- உடல்பகுதி
- கருக்குழல்
- கருப்பை
எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்ச்சி ஏற்படலாம்.
* கர்ப்பப்பை கட்டி - பினைன் (Benign Tumor) (ஆபத்தில்லாத கட்டி)
- மாலிக்னன் (Malignant Tumor) (புற்று நோய் கட்டி)
Myomata
* ஆபத்தில்லாத கட்டி
* கர்ப்பப்பை தசைப்பகுதியில் இருந்து வளரும் கட்டி தசையில் இருந்து எழுந்த வளர்ச்சி நர் மயோமேட்டா (அல்லது) மயோமா
* இதை ஸ்க்லிரோமேட்டா, பைப்ராய்ட் என சொல்லாம்.
யார் யாருக்கு வர வாய்ப்புள்ளது?
* மாதவிலக்கு நின்ற பெண்களில் 60% பெண்களுக்கு காணப்படுகிறது.
* மணமாகி குழந்தையில்லாத பெண்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்த தாய். இவர்களில் 60% பெண்கள் வர வாய்ப்பு
* சதை வளர்ச்சி 1 செ.மீ - 15 செ.மீ. அளவு இருக்கும்.
* 30% பெண்கள் பாதிப்பு - 30 வயது - 40 வயது
* 60% பெண்கள் பாதிப்பு - 40 வயது - 50 வயது
* 30% பெண்கள் பாதிப்பு - பிள்ளையில்லாத பெண்கள்
* 20% பெண்கள் பாதிப்பு - ஒரு குழந்தை பெற்ற பெண்கள்
* 40% பெண்கள் பாதிப்பு - பல குழந்தைகள் பெற்ற பெண்கள்
* 10% பெண்கள் பாதிப்பு - முதர் கன்னிப்பெண்கள்
* 20 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் Fibroids தோன்றுவதில்லை.
Except in Afro-Caribbean பெண்களிடம் 20 வயது கீழ் teenageல் தோன்றுகிறது.
(Fibroids) கர்ப்பப்பை கட்டிகளில் 4 வகைகள்
Submucus Fibroids :
கர்ப்பப்பையின் உள்ளே கரு எங்கே வளருமோ அங்கு வளரும். எண்டோ மெட்டிரியம் அடுக்கினால் இந்த Fibroids மூடப்பட்டிருக்கும்.
Intramural Fibroids
* கர்ப்பப்பையின் சுவர் பகுதியில் வளரும் கட்டிகள்.
* கர்ப்பப்பையின் இருபக்கங்களிலும் தோன்றக்கூடியது.
* 5 செ.மீ. மேல் கட்டி வளர்ந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.
Subserous Fibroids
* கர்ப்பப்பையின் வெளிப்பாகத்தில் தோன்றக்கூடியது
* சில மயோமேட்டாக்கள் காம்பு போன்ற பகுதியால் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும்.
* கர்ப்பப்பை வெளிபகுதியில் தோன்றுவதால் குழந்தை பிறப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது.
Fundal Myoma
* கர்ப்பப்பையின் மேல், நடுப்பகுதிகளில் கட்டிகள் வருவது. இம்மாதிரி கட்டிகள் வருவது மிகவும் அரிது.
* சில மயோமா ப்ராட்லிகமெண்டுடன் இணைந்திருக்கும் ப்ராட்லிகமெண்ட்
* Penduculated Fibrods can be attached either to the inside or outside wall of the womb and they are characterize by a stalk
* Cervical Myoma
மிக மிக ஆபூர்வமாக தோன்றுவது 4% காணப்படும்
Intramural Fibroids - 73%
Submucons - 16.6%
Subserous - 10.4%
கட்டிகள் உள், வெளிப்புற தோற்றம்
* வட்ட வடிவம் (அல்லது) முட்டை வடிவம்
* கேப்சியூல் போன்ற உறை. தொட்டால் ரப்பரி மாதிரி இருக்கும்
* கேப்சியூல் உள்ள இணைப்புத்தி மயோமாவை கர்ப்பப்பை சுவருடன் இணைகிறது.
* கேப்சியூல் - விசிறி போன்ற அமைப்பானது ரத்தக்குழாய் இதன் மூலம் ரத்தம் பெற்று மயோமா கட்டிகள் வளர்கிறது.
* கட்டியின் ஒரங்களில் ரத்தஒட்டம் மிகுதி. அங்கு கால்சியம் அடைப்பட்டு கல் மாதிரி தோன்றும்.
