Thursday, 13 February 2025

EPC Project key Interfaces between Electrical and Instrumentation Departments!!

Electrical Department


1. Power Distribution: Design and installation of power distribution systems, including switchgear, transformers, and cabling.


2. Motor Control Centers (MCCs): Design, installation, and testing of MCCs for controlling electrical motors.


3. Lighting and Earthing: Design and installation of lighting systems and earthing systems for safety.


Instrumentation Department


1. Process Instrumentation: Design, installation, and testing of process instrumentation, including sensors, transmitters, and control valves.


2. Control Systems: Design, installation, and testing of control systems, including programmable logic controllers (PLCs), distributed control systems (DCS), and supervisory control and data acquisition (SCADA) systems.


3. Safety Instrumented Systems (SIS): Design, installation, and testing of SIS for ensuring process safety.


Key Interfaces


1. Electrical Power Supply: Electrical department provides power supply to instrumentation equipment, such as transmitters, control valves, and PLCs.


2. Instrumentation Signal Transmission: Instrumentation department transmits signals to electrical equipment, such as MCCs and switchgear, for control and monitoring purposes.


3. Control System Integration: Electrical and instrumentation departments integrate control systems, such as PLCs and DCS, to control and monitor electrical and process systems.


4. Earthing and Bonding: Electrical department ensures earthing and bonding of instrumentation equipment to prevent electrical shock and ensure safety.


5. Cable Routing and Management: Electrical and instrumentation departments collaborate on cable routing and management to ensure safe and efficient installation.


6. Testing and Commissioning: Both departments collaborate on testing and commissioning of electrical and instrumentation systems to ensure safe and efficient operation.


Benefits of Effective Interface Management

1. Improved Safety: Ensures safe operation of electrical and instrumentation systems.


2. Increased Efficiency: Optimizes system performance and reduces downtime.


3. Reduced Costs: Minimizes rework and reduces costs associated with errors or omissions.


4. Enhanced Collaboration: Fosters collaboration and communication between electrical and instrumentation departments.

Tuesday, 4 February 2025

நிஸ்ஃபு ஷஃபான் என்று அழைக்கப்படும்பாக்கிய மிகு பராஅத் இரவின் மகிமை !!






ஹாமீம்! தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மானிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன.
 அல் குர்ஆன் 44:1, 2, 3, 4.


இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா?
இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழி தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்தும் நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) கூறுகிறார்கள்.
(மிஷ்காத் நபி மொழி எண்: 1305 விரிவுரை மிர்காத்).


அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கேட்டு விட்டுக் கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும்.
நபிமொழி. பதிவு: பைஹகி. ஆதாரம் மிஷ்காத்: 1302.


மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாயகம் (ﷺ) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். “மாதங்களில் ஷஃபானில் மட்டும் நீங்கள் நோன்பு பிடிக்க மிகவும் விரும்புவதேன்?” என்று நான் அவர்களிடம் கேட்டேன் அதற்கு அண்ணலார் (ﷺ); “ நிச்சயமாக அதில் தான் அல்லாஹ் அந்த வருடம் மரணிப்பவர்களை தீர்மானிக்கிறான். என்னைப்பற்றிய தீர்மானம் வரும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்.” என எடுத்துரைத்தார்கள். 
பதிவு அபுயஃலா. ஆதாரம் அத்தர்கீப்: 1540.


இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிப்பார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.


“வானம் பூமி படைப்பதற்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் விதிகளை எழுதி விட்டான்.” 
நபிமொழிப் பதிவு. முஸ்லிம்: 2653.


குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு கேள்விக்கு நாயகம் (ﷺ) அவர்கள் பதிலளிக்கையில்; “நீங்கள் சந்திக்கப்போகும் எல்லா விஷயம் குறித்தும் (விதி) எழுதிய பேனா (மை) உலர்ந்து விட்டது. செய்யுங்கள் அல்லது செய்யாமல் போங்கள்” என்று எச்சரித்தார்கள். விதி என்பது இவ்வுலக கட்டமைப்பிற்கான அல்லாஹ் போட்ட பிளான் (திட்ட வரைவு) ஆகும். மனிதன் போட்ட பிளான் மாறும். அல்லாஹ் போட்ட பிளான் மாறாது. முடிவெடுக்கப்பட்ட இத்தீர்மான்கள் யாவும் “லவ்ஹுழ் மஹ்பூழ்” (பாதுகாக்கப்பட்ட பேழையில்), முறையாக முன்னமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் இந்த தீர்மானகளை நடைமுறைப் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான கழா கத்ரு தீர்மானங்களை நகல் எடுக்கும் பணி அதாவது லவ்ஹுல் மக்பூழிலிருந்து பிரதியெடுக்கும் பூர்வாங்க வேலைகள் இந்த பராஅத் இரவில் தொடங்கி லைலதுல் கத்ருடைய இரவில் நிறைவு பெறும். இந்த இறை திட்ட மாதிரி வடிவங்களை அது சம்பந்தப்பட்ட இறை மேலதிகாரிகளான வானவர்களிடம் புனித லைலதுல் கத்ருடைய இரவில் ஒப்படைக்கப்படும். இந்த வகையில் தான் இந்த இரண்டு இரவுகளில் காரியங்கள் தீர்மானிக்கப்பட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில விஷயங்களை அல்லாஹ் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறான். அடியான் கேட்டால் (துஆ செய்தால்) கொடுக்கலாம். அல்லது இன்ன நன்மையான செயல் அவன் புரிந்தால் இந்த பாக்கியம் அவனுக்கு வழங்கலாம். அவனது ஆயுளை நீடிக்கலாம். இரண பாக்கியம் கூடுதலாக கொடுக்கலாம். அல்லது குறைத்து விட வேண்டியதுதான், அவன் தர்மம் செய்தால் அவனுக்கு வர வேண்டிய பேராபத்துக்களை, துர்மரணகளை, துர்முடிவுகளை தடுக்கலாம் என இறைவன் தீர்மாநித்திருப்பான். அதன் படி நடந்தால் எல்லா காரியங்களும் சு(ல)பமாக நடந்தேறும். இல்லையெனில் மாறாகத்தான் நடந்தேறும். இதுமாதிரியான கழா கத்ருக்கு “கழா முஅல்லக்” என்று பெயர். இது மேற்படி விதத்தில் மாறும். “கழா முப்ரம்” முடிவான இறை விதி மாறாது.


நாயகம் (ﷺ) நவின்றார்கள்;


“விதியை, ‘துஆ’வைத் தவிர வேறு எதுவும் மாற்றாது. ஆயுளை, நன்மையை தவிர வேறு எதுவும் அதிகரிக்கச் செய்யாது. ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய ரிஸ்க் (வாழ்வாதாரம்) மறுக்கப்படும்.” 
ஆதாரம் இப்னு மாஜா: 4914.


