Friday 6 January 2012

'ஜம் ஜம்’ தண்ணீர் தான் உலகில் மெய்யான அற்புதமாகும்!! ஒரு சிறப்பு பார்வை..

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.1971 ல் எகிப்திய டாக்டர் ஒருவர் ஐரோப்பிய ஆங்கில பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும் ஜம் ஜம் கிணறு அது ஒரு பள்ளத்தாக்கில் இருப்பதால் மக்கா நகரில் உள்ள கழிவு நீர்கள் பள்ளத்தாக்கில் தேங்கி பூமிக்குள் சென்று ஜம் ஜம் கிணற்று நீரோடு கலந்து விடுகிறது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
இதை நான் படித்தவுடனே தெரிந்துகொண்டேன், இது இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் என்று. ஏனென்றால் அது ஒரு பள்ளத்தாக்கில் இருக்கும் அமைப்பை வைத்து ஒரு யூகமாய் கூறப்பட்டதே அல்லாமல் விஞ்ஞானப் பூர்வமாய் அல்ல. இதை அறிந்த அப்போதைய சவூதி மன்னர் ஃபைசல் அவர்கள் கோபமடைந்து எகிப்திய டாக்டரின் யூகத்தை தவறு என்று நிரூபிக்க முடிவெடுத்தார். 

மன்னர் ஃபைசல் அவர்கள் (Ministry of Agriculture and Water Resources ) அமைச்சகத்துக்கு ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பாவிலுள்ள (European laboratories)ஆய்வு நிலையத்திற்கும் ஜித்தாவிலுள்ள (Jeddah Power and Desalination Plants கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையம்)ஆய்வு நிலையத்திற்கும் அனுப்பி வைத்தது. அப்போது நான் கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையத்தில் இன்ஜீனியராக பணி புரிந்து கொண்டிருந்தேன். ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்யும் பணியை எங்கள் நிலையத்துக்கு ஓப்படைக்கப்பட்டது.




அதன்படி நான் கஃபாவில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கினேன். அவர்கள் ஆய்வுக்கு ஜம் ஜம் தண்ணீரை எடுக்க ஒரு ஆளை நியமித்து அனுப்பினர். நான் ஜம் ஜம் கிணற்றை பார்க்க நேரிட்டபோது அது 18×14 அடிதான் இருந்தது. பல ஆயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு பல ஆயிரம் மில்லியன் கணக்கான கேலன் தண்ணீரை நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்திலிருந்து பல நூறு நூற்றாண்டுகளாக அல்லாஹ் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.


நான் எனது ஆய்வை தொடங்கினேன். எனக்கு துணையாக அனுப்பப்பட்ட ஆளிடம் கிணற்றின் ஆழத்தை காட்ட சொன்னேன். அவர் குளித்து விட்டு கிணற்றில் இறங்கிய பொழுது அவரது தோள்பட்டைக்கு சிறிது மேலாகத்தான் கிணற்றின் நீர் மட்டம் இருந்தது, அதாவது சுமார் ஐந்தடி எட்டு அங்குலம். மேலும் அவர் அங்கு வேறு குழாய்கள் இல்லை என்பதையும் கூறினார். தண்ணீரை ஆய்வு செய்வதற்காக வேண்டி மேலாக உள்ள தண்ணீரை குழாய் மூலம் வேறொரு இடத்திற்கு மாற்றினோம். பிறகு அவரை ஒரே இடத்தில் நிற்கும்படி கூறினேன்.
சிறிது இடைவெளிக்குப்பிறகு இரு கைகளையும் உயர்தியபடி ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறினார். ஊற்று நீர் சுரப்பதை காலில் உணரப்பட்டது. கிணற்றின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே அளவாக நீர் சுரந்தது. தண்ணீரிலிருந்து சிறிது மாதிரி எடுத்துக்கொண்டோம். காஃபா அதிகாரிகளிடம் காஃபா அருகில் உள்ள மற்ற கிணறுகளையும் பார்வையிட கோரினேன். அவைகள் எல்லாம் வற்றிய நிலையில் இருந்தன. எங்கள் ஆய்வின் படியும், ஐரோப்பிய ஆய்வின் முடிவின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. ஜம் ஜம் தண்ணீருக்கும் மற்றைய தண்ணீருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கால்சியமும், மாக்னீசியமும் அளவில் சற்று அதிகம். கால்சியம் சத்து அதிகமிருப்பதால் ஹாஜிகளுக்கு களைப்பை நீக்கி விரைவில் புத்துணர்ச்சி ஏற்பட செய்கிறது. மேக்னீசியம் அதிகமிருப்பதால் தண்ணீரில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது. 


மேலும் ஐரோப்பிய ஆய்வின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்று தெரிய வருவதால் எகிப்திய டாக்டரின் கூற்று ஆதாரமற்றது என்பது தெளிவாகிறது. எங்கள் ஆய்வும் ஐரோப்பிய கூடத்தின் ஆய்வும் ஒன்றாக இருப்பதை அறிந்து மன்னர் ஃபைசல் மகிழ்ச்சியடைந்தார். ஜம் ஜம் தண்ணீர் எவ்வளவு சுத்தமானது என்று அறிய இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து கொண்டோம். இவையெல்லாம் அல்லாஹுத்தாஆலாவின் நாட்டப்படியே நடக்கிறது.



சுருக்கமாக ஜம்ஜம் நீரின் விசேஷங்களைக் கூறுகிறேன்.

  • இந்த கிணறு என்றும் வறண்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக – அது உருவான காலத்திலிருந்து உள்ளது.
  • அதன் ‘குடிக்கத்தக்க தன்மை” ஒவ்வொரு ஆண்டும் உம்ரா – ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; – மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி(universal)..
  • பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும் – மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.
  • பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க –  நீருக்காக சஃபா - மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.


The Well of Zamzam (or the Zamzam Well, or just Zamzam; Arabic: ) is a well located within the Masjid al Haram in Mecca, 20 metres east of the Kaaba,[1] the holiest place in Islam. According to Islamic tradition it was a miraculously- generated source of water from angel Jibril (Gabriel), which began thousands of years ago when Ibraham’s infant son was thirsty. Millions of pilgrims visit the well each year while performing the Hajj or Umrah pilgrimages, in order to drink its water. By Saudi law, the water cannot be sold outside of the kingdom, but because of strong demand there is a thriving market in fake Zamzam water in other countries.
Zam Zam is 18X14 ft & 18 meter deep water well.
It started 4000 yrs ago.
Never dried since then.
Never changed the taste, no Algea or plant growth in the pond, thus no disease caused.
It was tested by European Laboratories & declared fit for drinking.
This small pond provides water to millions of people through heavy motors pulling 8000 lit: per second and after 24 hours in only 11 mins completes its level. Thus its water level never decreases
Subhanallah !!!

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment