Tuesday 31 July 2018

ஹெல்மட் விஷயத்தில் ஏன் கடுமையாக நெருக்கடி ??

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே! 
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. …
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. …
No automatic alt text available.குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா….
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ….
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா….
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 – 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா…
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்…
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்குமமேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே…
ஹெல்மெட்_அணிவதால். …
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது…
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே…
மீத்தேன் ஹை கார்பன் நீயூட்ரினோ இவையெல்லாம் எதற்காக .?
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். …
இப்பொழுது சொல்லுங்கள் ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்….

Monday 30 July 2018

சீரகத்தை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்...!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
Image may contain: foodஅந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.


சீரக தண்ணீர்
..............................
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
சீரகப் பொடி மற்றும் தேன்..
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

மருத்துவக் குணங்கள்:
  1. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து  சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீரூக்கு உண்டு.
  2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
  3. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
  4. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
  5. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட  இதைச் சாப்பிடலாம்.
  6. உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
  7. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
  8. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
  9. அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டியை பொடித்து சாப்பிட்டால் மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
  10. சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
  11. சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  12. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி நலம் பயக்கும்.
  13. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
  14. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
  15. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடக்கும்.
  16. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
  17. சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
  18. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
  19. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
    .

ஆற்றின் நடுவில் மண்டபம் ஓரு வெள்ள அபாய எச்சரிக்கை !! ஒரு தவகல்..

வைகை  மற்றும் தாமிரபரணி ஆற்றின் மையத்தில் பலர் பார்த்து இருக்கலாம். ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..?  
ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!
Image may contain: outdoor, water and natureநவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.
இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..?
தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.
அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்....
இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.
வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.
சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..
பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. அரசும் இது எதற்கு என புதுபிக்க மறந்துவிட்டதா..?
ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது..
இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..
ஆனால் உண்மையில் அறிவியலுக்காக..

தொகுப்பு : அ. தையுபா  அஜ்மல்.

Thursday 26 July 2018

நீட் இல்லாத கல்வி தரமற்றதா? ஒரு அலசல்..


 நாம் வாசித்தே ஆக வேண்டிய இந்த  பதிவு.
'12 x 10 = 120 என்று சமச்சீர் கல்வி மாணவர்கள் படித்திருப்பார்கள்.
அதே கணக்கை நீட் தேர்வில், 
0.12 x 10 = ?
0.12 x 0.01 =?
120 / 0.012 =?
என்று கேட்பார்கள். மேலே இருக்கும் கணக்கு 12 x 10 = 120 நேரடியானது.
neet 2018 க்கான பட முடிவுகீழே கேட்டிருக்கும் கணக்குகள் கொஞ்சம் சுற்றிவிடுவது. மேலே இருக்கும் கணக்குத் தெரிந்தவர்களுக்குக் கீழே இருக்கும் கணக்குத் தெரியாது என்றில்லை. அந்தப் பயிற்சியை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள். இந்தக் கீழே உள்ள கணக்கைத்தான் மற்றவர்கள் தரம் தரம் என்கிறார்கள்.
மேலே உள்ள கணக்கைப் புரிந்து கொள்வது அடிப்படை அறிவாகும். கீழே இருக்கும் கணக்கைப் போடுவது ஒரு பயிற்சிதான்.
முதலில் உள்ள கணக்கான 12 x 10 = 120 என்பதைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம். அதுதான் அடிப்படை.
அந்த அடிப்படையைச் சமச்சீர் கல்விப் புத்தகங்கள் தேவைக்கு அதிகமாகவே கற்றுக் கொடுக்கின்றன.
கீழே உள்ள பயிற்சிமுறை இருக்கிறது பாருங்கள். அதாவது,
0.12 x 10 =?
0.12 x 0.01 =?
120 / 0.012 =?
என்று இருக்கிறதல்லவா? இது மாதிரி கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். யார் ஒருவனையும் இதை வைத்துத் திணறடிக்கலாம்.
பிளஸ் டூ ஃபிஸிக்ஸ் மற்றும் சமச்சீர் கெமிஸ்டரி புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். இரண்டுமே தலா 500 பக்கங்கள் இருக்கின்றன. சி.பி.எஸ்.ஸி பாடத்தில் உள்ள அனைத்து பாடங்களும் சமச்சீரிலும் இருக்கின்றன.
இவர்களுக்கும் 'நீட்'டுக்கும் உள்ள வித்தியாசம் 'நீட்'டுக்குள்ள பிரத்யோக பயிற்சிதான்.
நீட் தேர்வு இருக்கும் பட்சத்தில் ஒரு மாணவன் அவன் பாடப்புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதே சமயம் இந்த நீட் பயிற்சியையும் எடுக்க வேண்டும்.
Objective type என்ற choose the best answer வகைக் கேள்விகளுக்கு... அதாவது, நான்கு விடைகளைக் கொடுத்து அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் முறைப் படிப்புக்கு, கடைசிப் பத்து வருட கேள்வித் தாள்கள் இருந்தால் போதும்.
நான் பிளஸ் டூ படிக்கும்போது நுழைவுத் தேர்வு உண்டு. ஒரு கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் நான் புத்தகத்தை எடுத்து விளக்கமாகப் படிக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் மற்றவர்கள், இந்தக் கேள்விக்கு இது விடை என்றுதான் படிப்பார்கள். அதுதான் அத்தேர்வுகளை crack செய்யும் முறையும் கூட.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
Distillation Process என்று ஒன்று இருக்கிறது. ஒரு குடுவையில் நீரை வைத்து கீழே சூடாக்கினால் அது நீராவியாகி ஒரு குழாய் வழியே போகும். அப்படிப் போகையில் குழாயை குளிர வைக்கும்போது, அது குழாயின் மறுமுனையில் இருக்கும் பாத்திரத்தில் கிருமியில்லாத நன்னீராகச் சென்று விழும்.
இந்தக் கேள்வியை descriptiveவாக, அதாவது நம் பிளஸ் டூ தேர்வு முறையில் எழுதச் சொன்னால் ஒரு மாணவி என்ன செய்வாள்?
பென்சில் ஸ்கேல் வைத்து அதற்கொரு படம் போடுவாள். அதைக் குறிப்பாள். அதற்கான விடை எழுதுவாள். இப்படிச் செய்யும்போது அவள் அடிப்படை அறிவு விரிவடையும் வரும்.
இதே உதாரணத்தில் objective type கேள்வி கேட்டால் எப்படிக் கேட்க முடியும்?
Distillation Processஇல் என்ன நடக்கிறது?
a. திரவம் வாயுவாகிறது.
b. வாயு திரவமாகிறது.
c. வாயுவான திரவம் திரவமாகிறது.
b. மூன்றும் இல்லை.
இங்கே கவனியுங்கள். மேலே descriptiveவாக distillation processஐ நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் கூட, கீழே உள்ள இந்த objective type தந்திரத்தில் குழம்பி விடுவார்கள்.
இதற்குச் சரியான விடையான 'வாயுவான திரவம் திரவமாகிறது' என்ற விடையைச் சட்டென்று அவர்களால் அடையாளம் காணமுடியாது. உடனே அக்குழந்தைக்கு distillation process தெரியாது என்று அர்த்தமல்ல.
அதே சமயம் நீட் தேர்வுக்கென்று பயிற்சி எடுத்த மாணவி இக்கேள்வி patternஇல் நிறையக் கேள்விகளைப் பார்த்து வரும்போது அவள் சட்டென்று பதில் எழுதிவிடுவாள். அதில் மார்க் எடுக்கும்போது அவள் அறிவாளி என்பது மாதிரி ஆகிவிடுகிறது.
ஒருவேளை choose the best answer இல்லாமல் விரித்து எழுதும் தேர்வு இருந்தால், தமிழக மாணவர்கள் நிச்சயம் பலரைவிட நன்றாகவே மிளிர்ந்திருப்பார்கள்.
உங்களுக்கு இப்போது கேள்வி வரலாம்.
நீட் தேர்வு என்பது objective type தந்திரம் என்கிறாய்... இந்தத் தந்திரத்தை தமிழ்நாடு அரசே சொல்லிக் கொடுத்து விடவேண்டியதுதானே என்று சந்தேகம் எழலாம்.
ஏன் இந்த objective type தந்திரம் நீட்டுக்கு அதரவு கொடுக்கக் கூடாதென்றால்...
1. Objective type தந்திரத்துக்கு எல்லையே கிடையாது. கேள்வி கேட்பவரின் அறிவு சைக்கோதனத்துக்கு ஏற்றால்போல் அதைச் சுற்றிச் சுற்றி கேட்கலாம். பிளஸ் டூ தமிழ்நாடு என்டிரன்ஸில், அண்ணா பல்கலைக்கழகக் கணித பேப்பர் அப்படித்தான் இருக்கும். அங்கேதான் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கணித வாத்தியார்கள் தங்கள் அறிவை மெனக்கெட்டு காட்டி சுற்றி சுற்றி கேள்வி கேட்டிருப்பார்கள். சரியான பயிற்சி எடுக்காத 80 சதவிகித கிராமப்புற மாணவர்களால் அதை நெருங்க கூட முடியாது. நான் Engineer. என்னிடம் ஒரு நீட் கொஸ்டின் பேப்பர் எடுக்கச் சொன்னால் இந்தியாவில் எந்தப் பயிற்சி பள்ளியில் படித்தவனாலும் நல்ல மார்க் எடுக்க முடியாத கொஸ்டினை எடுக்க முடியும். இதைச் சவாலாகவே சொல்கிறேன்.
2. ஆக நீட் தேர்வு வருடா வருடம் போகப் போக இந்த objective type தந்திரம் கூடிக்கொண்டே போகும். மாணவர்கள் சப்ஜக்டை விரித்துப் படிப்பதில் இருந்து விலகி objective type ஸ்டைலிலேயே படிப்பார்கள். முற்றிலும் விஞ்ஞானத்தில் இருந்து விலகி இருப்பார்கள்.
3. கல்வியை ரசனையாக ரசித்துப் படிக்க முடியாத சூழல் வரும். Diagrams, figures சுத்தமாகப் படிக்க மாட்டார்கள். ஒரு படம் வரைவதையே மாணவன் கடுப்பாக நினைப்பான். எப்படிப் பிளஸ் டூ மாணவன் தமிழ் மனப்பாடப் பகுதியை படிக்காமல் இருக்கிறானோ அப்படி அவன் விரித்து எழுதுவதில் வந்து சேரும் அறிவை நிராகரிப்பான்.
4.நீட் தேர்வு பயிற்சி வகுப்பை கிராமப்புறத்துக்கு எடுத்துச் சென்று அது செட் ஆக எடுக்கும் நான்கு ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
5.Objective type விடைகளைத் திருத்த எளிது என்பதற்தாக அதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அது கேடான முறைதான்.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால், சமச்சீரில் நல்ல மார்க் எடுத்தவர்கள், நீட்டில் மார்க் குறைவு என்றதும், சமச்சீரில் தரமில்லை என்று உங்கள் மூளை நினைத்துவிடக் கூடாதே என்று சொல்கிறேன்.
சமச்சீர் சரியில்லை என்று சமச்சீர் எடுக்கும் ஆசிரியர்களே நினைத்து விடக் கூடாதே என்று எழுதுகிறேன்.
இதையெல்லாம் தாண்டி அனிதாவின் மனதை நினைத்து நேற்றிரவு ஒருமாதிரி இருந்தது.
நீட் தேர்வு எழுதி வரும்போது அந்தப் பிள்ளைக்கு 'நாம அறிவுல குறைந்துவிட்டோமோ, நல்லா எழுதலியே' என்று கலங்கியிருக்கும் பாருங்கள். நீட் மார்க் வரும்போது அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திருக்கும் பாருங்கள். அந்த விநாடி அனிதாவின் மனதைப் பாருங்கள். எப்படி அவள் மனது பிசைந்திருக்கும்.
ஒரு திறமைசாலியை ஒரு தந்திரத்தைக் காட்டி 'நீ திறமைசாலி இல்லை... புத்திசாலி இல்லை...' என்று பொய்யாக நிருபித்து , அவளையே 'நாம் சரியில்லையோ' என்று நினைக்க வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை.
தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Thursday 19 July 2018

தைராயிடு நோயுள்ளவர்கள், நமக்கு நாமே நிரந்தரத் தீர்வு காணலாம் !!

