Tuesday 22 November 2016

கருப்பு பணம் என்றால் என்ன ...? ஒரு அலசல்


இன்றைய பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் பொருள் "கருப்பு பண ஒழிப்பு ".. கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு 5௦௦ ரூ / 1௦௦௦ ரூ நோட்டுகளை திரும்ப பெறுவது ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது....உண்மையில் கருப்பு பணம் என்றால் என்ன என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்....

நாட்டில் உள்ள மக்கள் கூட்டத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்....


1. பெரிய தொழில் அதிபர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள்.....இவர்களை X என்று அழைப்போம். இவர்கள் மிஞ்சி போனால் தேசத்தின் ஜனத்தொகையில் ஒரு 5% பேர் தான் இருப்பார்கள். ஆனால் தேசத்தின் பொருளாதாரத்தில் அல்லது பணத்தில் 7௦% இவர்கள் கையில் தான் இருக்கும்.


2. மத்திய மாநில அரசு ஊழியர்கள். இவர்களை Y என்று அழைப்போம்... இவர்கள் ஒரு 1௦% பேர் இருப்பார்கள் . பணத்தில் ஒரு 15 சதவீதத்தை வைத்திருப்பார்கள்....


3. சாதாரண மக்கள் , கூலி தொழிலாளிகள் , உழவர்கள் மற்றும் சிறிய கடை நடத்துபவர்கள் . இவர்களை Z என்று அழைப்போம். இவர்கள் மக்கள் தொகையில்85% பேர் இருந்தாலும் ஒரு 15% பொருளாதாரத்தை தான் கையில் வைத்திருப்பார்கள்..





சரி கருப்பு பணம் என்றால் என்ன...? கருப்பு பணம் என்பது கணக்கில் வராத பணம்... அப்படியென்றால் என்ன அர்த்தம்....

1. வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தால் கருப்பு பணம் உண்டாகும். அதாவது A என்பவன் 1௦௦ ரூபாய் வரி கட்டவேண்டிய இடத்தில் 1௦ ரூபாய் மட்டும் கட்டினால் , 9௦ ரூபாய் கருப்பு பணம் என்று அழைக்கப்படுகிறது. வருட வருமான 2.5 லட்சம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டியதில்லை. அப்படியானால் மேல் குறிப்பிட்ட Z பிரிவு மக்கள் இந்த பட்டியலில் வரமாட்டார்கள்....சம்பளம் கொடுக்கும்போதே , வருமான வரி பிடிக்கபடுவதால் Y பிரிவு மக்களும் இந்த பிரிவில் வரமாட்டார்கள். அதிக வரி கட்டவேண்டியது வருகிறபடியால் தான் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது எனவே x பிரிவு மக்கள் தான் இந்த பிரிவில் வரமுடியும்.....


2. ஊழல் / லஞ்சம் மூலம் கிடைக்கும் பணம் :- அரசு அதிகாரிகள் / அரசியல்வாதிகள் ஊழல் / லஞ்சம் மூலம் பணம் பெற்றால் , அது வருமான கணக்கில் வராது . எனவே அதற்க்கு வரி கட்டமாட்டார்கள் . அதாவது B என்பவன் 1௦௦ ரூபாய் லஞ்சம் பெற்றால் , அந்த 1௦௦ ரூபாயுமே கருப்பு பணம் என்று அழைக்கப்படும். லஞ்சம் என்பது Z பிரிவு மக்களால் Y பிரிவுக்கும் X பிரிவில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இதில் X பிரிவில் உள்ள தொழில் அதிபர்களும் x பிரிவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படுவதால் லஞ்சம் மூலம் உண்டாகிற கருப்புப்பணம் ( அதாவது B ) x மற்றும் Y பிரிவு மக்களிடம் தான் இருக்கும்.


3. கள்ள நோட்டுகள் :- கள்ள நோட்டுகள் கருப்பு பணம் என்று அழைக்கப்படாது . ஆனால் கள்ள நோட்டுகளை மாற்றுபவர்கள் அதற்க்குவாங்கும் பணம் கருப்பு பணம். அதாவது C என்பவன் 1௦௦ ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றினால் அதற்க்கு கிடைக்கும் 5௦ ரூபாய் கருப்பு பணம். கள்ளநோட்டுகள் புழக்கம் பொதுவாக Z பிரிவு மக்களிடம் நடக்க கூடும் ( சாதாரண ஜனங்களை தான் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்ற முடியும் ) ஆனால் Z பிரிவு மக்கள் C அல்ல.... C யினால் ஏமாற்றப்பட்டவர்கள்..