* கட்டியின் நடுப்பகுதிக்கு மிக குறைந்த ரத்தம் தான் செல்லும்
* கட்டியின் நடுப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக சேர்ந்து இறுகி விடும்.
Myomaவின் அறிகுறிகள்
* முக்கிய குறி அதிக மாதப்போக்கு ஏற்படுதல்
* கர்ப்பப்பையின் உள்ளே (அல்லது) கர்ப்பப்கையின் இருபக்கங்களிலும் வருவது மாதப்போக்கில் தன்மை ஒழுங்கற்று இருக்கும்.
* மாதப்போக்கு விட்டு விட்டு (அல்லது) ஒழுங்கற்று (அல்லது) அதிகமாக வெளிப்படலாம். கட்டிகளாகவும் வெளிப்படலாம்.
* கட்டியின் அளவு பெரியதாக இருப்பின் கர்ப்பப்பை கட்டி சிறுநீர்ப்பை (அல்லது) மலக்குடல் அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படும். முதுகுவலி ஏற்படலாம்.
* பெரும்பாலான பெண்களுக்கு மயோமாவால் அதிக மாதப்போக்கு ஏற்படுகிறது. வலி அவ்வளவாக இல்லை.
* சில பெண்களுக்கு அடிவயிறு கனத்து இருக்கும் இருக்கும் உணர்வு தோன்றுதல்
* சில பெண்களுக்கு அதிக போக்கின் காரணமாக இரத்த சோகை தோன்றலாம்.
* தொடர்ந்து இருபது நாட்களுக்குள் அதிக மாதப்போக்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் மாதப்போக்கு ஏற்படலாம்.
* பல கேசுகளில் கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறியே வெளிப்படாது.
* 25 - 30 வயதில் தோன்றும் Myoma கர்ப்பம் தரிப்பதை தடுக்கிறது.
* கர்ப்பம் தரித்த பின் ஏற்பட்டால் Myoma கருச்சிதைவு ஏற்படலாம்.
* பெரிய கட்டிகள் அழுத்தம் இரத்தக் குழாய்களைத் தாக்குவதால் இடுப்புக்குழியில்
வீக்கம், வலி ஏற்படும்.
* மாதப்போக்கு முற்றும் பெறும் காலம் மற்றும் முற்றும் பெற்றபின் சில கர்ப்பப்பை கட்டிகள் சுருங்கி விடும்.
Myoma ஏற்படக் காரணம்
* திட்டவட்டமான காரணம் அறியப்படவில்லை. பரவலான காரணம்
* நாடப்பட்ட கர்ப்பப்பை தொற்று
* குழந்தையின்மை
* ஒரு குழந்தை மட்டும் பெற்ற பெண்கள்
* நாற்பது வயது வரை உள்ள கன்னிப்பெண்கள்
Homoeo Medicine
1. வயதானவர்கள் – Ars. Iod
2. இளம் வயதுபெண்கள் - Aurmur
3. அடிவயிறுகனம் எடை தொங்குவது போன்ற உணர்வு + திடீர் வலி - Calendula
4. குழந்தை பிறந்தவுடன் கட்டி தோன்றி வலியுடன் கூடிய M + வயிறு கனம் – Fraxinus Americans
5. தைராய்ட் சுரப்பி அதிக வளர்ச்சி – Cal.யோத்
நன்றி : கீற்று.காம்
கர்ப்பப்பையில் கட்டி
பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் யூட்டரின் பைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் பொதுவாக புற்று நோய்க் கட்டிகளாக மாறும் என்று கருதப்படுவதில்லை.
பல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நான்கில் மூன்று பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரியவராது. இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு.
பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும். இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது வழக்கம்.
அறிகுறிகள்:
கருப்பையில் கட்டி இருக்கும் போது பொதுவாக கீழ்வரும் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். மாத விடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப் போக்கு ஏற்படுவது. இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம், சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல், மலச்சிக்கல், முதுகு வலி அல்லது கால்வலி.
தனக்கு வரும் ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம், ஊட்டசத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு. இது போன்று அழியும் கட்டியிலிருந்து வெளிவரும் துணைப் பொருட்கள் சுற்றியுள்ள தசைகளில் ஊடுருவி வலியையும் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம்.
கருப்பையின் உள்துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதை தான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். கருப்பையின் புறப்பகுதியில் நீட்டி கொண்டிருக்கும் கட்டி பிளாடரையோ சிறு நீரை அகற்றும் குழாயையோ அழுத்தும், இதனால் சிறுநீர்ப்பாதை உபாதைகள் ஏற்படலாம்.
