Sunday 26 February 2017

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு !!!


Image result for நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயுநாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக புதியதலைமுறை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் 31 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.


தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக நடந்த முயற்சிகளையும் அதற்கெதிரான விவசாயிகளின் போராட்டங்களையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம்.


இப்போது மீத்தேன் என்று நேரடியாக சொல்லாமல் ஹைட்ரோகார்பன் என்று சுற்றி வளைத்துச் சொல்கிறார்கள். அவ்வளவு தான். பெயரை மாற்றிச்சொன்னால் இது ஏதோ வேறு திட்டமென்று நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் படிப்பறிவற்ற தலைமுறையல்ல.


இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே போய்விடும். கடல் நீர் புகுந்துவிடும். குளோரைடு, சோடியம், பைகார்பனேட் உள்ளிட்டவை நீரில் கலந்து வெளியேறும். கதிர்வீச்சு பாதிப்பு உண்டாகவும் வாய்ப்பு உண்டு. ஒரு கிணறு ஆண்டுக்கு தலா 20 டன் உப்பை வெளியேற்றும். நிலத்தடி நீரில் உப்பு மற்றும் சோடியம் படிவதால் விவசாய நிலம் பாதிப்படையும். வெளியேற்றப்படும் கழிவுநீர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மீத்தேனை வெளியில் எடுக்கும் கிணறுகளில் இருந்து இவ்வாயு கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது, ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்யும் வாயுக்களில் ஒன்று. தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளிலேயே இதுபோன்ற மீத்தேன் வாயுக் கசிவு பெரும் பிரச்சினையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


கச்சா எண்ணெய் கடலில் கொட்டியபோதே வாளி வைத்து அள்ளுகின்ற அரசாங்கமும் தொழில்நுட்பமும் இருக்கின்ற ஒரு தேசத்தில் எங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க நாங்கள் தயாராக இல்லை.
Image result for நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயுநெடுவாசல் கிராமம் என்பது அடிப்படை வசதிகளிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியிருந்த பகுதி. கடந்த பத்தாண்டு காலமாகத்தான் அவர்களது பொருளாதார நிலை சற்று மேம்பட்டு வருகிறது. அதற்கு அடிப்படையே விவசாயம் மட்டும்தான். விவசாயத்தைத் தவிர அப்பகுதி மக்களுக்கு வேறெதுவும் தெரியாது. ஆற்றுப் பாசனத்தையும் அதிகம் சாராமல் வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கிறது. அந்த கிராமம் மட்டுமல்ல அதனைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் விவசாயத்தினை மட்டுமே ஆதாரமாகக் கொண்டவை. இந்த திட்டத்தினை ஒருக்காலும் எங்கள் பகுதியில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.


உடனே நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள் என்று ஒரு சாரார் கேள்வியெழுப்பக்கூடும். நியாயம்தான். நாட்டின் வளர்ச்சியென்பது விவசாயத்தில்தான் இருக்கிறது. அந்த விவசாயத்திற்கு ஆதாரமான நிலத்தடி நீரையும், விளைநிலங்களையும் பாழ்படுத்திவிட்டு, நாட்டிற்கே சோறு போடுகின்ற விவசாயிகளை அழித்துவிட்டு யாரை முன்னேற்றிக்கொள்ளப் போகிறீர்கள்.


அதையும் தாண்டி நாட்டின் வளர்ச்சிக்காக இதைத் தாங்கிக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று சொல்பவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான். என் வீட்டைக் கொளுத்திவிட்டு ஊருக்கு வெளிச்சம் தர நான் தயாராக இல்லை. நான் தியாகி அல்ல. அற்ப மானிடன் அவ்வளவே. இந்த விஷயத்தில் நாங்கள் சுயநல வாதிகளாகவே  இருந்துவிட்டுப் போகிறோம்.


இந்த விசயத்தில் ஜாதி, மத, அரசியல் பேதம் கடந்து, விவசாயிகளாய் ஒன்றிணைந்து போராடுவோம். இதனை நமது பகுதியினைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாக ஏற்றுக்கொண்டு களமிறங்குவோம். வரும்பொழுது பார்த்துக் கொள்வோம் என்றில்லாமல் உடனே போராடத் தொடங்குவோம்.

இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் போராட்டம் செய்துவந்தனர்.

மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் மேலும் சென்னை உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், நெடுவாசல், புள்ளான் விடுதி கள்ளிக்கொல்லை, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட 20 கிராமத்திற்கு மேற்பட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு நாளைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.டி. ஊழியர்களோடு கைகோர்க்கின்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக நேற்று ஐடி., இளைஞர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை, திலகர் திடலில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்போல் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளைய விடியல் நமது தற்காப்பு போராட்டத்திற்கான தொடக்கமாக இருக்கட்டும்.இறுதிவரை உறுதியாகப் போராடுவோம்!!

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.



Friday 24 February 2017

என் மனைவியின் முதல் பிரசவம் இது !!

ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறான், "நேரம் நெருங்கிவிட்டது! பிரசவ வலி நாளை அல்லது நாளை மறுநாள் கூட வரலாம்!
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர், இதை கேட்ட அவள் கணவனுக்கு நெஞ்சில் ஆனந்தம் பொங்கி இருக் கண்களை மறைக்கிறது,
அன்று இரவே கணவன் தன் மனைவியின் வைற்றில் காதை வைத்துப் பார்க்கிறான், "என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி கேட்க நாளை இன்நேரம் என் மகனோ, மகளோ என் கையில்... என்கிறான்,
Image may contain: one or more people and people standingஅதை கேட்க மனைவி எனக்கு ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல, இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான் வேண்டும் என்று கணவன் சொல்ல ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்,
படுக்கையில் தன் கணவன் அருகில் நெருங்கி வந்து அவன் கை விரலை இருக்கமாக பிடித்துக்கொள்கிறாள், தூக்கத்தில் இருந்த கணவன் விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.
"என்னவென்று தெரியவில்லை இதயம் படபடவென துடிக்கிறது, எனக்கு தூக்கமே வரவில்லை பயமாக இருக்கிறது", என்று சொல்லி கண்கசிகிறாள்
அவன்மனைவி, உடனே இழுத்து தன் மார்போடு மனைவியை அனைத்தவன் அவள் கண்ணீரை துடைத்து அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்
, அவள் நினைத்தால் போல் திடீரென பிரசவ வலி வந்தது. பயத்திலும் கடுமையான இடுப்பு வலியிலும் கட்டிலேயே துடித்து அழ ஆரம்பித்தாள்,
என்ன செய்வது என தெரியாது முழித்த கணவன் அவள் துடிப்பதை காண இயலாமல் அப்படியே அவளை தூக்கிக்கொண்டு Carல் சிட்டுக் குருவியை போல் பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான்,
இரவு நேரம் என்பதால் உடனே தன் மனைவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தான், ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்க
அவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும் பயங்கரமாக கேட்டது, இரு கைகளையும் பிசைந்துகொண்டு பிரசவ வார்டின் வெளியில் இங்கே அங்கே என சுற்றுகிறான்
, "அம்மா! அம்மா இடுப்பு ..!" என்று அவன் மனைவி வலியில் துடிக்க அழத் தெரியாத அவள் கணவனுக்கும் அழுகை வந்தது.
ஆண்டவா "என் மனைவியின் முதல் பிரசவம் இது! தாய்கும் பிள்ளைக்கும் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது!" என்று உலகின் உள்ள எல்லா கடவுளிடம் வேண்டினான்
, நேரம் ஆக ஆக அவனுக்கு முகமெல்லாம் வேர்த்து கொட்டியது, பிரசவ வலியில் தன் மனைவி துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
சற்று நேரத்தில் திடீரென மனைவியின் குரல் அமைதியானது. கணவன் என்னாசோ! ஏதாச்சோ! என மிகவும் பயந்துபோனான், மீண்டும் ஒரு அலரல்...
அதை கேட்ட கணவன் ஆண்டவா என் மனைவிக்கு இவ்வளவு சித்திரவதையா! என தலையில் கை வைத்தவான் இருக்கையில் அமர்ந்து மனைவியை நினைத்து கூணி கூறுகிப்போனான், அப்போது
ஒரு செவிலியர் மட்டும் வெளியே வந்து உங்கள் மனைவிக்கு சுயபிரசவம் பயப்படும்படி ஒன்றில்லை... தாராளமாக உள்ளே சென்று பாருங்கள் என்றார்
, காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன் முதலில் தன் மனைவியை பார்க்கிறான், அவள் இன்னும் கண் திறக்காமல் மயக்கத்தில் படுத்திருக்க அடுத்து எங்கே என் குழந்தை என அவன் கண்கள் ஒரு வழியாக தேடி தாயின் அருகில் குழந்தை இருப்பதை கண்டு மெதுவாக நகர்ந்து பூமியின் பாதம் படாத சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு முத்தமிட்டு அதன் தலையை மெதுவாக கோதிவிடுகிறான்.
தந்தையின் கை விரல் பட்டவுடன் சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.
யாரு சொன்னது பெண்கள் மட்டும்தான் உயிரை சுமக்கின்றனர் என்று...
காதலிக்கும் ஒவ்வொரு ஆணின் "இதயத்தை" தொட்டுப் பாருங்கள் அவன் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணின் நினைவுகளை சுமந்தே மடிகிறான்.

இதை படித்து விட்டு மாடுலர் கிச்சனுக்குமாறுங்க ..

Image result for Modular Kitchenமாடுலர் கிச்சன் என்ற வகை தற்போது எல்லா வீடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இப்போது புதிதாகக் கட்டப்படும் எல்லாச் சமையலறைகளும் இந்த வகையிலேயே கட்டப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே கட்டப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆன வீடுகளில் உள்ளச் சமையலறைகளையும் மாடுலர் கிச்சன்களாக மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும். பழைய வீடுகளில் இத்தகைய மாடுலர் கிச்சன்களைப் பொருத்த வேண்டுமானால் சில வழிமுறைகளை அறிந்துகொள்வது முக்கியம்.

மாடுலரில் முக்கியமான அம்சம்  குறைந்தபட்ச இடத்தில் அதிக பொருட்கள் வைக்கும் வசதி. அதற்கேற்ப டிராயர்களை வடிவமைக்க தேவை இருக்கிறது. நம் விருப்பம் அல்லது வசதிக்கு ஏற்ப ‘எல்’, ‘பேரலல்’, ‘ப’ அல்லது ‘அடுப்பு நடுவில் வரும் தீவு வடிவம்’ என்று முடிவு செய்து இருப்போம்தானே? இவற்றில் SS 304 கிரேடு ஸ்டீல் நல்லது. ஸ்லீக் உள்பட  நூற்றுக்கணக்கான பிராண்டு களில் கிடைக்கிறது.

தரம் உறுதி செய்து கொள்ளல் மிக அவசியம்.கீல்களில் பிராண்ட் பார்த்து வாங்குவது நல்லது. ‘எப்கோ’ உபயோகிப்பதாகக் கூறுகிற ‘இன்ஸ்பையர் இன்டீரியர்’ வினோத், இன்னும் பல தகவல்களையும் அளிக்கிறார். இழுவைகளில் பலவித வடிவங்கள்...முதலில் பாஸ்கட் எனப்படும் எவர்சில்வர் கூடைகள் வடிவத்துக்கு ஏற்றவாறு... பொருட்கள் வைக்கும் பகுதிஇழுவை வசதிகள் இவற்றில்... 

மூலைகளை வெறும் தட்டுமுட்டு சாமானுக்கு வைத்திருந்த காலம் போய், அங்கு அழகுக்காகச் செலவிடும் ஃபேஷன் வந்துவிட்டது! அடுத்த பக்கம் பாருங்கள்...ரோலிங் வசதி கொண்ட சிறு கதவுகள் இவை கதவுக்கான இடத்தை அடைக்காது. மேடைக்கு அருகில்கூட வைக்கலாம். இவற்றை ஈரப் பொருட்கள் கவிழ்க்கும் பகுதி, சிலிண்டர் வைக்கும் பகுதியில் பொருத்தலாம்.

இது வரை பார்த்தது சில வகைகளே. இவை தவிர நாமே தேவைக்கு ஏற்றபடி  டிசைன் செய்து கொள்ளலாம். சிலருக்கு இழுவைகள் பிடிக்காது. சிலருக்கு கூடை அமைப்புகள் பிடிக்காது.   அடுத்து  கைப்பிடிகள். இவை பெரும்பாலும் நல்ல தரமான ஸ்ெடயின் ஸ்டீல் தயாரிப்பாக இருக்க வேண்டும். SS304 தரம் மருத்துவத்துறையில் உபயோகப்படுத்துவது... எளிதில் துருப்பிடிக்காது.  இழுவைகளுக்கு குமிழ்கள் தேவைப்படும். ஆயிரக்கணக்கில் இருக்கும். பொதுவாக வளைந்து இருக்கும் சாதா கைப்பிடி என் சாய்ஸ்!

இந்தப் படத்தில் கைப்பிடியால் எப்படி மாடுலர் கிச்சனை இன்னும் அழகுப்படுத்தி இருக்கிறார்கள் என்று அறியலாம். கைப்பிடிகளில் அழகும் வேண்டும். அதே நேரம் கிழிக்காமல் நுனி கூர்ப்பாக இல்லாமலும் இருக்க வேண்டும்.HDF போன்ற பலகைகளில் ஸ்க்ரூக்கள் பொருத்தும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஸ்க்ரூ உள்ளே செல்லும்போது ஸ்க்ரூ வடிவத் துளையில்  சென்று அதே வடிவில் வெளியே வர வேண்டும் ஜிப்சம் போர்டு ஸ்க்ரூக்களை உபயோகப்படுத்துவதாக வினோத் கூறினார். 