4. இன்னும் ஒரு வித்தியாசமான காரியம் இருக்கிறது. A வும் ( X பிரிவு தொழில் அதிபர்கள் / நடிகர்கள் / அரசியல்வாதிகள் ) B வும் ( Y பிரிவு மத்திய மாநில அரசு அதிகாரிகள் ) தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை கொண்டு Z பிரிவில் உள்ள சாதாரன மக்களிடம் நிலத்தை வாங்குவார்கள். 1 கோடி நிலத்தை 1௦ லட்சம் என்று பத்திரபதிவு செய்து 1 கோடி ரூபாயை Z மக்களிடம் கொடுத்து விடுவார்கள்...இப்போது A மற்றும் B யிடம் இருக்கும் கருப்பு பணம் வெள்ளையாகிவிட்டது.. இப்போது Z பிரிவில் இருக்கு பணமும் காலபோக்கில் சமுதாயத்தில் கலந்து விட்டு இருக்கும். சும்மா நிலத்தை விக்க உழவர்கள் பைத்தியகாரர்களா...? வீடு கட்டனும் , பிள்ளையை படிக்க வைக்கணும் , கல்யாணம் கட்டி கொடுக்கணும் ...ஆயிரம் காரணங்கள் இருக்கும்... அந்த காரணங்களுக்காக செலவு செய்யும் போது பணம் வெள்ளையாக திரும்பவும் X பிரிவிடத்தில் சேருகிறது.... அல்லது Z பிரிவில் கூட இருக்கலாம்....


இப்போது நாம் கேள்விக்கு வருவோம்....5௦௦ / 1௦௦௦ திரும்ப கொடுப்பதால் யாருக்கு நஷ்டம் ..?
1. X பிரிவு கையில் உள்ள கருப்பு பணத்தை நிலமாக / தங்கமாக மாற்றியிருக்கும்....X பிரிவு அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலுக்கு செலவழிக்க பணம் வைத்திருக்க வாய்ப்புண்டு...
2. Y பிரிவு கையில் இருக்கும் கருப்பு பணம் நிலமாகவோ / தங்கமாகவோ மாற்றப்பட்டு இருக்கும்...
3. Z பிரிவில் உள்ள யாருமே கணக்கு பார்த்து செலவழிப்பதில்லை...ஒரு தடவை வாழை வெட்டினால் சிலநேரம் 1 லட்சம் கிடைக்கும் , சில நேரம் காற்றில் அழிந்து போகும்....லாப நட்ட கணக்கு தெரியாமல் , தான் உழைத்து / சேர்த்து வைத்த பணத்தை வங்கியில் கட்டும் போது , கருப்பு பண முதலை என்ற பெயரை வாங்க போகிறான்....


எனவே தான் நான் கூறுகிறேன் . 85% மக்களை வதைக்காதீர்....மீதம் இருக்கும் 15% சதவீதம் மக்களின் பணம் ( கையிருப்பு / வங்கி கணக்கு ) , நிலம் , சொத்து , நகைகளை ஆய்வு செய்யுங்கள்....வேலை எளிதாக முடிந்து விடும்.. அதற்காக 85%மக்களின் உழைப்பை கைப்பற்றி விட்டு கருப்பு பணத்தை கைப்பற்றினோம் என்று மார் தட்டினால் இந்த சமூகம் உங்களை மன்னிக்காது.....



கருப்பு பணத்தில் இன்னும் ஒரு முக்கியமான பகுதி இருக்கிறது..அதன் பெயர் ஹவாலா பணம். அல்வா கேள்விப்பட்டு இருக்கிறோம். அது என்ன ஹவாலா என்று கேட்க தோன்றுகிறதா ....? தொடர்ந்து படியுங்கள்....


சட்ட ரீதியாக அல்லாமல் பணம் பரிமாறுவது தான் ( அதாவது வங்கியின் மூலம் அல்லாமல் ) ஹவாலா என்று அழைக்கபடுகிறது. சரி இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்....

A என்று சொல்லகூடிய நபர் ( முந்தைய பதிவின் படி இவர் X பிரிவை அதாவது தொழில் அதிபர்கள் , நடிகர்கள் , அரசியவாதிகள் பிரிவை சேர்ந்தவர் ) இந்தியாவில் இருக்கும் B என்ற நபரிடம் ( இவர் ஒரு புரோக்கர் ) தனது கருப்பு பணத்தையும் , ஒரு பாஸ்வோர்ட் யும் கொடுப்பார். அந்த பாஸ்வோர்ட் மற்றும் பணமதிப்பு போன்றவை B என்ற இந்திய புரோக்கரினால் வெளிநாட்டில் இருக்கும் C என்ற புரோக்கருக்கு கொடுக்கப்படும். அதேநேரத்தில் இந்தியாவில் இருக்கும் A என்ற நபர் வெளிநாட்டில் இருக்கும் D என்ற தனது பினாமிக்கு பாஸ்வேர்ட் மற்றும் பணமதிப்பை தெரியப்படுத்துவார். D என்ற வெளிநாட்டு பினாமி C என்ற வெளிநாட்டு புரோக்கரிடம் சென்று பாஸ்வோர்ட் கூறி பணத்தை அந்த நாட்டு பணத்தில் பெற்று கொள்ளுவார். அதற்க்கு கூலியாக இரு புரோக்கர்களும் ஒரு தொகையை எடுத்து கொள்ளுவார்கள். இது தான் ஹவாலா....