கருப்பையின் பின் பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இது முதுகு தண்டு நரம்புகளை அழுத்தும் போது முதுகுவலி ஏற்படுகிறது.
காரணங்கள்:
மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச் செய்கிறது. கட்டிகள் கண்களுக்கு தெரியாத அளவு முதல் கருப்பையையே பெரிதாக்கும் அளவு வரை வேறுபட்ட அளவுகளில் தோன்றலாம். இவை ஏன் தோன்றுகின்றன என்பது குறித்து தெரியாது. ஆனால் கிளினிக்கல் அனுபவமும், ஆராய்ச்சியும் பல காரணிகளை எடுத்துரைக்கின்றன.
மரபணு மாற்றத்தால் ஏற்படும்:
மரபணுக் கூறுகளின் மாற்றங்களால் இது ஏற்படலாம். கருத்தோற்றத்தை சாத்தியமாக்கும் எஸ்ட்ரோஜென், ப்ரொகெஸ்ட ரோன் என்ற இரண்டு மறு உற்பத்தி ஹார்மோன்கள் கட்டியை தோற்றுவிக்கலாம் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் திசுக்களை பராமரிக்கும் சில பொருட்கள் அதாவது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி கட்டி வளர்ச்சிக்கு காரணமாகலாம்.
கருப்பை கட்டி சிகிச்சையில் ஒரே அணுகுமுறை என்பது இல்லை. பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. கட்டிகள் இருப்பது தெரியவராத பட்சத்தில் பொறுத்திருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த கட்டிகள் நிச்சயமாக புற்று நோய் கட்டிகள் அல்ல. மேலும் மகப்பேற்றில் இது ஒரு போதும் இடையூறு செய்யப் போவதில்லை.
இவை மெதுவாக வளரும். மாதவிடாய்க்கு பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே கட்டிகள் சுருங்கி விடும். இது தவிரவும் பல விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. கருப்பையை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் பல்வேறு பக்க ஆபத்துகளை உருவாக்கலாம் என்பதால் மருத்துவர்கள் வேறு வழியே இல்லாத பட்சத்தில் தான் இதற்கு பரிந்துரை செய்வார்கள்.
அல்லது கட்டிகளை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையும் உள்ளது. இதுவல்லாமல் மயோலைஸிஸ் என்று அழைக்கப்படும் சிகிச்சை முறை உள்ளது. இதில் மின்சாரத்தை பாய்ச்சி கட்டிகளை அழித்து, கட்டிகளை ஊட்டி வளர்க்கும் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும் சிகிச்சை உதவிகளுமாக இருக்கும் என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி.
பெண்களின் கர்ப்பப்பை கட்டிகளை நீக்க நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன. உலகில் குழந்தைப்பேறு இல்லாத பெண்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு கர்ப்பக் குழாயில் கட்டிகள் ஏற்படுவதே முக்கியமாக காரணமாக உள்ளது. இதை குணப்படுத்துவதில் நவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறை நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை முறையில், கருப்பையில் செலுத்தப்படும் நுண்ணிய கேமரா மூலம் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சிறிய கட்டிகளாக வெளியே கொண்டு வரப்படுகிறது. இதனால் கருப்பை குழாயில் இருந்த அடைப்பு முற்றிலும் நீக்கப்படுவதால் கர்ப்பம் சாத்தியமாகிறது. இந்த சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் 60 முதல் 70 சதவீதம் வரையிலான பெண்கள் கருத்தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
நவீன சிகிச்சைகள்:
பெண்களுக்கு சுரப்பியில் கோளாறு, சினைப்பையில் நீர்க்கட்டிகள், ரத்தக் கட்டிகள், குழாயில் அடைப்பு, அல்லது நீர் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இதை தவிர கர்ப்பப்பையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி இருக்கலாம்.
விஞ்ஞான வளர்ச்சியினால் இவை அனைத்தும் சரி செய்யலாம். ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் பெரும்பாலும் இப்பிரச்சினைகளை 99 சதவீதம் சீராக்கலாம். எல்லா குறைபாடுகளுக்கும் சோதனைக் குழாய் சிகிச்சை அவசியம் என்று சொல்ல முடியாது. 90 சதவீதம் குறைபாடுகளை லேப்ரோஸ் கோபி, ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் சரி செய்ய முடியும்.
இந்த சிகிச்சை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கிறார் டாக்டர் ஜெயராணி.
