Monday 5 June 2017

மாதம் ரூ.20,000 உதவித்தொகையுடன் மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை முதுநிலைப் பட்டயப்படிப்பு படிக்க வாய்ப்பு!!!


மாதம் ரூ.20,000 உதவித்தொகையுடன் மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் படிக்கலாம்!

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் கூட்டாண்மை நிறுவனமாகச் செயல்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நிதியுதவியுடன் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் ‘மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை’ (P.G.Diploma in Metro Rail Technology and Management) எனும் ஓராண்டுப் பட்டயப்படிப்பு அறிமுகமாகியுள்ளது. இந்த முதுநிலைப் பட்டயப்படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. 

கல்வித்தகுதி
விண்ணப்பிக்க ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பொறியியல் (Civil Engineering) பட்டப்படிப்பில் (BE / B.Tech) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கூட்டு மதிப்பெண்களாக (Aggregate Marks) 70% தேவை. விண்ணப்பிப்பவர்கள், GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களின் வயது 4-7-2017 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத்தளர்வு உண்டு. 

விண்ணப்பப் படிவம்
http://chennaimetrorail.org/ எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கி, விண்ணப்பப் படிவத்தை நிரப்பித் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் உறையின் மேல் “Application for PG Diploma Course” என்று குறிப்பிட்டு “The Course Coordinator, CMRL Sponsored PG Diploma Course, Department of Civil Engineering, IIT Madras, Chennai - 600036” எனும் முகவரிக்கு 4-7-2017 ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பித்தரவேண்டும். 

மாணவர் சேர்க்கை 

விண்ணப்பதாரர் பொறியியல் தகுதித் தேர்வு (GATE) மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தகுதியுடைய மாணவர்கள் பட்டியல் ஒன்று தயார் செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். அதன் பின்னர், இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உடற்தகுதிச் சோதனைக்குப் பிறகு இறுதியாகச் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.

பயிற்சி 

மாணவர்களுக்கு மாதம் ரூ. 20,000/- உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் பயிற்சிக் காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயிற்சி அதிகாரிகளாகவும் இருப்பார்கள். ஓராண்டு படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஐந்தாண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில், ரூ.40,000/- மாதச்சம்பளத்தில் ‘உதவி மேலாளர்’ பணியில் சேர்க்கப்படுவார்கள். 5 ஆண்டு நிறைவுக்குப் பின்பு இப்பணியிட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வாய்ப்புண்டு.    

கூடுதல் தகவல்களுக்கு மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம். சென்னை, கோயம்பேட்டிலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவகத்திற்கு நேரில் சென்றோ அல்லது நிறுவனத்தின் 044 - 23792000 எனும் தொலைபேசி எண்ணிலோ chennaimetrorail@cmrl.in எனும் மின்னஞ்சல் வழியிலோ தொடர்பு கொள்ளலாம். 


தொகுப்பு  : மு .அஜ்மல் கான்.

No comments:

Post a Comment