Image may contain: textதைராயிடு நோய் கழுத்தில் ஏற்படுகின்றது. மருத்துவ உலகம் உடல் பருமன் தைராயிடு நோய்க்குக் காரணம் எனக் கூறுகின்றது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. 
ஆனால், உண்மையில் சமைத்துண்ணும் பழக்கத்தால் தான் உடற்பருமன் ஏற்படுகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. நரை, திரை, மூப்பு, சாக்காடு என எல்லா பிரச்னைகளும் அதனால் ஏற்படுகின்றது.
எந்நோய்க்கும் அறுவை சிகிச்சை அவசியமே இல்லை எனக் கூறுகின்றது இயற்கை உலகம். மேலும் மனிதருடைய அனைத்துநோய்களையும் ஒரே நேரத்தில் குணப்படுத்துவதும் இயற்கைதான். எந்த மருத்துவமும் எந்த நோயையும் குணப்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக, ஒரு நோய்க்கு மருந்து சாப்பிட்டுவிட்டுப் பல நோய்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.
தைராயிடுக்கு மட்டுமல்ல, புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய், மூல நோய், குடலிறக்கம் ஆகிய பல நோய்களுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் உயிர் வாழவே இயலாது என மருத்துவ உலகம் கூறும். அதற்கு இயற்கையின் பேராற்றல் தெரியாது. பாமர நோயாளிகளை அச்சுறுத்தி, பண விரையம் செய்ய வைத்து நிரந்தரத் தீர்வு இல்லாது செய்து வருகின்றது; ஆனால், இயற்கை உலகம் எந்த வித நோய்க்கும் அறுவைச் சிகிச்சையும் தேவையில்லை. மாற்று உறுப்புப் பொருத்தவும் தேவையில்லை. பண விரையமும் வேண்டாம். எளிதில் விரைவாக நிரந்தரத் தீர்வு காணலாம். ஸ்கேன், எக்ஸ்ரே, மற்றும் எத்தகைய மருத்துவப் பரிசோதனையும் தேவையே இல்லை எனக் கூறி வருகின்றது.
ஆதலால், தைராயிடு நோய் உள்ளவர்கள் எந்த மருத்துவத்தையும் அணுக வேண்டாம். எந்த மருந்தையும் நம்ப வேண்டாம். அறுவைச் சிகிச்சையும் செய்ய வேண்டாம். மீறி எது செய்தாலும் நிரந்தரத் தீர்வு நிச்சயம் காண முடியாது. ஆனால், இயற்கையை முற்றிலும் நம்பி, மனதார அணுகினால், எவ்வித மருத்துவமின்றி, அறுவைச் சிகிச்சையும் இன்றி, பணச் செலவும் இன்றி, எளிதில் நமக்கு நாமே நிரந்தரத் தீர்வு காணலாம். நோய், மருந்து, மருத்துவம், மருத்துவப் பரிசோதனை ஆகிய சொற்களை, செயல்களை மறந்து, நிம்மதியாக ஆனந்த ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

தைராயிடு நோயுள்ளவர்கள் மூன்று வேளை சமைத்துண்ணும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். சமைக்காமல் பச்சையாக உண்ணும் பழக்கத்திற்கு மாற வேண்டும். அதாவது இரவு மட்டும் தேவையான தேங்காயை சில்லாகவோ, அல்லது தேவையான தேங்காயை சில்லாகவோ, அல்லது துருவியோ உண்டபின், தேவையான பழ வகைகளை தேவையான அளவு, கிடைக்கும் பழ வகைகளை, ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக மென்று, ரசித்து, ருசித்து, ஆற அமர உண்ண வேண்டும். மற்ற காலை, மதியம் இருவேளை உணவாக சமைத்த சைவ உணவு, அளவாக, அரை வயிறு உண்ண வேண்டும். பதினைந்து முதல் முப்பது நாட்கள் கழித்து, காலையும், இரவும், சமைத்த உணவுகளைத் தவிர்த்து, குளிர் சாதனப் பெட்டியில் வைக்காத தேங்காயும், பழ வகைகளையும் தேவையான அளவு உணவாக உண்ண வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் சமைத்த சைவ உணவு அளவாக உண்ண வேண்டும்.
அடுத்ததாக தைராயிடு நோய் குணமாகும் வரை, தினம் காலை மாலை இரு வேளைகளாவது எனிமாக் குவளை மூலம், பச்சைத் தண்ணீர் கொண்டு எனிமா எடுத்து வர வேண்டும். மூன்றாவதாக, தினம் இருவேளை (முற்பகல், பிற்பகல்) கழுத்தைச் சுற்றி முப்பது நிமிடங்கள் மெல்லிய ஈரத்துணியைப் போட்டு வரவும். அல்லது பசைபோல் ஒட்டும் செம்மண், களி மண், சட்டிப்பானை செய்யும் மண், வண்டல்கள், குளக்கரம்பை மண், சந்தனம் பூசுவது போல் பூசி நன்கு காய்ந்த பின், தண்ணீர் கொண்டு கழுவி விடலாம். வாரம் ஒரு முறை உடல் முழுவதும் மண் குளியல் போட்டு வரலாம்.
தினம் அர்த்த சிரசாசனம் செய்து வரலாம். எட்டு நடைப் பயிற்சி செய்து வரலாம். கழுத்துப் பயிற்சி செய்து வரலாம். மூச்சுப் பயிற்சி, தியானம் செய்து வரலாம். மனம் சாந்த நிலையில், அமைதி நிலையில் காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறாக மருத்துவத்தை சாராது, நமக்கு நாமே எளிய இயற்கை வழியைப் பின்பற்றி தைராயிடையும் தவிர்த்துக் கொள்ளலாம். உடல் பருமனையும் குறைத்துக் கொள்ளலாம், உறுதியாக!
பின்குறிப்பு
காபி, டீ, குளிர் பானங்கள், வெந்நீர் போன்ற அனைத்து செயற்கை பானங்களையும் தவிர்த்து, பச்சைத் தண்ணீர், இளநீர், தேங்காய் தண்ணீர், தேன் கலந்த பச்சைத் தண்ணீர், எலுமிச்சை, நெல்லி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை மற்றும் இதர பழங்கள் போன்ற பழச்சாறுகள் ஆகிய இயற்கை பானங்கள் அருந்த வேண்டும்;
தினமும் எண்ணெய் கொப்பளித்து வரலாம். உப்பு, வெள்ளைச் சர்க்கரை கலப்பதைத் தவிர்த்து இயற்கை பானங்களை அப்படியே அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மாத்திரை, மருந்துகள் உட்கொள்வதை வாழ்கையில் தவிர்க்கலாம்.
தொகுப்பு : அ . தையுபா அஜ்மல்.