தாய்மை அடையலாம்:
முட்டைப் பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பையில் 10 செ.மீ. கட்டிகள் என்பனவற்றை ஒரு செ.மீட்டர் அளவேயான சிறு துளையிட்டு நீக்கலாம். ஹார்மோனிக் ஸ்கேஸ்பெல், மோர் சிலேட்டர் என்ற அதிநவீன கருவிகளால் சிறிய அளவு ரத்தப் போக்கோடு சிறு துளையையிட்டும் அகற்றலாம்.
தையலே இல்லாமல் ஒரே நாளில் தெம்போடு வலியில்லாமலும் வீட்டிற்குச் செல்லலாம். இரண்டே நாளில் வேலைக்கும் செல்லலாம். டியூப்பில் உள்ள நீர் அடைப்பு இவை இரண்டும் குழந்தை உருவாவதைத் தடுக்கும். இவற்றை இந்த மகத்தான சிறு துளை சிகிச்சையினால் சரி செய்யலாம்.
சரி செய்த பிறகு 90 சதவீதம் பெண்கள் தாய்மை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. இதை தவிர கர்ப்பப்பையில் சதை வளர்ச்சி இருப்பதால் குழந்தை வளர இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சையினால் இதையும் நீக்கலாம். கட்டிகளையும் நீக்கலாம், நீக்கிய பின் 95 சதவீதம் பெண்களுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு உண்டாகிறது.
நன்றி : மாலைமலர் நாளிதழ் ..
கர்ப்பப் பை கட்டியை அகற்ற நவீன சிகிச்சை..
கர்ப்பப் பை கட்டியை அகற்ற சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்"ஹைபு' என்ற நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது என புற்றுநோய் நிபுணர் டாக்டர்ரத்னாதேவி தெரிவித்தார்.நெய்வேலியில் செயல்படும் சென்னை அப்பல்லோ
மருத்துவமனையின் தகவல் மையத்தில் நேற்று எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர்ஜெயமூர்த்தி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரத்னாதேவி மற்றும்அப்பல்லோ அதிகாரிகள் லதா மகேஸ்வரி, லட்சுமி பிரியா ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.அப்போது டாக்டர் ரத்னாதேவி கூறியதாவது:கர்ப்பப்பை கட்டிஎன்பது குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களிடம் பொதுவாக காணப்படுகிறது.
இக் கட்டிகளை அகற்ற வழக்கமாக அடி வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை
அல்லது நுண் துளை லேப்ராஸ்கோப் மூலம் சிகிச்சை ளிக்கப்படும்.இம்முறை
சிகிச்சை தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் 'ஹைபு' என்ற புதிய அதிநவீனசிகிச்சை வாயிலாக, துளையில்லாமல், மயக்க மருந்து இல்லாமல் 2 மணிநேரத்திற்குள் சிகிச்சை அளித்து கட்டியை முழுமையாக அகற்றி குணப்படுத்தமுடியும்.ரேடியேஷன், தழும்பு எதுவுமின்றி உடனடியாக வீட்டிற்குத்திரும்பலாம்.இவ்வாறு டாக்டர் ரத்னாதேவி கூறினார்.எலும்பு சிகிச்சை நிபுணர்டாக்டர் ஜெயமூர்த்தி கூறுகையில், "இளம் பருவத்தினர் தொடர்ந்துகம்ப்யூட்டர் மற்றும் "டிவி' பார்ப்பதால் கழுத்து, முதுகுவலி போன்ற எலும்புதொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.ஓய்வின்றி உட்கார்ந்த நிலையிலேயே நீண்டநேரம் பணி செய்வது. சூரிய வெளிச்சமே உடலில் படாமல் அறைக்குள்ளேயே செய்யும்பணிகள் மேற்கொள்வதை இளம் பருவத்தினர் தவிர்க்க வேண்டும்' என்றார்.
நன்றி:தமிழ் யாஹூ.காம்
கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்!
பொதுவாக ஹோமியோபதி மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தமுறை மருந்துகளால் தீங்கு ஏற்படுவதில்லை. இந்த மருந்துகள் பக்க விளைவுகளையோ அல்லது பின் விளைவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை என்பதும் இந்த மருத்துவ முறையின் கூடுதல் தனிச்சிறப்பு எனலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஹோமியோபதி மருந்துகள் முழுப் பாதுகாப்பானவை. மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிமையான சுவையுடன் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
எல்லாவகையான நோய்களுக்கும் நிரந்தர குணம் அளிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அந்த வகையில் கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றிப் பார்ப்போம்.
