது விலைவாசியை உயர்த்துவதன மூலம் தொடருவார்கள்.. அப்பொழுது பேரம் பேசியே பொருட்களை வாங்கிய பொது மக்கள் அவர்கள் சொல்லும் விலையை கொடுத்து விட்டு வாய் மூடி நிற்க வேண்டிய சூழல் வரும்.
6. உங்கள் வீடுகளில் இருந்து வெளி வரும் இளைய தலைமுறையை சார்ந்தவர்கள் அனைவரும் சுய தொழில் என்பதை ஆரம்பிக்க இயலாமல், எதாவது corporate முதலாளி வைத்திருக்கும் நிறுவனங்களில் கைகட்டி வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.... ஒரு நாள் அந்த கார்பொரேட் முதலைகள் இந்தியாவின் அனைத்து வளங்களையும் சுரண்டிய நிலையில் .... அடிமையாக வேலை பார்த்து கொண்டு இருக்கும் அனைவரையும் ஒரே இரவில் வேலை இல்லை என்று நடுத்தெருவில் நிற்க வைக்க படுவார்கள். மனித வளம் அதிகம் நிறைந்த நம் இந்தியா அப்படியே ஒரு நாள் வேலை வாய்ப்பை இழந்த, தன்மானத்தை இழந்த இளைய அடிமைகள் நிறைந்த நிலையில்... அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ள படுவார்கள்.... அப்பொழுது உலகத்திலேயே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகம் தற்கொலைகள் நடை பெறும் நாடாக இந்தியா இருக்கும்.
7. இவ்வாறாக அனைத்து வளங்களும் கார்பொரேட் முதலைகள் வசம் வரும் பொழுது, தனிமனித உரிமை மறுக்கப்பட்டு கொத்தடிமைகளாக நடத்த படுவீர்கள்...
8. இன்று வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் உங்கள் பணம்... உங்களுக்கே தெரியாமல் ஒரு நாள் ஒட்டு மொத்த கோர் வங்கிகளாக செயல்படும் வங்கிகளை கம்ப்யூட்டர் ஹாக்கர்கள் ஹேக் செய்து உங்கள் வங்கி கணக்கு பூச்சியத்தை காண்பிக்கும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.... காரணம் ஒரு சில நாட்களுக்கு முன் தான் பல வங்கிகளால் விநியோகிக்கப்பட்ட டெபிட்,கிரெடிட் கார்டுகள் தகவல்கள் வெளியில் கசிந்து விட்டது.... அதை தடுக்கும் நடவடிக்கைகளில் RBI இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.... அது தடுக்கப்பட்டதா என்கிற செய்தி இது வரை வெளி வரவில்லை... இந்நிலையில் நீங்கள் வங்கியில் செலுத்திய உங்கள் பணம் , உங்களுக்கும், இந்த அரசாங்கத்திற்கும், வங்கிகளுக்கும் தெரியாமல் ஒரு நாள் சுரண்டப்பட்டு .... ஒட்டு மொத்த இந்திய பொதுமக்களும் நடுத்தெருவில் நிற்க வைக்கப்படுவீர்கள்.... இந்த முட்டாள் மோதி அரசாங்கமும் கைவிரித்து விடும்...
9. அறிவித்து 5 நாட்கள் ஆகியும் பொது மக்கள் அனைவருக்கும் பணம் போய் சேரவில்லை, நீண்ட வரிசையில் நின்று வாங்கிய ரூ.2000 பணம் கிடைத்த அனைவராலும் செலவும் செய்யவும் முடியாத தருணம்..
10. கருப்பு பண முதலைகள் இப்பொழுது ரூ.2000 த்தை எந்த அளவுக்கு பதுக்க போகிறார்களோ இல்லையோ,கண்டிப்பாக ரூ.100 ஐயும் 50 ஐயும் பதுக்குவார்கள்.... இதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவும் சில்லறை தட்டுபாடில் செய்வது அறியாமல் நடுத்தெருவில் நிற்கும்...
