Wednesday 11 January 2012

ஜோதிட நம்பிக்கையுள்ளவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது!..

இன்று பெரும்பாலான மக்களுக்கு தங்கள் நட்சத்திரம், ராசி, லக்னம் எல்லாம் தெரிந்திருக்கிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தை நீட்டி பலன் கேட்டு வருகின்றனர்.

சில பணக்காரர்கள் பேமிலி டாக்டர் போல பேமிலி ஜோதிடர்களையே வைத்துள்ளனர். அவர்களைக் கலந்தாலோசித்தே காரியங்களைச் செய்கின்றனர். பெரும்பான்மை மக்களைத் தன் பிடியில் வைத்திருக்கும் இந்த ஜோதிடம் என்பது உண்மையா? இனி வருபவற்றை ஆழ்ந்து படித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியது நீங்கள்தான்.

உங்கள் ராசி என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உண்மையில் உங்கள் ராசி இல்லை. எப்படி? உங்கள் பிறப்பின் போது சூுரியன் எந்த ராசி சின்னத்தில் சஞ்சரிக்கிறானோ அந்த சின்னத்தின் இயல்புகளைப் பெறுகிறான் என்பது ஜோதிட நம்பிக்கைக் கொள்கை.
விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து சந்திரனும் இதர கிரகங்களும் சூுரியனைச் சுற்றி வருகின்றன. இந்த விண்வெளிப் பாதையை 'சோடியாக்' என்றழைக்கின்றனர். இந்த பாதையைக் கடக்க சூுரியனுக்கு ஓர் ஆண்டு காலம் பிடிக்கிறது. இதைப் பழங்கால ஜோதிடர்கள் 12 பிரிவுகளாக்கினர். ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு மாதமாகும். மார்ச் 21ந்தேதி வசந்த காலம் ஆரம்பம் ஆகும் போது மேஷத்தில் சூுரியன் சஞ்சரிப்பான். இதை மேலை நாட்டில் 'ஏரிஸ்' என்பர். இந்த ஆடு போன்ற சின்னத்தில் சூுரியன் இருக்கும் போது பிறந்த நபர் ஆட்டுக்குரிய குணாதிசியங்களுடன் இருப்பார் என்பதும் ஜோதிடக் கோட்பாடு. இந்த ஆட்டைப் போலவே சூுரியன் சஞ்சரிக்கும் ஒவ்வொரு ராசிக்கும் அந்தந்த நட்சத்திரங்கள் ஏறத்தாழ பிரதிபலிக்கும் ஒரு உருவத்தை சின்னமாக அளித்திருக்கின்றனர். இப்படி அளிக்கப்பட்ட சின்னங்கள்தான் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற ராசிகள்.
இப்படி பல்வேறு சின்னங்களில் சூுரியன் இருக்கப் பிறந்தவர்கள் இன்ன இன்ன குணாதிசியங்களுடன் இருப்பர் என்று வரையறுத்திருக்கின்றனர். இந்த விண்வெளி கிரகங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வேகமும் சுறுசுறுப்பும் இப்போது இல்லை. தங்கள் சுழற்ச்சியில் வேகம் குறைந்து சற்று சோம்பேறியாகி விட்டன. புவியின் சுழற்ச்சியில் மந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். சூுரியனும் தன் பழைய வேகத்திலிருந்து 'டல்' லாகவே சுற்றுகிறதாம் இப்போது சூுரியன் தன் சுழற்ச்சியில் ஒரு மாத காலம் பின் தங்கி இருக்கிறதாம். ஆக முந்தய கணக்குப்படி மார்ச் 21 ஆம் தேதி வசந்தகாலம் ஆரம்பிக்கும்போது சுரியன்() இப்போது ஆட்டில்(மேஷத்தில்) இருக்க மாட்டான். அதனுடைய முந்தய ராசியான மீனில்(மீனத்தில்) இருப்பான்.

சிம்மத்தில் பிறந்த ஒருவன் சிங்கம் போன்ற வீரத்துடன் இருப்பான் என்பர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு 'லியோ' என்று சொல்லப்படும் சிம்ம ராசிக்கு அது சரியாக இருக்கலாம். இப்போது 'சிம்மம்' என்று நாம் நினைப்பது உண்மையில் 'நண்டு' என'கிறார் பால் கூடற்க் என்ற பிரபல பிரெஞ்சு வானியல் நிபுணர். 'நண்டு' என்பது சிம்மத்திற்கு முந்தய ராசியான கடகத்தைக் குறிக்கும். எனவே இன்றைய கிரக சஞ்சாரப்படி நமது ராசிகளே அடியோடு மாறி விடுகின்றன.
நமது செல்வம், ஆரோக்கியம், உயர்வு, தாழ்வு ஆகியவற்றை சந்திரன் சூுரியன் உள்ளிட்ட இதர கிரகங்களே நிர்ணயிப்பதாகச் சொல்லப்படுகிறது. கிரகங்களில் குரு, புதன், சுக்கிரன் ஆகியவை நன்மை தரக் கூடிய சுப கிரகங்கள் என்றும் சனி, செவ்வாய் ஆகியன தீமை தரக் கூடிய கிரகங்கள் என்றும் ஜோதிடர்கள் சொல்லி வருகின்றனர். ஜோதிடர்கள் முன்பு வகுத்த கோட்பாடுகள் எல்லாம் இந்தப் பழைய கிரகங்களின் அடிப்படையில்தான்.
ஆனால் 1781-ல் யுரேனஸ், 1946-ல் நெப்டியுன், 1930-ல் புளுட்டோ போன்ற கிரகங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கிரகங்கள் தங்கள் சுப, அசுப பார்வைகளை விசிப் பலன் வழங்குமே! அவற்றை எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வது?
என்னமோ நீங்களாச்சு உங்கள் ஜோதிட நம்பிக்கையாச்சு!
-நன்றி வாரமலர்

No comments:

Post a Comment