Thursday 27 September 2018

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...?

அன்புள்ள நமது குழுவின் நண்பர்களுக்கு,
ரூபாயின் பண மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை விளக்கும் பதிவு.
இதுஎனது பதிவு அல்ல.நாணய விகடன் பதிவு. மிக விளக்கமான பதிவு.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி.. அமெரிக்க டாலருக்கும் ஏன் இந்த வித்தியாசம்...?
ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.!
ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.
சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக் கொண்டு பழகியுள்ளோம்!
கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை எடுத்துக்கொள்வோம்:
துவக்கத்தில், அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.
இப்பொழுது:
அமெரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா!
இந்தியாவும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!
இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இந்திய ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இந்திய ரூபாய் மட்டுமே!
இப்பொழுது,
அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது.
இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே!
இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.
இப்பொழுது, இந்தியாவுக்கு வருவோம்.!
இந்திய அரசும் அமெரிக்கா போலவே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும். ஆனால், அசல் வரிவசூலோ,.. வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!! அதாவது, புழக்கத்தில் விட்ட 2000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது! மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.!
இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.! ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).! இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது!
சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்! தவிர, அதற்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்! இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50). ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050 ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!
எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில் வெளியிட்டே ஆகவேண்டும் - காரணம், ஏற்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல் "காணாமல் போய்விட்டதல்லவா"? எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!
இப்பொழுது வருகிறார் கண்கொத்திப்பாம்பு IMF ! "நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.! உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்! ஆனால், இந்திய அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று! அரசுக்கு வேறு வழி கிடையாது! காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமெரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை! அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு! இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது!
ஆக,.. இப்பொழுது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால் = 1.71)
அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இந்திய ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது! $1 = Rs.1.71 !
இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல் அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது! ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!
இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 67.80 என வந்து நிற்கிறது!
இந்திய அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது!
இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!
இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது! காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!
ஆனால், இந்தியாவில்? யாராலாவது, ஊகிக்க முடியுமா?
percentage of taxpayers in India என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்!
நல்ல இந்தியக் குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்!
ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள்!
நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்! அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...
அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா? கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா? நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா? என்று யோசித்தால்,... கசப்பான விடை, "இல்லை" என்பதே ஆகும்!
-----------------------
இந்த ஆய்வுக் கட்டுரையை
படிக்கும் உங்களுக்கு, கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும், என்று எடுத்துக் காட்டவே...
Special Thanks to : நாணயம் விகடன்.

Friday 21 September 2018

கனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி தூத்துக்குடி சோபியாவின் தமிழகத்தின் கூட்டு மனசாட்சியின் கோபக் குரல். !!

குருவியை சுடுவதுபோல் 15 உயிர்களை சுட்டுத்தள்ளி அதன் சுவடு கூட இன்னும் மறையவில்லை. அதற்குள் நீங்கள் அந்த நச்சு ஆலையை திறப்பதற்கு எல்லா வேலையும் செய்கிறீர்கள். நாங்கள் அதை ஏன் என்று கூட கேட்க கூடாது என்று நினைக்கும் உங்கள் பாசிசத்திற்கு பதிலடிதான் சோபியாவின் தனிமனித கோபக்குரல்.
தூத்துக்குடி சோபியாவின் க்கான பட முடிவுதூத்துக்குடி சோபியா, நடுவானில், பா.ஜ.க மாநிலத் தலைவரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷமிட்டது சற்று பொருத்தமற்றதாகவும் சக பயணிகளுக்கு தொந்திரவு தருவதாகவும் அமைந்திருக்கலாம்..
அவர் கனடாவில் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவி...
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அவருக்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
பகுத்தறிவாளர்கள் கொல்லப்படுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் சாமானிய மக்கள் வங்கிகள் வாசலில் சுருண்டு விழுந்து மடிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
சிறு குறு தொழில்கள் அடியோடு அழிந்தது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
ரபேல் கொள்முதலில் மர்மம் நீடிப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
உலகமெல்லாம் மலிவாக விற்கப்படும் போது இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை எகிறுவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
கிராமப்புற மாணவர்களின் வயிற்றில் அடித்த நீட் தேர்வு, வலிந்து திணிக்கப்பட்டது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அத்தேர்வை விலக்கக் கோரி அனுப்பப்பட்ட சட்ட மன்ற தீர்மானம் எங்கே உள்ளது என இன்னும் விசாரித்துக் கொண்டே இருப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ஒற்றை வரி விகிதம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட GST வரிவிகிதம் ஏற்படுத்திய விலையேற்றம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
உலகம் முழுதும் சுற்றி பெரு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் கொண்டு வருவது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....
வங்கிகளில் மக்கள் பணம் குறிப்பிட்ட சிலரிடம் வராக் கடனாய் கை மாறிப்போனது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அர்பன் நக்ஸல்கள் உள்ளிட்ட புதிய புதிய கண்டுபிடிப்புகள் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
மண்ணையும், மலையையும், இயற்கை வளங்களையும், மீத்தேன், நியுட்ரினோ என ஆழக்குழி தோண்டி புதைப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
புதைந்து போன தொல்நாகரீக கீழடி அடையாளங்களை மீட்டெடுக்க மறுப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
ஒரு பேரிடர் நிகழும் போது உதவிக்கரம் நீட்டாமல், ஒவ்வாத கருத்துக்களை உதிர்ப்பது கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்...
அவர் ஒரு குடிமகள்...
இவ்வளவிற்கு பிறகும் பாசிசம் வாழ்க என்றா கோஷம் இடுவார்???
பாசிசபாஜக ஆட்சி ஒழிக என்று தான் கோஷம் போடுவார்.
சோபியாவை 15 நாள் சிறையில் வைத்து உங்கள் மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் உங்களை விட பைத்தியகாரர்கள் மூளை இல்லாதவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் சோபியா தனிமனித பெண்ணல்ல தமிழகத்தின் கூட்டு மனசாட்சியின் கோபக்குரல்.
ஆயிரம் ஆயிரம் சோபியாக்கள் தமிழக மண்ணில் உங்களை நோக்கி விரல்களை நீட்ட தயாராகி விட்டார்கள் என்பதன் ஆரம்ப கட்டம் தான் உங்கள் முகத்துக்கு நேராக அந்த பெண் சொன்ன பாசிச பாஜக ஒழிக எனும் குரல்.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Wednesday 19 September 2018

நாம் துவக்கி வைப்போம் இந்த மாற்றத்தை.....

Image result for tamil nadu dead bodyஅன்புக்குரிய ஒருவரின் எதிர்பாராத திடீர் மரணம் பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. அது நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும், தாளா துயரில் ஆழ்த்திவிடும். பல நாட்களாய் வியாதியில் வேதனைப்படும் நமது அன்பானவர், மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருப்பது நமக்குத் தெரியும்தான். ஆனாலும் அவர் இறக்கும்போது ஏற்படும் துக்கத்தையும் இழப்பையும் நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

அன்புக்குரிய ஒருவர் எவ்வித சூழ்நிலையில் இறந்திருந்தாலும்சரி, இழப்புக்கு ஆளானவருக்கு ஆதரவும் ஆறுதலும் தேவை. 

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் ஒருவரை நீங்கள் கவனித்ததுண்டா...?


உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறிவிடும். எளிமையா ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா???? சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது???? என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?. கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக்கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்.
.
இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவுசெய்து ஏற்கவேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...


அப்படி என்ன செயல்?...

இனிமேல் எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்?...

நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே..... அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்... பின்னர் அந்த மாலையை துக்கம் விசாரிக்க வந்த (சில உறவினர்கள் நண்பர்கள் பொதுவாக நமது கலாச்சாரத்தில் பிறந்தாலும் ஆட்டம், செத்தாலும் ஆட்டம் , பாட்டம் ,கொண்டாட்டம்) ரோடு முழுவதும் போட்டு குப்பையாக்கி, அதுவும் மெயின் ரோட்டில் போகும் போது பஸ்ஸில் உள்ளே போடுவது.... மின்சார கம்பி ஒயரில் போடுவது... அதனால் சார்டாகி அக்கம்பக்கத்தினர் குடும்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் இது தேவையா?....

அந்த பூ மாலையை நூறு /நூற்று ஐம்பது / ஐநூறு /ஆயிரம் செலவு செய்வதை.....
இறந்துபோன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்

ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் (ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில் தான் தூக்கி போவார்கள் ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை மனதிலும் தெம்பு இல்லை) தள்ளிக்கிட்டு போக ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும்...

எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்....

திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான். “ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.,நாம எழுதுற மொய்ப்பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்....
கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை. நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.

பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு காலநெருக்கடியில உருவாகி இருக்கலாம். ஆனா
கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் சார்.....
மொய் எழுதும் பழக்கம் ரொம்பவே முக்கியம் ..

சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல?? ஆனா பெரும்பாலும் இல்லை தானே.

அம்மாவ அப்பாவ அண்ணன தம்பிய பிள்ளைய இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?தன்மானம் சுட அவன நாம கடனோ உதவியோ கேட்கவிடலாமா..?

உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனொருவனின் கரங்களை இறுக பற்றி “நாங்க இருக்கோம்யா, தைரியாமாஇருயா செலவ பாத்துக்கலாம்”னு சகமனிதனாக நாம் சொல்லவேண்டிய தருணம் அது தான்...

இதுவரை இல்லாவிட்டாலும்..... இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது...

சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தன் அழக்கூடாது.....

நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும் செய்வோமா?
கண்டிப்பாக செய்தே தீரவேண்டும்

அனைத்து குழுமங்களிலும் பகிருங்கள்..

உங்கள்  தோழன்  மு.அஜ்மல் கான்.

கோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம் ??

No automatic alt text available.கோமா என்றால் நினைவு இழத்தல் என்பதும், மூளைச்சாவு என்றால் மூளை மரணம் அடைந்துவிட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், கோமா எதனால் ஏற்படுகிறது, கோமாவுக்கும் மூளைச்சாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன, கோமா வந்தவர்களுக்கு மூளைச்சாவு வருமா, கோமா வந்தவர்களுக்கு எப்போது திரும்பவும் நினைவு வரும், என்பதில் நிறைய சந்தேகங்கள் உண்டு.

கோமா என்றால் என்ன?
நமது மூளை சுயநினைவுடன் செயல்பட உதவுவது மூளைப் பகுதியில் இருக்கும் ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (Reticular activating system) மூளைத்தண்டுவடம், ஹைப்போதாலமஸ் ஆகிய பகுதிகளில் ஏதேனும் தற்காலிகமான பாதிப்பு ஏற்பட்டால், மூளையின் ‘ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம்’ (RAS) பாதிக்கப்படும். இந்த ஆர்.ஏ.எஸ் பகுதியில் இருக்கும் நரம்புகள் தான் சுயநினைவுக்குக் காரணமாக இருக்கின்றன. பாதிக்கப்படும் அளவைப் பொறுத்து நினைவு இழக்கும் நிலை ஏற்பட்டு மயக்கமடைவார்கள். இந்த சமயங்களில் சுயநினைவுக்குக் காரணமான நியூரான்கள் சரியாக வேலை செய்யாமல், மூளைக்குச் சற்று குறைவாக ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும். இது, தற்காலிகமானதுதான். எதனால் ஆர்.ஏ.எஸ் பாதிக்கப்பட்டுள்ளது எனச் சரியாகக் கண்டறிந்து, பாதிப்புக்குக் காரணமான காரணியைச் சரிசெய்தால், கோமாவில் இருந்து மீள முடியும். அதுவரை, அவர்கள் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும்.

ஏன் ஏற்படுகிறது?
தலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்படுவது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது விரிசல் ஏற்படுவது, மூளையில் கட்டிகள் வளருவது, உடலில் வேறு பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய், மூளையைப் பாதிப்பது, அதிக அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது, தூக்க மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால், மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கோமா ஏற்படலாம். இதுதவிர, மூளையில் ஏற்படும் அதிக அழுத்தமும் கோமாவை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் அதிக வேலை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தமும் மூளையைப் பாதிக்கும்.
கோமா ஸ்கோர் அளவைக் கணித்து, தேவையான சிகிச்சை கொடுக்க முடியும். பொதுவாக, மூளைக்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ரத்தம் செல்லவில்லை எனில், மூளை மற்றும் மூளைத்தண்டு நிரந்தரமாகச் செயல் இழந்து, மீள முடியாத நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க, மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் விபத்தில் அடிபட நேர்ந்தால், விரைவில் மருத்துவமனையை நாடி, செயற்கை முறையில் ஆக்சிஜன் அளிக்க வேண்டும்.
கோமாவில், சுய நினைவு தவறுமே தவிர, உடனடியாக மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. கண் திறப்பது, பேசுவது, சொன்ன செயலைச் செய்வது ஆகியவற்றைப் பொருத்து, கோமாவில் எந்த நிலையில் உள்ளார் என மதிப்பிடப்படும். (பார்க்க: பெட்டி செய்தி)
கோமாவில் இருந்து ஒருவர் முழுமையாக மீள வழி உண்டா?
நிச்சயமாக மீள முடியும். கோமா ஸ்கோர் அளவைப் பொருத்தும், அளிக்கும் சிகிச்சையைப் பொருத்தும் கோமாவில் இருந்து முழுமையாக மீள முடியும். ஒருவர் ஒருமுறை கோமாவில் இருந்து மீண்ட பிறகு, மீண்டும் அவருக்கு கோமா ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. எனினும், கோமா ஏற்பட்ட காரணம் கண்டறிந்து, விழிப்புடன் இருக்க வேண்டும்.

மூளைச்சாவு எப்படி ஏற்படுகிறது?
விபத்து, கட்டி என மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக மூளைத்தண்டுவடம் நிரந்தரமாக செயல் இழந்துவிடும். செயற்கை சுவாசம் அளிப்பதன் காரணமாக, இதயம் சிறிது நேரம் செயல்படும் நிலையைத்தான் மூளைச்சாவு என்கிறோம். மூளைச்சாவும் மரணம் அடைவது போன்றதுதான். மூளைத்தண்டுவடம் பகுதியில்தான் மெடுலா ஆப்லங்கேட்டாவும் இருக்கிறது. மெடுலா ஆப்லங்கேட்டா, 2 செமீ அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். இதயத்துடிப்பும், மூச்சு விடுதலும் சீராக இயங்க, இதுதான் காரணம். மூளைத்தண்டுவடத்தில் கட்டி ஏற்பட்டாலோ, மெடுலா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டாலோ, சில சமயம் மூளை உடனடியாகச் செயல் இழந்துவிடும். சில நிமிடங்களில் இதயமும் செயல் இழக்கும். அதே சமயம், மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு விரைவாக செயற்கை முறையில் ஆக்சிஜன் கருவியைப் பொருத்தினால், இதயத் துடிப்பு மேலும் 12-24 மணிநேரம் சீராக இயங்கும். வெகு சிலருக்கு, அரிதாக ஒரு வாரம் வரைகூட இதயத்துடிப்பு இருக்கும். ஆனால், செயற்கை ஆக்சிஜனை எடுத்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிடும். இந்த சூழ்நிலையில்தான், நோயாளியின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று, சீராக இயங்கும் மற்ற உறுப்புக்களைத் தானமாகப் பெற்று மற்றறவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.
கோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம்?
கோமா என்பது நினைவு இழத்தல். அதில் இருந்து மீண்டுவர முடியும். உடனடி மரணம் கிடையாது. சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்ப வாய்ப்புகள் அதிகம். நினைவு திரும்பாமல் உயிர் இழக்கவும்கூடும். ஆனால், மூளைச்சாவு அடைந்துவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை.
சாலை விதிகளைப் பின்பற்றுவதாலும், ஹெல்மெட் அணிந்து செல்வதாலும், விபத்தில் தலையில் அடிபடுவதைத் தடுக்க முடியும். ஓய்வு எடுக்காமல் சிந்தித்துக்கொண்டே இருப்பதால், மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனைத் தவிர்க்க, தியானம் செய்வது நல்லது. அடிக்கடி தலைவலி, வாந்தி, மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டால், மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
மூளைச்சாவு எப்படி உறுதி செய்யப்படுகிறது?
ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில், அந்த மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் முன்னிலையில் ‘ஆப்னியா’ பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின்போது, ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு அளவுகள் கணக்கிடப்படுகின்றன. அதன் பின்னர், செயற்கை சுவாசத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, அவரால் மூச்சுவிட முடிகிறதா என, மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் பரிசோதிக்கப்படும். தொடர்ச்சியாக மூச்சுவிட முடியவில்லை, இதயத் துடிப்பு குறைகிறது, ரத்த அழுத்தம் மாறுகிறது என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மூச்சு விடவில்லை என்றாலோ, மூச்சு விடுவதற்கான அறிகுறியே இல்லை என்றாலோ, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ரத்தத்தில் கார்பன்டை ஆக்சைடு அளவு பரிசோதிக்கப்படும். கார்பன்டை ஆக்சைடு அளவு 50-ஐத் தாண்டினால் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் எனக் குறித்துக்கொள்வார்கள். பெரியவர்கள் எனில், மீண்டும் ஆறு மணி நேரம் கழித்தும், குழந்தைகள் எனில் வயதைப் பொறுத்து 12-24 மணிநேரங்கள் கழித்தும் மறுபடியும் பரிசோதனை செய்யப்படும். அப்போதும் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் என வந்தால், மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்படும்.
கோமா ஸ்கோர்
கோமா ஸ்கோரைவைத்தே, கோமாவைக் குணப்படுத்தும் நிலையை மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.
கண்களைத் திறந்து பார்ப்பது
கோமாவில் இருப்பவர் கண்களைத் திறந்து பார்த்தால், நான்கு மதிப்பெண்கள். கூப்பிடும்போது மட்டுமே பார்த்தால், மூன்று மதிப்பெண்கள். உடலில் எங்கேனும் கிள்ளுதல் அல்லது வலி கொடுத்தலின்போது கண்களைத் திறந்து பார்த்தால், இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் கண்களைத் திறக்கவே இல்லை எனில், ஒரு மதிப்பெண்.
பேசுவது
கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொன்னால், ஐந்து மதிப்பெண்கள். கேட்ட கேள்விக்கு, சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்தால், நான்கு மதிப்பெண்கள், பேசவில்லை வார்த்தைகள் மட்டும் ஒன்றிரண்டாக வருகிறது எனில், மூன்று மதிப்பெண்கள், ஏதேனும் உடலில் வலி ஏற்படுத்தினால் மட்டும் சத்தம் வருகிறது எனில், இரண்டு மதிப்பெண்கள். எந்த சத்தமும் வரவில்லை எனில், ஒரு மதிப்பெண்.
சொன்ன செயலை செய்வது
மருத்துவர் சொல்வதைக் கேட்டறிந்து, சரியாகப் பின்பற்றினால், ஆறு மதிப்பெண்கள். சொன்ன வேலையைச் சரியாக செய்யவில்லை, ஆனால், மருத்துவர் உடலில் வலி ஏற்படுத்தும்போது மருத்துவரின் கையைத் தட்டிவிட்டால் ஐந்து மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது இன்னொரு பக்கமாகத் திரும்புகிறார் எனில், நான்கு மதிப்பெண்கள். வலி கொடுத்ததும் இரண்டு கை விரல்களையும் இறுக்கிக்கொண்டால், மூன்று மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது கைகளை நீட்டினால் இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் சலனமற்று எதையுமே செய்யவில்லை என்றால், ஒரு மதிப்பெண்.
மூன்று செயல்களையும் சேர்த்து பதினைந்து மதிப்பெண் என்பது அதிகபட்ச ஸ்கோர். மூன்று குறைந்தபட்ச ஸ்கோர். கோமா ஸ்கோர் 12-க்கு மேல் எனில், சிகிச்சை மூலம் மிக விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பு உண்டு. ஏழு முதல் 11 வரை எனில், நினைவு திரும்ப சில நாட்கள் ஆகும். நான்கு முதல் ஆறு எனில் நினைவு திரும்ப சில மாதங்கள் ஆகலாம். கோமா ஸ்கோர் மூன்று எனில், நினைவு திரும்புவது மிகவும் கடினம். தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தொகுப்பு : மு.அஜ்மல்  கான். 

இந்த காணொளியை  அப்டேட்  செய்துள்ளேன் ..

https://www.youtube.com/watch?v=nVbIduZamWY

Friday 7 September 2018

தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் ( Palindrome )வார்த்தைகள் !!

Palindrome க்கான பட முடிவுஎந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்
தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்!
விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி
ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் !
1: civic
2: Dewed
3: deified
4: dad
5: mom
6: devoved
7: Hannah
8: peeweep
9: repaper
10: kayak
11: minim
12: radar
13: murdrum
14: Malayalam
15: madam
16: lemel
17: level
18: racecar
19: radar
20: redder
21: bob
22: pop
23: tot
24: refer
25: reviver
26: rotator
27: rotavator
28: stats
29: solos
30: tenet
31: terret
32: testset
33: Kinikinik
34: Wassamassaw
35: Yreka Bakery
36: Navan
37: Cain: a maniac.
38: A Toyota.
38: Race fast, safe car.
39.RACECAR
40.MALAYALAM
41.EVE
42.LEVEL
43DEED
44.ROTOR
45.CIVIC
46.POP
47.MADAM
48.EYE
49.NUN
50.RADAR
51.TOOT
 Thokuppu
தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

Thursday 6 September 2018

கோயம்புத்தூரில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

Related imageஎன்னைப் பொறுத்தவரையில் கோயம்புத்தூரில் உள்ள ஓட்டல்களில் சாப்பாட்டில் ருசி அவ்வளவு ஒன்றும் பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது தென்னகத்திலே ஆந்திராவில் நன்றாக இருக்கும்தமிழகத்தில் சென்னை வட ஆற்காடு போன்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு சுமாராக இருக்கும் கர்நாடகம் சிறிது பரவாயில்லை கேரளா சொல்லவே தேவையில்லை மிக மிக மோசம். கோயம்புத்தூரில் சாம்பாரில் வெல்லத்தை கலந்து தித்திப்பாக பரிமாறுகிறார்கள் அதனால் அவ்வூர் மக்களுக்கு வேண்டுமென்றால் பிரமாதமாக இருக்கலாம் மற்ற மக்களுக்கு சுமார். பெரும்பாலும் கோவை மக்கள் சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவர்களின் மனநிலை எல்லாம் பணம் சம்பாதிப்பதிலேயேநான் சில மாதங்கள்  கோயம்புத்தூரில் இருந்தவன் என்ற முறையில் இதை பதிவு செய்கிறேன்..

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....
நீங்கள் உணவுப்பிரியரா ?
சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா?
பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட உணவுக்கடைக‌ளின் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்.
ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்
கௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்
ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி
கோவை to சேலம் சின்னியம்பாளையம் bridge அருகில்: Garden restaurant, non-veg & veg பிரியர்களுக்கு, honeymoon spl ice cream top class..
அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி
வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை
ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்
கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..
டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்
சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை
வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி
ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு
மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு
படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்
இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்
தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா
மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி
அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்
ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி
ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65
திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்
பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை
பிஸ்கட்
சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.
காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்
பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன்
சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்
மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்
பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ
கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.
பர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்
எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்
Barbeque Nation, கோவை டவுன் ஹால். Special : Unlimited Barbeque
மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி
கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி
SMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை
கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்
அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி
ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா
MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை
CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி
நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு
பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி
ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி
லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு
ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி சாத வகைகள்
சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்
ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா
கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை
அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு
குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு
சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு
வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்
பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்
கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்
கண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்
சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்
ஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி
குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி
வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்
சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன்
அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.
தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ
சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி
ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு
ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா
டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்பாடு
சாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:
JMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்
ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்
அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்
மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்
தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா
செட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன் :
ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை
கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு
முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு
இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி
திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்
கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்
HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி
இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா
அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை
கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்
வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா
சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை
அமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை
கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.
பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி
ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு
கீதா ஹால், கோவை. Special : நீர் தோசை
ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி.

Our Sincere thanks to Kovai Neram( Mr.Jeevanandam )