சில விஷயங்களை அல்ல, பல விஷயங்களை நாம் கேட்டால் தான் கிடைக்கும். தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி முதல்வராக இருந்த போதுள்ள ஒரு அனுபவத்தை சொல்லவா? சில சமயம் சில காரணத்திற்காக சில மாணவர்களின் உணவு அனுமதி நிறுத்தி வைக்கப்படும். அது பட்டினி போடுவதக்கு அல்ல. வந்து கேட்டால் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். சில பேர் வீம்பிலே வீராப்புக்காட்டி விறைத்து நின்றால், மறைமுகமாக மற்ற உஸ்தாதுமார்கள், மாணவர்கள் மூலம் அவர்களை வரவழைத்து, கேட்க வைத்து, உணவு கொடுப்போம். ஏனெனில் நிர்வாக ஒழுங்குக்காக கேட்டால் தானே கொடுக்க முடியும். சட்டம் ஒழுங்கைப் பாதுக்க இந்த தந்திர முறை அவசியமாகிறது. இந்த உதாரணம், மாணவர்களுக்கு நன்றாக புரியும் என நினைக்கிறேன். குறிப்பாக எனது மஸ்லஹி பிள்ளைகள், இதை படிக்கும்போது சிரிப்பதை நன் பார்க்கிறேன். இதைப்பற்றி தங்களுக்குள் உரையாடுவதையும், நான் கேட்கிறேன். மாணவர்களுடனான இந்த சகவாசம், என்றும் பசுமையாக மலரும் நினைவுகளாக மனதில் பதிந்திருக்கும்.


நாமளாவது மாணவர்களை மறைமுகமாக மற்றவர்கள் மூலம் அழைத்து சாப்பாடு கொடுக்கிறோம். ஆனால் ஆற்றல் மிக்க அல்லாஹ் அருளாளன். நிகரற்ற அன்புடையோனின் கிருபையைப் பாருகள். இந்த பராஅத் இரவில் முதல் வானத்திற்கு அவனே வந்து, கேளுங்கப்பா, கொடுக்கிறேன், என்று (நம்முடைய பாணியில் சொல்வதாக இருந்தால் வெட்கத்தை விட்டு) கேட்கிறான் என்றால், அவன் எவ்வளவு இறக்கமுள்ளவன்? அவனே இறங்கி வந்து நம்மிடம் கேட்கச்சொல்லும் அற்புதமான இந்த அரிய வாய்ப்பை நாம் நழுவ விடலாமா? இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? ஆக பல விஷயங்களை கேட்டால்தான் கிடைக்கும். மனிதர்களிடமே இப்படி என்றால் அல்லாஹ் விடம் எப்படி அவனிடமும் சில விஷயங்களைக் கேட்டால்தான் கிடைக்கும். அப்படி இருக்கும்போது அவனிடம் கேட்பதற்கு நமக்கு என்ன யோசனை? அதுவும் அவனே கிழே இறங்கி வந்து கேளுங்கப்பா! கேட்பவர்கள் இருக்கிறீர்களா? கேளுங்கள்! நான் கொடுக்கிறேன், என்று கூவி கூவி அழைக்கும் போது, அவனிடம் கேட்க நமக்கு என்ன தயக்கம்? அப்படி என்ன வெட்கம்? அவனிடம் கேட்க நமக்கு அப்படி என்ன தலைக்கணம்? இதை ஒழிக்கத்தான் அல்லாஹ் துஆவை ஏற்படுத்தினான். மனிதர்கள் கேட்டால் கோபப்படுவார்கள். ஆனால் அல்லாஹ் கேட்காவிட்டால் கோபப்படுவான். எனவே தான் கௌதுள் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் கதிர் ஜீலானி (ரலி) அவர்கள்; “அவன் கேட்டால் தான் கொடுப்பானா? விதியில் இருந்தால் கேட்காவிட்டாலும் கொடுப்பான். விதியில் இல்லாவிட்டால் கேட்டாலும் கொடுக்க மாட்டான்.” என விதண்டாவாதம் பேசாதே! இறுமாப்புடன் தர்க்கம் செய்யாதே! உனது அடிமைத்தனத்தை (பணிவை) வெளிப்படுத்துவதற்காக அவனிடம் கேளு! துஆ செய்! கேட்ட பிறகு தான் கிடைக்கும் என்பதும் அவனது கழா கத்ரு தான் என்று நம்பு, என்று நயம் பட எடுத்துரைத்தார்கள்.


நிஸ்ஃபு ஷஃபான் என்றும், பராஅத் இரவு என்றும் அழைக்கப்படும், ஷஃபான் மாதத்தின் 15 வது இரவு விசேஷமான இரவுகளில் ஓர் இரவாகும். இப்படி, மொத்தம் 15 விசேஷ இரவுகள் உண்டு, என்று இமாம் கஸ்ஸாலி (ரலி) அவர்கள் தனது இஹ்யாவில் பட்டியலிடுவார்கள்.


நிஸ்ஃபு ஷஃபான் என்றால், ஷஃபானின் பாதி அதாவது 15 வது இரவு என்று பொருள். பராஅத் இரவு, என்றால் விடுதலை இரவு என்று அர்த்தம்.


“இந்த இரவில் கல்பு கோத்திரத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் அளவு மக்கள் அல்லாஹ்வால் நரக விடுதலை அளிக்கப்படுவார்கள்.” என்று (பைஹகி: 3837 அஹ்மது: 176). நாயகம் (ﷺ) அவர்கள் குறிப்பிடுவதிலிருந்து, பராஅத் இரவின் பெயர் காரணமும் அதன் பவர் (மகிமை) காரணாமும் புரிகிறது அல்லவா!


புனித பராஅத் இரவில் உலக முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை தொன்று தொட்டு பாரம்பரியமாக செய்து வரும் அமல்கள் (செயல்கள்) வருமாறு:-


1, மக்ரிபுத் தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஸுறா ஓதி துஆ செய்வது.


2, இஷா தொழுகைக்குப் பிறகு கப்ரு ஜியாரத் செய்வது.


3, பஜ்ரு வரை அல்லது முடிந்த வரை நின்று, இருந்து இறை வணக்கம் புரிவது. அதாவது ‘கழா’ உள்ளவர்கள் கழாத் தொழுகைகளை நிறைவேற்றுவது, தஸ்பீஹ் நஃபீல் தொழுகை, திக்று, தஸ்பீஹ் செய்வது, குர்ஆன் ஓதுவது, இஸ்திக்ஃபார் செய்வது, ஸலவாத் ஓதுவது.


4, அன்று பகலில் நோன்பு வைப்பது.
மகத்தான இந்த பராஅத் இரவின் சிறப்பிற்கும் இதில் இப்படி அமல் செய்வதற்கும் நபி மொழி தொகுப்பிலும் நபித்தோழர்கள், வலிமார்கள் வாழ்விலும் நிறைய ஆதாரங்கள் உள்ளது.


“இந்த ஷஃபான் 15 வது இரவில், அல்லாஹ் தனது அடியார்களின் மீது பிரசண்ணாமாகி பாவ மன்னிப்பு கேட்போருக்கு மன்னிப்பும், அருள் வேண்டுவோருக்கு அருளும் வழங்கி, சூழ்ச்சிக்காரர்களை தள்ளியும் வைக்கிறான்” (நபிமொழி பைஹகி: 3835).



“எவர் ஐந்து இரவுகளை (இபாதத் செய்து) உயிர்பிப்பாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. 
1. துல்ஹஜ் பிறை 8- மினா இரவு, 
2. அர/பா இரவு, 
3. ஹஜ்ஜுப்பெருநாள் இரவு,
4. நோன்புப் பெருநாள் இரவு, 
5. பராஅத் இரவு.” 
(நபி மொழி. ஆதாரம், அத்தர்கீப்: 1643) 
அதாவது சொர்க்கவாசிகளுக்குத்தான் இந்த இரவில் அமல் செய்ய தவ்/பீக் (இறை உதவி) கிடைக்கும்.


முதலில் மூன்று முறை யாஸீன் ஓதி துஆ செய்வது:-

மக்ரிபுத்தொழுகைக்குப் பிறகு மூன்று முறை யாஸீன் ஓத வேண்டும்.


முதல் யாஸீன் ஓதும்போது அல்லாஹ்வை வணங்கவும், நன்மைகள், தானதருமங்கள் செய்யவும், நமக்கு நீண்ட ஆயுளை சரீர சுகத்தோடு கொடுக்கும் படி நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும்.


இரண்டாவது யாஸீன் ஓதும்போது பலா முஸீபத், நோய் நொடி, துன்ப துயரங்கள் நீங்கி நிம்மதியான சுக வாழ்வு வழங்க வேண்டி நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.


மூன்றாவது முறை யாஸீன் ஓதும்போது உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் பறகத் செய்யும் படியும் மரணம் வரும் வரை யாரிடமும் கை நீட்டாமல் தேவையற்றவர்களாக நாமும் நம் சந்ததியும் வாழ வேண்டும் என்று நிய்யத் வைத்து ஓதத் துவங்க வேண்டும்
.


நபிகள் நாயகம் அவர்கள் நவின்றார்கள்; ஷஃபான் 15 வது இரவு வந்தால் அந்த இரவில் நின்று வணங்குங்கள் அதன் பகலில் நோன்பு பிடியுங்கள் ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் அந்த இரவின் சூரியன் மறைந்(து பொழுது சாய்ந்)ததும் துன்யாவுடைய வானத்திற்கு இறங்கி வருகிறான் அப்போது அவன் கேட்கத்தொடங்குகிறான்.


பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா? நான் அவர்களை மன்னிப்பேன். வாழ்வாதாரம் தேடுவோர் உண்டா? நான் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவேன். பாதிக்கப்பட்டோர் உண்டா? நான் அவர்களுக்கு சுகம் அளிப்பேன், இன்னும் (எதையெல்லாம் கேட்க்க வேண்டுமோ, அதையெல்லாம்) கேட்பவர் உண்டா? நான் அதையெல்லாம் கொடுக்கிறேன் என்று ஃபஜ்ரு உதயம் (பொழுது விடியும்) வரை கேட்கிறான்.
 (அறிவிப்பவர். அலி (ரலி) ஆதாரம் இப்னு மாஜா: 1388 மிஷ்காத்: 1306)


நபிமொழிப்படி பிறப்பு இறப்பு இந்த இரவில் தீர்மானிக்கப்படுவதால் ஆயுள் நீளமாக துஆச் செய்கிறோம், ரிஸ்க் இவ்விரவில் இறங்குவதாலும், இன்னும் “என்னிடம், ரிஸ்க் கேட்ப்போர் உண்டா?” என்று அல்லாஹ் கேட்பதாலும் ரிஸ்க் விஸ்தீரணத்திற்காக துஆச் செய்கிறோம். “முஸீபத்திலிருந்து பாதுகாப்பு கேட்போர் உண்டா?” என்று அல்லாஹ் கேட்பதால் நாம் அவனிடம் பாதுகாப்பும், சுகமும் கேட்டு துஆச் செய்கிறோம் இப்படி மக்ரிபிலிருந்து அல்லாஹ் கேட்கத்துவங்கி விடுவதால் வாய்ப்புக்கு முந்த வேண்டும் என்பதற்காகவும், “நன்மைகளை செய்வதில் இறை அருளைப் பெறுவதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 2:148. வசனத்திலும் “உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவர்கத்துக்கும் விரைந்துசெல்லுங்கள்” என்று அல் குர்ஆன் 3:133 வசனத்திலும் அல்லாஹ் கூறுவதற்காகவும் நாம் முந்திக்கொண்டு மக்ரிபுக்குப் பிறகே துஆச் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். முன்னதாக ஸூரா யாஸீன் ஏன் ஒதுகிறோம் என்றால், குர்ஆன் ஓதி குறிப்பாக ஸூரா யாஸீன் ஓதி துஆக் கேட்டால் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்வான் என்று ஹதீஸில் வந்துள்ளது. “குர்’ஆன் ஓதி அதைக் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்”.
நபி மொழி பதிவு திர்மிதி 2917. மிஷ்காத் 2210.


மேலும் அண்ணல் நபிகள் நாயகம் (ﷺ) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்து குர்’ஆன் ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள் அவர்களைச் சூழ்ந்துகொள்வர். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுதுக்கூறுகிறான்”. 
பதிவு- முஸ்லிம் 2699. அபூ தாவூத் 1455.


மலக்குகள் இறங்கி இருக்கும் மஜ்லிஸில்- கூட்டத்தில் துஆக் கேட்டால் அதை அல்லாஹ் கபூலக்குவான். “சேவல் கூவும் சப்தம் கேட்டால் நீங்கள் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள் ஏனெனில் அது மலக்கைக்கண்டு தான் கூவும்”. 
நபி மொழி புகாரி 3303. முஸ்லிம் 2729
இந்த நபி மொழி மலக் இருக்கும்போது துஆச் செய்வதை பரிந்துரைக்கின்றது என்றால் அப்போது அது கபூலாகும் என்பதால்தானே!. “குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” என்று புகாரி ஷரீபிலும் முஸ்லிம் ஷரீபிலும் ஹதீஸ் வந்துள்ளது. குர்ஆன் ஓதிய பின்னர் மலக்குகள் இருக்கும்போது துஆக் கேட்டால் அது கபூலாகும் என்றால் பத்து முறை குர்’ஆன் ஓதியதற்குச்சமமான யாஸீன் ஓதி துஆச் செய்தால் அது கபூல் ஆகாதா? “ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். 
(நபி மொழி. திர்மிதி: 2887).


“எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).


“யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் (தாரமி) ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் (மக்ரிப்) துஆவை நாம் கேட்டு வருகிறோம்.


மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது., ஹழ்ரத் உமர பின் கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்


அல்லாஹும்ம இன் குந்த கதப்தனா அஷ்கியாஅ ஃபம்ஹுஹு வக்துப்னா சுஅதாஅ வஇன் குந்த கதப்தனா சுஅதாஅ ஃபஅஸ்பித்னா ஃபஇன்னக தம்ஹு மா தஷாஉ வதுஸ்பிது வஇன்தக உம்முல்கிதாப்


(யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).


இந்த துஆவை ஷாஅபான் 15 ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்)


பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம்.


நாம் ஓதும் பராஅத் துஆவின் மிகுதமான வாசகம் ஹதீஸிலிருந்து பெறப்பட்டதாகும் இமாம் சுயூதி அவர்கள் அத்துர்ருள் மன்சூர் என்ற அவர்களின் தப்சீரில் 13:39 என்ற வசனத்தின் விளக்க உரையில் கூறுகிறார்கள்; இப்னு அபீ ஷைபா அவர்கள் தனது அல்முசன்னஃப் என்ற ஹதீஸ் கிரந்தத்திலும் இப்னு அபித்துன்யா அவர்கள் தனது அத்துஆ என்ற ஹதீஸ் தொகுப்பிலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள் எந்த அடியான் இந்த (பராஅத்) துஆக்களை ஓதுவாரோ அல்லாஹ் அவருடைய வாழ்க்கையில் அவருக்கு வளப்பத்தை ஏற்படுத்துவான்.


“ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான். (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” (அல் குர்ஆன். 13:38,39).


“எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளைச் சேர்த்துக்கொள்ளட்டும்” நபி மொழி. புகாரி: 5986. முஸ்லிம்: 1982. சில அறிவிப்புகளில்., “அல்லாஹுவைப் பயந்து கொள்ளட்டும் தனதுபெற்றோரை மதித்து அவர்களுக்கு நன்மை செய்யட்டும்” என்று கூடுதலாக வந்துள்ளது. இந்த நபிமொழியில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.


“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை (வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று 6:2-ல் கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு (அஜலை) தவணையைக் குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை (மறுமையில்) சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும். ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) வழங்கினார்கள் (தப்ஸீர் குர்துபி. 13:39 விரிவுரை)


பராஅத் இரவில் கப்று ஜியாரத்:-
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்., ஒருநாள் இரவு அண்ணல் நபி (ﷺ) அவர்களைக் காணாமல் தேடி அலைந்த போது இறுதியில் அவர்கள் ஜன்னத்துல் பகியி (மதீனா கபுறுஸ்தானி)ல் நின்று உருக்கமாக துஆச் செய்து கொண்டிருந்தார்கள். எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம். நான் (எனது) உலக நலனில் அக்கறை கொண்டு (தேடிவந்து)ள்ளேன். ஆனால் நாயகமே தாங்களோ (மக்கள் நலனுக்காக) உங்கள் இறைவனிடம் தேவையாகி நிற்கிறீர்களே! (என மெய்சிலிர்த்தேன்) அங்கிருந்து வேகமாக கிளம்பி எனது அறைக்கு வந்து சேர்ந்தேன் வேகமாக நடந்து வந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது எனக்குப்பின் எனது இல்லம் வந்து சேர்ந்த சர்தார் நபி (ﷺ) அவர்கள் இதைக் கவனித்து விட்டு, இதென்ன ஆயிஷா! இப்படி மூச்சு வாங்குது? என வினவினார்கள். அதற்கு, நான் அவர்களைக் காணமல் தேடி அலைந்து இறுதியில் ஜன்னத்துல் பகியில் கண்டு பிடித்து பிறகு மிக வேகமாக இல்லம் திரும்பிய கதையை அவர்களிடம் சொன்னேன். “என்ன ஆயிஷா! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து இது ஷ/பான் 15-வது இரவு. இதில் அல்லாஹ் அடியார்களுக்கு விடுதலை அளிக்கிறான் எனக்கூறினார்கள்”. (எனவே அடியார்களுக்கு மன்னிப்பும் நரக விடுதலையும் கிடைக்க துஆ செய்வதற்காக கபுறு ஜியாரத்திற்கு வந்தேன்). ஆதாரம். பைஹக்கி 3837 இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் புரிகிறது அல்லவா!.


பராஅத் இரவின் இபாதத்- இறைவணக்கம்:
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றாகள்; கபுற் ஜியாரத் முடித்து விட்டு இல்லம் திரும்பிய கண்மணி நாயகம் (ﷺ) அவர்கள், ஆயிஷா! இன்றிரவு நின்று வணங்க எனக்கு அனுமது அளிப்பீர்களா? என்று என்னிடம் வினவினார்கள் அதற்கு நான், “எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம் தாங்கள் என்னுடன் எனக்கருகே இருப்பதைத் தான் விரும்புகிறேன் ஆனாலும் உங்களது விருப்பத்தை தேர்வுசெய்கிறேன்” எனக்கூறினேன் உடன் எழுந்து தொழ ஆரம்பித்துவிட்டார்கள் நீண்ட நெடிய நேரம் தொழுகையில் சுஜீதிலேயே இருந்தார்கள். எந்த அளவு நீளமான சுஜீது செய்தார்கள் என்றால் நான் அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டு விட்டதோ என்று கருதிவிட்டேன். எழுந்து போய் அவர்களின் பாதத்தை தொட்டபோது அதில் உயிர்த்துடிப்பு இருந்தது. அப்போது தான் எனக்கு சந்தோசமே வந்தது சுஜீதில் அவர்கள் ஓதியதை நான் கவனித்துக் கேட்டேன்;


“அஊது பிஅஃப்விக மின் இகாபிக வஅஊது பிரிழாக்க மின் சகத்திக வஅஊது பிக மின்க இலைக்க ஜல்ல வஜ்ஹுக லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அந்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக”


(யா அல்லாஹ் உனது மன்னிப்பைக்கொண்டு உனது தண்டனையை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உனது திருப்பொருத்தத்தை கொண்டு உனது கோபத்தை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உன்னைக்கொண்டு உன்னைவிட்டும் உன்னளவில் பாதுகாபுத்தேடுகிறேன் உனது திருமுகம் மகத்தானது நீ உன்னை புகழ்ந்ததைப்போல நான் உன்னைப் புகழ இயலாதவனாக இருக்கிறேன்)


நான் இவ்வாறு செவிமடுத்ததை காலையில் நபி (ﷺ) அவர்களிடம் கூறினேன் அதற்கு அவர்கள், ஆயிஷா! இதைக் கற்றுக்கொண்டாயா (நல்லது) இதைக் கற்று, கற்றுக்கொடுங்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள், இவ்வாறு இதைக் கற்றுக்கொடுத்து இதை சுஜூதில் திரும்பத் திரும்ப மடக்கி மடக்கி கூறிக்கொண்டிருக்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள்.


ஆகவே, இதை நாமும் கற்று மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம். பராஅத் இரவில் சுஜுதில் இருந்துகொண்டு இதை நாமும் கூறிக்கொண்டிருப்போம்.


பராஅத் நோன்பு:

இதற்கு மூன்று விதமான சிறப்புகள் இருக்கிறது


1, இது ஷ/பான் மாதத்தின் நோன்பு. பொதுவாக, “நாயகம் (ﷺ) அவர்கள் ரமழானுக்கு அடுத்து ஷஃபானில் தான் அதிகம் நோன்பு பிடிப்பார்கள். சில சமயம் ஷஃபான் முழுதும் நோன்பு வைப்பார்கள்” புகாரி: 1969. முஸ்லிம்: 1156.
“ரமழானையும் ஷஃபானையும் தவிர தொடர்ந்து இரண்டு மாதம் நபி (ﷺ) அவர்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லை” என்று உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் திர்மிதி: 1836.


ஷஃபானில் நீங்கள் நோன்பு பிடிக்கும் அளவு மற்ற மாதங்களில் நீங்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லையே? என, உசாமா (ரலி) அவர்கள் கேட்டபோது, “ரஜபுக்கும் ராமழனுக்கும் இடையில் இருக்கும் இந்த (ஷஃபான்) மாத(த்தின் மகத்துவ)த்தை மக்கள் உணராமல் உள்ளனர். இது அகில உலக இரட்சகனிடம் அமல்கள் உயர்த்தப்படும் ஒரு மாதம். நான் நோன்பளியாக இருக்கும்போது எனது அமல்கள் உயர்தப்படுவதை நான் விரும்புகிறேன்”. என உத்தம நபி (ﷺ) அவர்கள் பதில் அளித்தார்கள்.
 நசயி: 210/4


2, இது அய்யாமுல் பீழுடைய (13 ,14, 15 ஆகிய வெளுப்பு) நாட்களில் ஒன்று. இந்த மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும். “ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” நபிமொழி புகாரி: 1979. முஸ்லிம்: 1159. “நாயகம் (ﷺ) அவர்களின் இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வசனத்தை குர்ஆனில் அல்லாஹ் இறக்கினான்” என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).
(அதாவது 3 x 10 = 30 x 12 = 360) (திர்மிதி: 762 நசயி: 219/4)



3, பராஅத் நோன்பு. நாயகம் (ﷺ) அவர்கள் நவின்றார்கள்., “ஷ/பான் 15-வது இரவு வந்தால் நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு பிடியுங்கள்” (இப்னு மாஜா: 1388)
இப்படி, சாந்த நபி (ﷺ) அவர்கள் முழுமையாக அல்லது அதிகமாக நோன்பு வைக்கும் ஷஃபான் மாதத்தின் வெளுப்பு தினமான 15ல் வரும் பராஅத் நோன்பு பொதுவாகவும் குறிப்பாகவும் நோன்பு வைப்பது ஏற்றம் நிறைந்த நபி மொழியும் வழியும் ஆகும்.


பராஅத் இரவில் பாக்கியமிழக்கும் பாவிகள்:
“ஷஃபான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்” என்று அறிவித்த அண்ணலார் (ﷺ) அவர்கள் இதில் விதி விலக்கானவர்களையும் பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
1, இறை மறுப்பாளர்கள்
2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
4, தற்கொலை செய்தவர்கள்
5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
6, தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
7, குடிகாரர்கள்
8, கரண்டைக்குகீழே உடை உடுத்தி இருப்பவர்கள்
9, சதிகாரர்கள்
10, சூனியம் செய்பவர்கள்



· குறிப்பு; முப்தி தகி உத்மானி அவர்கள் கூறுகிறார்கள்:


· பராஅத் சம்மந்தமான அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீ/பானதுதான். என்றாலும் அதிகமான பல அறிவிப்பாளர்கள் தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான ஃபுகஹாக்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள்.


· பராஅத் சம்பந்தமான ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


· பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்செய்வது கூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து


· இதல்லாமல் காலங்களில் சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத் இரவு விசேஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.


ஆகவே இதை பித்அத் என்று பிதற்றுவதோ, இது அடிப்படை அற்ற விசயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ தவறானதாகும். எனவே சரியான விஷயம் என்னவென்றால் இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருவதாகும். (இஸ்லாஹீ குத்பாத்).


அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் தனது மிர்க்காத் (மிஷ்காத் விரிவுரை) யில் கூறுகிறார்கள்,. லயீஃ
பான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வது கூடும். பராஅத் இரவில் விஷேசமாக இபாதத் செய்வதை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. அந்த ராத்திரியில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் செய்வதைத்தான் மறுக்கிறார்கள்.


“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” (அல் குர்ஆன்: 96:9,10)


காண்க: மிஷ்காத் ஹதீஸ் எண்: 1308 விரிவுரை மிர்காத்.


பராஅத் போன்ற சிறப்பான இரவுகளில் தொழுகின்ற அடியார்களை தடைசெய்கின்றவர்களைக் குறித்து அன்றே அல்லாஹ் அடையாளப் படுத்தி இருப்பதைப் பார்த்தீர்களா? 

வஸ்ஸலாம்.....

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Friday, 10 January 2025

அடுத்த 10 வருடத்தில் (2035) எந்தத் தொழிலும் இருக்காது...


நாம் கூர்ந்து கவனித்தால் புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று...

2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?

என்னென்ன தொழில்கள் இருக்காது ??

நிலைமை இப்படியே தொடரும் னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்...


1998 இல் தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்சத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கைப் போடு போட்டது...


இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை...


வெள்ளை பேப்பர்ல பிரிண்ட் எடுத்து தான் போட்டோ பார்க்க முடியும் அது ஆனால் இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும் னு அவங்க நினைக்கவே இல்ல...


பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அது தான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்...


தெருவுக்கு தெரு முளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??


எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர்,  வி சி பி , விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லிக் கொண்டே போகலாம்...


குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்போ LED பல்பு தான்...


எதனால ? ஏன் இப்படி னு கேட்டால்?


டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence...


சிம்பிளாக சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள்...


மனித மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்...


உதாரணத்துக்கு சொல்லணும்னா..


சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வச்சிக்காமல், 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக் கொடுக்குது...கமிஷனோட... இல்லீங்களா..?


Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வச்சிக்காமல், இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...


இந்த மாதிரி Software Tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களைப் பாதிக்கும் ?


அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தைச் சொல்லலாம்...

உங்களுக்கு ஒரு சட்டச் சிக்கல் வருது...

என்ன பண்றது னு தெரியலை...

என்ன செய்வீங்க?

ஒரு நல்ல வக்கீலாகப் பார்த்து..யோசனை கேட்பீங்க...

சிக்கலோட தீவிரத்தைப் பொறுத்தோ அவரோட பிரபலத்தைப் பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய பீஸ் வாங்குவாரு...

இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ?

உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் டைப் பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்களை Probabilities-டன் அந்தக் கம்ப்யூட்டர் கொடுத்தா? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலையில துண்டைப் போட்டுக்கிட்டு தானே போகணும்...


வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாகச் சொல்லும்...


IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத் தான் செஞ்சுகிட்டு இருக்கு...


ஒரு லாயரால் அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்ல முடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாமல் போய்டுவாங்க...


அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம் தான்...


ஆடிட்டர்கள் வேலையை Cleartax, Taxman போன்ற இணையத்தளம்...


டாக்டர்கள் வேலையை Ada app!...


ப்ரோக்கர்கள் வேலையை Magic Bricks, Quickr, 99acres, இணையத்தளம்...


கார் விற்பனையை carwale, cars24 இணையத்தளம்...


என சேவை இலவசமாக தருகின்றன...


UBER, OLA, RED TAXI  போன்ற CAB  வந்த. பிறகு சொந்தக்கார் தேவையில்லை...


ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணி வரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்...


நெட்பிளிக்ஸ் வந்தப் பின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை...


இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS App மூலம் எடுத்துக் கொள்ளலாம்...


80% மேலான சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை...


கம்ப்யூட்டரே பார்த்துக்கும்...


'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பிழைக்க முடியும்...


2025 இல் Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்...


2023 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது...


அதோட ரிசல்ட் மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...


ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்...


அடுத்த 10 வருஷத்துல நிலைமை இது தான்...


யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்க வேண்டிய தேவை இருக்காது...


'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும்...


பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு இடத்துக்குப் போகணும் னா...


உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...!


அடுத்த இரண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானாக ஒரு கார் வந்து நிற்கும். நீங்க போக வேண்டிய இடத்துக்கு சமர்த்தாக கொண்டுப் போய் விட்டுடும்...


கிலோமீட்டருக்கு இவ்வளோ னு நீங்க காசு கொடுத்தால் போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்...


இதனால என்னவாகும் என்றால்...


அடிக்கடி தேவைப்படாமல் பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர் னு ஒருத்தனும் இருக்கமாட்டான்...


சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம்...


'Accident' ரொம்ப குறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழே போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலைப் போகும்...


Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்டில் தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும்...


எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானம் செய்வது கூகுள் தான்...


எல்லாமே மின்சாரத்தில் தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியைக் கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்...


இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்க னு நீங்க நினைச்சால்..?

உங்க நினைப்பை மாத்திக்குங்க...


இன்னைக்குப் பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வைக்கப் போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்...


குறிப்பாக சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்கபடுற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??


சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?


முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?


இல்லனா கூகுளைக் கேளுங்க...


அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு...


அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்...


ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்...


சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப் போய் பரவி வாழும் நிலை உருவாகும்...


வீட்டுப் பக்கத்திலேயே Green House வைச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்...


விவசாயம்..


இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்...


நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நிலைமை வந்துடும்...


இன்னும் சொல்லப் போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்...


விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு...


காற்றுல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ...


Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை Scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...


2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும்...


யாராலயும் ஏமாத்த முடியாது...


இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளைச் செய்கிறது...


இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க...


Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும்...


உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காற்றை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிடும்...


அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி...


டாக்டர்கள் க்ளினிக் வைக்கத் தேவையில்லாமல், Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத் தான் Hospital...


மாற்றம் ஒன்றே மாறாதது...


மாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்...


நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்குச் சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம், ஆகவே எந்த துறையை சேர்ந்தாலும் அதில் AI கோர்ஸ் படித்து அப்டேட் செய்ய வேண்டும்.


கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்தப் பத்தாண்டுகளில் நடக்கும்...


சந்திக்கத் தயாராவோம்!! எதிர்காலம் நம் கையில் இல்லை...

கடந்தக் காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருந்தது என்கிறீர்களா ??

தொகுப்பு  : மு . அஜ்மல் கான்.




Thursday, 2 January 2025

மனித (70 கிலோ கிராம் எடையுள்ள) உடலில் உள்ள மூலப் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு தவகல் !!




நம் உடலில்  உள்ள மூலப் பொருள்கள்..

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்

2. கார்பன் 16 கிலோ கிராம்

3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்

4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்

5. கால்சியம் 1.0 கிலோ கிராம்

6. பாஸ்பரஸ் 780 கிராம்

7. பொட்டாசியம் 140 கிராம்

8. சோடியம் 100 கிராம்

9. குளோரின் 95 கிராம்

10. மக்னீசியம் 19 கிராம்

11. இரும்பு 4.2. கிராம்

12. ஃப்ளூரின் 2.6 கிராம்

13. துத்தநாகம் 2.3 கிராம்

14. சிலிக்கன் 1.0 கிராம்

15. ருபீடியம் 0.68 கிராம்

16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்

17. ப்ரோமின் 0.26 கிராம்

18. ஈயம் 0.12 கிராம்

19. தாமிரம் 72 மில்லி கிராம்

20. அலுமினியம் 60 மில்லி கிராம்

21. காட்மியம் 50 மில்லி கிராம்

22. செரியம் 40 மில்லி கிராம்

23. பேரியம் 22 மில்லி கிராம்

24. அயோடின் 20 மில்லி கிராம்

25. தகரம் 20 மில்லி கிராம்

26. டைட்டானியம் 20 மில்லி கிராம்

27. போரான் 18 மில்லி கிராம்

28. நிக்கல் 15 மில்லி கிராம்

29. செனியம் 15 மில்லிகிராம்

30. குரோமியம் 14 மில்லி கிராம்

31. மக்னீசியம் 12 மில்லி கிராம்

32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்

33. லித்தியம் 7 மில்லி கிராம்

34. செஸியம் 6 மில்லி கிராம்

35. பாதரசம் 6 மில்லி கிராம்

36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்

37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்

38. கோபால்ட் 3 மில்லி கிராம்

39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்

40. வெள்ளி 2 மில்லி கிராம்

41. நியோபியம் 1.5 மில்லி கிராம்

42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்

43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்

44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்

45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்

46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்

47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்

48. தால்வியம் 0.5 மில்லி கிராம்

49. இண்டியம் 0.4 மில்லி கிராம்

50. தங்கம் 0.4 மில்லி கிராம்

51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்

52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்

53. வாளடியம் 0.11 மில்லி கிராம்

54. தோரியம் 0.1 மில்லி கிராம்

55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்

56. சமாரியம் 50 மில்லி கிராம்

57. பெல்யம் 36 மில்லி கிராம்

58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.

 மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.


 உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.


உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.


நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.


நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு உள்ளன.

நன்றி   :  டாக்டர் பாண்டியன், மதுரை. 

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர் !!

 


அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.
மஹ்ஷர் வெளியின் அகோரம்
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.
பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது, சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)
இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

1. நீதியான அரசன்:

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.
மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.
நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்

வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.

3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்

பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.
பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.
யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்

இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.
யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)

காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.
அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.
எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!
பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.

6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்

இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.
மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)

பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.

ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,
1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.  இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.
அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Thursday, 28 November 2024

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம் !! ஒரு சமூக பார்வை..


விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், குரு - சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும், கருவிகள் மூலமும் கைகளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதையும் ஊக்கப்படுத்து மட்டும் நோக்கமல்ல, பார்பன்னரல்லாத பிற ஜாதி இந்துக்கள் கல்லூரி படிப்பை கற்க கூடாது என்பதே!! 
18 வயதானவர்கள் மேற்கல்வி கற்க்காமல் தந்தை செய்யும் தொழிலை செய்தால் அவர்களுக்கு வங்கி கடனும் மானியம் கிடைக்கும் என்று ஆசை வார்த்த கூறி மக்களை மேற்கல்வி கற்க விடாமல் ஏமாற்றப் பார்க்கிறது பார்ப்பனியம்....
ஆனால் பார்பன்ன ஆண்களும் பெண்களும் தடையில்லாமல் எளிதாக உயர் கல்வி கற்க்கிறார்கள் .. அரசு வேலைகளை எளிதாக பெறுகிறார்கள்...

கல்வியின் அவசியம் அதன் பலன் பற்றி பல நூற்றாண்டுகளாக தெரிந்து கொண்டு செல்வ வளத்தை அனுபவித்து வரும் அவர்கள் இந்த முறையில் குலத் தொழிலான கோயிலில் மணியடிப்பதை மட்டும் செய்வார்களா ???

எல்லா உயர் பதவிகளை எளிதாக பெற்று ஆட்சியாளர்களாய் அரசு அலுவலர்களாய் ராணுவ உயர் அதிகாரிகளாய் நீதிபதிகளாய், மருத்துவர்களாய், தொழிலதிபர்களாய், கிரிகெட் உட்பட சகல துறைகளிலும் உயர் பதவியில் அமர்ந்துக் கொண்டு மற்றவர்களை குலத் தொழில் செய்ய வேண்டும் என பணிப்பது எந்த மாதிரியான அயோக்கியத் தனம் தெரியுமா..???

பரம்பரையாக ஒரு தொழிலை ஒரு வணிகத்தை செய்பவர்களின் வாரிசுகள் அதே தொழிலைத் தொடர வங்கிகள் மூலமாக கடன் உதவி,மானியம்‌ என பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்யும்.

மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பான MSME மூலமாக இதைச் செயல்படுத்தப்படும் இந்த விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

மத்திய அரசின் வேண்டுகோளை பல மாநில அரசுகள் அப்படியே ஏற்றுக் கொள்ள, தமிழ்நாடு அரசு மட்டும் அறிமுக நிலையிலேயே இந்த திட்டத்தில் மூன்று மாறுதல்களை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டது‌.அதுவும் இந்த வருடத்தின் துவக்கமான ஜனவரி மாதத்திலேயே கேட்டுக் கொண்டது.

ஆனால் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்ட அந்த மூன்று மாறுதல்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
எனவே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயலாபடுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.


அப்படி என்ன அந்த மூன்று மாறுதல்கள்?

1.மத்திய அரசின் அந்த விஸ்வகர்மா திட்டத்தில் 18 வகையான தொழில்கள்‌ குடும்ப தொழில்கள் என கண்டறியப்பட்டு அதை பாரம்பரியமாக செய்து வர வேண்டும் என்ற விதி இருந்தது.அதாவது குலத்தொழில் என்றது மத்திய அரசு. தமிழ்நாடு அரசு அதைத் திருத்தி பட்டியல் இடப்பட்ட அந்த 18 வகை தொழில்களை யார் வேண்டுமானாலும்,எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் செய்யலாம்.அதற்கு சாதி,மதம் என எதுவும் தகுதியாக இருக்கக் கூடாது.ஆர்வமும், திறமையும் தான் தகுதிகளாக இருக்க வேண்டும் என்றது.

2. மத்திய அரசு வயது வரம்பு 30 க்குள் என்றது.
தமிழ்நாடு அரசு வயது வரம்பை 35 வரைக்கும் நீடித்துக் கேட்டது‌.அப்போது தான் அனுபவம் இருக்கும் என்றது.

3. பயனாளர்களை கண்டறியும் அதிகாரத்தைப் அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மத்திய அரசு தந்தது.
அப்படி செய்தால் அதில் சாதி குறுக்கீடு இருக்க வாய்ப்புகள் வந்தாலும் வரும்.எனவே பயனாளர்களை கண்டறியும் அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு சொன்னது.



அரசர்கள் ஆண்ட காலம் முதல் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்த கலைஞர் காலம் வரை ஒரு கம்மாளர் இன மக்கள் தேவைப்பட்டார்கள். புரியும் படி சொன்னால் ஐந்தொழில் செய்வோர் விஸ்வகர்மா என்கிற skilled தேவை பட்டார்கள்..
நாளடைவில் உலகமயமாக்கல்.. அறிவியல் அதீத வளர்ச்சி.. போன்ற காரணிகளால் இன்று குறிப்பிட்ட அவர்கள் தேவை படுவதில்லை...
அதை உணர்ந்து அவர்களும் கல்வி ஒன்றே கரை சேர்க்கும் மா மருந்தென்று பயணிக்க தொடங்கி விட்டனர்..
தமிழக அரசு மத்திய government's 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்தாமல், அதில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. இவற்றில், குடும்ப அடிப்படையிலான தொழிலாளர்களைத் தேவையின்றி நீக்குவது மற்றும் பயனாளிகளின் குறைந்தபட்ச வயதினை 35 ஆக உயர்த்துவது அடங்கும். தற்போது, தமிழகம் பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, ஜாதி மற்றும் குடும்ப அடிப்படையிலான வேறுபாடுகளை இல்லாமல், நிதி உதவி, பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஆதரவு அளிக்கும் ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்துள்ளது.
விஸ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் ஓட்டுக்காக காய் நகர்த்தும் அரசியல்வாதிகள் இதை உணர்வது நல்லது!


மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கேட்ட சமூகநீதி புரியவில்லை....சரி....அது புரியும் வரையில் விஸ்வகர்மா திட்டத்தை தந்தைப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 11 October 2024

தமிழ்நாட்டிற்கு சாம்சங் போன்ற நிறுவனங்கள் தேவை தொழிலாளிகள் பணிக்கு திரும்ப வேண்டும் !!

