Monday 30 June 2014

ரயில் கட்டணம் உயர்வு தேவையா ? ஒரு சிறப்பு பார்வை..

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் ஒருமுறை மட்டுமே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.ரயில் கட்டண உயர்வு என்பது அவ்வப்போது நடைபெறுவதுதான். ரயில் கட்டணம் உயர்த்தாமல் இருக்கமுடியாது. ஆனால் இப்போதைய ரயில் கட்டண உயர்வை நீங்கள் பார்க்க வேண்டும். அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே அமைச்சர் ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது வரவு எப்படி உயர்த்துவது செலவை எப்படி குறைப்பது என்பது பற்றியெல்லாம் சில குறிப்புகளை எழுதிவைத்துவிட்டுச் சென்றார்.  

தேர்தலுக்குப்பிறகு ரயில் கட்டண உயர்வை அன்றை சூழலை கருத்தில் கொண்டு, அன்றைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை தீர்மானிக் கலாம் என்றும் அன்றைய ரயில்வே அமைச்சர் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

இன்றை ஆட்சியாளர்கள் என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள்?.
காங்கிரஸே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் இருக்கக்கூடாது என்றார்கள். காங்கிரஸ் தான் இந்த நாட்டை சீரழித்துவிட்டது என்று பேசினார்கள்.அப்படிச்சொல்லி ஆட்சிக்கு வந்தவர்தார்கள். இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் இருக்கக்கூடாது என்றார்கள். காங்கிரஸ் தான் இந்த நாட்டை சீரழித்துவிட்டது என்று பேசினார்கள்.

அப்படிச்சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை ரயில்வேயில் எந்த சீர் திருத்தத்தை செய்யப்போகிறோம் என்று இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பயணி களுக்கு என்ன சலுகைகள், புதிய ரயில்கள் என்ன?, புதிய ரயில் தடங்கள் என்ன?, ரயில்வேயில் செலவை எப்படிக்குறைப்பது?, எப்படி சீர்திருத்தங்கள் மேற்கொள்வது என்பது பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூட கிடையாது.

ஆனால் எந்த சீர்திருத்தத்தையும் அறிவிக்காமல் ரயில் கட்டண உயர்வை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம், சரக்குக் கட்டண உயர்வு 6.5 சதவீதம் என கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார்கள். எந்தக் காலத்திலும் இந்த அளவுக்கு கடினமான, மோசமான ரயில் கட்டண உயர்வை எந்த ஆட்சியிலும் அறிவித்தது கிடையாது என்பதை நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 2 சதவீதம், 3 சதவீதம் உயர்த்தலாம். ஏன் 5 சதவீதம் கூட உயர்த்தலாம். ஒரே நிலையிலே 14.2 சதவீதம் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் கட்டணத்தை உயர்த்தும் போது மொத்த பொருளாதார சூழ்நிலையை கணக்கில் எடுத்திருக்கவேண்டும். பணவீக்கத்தை கணக்கில் கொண்டு இந்த நேரத்திலே ரயில் கட்டணத்தை உயர்த்திருப்பது சரியா தவறா என்று சீர்தூக்கிப்பார்த்திருக்கவேண்டும். பணவீக்கம்குறைந்துவரும் காலத்தில் ரயில்வே கட்டணத்தை உயர்த்துவது என்பதோ, பணவீக்கம் அதிகரித்துவரும் காலத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்துவது என்பதோ என எதையும் சீர்தூக்கிப்பார்க்காமல், சீர்திருத்தத்தை அறிவிக்காமல், பணவீக்கத்தை கணக்கிலே கொள்ளாமல் அனைத்து விலைகளும் உயரும் நேரத்திலே மிக மோசமான ரயில் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் இந்த அரசை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்பாட்டம்காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும் அன்க்கே காங்கிரஸ் கட்சி  மற்றும்மாநில எதிர் கட்சி சார்பில்  நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.


