Sunday 11 August 2024

அலைகடலின் தலைவன் என்று அழைத்த ஓமான் தேசத்தில் பிறந்த அஹ்மத் இப்னு மஜீத் !! ஓர் ஆய்வு தவகல்..

 






சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி 1420  அஹ்மத் இப்னு மஜீத் ஓமான் தேசத்தில் பிறந்த ஒரு ஆற்றல் மிகுந்த கடலோடி.

மீனவ பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர், தன் தந்தையிடமிருந்து பல கடலியல்  மரபு சார்ந்த அறிவை கற்றுத் தெளிந்தார்.


இந்தியா, இலங்கை, கீழைத்தேய நாடுகள் மற்றும் சீனாவிற்கு கடற் வழி பயணம் மேற்கொண்டு வணிக சாத்துக்களை பாதுகாப்புடன் மீண்டும் அரேபியாவுக்கு கறை சேர்த்த சிறந்த மாலுமியாக  திகழ்ந்தவர் இப்னு மஜீத்.


ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் பயணப்பட்டு நன்கு அறிமுகவானவர்.


ஒரு நூலில் குறிப்பிட்ட அளவு இடைவெளியில் அடுத்தடுத்து பல முடிச்சுகள் போட்டு ஒரு முடிச்சை பற்களில் கடித்து  துளையுள்ள சிறிய அட்டை ஒன்றின்  மூலம் சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரத்தின்  கோணங்களை கணக்கிட்டு அதன் மூலம் நடுக்கடலில் கப்பல் இருக்கும் நிலை, செல்ல வேண்டிய எல்லை ஆகியவற்றை துல்லியமாக கணிக்கும் திறன் பெற்றிருந்தார்.


இவரிடம் 11 நூற்றாண்டு காலத்து  ஆந்தலூசியா  திசை மானியும் அதே சமயத்தில் சமகால சீன மாலுமிகள் பயன் படுத்தும் திசை மானிகளையும் கைவசம் வைத்து பயன்படுத்தி வரலாற்று ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் மனிதர் update ஆக இருந்திருக்கிறார்.!


கி.பி1490 அஹ்மத் இப்னு மஜீத் எழுதிய புத்தகம் Kitab al-Fawa’id fi Usul ‘ilm al-bahr wa al-Qawa’ed, (Book of Useful Information on the Principles and Rules of Navigation ) உலகின் முழு கடற் பயண வழித்தடங்களில் பாதி வழித்தடங்களை குறித்து  அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது கடல்சார் துறைக்கு கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழ்கிறது.இந்த புத்தகம் தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் தேசிய நூலத்தில் உள்ளது.இவரது பல நூற்கள் பிரெஞ்சு மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.


1498 போர்ச்சுகீசிய நாடு காண் பயணி?! வாஸ்கோடகாமா இந்திய பயணத்திற்க்கு ஆப்பிரிக்கவின் கென்யா (மலிந்தி துறை முகத்திலிருந்து) தென்னிந்திய மலபார் கடற்கறைக்கு ஆழ்கடல் பயணத்திற்க்கு உதவியவர் அஹ்மத் இப்னு மஜீத் ஆவார். வாஸ்கோடாமாவுடன்  இந்திய பயணத்தில் உடன் சென்ற குழு உறுபினர்களில் ஒருவரான  Álvaro Velho எனும் படை வீரர் எழுதிய குறிப்பு Roteiro da viagem de Vasco de Gama  எனும் புத்தக்தில்  இப்னு மஜீதை மொம்பசாவில் சந்தித்து இந்திய பயணத்திற்க்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொண்டார் வாஸ்கோடகாமா என அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கப்பல் கட்டுமான தொழில்நுட்பம், கடலில் ஏற்படும் நீர் சுழற்சி, மணற் திட்டுகள், தட்ப வெப்ப சூழ்நிலை, பருவ காலங்களில் காற்றின் திசைவேகம், சூறாவளி , வசந்த காலங்களில் பயணிக்கும் பறவை இனங்கள்,   மற்றும் வானவியல்  குறித்த பட்டறிவை ஏடுகளில் எழுதினார்.இப்னு மஜீத் எழுதிய  கடல் சார்ந்த புத்தகம் மட்டும் சுமார் 30 க்கும் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு குறிப்பு.  

 அஹ்மத் இப்னு மஜீத்தை அன்றைய அரபுகள் مُعَلِّم‎ முஅல்லிம் என அழைத்தார்கள்.

முஅல்லிம் என்பதற்கு ஆசிரியர் என பொருள். 

ஐரோப்பிய கடலோடிகள் இவரை Master of Marine என்று அழைத்தார்கள்.

தொகுப்பு  : மு. அஜ்மல்  கான்.

After +2 /HSC/ PUC courses available in india (ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளது!!) ஒரு பார்வை...

 ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது  

என்னென்ன படிக்கலாம்  என்று மாணவ, மாணவிகளின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள்  பயன் பெறுங்கள்...



Science Courses (3 Years)


Bsc Physics

Bsc Chemistry

Bsc Botany

Bsc Zoology

Bsc Computer science

Bsc Mathematics

Bsc PCM

Bsc CBZ

Bsc Forestry

Bsc Dietician & Nutritionist

Bsc Home Science

Bsc Agriculture Science

Bsc Horticulture

Bsc Sericulture

Bsc Oceanography

Bsc Melsorology

Bsc Arthopology

Bsc Forensic Science

Bsc Food technology

Bsc Diary Technology

Bsc Hotel Management

Bsc Fashion Design

Bsc Mass Communication

Bsc Electronic Media

Bsc Multimedia

Bsc 3D Animation




Commerce Courses


CA Chatted Account

CMA Cost Management Account

 CS Company Secretary (Foundation)

B.Com Regular

B.Com Taxation &Tax Procedure

B.Com Travel & Tourism

B.Com Bank Management

B.Com Professional

BBA  /. BBM Regular

BFM Bachelor of Financial Management 

BMS

BAF


Humanities Courses


Advertising

BS General

Criminology

Economics

Fine Arts

Foreign languages

Home Science

Interior Design

Journalism

Library Science

Physical Education

Political Science

Psychology

Social Work

Sociology

Travel and Tourism


Management Courses


Business Management

Bank Management

Event Management

Hospital Management

Hotel Management

Human Resources Managemet

Logistics Management


Law Courses (3/5 Years) 


LLB,

BA+LLB

B.Com + LLB

BBM+LLB,

BBA. +LLB


MEDICAL COURSES 

 MBBS General Physician/Doctor  (4வருடம்): 

                  Ophthalmic
                  Ophthalmic
                  Gynecology
                  Dermatology
                  Orthopedics
                  Orthopedics
                  Radiology
                  Electro logy
                  Endocrinology
                  Cardiology
                  PlasticSurgeon
                 General Surgeons
                 Neuron Surgeons
                 Pediatrician
                 Thoracic Surgeons
                 Trauma Surgeons
                 Urologist
                 Gastroenterology
                 Oncology
                 Anesthesiology
                 Psychiatry
                 ENT/Ear nose Throat Specialist
                 Pathologist
                 Sexologist

       
BUMS Unani

BHMS Homeopathy

BAMS Ayurveda

BSMS Sidha

BNYS Naturopathy

BDS Dental

BVSc Veterinary.



PARAMEDICAL COURSES 


Nursing

Pharm D

B.Pharm

D.Pharm

M. Pharm

Anesthesia technical

Cardiac Care technical

Perfusion technology

Cathllab technology

Clinical Optometry

Dental Hygiene

Dental Mechanic

Dental Technician

Health Inspector

Medical imaging & Tech...