ஒரு குழப்பத்தைத் தீர்க்க நிறுவனங்கள் பெரும்பாலும் கையாளும் உத்தி - பிரித்தாள்வது. அதற்காகக் கோடிக் கணக்கில் கூடச் செலவு செய்யத் தயங்கமாட்டார்கள். சங்கம் அமைப்பதை மட்டும் ஏற்கமுடியாது என்பது நிறுவனங்களின் முக்கியக் கொள்கை. இன்று போராட்டம் நடத்துபவர்கள் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொன்னால் கலைந்துவிடுவார்கள். அவை உண்மையில் கொடுக்கப்படுகின்றனவா, நாளையே வேறு தேவை என்றால் என்ன செய்வது என்பதெல்லாம் அவர்கட்குத் தேவையில்லை. அதுதான் நிறுவனங்களுக்குத் தேவை.'எங்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து தருவதாக சாம்சங் நிறுவனம் சொல்லிவிட்டது. இதற்கு மேல் எதற்குத் தொழிலாளர் சங்கம்' என்று சாம்சங் நிறுவன ஊழியர்கள் பேசுவதைத் தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிபரப்புகின்றனர். தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறது சாம்சங் நிறுவனம்.
பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமையையும், அரசியல் சட்டத்தையும் ஒரு சேர அவமதிப்பதற்கு எதிராக தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் வரவேண்டிய கோபம், அந்த சட்ட மீறலுக்கு எதிராக போராடுகிற கம்யூனிஸ்டுகளின் மீது ஏன் வருகிறது?
இடதுசாரி தலைவர்களை கைது செய்துள்ள தமிழக காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விசுவாசத்தை வெல்லும் வலிமை உழைக்கும் மக்களிடம் என்றும் உண்டு.
தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம் அது தொடங்கப்பட்ட எண்பது ஆண்டுகளாக No Union Policy என்பதைத் தனது கொள்கையாக வைத்திருந்த நிறுவனம். 2020 ல் தான் முதன் முதலாக சாம்சங் தொழிலாளர்கள் யூனியன் வைத்துக்கொள்ளும் உரிமையைத் தென்கொரியாவில் வென்றெடுக்கிறார்கள்.
நாட்டின் GDP யில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு வலுவான பொருளியல் அடித்தளத்தைக் கொண்ட நிறுவனம் சாம்சங். அதனால் தென்கொரிய அரசாங்கத்தில் அவர்களது ஆதிக்கம் அதிகம். சாம்சங் அதிபர் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட கடுமையான புகார்கள் உண்டு. அதற்காக தண்டிக்கப்பட்டு பிறகு அரசு ஆதரவுடன் அங்கு விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென்கொரியா ஒரு முதலாளித்துவ நாடு என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சாம்சங் நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உலக அளவில் பிரசித்தி பெற்றவர்கள். அது மட்டுமல்ல கட்டுமானத்துறையிலும் அவர்கள் வலுவானவர்கள். தென்கொரிய பொருளாதாரத்துக்கு அவர்கள் ஆதாரமானவர்கள். இந்தப் பின்னணியில்தான் யூனியனுக்கு எதிரான அவர்களது நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆனால் இன்றைய சூழலில் அவர்களது ஏகபோக சுரண்டலுக்கு உலக அளவில் தொழிலாளர்கள் கடிவாளமிடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு இருபத்தைந்தாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் சாம்சங். நிறைய கிளை நிறுவனங்கள். 4.5% ஊதிய உயர்வை, நீண்ட போராட்டத்துக்குப் பின் பெற்றிருக்கிறது ஒரு கிளை நிறுவனத்தின் தொழிற்சங்கம். அதையொட்டி மற்ற நிறுவங்களில் இருக்கும் தொழிற்சங்கங்களும் ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள் போன்றவற்றிற்காகப் போராடுகின்றன. தென் கொரியாவின் தொழிலாளர் சட்டங்கள் வலுவற்றவை. ஹுண்டாயை ஒட்டி தமிழத்தில் தொண்ணூறுகளில் நடந்த உரையாடல்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
நீங்கள் ஷிப்ட் முடிந்து செல்லும்போது, உங்களது பெயர் நோடீஸ் போர்டில் தென்பட்டால் நீங்கள் பணியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டீர்கள் என்று அர்த்தம். எதிர்த்து கேள்வி கேட்கமுடியாது. அதேதான் சாம்சங்கிலும். பணிப் பாதுகாப்பு என்றெல்லாம் ஒன்றும்கிடையாது.
யூனியனே இல்லாமல் ஒரு நிறுவனம் எண்பது ஆண்டுகளாக நடக்கிறது என்றால் அதன் அத்துமீறல்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு தென் கொரிய சாம்சங் தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இங்கும் கூட நலச்சங்கம் போன்ற ஒரு பொம்மை சங்கத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர் சட்டங்களை வளைக்கலாம் என்று சாம்சங் நினைக்கிறது. அந்த வழிமுறை நம் நாட்டில் நம் மாநிலத்தில் பல நிறுவனங்களில் உள்ளதுதான். CITU தொழிற்சங்கம், தீவிரமான போராட்டங்களுக்கும் அதன் வலுவான பேரம் பேசும் ஆற்றலுக்கும் பெயர் போன தொழிற்சங்கம். கம்யூனிஸ பின்புலத்தில் அதன் உபவிளைவுகளும் உண்டு. ஆனால் சுரண்டலையே வியாபாரப் பின்புலமாகக் கொண்ட சாம்சங் நிறுவனம், நாங்கள் வேறு எந்த தொழிற்சங்கத்தை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் CITU வை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள். அதனால்தான் மந்திரிகளும் பங்கு பெற்ற ஆறுகட்ட பேச்சுவார்தைக்குப் பின்னாலும் கூட உடன்பாடு எட்டவில்லை.
திமுக ஒன்றும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் வெற்றி பெற பண உதவி செய்யும் முதலாளித்துவ கட்சி அது. இந்த பேரத்திலும் கூட அது தனது முதலாளித்துவ பண்பையே காண்பிக்கிறது. CITU தொழிற்சங்கத்தை விடுத்து வேறு ஒரு நலச்சங்கத்தின் பின்னால் தொழிலாளர்கள் திரண்டு, நிறுவனத்துடன் ஒருவித சமரசத்தைக் கையாள வேண்டும் என்றே அது விரும்புகிறது. தொழிலாளர்களின் பிடிவாதத்தால் அது சீண்டப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் காவலர்களை வைத்து தொழிற்சங்கத் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்வது, அவர்கள் போராடும் இடத்தில் வேயப்பட்ட பந்தலைப் பிரித்து எறிவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறது.
ஒரு வெளிப்படையான முதலாளித்துவ அரசாக, முதலீட்டை ஈர்ப்பதை இலக்காக வைத்து செயல்படும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் தொழிலாளர் பக்கம் நின்றால் அது முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு தவறான சமிக்ஞயை அளித்துவிடும் என்று அஞ்சுகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வலுவான ஆதரவு சமிக்ஞயைத் இந்த அரசாங்கம் தர விரும்புகிறது. இந்த அரசு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற CITU தொழிற்சங்கத் தலைவரின் குற்றச்சாட்டில் உண்மையுண்டு. கட்சி ஆதரவு இணையப் பொறுக்கிகள் களத்துக்கு வந்து பத்தாவது மட்டுமே படித்தவர்கள் இத்தனை சம்பளம் வாங்குகிறார்கள் போன்ற விவாதங்களைக் கிளப்புவது அதனால்தான்.
கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிசங்கு நிலையில் இருக்கின்றன. அவை வெளிப்படையாக தங்களது நிலைப்பாட்டை அறிவித்து தொழிலாளர்களுடன் நின்றிருக்க வேண்டும். வாக்கைக் குறிவைத்து, இந்த அரசின் மீது விமர்சனம் வைக்கிற அதிமுக போன்ற கட்சிகள் இதை ஒரு வாய்ப்பாக எண்ணுகின்றன. இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், ஸ்டாலின் இந்நேரம் சேகுவாராவாக மாறி பூந்தமல்லியை கியூபாவாக மாற்றியிருப்பார். எடப்பாடிக்கு அந்த அளவுக்கு கூறு போதாது.
ஒரு குழப்பத்தைத் தீர்க்க நிறுவனங்கள் பெரும்பாலும் கையாளும் உத்தி - பிரித்தாள்வது. அதற்காகக் கோடிக் கணக்கில் கூடச் செலவு செய்யத் தயங்கமாட்டார்கள். சங்கம் அமைப்பதை மட்டும் ஏற்கமுடியாது என்பது நிறுவனங்களின் முக்கியக் கொள்கை. இன்று போராட்டம் நடத்துபவர்கள் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று சொன்னால் கலைந்துவிடுவார்கள். அவை உண்மையில் கொடுக்கப்படுகின்றனவா, நாளையே வேறு தேவை என்றால் என்ன செய்வது என்பதெல்லாம் அவர்கட்குத் தேவையில்லை. அதுதான் நிறுவனங்களுக்குத் தேவை.
மென்பொருள் நிறுவன ஊழியர்கட்கென்று சங்கம் அமைப்பதே பெரும்பாடாகி, இன்றும் அப்படி ஒன்று இருப்பதே அறியாதவர்கள் தான் இங்கே மிகுதி. அந்தச் சங்கம் நீதிமன்றத்தில் போராடிப் பெற்றுத்தந்த நன்மைகள் வெளியே தெரிவதில்லை. தெரியாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது.

சங்கங்களினால் ஏற்படும் தீமைகளை மறுப்பதற்கில்லை. ப்ரிகால் நிறுவனத்தில் உறவினர் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சொற்களில் விளக்கமுடியாது. அதற்காகச் சங்கங்களையே தூக்கியெறி என்று சொல்வது, இடவொதுக்கீட்டைச் சிலர் கேடாகப் பயன்படுத்துகின்றனர் என்று அதையே தூக்கியெறிய நினைப்பது.நந்திகிராமில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த நாள்வரை கம்யூனிஸ்ட் அரசு மறுபடி ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.
எவன பாத்தாலும் தொழிலாளி அத பண்ணனும் இத பண்ணனும்னே சொல்லிட்டு இருக்கீங்களே யாராவது ஒருத்தன் யாரவது ஒருத்தன் அந்த நிறுவனத்த பாத்து எந்நாட்டு தொழிலாளிகளோட அடிப்படை உரிமைகளை பறிக்காதேனு பேட்டி கொடுக்கீறீங்களாய்யா ? இலவசத்துக் ஆசை பட்டால் உயிருக்கு உடமைக்கு மதிப்புக்கும் மரியாதைக்கு வருங்கால சந்ததியினர் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை தமிழக மக்கள் நீங்கள் யோசிக்க வேண்டும்!!