Behavior-based safety (BBS) with 8 Steps to Building a Successful Program !!

 



Behavior-based safety is a process that reveals to management the overall safety of a workplace. Established to increase control and manageability in industrial settings, BBS strives to focus on workers’ attention on their own and their peers’ daily safety behavior. BBS mandates that management and employees alike consistently focus attention and action on their own daily behavior to keep facilities safe.

When BBS goes as planned, employees are more engaged in their safety and more willing to take responsibility for their safety-related behavior. They’re also able to hold their peers accountable when unsafe practices occur. The result is a workforce that is acutely aware of safety protocols and is actively working to stay safe.




Behavior-Based Safety Beginnings

BBS owes its beginning to Jim Spigener, who at the time of BBS’s conception was vice president of BST, INC. Dissatisfied with the lack of progress and ingenuity in industrial safety concepts, Spigener’s intention was for BBS to become another component in his organization’s safety program.

Spigner wanted to increase the effectiveness of safety programs. Since most safety concepts and strategies focus on engineering and administrative controls, Spigner thought these controls were forgetting a crucial factor in workplace accidents: people. Sure, machines can shut themselves down when a sensor goes off, but no machine can monitor the reckless habits of workers. Administrative controls like signs, floor markings, and labels only work when teams are being mindful of rules. Without people being accountable for safety, safety problems would always plague the workplace. This was the way BBS approached the problem of safety.

With the help of the science of behavioral change, Spigner created system-focused BBS, which seeks to find, then reduce or eliminate exposures that lead to accidents and injury by improving the systems that make up a facility’s operations. The surface causes of these incidents are usually obvious, but knowing the surface cause will not typically stop the incident from happening again. The best way to prevent an incident from repeating itself is to utilize behavior-based safety(BBS), which examines the overall safety of your workplace.


Every safety leader can agree that the #1 priority of any EHS program is to reduce workplace risk. Yet, one thing that continues to keep the community divided is the effectiveness of behavior-based safety programs.

Even though behavior-based safety has a bad rap in some safety circles, when it’s done well, the results are undeniable. BBS can significantly lower risk and help eliminate workplace incidents. But, like with any other HSE program, unlocking the full benefits depends upon a successful implementation. In this post, we’re going to walk through eight simple steps you can take to build a behavior-based safety program that sticks.

Step 1: Secure support and Pick Your Behavior-Based Safety Team

 

To ensure the success of any new safety program or process, securing management commitment and buy-in at the front-line worker level is critical. Without everyone on the same page and aligned on program goals, your BBS initiative is likely to fail. During the program planning stage, assemble a team of A-players that are already familiar with behavior-based safety to assist you with program design and determining measures of success.

Step 2: Collect and Review EHS Data

 

Safety departments capture so much critical data and yet far too much of it goes underutilized. Be sure to review and analyze all data collected during safety audits and inspections to help determine which tasks and jobs pose the greatest risks. Data analysis will help reveal areas for improvement as well as help uncover new trends to investigate further.

Step 3: Create a Critical Behavior Checklist

 

After a complete data review, you should be able to clearly identify risky behaviors that have contributed to past incidents, and those that have the potential to cause future harm. Next, create a checklist that details all required behaviors to complete specific jobs. Your checklist will then be used by supervisors during observations to log safe and unsafe behaviors.

Step 4: Track and Measure Behavior

 

Implement a simple measurement system to effectively track and calculate the frequency of both safe and risky actions employees take during behavior observations.

Step 5: Conduct Behavioral Observations

 

Decide which members of your behavior-based safety team will be conducting the observations and decide how often they are to be completed. Depending on your organization’s environment and the risk severity of the job, observations should be conducted on a monthly, weekly or daily basis. During a behavioral observation, the observer will record positive behaviors, risky behaviors and make note of areas for improvement.

Step 6: Give Feedback

 

After a completed observation, the supervisor should immediately give feedback to employees and review their behavior in detail. Feedback should cover positive and at-risk behaviors, as well as discuss the potential impact of risky behavior.


Step 7: Leverage Your Data

 

Use your findings to your advantage to create a data-driven safety strategy to mitigate future risk. This should include addressing and eliminating at-risk behaviors by promoting new, safe behaviors. Your data should also help inform your program’s continuous improvement goals.

Step 8: Measure Success and Continuously Improve

 

Working towards continuous improvement means regularly testing and reflecting on the effectiveness of your behavior-based safety program to keep making positive progress. After reviewing results on a monthly basis, consider making program tweaks and process adjustments as needed.

Prepared By M.Ajmal Khan.

Wednesday 18 July 2018

இன்னும் 40 - 50 வருடங்களில் வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் தமிழகம்!!! ஒரு சிறப்பு பார்வை..

Image result for வடநாட்டுக்காரனுடன்

வடநாட்டுக்காரனுடன் அதிகம் உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல். பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம்,  தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின் நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின் செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும் தற்போது பரவலாக தமிழகத்தில் சொத்துக்களையும் வாங்குகின்றனர்.இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக மாறிடுவான். தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர் அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள தமிழ் மண்ணை வாங்குங்கள். வட நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.

இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கடந்து விட முடியாது.

சங்பரிவார் கூட்டம் காலூன்ற முடியாத தமிழகத்தில்
வட இந்தியர்களை குடியேற்றி வாக்காளர்களாக்கி வெற்றி பெற சதித் திட்டம் தீட்டுகிறது.

மார்வாடிகள் இல்லாத ஊர் என்று பார்த்தால் சின்னஞ்சிறு கிராமமாக மட்டுமே இருக்க முடியும்? நகர்ப்புற பகுதிகளில் வளையல் கடை, பிளாஸ்டிக் கடை,பேன்சி கடை, துணிக்கடை, நகைக்கடை என்று தங்களின் வியாபார யுக்திகளை கையாள்வதின் மூலம் பாஜகவையும் சேர்த்தே அவர்கள் வளர்க்கிறார்கள்.

இந்த மார்வாடிகளிடம் வியாபாரம் செய்வதை தமிழர்கள் நிறுத்தினால் போதும். அவர்கள் தானாகவே தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.

மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம். இப்படித்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்கள்.இன்னும் விழிக்க வில்லை என்றால்... தமிழ் நாடு, தமிழர் நாடாக இல்லாமல் போய் விடும்...

மிக மிக முக்கியம்...

வடக்கில் இருந்து வருகிறவர்கள் இரண்டு வகையினர்..

வணிக நோக்கில் வரும் மார்வாடி, பனியாக்கள்.. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தோர்...

கூலி வேலைக்கு வரும், கிழக்கு மாநிலத்தோர்...

மொத்தத்தில் இந்த இரண்டு வகையான வடக்கர்களும் துரத்தப்பட வேண்டும்...இன்னும் விழிக்க வில்லை என்றால்... தமிழ் நாடு, தமிழர் நாடாக இல்லாமல் போய் விடும்...

உண்மை. கவலைப்பட வேண்டிய யோசிக்க வேண்டிய இடம் இது.கண் முன்னால் பறிகொடுக்கிறோம்.

Wednesday 11 July 2018

நீராதாரங்களைப் பாதுக்காக்கத் தெரியாத முட்டாள்களா தமிழர்கள் ?



வருடம் கி.பி.2166.








மூன்று கொரியா வெளிநாட்டுப் பயணிகள்........ சோங் , கிம் மற்றும் சோய்  என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  

சோங் முன்னார், கேரளா சுற்றுலாத் தலத்தில் தங்கி இருக்கிறார். அங்கிருக்கும் சுற்றுலா மேலாளரிடம் கேட்கிறார். அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்ன ஊர் இருக்கிறது? அங்கு போகலாமா? என்று. மேலாளர் சொல்கிறார். அந்த மலையில் கடைசி ஊர் "குமுளி" அதற்கப்பால், மலைச்சரிவு முடியும் இடத்தில் The Great Tamilian Desert தொடங்குகிறது. அங்கிருந்து முன்னூறு கி.மீ. தூரத்தில் கடல் வந்து விடும்.....
"இடையே ஒன்றுமில்லையா" என்று சோங்  கேட்கிறார். "இல்லை சார் வெறும் புதர்ப் பாலைவனம்...."
"அங்கு மக்களே வாழவில்லையா ?.- சோய் 
"இருந்தார்கள் ஒரு நூற்றைம்பது வருடம் முன்பு,,,,அங்கே பத்தாயிரம் வருடத்திற்கு மேற்பட்ட ஒரு மேலான நாகரிகம் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்...... அங்கே எல்லா நதிகளும் வறண்டதால், பாலைவனமாகி விட்டதனால், வேறு வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்து விட்டார்கள்"
"ஓ ! நீராதாரங்களைப் பாதுக்காக்கத் தெரியாத முட்டாள்களா............ அப்புறம் எப்படி "மேலான நாகரிகம்" என்று சொன்னீர்கள்?"
சிரித்தபடியே, பியரை எடுத்து உறிந்து hammock இல் ஆட ஆரம்பித்தான் சோங் 
கிம், பாலக்காட்டில் ஒரு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்தான். அவனும் தன் Relationship Manager உடன்  சோய் போலவே ஒரு பேச்சை நிகழ்த்தினான்.
அப்படியே நெல்லூருக்கு வந்திருந்த சோய்வும் இதற்கும் தெற்கே என்ன இருக்கிறது என்று கேட்டு... வந்த பதிலுக்கு அப்படியே பேச்சை நிகழ்த்தினாள்...........
இப்படி ஒரு கெட்ட கனவிலிருந்து நான் விழித்தேன் என்று பொய் சொல்ல மாட்டேன்.
இன்றைய தமிழ்நாட்டின் நிஜம் அங்கேதான் சென்று கொண்டிருக்கிறது.
யார் காப்பாற்ற முடியும்?
ஆளுபவர்களா? அரசியல்வாதிகளா? அரசா? - இவர்கள் அல்லது இவைகள் என்றும் எதையும் "ஆக்கியதாக" வரலாறு இல்லை.
மக்களாகிய நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும், காவிரி, முல்லைப் பெரியார், பாலாறு போன்ற நிகழ்வுகளில் மட்டும் பொங்கி விட்டு அத்துடன் அவரவர் நிஜ வாழ்க்கைக்கு திரும்பக் கூடாது.
தமிழகத்தின் தண்ணீர் எதிர்காலம் ஏற்கனவே ஒரு பாலைவனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.....
நாளைய நம் குழந்தைகளுக்காக, இன்று நாம் என்ன செய்யப் போகிறோம் ?
எப்போது, எப்படி, யார் யார் என்றெல்லாம் விவாதித்து முடிவு செய்து காரியத்தில் இறங்க வேண்டும்....
இந்தப் பதிவு மூலம், செயலாற்ற ஒன்று சேருங்கள்; 
அதற்காகவே இந்தப் பதிவு !!! 

Tuesday 10 July 2018

2018 நீட் தேர்வு முடிவுகள்:தமிழகத்தின் பாதிப்புகள் !!


Image result for NEET


896 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 5 அரசுப்பள்ளி மாணவர்கள்...


2018ல் தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை..
`நீட்’ தந்த பரிசு!..


சமூகநீதியை குழி தோண்டி புதைத்தது நீட்.


நீட் தேர்வால் யாருக்கு பாதிப்பு அதிகம்..


1. வசதியான குடும்பத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் (மாநில பாட திட்டத்தில்) பள்ளியில் படித்த மாணவர்கள் - கொஞ்சம் பாதிப்பு

2. வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்த மெட்ரிகுலேஷன் (மாநில பாட திட்டத்தில்) பள்ளியில் படித்த மாணவர்கள் - அதிகம் பாதிப்பு

3. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் - மிக அதிகம் பாதிப்பு

4. கிராமப்புற மாணவர்கள் - மிக மிக அதிகம் பாதிப்பு

5. கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் - மிக மிக மிக அதிகம் பாதிப்பு.

6. பொருளாதாரத்தில் மிகவும் அடி நிலையில் இருக்கும் கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்கள் - மிக மிக மிக மிக அதிக பாதிப்பு.. கொடூரமான பாதிப்பு.. கனவு கூட காண முடியாது.ஏழ்மையிலும் போராடி படித்து நல்ல மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா, நீட் கொடுங்கரத்துக்கு தம்மையே ஆகுதியாக்கி முதல் பலியாகிப் போனார். அனிதாவைத் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தியவர்கள் கொடுத்த உளைச்சலில் தமிழகத்தில் உயிர் பலி தொடர்ந்தது.


மேலே சொன்னதில் எந்த ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அதே பாதிப்பு தான்.


ஒரு சின்ன உதாரணம்.. நான் கிராமபுறத்தில் அரசு பள்ளியில் படித்து இன்று மாதம் லட்சக்கணக்கில் வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை(நான் சொல்லல... சமுதாயத்தில் அழைக்கப்படும்) சேர்ந்தவர்.. சென்னையில் எனது மகன் ஒரு CBSE பள்ளியில் வருடம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கட்டி படித்து வருகிறான்.. அவன் இப்போது 7ம் வகுப்பு.. அவனுக்கு நீட் நல்லதா?? ஆம்.. அவன் ஒரு சிறந்த (என்று கூறப்படுகின்ற) CBSE பள்ளியில் படிக்கிறான்.. என்னால் அவனுக்கு வருடத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து 8ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை "NEET" கோச்சிங் அனுப்ப முடியும்.. "Best CBSE school + Best NEET coaching".. அதனால் எனது மகனால் எளிதில் அந்த தேர்வில் வெற்றி பெற முடியும்.. நான் பிற்படுப்பட்ட சமூகமாக இருந்தாலும் எனக்கு நீட் நல்லது தான்..


ஆனால் என்னோட உறவினர்கள் எல்லோரும் இன்னும் அதே கிராமத்தில் தான் இருக்கிறார்கள்.. அவர்கள் குழந்தைகள் அதே கிராமத்து அரசு பள்ளியில் தான் படித்து வருகிறார்கள்.. அதில் நிறைய குழந்தைகள் எனது மகனை விட மிகவும் திறமை மற்றும் அறிவு உடையவர்கள்.. ஆனால் எனது பையனுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்பிருக்கும் மருத்துவ இடம் அவர்களுக்கு கனவில் கூட கிடைக்காது.. இதே மாணவர்கள் பழைய முறையில் தேர்வு எழுதினால்.. எனது மகனை விட அதிக மதிப்பெண் பெற்று அவர்களுக்கு அந்த இடம் கிடைக்கும்..


நான் படித்த அரசுப்பள்ளியில் படித்து கடந்த 20 வருடமாக (2016க்கு முன்) ஒருவராவது மருத்துவதுறைக்கு சென்று விடுவார்கள்.. அவர்கள் எல்லோரும் இன்று தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவர்கள்.. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அது முடியவில்லை.. இனியும் முடியாது... இதை தான் நீட் செய்தது..


எனது பையனுக்கு நீட் நல்லது என்று அதற்க்கு நான் சப்போர்ட் செய்தால்.. என்னைப்போல் கொடூர மனம் கொண்டவர்கள் யாரும் இருக்க முடியாது..


காலம் காலமாக வசதியாக நகர்புறத்தில் வாழ்ந்துவரும் மக்கள் சமூக நீதி பற்றிய அறிவு இல்லாமல் பேசுவதற்கும்.. சமூகத்தின் நிலையை நன்கு அறிந்து ஆனாலும் தனக்கு எது நல்லது என்று மட்டும் யோசிச்சு அதற்க்கு முட்டு கொடுக்கும் மக்களால் தான் சமூக நீதிக்கு அதிக பாதிப்பு..


"நீட்" போன்ற நுழைவு தேர்வுகளை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் விளைவுகள் அதிகம்..

நீட் வெற்றி என்பது 11 & 12 லில் எடுக்கும் பயிற்சி அல்ல நண்பர்களே, அது கல்வியின் தொடக்கம் முதல் நம்மோடு பயணிக்க வேண்டிய கலாச்சாரம். நம் பள்ளி கல்வியின் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். ஆண்டுக்கு பல லட்சம் பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு தேசம், வெறும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களை இடை நிலை ஆசிரியர்களாக அனுமதித்து எப்படி கல்வி கண்ணை ஊனமாக்கும்?. 25 ஆயிரத்திற்கும் மேல் சம்பளத்தை அள்ளி கொடுக்கும் அரசு, இதை யோசிக்க வேண்டாமா?. தொலை தூர கல்வியில் PG , படித்தவர்கள் எப்படி 12 ஆம் வகுப்பு எடுக்க முடியும்?. இது மாணவர்களுக்கு அரசு செய்யும் துரோகம் அல்லவா?. இதை ஏன் யாரும் பேசுவது இல்லை?. யோசியுங்கள் makkale?



கமெண்ட்டில் "நீட்" தேர்வு முறை எவ்வளவு பாதிப்பானது என்பது பற்றிய பதிவு 


முதலில் என்னைப் பற்றி சொல்லிக்கொள்கிறேன்.

நான் பன்னிரண்டாம் வகுப்பில் 89.3 விழுக்காடு பெற்றேன். அந்த வருடமே நீட் தேர்வை எழுதினேன். அந்த வருடம் தான் நீட் தேர்வை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். அந்த வருடம் வெறும் Ncert biology மட்டுமே படித்திருந்தேன்.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் : 88,000

என்னுடைய தரவரிசை எண்(rank) : 8028

தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் கிடைத்தது. ஆனால் நான் செல்லவில்லை.

அதே ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சில் சேர்ந்தேன். பயிற்சிக்கு செல்லும் அளவிற்கு பண வசதியும் இல்லை.

நீட் தேர்வுக்கு பயன்படும் புஸ்தகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதனால் pdf வடிவில் உள்ள புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். இரண்டிற்கும் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள் : 1,13,000

என்னுடைய தரவரிசை எண்(rank) : 7300

இந்த முறையும் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.

இப்போது கேள்விக்கு வருகிறேன்.

கேள்வி பாகம் 1 : ஆம், கடினமானது.

கேள்வி பாகம் 2 : ஆம், பயிற்சிக்கு செல்லாமலும் வெற்றி பெற முடியும். ஆனால் மருத்துவ சீட் பெரும் அளவிற்கு முடியாது.

விளக்கம்:

Biology : படிக்க மிகவும் எளிது மற்ற இரண்டையும் பொறுத்த வரையில். அதீத ஞாபக சக்தி , பொறுமை இருந்தால் போதும் . இதற்கு ncert (முதல் அட்டையில் இருந்து பின் அட்டை வரை ) மட்டும் படித்தாலே போதும். 330 மதிப்பெண்கள் பெறலாம். (என்னால் நிரூபிக்க முடியும் )

மீதமுள்ள மதிப்பெண்களை பெற coaching modules உபயோகமாக இருக்கும்.

கடினமான பகுதி : இதில் வெறும் facts அடிப்படையில் தான் கேள்விகள் வரும். ஆனால் ncert concepts மிகவும் கடினமானதாக இருக்கும். Molecular basis of inheritance போன்ற பாடமெல்லாம் யாராவது சொல்லி கொடுத்தால் தான் புரியும். அதுபோல கேள்விகளும் கடினமாக இருக்கும்.

Chemistry & physics :

Physics மிகவும் கடினமாக இருக்கும். இரண்டையும் சொல்லித் தர கண்டிப்பாக ஆசிரியர் தேவை. இதனை படிக்க மிகவும் கடினமாகவும் மேலும் இதில் வரும் கணக்குகளை செய்ய ஆசிரியர் உதவி கண்டிப்பாக வேண்டும்.

பயிற்சி பள்ளியில் என்ன செய்கிறார்கள்:
Ncert க்கும் மேல் நல்ல புஸ்த்தகம் கொடுக்கிறார்கள்.
அநேக கணக்குகள் அன்றைய தினத்து பாடத்தில் இருந்து கொடுத்து அவைகளை solve செய்ய சொல்லி தருகிறார்கள்.( ஒவ்வொரு பாடத்திலும் இருந்து வரும் ஒவ்வொரு concept - களுக்கும் ஒரு கேள்வி தரப்படுகிறது. அப்போது அந்த மாணவனால் எல்லா கணக்குகளையும் செய்ய இயலும )
அநேக தேர்வுகளை நடத்துகிறார்கள்.
படிக்க நல்ல இடத்தை தருகிறார்கள்.
சக மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு படிக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒன்றும் தனியாக படிக்கும் பொழுது கிடைக்காது. என்னத்தான் படித்தாலும் கணக்குகளை செய்ய இயலாவிட்டால் சீட் பெறமுடியாது.கணக்கு செய்ய ஆசிரியர் உதவி வேண்டும். அதற்கு பயிற்சி பள்ளியில் சேர வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.


நன்றி  : கருப்பையா  பாலாஜி,  இளங்கலை கணினி அறிவியல், கோவை அரசு கலைக் கல்லூரி.

தொகுப்பு  :மு.அஜ்மல் கான்.

Thursday 5 July 2018

Guard Rail System (GR) Materials to be use at site and each requirement.