எனது கருத்து :
மத்தியில் பொறுப்பேற்றிருக்கும் பா.ஜ., அரசு, "தேர்தல் வாக்குறுதியில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்போம். விலைஉயர்வைக் கட்டுப்படுத்துவோம்' என்று தெரிவித்தது. ஆனால், காஸ், மண்ணெண்ணெய் உட்பட பல்வேறு விலையேற்றம் தற்போது நடந்துள்ளது. ஏழை மக்களை பாதிக்கும் வகையில் மத்திய  அரசு ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது .இந்த அரசு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதை விட்டு விட்டு, ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் தேவையில்லை. வருவாய் பெருக்கக் கூடிய எத்தனையோ வழிகள் இருக்கும் போது ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் கட்டண உயர்வு தேவையில்லாதது.ரயில் கட்டணம் உயர்வு, அன்றாடம் ரயிலை பயன்படுத்தும் மக்களுக்கு பாதிப்பு தான். வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி கவலையில்லை  என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை. (சில அரசியல் வாதிகள் உட்பட.) நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.தெற்கு இந்தியாவில்  90%  விழுக்காடு  மக்கள் டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்கள். ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு கடைபிடித்த கொள்கை காரணமாக, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, பொதுமக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தில் மக்கள் தவிக்கும் போது, ரயில் கட்டண உயர்வால் மேலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய  அரசு கட்டண உயர்வு காரணமாக கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி, ரயில் சர்வீஸை அதிகப்படுத்தணும். ரயிலில் மேம்பாட்டு பணிகளை தரமாக மேம்படுத்தணும் என்பதே நமது அனைவரின் நோக்கமாக உள்ளது.

 ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Sunday 29 June 2014

வளைகுடா இந்திய தொழிலதிபர் மற்றும் பிரபல லூலூ(LuLu) நிறுவனத் தலைவர் யூசுப் அலி பற்றிய தொகுப்பு!!



வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களின் சுவாசமாக விளங்கும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்தான் "லூலூ " இதன் வாசல் மிதிக்காதவர்கள் இந்த பிரதேசத்தில் எவருமே இருக்க முடியாது. எம். கே குழுமத்திற்கு சொந்தாமான இந்த நிறுவணத்தின் மிக குறுகிய கால அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர்தான் எம்.கே குழுமங்களின் மேலாண்மை நிர்வாகி 54 வயதான யூசுப் அலி, தென்னின்ந்தியாவின் , கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான நட்டிகாலில் 1958 ஆம் ஆன்டு பிறந்த யூசுப் அலி தனது 15 ஆவது வயதில், 1973 ஆம் வருடம் ஒரு சூட்கேசும், கையில் கொஞம் தொகையுமாக மும்பையில் இருந்து கடல் மார்க்கமாக துபாய் துறைமுகம் வந்து இறங்கினார்.

முப்பது வருடங்களுக்குள் 15000 கோடி ருபாய்க்கு சொந்மான எம். கே தொழிழ் குழுமத்தின் சூத்திரதாரியான வரலாறு ஒரு நெடும் கதை, தன்னை துபாய் துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வந்த தனது பெரிய தந்தையான எம். கே அப்துல்லவுடன் 5 மணி நேர பயணத்திற்கு பின் அபுதாபி வந்து சேர்ந்த யூசிப் அலி, பின் அவருடன் இணனைந்து அவரின் சிறிய மளிகை கடையில் அவருக்கு உதவியாக சில காலம் பொருட்களை ஏற்றி, இறக்குவது, வினியோகம் செய்வது என வேலைகள் என இருந்தவர், பதனப்படுத்தப்ப்ட உணவுப் பொருட்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அபுதாபி நகரம் மட்டுமல்லாமல் புற நகர் பகுதி, மேற்கு அபுதாபி அமீரகத்திலும் வினியோகம் செய்ய ஆரம்பித்து 25 ஆயிரம் பணியாளர்கள் பணி புரியும் மாபெரும் தொழில் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