11. கள்ள பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் தீவீரவாதிகளால் இன்னும் ஒரு சில.மாதங்களில் ரூ.2000 நோட்டு அதிக அளவு புழக்கத்தில் விடுவதற்கு எந்தவொரு சிரமமும் இருக்க போவதில்லை.... இதன் மூலம் இந்திய நாணயம் ஒட்டு மொத்தமாக தன் மதிப்பை இழக்கும்...
அறிவிப்பு வந்த தினம் முதல் இந்தியா சந்தித்த நஷ்டங்கள்:
1.அறிவிப்பு வந்த அன்று அதிகம் அவதி பட்டது பயணிகளும், போக்குவரத்து துறையினரும் ஸ்தம்பித்து போனார்கள்.... குடிக்க ஒரு வாய் தண்ணீர் வாங்க இயலாத சூழல் நிலவியது. பொது மக்கள் அனைவரும் பீதி அடைந்த நிலையில் உலா வந்தனர்.
2. அடுத்த நாள் 9 மணிக்கு தொடங்கிய இந்திய பங்கு சந்தை 9.15 மணிக்குள்... அதாவது ஆரம்பித்த 15 நிமிடத்தில் 6.5 லட்சம் கோடி நஷ்டத்தினை சந்தித்தது....
3. இந்திய நாணயத்தின் மதிப்பு என்றும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் சரிந்தது ..
4. இந்தியாவின் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு மிக அதிக அளவு சரிந்தது...
5. இந்திய பங்கு சந்தையில் இருந்து வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்யப்பட்ட. பணம் அதிக அளவு வெளியேறியது
6.ஒட்டு மொத்த இந்தியாவின் சில்லறை வணிகம் தடைபட்டது...
7. அறிவிப்பு வந்த நாள் முதல் இன்று வரை வங்கியின் வாசலில் பணம் இருந்தும் பிச்சை காறார்களாக நிற்கும் இந்திய பொது மக்களின் வேலை நேரம் அதிக அளவு வீண் ஆனது...
8. வங்கிகளில் இருந்து மாற்றி வந்த ரூ.2000மும் இன்று செலவழிக்க முடியாமல் முடங்கி உள்ளது....
9. கடந்த 4 நாட்களில் மறைமுகமாக ரூ30 லட்சம் கோடிகள் இழப்பை இந்தியா சந்தித்து உள்ளது.... இது மட்டும் அல்ல இனி வரும் நாட்களில் இன்னும் எவ்வளவு இழப்பை சந்திக்கும் என்பது தெரியவில்லை. இந்த இழப்பை சரிக்கட்ட மத்திய.மோதி அரசாங்கத்தின் மீதம் இருக்கும் மூன்று வருடங்கள் பத்தாது.... இதன் பாதிப்பு இன்னும் 6 மாத காலத்திற்குள் பொதுமக்களின் தலையில் விடியும்..
10. 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செயும் பொழுது , சரியான கணக்கை காட்ட இயலவில்லை எனில் 200 சதவிகித வரி விதிக்க படும் என்கிற அறிவிப்பு .... வரியை கட்டி வெள்ளை பணமாக மாற்றி கொள்ளலாம் என்று நினைக்கும் சிறிய முதலைகளும் வேறு விதமான வழியை கையாள்வார்கள்... இதன் மூலம் அரசாங்கத்திற்கு வரும் வரி வருவாய் இழப்பை சந்திக்கும்...
11. ரூ.500, 1000 கள்ள நோட்டுக்களையே கண்டுபிடிக்க.இயலாத பொதுமக்களிடம் எளிதாக தீவீரவாதிகளால் ரூ.2000 கள்ள பணம் புழக்கத்தில் விடப்பட்டு.... உள் நாட்டு தீவிரவாதமும் வன்முறையும் தலை விரித்தாடும்...
12. எதை தடுப்பதற்காக இந்த மோதி அரசாங்கம் ரூ.2000ம் நோட்டை வெளியிடுவதாக சொன்னதோ.... அந்த விஷயமான கருப்பு பண பதுக்கல் மற்றும் கள்ள பணமும் புழக்கமும் அதிகரிக்குமே தவிர, கண்டிப்பாக குறைய போவது இல்லை.
எந்த வித முன்னேற்பாடுகளும் செய்ய படாமலும், பாராளுமன்றத்திலும், நாடளும்மன்றத்திலும் கருப்பு பண புழக்கத்திற்கும், கள்ள பண புழக்கத்திற்கும் காரணம் Higher Denomination நோட்டுகளான ரூ.500, 1000ம் என்று விவாதித்து விட்டு .....அவற்றை தடை செய்து ....... அதை விட Higher denomination ரூ.2000ம் நோட்டை அவசர அவசரமாக, பொதுமக்களுக்கு அவகாசமே கொடுக்க படாமல், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் வெளியிட்டது யாருடைய நலன் கருதி என்பதே ..... இங்கு மிக பெரிய கேள்விக்குறி... ?????
இன்னும் பல விஷயங்கள் இதற்க்கு பின் உள்ளது.... ஆனால் அவை பொருளாதார நிபுணர்களிடம் விலக்கினாலே புரிந்து கொள்ள இயலாது என்பதால்.... பொது மக்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயங்களை மட்டுமே இங்கு பகிர்ந்து உள்ளேன்....
மேற்கூறிய விஷங்களுக்காகவே மோடியின் இந்த முரண்பட்ட செயலை கடுமையாக எதிர்க்கிறேன்... ரூ.500, 1000 த்தை முடக்கியதை வரவேற்கும் என்னால் ரூ.2000 த்தை இதற்க்கு மாற்றாக அறிவித்ததை ஏற்று கொள்ள இயலாது..... இதுவே நல்ல நோக்கத்திற்காக செயல் படும் அரசாக இருந்து இருந்தால் போதிய அளவிற்கு .புதிய ரூ.500, மற்றும் பழைய ரூ.100 மற்றும் ரூ.50 தாள்களை அச்சடித்து ..... அதை சரியான முறையில் அனைத்து வங்கி கிளைகளுக்கும் விநியோகித்து விட்டு அறிவித்திருக்க வேண்டும் ..... ஆனால் மோடி அரசாங்கத்தால் நடைபெற்றதோ, முற்றிலும் முரண் ஆனா செயல்.....
மேற்கூறிய கருத்துக்கள் உண்மையானது, நியாயமானது என்று நீங்கள் கருதினால், உடனடியாக உங்கள் முகநூல் ப்ரொபைல் படத்தை கருப்பாக்கி நம்முடைய எதிர்ப்பை முக புத்தகம் மூலம் தெரிவிப்போம் என்றே கடந்த மூன்று நாட்களாக பதிவிட்டு வந்தும்.... லைக்கை அள்ளி வீசும் நண்பர்கள் ஏனோ தங்களது எதிர்ப்பை காண்பிக்காமல் இருக்கிறார்கள்.... சில நண்பர்களோ குதர்க்கமாக உங்களிடம் அதிகம் கருப்பு பணம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.... மிக்க சந்தோசம் அப்படியே அரசாங்கத்தை நோக்கியும் உங்கள் கேள்வி கணைகளை தொடர்ந்தால் இன்னும் அதிகமாக சந்தோச படுவேன்.....
ஒட்டு மொத்த இந்தியாவையும் இன்னொரு அடிமை தளத்திற்கும், மிக பெரிய அளவிட முடியாத பொருளாதார சீர்கேட்டிற்கு அழைத்து செல்லும் இந்த செயலை உண்மையில் எதிர்ப்பவர்கள் என்றால் உங்கள் ப்ரொபைல் படத்தை கருப்பாக்கி உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்....

இப்படிக்கு,
மிகுந்த வருத்ததுடனும், ஆதிரத்துடனும் நான்..

No comments:

Post a Comment