Medical Lab technician

Medical Records tech

Medical X Ray Technician

Nuclear Medicine Tech

Occupational Therapist

Operation theater Tech

Ophthalmic Assistant

PHYSIOTHERAPY

Radiographic Assistant

Radiotherapy Technician

Rehabilitation Therapy

Respiratory Therapy Tech.

Blood Transfusion Tech..

Bsc Renal Dialysis


B.E /B.Tech Engineering (4year)


Petro chemical Engineering

Petroleum Engineering

Civil Engineering

Mechanical Engineering

Aeronautical Engineering

Aerospace Engineering

Agricultural Engineering

Architecture Engineering

Automobile Engineering

Automation & Robotics Eng.

Artificial Intelligence eng 

Avionics Engineering

Biomedical Engineering

Bio technological Eng..

Chemical Engineering

Ceramics Engineering

Computer Science Engi..

Electronics &Comm.Engi.

Electrical & Electronics Engi.

Environmental Science Engi.

Information Science Engi

Industrial Engineering

Industrial Production Engi..

Instrumental Technology

Marine Engineering

Medical Electronics Engi..

Mining Engineering

Manufacturing Science Engi.

Naval Architecture Engi....

Nanotechnology Engi..

Polymer Technology Engi..

Silk Polymar Engi...

Carpet Technology Engi...

Textile engineering

Robotics

Genetic


POLYTECHNIC  DIPLOMA COURSES  (10 th class -3years ) 

Electronic and Communication Engineering

Civil Engineering

Chemical Engineering

Mechanical Engineering

Computer Science and Engineering

Electrical Engineering

Aeronautical Engineering

Automobile Engineering

Ceramic Engineering

Mining Engineering

Fashion Engineering

Biotechnology Engineering

Petroleum Engineering

Instrumentation and Control Engineering

Art and Craft

Production Engineering

Environmental Engineering

Textile Engineering

Agricultural Engineering


Management Courses  (2/3/5Years Duration):


BBA /BBM

BBA Aviation

BBA Air Cargo Management

BBA Aeronautical

BBA Retail Marketing

BBA Customer Care Management

BBA Airline & Airport Management

BBA Cargo Management

BBA Office Management

BBA Store Management

BBA Mall Management

BBA Logistics

Diploma in Retail Management

Diploma in Accounting and Finance

Diploma in Human Resources

Diploma in Information Technology

Diploma in Banking

Diploma in Infrastructure and Construction

Diploma in Marketing

Diploma in Interior Designing

Diploma in Textile and Leather Designing

Diploma in Plastic Technology

Diploma in Company Secretary ship

Diploma in Entrepreneurship

BCA SAP

BCA Cloud Computing 


MBA Logistics

         Aviation

         HR

         Management


Architecture (5 years +2)

B.Arch (NATAis Compulsory)

M.Arch .

 மாணவர் ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து நீங்கள் விருப்பமுள்ள  நல்லதொரு பிரிவை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு நல்வாழ்த்துக்கள் .

உங்கள்  மு.அஜ்மல் கான்.

கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..

பெற்றோரின் தனித்துவமான பங்களிப்பை அங்கீகரிப்பது மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விப் பயணத்தில் தீவிரமாக ஈடுபட அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, கற்றலுக்கான அன்பை வளர்க்கும் மற்றும் மாணவர்களின் முழுத் திறனை அடைய அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு ஆதரவான சூழலை வளர்ப்பதில் கருவியாகும்.

இந்த 2023-24 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை  சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.


🔵 2023ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 08 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம்.


🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.


🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள்  விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.


🔵 பிறப்பு சான்றிதழ் (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி  வைத்து கொள்வது நல்லது. 


🔵 சாதி சான்றிதழ் (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.


இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.


🔵 பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.


இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.


🔵 முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.


🔵 வருமான சான்றிதழ், தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கு மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே  இ- சேவை மையங்கள் மூலம்  விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.


🔵 நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS/ BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.


பெற்றோர்களுக்கான அறிவுரை,


1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து  கொள்வது  நல்லது.


2. மாணவர்களின் TC, Mark sheet மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பி தேவை.


3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என மாணவர்களும் பெற்றோர்களும் பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.


மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும்,  எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.


கல்லூரி சேரக்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.


தற்பொழுது பெரும்பாலான  கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு  சேருவதற்க்கு  ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.

உங்கள் நண்பன்  மு.அஜ்மல் கான்.

12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐஐடி-யை குறிவையுங்கள் !!

நான் ஒறு வேலை காரனமாக குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தேன். அங்கு எனது தூரத்து சொந்த  தங்கை  மற்றும் என் மணைவியின் உயிர் தோழி வீட்டில் தங்கினோம்.

அங்கு தங்கை மகன் இம்ரானுடன் உறையாடயதில், அவன் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை எழுதி  சிறிய கட் ஆப்பில் இழந்ததாகவும், மீண்டும் அடுத்த வருடம்  நுழைவுத் தேர்வு எழுதுவதாகவும் கூறினார்.

அதன் காரணமாக 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அறிவுரை…

இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலும் வட இந்தியர்களோ, பிராமணர்களோதான் பயில்கின்றனர்.இதன் விளைவாக, இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர்.


 இந்த நிலையை  எவ்வாறு மாற்ற வேண்டும் ??.


பிராமணர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த உயர் வகுப்பினரும், நிதானமாகத் திட்டமிட்டு படித்து, அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர். இந்த விசயத்தில் அவர்கள் அவசரப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்பார்களே, அதுதான் இந்த விடயத்தில் நடக்கிறது.


நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்?

 12-ஆம் வகுப்பு படித்தவுடன், அவசர அவசரமாக ஏதேனும் ஒருக் கல்லூரியில் பிஎஸ்ஸி, பிஇ போன்ற ஏதேனும் ஒருப் படிப்பில்* சேர்த்துவிடுகிறோம். இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தேன் என்று பெருமைப் பீற்றுகிறோம். ஆனால், பிள்ளைகளோ, தரமாகத் தயாராகி வராமல், தகுதியற்றவற்களாக சமூகத்திற்குள் நுழைந்து, வேலையில்லாமல் திரிகின்றனர். தொழிற்நுட்ப கிரீயேட்டர்களாக வரவேண்டியவர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களாக வலம் வருகின்றனர்.

பிஇ படித்துவிட்டு வீட்டிலும் இருக்க முடியாமல், சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் முட்டுச்சந்துகளில் அறை எடுத்துத் தங்கி, சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் திண்டாடி, தங்களின் வாழ்வே சூரையாடப்பட்டுவிட்டதை உணர்கின்றனர்.


இதற்கெல்லாம் காரணம் என்ன?

'முதல் கோணலே முற்றும் கோணல்' என்பதுதான். முதலில் எந்தப் படிப்பில் சேரவேண்டும். அதையும் எங்கு சேர வேண்டுமெனத் திட்டமிட்டுச் சேரவேண்டும். எத்தனையோ தகுதியுள்ள, திறமையான, புத்திசாலி மாணவர்கள், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதேவொரு ஓட்டை ஒடைச்சல் கல்லூரிகளில் சேர்ந்து நான்கு, ஐந்து ஆண்டுகளை விரையம் செய்துவிடுகின்றனர். அந்தக் கல்லூரிகளில் எந்த அறிவியல் புரிதலும் இல்லாத, அதேக் கல்லூரியில் படித்த மாணவர்களையே பேராசிரியர்களாக குறைந்தச் சம்பளத்திற்கு நியமித்து, தொடக்கத்திலேயே மாணவர்களின் வாழ்க்கையை அழித்துவிடுகின்றனர்.

ஆனால், பிராமணர்களும் வட இந்திய உயர் வகுப்பினரும், 12-ஆம் வகுப்பு முடித்தக் கையோடு, பிள்ளைகளை ஓரிரு ஆண்டுகள் வீட்டில் இருந்தே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத உதவியாக இருக்கின்றனர்.அதற்கென எத்தனையோ புத்தகங்கள் வெளியில் கிடைக்கின்றன. அதனை முழுமையாகப் படித்து, இரண்டு மூன்று முறை நுழைவுத் தேர்வுகளை எழுதி, தங்களின் இடங்களைக் கைப்பற்றுகின்றனர்.

ஐஐடியிலும், மத்தியப் பல்கலைகழகங்களிலும் நுழைவதுதான் கடினம். நுழைந்தப்பின் எல்லாமும் மாணவர்களைத் தேடி வந்துவிடுகின்றன. பணம், தொழில்நுட்ப கருவிகள், வசதிகள், புத்தகம் என்று எல்லாமும் எளிதாக அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. சிறந்த அறிவியல் புரிதல் உள்ள மாணவர்களாக உருவாகி, புதியப் புதியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்ற பேராற்றல் கொண்ட மாணவர்களாக சமூகத்திற்குள் நுழைகின்றனர்.இந்த திட்டமிட்ட நகர்வு நம்மிடம் இருக்கிறதா?

இல்லை..

எல்லாவற்றிலும் ஓர் அவசரம். உடனே பிஇ சேர்ந்தாக வேண்டும். உடனே வேலைக்கு போயாக வேண்டும். உடனே கை நிறைய சம்பாதிச்சாக வேண்டும். இதன் விளைவு, இன்று பொறியியல் துறை கவிழ்ந்து கிடக்கிறது. எல்லாத் துறைகளிலும் தகுதியில்லாத பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர். இந்தியப் பொருளாதாரம் சரிந்த கையோடு, பொறியாளர்களும் தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பலப் பொறியியல் கல்லூரிகளை மூடுகின்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

ஆனாலும், இன்றும் ஐஐடியன்களுக்கு வாழ்வு உச்சத்தில்தான் இருக்கிறது. ஐஐடியில் தன் படிப்பை முடிப்பதற்கு முன்பே, உலகம் முழுவதும் பறந்துச் சென்று பணியில் அமர்ந்துவிடுகின்றனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் ஒரே பதில்தான் வருகிறது. '12-ஆம் வகுப்பு படித்துவிட்டு, இரண்டு மூன்று ஆண்டுகள் கடினப்பட்டு படித்தேன்.. ஐஐடியில் சேர்ந்தேன்.. சாதித்தேன்..' என்பதுதான் அந்த பதில்.

உங்கள் வீட்டில் வளரும் இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்...

இதே போல் என் தங்கை மகன் மற்றும்அனைத்து +2 மாணவர்களும்  இத்த ஆண்டு நுழைவுத் தேர்வுகளை எழுதி ஐஐடியில் சேர்ந்து  வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

உங்கள் நண்பன்  மு.அஜ்மல் கான்.

Monday 5 August 2024

கஃபாவின் சாவியை பாதுகாக்கும் தற்போதைய காவலர்கள் யார் தெரியுமா..?

கஃபாவின் சாவியை பாதுகாக்கும்  தற்போதைய காவலர்கள் ...


 




மக்காவில் இருக்கும் போது மக்கத்து முஷ்ரிக்குகளின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், தோழர்களும் ஹிஜ்ரத் செய்து  #மதீனாவை அடைந்தனர். 


இஸ்லாமின் வளர்ச்சியுடன், கி.பி 630 இல், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மற்றும் அவர்களது தோழர்கள் மீண்டு வந்து எதிரிகளை வென்று மக்காவைக் கைப்பற்றினர்.  


பனூ ஷைபா கோத்திரத்தினர்கள் :!!

பனூ ஷைபா கோத்திரத்தினர்கள் தான் அதுவரை கஃபாவுடையசாவியின்பாதுகாவலர்களாக இருந்தனர்.  


நபிகளார் அவர்களே அதன் பொறுப்பில் தொடர அனுமதித்தார்கள். 

இன்றும் கூட கஃபாவை கழுகும் போதும், சிறப்பு சந்தர்ப்பங்களின் போதும் பனூ ஷைபா கோத்திரத்தின் இன்றைய தலைமுறையினர்களே கஃபாவை திறக்கின்றனர். 


அந்த குலத்தினரின் பரம்பரையிலுள்ள தற்போது மீதமிருக்கும் உறுப்பினர்களின் படம் இது..


கஅபாவின் சாவியை பாதுகாக்கும்  முக்கிய பாதுகாவலர்கள் படம்:




1. ஷேக் சலாஹுதீன் ஸைனுல் ஆபிதீன் அல் ஷைபி, கஃபாவுடைய சாவியின் தற்போதைய பாதுகாவலர்.. 

(நடுவில் இருப்பவர்..) 


 2. அப்துரஹ்மான் ஸாலிஹ் அல் ஷைபி.. 

     (மேலே இடது) 


 3. அஹ்மத் அப்துர்ரஹ்மான் அல் ஷைபி. 

      (மேலே வலது..) 


 4. சாலிஹ் அப்துர்ரஹ்மான் சாலிஹ் அல் ஷைபி (கீழே வலது) 


 5. ஷாமிக் அப்துர்ரஹ்மான் அல் ஷைபி (கீழே இடது).... 


Tuesday 23 April 2024

காரைக்குடி,கோட்டையூரின் புத்தக பொக்கிஷ மனிதர் ரோஜா முத்தையா செட்டியார்!!

இன்று புத்தக தினத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மூலம் ஒரு லட்சம் புத்தகங்களை , பொக்கிஷம் போல போற்றிப் பாதுகாத்து வந்த ஒரு தனி மனிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


அந்த அபூர்வ மனிதரின் பெயர் ரோஜா முத்தையா செட்டியார். அவர் சிவகங்கை மாவட்டம் , நான் பிறந்த என் ஊர் காரைக்குடி கோட்டையூரில் பிறந்து [ 1926-1992 ]வாழ்ந்தவர்.தன்னுடைய நடுத்தர வயதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களை சேர்த்து விட்டாராம் செட்டியார்..!

தனி ஒரு மனிதனாக , எப்படி இவற்றையெல்லாம் பாதுகாப்பது ...?


இந்த புத்தகங்கள் அனைத்தையும் தஞ்சை பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடலாம்...அல்லது தமிழக அரசிடம் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டார் செட்டியார்,அதற்கான முயற்சிகளை முழு மூச்சுடன் எடுத்தார்..!அடுத்த சில நாட்களில் , அதிகாரிகள் சிலர் வீடு தேடி வர, செட்டியாருக்கு அளவில்லா சந்தோஷம்.அப்பாடா என்று அரசு அதிகாரிகள் வந்து விட்டார்களே என ஆவலோடு வரவேற்றார், ஆனால் வந்தவர்கள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள்.

செட்டியார் பற்றி கேள்விப்பட்டு , தானாகவே முன் வந்த சிகாகோ பல்கலைகழகத்தினர் ,கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்து செட்டியாரிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் அவர்களே எடுத்துக் கொள்ள தயாராக இருந்தார்கள்.

என் பொக்கிஷங்கள் இந்த தமிழ் நாட்டிற்கு மட்டுமே சொந்தம். ” என்று சொல்லி விட்டார்.என்றாவது ஒரு நாள் , தன் புத்தக பொக்கிஷங்களை தமிழக அரசு எடுத்துக் கொள்ளும் என்று தளராத நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்தாராம் முத்தையா செட்டியார் .

செட்டியார் , ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும்போது , அப்போதுதான் பிறந்த குழந்தையை எடுப்பதை விட , மென்மையாக எடுப்பாராம்... எந்த புத்தகத்தை யார் அவரிடம் கொடுத்தாலும் கோடி ரூபாய் பணத்தை கையில் வாங்குவது போல மகிழ்வோடு வாங்குவாராம்.

எல்லோரும் தாங்கள் உடுத்தியுள்ள வேட்டி அழுக்காகாமல்தான் பார்த்துக் கொள்வார்கள். ஆனால்....செட்டியார் தன் புத்தகத்தில் அழுக்கு இருந்தால்,

தான் உடுத்தியிருக்கும் பட்டு வேட்டியால் , புத்தகத்தில் இருக்கும் அழுக்கை மென்மையாகத் துடைப்பாராம்.

தான் வாழும் காலத்திலேயே , எல்லா புத்தகங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட ஆசைப்பட்ட முத்தையா செட்டியார் எதிர்பாராமல் 4.6.1992 அன்று இறந்து போனார்.

அதன்பின் சிக்காகோ பல்கலைக்கழகம் மீண்டும் செட்டியாரின் குடும்பத்தை தொடர்பு கொண்டது...செட்டியாருடைய சேகரிப்புக்கள் அனைத்தையும் , நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டது...

அந்த நூல்கள் அனைத்தையும் அமெரிக்கா கொண்டு செல்லாமல் , செட்டியார் ஆசைப்பட்டபடியே , சென்னையிலேயே ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் 1994-ம் ஆண்டு தொடங்கி , இப்போதும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது சென்னை தரமணியில் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புத்தகம் வாசிப்பது சுகானுபவம். அதை அனுபவித்தவர்கள், ஒரு போதும் மாற மாட்டார்கள். மனதுக்கும் மிக நெருக்கமாக உள்ள புத்தகங்களை வாசிக்கும் போது தான் சிந்தனை பிறக்கிறது. அது செயலாக மாறுகிறது. புத்தக வாசிப்பை வளப்படுத்துங்கள்புத்தகங்கள் வாசிப்பது ஒரு அருமையான பழக்கம். அது நம் அறிவை மேன்படுத்த உதவும். மேன்படுத்துவது மட்டும் இல்லாமல், ஒருவரை பல கோணங்களில் புத்தக வாசிப்பு சிந்திக்க வைக்கும். பல நேரங்களின் உங்களுக்கு புத்தக வாசிப்பு கைகொடுக்கும். 

எனக்கு அவ்வாறு தான் என் முதல் நேர்முகத்தேர்வுக்கு கைகொடுத்தது.
எல்லா கேள்விகளும் கேட்டு முடித்த பிறகு, நேர்முக தேர்வாளர் நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகத்தின் பெயரை கூறுங்கள் என்றார். நான் அப்போது படித்த புத்தகத்தின் பெயரை கூறினேன்
(The Bad Beginning  - A Series of Unfortunate Events, #1 by Lemony Snicket) அதில் வரும் மூன்று தவறுகள் என்ன. அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டார்.

மூன்று தவறுகளைக் கூறி அதில் இருந்து கற்றுக்கொண்டதை கூறினேன். நேர்முக தேர்வாளரும் அந்த புத்தகத்தை படித்து இருப்பர் போல.அவருக்கு நான் கூறிய பதில் பிடித்து இருந்தது. ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்தி மறைமுகமா நீங்கள் Selected என்று வார்த்தைகள் இல்லாமல் கூறினார். புத்தகம் படிப்பது எவ்வளவு நல்லது என்று நான் உணர்ந்த தருணம் அது.


ஒரு வேலை நான் புத்தகம் படிக்காதவனாக இருந்து இருந்தால் நேர்முக தேர்வாளருக்கும் எனக்குமான தொடர்பு அன்றே முடிந்து இருக்கும். இருவரும் புத்தக வாசிப்பாளர்கள் என்பதினால் நாங்கள் இன்று வரை தொடர்பில் உள்ளோம். நான் அலுவகத்திற்கு சேர்ந்த பிறகு அவரை தேடி கண்டுபிடித்து இன்றளவும் தொடர்பில் உள்ளேன். உண்மையில் சொல்லப்போனால் காதலர்கள் இடையே இருக்கும் உறவை விட அற்புதமான உறவு இரண்டு புத்தகம் வசிப்பவர்கள் இடையே இருக்கும்.

புத்தகம் வாசியுங்கள். புத்தகம் வசிக்கும் நபர்களிடம் பேசுங்கள். அது ஒரு தனி உணர்வு. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உறவாக இருக்கும்.


இந்த புத்தக தினத்தில் புத்தகங்களை வாசிப்போம் என உறுதி எடுத்துக்கொண்டுஇன்றே தொடங்குங்கள்.

என்றும் என் வாழ்த்துக்களுடன்...

உங்கள் மு. அஜ்மல் கான்.

Thursday 25 January 2024

கூனைப்பூ ( Artichoke) வில் இவ்ளோ விஷயம் இருக்கா??? தெரியாம போச்சே!!

 நாம் சமீப காலமாக ஊடகங்களில் கூனைப்பூ பற்றிய செய்திகள் வருவதை கண்டிருப்போம்.  கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது.இந்தக் கட்டுரையில், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட 10கூனைப்பூ நன்மைகள் மற்றும் கூனைப்பூ சத்துக்கள் பற்றி விவரமாக காணலாம்.

முன்னுரை  :'கூனைப்பூ' என்பது 'திஸ்டில் மற்றும் பால் திஸ்ட்டின்' குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். "லத்தீன் சினாரா" என்று அழைக்கப்படும் "கூனைப்பூ" கேனரித் தீவுகள் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் அதிகம் காணக் கிடைக்கிறது.

இந்த வகைப் பூ அதிக அளவில் மருத்துவ குணங்கள் கொண்டது. அதிலும், கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்கக் கூடியதாக இருக்கிறது. மேலும், இந்தப் பூ உண்ணக் கூடிய காய் கறி வகையைச் சேர்ந்தது ஆகும். வளர்ச்சியின் செயல்பாட்டில், இது 2 மீ உயரம் வரை காணப்படும். கூனைப்பூ வெப்பத்தை விரும்பும் தாவரமாகும் என்ற போதிலும், இது சிறிய வெப்பநிலை சொட்டுகள் மற்றும் லேசான உறைபனிகளுடன் கூட உயிர்வாழக்கூடியதாக உள்ளது. இதன் கூம்புகளை உண்ணலாம். சுவையில் அவை பழுக்காத அக்ரூட் பருப்புகளுக்கு ஒத்தவை. கூனைப்பூவில் சுமார் 140 இனங்கள் உள்ளன, அவற்றில் 40 மட்டுமே மதிப்புமிக்கதாக கருதப்படுகின்றன. அதன் சாகுபடியின் வரலாறு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. அதன் சாகுபடியில் முதல் அனுபவம் ரோமானியர்களால் பெறப்பட்டது, அவர்களுக்குப் பிறகு கிரேக்கர்களும், எகிப்தியர்களும் இதனைப் பயன்படுத்தினர்.


கூனைப்பூ சத்துக்கள்:

குறிப்பிட்ட வகை கூனைப்பூக்கள் மற்றும் அவை எவ்வாறு சமைக்கப் படுகின்றன என்பதைப் பொறுத்து இந்த மதிப்புகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

கூனைப்பூக்கள் சுவையானது மட்டுமல்ல, சமைக்கும் போது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் நிரம்பியுள்ளது. 100 கிராம் சமைத்த கூனைப்பூக்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் தோராயமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மக்ரோநியூட்ரியண்ட்ஸ்:

கலோரிகள்: 100 கிராம் சமைத்த கூனைப்பூவில் தோராயமாக 47 கலோரிகள் உள்ளது. ஒப்பீட்டளவில் இவை கலோரிகளில் சற்று குறைவாக உள்ளது.

கார்போஹைட்ரேட்டுகள்: இவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும், 100 கிராமுக்கு சுமார் 11 கிராம் வழங்குகிறது.

புரதம்: கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு சுமார் 3.5 கிராம் புரதத்தைக் கொண்டிருக்கின்றன, அவை இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கான மிதமான ஆதாரமாக அமைகின்றன.

நார்ச்சத்து: கூனைப்பூக்கள் நார்ச் சத்தின் வளமான மூலமாகும். 100 கிராமுக்கு தோராயமாக 5 கிராம் நார்ச்சத்து நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளது.


வைட்டமின்கள் :

வைட்டமின் சி:
சமைத்த கூனைப்பூக்கள் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், 100 கிராம் கூனைப்பூவில் சுமார் 9.6 மில்லிகிராம்கள் உள்ளன. நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி முக்கியமானது.

வைட்டமின் கே: கூனைப்பூக்கள் வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகும், 100 கிராம் கூனைப்பூவில் 14.8 மைக்ரோகிராம் வைட்டமின் கே உள்ளது.

வைட்டமின் பி6: 100 கிராம் சமைத்த கூனைப்பூவில் 0.2 மில்லிகிராம் வைட்டமின் பி6 காணப்படுகிறது.


தாதுச்சத்துக்கள்:

பொட்டாசியம்:கூனைப்பூக்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, 100 கிராமுக்கு சுமார் 370 மில்லிகிராம்கள் உள்ளன.

மக்னீசியம்:கூனைப் பூ 100 கிராமில் 60 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது. மக்னீசியம் தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

பாஸ்பரஸ்:கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு தோராயமாக 75 மில்லிகிராம் பாஸ்பரஸை வழங்குகிறது, இது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

இரும்பு:மிக அதிகமாக இல்லாவிட்டாலும், கூனைப்பூக்கள் 100 கிராமுக்கு 0.6 மில்லிகிராம் இரும்புச்சத்தை வழங்குகின்றன, இது உங்கள் தினசரி இரும்பு உட்கொள்ளலுக்கு பங்களிக்கும்.


ஆக்ஸிஜனேற்றிகள்:

ஃபிளாவனாய்டுகள்:
கூனைப்பூக்களில் குர்செடின் மற்றும் ருட்டின் உள்ளிட்ட ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த கலவைகள் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
மற்ற ஊட்டச்சத்துக்கள்:

ஃபோலேட்: சமைத்த கூனைப்பூக்களில் 100 கிராமுக்கு 68 மைக்ரோகிராம் ஃபோலேட் உள்ளது. ஃபோலேட் உயிரணுப் பிரிவு மற்றும் டிஎன்ஏ உருவாவதற்கு முக்கியமானது.


கூனைப்பூ நன்மைகள் :

கூனைப்பூக்கள் 2,000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களால் அவற்றின் சமையல் மற்றும் மருத்துவ குணங்களுக்காக பயிரிடப்படுகிறது. சில கூனைப்பூ நன்மைகள் பின்வருமாறு...

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை:கூனைப்பூவில் குர்செடின் மற்றும் ருடின் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மேலும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

செரிமான ஆரோக்கியம்:அவை கூனைப் பூவில் கனிசமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. கூனைப்பூ இலை சாறு எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறிகளைக் குறைக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம்:

கூனைப்பூவில் சினரின் மற்றும் சிலிமரின் போன்ற கலவைகள் உள்ளன. அவை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:

கூனைப்பூ உணவில் சேர்த்துக் கொள்வது “கெட்ட” எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
எடை மேலாண்மை:

இந்த காய்கறியில் உள்ள ஃபைபர் வயிறு நிரம்பிய உணர்வை ஊக்குவிக்கிறது. எனவே அதிக உணவு உண்ணப்படுவதைக் குறைத்து எடை இழப்பில் உதவுகிறது.

நீரிழிவு மேலாண்மை: கூனைப்பூக்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. மேலும் அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்காறியாகும்.

புற்றுநோய் தடுப்பு:கூனைப்பூக்களில் உள்ள சில கலவைகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ளது. கூனைப்பூ புற்றுநோயை தடுக்க வல்லது. புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது எப்படி எனில், கூனைப்பூ (ஆர்டிசோக்) இலையின் சாறுகள் அப்போப்டொசிஸை தூண்டி புற்றுநோய் செல்களை அளிக்கிறது. கூனைப்பூவில் அதிகமாக பிளவோனோய்ட்ஸ் நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. மேலும் புரோஸ்டேட் புற்றுநோய், லுகேமியா போன்றவை ஏற்படுவதையும் தடுக்கிறது. கூனைப்பூ நோய் எதிர்ப்பு சக்தியை நல்ல முறையில் மேம்படுத்துகிறது: கூனைப்பூவில் ரூடின், ஆன்தோ சயனின்ஸ், சினாரின் லுடேலின் மற்றும் சிலிமரின் போன்ற நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளன. இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.


எலும்பு ஆரோக்கியம்: வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்த கூனைப்பூக்கள் வலுவான எலும்புகளுக்கு பங்களிக்கின்றன மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தைக் குறைப்பதில் உதவுகிறது.


தோல் ஆரோக்கியம்: கூனைப்பூவில் நிரம்பியுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான அறிகுறிகளைக் குறைத்து, பொலிவான நிறத்தை மேம்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு: கூனை பூவில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.


முடிவுரை: கூனைப்பூக்கள் ஒரு சுவையான சுவையாக மட்டுமல்ல, அறிவியல் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப் பட்ட பல ஆரோக்கிய நன்மைகளின் சக்திவாய்ந்த ஆதாரமாகும். அவை பல நன்மைகளை வழங்கினாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வதால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Monday 1 January 2024

ஐந்து வக்திற்கு சொல்லப்படும் பாங்கின் ஐந்து இராகம்!! ஒரு தவகல்..


துருக்கி நாட்டில் எங்கே சென்றாலும் அங்குள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் சொல்லப்படக் கூடிய பாங்கின் இனிமையான ஓசை நிச்சயம் செவிக்கு விருந்தளிக்கும்.இது சாதாரண விஷயம் என்று எண்ணி விடக் கூடாது.இவ்வளவு இனிமையாக துருக்கி மக்கள் பாங்கு சொல்வதற்கு 500 வருட கால பாரம்பரியம் உள்ளது.இதற்கென்றே தனி மத்ரஸாக்கள் உள்ளது .தனி ஆசிரியர்கள் உள்ளார்கள்.  