சில காலங்களில் இவரது தொழில் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது, உணவு பொருட்களை கப்பல், நட்சத்திர விடுதிகள், கேட்டரிங் கம்பெனிகள் என பல்வேறு துறைகளுக்கு வினியோகம் செய்து, தனது மூலதனத்கை பல மடங்குகள் பெருக்க ஆரம்பித்தது. 1980 களில் அமீரகத்தின் சில்ல்றை வணிகத்தின் கணிசமான பங்கு இவரது நிறுவனத்தை சார்ந்தாக கருதப்பட்டது. தனது பெரிய தந்தையின் ஓய்விற்கு பிறகு இதன் நிர்வாகம் இவர் வசம் வரும்பொழுது, தனது கணவுகளின் கோட்டைகான ஆயத்த வேலைகளை தொலை தூர நம்பிக்கை பார்வையுடன் தொடங்கினார். இவரது இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாக இவர் சொல்வது மறைந்த தலைவர் சேக் சயித் பின் அல் நக்யான் அவர்களின் "எதிர்காலத்த நோக்கிய வீரப்பயனம்" என்ற கொள்கையை பின்பற்றியதுதான். 1990கலீள் வளைகுடா போர்க்காலங்கள் இவரது பொற்காலங்கள் என கொள்ளலாம், அசாதாரணமான காலகட்டத்தை சரியான காலமாக திட்டமிட்ட்டது மிகப் பெரும் விந்தை ஆம் இவரின் சூப்பர் மார்கட்களும்,டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இந்த காலத்தில்தான் தொடஙகப்பட்டது.

இறைவனின் அருளால் இதன் வளர்ச்சி உச்சானிக்கு போய் இதன் மகுடமாக 2000 ஆம் ஆண்டு லூலூ சூப்பர் மார்கட் முதன் முதலில் துபாய் அல்கோசில் தொடங்கப்பட்டது, துருக்கியின் ராம் ஸ்டோர் போன்ற அமைப்பில் உருவான இந்த லூலூ மீண்டும் அசுர வளர்ச்சி பெற்று 8 வருடங்களில் 75 கிளைகள் தொடங்கப்பட்டது, அமீரகம் மட்டும் அல்லாமல், கத்தார், பஹ்ரைன், சௌதி அரேபியா,ஏமன், எகிப்த்,குவைத் இந்தியா என இதன் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டேபோகிறது, போர், பொருளாதார சீரழிவு, சந்தை ஏற்ற இறக்கம் என எந்த விளைவுகளும் இவரின் கோட்டையை அசைத்தூபார்க்க முடியவில்லை, அதற்கு காரணமாக இவர் சொல்வது,இறைவணின் அருளும், எதிர் நீச்சல் போடும் குணமும், அடிப்படை திடதண்மையும்தான்.

கொச்சின் விமானத்தளத்தின் விரிவாக பணியில் இவரது பங்கு கணிசமானது, இந்திய பொருளாதாரதை நோக்கி திரும்பும் இவர் பார்வை ஒரு பொருளாதார மலர்ச்சிக்கு வித்தாக மாறலாம். இவரின் சேவையை பாராட்டி அபுதாபி சேம்பர் ஆப் காமர்ஸ் இவரை அதன் இயக்குனர்களில் ஒருவராக நியமித்து இருக்கிறது, ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியரை இவ்வாறு அங்கீகாரத்தது இதுவே முதல் முறை. எல்லைகள் தாணடும் இவரது தொழில் வளச்சி மற்றும் சமூக பணியை பாராட்டி  2009ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு "பதம்ஷ்ரி" விருதை வழங்கி   கௌரவித்து இருக்கிறது.