இந்த கட்டத்தில் A விடம் இருக்கும் கருப்பு பணம் B யிடம் இருப்பது உண்மைதான்...எனவே இப்போது 5௦௦ மற்றும் 1௦௦௦ ருபாய் நோட்டுகளை திரும்ப ஒப்படைத்தால் B மாட்டிகொள்ளுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. 

இதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட சில காரியங்களை சிந்திப்போம்...


1. உண்மையான கருப்பு பண முதலை A தப்பி கொண்டார். அவரது பணம் மிக பாதுகாப்புடன் D உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டாயிற்று.....


2. A யிடம் இருந்து வந்த கருப்பு பணத்தை B ஏதாவது ஒரு விதத்திலே சமூக பொருளாதாரத்தில் கலந்திருக்க வாய்ப்புண்டு...அதாவது நிலங்கள் , வீடுகள் , தங்கம் போன்றவற்றை வாங்கியிருந்தால் , B யும் பாதுகாப்பாகி விட்டார்...


3. B தன்னிடம் இருக்கிற இந்திய பணத்தை அயல்நாட்டில் இருக்கிற C எஜெண்டுக்காக இந்தியாவில் செலவிடவும் வாய்ப்புண்டு....


4. இப்போது நிலங்களை விற்ற சராசரி மனிதனிடம் கருப்பு பணம் வந்து விட்டது.....
சரி....வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் பணத்தை வைத்து கொண்டு A யினால் சும்மா இருக்க முடியுமா....? அதை மறுபடியும் வெள்ளையாக்கினால் தானே அவருக்கு நிம்மதி....இருக்கவே இருக்கிறது FDI ( Foreign Direct Investment ).



பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் முந்தைய அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் 49% முதலீடுகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டது.... இன்றைய அரசு பெரும்பாலான துறைகளில் அந்நிய முதலீட்டை தாராளமாய் நுழைத்தது....உதாரனத்திற்க்கு....


1. பாதுகாப்பது துறையில் 49% ல் இருந்து 1௦௦% மாக
2. ஆன்லைன் வர்த்தகத்தில் 1௦௦% அனுமதி
3. மருந்து துறையில் 74% அனுமதி..
4. இந்திய விமான போக்குவரத்தில் 1௦௦ சதவீத அனுமதி...


இப்படி பல துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் தாராளமாய் அனுமதிக்கப்பட்டது..இதற்க்கும் நாம் சிந்திக்கும் ஹவாலா என்ற கருப்பு பணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா ...? என்றால் இருக்கிறது ....


வெளிநாட்டில் தனது பணத்தை வைத்து இருக்கிற A என்ற நபர் அந்த நாட்டில் தனது பினாமி D பெயரில் ஒரு கம்பெனி துவங்குவார். அந்த கம்பெனி இந்திய பங்கு சந்தை மூலமாக தனது பணத்தை "Participatory Note / P-Note" என்ற முறையில் முதலீடு செய்யும். இப்போது அந்த பங்குகளின் மூலமாக கிடைக்கும் லாபம் வெளிநாட்டில் உள்ள Dக்கு போய் சேர்ந்து விடும்....எனவே தான் ஒன்றுமில்லாத மொரிசியஸ் தீவுகள் நமது நாட்டில் 36% முதலீடு செய்துள்ளது....


இப்போது என் கேள்வி ஓன்று தான்....
கருப்பு பணம் போகும் வழியும் , திரும்ப இந்தியாவுக்கு வரும் வழியும் தெரிந்து இருக்கிறதே....உடனடியாக Participatory Note மூலமாக இந்திய கருப்பு பணம் உள்ளே வருவதை அரசு தடுக்கலாமே....இதனால் A மாத்திரமே பாதிக்கப்படுவான்....அன்றாடம் கூலிவேலை செய்கிற குப்பனிடம் ஹவாலா என்று சொன்னால் அல்வா என்று தான் சொல்லுவான்.... அடித்தட்டு மக்களிடம் பெறப்பட்ட பணத்தை கருப்புப்பணம் என்று சொல்லி பெயர் வாங்க நினைக்கும் முயற்சி மிக்க வருந்த தக்கது.....

கருப்பு பணத்தை உண்மையாக ஒழிக்கவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை !!

தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment