Saturday 30 October 2010

வாகன மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் பற்றிய விவரங்கள்...


நான் ஒரு இந்தியன்" - இப்படி, நாம் சொல்லிக் கொள்வதற்கு அரசினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பலவிதமான ஆவணங்கள் நமக்குத் தேவை. அது மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆவணங்கள் நம்மிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பாதுகாப்பும் கூட. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஓட்டுநர் உரிமம்

* வாகனங்களை ஓட்டுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 100 சி.சி. மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) முக்கியம். அதைப் பெறுவதற்கு முன்பாக...எல்.எல்.ஆர். எனப்படும் 'பழகுநர் ஓட்டுநர் உரிமம்' (Learner's License) வாங்க வேண்டும்.

 எல்.எல்.ஆர். லைசென்ஸ் பெறுவதற்கு...படிவம் 1, படிவம் 2, ஆகிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உங்கள் பகுதியிலிருக்கும் 'வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்' சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் (http://www.tn.gov.in/sta/Application-Forms2.html) மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு மேல் 60 நாட்களுக்குள், நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, 'படிவம் 4' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


* 'இப்பத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன்' என்று சொல்லும் 'ஃபார்ட்டி ப்ளஸ்' நபரா நீங்கள்...விண்ணப்ப படிவத்தோடு, 'படிவம் 1 -' (மருத்துவர் சான்றிதழ்)' சேர்த்து முகவரி, பிறப்புச் சான்று , 4 புகைப்படங்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

 ஒவ்வொருவரும் தங்கள் ஓட்டுநர் உரிமத்தின் கால அவகாசம் முடிந்ததும், அதனைப் புதுப்பிப்பது மிக அவசியம். கெடு முடிவடைய இருக்கும் கடைசி 30 நாட்களுக்குள், ரூ.350 செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள்ள புதுப்பிக்க முடியல...ஒரு வருஷம் லேட் ஆயிடுச்சே...என்ன பண்றது? என்பவர்கள்...கூடுதலாக 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க வேண்டும். அதற்கும் மேலும் தாமதித்தால், உங்கள் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்தாகி விடும்.

 ஓட்டுநர் உரிமம் தொலைந்து போய்விட்டது என்றால், அதற்கான பிரத்யேக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கட்டணமாக 315 ரூபாயைச் செலுத்தினால், லைசென்ஸ் கிடைத்துவிடும்.

எல்லா பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு இணையம் மூலம் பெறப்படும் தகவல் வங்கியினை, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், காவல்துறை ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் துவங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தால் துவங்கப்படும் இந்த வலைத்தளம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மூலம் உருவாக்கப்பட்டு, இவ்வமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த தளத்தினை பார்த்து வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் பற்றிய தகவல்களை ஒரு கைபேசியின் குறுஞ்செய்தி (எஸ் எம் எஸ்) அனுப்புவதன் மூலம் சரிபார்த்துக் கொள்ள அனுமதித்துள்ளது.

ஓட்டுநர்கள் அபராதம் செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யான ஆவணங்களை அளிப்பதை தடுக்க அமைச்சகம் இந்த திட்டத்தினை கடந்த வருடம் ஆரம்பித்தது. போதுமான தகவல்கள் இல்லாததால் காவல்துறையினர் குற்றவாளிகளின் வாகனங்களை கண்காணிக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அமைச்சகம் இன்னும் சில நாட்களில் மாநிலங்களுக்கான விவரங்களை ஒருங்கிணைக்கும் தனிப்பட்ட பதிவேடுகளை தயாரிக்கவுள்ளது. இதற்காக அமைச்சகம் சிறப்பு மென்பொருளை உருவாக்கியுள்ளது.

இந்த விவர வலைத்தளத்தினை பயன்படுத்தி வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை வங்கிகள் அறிந்துகொள்ளலாம். இது மட்டுமன்றி மாநிலங்களுக்கிடையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு சாலை வரி செலுத்தி இருக்கிறார்களா என்பதையும் அதிக பாரம் ஏற்றிச் செல்வதற்காக ஒரு வாகனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளமுடியும். முறைகேடுகளை கண்டறியவும், திருடப்பட்ட வாகனங்களை கண்டுபிடிக்கவும் காவல்துறையினர் இந்த விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேற்கூறிய வாகனங்களைப் பற்றியும் ஓட்டுநர்களைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்ட தேசிய பதிவேடுகள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த வருடத்தின் இறுதியில் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் விவரங்களை பெற இயலும் என அமைச்சகத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. போக்குவரத்துத்துறையின் இணைய தளத்தினை விண்ணப்பதாரர் பார்வையிட்டு அதில் உள்ள விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்து அதற்குரிய கட்டணத்தினை செலுத்தி இந்த இணையதளத்தின் மூலம் அளிக்கப்படும் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். இணையம் மூலம் வழங்கப்படும் சேவைகள் வாகனம் ஒட்ட கற்றுக்கொள்ளும் ஓட்டுநர் உரிமம் முதல் கட்டணம், சாலை வரியினை இணையதளம் மூலம் செலுத்துவது போன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கியது.

இந்தியாவில், 25 மாநிலங்கள் 100 சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களின் பதிவேடுகள் 85% சதவிகிதம் நன்கு நிறுவப்பட்டுள்ளன. இவற்றுள் ஆந்திரபிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் மாநில பதிவேட்டில் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள 1000 வட்டார போக்குவரத்து அலுவலகங்களை கடந்த 5 வருடங்களில் கணினிமயமாக்கியுள்ளது.


தொகுப்பு:மு.அஜ்மல் கான்.

Friday 29 October 2010

A Muslim Woman Can Propose To A Muslim Man..?

A Muslim woman is allowed to approach a man with a marriage proposal, if she comes to know of a man who has good character, Deen and would be a good husband, she can approach him in an honorable way with a marriage proposal. This may be seen as improper or brazen in some cultures. But that is a cultural attitude, not an Islamic one. 

We live in a society where we are of the mindset that it's the man who should always make the proposal for marriage. Our society set rule that it's the man who has to propose and make women feel guilty or ashamed as if they would be doing something so wrong and unacceptable by asking for a man's hand in marriage. So many women wait and wait on the man to propose, and sometimes months and even years go by, and if a man doesn't propose, the woman herself become a question mark. 

In some cases when a daughter dare to suggest a suitable man to her parents which considered a crime, and also considered rude and offensive and automatically deemed to mean that she is involved in an illicit relationship with him. All these culturally-driven notions and customs are against to the teachings of Islam.

There is nothing in Quran or Sunnah that would suggest that it is prohibited for a woman to initiate a marriage proposal.
According to Islam , there is no problem for a Muslim woman to propose to a Muslim man. Islam gives a Muslim woman the right and honour to make such a proposal without feeling guilty or ashamed. 

Our best role model is the Prophet Muhammad (Peace Be Upon Him) and in this veiw we can find a most beautiful example.
When a proposal sent from Ummul-Mumineen Hazrat Khadija-tul-Kubra (Razi Allah Anha) to  Prophet Muhammad (Peace Be Upon Him), through her friend "Nafisah".
Nafisah delivered the proposal to our Holy Prophet (Peace Be Upon Him). And He accepted this proposal.
Obviously Allah would never have permitted him to accept a proposal from a woman if doing so was in any way shameful or improper.

There is absolutely no prohibition in Islam for a woman to propose marriage to a man. It is perfectly fine for you to approach the man in a most honorable way and let him know your intentions by hinting or being flat out about it, depending upon the noble custom in your society. It should be done through the proper and reasonable channels and without violating any rules of Shari’ah.

A woman could do this would be to ask her parents to approach his parents; or to send a message through someone who knows him (for example his sister, aunt, cousin, etc) that she is interested, in order to learn if he also might be interested. She can also approach him directly and raise the subject, as long as she follows Islamic rules of etiquette (meeting in public, having a chaperone, no flirtatious or sexual speech, lowering the gaze, etc).
It doesn't matter who propose, as long as its done in a good moral way within Islamic morality.

And it is also perfectly acceptable for a woman’s family to propose marriage. Unfortunately, however, there remains a stigma within certain Muslim cultures against a woman’s family proposing or initiating marriage talks. 

Sayyiduna Umar ibn al-Khattab (Allah be pleased with him) offered his daughter, Hafsa (Allah Be Pleased With Her), not only to one but two individuals: Sayyiduna Usman (Allah be pleased with him) and Sayiduna Abu Bakr al-Siddiq (Allah be pleased with them), latter-on the Holy Prophet Muhammad (Peace Be Upon Him)  himself asked for the hand of Hadrat Hafsa  (Allah Be Pleased With Her) from Hadrat Umar ibn al-Khattab (Allah Be Pleased With Him) .  
Similarly, when the Prophet of Allah, Sayiduna Shu’ayb (Peace Be Upon Him) observed the beautiful character of Sayiduna Musa [Moses](Peace Be Upon Him) and his praiseworthy attributes such as trustworthiness, he proposed marriage to him for one of his daughters.
So it is also proved, there is nothing wrong with a woman’s guardian (wali) proposing marriage on her behalf to a righteous and suitable man.

 
Tul-Kubra (Razi Allah Anha) [the Prophet’s first wife] who asked for the Prophet’s hand in marriage; and it was then and still is now an honorable thing to do. So sisters, it is within your right to make the first move. If there is a good brother out there that you like as a husband, then don't be ashamed or afraid to ask for the brother's hand in marriage. If you are too shy or afraid to ask, then let a family member, your parents or even a good friend ask on your behalf. Then  Allah will put baraka in it.
And remember, our religion Islam is the religion of easiness & peace, do not create confused methods and do not set complex-ed & baseless rules in your life and as well in society, try to investigate and think about the problem and it's solution according to Islam and find and follow the straight path in the light of Islamic teachings, ancestors can not save us but the light of Islam brighten our life here in this world and also life hereafter.

And Allah knows the best.

அண்டைவீட்டு​க்காரருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன ?

         " அல்லாஹ்வையும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்ளுதல் என்பதன் கருத்து முழுமையான ஈமான் கொள்ளுதல் என்பதையே குறிக்கும். ஆனால் இங்கு அல்லாஹ், மறுமைநாள் மட்டும் குறிப்பாக கூறப்பட்டுள்ளது. இதன் கருத்து ஆரம்பமும் (அல்லாஹ்) கடைசியுமான (மறுமைநாள்), அல்லாஹ்தான் ஆரம்பத்தில் மனிதனை படைத்தவன் இன்னும் மறுமையில் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட குணநலனுக்கும் தீர்ப்பு வழங்குபவனும் அவனே" 

 உடன் இருப்பவர்களுக்குதான் ஒரு மனிதனின் உண்மையான குணநலன் விளங்கும் ஆகையால் தான் ஒரு மனிதன் தன் அண்டைவீட்டாரோடு உள்ள உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. 
 அண்டைவீட்டார் முஸ்லிமாக இருப்பினும், அல்லது மாற்று மதத்தை சார்ந்தவராக இருப்பினும் அவர்களுடன் நடந்துகொள்ளவேண்டிய முறையில் ஒரே நிலையையே இஸ்லாம் கடைபிடிக்கிறது

 ஒரு முறை நபிகள் கூறினார்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் பக்கத்து வீட்டுக்காரரின் கடமைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் நான் நினைத்தேன், அனந்தர சொத்து(வாரிஸ் உரிமையிலும்) பங்குக்கு அவர்களுக்கும் பங்குதாரராக ஆகிவிடுவார்களோ என்று எண்ணுமளவிற்க்கு.

 ஒரு முறை ஒரு நபித்தோழர் நபி அவர்களிடம் வந்து ஒருவர் பக்கத்துவீட்டுக்காரருக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்று, அருமை நபிகள் இப்படி பதில் சொன்னார்கள்: 

 1. அவர் உன்னிடம் கடன்கேட்டால் கொடுப்பாயாக

  2. அவர் உதவி தேடினால் உதவி செய்வாயாக

 3. நோயுற்றால் விசாரிப்பீராக

4. அவருக்கு தேவை ஏற்பட்டால் கொடுப்பாயாக

5. ஏழ்நிலை அடைந்தால் உதவி புரிவீராக.

6. அவர் வீட்டில் நலவு நிகழ்ந்தால் சந்தோசத்தில் பங்கேற்பீராக.

7. சோகம் நிகழ்ந்தல் வருத்ததில் பங்கேற்பீராக.

8. மரணம் நிகழ்ந்தால் அதில் பின் தொடர்ந்து சென்று அதில் முழுமையாக பங்கேற்பீராக.

 9.அவருக்கு காற்று தடைபடும் வண்ணம் உன் வீட்டினை உயர்த்தாதே , அவர் அனுமதிதால் பரவாயில்லை.

10. பழங்கள் வாங்கி வந்தால் அவர்களுக்கும் கொடுப்பாயாக

11. அப்படி கொடுக்கிற அளவிற்க்கு வாங்கி வராமல் இருந்தால், உங்கள் குழந்தையிடம் அந்த பழங்களைக்கொடுத்து வெளியில் அனுப்பாமல் இருப்பாயாக. ( அடுத்த வீட்டு குழந்தைகள் பார்த்து ஏக்கம் ஏற்படால் இருப்பதற்க்கு).


பக்கத்துவீடு என்பதைக்கொண்டு வெறும் பக்கத்து வீடு என்பது மட்டுமல்ல, துபாய் போன்ற நாடுகளில் டபுள்காட்டில் தங்கியிருப்பவர்கள் மேல் கட்டிலிருப்பவருக்கும், கீழ் கட்டிலில் இருப்பவருக்கும் இது ரொம்பவே பொருந்தும்.

இன்றய சென்னை போன்ற நகரங்களின் பக்கத்து வீட்டாருடன் எவ்வித உறவும் இல்லாத நிலை, இன்னும் சிலர் பக்கத்து வீட்டர் யார்? என்று தெரியாது என்று சொல்வதையும் அந்தஸ்து என்று நினைக்கிற காலமிது.

இன்று அண்டைநாடுகளிடம் உறவைகளை மேம்படுத்த வேண்டும் என்று பேசுகிற நாடுகள் கூட, அடுத்த நாடுகளை நோக்கியே தங்கள் ஏவுகணைகளை நிறுத்திவைத்திருப்பது வேடிக்கையிலும் உண்மை.

தனிமனித நிலை மாறுபடாதவரை சமூக உறவுகள் மாறாது என்ற அடிப்படையில், ஒரு கட்டுக்கோப்பான சமூகம் கட்டமைக்கப்பட தனிமனித நிலை மாறவேண்டும் என்ற அடிப்படையில் முதலில் பக்கத்து வீட்டார் உறவுகள் பேணப்பட்வேண்டும் என்ற இஸ்லாமிய நாதம் எத்துணை நடைமுறைப்படுத்தவேண்டிய உண்மை என்றும் புரிகிறது.

பக்கத்து வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிறைய உண்பவன் நம்மை சார்ந்தவன் அல்ல என்ற நபிமொழியும்,

நிறைவான இபாதத்திருந்தும் பக்கத்து வீட்டாருக்கு நோவினை செய்ததால் நரகம் சென்றவர்களையும், குறைவான இபாதத்திருந்தும் பக்கத்துவீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர் சுவனம் சென்றதான நபிகளாரின் வாக்கு... 'நம் வாழ்விற்கு' பொன்னால் பொறிக்கவேண்டிய வாசகம் அன்றோ.....


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டைவீட்டாருக்கு நோவினை தரவேண்டாம்.

இந்த ஹதீஸில் ஒரு முஸ்லின் தன் அண்டைவீட்டருடன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைகுறித்து பேசுகிறது இது போன்ற இன்னும் சில ஹதீஸ்களும் மிக விரிவாகவே விளக்கியுள்ளது.

> பத்ஹுல்பாரி என்ற புஹாரி ஷரீபின் விளக்க உரையில் அதன் ஆசிரியரான இமாம் அஸ்கலானி அவர்கள் இந்த ஹதீஸ் இன்னும் இது போன்ற தொடர் ஹதீஸ் (யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஹதீஸ் குறித்து பேசும் போது ஒர் அழகிய செய்தியை பதிவு செய்துள்ளார்கள் :

செட்டிநாட்டு ஊர்கள் பற்றிய சிறப்பு பார்வை..


செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை பற்றிய வெண்பா.

கோட்டையிலே மூன்று
குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-
நாட்டமிகும் ஊர் பத்தாம்
ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.
மங்கலம் மூன்று,வரம் ஒன்றே
ஆறுபுரம்,திங்கள் வகை ஒவ்வொன்று
சீர் புரிகள் நான்கு,பிற ஊர்கள் பத்து
சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அரம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து!.
செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தின் வெண்பாவை முன் பதிவில் பார்த்தோம்.
இப்பொழுது அந்த எழுபத்தைந்து செட்டிநாட்டு ஊர்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.


கோட்டையிலே மூன்று 

கோட்டையிலே மூன்று::
1.தேவகோட்டை, 2.அலவாகோட்டை,
3.நாட்டரசங்கோட்டை.


குடிகளிலே ஆறு:
1.அரியக்குடி,2.ஆத்தங்குடி,3.பலவான்குடி,4.காரைக்குடி,
5.பனங்குடி,6.கீழப்பூங்குடி

பட்டி இருபத்து:
1.சிறுகூடல்பட்டி, 2.மகிபாலன்பட்டி,3.கண்டவராயன்பட்டி, 4.மிதிலைப்பட்டி,5.ஆவினிப்பட்டி6.குருவிக்கொண்டான்
பட்டி,7.கீழச்சிவல்ப்பட்டி,8.வேந்தன்பட்டி,9.வலையபட்டி,
10.புதுப்பட்டி,11.கொப்பனாபட்டி,12..நற்சாந்துபட்டி,
13.பனையப்பட்டி,14.வேகுப்பட்டி,15.மதகுபட்டி,16.கடியாபட்டி,
17.நேமத்தான்பட்டி,18.கல்லுப்பட்டி,19.தேனிப்பட்டி,
20.உலகம்பட்டி.

ஊர் பத்து:
1.கோட்டையூர், 2.பள்ளத்தூர், 3.கண்டனூர், 4.செவ்வூர்,
5.ஒக்கூர்,6.தெக்கூர்,7.உறையூர்,8.வெற்றியூர்,9.செம்பனூர்,
10.அமராவதிபுதூர்.
மங்கலம் மூன்று:
1.பட்டமங்கலம்,2.கொத்தமங்கலம்,3.காளையார்மங்கலம்.

ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:
1.பாகனேரி, 2.கருங்குளம், 3.தாணிச்சாஊருணி
வயல்கள் ஐந்து:
1.புதுவயல்,2.சிராவயல்,3.ஆராவயல்,4.எ.சிறுவயல்,5.
ஒ.சிறுவயல்.

வரம் ஒன்றே:
1.ராயவரம்.
ஆறு புரம்:
1.நாச்சியாபுரம்,2.நடராஜபுரம்,3.கே.லக்ஷ்மிபுரம்,
4.வி.லக்ஷ்மிபுரம்,5.ராமச்சந்திரபுரம்,6.சொக்கனாதபுரம்.
திங்கள் வகை ஒவ்வொன்று:
1.குழிபிறை,2.விராமதி,
சீர் புரிகள் நான்கு:
1.மேலைச்சிவபுரி,2.கோட்டையூர்அளகாபுரி, 3.கே.அளகாபுரி,
4.பி.அளகாபுரி.
பிற ஊர்கள் பத்து:
1.செட்டிநாடு,2.கானாடுகாத்தான்,3.கண்டரமாணிக்கம்,
4.கல்லல்,5.கோனாபட்டு,6.மானகிரி,7.நெற்குப்பை,
8.ராங்கியம்,9.அரிமளம்,10.சக்கந்தி.
சிலை,குறிச்சி ஒன்றோடு:
1.விரயாச்சிலை,2.பூலாங்குறிச்சி

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday 21 October 2010

மருத்துவரை காணும் முன்.....

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். ஆனால் ஆரோக்கியமாக உள்ள நேரம் உடல் நலனைப் பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்வதில்லை. உடல் நலத்தை கெடுத்துக் கூட பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் பின்னாளில் எல்லாவற்றையும் ஆஸ்பத்திரிகளுக்கு வாரிக் கொடுத்து ஓட்டாண்டிகளாகிப் போவதுண்டு. கண்ணை விற்று சித்திரம் வாங்ககூடாது. ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அப்புறம் தான் மற்ற எல்லாம். எவ்வளவு பணம் கிடைப்பினும், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வேலை செய்து சம்பாதிக்காதீர்கள். உடல் நலத்தை கெடுக்கும் எந்த பழக்கங்களுக்கும் பின்னாளில் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

யாரிடம் போவது?
சின்ன உடல் நலக்குறைவுகளுக்குப் பெரிய மருத்துவமனைகளைத் தேடி ஓடாதீர்கள். குடும்ப மருத்துவர், அல்லது அரசு மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுங்கள். சாதாரண நோய்களுக்கு மருத்துவ நிபுணர்களைவிட பொது மருத்துவர்களே போதுமானது அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சிறப்பு மருத்துவம் செய்வது நலம் .