அதை மெஷினில் பொருத்தும்போது மிக அழகாக உள்ளே சென்று விடும். மெஷின் வழியாகவே எடுக்க வேண்டும். இவற்றைக் கழற்றி மாட்டினால், பலகைக்கு எந்தப் பிரச்னையும்  ஏற்படாமல் இருப்பது அவசியம். சில வகை ஸ்க்ரூ மெழுகுடன்  வருகிறது. பி.வி.சி. ப்ளக்கில் இவற்றைப் பொருத்தும்போது எளிதாக கழற்றி எடுக்க வசதி.இன்ஞ்சஸ் அதாவது, கீல்களில் பொருத்தும் ஸ்க்ரூக்களும் கவனிக்க வேண்டியவை. இப்போது பிளைவுட் 18 மி.மீ. அதற்கு மேல் கீல்கள் 3 மி.மீ. இதற்குப் பொருத்தும் ஸ்க்ரூ 20 மி.மீ. வரை உள்ளே செல்வது நல்லது. 

இதனால் கழற்றிக் கொண்டு வெளியே வராது.  எஸ்.எஸ். போன்ற ஸ்க்ரூக்களில் த்ரெட் நன்றாக இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.கைப்பிடிக்கு உபயோகப்படுத்தும் போல்ட் போன்றவை மிக முக்கியம். மாடுலர் கிச்சன் நீண்ட நாளைக்கு நன்றாக உழைக்க முக்கிய காரணம் லட்சக்கணக்கில் வாங்கும் லேமினேஷனோ, விதவித கூடைகளோ இல்லை. 5 ரூபாய்க்கு வாங்கும் ஸ்க்ரூ பொருத்தும் விதம்தான். இல்லையென்றால் கதவுகள் கையோடு வரும்... இழுவைகள் காலில் விழும்!

இப்போது  முழு  வடிவமைப்புக்குச் செல்வோம். இப்போது முழு சமையலறையே ஸ்லீக், வியனட்டா குசைன், யூனிவர்சல் போன்ற பிராண்ட்களில்  ரெடிமேடாகவே கிடைக்கிறது. வாங்கி வீட்டில் வைத்தால் கிச்சன் ரெடி. நமக்கென்னவோ, டெய்லரிடம் போராடி அளவு கொடுத்து தைக்கும்  ப்ளவுஸ் போல ரெடிமேட் ப்ளவுஸ் சரி வருவதில்லையே. அடுப்பங்கரை மட்டும்  வருமா என்ன? 

அடுத்து  முழு  அளவுகளில்  எப்படி டிசைன் செய்யலாம் என்று எடுத்துக்காட்டு. முதலில் பேரலல், U, L, ஒரு பக்கம் மட்டும் மேடை, தீவு  எப்படி வருகிறது என்று தீர்மானிக்க வேண்டும். அடுத்து அடுப்பு எங்கு வைப்பது என்று. சிலர் தெற்கு பார்த்துச் சமைக்க மாட்டார்கள். எனவே, பெரியவர்கள் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அடுத்து சிம்னிக்கு பைப் வெளியே போகும் வசதி. எங்கு அடுப்பு வைத்தால் பைப் போவது பிரச்னை இல்லாமல் இருக்கும் என்று பார்த்து, அதற்கு ஏற்ப துளையிட்டுக் கொள்வது முக்கியம். 

எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் நடுவில் சிம்னி  குழாய் போகும் இடத்தில் பீம் வந்து விட்டது. அதற்கான பெரிய துளையை போடும் ஆட்களை தேடினேன். அழகாக ஆப்பிளில் நடுவில் துளை போடும் சாதனம் போல துளை போட்டு பீம்மை  ஒரு குழவி போல கையில் கொடுத்து விட்டார்கள். இதுபோன்ற ஆட்களை தேடுவதுதான் கஷ்டம்! அடுத்து சிலிண்டர் வைக்கும் இடம். நான் பால்கனியில் வைத்துக்கொண்டு ஒரு கேஸ் பைப் நிறுவனம் மூலம் குழாய் வழியே வரச் செய்தேன். சமையலறை சிறிதாக இருப்பவர்கள் இப்படிச் செய்யலாம். சிலர் அடுப்பின் கீழேயே வைப்பார்கள். அப்போது அந்தப் பகுதியை சிலிண்டர் உள்ளே போகும் வகையில் காலியாக விட வேண்டும். 

அடுத்து சிங்... பல நவீன டிசைன்கள், கிரானைட், எவர்சில்வர் புழக்கத்தில் அதிகமாக இருக்கிறது. இதில் உள்ள குழாயில் சுடுநீர், குளிர்நீர் வர வேண்டிய வசதி வேண்டும் என்றால், டைல்ஸ் பதிக்கும் முன்பே குழாய் வேலைகளை முடிக்க வேண்டும். அடுத்து வாட்டர் ப்யூரிபயர் மாடுலர் உள்ளே வைப்பதாக இருந்தால், அந்த இடத்தை முடிவு செய்ய வேண்டும். அதற்கான எலெக்ட்ரிக், குழாய் பாயின்டுகள், வேண்டாத நீர் சிங்கில் வெளியேறுமா, இல்லை வேறு இடமா என்றெல்லாம் முடிவு செய்வது அவசியம். நிறைய பணம் போட்டு செய்யும் வேலை என்றாலும், நுணுக்கமாக சில விஷயங்களில் கவனம் செலுத்தாவிடில், நாம் நினைத்தது போல வராதே!

அடுத்து மேடை... கிரானைட், குவார்ட்ஸ் என்று பல வகைகளில் கிடைக்கிறது. எந்தக் கறையும் படாமல், கீறல் விழாத  தரத்தில், உடனே சுத்தம் செய்யும் படி வாங்குவது நல்லது. சிலர் கழுவி விட வசதியாக ஸ்கர்ட்டிங் போல இன்னொரு கல்லை ஒட்டுவார்கள். இது சரியாக செய்யாவிடில், கீழே விழுந்து சமையல் அறை அமைப்பை கெடுத்துவிடும். பெரும்பாலும் நுனியை பாலீஷ் செய்வதே நடக்கிறது.

மைக்ரோவேவ் அவன் வைக்கும் இடம் 


மைக்ரோவேவை அதிக உயரத்திலோ, கீழேயோ வைக்கக் கூடாது. சிலர் டால் (உயரமாக உள்ள அலமாரி) யூனிட்டின் உள்ளே வைத்து விடுவார்கள். அதற்கான மின்சார வசதி தயாராக  இருக்க வேண்டும். எனவே டைல்ஸ் பதிக்கும் முன்பே  உள் அலங்கார பொறியாளருடன் விவாதித்து வடிவமைக்க வேண்டும். 
 
இதில், தீவு அமைப்பு இருந்தாலும் அடுப்பு ஓரமாக உள்ளது. அடுப்பின் மேலே அவன் உள்ள அமைப்பு. இத்தனை உயரத்தில் அமைவது எனக்கு கடினம். அடுத்து கன்வஷன் அடுப்பா சாதா அடுப்பா என்று யோசித்துக் கொள்ள வேண்டும். டிஷ் வாஷர் வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது எதிர்பக்கம் சரியான உயரத்தில் உள்ளது. ஆனால், பக்கத்தில் காலி  இடம் இல்லை. அடுப்புக்கு வலது பக்கம் பொருத்துவது சரியாக இருக்கும்.  இதில் அடுப்பு பதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றி உள்ள பசை தரமாக இருக்க வேண்டும். 

அடுப்பு, சிங் எல்லாம் வசதியான  இடங்களில் பொருத்தி விட்டு, அதற்கு ஏற்ப இழுவைகளைப் பொருத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டி, உயர அமைப்பில் உள்ள இழுவைகள் போன்றவற்றையும் வடிவமைக்க வேண்டும். இப்படத்தில் கன்வஷன் அடுப்பு பொருத்தப்பட்டு இருப்பதைக் கவனிக்கலாம். இந்த அமைப்புக்கு ஓர் ஓரமாக சிங் இருப்பது நல்லது. அதே நேரம் கை இடிக்காமல் இருக்க வேண்டும். படத்தில் உள்ளது ஒரு மாடலே. நமக்கு கிரைண்டர், மிக்ஸி வைக்கும் இடங்களை தீர்மானிப்பது அவசியம். அவற்றை ஷட்டருக்குள் வைக்கலாம். 


மாடுலர் கிச்சன்களை அமைத்துக் கொடுக்க இன்று நிறைய நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை விசாரித்து அழைத்தால், அவர்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வார்கள். எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் அவர்கள் சொல்லி விடுவார்கள். இதுதான் முதல் படி. முன் பணம் கட்ட வேண்டியிருக்கும்.
நேரில் கடைக்குச் சென்று தேவையான மாடல், வண்ணம் போன்றவற்றைத் தேர்வு செய்வது அடுத்த நிலை. பொதுவாக மற்ற நிறங்களைக் காட்டிலும் பழுப்பு நிறத்தைத் தேர்வு செய்வதே நல்லது.
நிறுவனத்திலிருந்து பொறியாளர் வந்து அறையின் நீளம், அகலம் போன்றவற்றைத் துல்லியமாக அளப்பார்கள். பழைய சமையலறை, மாடுலருக்கு ஏற்றதாக இல்லாவிட்டால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அந்தப் பொறுப்பும் செலவும் தனி.
நீங்கள் தேர்ந்தெடுத்த வரைபடத்தில் கையெழுத்து போட்டு ஒப்பு கொண்ட பின், மூன்று நான்கு வாரங்களில் மாடுலர் கிச்சன் அமைப்பதற்கான பேனல்கள் வரும். கோப்பைகள், தட்டுகள், அழகு வகைகள் வைப்பதற்கான கண்ணாடிகளும் இதில் அடக்கம்.
வேலைச் செய்ய வரும் நிபுணரிடம் எங்கெங்கு என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் ( கரண்டி, ஸ்பூன், டம்பளர், பாத்திரங்கள்) என்பதை முன்கூட்டியே ஆலோசித்துத் தெரிவித்து விட வேண்டும். சமையலறையிலேயே சிறு பூஜை அறையும் சில இல்லங்களில் இருக்கக் கூடும். அப்படி இருந்தால் சாமி படங்களை மாட்டுகிற விதத்தையும் தெரிவித்து விட வேண்டும்.
சமையல் சிலிண்டர் வெளியே தெரியாதவாறு பொருத்துவார்கள். அப்போது உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். துவாரம் வைத்து அமைப்பதுதான் அவர்கள் வேலை. பிறகு சிலிண்டர் குழாயை அடுப்புடன் இணைப்பது காஸ் கம்பெனியைச் சார்ந்தது.
பழைய சமையலறைகளை மாடுலர் கிச்சன்களாக மாற்றக் குறைந்தபட்சம் ரூ.1.50 லட்சம் செலவு ஆகும். அறையின் நீள அகலம் இவற்றைப் பொருத்து செலவு கூடுதல் ஆகவும் வாய்ப்பு உள்ளது.  
மாடுலர் கிச்சன் அமைக்கத் துளை போடுவது உள்ளிட்ட பணிகள் மின்சாரத்தைச் சார்ந்தது. எனவே,மின்வெட்டு நேரத்தை முன்கூட்டியே சொல்லி விடுவதும் நல்லது.
ஐடியல் அடுப்பங்கரை என்பது அவரவர் மனதுக்குப் பொருத்தமானதே. என் மனதுக்கு எந்த சமையலறையும் அழகானதே. வீடுகள் அடிக்கடி மாறுவதால் எல்லா இடங்களிலும் பொருத்திக்கொள்ளும் மனம் வந்துவிட்டது. மனதுக்கேற்ப சமையல் இடம் அமைவது, இன்னும் மகிழ்வைக் கொடுக்கும். வாழ்த்துகள்!  

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .

Wednesday 22 February 2017

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்கும் சிசேரியன்கள்(cesarean delivery)!!!