இன்றைய நவீனயுகத்தில் படித்த பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அந்தரங்கமாகக் கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். வெளியே சொல்வதற்கு சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
Menorrhagia எனப்படும் அதிகளவு மாதப்போக்கு, Metrorhagia எனப்படும் இடைக்கால மாதப்போக்கு, Dysmenorrhea எனப்படும் வலிமிக்க மாதப்போக்கு, Amenorrhea எனப்படும் தடைப்படும் மாதப்போக்கு, Leucorrhea எனப்படும் வெள்ளைப்பாடு, Oophoritis, Salpingitis, Metritis போன்ற கர்ப்பப்பை சார்ந்த அழற்சிகள், Cysts எனப்படும் நீர்க்கட்டிகள் Uterine Fibroids எனப்படும் கர்ப்பப்பை நார்க்கட்டிகள், Cervical Polyp, Uterine, Tumours, Myoma எனப்படும் சிறிய, பெரிய தசைக்கட்டிகள், வீக்கம் போன்றவை பரவலாகப் பெண்களிடம் காணப்படும் வியாதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவே கர்ப்பப்பை கட்டிகள் எனப்படுகின்றன.
பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
எனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண நிலையில் நோய் இருக்கும்போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.
காரணங்கள்
இன்றைய நவீன வாழ்க்கைச் சூழ்நிலைகளாலும், பதற்றம், பரபரப்பு, அவசரங்களாலும், உரங்கள், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகக் கூட இருக்கலாம்.
அதிலும் கடந்த தலைமுறையினரைக் காட்டிலும் இந்த தலைமுறையினரில் குறைவான வயதுடைய பெண்களுக்கு இதுபோன்ற கட்டிகள் அதிகளவில் காணப்படுகின்றன.
கர்ப்பப்பை கட்டிகளைப் பொருத்தவரை அலோபதி மருத்துவமுறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகைக் கட்டிகளையும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் இதுபோன்ற கட்டிகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தும், கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியும் கர்ப்பப்பை இயக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வருகின்றன.
சினைப்பைகளிலோ (Ovaries), கருக்குழாய்களிலோ (Fallopian Tubes) கர்ப்பப்பையிலோ (Uterus) வீக்கம் (Enlargement) அல்லது கட்டிகள் இருந்தால் அதனால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். மாதவிலக்கு தடைபடுதல் (Suppression of Menses), கட்டுக்கடங்காத அதீத இரத்தப்போக்கு (Profuse Bleeding) இடுப்பு வலி, அடிமுதுகுவலி, அடி வயிற்றுவலி, கால்களில் வலி, நடக்க இயலாத பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் உஷ்ணம், வலி, அதிக வெள்ளைப்பாடு, குளிர்ச்சுரம், தலைவலி, இரைப்பைக் கோளாறுகள், உடலிலும் மனதிலும் அமைதியற்ற நிலை (Restlessness) போன்ற பிரச்னைகளால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை துயரமாகி விடும்.
மிகவும் குறைந்த வயதுடைய பெண்களின் சினைப்பையில் நீர்மக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் அலோபதி மருத்துவத்தை விட ஹோமியோபதி மருந்துகளே சிறந்த பலனைத் தரும். சினைப்பையில் நீர்மக் கட்டிகளுக்கு அலோபதி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் ஹோமியோபதி மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை அளித்ததற்கான முன்உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.
சிகிச்சை முறைகள்
ஹோமியோபதி மருத்துவத்தில் விபத்து காலங்கள் தவிர பெரும்பாலான வியாதிகளுக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை.
கர்ப்பப்பை வீக்கத்தை, வலி அல்லது கட்டிகளைக் குணப்படுத்த கோனியம், ஆரம்மெட், கார்போ அனிமாலிஸ், கியோசோட்டம், தைராய்டின், அபிஸ்மெல், லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், காலிபுரோம், மூரக்ஸ் போன்ற ஏராளமான மருந்துகள் நோயின் தன்மைக்கேற்ப உள்ளன.
மேலும் லக்கானினம், தூஜா, கல்கேரியா புளோர், சிமிசிபியூகா போன்ற மருந்துகளும் கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இயற்கையான வழிமுறைகளில் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த இழப்புமின்றி நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவமே மிகவும் சிறந்தது.
-நன்றி: ஹோமியோபதியும், மனித நலமும்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
sir send message to me
ReplyDeletedear sir,
ReplyDeleteam prabu, my mom having problem in uterus like myoma,so too much of continouse bleeding so what is treatment and were i contact.Important one she accured kidney failure