அரேபிய வர்த்தகம் எனும் வளைகுடா வணிக இதழ் வளைகுடாவில் உள்ள சக்தி வாய்ந்த இந்திய பிரபலங்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆறு மாதங்களாக நடைபெற்ற இவ்வாய்வில் 500 நபர்களை தேர்ந்தெடுத்து பின் அதிலிருந்து வடிகட்டி 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறும் நபர்களை அவர்களின் நிறுவனத்தின் செல்வாக்கு, வணிகம், மக்களுடன் உள்ள நெருக்கம் என பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில் முதலிடத்தில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்கே குழும உரிமையாளர் யூசுப் அலி உள்ளார். இவரின் குழுமத்தின் ஒரு அங்கமான லூலூ ஹைபர் மார்கெட் வளைகுடாவின் எல்லா நாடுகளிலும் பரவி வியாபித்துள்ள ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவரின் குழமத்தில் 29 நாடுகளை சார்ந்த 22,000 மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில் குழுமங்களிலேயே தமிழ் நாட்டை சார்ந்த சையது சலாஹூதினால் நிர்வகிக்கப்படும் ஈ.டி.ஏ குழுமத்தில் மாத்திரம் இதை விட அதிகமான நபர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அபுதாபி வர்த்தக அமைப்பின் தலைவராக இந்திய தொழிலதிபர் யூசுப் அலி, 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய அரபு நாட்டின் தலைநகர் அபுதாபி. இங்கு அரசு நிறுவனமாக அபுதாபி தொழில் வர்த்தக கூட்டமைப்பு செயல்படுகிறது. அந்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை முறைப்படுத்தும் ஒரு அமைப்பாக இது உள்ளது. இந்த அமைப்பில் தேர்தலின் மூலம் தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்தலில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர்களும் போட்டியிடலாம். அபுதாபியில் நேற்று இந்த அமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய தொழிலதிபர் யூசுப் அலி(58) தொடர்ந்து 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் பிரபல லூலூ(LuLu) நிறுவனத் தலைவர். தேர்தலில் 14,555 பேர் வாக்களித்தனர். இதில் லூலூ நிறுவனத் தலைவர் யூசுப் அலி 1,721 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 


தொகுப்பு  : மு.அஜ்மல் கான் .

மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு பத்மஸ்ரீ விருது ஏன் !!

நாம் பல்வேறு மூலப்பொருட்களால் ஆன கைவண்ணங்களை  பார்த்திருப்போம், மிகவும் சிரமப்பட்டு சிற்பிகள் தமது கலை எண்ணத்துக்கு உருவம் கொடுத்திருப்பார்கள். அதேபோல இங்கே மணல் மண்ணை பயன்படுத்தி எவ்வளவு லாவகமாகவும், தத்துரூபமாகவும் சிற்பங்களை உருவாக்கியுள்ளா ஒரிசா மாநிலம் பூரியைச் சேர்ந்த சுதர்ஸன் பட்நாயக். பூரி கடற்கரையில் அவ்வப்போது மணல் சிற்பங்களை உருவாக்கி புகழ்பெற்றவர் சுதர்ஸன். இவர் தனது அபூர்வ படைப்புகளால் உலக அளவில் புகழ்பெற்றுள்ளார். பூரி கடற்கரையில் மணல் சிற்பப் பள்ளியையும் அவர் நடத்தி வருகிறார். 
இந்த நிலையில் உலகிலேயே மிகப் பெரிய ஏசுநாதர் மணல் சிற்பத்தை புரி கடற்கரையில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இந்த மணல் சிற்பம் 75 அடிக்கு 35 அடி அளவு கொண்டது. சாதாரண மணலுடன் வண்ண நிற மணலையும் கலந்து ஆயிரம் டன் எடையில் அவர் உருவாக்கியிருக்கும் இந்த மணல் சிலையில் ஏசுநாதர், மேரியம்மை, சாந்தா கிளாஸ் சிற்பங்கள் அடங்கியுள்ளன.
புரி சுதர்சன் மணல் சிற்பக் கலைக்கூடத்தில் பயிலும் தனது மாணவர்கள் 25 பேர் உதவியுடன் 3 நாட்கள் உழைத்து இந்த பிரம்மாண்ட சிற்பத்தை சுதர்சன் உருவாக்கினார.
புரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கடற்கரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட சிற்பத்தைக் கண்டுகளித்து சென்றனர்.
சுதர்சன் இதற்கு முன் 7 உலக சாதனைகளைப் படைத்திருக்கிறார். லிம்கா சாதனை புத்தகங்கள் அவை இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே மிகப் பெரிய ஏசுநாதர் மணல் சிற்பத்தை உருவாக்குவதைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு லிம்கா சாதனைப் புத்தகத்தின் மூத்த ஆசிரியர் முத்தன்ன சிங் எனக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் 2010ல்  ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் உலக சினிமாவும், கலைஞர்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற 2-வது உலக மணல் சிற்பப் போட்டியில் சுதர்ஸன் கலந்துகொண்டார். இதில் சுதர்ஸன் உருவாக்கிய ஹிந்தி நடிகர் ராஜ் கபூரின் மணல் சிற்பத்துக்கு முதல் பரிசு கிடைத்தது.
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப  போட்டியில் இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு முதல் பரிசு  கிடைத்துள்ளது. அமெரிக்காவில், மணல் சிற்பங்கள் செய்பவர்களுக்கு  ஆண்டு தோறும் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள்  வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சர்வதேச மணல் சிற்ப  போட்டி-2014 சமீபத்தில் அட்லான்டிக் நகரில் நடத்தப்பட்டது. இதில்  உலகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  கடந்த ஜூன் 19ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் தனிநபர் மற்றும்  இருவர் இணைந்து மணல் சிற்பம் செய்யும் போட்டி நடத்தப்பட்டது.  இதில் இந்தியா சார்பில் ஒடிசாவைச் சேர்ந்த கலைஞர் சுதர்சன் பட்நாயக்  கலந்து கொண்டார்.   

இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள், 10 டன் மணல் கொண்டு, 30  மணி நேரத்தில் மணல் சிற்பம் செய்ய வேண்டும். இதில் தனிநபர்  மணல் சிற்ப போட்டியில் ‘‘மரங்களைக் காப்போம்: உலகை காப்போம்’’  என்ற தலைப்பில் சுதர்சன் பட்நாயக் வடித்த சிற்பத்துக்கு பரிசு  தரப்பட்டது. இந்த பரிசை அட்லான்டிக் நகரின் மேயர் இவருக்கு  அளித்தார். இரட்டையர் போட்டியில் சுதர்சன், மேத்யூ ராய் டிபர்ட் உடன்  இணைந்து செய்த சிற்பத்துக்கு 5வது பரிசு கிடைத்துள்ளது.
 37 வயதான  பட்நாயக்குக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி  கவுரவிக்கப்பட  உள்ளது. சமுதாய விழிப்புணர்வோடு, மக்களின்  முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து இவர் செய்யும் மணல்  சிற்பங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Saturday 28 June 2014

இஸ்லாமிய தளங்களின் தொகுப்புகள் !!

 

இணைய திரட்டி

  1. உம்மத்
  2. வழிக்காட்டி
  3. எதிர்க்குரல்
  4. சத்திய மார்க்கம் 
  5. இணையத்தில் ஒரு நூலகம் 
  6. இதுதான் இஸ்லாம்
  7. இனிய மார்க்கம்  
  8. ஆன்லைன் PJ
  9. எளியமார்க்கம் 
  10. மக்கா மஸ்ஜித்
  11. இஸ்லாம் கல்வி
  12. தாருல் அதர்
  13. சுவனத்தென்றல்
  14. அந்நஜாத்
  15. இஸ்லாமிய இணையப் பேரவை
  16. A1ரியலிஷம்
  17. தமிழ் முஸ்லிம் பதிவுகள்
  18. PEACE TRAIN
  19. தமிழ் முஸ்லிம் மீடியா
  20. ஏகத்துவம்
  21. தமிழ் முஸ்லிம் தாரகை
  22. வாஞ்ஜீர்
  23. பெண் விடுதலை
  24. தமிழ் தோழி 
  25. சத்தியத்தை சொல்லுவோம் அசத்தியம் அழியும் வரை
  26. இஸ்லாம்குரல்
  27. சீதனம் வேண்டாம் 
  28. இறுதித்தூது 
  29. கிறிஸ்தவம் பார்வை
  30. மதுக்கூர் போஸ்ட்
  31. தமிழ் முஸ்லிம் தளம் 
  32. சன்மார்க்கம்
  33. நல்லடியார்
  34. வஹ்ஹாபி 
  35. எதிரொலி 
  36. அபு முஹை
  37. கேள்விகளும் பதில்களும் 
  38. சிந்தனைத் துளிகள் 
  39. சுவனப்பிரியன்
  40. சிந்தனைச் சிதறல்கள் 
  41. இஸ்லாம் பார்வை
  42. இஸ்லாமிய தாவா
  43. தமிழில் குர்-ஆன்
  44. இனிய மார்க்கம் இஸ்லாம் 
  45. ஹாருன் யஹ்யா (தமிழில்)
  46. தாருல் ஸஃபா
  47. மரைக்காயர் பக்கம் 
  48. களஞ்சியம் 
  49. என் இனிய இஸ்லாம்! 
  50. ரஹ்மத் நெட்
  51. எழுதுகோல் ஆயுதம் 
  52. பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் 
  53. ரீட் இஸ்லாம்
  54. ஒற்றுமை
  55. அறிந்தவர்களின் பதில்கள்
  56. தூய வழி காட்டி 
  57. அதிகாரம் அல்லாஹ்வுக்கே 
  58. இஸ்லாம் - வாழ்வியல் வழிகாட்டி 
  59. திருக்குர்-ஆன் தமிழாக்கம்
  60. சித்தார் கோட்டை
  61. நிலமெல்லாம்.... பாலஸ்தீன வரலாறு
  62. நான் முஸ்லிம்
  63. அழகிய இஸ்லாம்
  64. மனார் அத்தஃவா
  65. தாய் தரும் கல்வி
  66. அன்போடு உங்களை