Related imageதமிழகத்தில் 20 மருத்துவகல்லூரிகள், 26 தலைமை மருத்துவமனைகள், 240 தாலுகா மருத்துவமனைகள், 1,751 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 382 ஊரக குடும்ப நல மையங்கள், 110 பேறு காலத்திற்கு பின் கவனிப்பு மையங்கள், 108 நகர்ப்புற குடும்ப நல மையங்கள் என 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் இன்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் தொடங்கி பிரசவம் வரை தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் பணியை அரசு மருத்துவமனைகள் செய்து வருகின்றன.
குறிப்பாக நடுத்தர மற்றும் வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனைகளையே நாடி செல்லும் நிலை நீடித்து வருகிறது. இப்படி தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு 90 சதவீதம் சுகப்பிரசவம் ஆகக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்கிறது.
காரணம் சுகபிரசவத்தை விட சிசேரியன் சிகிச்சை மூலம் வருவாய் அதிகம் வசூலிக்க முடியும் என்பதால் இதற்கே தனியார் மருத்துவமனைகள் அதிக முக்கியத்துவம் தருகின்றன. சாதாரண வியாதிக்காக தனியார் மருத்துவமனையில் செலவிட தயங்குபவர்கள் கூட பிரசவத்துக்கு தனியார் மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் கட்டணத்தை தயங்காமல் கட்டுகின்றனர். சுகப்பிரசவம் என்றால் கட்டணம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே சிசேரியன் என்றால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்து விடுகின்றனர். இதுதவிர குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்தால் அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று யாராவது கணித்தால் அந்த நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தையை பிறக்க செய்யும் சட்டத்துக்கு புறம்பான செயல்களும் தனியார் மருத்துவமனைகளில் நடக்கிறது.
தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா உட்பட 15 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் மூலமாக பிரசவம் செய்வது அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த புள்ளிவிவர பட்டியலில், திரிபுராவில் தனியார் மருத்துவமனைகளில் 87 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 36.4 சதவீதமும் சிசேரியன் பிரசவம் நடக்கிறது.
இதேபோல், பீகாரில் தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 37.1 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் 36 சதவீதமும், தெலுங்கானாவில் 63 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 10 முதல் 15 சதவீத பிரசவங்கள் மட்டுமே சிசேரியன் முறையில் மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சுகப்பிரசவமே ஆனாலும் வசூல் தனியார் மருத்துவமனைகளில் ஒரு சிலவற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் செய்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்கிறோம். என்ற பெயரில் குழந்தை பிறந்த பின்னர் 10 நாட்களுக்கு மேலாக தங்க வைத்துக்கொண்டு அதன்மூலமாக கட்டணம் வசூலித்து விடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதில் குழந்தைகளுக்கு என்னதான் பிரச்னை என்றாலும் அதுகுறித்து கேட்டால் பதில் கிடைப்பதில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
தொகுப்பு : அ. தையுபா  அஜ்மல் .

Saturday 18 February 2017

இணையத்தில் வைரல் ஆக பரவும் புதிய போராட்ட அழைப்பு !!

Image may contain: one or more people, crowd, meme and textதமிழ்நாடு இளைஞர்கள் கூட்டமைப்பின் அமைப்பின் அதிகார பூர்வ அறிவிப்பு…!
.
சமூக வலைத்தளங்களில் நேற்று இரவில் இருந்து ஒரு முக்கிய செய்தி மிக வாட்ஸ் அப்பிலும் facebook லும் மிக வேகமாக பரவி வருகிறது .
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான முன்னுதாரங்களை கருத்தில் கொண்டு கருப்பு நிற பேட்ச் அணிந்து இந்த துக்க நாளாக அனுசரிக்க தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்த அறிவிப்பு.
அதன் விரிவாக்கம் தொடர்ந்து படிக்கவும்..!
கடந்த மாதம் public மீடியா மூலம் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தது இதில் சிதறுண்ட அத்தனை இளைஞர்களும் கிராமம் மற்றும் நகரம் வாரியாக அடையாளம் கண்டு ஓன்று சேர மிகசிறந்த வாய்ப்பாக உருவாக்க பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் நாட்டு நலன் விரும்பும் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் மிக சிறந்த அடையாளம் ஏற்படுத்தி கொள்ள தவறவில்லை . அடுத்த கட்ட போராட்டம் இப்போது தான் அறிவிக்க இது தான் சரியான சமயம் ஆகும் . ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சில விரும்பதகாத சம்பவங்களை தவிர்க்க நாம் ஒரு படி மேலே போய் சிந்திக்க நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிதறுண்ட இளைஞர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் சமூக ஆரவாளர்கள் ஓன்று கூடவும் அவர்கள் எழுதப்படாத மிகச்சிறந்த நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டனர். இவர்கள் தலைமையில் நேற்று இரவு மிக முக்கியமான கொள்கை முடிவுகளை பின் பற்ற மக்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.
அதன்படி
இனி நாம் ரோட்டுக்கு இறங்கி வந்து போராட போவதில்லை
யாரிடமும் தடி அடியும் வாங்க போவதில்லை.
தைரியமாக புத்திசாலி தனமாய் சில முடிவுகளை எடுக்க போகிறோம். இதில் இரண்டு விஷயங்களுக்காக அடுத்த கட்ட போராட்டம் தொடங்க போகிறது.
1 .தமிழகத்தில் நமக்கு சோறு போட்ட விவசாயிகளை அச்சுறுத்தும் விதமாக விவசாய நிலங்களில் இருந்து கெயில் எரிவாயு திட்டத்திற்கு தடைகள் ஏற்படுத்த ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்ப்பை காட்டுவது
2. 7 கோடி தமிழர்கள் எதிர்ப்பு காட்டியும் 107 சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி அவர்களை பணயமாக வைத்து தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தமிழர்களின் மானத்தை கேலி கூத்தாக மாற்றியவர்களுக்கு பாடம் புகட்டவும் இளைஞர்கள் பெரிய அளவில் உணர்வு பூர்வமாக ஓன்று கூட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிற பேட்ஜ்
இதன்படி மேலே சொல்லப்பட்ட இந்த இரண்டு எதிப்பு விஷயங்களில் ஏதாவது ஓன்று பிடிக்கவில்லை என்றாலும் தாங்கள் அணியும் உடைகளில் கருப்பு நிற பேட்ஜ் அணிய வேண்டும். இந்த இரண்டு பிரச்சனைகள் ஓயும் வரை அந்த நாளை கருப்பு நிற துக்கம் நிறைந்ததாக அனுசரிக்க போகிறோம். இந்த கருப்பு நிற பேட்ஜ் அணிந்தவர்கள் தாங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த இரண்டு திட்டத்துக்கும் துணை போகாமலும் துணை போகிறவர்களுக்கு தங்களால் இயன்ற அளவுக்கு ஒத்துழையாமையை காட்டி அவர்களின் நோக்கத்தை செயல்படாதவாறு கிடப்பில் போட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்களின் அன்றாட பணிகளை சரிவர செய்து கொள்வதோடு போராட்ட நோக்கத்தையும் கருத்தில் கொண்டு உணர்வு ரீதியான ஆதரவு காட்ட வேண்டும்.
இதன் மூலம் நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு நமது சார்பாக ஓர் ஆதரவும் .ஊழல் செய்து வைத்திருக்கும் பணத்தின் மூலம் மக்களின் பிரதி நிதிகளை வாங்கி தேசத்தின் வளர்ச்சிக்கு சாவு மணி அடிக்கும் அவர்களின் ஆட்சியை துக்க தினமாக கடைபிடிக்க வேண்டும் .

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உருவான அதே விதிமுறைகள் தான்.!
அரசியல்வாதிகள் பங்கேற்க அனுமதி இல்லை
நடிகர் நடிகைகள் பங்கேற்க அனுமதி இல்லை
மதம் சார்ந்தவர்களுக்கும் அனுமதி இல்லை.
மாணவர்கள் ,அரசு ஊழியர்கள் ,விவசாயிகள் தொழிளார்கள் ,சமூக ஆர்வலர்கள் .பெண்கள் என வயது வித்தியாசம் எதுவும் இல்லாமல் தமிழர்கள் என்ற உணர்வுடன் போராட அழைக்கிறோம்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள மிக கேவலமான நிகழ்வுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வரை நமக்கு இந்த கருப்பு தினம் தொடரும்....!

