Friday 10 November 2017

தூத்துக்குடி ரோச் பூங்காவில் பழைய இரும்புப் பொருள்களால் உருவான சிற்பங்கள் !!

தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவில், பழைய இரும்புப் பொருள்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட உயிரினங்களின் சிற்பங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Image result for தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவில், பதூத்துக்குடி தெற்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது ரோச் பூங்கா. விடுமுறை நாள்களில் குழந்தைகளின் பொழுதுபோக்குத் தளமாக விளங்குகிறது. இங்கு, விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் இருந்துவந்தன. தற்போது, இப்பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காரணம், பழைய இரும்புப் பொருள்களால் உருவாக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சுறா, டால்ஃபின், கடல்குதிரை, கடல்கன்னி, டைனோசர் ஆகியவற்றின் சிற்பங்களால்தான். இவற்றை ரசிப்பதுடன், அருகில் நின்று செல்ஃபியும் எடுத்துக் கொள்கின்றனர்.
Image result for தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவில், பஇதுகுறித்து கூறிய மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், ‘’ரோச் பூங்காவில் பழைய இரும்புப் பொருள்களைக்கொண்டு சுறா, நீலத்திமிங்கிலம், கடல்குதிரை, நண்டு, ஆமை, முதலை, ஆக்டோபஸ், படகோட்டி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் இலச்சினையான ‘சிப்பிக்குள் முத்து’, ஆகிய 15 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பூங்கா சீரமைப்புப் பணிகள் சில மாதங்களில் முடிவடையும். மேலும், மாநகராட்சியை அழகுபடுத்தும் விதமாக, நகரிலுள்ள அரசுக் கட்டடச் சுவர்களில் மாவட்டத்தின் வரலாறும் இயற்கை வளம்குறித்த ஓவியங்களும் வரையப்பட்டுவருகின்றன. இதன்மூலம், சுவரொட்டிகள் ஒட்டப்படுவது தடுக்கப்படும்.’’ என்றார்.

Image result for தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவில், பசிற்பங்களை உருவாக்கிவரும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கண்ட்லா, ‘’ இரும்புச் சக்கரங்கள், பேரிங்குகள், சங்கிலிகள், டீசல், பெட்ரோல் டேங்குகள், கிளட்ச் பிளேட், ஸ்பிரிங்குகள் உள்ளிட்ட பழைய பொருள்களைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 சிற்பங்களை உருவாக்க 13டன் பழையபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து இரும்புப் பொருள்களை வாங்கியுள்ளோம். ஹைதராபாத், விசாகப்பட்டினம், பரோடா, சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள், சிற்பம் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.’’ என்றார்.
பூங்கா பராமரிப்புப் பணி, வண்ணம் பூசும் பணி ஆகியவை முழுமையாக நிறைவடைந்தால், பூங்கா புதுப் பொலிவுபெறும்.

No comments:

Post a Comment