  1.  Top edge height of railing 0.95 M.  (38”) Min.
  2.  Top edge height of railing 1.15 M.  (45”) Max.
  3   GR downward loads 90 KG.
  4.  GR and wall distance more or less ( 14”) if more than  GR must .
  5.  Use Fall Body Harness shall be rated of capacity at least 2,260 KG.
  6.  Lifeline fastens in capable 2,300 KG.
  7.  Lifeline wire rope 10mm Min. diameter.
  8.  Toe board height 4” Min.
  9.  Toe board thick 1” Min.
 10. Toe board and working plate bet.  Gaps not more than 6mm.
 11. Toe board must be load and downward 23 KG.
 12. Headroom two flooring Min.1.8 M. and Max. 2.0 M.
 13. Stairways ladder gap 30” Min. and wide 22” Min.
 14. Temporary stair riser height 6” Min., 8” Max.
 15. Temporary stair tread depth 9” Min., 11” Max.
 16. Riser and tread depth not more than 6mm.
 17. Temporary stairways handrail Min. 35”, Max. 37”.
 18. Handrail should be anywhere can lift at 90 KG.
 19. Stairways door less than 20”.
 20. High wind requirements velocity 65 KPH ( 40 MPH ).
 21. Wood and aluminum ladder not painted.
 22. Ladder rungs between 10” to 14” on center.
 23. Ladder rungs spacing 12” preferable.
 24. Ladder slope 4 vertical and 1 horizontal.
 25. Ladder above landing flat form 900mm (3 FT.) Min.
 26. Bottom rungs not more than 2 FT.
 27. Ladder projecting objective away Min. 24”, Max. 30”.
 28. Minimum toe ladder at the top 4”.
 29. Rungs length 16”.
 30. Step ladder max. Length 6 M.
 31. Floatation ring provide intervals not more than 15 M. apart.
 32. Job made ladder length Max. 4.5 M.(15 FT.).
 33. Single rung 25 work men’s only if more than use double rung.
 34. For side rail lumber use 2”x 4”.
 35. Double rung ladder 3.6 x 4.5 M. in length.
 36. For side railings use 2” x 6” lumber.
 37. Rungs length 20”, 20mm THK. 80mm WIDTH.
 38. Rungs length more than 20” to 30”, 20mm THK, 95mm WIDTH.
 39. Rungs should be inside 13mm.
 40. Platform and toe board gaps between Max. 6mm.
 41. Ladder extension 11 M. overlap 1.2 M. Min., 14.6 M. overlap 1.5 M. Min.
 42. Scaffolding tube outside dia. 48.3mm.
 43. Girder coupler always in pair.
 44. Right angle –double or load bearing coupler class EN74-B, SWL 9.4KN (940KG.).
 45. Swivel coupler class A SWL 5.3 KN (530 KG.).
 46. End to end sleeve coupler tension class B 300 KG., bend class B 59 KG.
 47. Bearer single putlog SWL 53 KG.
 48. Wood plank marked BS2482
 49. Wood plank thick 38mm (1-1/2”), wide 225mm Min.
 50. Wood plank spot not more than end 1”.
 52. Twist not more than 13mm.
 53. Sole boar under jack long 675mm Min. (30”).
 54. Base plate 150 x 150 mm (6”x 6”), 6mm THK. (¼”).
 55. Jack-up to half treads Max.
 56. Tie –first tie if wide 2M then tie first one 8M if wide 4M first one 16M.
 57. First to second distance 9M and general height vertical 8M gap.
 58. Raker ratio tube length 6.4 M. no joints other tube.
 59. Raker two standard joint above raker only one lift.
 60. Plank thick. 38mm (1-1/2) not exceed 1.5M, 50mm (2”) thick gap cover 2.4M.
 61. Transom min.6” over (150mm), overhang max. 12” (300mm) Min.
 62. Between plank gap 1” ok if more cover.
 63. Gap less than 600mm (24”) cover with plywood thick 20mm.
 64. Plywood overlap both side Min. 12” if gap more than 600mm (24”) cover w/ plank.
 65. Platform landing min.27” (675mm) wide, 36”length.
 66. In height landing flat form every 9M. Max.
 67. Internal ladder 27” wide (675mm), 36” (900mm) Length.  
 68. External ladder wide open side (entrance) Min.27” (675mm), Max.30” (760mm).
 69. Applied voltage less than 300V, 1M. Distance, Insulated line more than 300V, 3M.more    
      500V, 3M. +4” 1KV =50 KV.
 70. Un insulated less than 500V 3M.distance, more than 500V 3M. +4” 1 KV.
 71. Base of scaffold away from excavation 1.5 M. Min.
 72. Gin wheel scaffold to outside distance Max.30”(750mm).
 73. Lift wheel –weight 50 KG. Max.
 74. Rope for wheel lifting 18mm dia.
 75. Plan horizontal for bridge in and out cross bracing light duty.
 76. Ladder beams 2 bay bridges, medium duty.
 77. Unit beam medium / heavy duty.
 78. Brace pipe not more than 12”(300mm) away from node point.
 79. Brace overlap joint together with swivel coupler joint at least 12” overlap.
 80. Bearer (Transom) board bearer should extend beyond the runner (ledger) 4” (100mm).
 81. Base of runner-transom 1st lifts 6”9160mm).
 82. X brace can leave 2 bays in high position, 3 bays in length position.
 83. Max. 4 bay can leave in cross brace.
 84. For embosted light duty scaffold bay 1 x 2.7 M. and 1.2 x 2.4 M. allowable.
 85. For non embosted 1 x 2.3 M and 1.2 x 1.8 M.
  86. Base tube O.D. 48.3mm thick wall 3.2mm.
  87. Tower and mobile scaffolding every third level should be plan brace.
  88. Mobile scaffold and ladder always on the narrow side.
  89. Mobile scaffold for light duty wheel dia. 5”(125mm) Min.
  90. Medium duty wheel dia. 7”(175mm) Min.
  91. Height of fabricated frame scaffold 6 M. Max.
  92. Bracket scaffold use only for light duty 120 KG. / SQ.M.
  93. Bracket strip length 10” (250mm) width 3” (75mm) thick. 10mm.
       and top weld 3” both side and 1” at the side.
  94. Wire rope for railing of bracket scaffold is dia. 10mm. Min.
  95. Bracket width 27”(675mm) max.
  96. High sleeve or spigot on base 150mm height.
  97. Aramco welding certified inspector can inspect the bracket strap.
  98. Approval of welding procedure proponent engineering.
  99. Trapeze tube fixes Max. 2 FT.(600mm) and Min. 1.5 FT. below.
100. For bracket scaffold overlap Min.230mm(9”).
101. Beam coupler use only for hanging scaffold but should be drop forged coupler.
102. Hanging scaffold wire rope dia. 9mm Min. load 6 times intend.
103. Wire rope clip end of wire fix 3 pcs.and that gaps between the clip 6 rope dia.
104. U-bolt in that side saddle on live side of the rope.
105. Any kind of scaffold more than 4 legs called base supported scaffold.
106. Tower scaffolds only 4 legs.
107. Scaffoldings more than 2 lines of post or hanger tube across with called
        with birdcage scaffold.
108. Handrail of temporary stairways Min.34” and Max.37”.