Thursday 16 February 2017

இஸ்ரோவின் உலக சாதனை, 104 செயற்கைக் கோள்களுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!

Image result for உலக சாதனை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 104 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்ததுஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்து உள்ளது. விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.





பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. கடல்சார் ஆராய்ச்சி, பூமி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

அமெரிக்காவுக்கு சொந்தமான 88 ‘டோவ்’ செயற்கைகோள்கள், 8 லெமூர் செயற்கைகோள்கள், இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான பி.ஜி.யு.எஸ்-அட், கஜகஸ்தான் நாட்டின் ஏ1-பார்பி-1 செயற்கைகோள், நெதர்லாந்துக்கு சொந்தமான பி.இ.ஏ.எஸ்.எஸ்.எஸ். செயற்கைகோள், சுவிட்சர்லாந்தின் டி.ஐ.டி.ஓ-2, அமீரகத்துக்கு சொந்தமான நைப்-1 ஆகிய வெளிநாடுகளுக்கு சொந்தமான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இவற்றுடன் இந்தியாவுக்கு சொந்தமான 2 நானோ செயற்கைகோள் மற்றும் 714 கிலோ எடை கொண்ட கார்டோ சாட்-2 ஆகிய செயற்கைகோள்கள் அடங்கும். செயற்கைகோள்களில் 101 செயற்கைகோள்கள் நானோ வகையை சேர்ந்தவையாகும். இவற்றின் மொத்த எடை 1,378 கிலோ ஆகும்.

வெற்றிகரமாக பாய்ந்தது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9.28 மணிக்கு 104 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டின் எடை 320 டன் (3 லட்சத்து 20 ஆயிரம் கிலோ) ஆகும்.

செயற்கைகோள் பிரிந்தது

புறப்பட்ட 31 நிமிடத்தில் ராக்கெட் பூமியில் இருந்து 520 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து அனைத்து செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் திட்டமிட்டபடி அந்தந்த இலக்கில் கொண்டு சேர்த்தது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், 3-வது மற்றும் 4-வது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பூமி கண்காணிப்பு

முதன்மை செயற்கைகோளான ‘கார்டோ சாட்-2’ பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு, ராணுவ ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த செயற்கைகோளில் 986 வாட் திறன்கொண்ட 2 பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

‘கார்டோ சாட்-2’ செயற்கைகோள் பூமி கண்காணிப்பு மற்றும் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த செயற்கைகோள் மூலம் 1,500 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கலாம். மேலும் இதன் மூலம் பேரிடர் மேலாண்மை, செல்போன் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுனர்களுக்கு குரல் வழி மூலம் முறையாக ஓட்டச் சொல்லி வாகனங்களை இயக்க செய்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

வரலாற்று சாதனை

இஸ்ரோ வரலாற்றில் கடந்த 2008-ம் ஆண்டு அதிகபட்சமாக ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகில் எந்த நாடும் இத்தனை எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ரஷியா 37 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.


தொகுப்பு  : தையுபா  அஜ்மல் .

Wednesday 15 February 2017

சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ!

Image result for நித்திய கல்யாணி செடிநித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணி பூக்கள்,
சீரகம். 5 முதல் 10
நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.
நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.
நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
தலையில் ஏற்படும் பொடுகுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.

Sunday 12 February 2017

இணைய உலகின் வ‌லைப்பின்ன‌ல் (இன்டர்நெட்) காதல் பற்றிய சிறப்பு பார்வை..

Image result for இண்டெர்நெட் காதல்


ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் நடந்த அதிசயம் இது.காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது.


ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது.


வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி கொள்ளவும் புதிய வழி கிடைத்திருக்கிறது.அது தான் ஒரே பாஸ்வேர்டு.அதாவது காதலர்கள் பரஸ்பரம் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வது.


நீ பாதி நான் பாதி என்றெலாம் சொல்வது அந்த காலம் இந்த காலத்தில் காதலர்கள் சொலவதெல்லாம் உன் பாஸ்வேர்டும் ஒன்று என பாஸ்வேர்டும் ஒன்று என்பதாக தான இருக்கிறது.


கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் தான் இது.இணைய உலகின் சேவைகளுக்கான பூட்டு சாவியாக கருதப்படும் பாஸ்வேர்டு அவற்றின் தன்மைக்கேற்ப அந்தரங்கமானவை.பாஸ்வேர்டை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பது இண்டெர்நெட் யுகத்தின் எழுதப்படாத விதியும் கூட.பாஸ்வேர்ட் வேறு யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இணைய உலகில் எலோருக்கும் இருக்கிறது.


பாஸ்வேர்டு பகிர்ந்ங்கமாவதால் பலவித ஆபத்துகளும் ஏற்படலாம்.ஆனால் இவை எல்லாவற்ரையும் மீறி டிஜிட்டல் யுகத்தின் காதலர்கள் தங்களது பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளவும் ,முடிந்தால் இருவரும் ஒரே பாஸ்வேர்டையும் வைத்திருக்க விரும்புகின்றனர் தெரியுமா என்று கேட்கிறது நியுயார்க்டைம்ஸ் கட்டுரை.


பாஸ்வேர்டு பகிர்வு என்பது எப்படி இந்த காலத்து காதல் அடையாளமாக உருவாகியிருக்கிறது என விவரிக்கும் அந்த கட்டுரை சுவாரஸ்யமான பல தகவல்களை தருகிறது.அவை சிந்திக்கவும் வைக்கின்றன.


பாஸ்வேர்டு அந்தரங்கமானவை தான்.ஆனால் காதலர்களுக்கு இடையே எதற்கு அந்தரங்கம்.இருவரும் ஓருயிர் எனபது உண்மையானால் பாஸ்வேர்டில் என்ன ரகசியம்?இந்த என பாஸ்வேர்டு என்று கொடுத்து விடுவது தானே காதலுக்கு மரியாதை என்று இந்த கால காதலர்கள் பலரும் கருதுகின்றனர்.


காதலில் ஒரு நெருக்கமும் நம்பகத்தன்மையும் வந்த பிறகு ஒரே ஸ்டிராவில் குளிர்பானம் குடிப்பது,ஒன்றாக கைகோர்த்தப்டி நடந்து செல்வது போன்றவை நிகழ்வது போலவே பாஸ்வேர்டை இருவரும் பகிர்ந்து கொள்வதும் வெகு இயல்பாக நிகழ்ந்து வருகிறது.