  67. பயணிக்கும் பாதை
  68. அல்லாஹீ அக்பர்
  69. இனிய பாதையில்
  70. தேன் துளி
  71. விடுதலை
  72. ஹதிஸ் தொகுப்பு மற்றும் சஹாபாக்கள் வரலாறு
  73. நாகூர் ப்ளாஷ்
  74. இஸ்லாமியப் பார்வை
  75. தமிழ் முஸ்லிம் மீடியா
  76. உண்மை வலம்
  77. JAQH
  78. அல்குர்-ஆன் (கற்க)
  79. தமுமுக
  80. இனிய வசந்தம்  
  81. காயல்பட்டணம் இஸ்லாம் 
  82. தூதுத்துவம் 
  83. தமிழ் முஸ்லிம் நூலகம் 
  84. ஹஜ் விளக்கம் .
  85. நீடூர் இன்ஃபோ
  86. அழைப்புப்பணி
  87. இஸ்லாம் மார்க்கம்.காம்
  88. தாருஸ்ஸலாம்
  89. என் கண்ணில்
  90. பழனிபாபா பிளாக்
  91. மண்ணடி காகா
  92. OUR UMMAH
  93. முதுவை ஹிதாயத் 
  94. ராஜகிரி நெட்
  95. நெல்லைஏர்வாடி.காம்
  96. LIBAS
  97. இஸ்லாமிக் நியூஸ்
  98. மறையகம்
  99. ஷெய்க் அகார்.
  100. ஹாதி பாகவி
  101.  ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
  102. நிழல்களும்-நிஜங்களும்
  103. முகவை எக்ஸ்பிரஸ்
  104. அஜீஸ் அஹமத்
  105. mail of ISLAM
  106. சுட்டுவிரல் 
  107. முஹம்மத் ஆஷிக்  ~ citizen of world
  108.  பைபிள் கர்த்தரின் வார்த்தையா?
  109. ஈஸா குர்-ஆன் - Isa Koran or Isa Bible?  
  110. JBLOG online
  111. தமிழ் முஸ்லிம்- இணைய தொகுப்பு 
  112. ஹிஜ்ரி நாட்காட்டி 
  113. தமிழில் இஸ்லாம் 
  114. கடையநல்லூர் அக்ஸா 
  115. தமிழ் முஸ்லிம் 
  116. சர்வதேச குர்-ஆன் செய்திகள் 
  117. LANKA MUSLIM. ORG 
  118. தமிழ் முஸ்லிம் குழுமம்  
  119. சுடர் 
  120. அல்பாக்கவி.காம் 
  121. ஏசு அழைக்கிறார் 
  122. வலையுகம்
  123. தமிழ் வெப் இஸ்லாம்
  124. Islamic Uprising 
  125. தலைமைத்துவம் 
  126. mujahid srilanka
  127. இனிய சுவனப்பாதை
  128. aroosba wordpress
  129. சத்தியப்பாதை
  130. தமிழ் குர்-ஆன் (பதிவிறக்கம்)
  131. குர்ஆனும் அறிவியலும்
  132. அழைப்பு
  133. வழிகாட்டி (2)
  134. சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது
  135. அல்லுஃலுவு வல்மர்ஜான்
  136. இறுதி இறை வேதம்
  137. என்னோடு
  138. சமுதாய ஒற்றுமை
  139. முஸ்லிம் பக்கம்
  140. நம்பிக்கை
  141. நபிமொழிகள்
  142. இஸ்லாமிய ஆய்வகம்
  143. மாற்றங்களுக்கான தேடல்
  144. ஏகத்துவ எழுச்சி
  145. தினம் ஒரு குர்ஆன் வசனம்
  146. உண்மைகள்
  147. இஸ்லாமிய பூங்கா
  148. மீம் அகாடமி
  149. இஸ்லாம் குரல்
  150. மஸ்ஜிதுல் அக்ஸா
  151. நூருல் இஸ்லாம்
  152. ஐடியல் விஷன்
  153. UMARI WORDPRESS
  154. தெளிவான மார்க்கம்
  155. பிரான்ஸ் தவ்ஹீது ஜமாத்
  156. இஸ்லாமும் மருத்துவமும்
  157. தைக்கால்
  158. சமுதாய உரிமை
  159. இன்றைய இஸ்லாம்
  160. உண்மைகள்
  161. புதுவலசை ஜமாத்
  162. உண்மை வலம்
  163. குலாம் தஸ்தகீர்