சரியான மருத்துவரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனை சுத்தமாகவும் சுகாதாரமாவும், ஆய்வகங்கள், அவசர சிகிட்சைக்கான வசதிகள் என எல்லா வசதிகளும் கொண்டுள்ளதா என பார்க்கவும். நியாயமான கூலி வசூலிக்கிறதா? இல்லை பணம் பிடுங்குவதையே பிரதானமாக கொண்டுள்ளதா? என பிறர் அபிப்பிராயத்தை கேட்டுக்கொள்ளுங்கள்.மாற்று மருத்துவம்: எல்லா நோய்களுக்கும் ஆங்கில மருத்துவம் தான் சிறப்பு என்றில்லை. பல நோய்களுக்கு அதை விட சிறப்பான மாற்று மருத்துவம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு மருத்துவர் இதற்கு ஆப்பரேசன் தான் தீர்வு என்றால் ஒரு மாற்று மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம்.
மற்ற மருத்துவங்களை விட அலோபதி வேகமாக பலன் தருவதால் உயிருக்கு ஆபத்தான நேரங்களில் அலோபதி தான் கை கொடுக்கும். ஆனால் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. அலோபதி மருந்துகள் பொதுவாக நோயாளிகளைப் பார்ப்பதில்லை. நோய், மற்றும் நோய் குறிகளையே கவனிக்கிறது.
அறுவை சிகிட்சை, மற்றும் கிருமித் தாக்குதல்களுக்கு அலோபதியே வேகமாகவும் நம்பகத் தன்மையுடனும் செயல்படுகிறது. விபத்துக்கள் நேர்ந்தால் தகுந்த முதலுதவி செய்து முடிந்த அளவு வேகமாக எலும்பு முறிவு தலைக்காயம், போன்ற அவசர சிகிட்சை மையங்களுக்கு எடுத்து செல்லவும். விபத்துகளில் கை கால் முறிந்தவர்கள் சரியான எலும்பு முறிவு நிபுணர்களிடம் சிகிட்சை பெறாமல் லோக்கல் வைத்தியர்களிடம் போய் எலும்புகள் சரியாக பொருந்தாத நிலையில் மாவுக்கட்டுப் போட்டு நிரந்தர ஊனமுற்றவர்களாக பலர் நடமாடுவதை கிராமங்களில்காணலாம்.

ஹோமியோபதி மருந்துகள் நோய்க்கு கொடுப்பதில்லை நோயாளிகளின் தன்மையே நோய்க்குக் காரணம் என்று அதற்க்கேற்றவாறு நோயாளிக்குத்தான் மருந்து கொடுக்கிறது. எனவே பக்க விளவுகள் இல்லை என்று கூறப்பட்டாலும் நீண்ட சி்கிட்சை தேவைப்படும்.

சித்த மருத்துவம் பல்லாயிரம் ஆண்டுகள் மனிதன் தன் அனுபவத்தால் சேகரித்த அறிவு. பல நோய்களுக்கு எளிய மருந்துக்களை கொண்டுள்ளது. சரியான ஆராய்ச்சிகள் இல்லாததாலும் உடனடி நி்வாரணத்தை மக்கள் விரும்புவதாலும் நம் நாட்டில் தோன்றிய இந்த அரிய அறிவின் முழு வீச்சும் வெளிப்படாமல் புதைந்தே கிடக்கிறது. சித்த மருத்துவத்திலும் ஒரளவுக்கு பக்க விளைவுகள் எதிர்பார்க்கக்கூடியதே. ஆனாலும் இது இயற்கையோடு இணைந்த ஓர் மருத்துவ முறை.

அக்குபஞ்சர், அக்கு பிரசர்,வர்ம மருத்துவம் யாவும் நரம்பு மண்டலங்களைத் தூண்டி செயல்படும் மருத்துவ முறைகள்.

ஏமாறாதீர்கள்
பொதுவாக பல மாற்று மருத்துவங்கள் அனேகம் விஞ்ஞானத்தால் சரிபார்க்கப் படாதது, அது நிச்சயமான பலன் தரும் என நிரூபிக்கப்படாதது. இதனால் நிறைய போலி மருத்துவர்களும், போலி மருந்துகளும் மக்களின் அறியாமையை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளன. விளம்பரங்களில் ஏமாந்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்காதீர்கள். மொட்டைத் தலையில் முடி முளைக்கும் மருந்துகள். ஆண்மை பெருக காயகல்பங்கள், பஸ்பங்கள், லேகியங்கள். எய்ட்ஸ், மற்றும் புற்று நோய்க்கான மாற்று வைத்திய முறைகளில் பெரும்பாலானவை போலியானவை. மக்களின் அறியாமைய பயன்படுத்தி வெறும் மாவுகளை கொடுத்து விட்டு பெரும் பணத்தை கொள்ளை அடிக்கும் பல போலி லாட்ஜ் வைத்தியர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்.
மந்திரவாதிகள், பேயோட்டிகள், தோசம், பரிகாரம் என ஏதும் உங்கள் நோய் தீர்க்க நிச்சயம் உதவாது. இத்தகைய மோசடிகளில் மிக எச்சரிக்கையாய் இருங்கள். மோசடி செய்வதில் சில அலோபதி டாக்டர்களும் சரி மேல் நாட்டு கம்பனிகளும் சரி சளைத்தவர்கள் அல்ல. இன்னும் தொப்பை குறைக்கும் கருவி , சர்வரோக நிவாரணி, மீன் வைத்தியம் , தவளை வைத்தியம், காந்த வைத்தியம், கரண்ட் வைத்தியம், எய்ட்ஸ் மூலிகை, என பல பொருட்கள் விளம்பரங்கள் மூலம் தலையில் கட்டிவிடுவார்கள்.
அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கடவுள் சித்தத்தால் இந்நோய் வந்தது அவரே தீர்க்கட்டும் என வெறும் பிரார்த்தனை மட்டும் செய்துவிட்டு எந்த மருத்துவமும் செய்யாதிருந்தால் கடவுளும் கண்டு கொள்ளமாட்டார். விரைவில் அவரைத் தேடிப்போக வேண்டிவரும்.

அதிகம் அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் உடம்பைப்பற்றியும் அது எப்படி நோயுறுகிறது என்பது பற்றியும் நீங்கள் அதிகம் அறிந்து கொள்வதே உங்ளுக்கு சிறந்த தற்காப்பு. மேலே நாடுகளில் மருத்துவத் துறைகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் திருத்தங்களும் முன்னேற்றங்களும் இன்னும் பல மருத்துவர்களை அடைய வில்லை என்பதே உண்மை. அவர்களில் பலர் இன்னும் தவறான சிகிச்சையையும வெளிநாட்டில் கைவிடப்பட்ட, தடை செய்யப்பட்ட மருந்துகளையும் எழுதித்தரகூடும்.

இருதய நோயாளிகள், வாகன ஓட்டிகள் தங்கள் வீட்டு தொலைபேசி எண்கள், முகவரி, இரத்த க்ரூப் எல்லாம் தங்களுடன் எழுதி வைத்திருப்பது அவசர நேரங்களில் கை கொடுக்கும். பக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ் மொபைல் எண் உங்கள் கைப்பேசியில் பதித்துக்கொள்ளுங்கள்.

நம்மைச்சுற்றி எங்கும் நோய்க்கிருமிகள் நிறைந்திருக்கிறது. அவற்றின் தாக்குதல்களுக்கு இலக்காகாமல் இருக்க சுகாதாரமான சூழலில் வாழ வேண்டும். அதிக நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே தேவையான தடுப்பு மருந்துக்களை இட்டுக்கொள்ள வேண்டும். போலியோ,மஞ்சள் காமாலை, யானைக்கால், காச நோய்களை, வருமுன்னே தடுத்துவிடலாம்.
அலட்சியம், விழிப்புணர்வின்மை, பாதுகாப்பு முன்னெச்செரிக்கையற்ற சுற்று சூழல் யாவும் எமனின் வாகனங்கள். மித மிஞ்சிய உணவுப்பழக்கமும், உடல் இயக்கமின்மையும் பல சிக்கலான நோய்களுக்கு கதவை அகலத் திறந்து வரவேற்பு அளிக்கும். கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, இதய நோய் , சர்க்கரை நோய், பக்க வாதம், மூளை, கிட்னி, ஈரல் பாதிப்பு என ஒவ்வொன்றையும் சந்திக்க வேண்டி வரும்.
நீங்கள் 40 வயதை கடந்து செல்கிறீர்களா?, எந்த நோயும் இல்லையா? ஒருமுறை, கண்பார்வை, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, இதயம், கிட்னி, இரத்தம், புற்று நோய், போன்றவற்றுக்கான பொதுவான சோதனைகளை செய்து கொள்ளுங்கள். உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்து கொள்ளுங்கள். நடத்தல், யோகா போன்ற சிறிய உடற்பயிற்சி, மனப்பயிற்சிளில் ஈடுபடுங்கள்.

நோய்க் காரணங்கள் வேறு, நோய் அறிகுறிகள் வேறு. நோய்க் காரணங்களுக்குத்தான் சிகிட்சை தேவை. காரணங்களை கவனித்தால் நோய் அறிகுறிகள் தன்னாலே மறைந்து விடும். காய்ச்சல், ஜலதோசம், வலி, அரிப்பு, தடிப்பு என்பது நோய்க்கிருமிகளை உடம்பு எதிர்க்கும் போது உண்டாகும் அறிகுறியே. இதற்கு மருந்து கொடுத்து நோய் கிருமிகளுடன் உடல் போராடி அழிப்பதை தடுத்து விடக்கூடாது. நோய் உண்டாக்கும் வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திதான் போராடுகிறது. நாம் எடுக்கும் மருந்துகள். நோய்க்கிருமிகளை எதிர்க்க நம் உடலுக்குத் துணை செய்கிறது அவ்வளவுதான்.
காலில் ஒரு புண் ஏற்பட்டால் உடனே கவனிக்கிறோம். ஏனென்றால் அது வலிக்கிறது. நடக்க முடியவில்லை. ஆனால் அந்த அளவு முக்கியத்துவம், பல வலிக்காத உயிர் கொல்லிகளுக்கு கொடுப்பதில்லை. சர்க்கரை நோய் முற்றி கிட்னியை, கண்ணை, பாதிக்கும் நேரம் தான் அதை அறிகிறோம். ஒரு முறை இதயம் பாதிக்கப்படும்போது தான் ,உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருப்பதை அறிகிறோம். உடலில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து உடனே உஷாராக வேண்டும்.
மனம் நோயுற்றால்?
அனேகம் பேருக்கு எந்த நோயும் இல்லாமலேயே மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பர்கள். நோய்களைப்பற்றிய அதிக முன் ஜாக்கிரதையும் கற்பனையான அச்சமும் காரணம் தன்னை நோயாளிகளாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். கவுரவத்திற்காகவும், பரிதாபத்தை சம்பாதிக்கவும் நோயாளியாக விரும்பாதீர்கள். சில மருத்துவர்கள் இவர்களுக்கென்றே பொய்யான மருந்துகளை கொடுத்து காசு சம்பாதிப்பதும் உண்டு. நோயாளி என்ற உணர்வே உண்மையாக அந்த நோயைக் கொண்டு சேர்த்து விடும். உடலில் கிருமிகள் புகுந்து நோயுண்டாக்குவது போல தேவையற்ற எண்ணங்களும் மூட நம்பிக்ககளும் கூட மனதை நோயுறச் செய்யும். உடல் நோயுற்றால் மனம் அதை குணப்படுத்த முயலும். மனம் நோயுற்றால் வாழ்கையே பாழாகிவிடும். எண்ணங்களை பகுத்தறிவு துணை கொண்டு சரியான திசையில் அமைத்துக்கொள்ளவும் பயிற்சி பெறவேண்டும். உடலுக்கு கேடு செய்யும் எல்லாமே நோய் தான். மனத்தின் கோணல் காரணம், புகை, மது போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் நிச்சயம் நோய் தான்.
நாம் நோயுற்றிருக்கிறோம் என்று உணர்ந்த உடனே நாள் கிழமை பார்க்காமல் தாமதமின்றி சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள். நோய் முற்றும் வரை அலட்சியப்படுத்திவிட்டு, பெரும் பணத்தயும் இழந்து உயிருக்குப்போராட வேண்டாம்.
ஒரு டாக்டரை விட உங்களுக்குதான் உங்கள் உடம்பைப் பற்றித் தெரியும். வயிற்றுவலி என்றால் உடனே ஸ்கேன் எடுக்க ஓடும் முன்பு நேற்று ரயில்வே பிளாட் பாரத்தில் பஜ்ஜி வங்கி சாப்பிட்டீர்களா? என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தலைவலிக்கிறதா உடனே மூளையில் கட்டியோ என்று கற்பனையை ஓட விடாமல் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப்பாருங்கள். காஸ் ட்ரபிள் இருந்தாலும் நெஞ்சு வலிக்கும். அனேக நோய்கள் மருந்தில்லாமலேயே குணமாகும். பல நோய்கள் மிக எளிய வீட்டு மருத்துவத்திலேயே குணமாகும். சில வேளைகளில் உணவே மருந்தாகும். வெறும் தண்ணீர் மட்டுமே பல நோய்களை குணப்படுத்த வல்லது.
நோய் பற்றி டாக்டரிடம் கூறும்போது உள்ளது உள்ளபடி கூறுங்கள். நோய் சீக்கிரம் குணமாகவேண்டும் என்று மிகைப் படுத்திக் கூறாதீர்கள். நீங்களே உங்களுக்கு இன்ன நோயாக இருக்குமோ என்று கூறாதீர்கள். "ஒரு ஸ்கேன் எடுத்துப் பாருங்கள் டாக்டர்" "எக்ஸ் ரே எடுங்கள்" என்று நீங்களாக மருத்துவரிடம் கேட்காதீர்கள். தேவைப்பட்டால் அவரே சொல்லுவார். அது டாக்டரின் வேலை. பலர் டாக்டரிடம் காட்டுவதோடு சரி அவர் தரும் மருந்துகளை சொல்லும் கால அளவுக்கு சாப்பிடாமல் விட்டு விடுவார்கள். இது பூரணமாக நோய் குணமாவதை தடுக்கும். நோய்க்கிருமிகள் உடலில் எஞ்சியிருக்க வழி செய்யும். நோயின் கால அளவைக்கூட்டும்.

மருத்துவரை கேளுங்கள்
மருத்துவரை சந்திக்கும்போது. உங்களுக்கு என்ன நோய், எதனால் வந்தது. குணமாக என்ன முயற்சி எடுக்க வேண்டும். எத்தனை நாள் ட்ரீட்மென்ட் எடுக்க நேரிடும். உங்கள் பொருளாதார நிலமை தாங்குமா? போன்ற எல்லா கேள்விகளயும் தெளிவாகக் கேளுங்கள். அவர் பதில் தரக் கடமைப்பட்டவர். உங்கள் பொருளாதார நிலமைக்கு தக்கபடி விலை உயர்ந்த டானிக்குகளுக்குப் பதில் சில எளிய உணவுகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே எதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார். ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள். நீங்கள் எடுக்கும் டெஸ்ட் ரிப்போர்டின் ஒரு நகலை உங்கள் வசம் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் அந்த டெஸ்ட்? என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

எதிர்பாரா மருத்துவச்செலவை எதிர் கொள்ள வழியென்ன?
குடும்பம் முழுவதிற்கும் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பற்றித் திட்டமிடுங்கள். குழந்தளுக்கு குறைவாகத்தான் ஆகும். திடீரென் தாக்கும் பெரிய நோய்களால் குடும்பம் நடுதெருவுக்கு வராமல் காக்கும். மருத்துவச்செலவு செய்து கடனாளியானவர்கள் மிக அதிகம்.
நலமாய் வாழ:
  • சுத்தத்தை பேணுவது நோய்க் கிருமிகளிடமிருந்து காக்கும்.
  • உடலின் இயற்கையான நோயெதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எல்லா நோய்களுக்கும் சில மாத்திரைகளை போட்டுக்கொண்டால் போதும் என்று கருதுவது தவறு.
  • குறைவான உணவும், மிகுதியான உணவும் நோயுண்டாக்கும். ஆரோக்கியமான உணவுகளை மட்டும் அளவோடு உண்ணவும்.
  • ரெடி மேடு உணவுளை தவிர்த்து இயற்கையான உணவுகளை சாப்பிடுங்கள். உணவை பதப்படுத்த உபயோகிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன.
  • ஆரோக்கியமான எண்ணங்களால் மனதை நிரப்புவது. உடலை பாதிக்கும் எண்ணங்களை விட்டொழிவது, உடற்பயிற்சி செய்வது, கேடு தரும் பழக்க வழக்கங்களை ஒழிப்பது இவைகள் தான் நோய்களை வெல்லும் வழி.
  • காற்றை,தண்ணீரை மாசு படுத்துவதும் , உடலுக்கு தேவையானதை விட்டு நாவை மகிழ்விக்கும் உணவுப் பழக்கமும், எந்திரங்களின் பெருக்கத்தால் உடல் உழைப்பு மறைந்து போனதும். தேவைகளை விட்டு ஆசைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதிலேயே தொலைந்து போவதும் தான் தற்கால நோய்களுக்குக் காரணம்.
  • ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சில வேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும்.
  • எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது குடல் புண்ணுக்கு விருந்து வைத்து அழைக்கும்.
  • நோயைப் பற்றியும் தரப்படும் மருந்துக்களின் தன்மைகளையும், பக்க விளைவுகளயும் பற்றி இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
  • மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் செய்யாதீர்கள். தவறாகப் பயன்படுத்தபடும் மருந்துகள் உயிரைக் குடித்துவிடும்.
  • சில நோயாளிகளுக்கு சில மருந்துகள் கொடுக்கக் கூடாது. சில மருந்தை சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.
  • மருந்தின் அளவு நோயாளியின், வயது மற்றும் எடைக்குத் தக்கபடி மாறுபடும் .

  • ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை அரைகுறையாக சாப்பிட்டு நிறுத்தக் கூடாது. நோய் கிருமிகள் அதிக பலம் பெற்றுவிடும்.
  • எடுத்ததெற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுப்பது பிறகு தேவைப்படும் நேரம் அந்த மருந்து செயல் படாதவாறு நோய் கிருமிகள் அந்த மருந்தை எதிர்த்து நிற்கும் திறன் பெற்று விடுகின்றன.
  • மருந்துகள் ஊட்டச்சத்து அல்ல. தேவையின்றி உடலில் ஏற்றிக் கொள்ளக் கூடாது.
  • அலோபதி மருத்துவர் எழுதித்தரும் மருந்துகளுக்கு நிகரான ஆயுர்வேத மருந்துகளை நீங்களாக சாப்பிடாதீர்கள்.
  • நோயாளி அனுபவப்படுவது நோய்க் குறிகளைத் தான். அதனைக் கொண்டு மருந்தை தீர்மானிக்கக் கூடாது. ஒரு மருத்துவர் சரியாக ஆராய்ந்து, சில பரிசோதனைகள், செய்து நோயை தீர்மானித்து மருந்து கொடுப்பது தான் சரி.
  • காலாவதியான மருந்துக்களை தூக்கி எறிந்து விடுங்கள்.
  • ஒரு முறை திறந்த குப்பி மருந்துகளை நீண்ட நாள் உபயோகிக்க வேண்டாம். குளிர் பதன பெட்டியில் வைத்தால் கூட இரு வாரங்களில் செயல் திறன் குறைய ஆரம்பிக்கும்.
  • மருந்து கொடுக்க சமையல் கரண்டிகளை பயன் படுத்தாதீர்கள். அளவு மாறிவிடும்.
  • ஒருவர் உபயோகித்த மருந்தை இன்னொருவருக்குக் கொடுக்காதீர்கள்.
  • வரட்டு இருமலுக்கு கொடுத்த மருந்தை சளி இருமலுக்கு கோடுக்காதீர்கள். அதற்கு சளியை வெளி்யேற்றும் வேறு மருந்து உண்டு.
  • முன்பு காய்ச்சலுக்கு உபயோகித்த ஆன்டி-பயாடிக் மாத்திரைகளை அடுத்தமுறை காய்ச்சல் வரும் வரை வைத்திருந்து கொடுக்காதீர்கள்.
  • சில மருந்துகளின் பலன் உடனே தெரிவதில்லை. நோய் சீக்கிரம் குணமாக வேண்டி அதிக அளவு மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியும். குடல் புண்ணாகி விடும்
  • அனேக ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது பின் சாப்பிட வேண்டும்.
  • மருந்தை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடாமல் தண்ணீருடன் மட்டுமே சாப்பிடவும்.
  • மருந்துக்கள் குழநதைகளுக்கு எட்டும்படி வைக்க வேண்டாம். வீட்டில் மற்றவர்களின் மருந்துகளுடன் சேர்த்து வைக்கவேண்டாம்.
  • நீங்கள் ஏற்கனவே எதாவது மருந்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ, கர்ப்பிணியாக இருந்தாலோ, வயிற்றுப்புண், சர்க்கரை, இரத்தஅழுத்தம் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தவறாமல் கூறிவிடுங்கள். அதற்கேற்ற மருந்துகள் எழுதித்தருவார்.
  • ஒரே நேரம் வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிட்சை பெறாதீர்கள். உதாரணமாக பல்வலிக்கு பல் மருத்துவரிடம் போகிறீர்கள். அவர் ஒரு வலி நிவாரணி எழுதி தந்து அதை சாப்பிட்டு வருகிறீர்கள். அடுத்து மூட்டு வலிக்கு வேறு மருத்துவரிடம் போய் வலி நிவாரணி மருந்து வாங்கி அதையும் சாப்பிடும்போது மருந்து ஒவர் டோஸ் ஆகிவிடும்.
  • மருத்துவர் தரும் மருந்துகள் அதே அளவில் அதே நேரத்தில் சாப்பிடவும். நோயிலிருந்து சிறிது ஆசுவாசம் கிடைத்ததும் மருந்துக்களை நிறுத்தி விடக்கூடாது.
  • மருத்துவர் ஆலோசனைப்படி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து சேர்க்க வேண்டியவைகளை சேர்த்து உண்ணவும்.
  • சில மருந்துகளை சாப்பிடும்போது சிலருக்கு ஓவ்வாமை ஏற்படலாம். உடனே அந்த மருந்தை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் சொல்லுங்கள்.
  • அவசரம் இல்லாத பட்சத்தில் இன்ஜெக்ஸனை விட வாய் வழி மருந்து தான் பாதுகாப்பு.
  • மருத்துவர் எழுதித்தந்து வாங்கிய மருந்தானாலும் அவரிடம் ஒருமுறை காட்டி சரி பார்த்துக் கொள்ளவும். போலி மருந்துகள் நிறைய மார்கட்டில் உள்ளன எச்சரிக்கையாக இருங்கள்.
  • மருத்துவர் விலையுர்ந்த சில கம்பனி மருந்துக்களை எழுதித்தந்தால் அதற்கு நிகரான ஜெனெரிக் மருந்துகள் உண்டா? என்று கேளுங்கள். ஜெனெரிக் மருந்துகள் பொதுவாக மிகவும் விலை குறைவாக கிடைக்கும். இரண்டிலும் ஒரே மருந்து தான் இருக்கும். உதாரணமாக "பனடால்” என்ற காய்ச்சல், வலி நிவாரண மாத்திரைக்கு நிகரான ஜெனெரிக் மாத்திரை "பேராசிட்டமால்". பனடாலில் இருப்பது பேராசிட்டமால் தான். இது பெரும் பணத்தை மிச்சப்படுத்தும்.
  • மருத்துவர் எழுதித்தரும் மாத்திரைகளின் ஒருமடங்கு டோஸ் கூடிய மாத்திரைகள் பெரும்பாலும் அதே விலையில் கிடைக்கும். அதை வாங்கி பாதி மாத்திரை சாப்பிட்டால், மாத்திரை செலவு பாதியாகும். உதாரணமாக 40 mg மாத்திரைக்குப் பதில் 80 mg மாத்திரை வாங்கி பாதி சாப்பிடவும். ஆனால் குழாய் மாத்திரைகளயும், சிறப்பு பூச்சு பூசிய மாத்திரைகளயும் இம்முறையில் வெட்டிச் சாப்பிடதீர்கள். மருத்துவர் பரிந்துரை படி செய்யுங்கள்.
  • மருத்துவர் மூன்று வேளை மாத்திரை சாப்பிடச் சொன்னால் செலவு கருதி இரன்டு மாத்திரை போதும் என்று நீங்களாக சுருக்கிகொள்வது மிக ஆபத்தில் போய் முடியும்.
  • இரதக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு தொடர்ந்து நீங்கள் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மருத்துவரிடம் கேளாமல் திடீரெனெ நிறுத்துவது மிக ஆபத்தாகிவிடும்.
  • காய்ச்சலுக்கு மருத்துவரிட்ம் செல்கிறீகள். அவர் எழுதி தந்த மருந்தில் நோய் குணமாகவில்லை, அடுத்தமுறை செல்லும்போது அவர் வேறு மருந்து எழுதி தருவார். இப்போது நீங்கள் புதிய மருந்துடன் மீத மிருக்கும் பழய மருந்தையும் சேர்த்து சாப்பிடாதீர்கள். இப்போது எழுதித் தந்ததையே தொடருங்கள்.
  • ஒரு நேர மருந்து மறந்து விட்டால் அடுத்த நேரம் சேர்த்து சாப்பிடக்கூடாது, அந்த நேரம் உள்ளது மட்டும் சாபபிட வேண்டும்.