அது தான் பல நவீன காதலர்கள் இந்தா என இமெயில் பாஸ்வேர்டு என்றும் இது தான் என் இமெயில் பாஸ்வேர்டு என்றும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர்.


அமெரிக்காவில் இப்படி பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் 30 சதவீத காதலர்களிடம் இருப்பாதாக தெரியவந்துள்ளது.


அது மட்டும் அல்ல யுவன்களும் யுவதிகளும் இதை ஒரு காதல் மைல்கல்லாகவே கருதுவதாக கொள்ளலாம்.யாருமே எடுத்த எடுப்பிலேயே பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதில்லை.ஆனால் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ள முடியும் என்றால் காதல அந்த அளவுக்கு நெருக்கமாகிவிட்டதாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.


அவர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டனர் என்று சொல்வது நண்பர்கள் வட்டத்தில் காதலின் நெருக்கத்துக்கான சான்றிதழாகவும் பாராட்டாகவும் அமைந்து விடுகிறது.


காதலனோ காதலியோ ஒருவர் மற்றவருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கும் நிலையிலேயே ஒரே பாஸ்வேர்டுக்கு மாறுகின்றனர்.அவனி(ளி)டம் இருந்து மறைக்க என்னிடம் எதுவும் இல்லை என்று கட்டதிலேயே காதலர்கள் இந்த முடிவுக்கு வருவதால் இந்த பகிர்வு அவர்களுக்கும் ஒரு காதல் திருப்தியை கொடுக்கிறது.


இவ்வளவு ஏன் ஒரு அமெரிக்க காதல் ஜோடி ஐ லவ் கெவின் என்றும் ஐ லவ் அலெ என்றும் பரஸ்பரம் தங்கள் பெயரை கொண்டு பாஸ்வேர்டை உருவாக்கி கொண்டுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.அதாவது பாஸ்வேர்டு முலமே காதலை பறைசாற்றி மகிழ்ந்துள்ளது.


இதே போல இருவரும் தங்கள் பெயர்களை இணைத்தே ஒரே பாஸ்வேர்டை அமைத்து கொள்ளலாம்.அதுவும் காதல் நெருக்கம் தான்!


எல்லோரும் இப்படி இருப்பதாக சொல்ல முடியாது.அந்தரங்கத்தை மதிப்பவர்கள் தனித்தனி பாஸ்வேர்டே சரி என நினைக்கலாம்.ஒருவர் இமெயில் கணக்கில் அல்லது பேஸ்புக பக்கத்தில் மூக்கை நுழைக்காமல் கன்னியம் காக்கலாம்.


ஆனால் இன்னும் சிலரோ என்னிடமே பாஸ்வேர்டை மறைக்கிறாயா என கோபம் கொண்டு பாஸ்வேர்டு மீது உரிமை கொண்டாலாம்.நீயும் நானும் ஒன்று என்றால் பாஸ்வேர்டில் ஏன் பிரிவினை என்று கேட்கலாம்.


எனவே பாஸ்வேர்டை பகிர்வது சிலருக்கு காதல் கட்டாயமாகவும் மாறலாம்.இன்னும் சிலருக்கோ அதுவே காதல் இன்பமாகவும் மாறலாம்.குறிப்பாக காதல் வீதியில் திரிந்து விட்டு கல்யாண வீட்டிற்கு வருபவர்கள் இனி ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்த முடிவு செய்து அன்யோன்யத்தை உறுதி செய்து கொள்ளலாம்.அல்லது கணவன் மனையிவான பிறகு முதல் வேலையாக ஒரே பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம்.


திருமணமான ஜோடிகளில் பலர் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டு வருவதோடு அது குறித்து மகிழ்ச்சி கொள்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆக இணைய யுகத்தில் பாஸ்வேர்டுக்கு காதல் அடையாளம் என்னும் கூடுதல் பயனும் உண்டாகியிருக்கிறது.


ஆனால் பாஸ்வேர்டு பகிர்வு என்பது ரிஸ்கானது தான்.ஒன்றாக இருக்கும் போது பாஸ்வேர்டை கொடுத்துவிட்டு பின்னர் காதல் கசந்து பிரிய நேர்ந்தால் காதலனோ காதலியோ பாஸ்வேர்டை கொண்டு பழி வாங்கும் வாய்ப்பு உள்ளது.


இமெயிலில் உள்ள அந்தரங்கமான விஷயங்களை அல்லது பேஸ்புக் சங்கதிகளை பகிரங்கமாக்கி அவதூறு ஏற்படுத்தலாம்.பாஸ்வேர்டை மாற்றிவிடலாம் என்றாலும் அதற்கு முன் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.


இத்தகைய நிலை ஏற்படாமல் தவிர்க்க பாஸ்வேர்டு குறித்து ஆலோசனை எல்லாம் கூறத்துவங்கியுள்ளனர்.ஆக பாஸ்வேர்டு நிர்வாகம் என்பது இனியும் கம்புயூட்டர் மட்டும் சார்ந்ததல்ல;அது காதல் சார்ந்ததும் கூட!.


இன்டர்நெட்டின் வ‌ருகைக்கு பின் காணாம‌லே காத‌ல் த‌த்துவ‌த்துக்கு புத்துயிர் கிடைத்திருக்கிற‌து. நேரில் பார்க்க‌மாலேயே இமெயில் வாயிலாக‌ அறிமுக‌மாகி… காத‌லர்களாகி… அதன்‌ பின், முத‌ல் முறையாக நேரில் ச‌ந்தித்துக்கொண்ட‌ ந‌வீன‌ காத‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்ற‌ன‌ர். இதெல்லாம் ஒரு த‌லை ராக‌ த‌லைமுறைக்கு சாத்திய‌மாகாத‌ வ‌ச‌திக‌ள். மற்ற துறையைப் போலவே இன்டர்நெட் காத‌ல‌ர்க‌ளூக்கும் புதிய‌ க‌த‌வுக‌ளை திற‌ந்துள்ள‌து.

ஆனால், 
இன்டர்நெட் காத‌ல் ஆப‌த்துக்க‌ள் நிறைந்த‌து என‌பதை ம‌ற‌ந்துவிட‌க் கூடாது. இமேயில் மூல‌ம் அறிமுக‌மாகி தப்பான‌வ‌ர்க‌ளின் வ‌லையில் விழுந்து ஏமாந்த‌வ‌ர்க‌ளும் க‌ணிச‌மாக‌ உள்ள‌ன‌ர். கியுபா முன்னாள் அதிப‌ர் காஸ்ட்ரோவின் ம‌க‌ன் இப்ப‌டி அமெரிக்க‌ வாலிப‌ர் ஒருவ‌ரை கொல‌ம்பிய‌ அழ‌கி என‌ நினைத்து ஏமாந்த‌ க‌தையும் இருக்கிற‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, ஃபேஸ்புக் புதிய‌ உற‌வுக்கு எப்ப‌டி உத‌வுகிற‌தோ அதே போல‌ உற‌வுக்கும் வேட்டு வைக்க‌லாம். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளில் ப‌ல‌ர் ப‌ழைய‌ காத‌ல‌ர்க‌ள் அல்ல‌து முத‌ல் காத‌ல‌னை/காதலியை தேடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தும், அவ‌ர்க‌ளில் சில‌ர் இதில் வெற்றி பெற்று ப‌ழைய உற‌வை புதுப்பித்துக் கொண்டு புதிய‌ உற‌வில் சிக்க‌லை தேடிக்கொள்வ‌து குறித்தும் இன்டர்நெட் உல‌கில் ப‌திவுக‌ள் இருக்கின்ற‌ன.