  164. இஸ்லாமிக் டிவீடி
  165. உண்மைக்குரல்
  166. இஸ்லாமிய ஆய்வகம்
  167. AZEEZ-LUTFULLAH
  168. தாருஸ்ஸலாம்
  169. கூத்தாநல்லூர் ஆன்லைன்
  170. வழிப்பாடா? வழிகேடா?
  171. ஃபதீனா.காம்
  172. லால்பேட்டை இஸ்லாம்
  173. இஸ்லாம் நியூஸ்புக்
  174. இறைவன் ஒருவனே
  175. இஸ்லாம் தளம்
  176. கலீல் SMS
  177. கிளியனூர்.காம்
  178. இனிய மார்க்கம் இஸ்லாம்
  179. வஹியின் வழியில்...
  180. Mujahid Ibn Razeen
  181. வெளிச்சம்
  182. இனிய இஸ்லாம்
  183. தமிழ் இஸ்லாம் வெப்
  184. புதுமடம் கல்ப்
  185. The Message Of ISLAM
  186. OUR UMMAH 
  187. இந்திய தென்றல் 
  188. இஸ்லாமிய அழைப்பு உலகம் 
  189. அபுஅனு 
  190.  இறைவனிடம் கையேந்துங்கள்
  191. கார்பன் கூட்டாளி 
  192. குர்-ஆன் இறைவேதம் 
  193. Beginning of the Hour 
  194. வடக்குமாங்குடி.பிளாக் 
  195. Iifrasmnm blog
  196. அபு நிஹான் 
  197. அதிரை ஆலிம் 
  198. தொழுகை மற்றும் சில சூராக்கள் 
  199. Live For Islam: Die For Islam 
  200. தாருத்தாவா 
  201. இனிய மார்க்கம் இஸ்லாம்  
  202. இக்னா
  203. இறைவன் ஒருவனே 
  204. நம்புதலை ஹாஜா 
  205. தமிழ் ஜூம்ஆ பயான் 
  206. ஓர் கடவுள்.காம் 
  207. திருபுவனம் வலைதளம் 
  208. மர்ஹூம் முஸ்லிம்
  209. முஜீப். காம் 
  210. way of kuran 
  211. இளையாங்குடி குரல்
  212. ISLAMIC HISTORY/வாஞ்சூர்
  213. வாஞ்ஜூர் குரல்
  214. ஆயங்குடி ஆன்லைன் 
  215. AUGUST15-1947 
  216. சத்திய அழைப்பு 
  217. ISLAMIC YOUTHS 
  218. அதிரை நிருபர் 
  219. கைபர் தளம் 
  220. ஏகத்துவம்
  221. OUR UMMAH 
  222. ஏராவூர் இன்ஃபோ 
  223. சத்திய பாதை 
  224. யூனியன் முஸ்லிம் 
  225. அல்-மதுக்கூர்  
  226. Tamil Muslim Tube And Email Page 
  227. Crawley Dawah Unit
  228. NAHARVU
  229. நாஸிர் ஆன்லைன்.காம்
  230. நேர் மார்க்கம்
  231. வாஞ்சூர் மலர்
  232. இஸ்லாமிய தஃவா
  233. பேனாமுனை
  234. தாருஸ்ஸஃபா
  235. சமூகநீதி அறக்கட்டளை
  236. சன்மார்க்கம்(wordpress)
  237. இதுவா இஸ்லாம் 
  238. அல்லாஹு அஹத்
  239. தவ்ஹீத் வெளிச்சம்
  240. தக்வா
  241. தவ்ஹீத் முழக்கம்
  242. முஹம்மத் பந்தர்
  243. இனிய மார்க்கம் இஸ்லாம்
  244. தவ்ஹீத் கனிகள்
  245. INTJ ஆன்லைன்
  246. மேலப்பாளையம் பதிவுகள்
  247. வஹிதான் இஸ்லாம்
  248. முஸ்லிம் உலகம்
  249. எச்சரிக்கை
  250. ஆறாம்பண்ணை
  251. கிறிஸ்தவம் பார்வை
  252. கொள்ளுமேடு Xpress
  253. Counselor Mansoor
  254. சீசன்ஸ் நீடூர்
இவற்றை  திரட்டிய... "நான் முஸ்லிம்" வலைப்பூ அதிபர்   சகோ. குலாம்  அவர்களுக்கு மிக்க நன்றி..!  
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.  