சில வருடங்களுக்கு முன்பு அல்ஜசீரா செய்தி நிறுவனம்."அல் அதான் (பாங்கு )- மக்களை சத்தியத்தை நோக்கி அழைக்கும் அழகிய குரல்கள் " என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.அந்த நிகழ்ச்சியில் துருக்கியிர்கள் பாங்கு சொல்வதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.அதெற்கென்றே பிரத்யேக இராகத்தை உருவாக்கியுள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் அல் உஸ்தாத் முஹம்மத் ஹாதி தவ்ரான் இஸ்தான்புலில் உள்ள "அஸ்ஸுல்தான் அஹ்மத்" என்ற மிகப்பெரிய மஸ்ஜிதின் முஅத்தின் (மோதினார்) கூறுகிறார்: உஸ்மானிய்யா பேரரசின் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் ஐந்து முஅத்தின்கள் நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறான முஅத்தின்கள் தங்களது குரல் வளத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள்.ஏன்?

சராசரியாக ஒரு மனிதன் தனது வாழ்வில் ஐந்து வகையான படித்தரங்களை கடக்கிறான்.அதேபோல ஒரு நாளில் ஐந்து வகையான பொழுதுகளை அவன் கடக்கிறான்.மனிதன் தினசரி கடக்கும் இந்த ஐந்து பொழுதுகளை நம் முன்னோர்கள் நன்கு புரிந்து வைத்தார்கள்.ஐந்து நேரங்களில் மனிதனது உணர்வுகள் ஒவ்வொரு நேரங்களிலும் மாறுபடும்.

காலை ஃபஜ்ரு நேரத்தில் இருக்கிற உணர்வு லுஹர் நேரத்தில் வேறு மாதிரி இருக்கும்.அதேபோல அஸர் , மஃரிப், இஷா ஆகிய ஒவ்வொரு நேரத்திலும் மனித உணர்வுகள் வேறுபட்டு கொண்டே இருக்கும்.இசைக்கும் மனித உணர்வுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புள்ளது. கருவிகள் மூலம் இசைக்கப்பட கூடிய இசையை விட மனிதனின் தொண்டையிலிருந்து வெளிபடும் ஓசை மிகவும் நுட்பமானது.


இதனால் நம் முன்னோர்கள் ஐந்து நேரங்களில் பாங்கு கூறுவதற்கு
ஐந்து வகையான இராகங்களை உருவாக்கினர்.இதற்கு ஸபா, அஷாக், ரஸ்த், ஸீகா, ஹிஜாஸ் என்று பெயரிட்டனர்.ஐந்து வகை பாங்கின் இராகத்திற்கு ஏற்ப குரல் வளம் கொண்டவர்களை மட்டுமே அந்த அந்த நேரத்திற்கான தனித்தனி முஅத்தின்களாக நியமித்தனர்.

1) ஸபா : ஃபஜ்ரில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஸபா.அதிகாலை பொழுதில் உள்ளம் இன்னும் சிறிது நேரம் உறங்கலாம் என்று கூறும் தருணத்தில் சொல்லப்படும் பாங்கு அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக அப்படியே செவிகளுக்கு இதமாக மிருதுவான இராகத்தோடு சொல்லப்படும்.

2) அஷாக்: லுஹர் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் அஷாக். உச்சி பகல் நேரத்தில் மனிதன் தனது பணியில் தீவிரமாக ஈடுபடும் நேரம். இந்த நேரத்தில் அவனை பள்ளிக்கு வரவழைக்க சொல்லப்படும் பாங்கு உத்வேகம் கலந்த இராகத்தோடு சொல்லப்படும் ‌.

3) ரஸ்த்: அஸர் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர்.ரஸ்த். பரபரப்பான பகல் பொழுது புறப்பட ஆயத்தமாகும் போது சிறிய ஓய்வு மனிதனை வருடும்.இந்த பாங்கோசை அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக சிறிய பரபரப்போடும் அதேநேரத்தில் சிறிது ஏக்கமும் கலந்த இராகத்தோடு சொல்லப்படும்.

4) ஸீகா: மஃரிப் நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஸீகா. இது பகல் பொழுது விடைபெற்று இரவு மெல்ல படரத் துவங்கும் நேரம். சோர்வும் உடல் முழுக்க படரத் துவங்கும் நேரமும் இதுவே . இதனால் இந்த நேரத்தில் சொல்லப்படக் கூடிய இராகம் மனதினுள் ஊடுருவி சோர்வை மெதுவாக கலைத்து அவனை பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக இந்த இராகம் அமைந்திருக்கும்.

5) ஹிஜாஸ்: இஷா நேரத்தில் சொல்லப்படும் பாங்கின் இராகத்தின் பெயர் ஹிஜாஸ்.ஒரு நாளுடைய முடிவு அடுத்த நாளுடைய உழைப்பிற்காக நீண்ட ஓய்வுக்கு தயாராகும் தருணம்.இந்த நேரம் என்பது அமைதியில் ஆழ்ந்து ஒரு மோன நிலைக்கு உள்ளம் செல்லும் நேரம்.எனவே

மயிலிறகை உடலில் மெல்ல வருடுவது போல உள்ளத்தை மெல்லிசையால் வருடி அவனை‌ பள்ளிக்கு வரவழைக்கும் விதத்தில் இந்த இராகம் அமைந்திருக்கும்.

இது புத்தகங்களின் பதிவு செய்யப்பட்ட கலையோ கல்வியோ அல்ல. செவி வழியாக தலைமுறை தலைமுறையாக பயணிக்கும் கல்வி.இந்த பாரம்பரியத்தை பாதுகாக்க துருக்கி அரசே இதனை எடுத்து நடத்தி வருகிறது.

நன்றி : மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Friday 18 August 2023

YouTube சமூகத்தில் கோமாளிகள் பப்லிசிட்டிக்காக, பணத்துக்காக ஆபாசமாக உருவெடுக்கும் ஆபத்து !!





 YouTube ல  காசு சம்பாதிக்கலாம் என்று தெரிந்ததின் விளைவு பல சோம்பேறிகள் ,பைத்தியங்களின் வருகைக்கு காரணமா அமைந்துள்ளது 


சமூகத்தில் ஒரு கோமாளியை தெரிவு செய்து அவனுக்கு பப்லிஸிட்டி ஆசை காட்டி அவனை வெட்கம் கெட்ட கிறுக்குத்தனமான செயலில் ஈடுபட வைத்து நெகடிவ் பப்லிசிட்டி தேடிக்கொடுத்து அப்பறம் அவன் தொடர்பான வீடியோக்களை YouTube இல் அப்லோட் செய்து வருமானம் பார்க்கும் ஒரு சில கேவலம் கெட்ட பிழைப்பு புதிதாக உருவெடுத்துள்ளது 


இந்த மாதிரி கோமாளிகளை Troll செய்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் சில கூட்டமும், ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத இந்த கூழ்முட்டைகளை Interview எடுக்கிறோம் என்ற பெயரில் வருமானம் பார்க்கும் சில கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது இதன் விளைவு நல்ல நோக்கத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்துக்கு பயன் தரக்கூடிய விடயங்களை YouTubeல எடுத்து சொல்லும் நல்ல மனிதர்களுக்கு இது பாதமாக அமைந்துள்ளது சிலர் YouTubeல இருந்து வெளியேறவும் இது காரணாமாக அமைகின்றது


 இதற்கு முழு பொறுப்பும் நாங்கள்தான் நாம் அந்த  கோமாளிகளின் உள் நோக்கம் தெரிந்தும் அதனை ரசித்து உண்மை என்று நம்பி பார்ப்பதும் அதற்கு ஆதரவு கொடுப்பதும் தான் Youtube காரனே அந்த கோமாளிகளை தன்னுடய சுயநலத்துக்காக வளர்த்து விட காரணமாக அமைகின்றது 


தன்னை வெகுளித்தனமான மனிதன் போல காட்டி கொள்வதும் ,தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நடிப்பதும் ,Content இல்லாததுக்காக மற்றவனை விமர்சிப்பதும் ,ஆபாசமாக நடந்து கொள்வதும் ,Prank Video என்ற பெயரில் மற்றவனை தொந்தரவு பண்ணுவதும் ,விழிப்புணர்வு என்ற பெயரில் உண்மை போல நாடகம் அரங்கேற்றி மக்களை முட்டாள் ஆக்குவதும் , ஏற்கனவே வசதியாக இருக்கும் சில celebrity கள்  குறிப்பாக சீரியல் நடிகைகள் அப்பாவி மக்களை முட்டாள் ஆக்கி ஒன்றுக்கும் உதவாத பொருட்களை விளம்பரம் செய்து மக்களையும் அதனை வாங்க சொல்லி தன்னுடய சுயநலத்துக்கா மக்களின் பணத்தை வீணடிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் 


மற்றும் சில நடிகைகள் பெருமைக்கு தன்னுடய வசதியை காட்ட home Tour ,Bedroom Tour என்று செய்வது போதாது Toilet Tour யையும் விட்டு வைக்காத சில மூதேவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் 


இத விட கேவலம் Food Review என்ற பெயரில் அவன் கொடுக்கும் பணத்துக்கும் சாப்பாட்டுக்கும் ருசி இல்லாத உணவை கூட வேற லெவல் என்று சொல்லி ஒரு கூட்டமும் சமூகத்தில் உலாவி வருகிறார்கள்


 யூதன் (இலுமினாட்டி) புதிதாக ஒவ்வொன்றை கண்டுபிடித்து அதற்க்கு நம்மை அடிமை ஆக்கி விட்டு மற்ற ஒன்றை கண்டுபிடிக்க சென்று விடுகிறான் நாங்கள் எமது அறிவை அதற்குள் மட்டுப்படுத்தி விடுகிறோம் 


முக்கியத்துவம் எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்பாக இருங்கள் அது அறிவு மிக்க சமூகம் தோன்ற அடித்தளமாக இருக்கும்


உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் வளர்ந்து வரும் குழந்தைகளின் நலன் கருதி இப்படியானவர்களை புறக்கணியுங்கள் ,கண்டு கொள்ளதீர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மக்களுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்


இது தொடர்ந்தால் உங்கள் சந்ததியில் கூட சிலர் பப்லிசிட்டிக்காக, பணத்துக்காக ஆபாசமாக சமூக வலையத்தளங்களில்  உருவெடுக்கும் ஆபத்து உருவாகி விடும் இது எனது மனக்குமுறல் சரியென்றால் செயார் செய்யுங்கள்


இந்த லிஸ்டில் பலர் இருக்கிறார்கள் ஒரு சிலரை மாத்திரம் இங்கே சுட்டி காட்டியுள்ளேன் அவர்கள் பற்றி விவாதிக்காவோ ,தேடவோ ,சிரிப்பதுக்காக இதனை பதிவு செய்யவில்லை சிந்தித்து தெளிவு பெற மாத்திரமே இந்த பதிவு..



Saturday 22 April 2023

குளச்சல் பிறை சர்சையும், விளக்கமும்!! ஒறு இஸ்லாமிய பார்வை...


இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!!

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிறை சர்ச்சை.எந்த சார்பும் இல்லாத என் தனிப்பட்ட கருத்தை பதிவிடுகிறேன், குளச்சலால் குழப்பம் தேவையில்லை….

கண்ணியாகுமரி குளச்சலில் பிறை பார்க்கப்பட்டதாக சொன்னாலும் அதை தமிழ்நாட்டில் நாம் ஏன் ஏற்பது இல்லை?

உண்மையிலேயே குளச்சல் தமிழகததின் ஒரு பகுதி தான் என்றாலும் பூகோள அமைப்பில் குளச்சல் தமிழகத்தின் பூகோள அமைப்பிற்கு முற்றிலும் மாறுபட்டது.

முதலாவது..

தமிழகத்தின் அனைத்து கடலோர ஊர்களும் கிழக்கு நோக்கிய கடற்கரைகளைக் கொண்டிருக்கும்போது நாகர்கோவிலுக்கு மேற்கே உள்ள ஊர்கள் அனைத்தும், அவை தமிழக எல்லைக்குள் வந்தாலும் மேற்கு நோக்கிய கடற்கரையை கொண்டவை. அதாவது இந்திய பெருங்கடலும் அரபிக் கடலும் இணையக்கூடிய பகுதிகளை தாண்டி இருக்கக்கூடிய ஊர்கள் அரபிக் கடலின் கடற்கரையைக் கொண்டவை. அதில் குளச்சலும் ஒன்று.

இரண்டாவது…


உண்மையில் குளச்சல் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே ஒரு காலத்தில் கேரளத்தில் ஒரு பகுதியாகவே இருந்தது.

சுதந்திரத்திற்கு பிறகும் கூட 1956 வரை கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தான் இருந்தது. பிறகு தான் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. காரணம் அதன் அமைப்பு.

புவியியல் அடிப்படையில் குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் முதலிய ஊர்களெல்லாம் கேரளத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன.

புவி வரைபடத்தில் (Satellite Map) பார்த்தால் கூட கேரளாவிற்கென்ற புவியியல் அமைப்பு (மலைத் தொடர்ச்சி, கடற்மட்ட உயரம்) நாகர்கோவில் பகுதி வரை தொடர்வதை பார்க்க முடியும்.

மூன்றாவது…

கேரளாவின் கடற்கரைகளைப் போன்றே கடற்மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரமான (MSL - Mean Sea Level) ஊர்கள் இவை.

சாதாரணமாக நீண்ட அரபிக்கடற்பகுதியும் கடற்மட்டத்திலிருந்து உயர்ந்த நிலமும் (சராசரி MSL உயரம் 1150 மீட்டர்) கொண்ட கேரள மாநிலத்தில் நாட்டின் மற்ற பகுதிகளை விட ஒரு நாள் முன்பு பிறை தெரிவது இயல்பே..

எனவே, அதிகமான காலங்கள் கேரளாவிற்கு பிறை தென்படும் போது அதன் தொடர்ச்சியாக குளச்சல் நாகர்கோவில் போன்ற பகுதிகளிலும் தென்படுவது இயற்கையே. ரமழான் பிறை மட்டுமல்ல மற்ற மாதங்களின் பிறைகளும் இங்கு ஒரு நாள் முன்பே தென்பட்டுள்ளன.

எனவே மாநிலம் எல்லையில் இருந்தாலும் பூகோள அமைப்பில் அது மற்ற தமிழகத்தின் பகுதிகளுக்கு மாற்றமாக இருக்கும் காரணத்தால் வெறுமனே குளச்சலில் அல்லது அதன் சுற்று வட்டாரத்தில் மட்டுமே பார்க்கப்பட்டு வேறு எங்குமே பார்க்கப்படாத பிறையை முழு தமிழகத்திற்கும் ஏற்றுக் கொள்வது சாத்தியமாகாது.

அதாவது தமிழகத்தின் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள 950 கிலோமீட்டர் நீளத்துக்கும் பல்வேறு இஸ்லாமிய ஊர்கள் வழிநெடுக இருந்தும், எண்ணிலடங்கா மக்கள் பிறையைத் தேடியும், தகவல்களை உடனுக்குடன் பரப்ப வழிகள் இருந்தும் கூட மாநிலத்தில் மட்டுமல்ல நாட்டிலேயே எங்குமே பிறை தெரியாத போது புவியியல் அமைப்பில் வேறுபட்டிருக்கும் ஒரு ஊரின் பிறையை வைத்து ஒன்னரை லட்சம் ச.கிமீ கொண்ட முழு தமிழகத்திற்கும்‌ பிறையை முடிவு செய்வது சரியாகுமா ?

சிந்நியுங்கள் மக்களே....

தலைமை காஜி மற்றும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த சில தகவல்களை பகிர விரும்புகிறேன்.

பிறை பார்த்த செய்திக்காக நேற்று மாலையில் தலைமை காஜியுடன் பல மார்க்க அறிஞர்கள், பிரமுகர்கள், ஊடகவியலர்கள் காத்திருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து பிறை பார்த்த செய்தி வந்தவுடன் கடிதம் வாயிலாக வாட்ஸ் அப்பில் உறுதி செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா "ஷைக்குத் தப்ஸீர்"அல்ஹாஜ் R N K அபுசாலி பாசில் பாகவி, தமிழ்நாடு அரசு தலைமை காஜி, கன்னியாகுமரி மாவட்டம்.அரசாணை கையொப்பமிட்ட கடிதத்தில் குளச்சல் பகுதியில் பிறை தென்பட்டதாக ஜமாத் செயலாளர் அறிவித்துள்ளதை மாவட்ட தலைமை காஜியான தான் உறுதி செய்வதாக அறிவித்துள்ளார்.

அவர் பார்த்ததாக உறுதி செய்யாத நிலையில் அவர் குறிப்பிட்ட செயலாளரை தொடர்பு கொண்ட போதும் அவரும் பார்த்ததாக உறுதி செய்யவில்லை. அங்கிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் கடல் கரையில் அல்லது கடலுக்குள் சென்று மூன்று அல்லது ஐந்து வினாடிகள் பிறை தெரிந்ததாக முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டதால் அச்சாட்சியத்தை சென்னை வாழ் எளிய தலைமை காஜி ஏற்கவில்லை.

தமிழகத்தின் வேறு பகுதிகளில் இருந்து தகவல் ஒன்றும் வராத நிலையில் வெள்ளியன்று முதல் நோன்பு என்ற அறிவிப்பை காஜி வெளியிட்டார்.

பல தவ்ஹீத் இயக்கங்கள் அவரவர்கள் தனியாக கமிட்டி காஜி என்று அமைத்து அவர்களாகவே பிறை நிர்ணயம் செய்வது பல ஆண்டுகளாக தொடர்வதைப் போல் இந்த ஆண்டும் தொடர்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் குமரி சகோதரர்களிடையே இந்த பிறை பார்த்தல் விவாதங்கள் பகிரப்பட்ட போது நான் பெரிதும் மதிக்கும் குளச்சல் சார்ந்த தமிழகம் நன்கு அறிந்த சமூக ஆர்வலரிடம் விளக்கம் கேட்டேன்.

குமரி மாவட்ட ஜமாத்துகள் தமிழக அறிவிப்பை தவிர்த்து கேரள அறிவிப்பின்படி செயல்படுவதை குறிப்பிட்டதற்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் கேரள முஸலியார் வழி நடத்துவதால் இந்த முறை பின்பற்றுவதாக கூறினார். கேரளத்தில் கோழிக்கோடு காப்பாடு முசலியார் அறிவிப்பில் கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து செயல்படுவதை அவர் கருத்து உறுதி செய்தது.

அப்பகுதி முன்பு திருவாங்கூர் சமஸ்தானத்துடன் கேரள பகுதிகளுடன் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாடு முழுவதும் முற்றிலும் சென்னை தலைமை காஜி அறிவிப்பை ஏற்று பிறை சார்ந்த நிகழ்வுகள் நடத்தி வந்த நிலையில் இவ்வருடம் இப்பிரச்சினை வருவதற்கு காரணத்தை ஆராய்வோம்.

குளச்சல் கடலோரத்தில் பார்த்ததாக ஊர்ஜிதம் செய்யாத பிறை பார்த்ததை இதுவரை தமிழகத்தின் ஏனைய பகுதிகளுடன் இணையாத குமரி மாவட்டம், தமிழ் நாடு முழுவதும் இப் பிறை பார்த்தலை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவது எந்த வகையில் பொருந்தும் என்று என் சிற்றறிவுக்கு தெரியவில்லை.

பெரும்பாலும் வானம் தெளிவாக நாடு முழுவதும் இருந்த நிலையில் பிறை பார்த்த அறிவிப்பு எங்கும் வரவில்லை. அறிவியல் சார்ந்தும் அன்றைக்கு பிறை தெரிய வாய்ப்பில்லை என்று பகிரப்பட்டது.

குளச்சலில் பிறை பார்த்த அறிவிப்பு வராமல் இருந்தால் பேசாமல் கேரள காப்பாடு முசலியார் அறிவிப்பை ஏற்று இருப்பார்கள் என்பது திண்ணம்.

இந்த கூப்பாடு வந்திருக்க வாய்ப்பில்லை.

அறிவார்ந்த கன்னியாகுமரி மாவட்ட சகோதரர்கள் ஆலோசித்து தமிழக பகுதிகளுடன் பிறை சார்ந்த முடிவெடுத்து நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் விழைகிறேன்.

இச்சூழ் நிலையில் சென்னை தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் 
எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.






யார் இந்த தலைமைகாஜி???அவர் ஏன் பிறை தெரிவதை தீர்மானிக்கவேண்டும்??

அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாப் என்று அழைக்கப் படுகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது. இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப் பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப் பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும்,இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது,பார்சி,அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன்,மார்க்க,வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.

கடைசியாக விஷயத்துக்கு வருவோம். தமிழக காஜியின் பத்வா அடிப்படையிலிலேயே தமிழக முஸ்லிம்கள் தங்கள் பெருநாள்களை கொண்டாடி வருகின்றனர். சுன்னத் வல் ஜமாத்இனரின் எந்த பத்வாவையும் ஏற்காத மாறாக முஷ்ரிக்குகள் என்று தங்கள் கருத்துக்களை ஏற்காத சுன்னத் ஜமாத்தினரையும் பிற அமைப்புகளை சார்ந்த முஸ்லிம்களையும் தூற்றி வரும் ததஜ அமைப்பினர் பிறை விஷயத்தில் தங்கள் விருப்பத்துக்கு தலைமை காஜியை பத்வா கொடுக்க வேண்டும் என நினைப்பதும், அவ்வாறு நடக்கவில்லையென்றதும் தலைமை காஜியின் வயதையும் அவர் மார்க்க அறிஞர் என்பதையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக ஏசி வருவதையும் சகிக்க முடியவில்லை.

இறுதியாக தலைமை காஜியை மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்களுக்கு தெரிய அவர் மிக,மிக எளிமையானவர், மக்கள் எளிதில் அணுகக் கூடியவர் அது மட்டுமல்ல எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர்.

தான் வகிக்கும் பொறுப்புக்காக அரசிடம் இருந்து சம்பளமோ,சலுகைகளோ, சைரன் காரோ, தலைமை அலுவலகமோ பெறாதவர்.

மாநிலம் முழுவதும் சென்னை தலைமை காஜி அறிவிப்பை ஏற்று ரமலான் மாதத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ஒற்றுமையுடன் ரமலானை வரவேற்று இறை பொருத்தத்தை பெற வல்ல இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன்.

உங்கள்  மு.அஜ்மல் கான்.