எனவே, எச்சரிக்கை தேவை! ஆதி கால‌ காத‌லோ இன்டர்நெட் காத‌லோ, காத‌லுக்கான‌ பொன்விதிக‌ள் எப்போதுமே பொதுவ‌னாவை.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday 8 February 2017

Scaffold Supervisor Test Question & Answers..


1.      Up to what height only supervisor will sign
a) 0----6m                                      b) 6----12.2 m
c) Any height                                d) Up to 38 m
2.      For an internal ladder, What is the minimum occupying size
a) 27’’ x 30’’                                 b) 27’’ x 36’’
c) 24’’ x 30’’                                 d) 24’’ x 36’’
3.      How many lifts can be installed above raker tie-in point
a) One                                           b) Three
c) Four                                           d) Two
4.      What is the position of tie-in point for a scaffold 4’ x 8’
a) 20’                                             b) 15’
c) 16’                                             d) 12’
5.      What is the size of scaffold wheel for a medium duty scaffold
a) 5’’                                              b) 8’’
c) 7’’                                              d) 12’’
6.      What a scaffold wheel must have
a) A threaded portion                   b) Caster lock/Wheel lock
c) Base plate                                  d) Connecting pin
7.      For a system scaffold, what is Aramco requirement to follow
a) Manufacturer manual                b) Aramco standard
c) L. P. instructions                       d) Scaffold drawings
8.      For a hanger tube in under-hung scaffold, What type of coupler is used
a) Double                                      b) Swivel
c) Sleeve                                        d) Putlog
9.      When extending a brace, What can not be used
a) Sleeve clamp                             b) Double clamp
c) Swivel clamp                             d) Joint pin
10.  What is the load rating for a medium duty scaffold
a) 120 Kg                                      b) < 240 Kg
c) 240 Kg                                      d) 50 Kg
11.  How a scaffold classified used for abrasive blasting
a) Light duty                                 b) Special duty
c) Medium duty                            d) Heavy duty
12.  On a temporary ramp, Aramco requires which ratio
a) 1-V   3-H                                   b) 1-V   2-H
c) 1-V   4-H                                   d) 1-V   1-H
13.  What is the minimum clear head room on a scaffold platform
a) 2 m                                            b) 1.5 m
c) 1.8 m                                         d) 2.5 m
14.  What is the minimum clearance between a toe-board and the surface of working platform
a) 1’’ (25 mm)                               b) ½’’ (13 mm)
c) ¼’’ (6 mm)                                d) ¾’’ (20 mm)

15.  The top rail height can not be more than
a) 0.95 m (38’’)                             b) 1.15 m (45’’)
c) 1.20 m (48’’)                             d) 1.10 m (43’’)
16.  Minimum diameter of life line rope is
a) 1’’ (25 mm)                               b) ½’’ (13 mm)
c) 3/8’’ (10 mm)                            d) ¼’’ (6 mm)
17.  What is the minimum number of boards for a bracket scaffold
a) Two                                           b) One
c) Four                                           d) Three
18.  Who will determine the integrity of a tank wall before welding a bracket strap
a) L. P. D.                                     b) Proponent Engineering Unit
c) W. P. Issuer                               d) Aramco inspector
19.  What is the minimum diameter of rope used as a guard rail member in a bracket scaffold system
a) ¾’’ (20 mm)                              b) 3/8’’ (10 mm)
c) ½’’ (13 mm)                              d) ¼’’ (6 mm)
20.  What is the nominal size of sill board
a) 2’’ x 8’’ (50 mm x 200 mm)      b) 1-1/2’’ x 9’’ (38 mm x 225 mm)
c) 2’’ x 10’’ (50 mm x 250 mm)    d) 1-1/2’’ x 10’’ (38 mm x 250 mm)
21.  What is the maximum length of board used in bracket scaffold with 2’’ thickness & 12’’ width
a) 10’ 6’’                                       b) 8’ 6’’
c) 9’ 6’’                                         d) 6’ 6’’
22.  What is the length of bracket strap
a) 8’’                                              b) 10’’
c) 7’’                                              d) 9’’
23.  What is the height of guard rail on a bracket scaffold
a) 1.15 m (45’’)                             b) 0.90 m (36’’)
c) 0.95 m (38’’)                             d) 1.20 m (48’’)
24.  What is the nominal size of debris net
a) 13 mm (1/2’’)                            b) 20 mm (3/4’’)
c) 10 mm (3/8’’)                            d) 25 mm (1’’)
25.  On a climbing side of a ladder, What is the minimum clear distance from a structure
a) 36’’ (900 mm)                           b) 30’’ (760 mm)
c) 20’’ (500 mm)                           d) 24’’ (600 mm)
26.  What is the maximum height of fabricated tubular frame scaffold
a) 6 m (20’)                                   b) 5 m (16’)
c) 8 m (25’)                                   d) 10 m (30’)

27.  How many maximum platforms in a medium duty scaffold, when there are 3-
Planked level
a) One                                           b) Two
c) Three                                         d) Four
28.  What should be the clear distance between a trapeze tube and a runner
a) 2’ (600 mm)                              b) 1.5’ (450 mm)
c) 1’ (300 mm)                              d) 3’ (900 mm)
29.  What is the maximum length of a trapeze tube
a) 2’ (600 mm)                              b) 1.5’ (450 mm)
c) 3’ (900 mm)                              d) 2.5’ (760 mm)
30.  Which part of the scaffold, You will remove first while dismantling any scaffold
a) Brace                                         b) Raker
c) Tie                                             d) Guard rail
31.  What is the distance between a post and brace tie-in point
a) 12’’ (300 mm)                           b) 4’’ (100 mm)
c) 8’’ (200 mm)                             d) 6’’ (150 mm)
32.  Above what height a scaffold plan will be required
a) 12.2 m (40’)                              b) 6 m (20/)
c) 38 m (125’)                               d) 8 m (26’)
33.  While abetting of joints is done in a tube and coupler scaffold, What you will do, While erecting the scaffold
a) Not to install in the same lift    b) Fix all the joints near to the posts
c) To install at middle third          d) to install in the same span


           Thanks to Mr.Karthikeyan