Friday 27 June 2014

இந்த ஆண்டு ரமளானை வரவேற்போம் !!

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்... இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)   

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37 கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.

உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம். ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்
கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான். உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.

அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும். இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.தீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை - அது ஆணாயினும், பெண்ணாயினும் - ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால் மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான். நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு. மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்!

 கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி உள்ளான்.இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். எத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டு உள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

இறையச்சம் என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும். ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கிறான். அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால், என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை.

இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானது தான்.எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும். ரமளான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். எனவே, நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான். மேலும், ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ அந்த ஏழை எளியோரைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு ரமளான் அல்லாத நாட்களிலும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வை அல்லாஹ்வுக்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவும் இறையச்சத்தின் ஓர் சாராம்சமாகும்.

இதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுவதை பேணிக் கொள்ள வேண்டாமா? இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம்.அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே, நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான். நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்காகவும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிpடமிருந்து நமக்குக் கிடைக்கும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 2119 மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும்; என்பதை இதிலிருந்து நாம் அறியலாம். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 1894 நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1904

படைப்பினங்கள் பசி பொறுக்காதது. உணவின் தேவை அவைகளுக்கு அத்தியாவசியமாகும். படைத்த இறைவனுக்காக பசியையும், உணர்வுகளையும் அடக்கி அவன் குறித்த நேரத்தில் நோன்பு திறக்க உணவு உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஒன்று! மறைபொருளாக இருக்கும் இறைவன் உணர்த்திய வாழ்வினை அவனை காணாமலேயே பூமியில் வாழ்ந்து நிலையான மறுமை நாளில் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் அந்த மகத்தான இறைவனை சந்திக்கும் தலையான சம்பவம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே! அல்லாஹூ அக்பர்! மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்காக இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்? யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1901

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நோன்பின் மூலமாக இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

தொகுப்பு :அ .தையுபா அஜ்மல்.