Monday 18 October 2010

ஆறு நாள் உலக படைப்பு- அபத்தமா?

   ஓரிறையின் நற்பெயரால்...

குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும் பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!

1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?


2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம் சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே...?
            
    பார்த்தீர்களா... குர்-ஆன் அறிவியலோடு உடன் படுகிறது என சொல்லபடுகிறது. ஆனால் இது எவ்வளவு பெரிய முரண்பாடு   ஆஹா.....    குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி குர்-ஆனை இயற்றினார்...என இதர இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தெளிவு!

        மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில் இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.

   தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால் கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்
    
முதலில் இரண்டாம் கேள்விக்கான தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...
   திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59, 50:38, 57:04 ஆகிய வசனங்கள் ஆறு
நாட்களில் உலகை படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது

   இவ்வசனங்களில் நாட்கள் (DAYS) என பொருள்கொள்ளும் வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை யவ்ம் என்பதாகும். பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன் படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள், கட்டங்கள், நிலைகள் (STEPS/ STAGES ) என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,


  • அத்தியாயம் :அல்-அஃராஃப் (07)
  • வசனம் :54
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.


Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a] lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)


  • அத்தியாயம் :யூனுஸ் (10)
  • வசனம் :03
     நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?


    Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi [tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)

  • அத்தியாயம் :ஹுது (11)
  • வசனம் :7
        மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.


   Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run mubeen(un)

  • அத்தியாயம் :அல்-ஃபுர்கான்(25)
  • வசனம் :59
  அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.


    Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)



  • அத்தியாயம் :காஃப் (50)
  • வசனம் :38
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.


   Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)


  • அத்தியாயம் :அல் ஹதீத்(57)
  • வசனம் :04
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.


 Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)

  மேற்கூறிய அரபு மூல வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள் கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...

    ஆக நாள் என்ற பதம் மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக படைப்பு 6 கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.

     இல்லை...இல்லை நாட்கள் என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக..

   6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.
குர்-ஆன் அவ்வசனத்தில் குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?

   பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு

                                                   6 X 24 = 144
                   144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்.,  குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.

     ஒரு நாளை கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில் தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான் ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள். அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது

      ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!

        மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும் இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.

   பொதுவாக களைப்பு என்பது சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின் காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.

      தான் மேற்கொண்ட உலக படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும் தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும் அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.

 ஆக அய்யாம் என்ற அரபு மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு முரணானதல்ல.

இத்தோடு சேர்த்து இங்கு ஒரு துணை விளக்கம்


   அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,

  "பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.


அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).


பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.


ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இதில் முதல் வசனத்திற்கு -  -2 நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு        -4 நாட்கள்
நான்காம் வசனத்திற்கு           -2 நாட்கள்

  ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.இந்த எண்ணிக்கையை கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல் அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை பற்றித்தான் குறிப்பிடுகிறது.

    ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது .மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!

இப்பொழுது முதல் கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?

 குர்-ஆனில் இறைவன் வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையை நீண்ட கால படைப்புக்கு விடை தேவைப்ப்டலாம். ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது
  
 ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)


(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)


     ஆக இறைவனின் ஒரு படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில் செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்படையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான், சிலவற்றை நீண்ட- நெடிய காலங்களுக்கு பிறகு வெளியாக்குகிறான்.

 தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்..,
 
  அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)

Friday 15 October 2010

Top 10 List of IAS Coaching Centers in Chennai..


Shankar IAS Academy
Address: AP-2241,2nd floor ,4th avenue,12th main road, shanthi colony,anna nagar
City: Chennai-40
State/Province: Tamil Nadu
Phone: 044-64597222044-2621 64359444166435
E-Mail: enquiry@shankariasacademy.com, shankariasacademy@gmail.com
Additional Message: Success from our Institute 1 (2004), 11 (2005), 27 (2006), 36 (2008) And 220 candidates wrote mains and waiting for Results.

SATHYA IAS ACADEMY
Address: no.12, 6th street, Af block, 11th main road, anna nagar west,
City: Chennai-40
Phone: 9787802927.
E-Mail: strategyiasacademy@yahoo.in
Message: SATHYA IAS ACADEMY in chennai is the only institute in South India which offers best coaching at affordable cost.
For achievements refer Tamil Daily \''DHINAMANI\''Dated 20/05/2008,17/08/2008, 08/03/2009, Times of India Dated 06/05/2009 .

Indian IAS Academy
Address: AB-101,2nd Floor, PKS Complex,
6th Main Road,Shanthi Colony,behind KHM Hospital,Anna Nagar.
City: Chennai-40.
State: Tamilnadu.
Phone: 044 26203883, 98419 96486.
E-Mail: enquiry@indianiasacademy.com
Message: we are specialised in Geography,public administration and history.Classes handled by experienced civil service aspirants and interview candidates only.Stratergies also given by civil servants periodically through seminars.Regular tests and discussions.Special focus on each candidates.classes taken both in english and tamil.Hygenic hostel facilities.

Educasium (Civil Service Program)
Address: Gopalapuram Boys Hr. Sec. School, No. 11, Conran Smith Road,
Chennai - 600 086.
Opp to Gopalapuram Play Ground, (Near Satyam Theatre).
Timing: Saturday (from 10.00 AM to 2.00 PM) and
Sunday (from 10.00 AM to 2.00 PM)
City: CHENNAI
State: TAMIL NADU
Phone: 99620-55522
E-Mail: educasium@live.com .

SUCCESS IAS ACADEMY
Address: 4F,Block 13,Jains Green Acres,Dharga Road,Zameen Pallavaram,Chennai-600 043.
City: Chennai.
State: TamilNadu
Phone: 9940054689,940014689,044-22663382.0422-2445240.
Web Site: www.successiasacademy.com
E-Mail: sampath.dc@gmail.com
Message: Meritorious Students are given Free coaching/Discounts in fee structure based on the tests conducted @ Academy.Free Counseling is held on everyday for the new Aspirants.

Excell Career India
Address: 28 College Road, Nungampakkam.
City: Chennai.
State: Tamil nadu.
Phone: 9884071046
Web Site: www.excellcareerindia.org
E-Mail: kal05758@yahoo.co.in
Contact Person: kalyan Sundaram
Message: headed by a former civil servant of 1983 batch.

Synergy Siddharth
Address: 36,Jagadambigai Street, Thiruvalleeswarar Nagar, Thirumangalam,Anna
Nagar (West) Landmark Thiruvalleeswarar Vinayaka Temple or Divya Hospital,Just Behind Government Quarters,Chennai-40
State/Province: Tamilnadu
Phone: 044-2615673999413868379382833504
E-Mail: enquiryias@synergysiddharthias.com
Web Site: www.synergyias.com.
Message:Union Public Service Commission to recruit IAS,IPS,IFS,IRS, TNPSC.

Eva Stalin IAS Academy
Address: Phoenix Towers, First Floor, No:#29, Venkatesan Street, West Tambaram,
City: Chennai - 45.
State/Province: TamilNadu.
Phone: 044-32427161
Mobile: +91-9176966281
E-Mail: evastalin@gmail.com.
Message: Best IAS / IPS / TNPSC / UPSC / Civil Services Coaching result oriented center.

Impact Ias Academy
Address: AE 13/99, 6th street,10th main road,annanagar
City: Chennai
State/Province: Tamilnadu
Phone: 9840557455
E-Mail: impactias@gmail.com
Contact Person: A.Thirumurugan
Message: One of the premier institute in chennai with proven track record of 440/600 in general studies(p.rajendracholan ias, air 32nd),offer best coaching for gs in chennai,optionals public administration,anthropology,geography,history and tamil.

Ganesh IAS
Address: Mu. Vaa Arcade, C-1, Chinthamani Signal, Anna Nagar (E)
City: Chennai,
State/Province: Tamil Nadu
Phone: 9840241118
Message: So far produced very good results .

Integrations
Address: 14/40, 4th street.
L-Block, 12 Main Road
City: AnnaNagar West - Chennai
State/Province: TamilNadu
Phone: 044-43500533
Mobile: 9382154124
E-Mail: sriintegrationschennai@rediffmail.com
Message: General Studies, Anthropology, History.
Only Successful institute in South India For ANTHROPOLOGY.
ALL INDIA TOPPER-2007 ANTHROPOLOGY-MUTHU KUMAR.I.A.S MARK-393.
T.N.STATE TOPPER-2005. NANDA KUMAR- I.A.S GENERAL STUDIES.
All India Topper- 2010- Anthropology - K. Vijayakarthikeyan Marks - 375.

Madhavan Ias Academy
Address:II floor, No.2171, 6th Street “l” Block,12th Main Road,Anna Nagar West.
City:Chennai- 6000 40
Mobile No: 0909473478409884939482
Email.Id: kpmadhavanias@gmail.com
Conatct for IAS Materials and Personal Guidence for General Studies and Optional Subjects For Preliminary and Main Exam and interview. Banking,Railways,Staff Selection Comission, TNPSC & State Public Service Commission, Guidence Through E-mail.

V I T A L- For Competitive Exam
Address: 5A, 8th block, Kences enclave, No.1, Ramakrishna street,T.Nagar.
City: Chennai
State/Province: TamilNadu
Mobile No: 98841820309940069435
Email.Id: vitalcoaching406@gmail.com
Contact Person: Dr. Gowri Ramachandran/ Mr. Raghavan/ Prof Satagopan
Message: Faculties who have produced many IAS / civil servants associated with us. G S / CSAT 1 and 2 for prelim . History, political science, sociology and public administration for Main exam

Mylapore Educational Academy for Law [MEAL]
Address: No.69, V.S.V. Koil Street, Mylapore Chennai - 600004
City/State : Chennai/Tamil Nadu
Phone: 90431 13813/044-2657 3401
E-mail: iaslawacademy@gmail.com
Website: iaslawacademy.in
Message: Mylapore Educational Academy for Law [MEAL] is a unique initiative in the field of legal education. It offers Courses based on LAW and GS for Civil Services exams, Judicial Services, CLAT and PCS exams.

DOOR,CENTRE FOR CIVIL SERVICES
Address: 1075,TVS COLONY,ANNA NAGAR WEST EXTENSION.CHENNAI.
City: Chennai
State/Province: TamilNadu
Phone: 9840236238/9840248144
E-mail: ptarun18@gmail.com
Contact Person: P T ARUN
Message: ClASSES FOR PSYCHOLOGY,SOCIOLOGY, GS(BOTH MAINS AND PRELIMS PAPER 1),ESSAY AND INTERVIEW.