Thursday 19 November 2020

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன?

காற்றழுத்தம் புயல் என்றால் என்ன? இப்பதிவை விளக்கமாக விளக்கியுள்ளேன் பாருங்கள். இது எல்லாம் தெரிந்து கொள்வது கட்டாயம். இது எல்லாம் பள்ளி பாடங்களிலே உள்ளது. உங்கள் வீட்டில் மாணவர்கள் இருந்தால் கட்டாயம் படிக்க சொல்லுங்கள். 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கும் . மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.
அதென்ன காற்றழுத்தத் தாழ்வு நிலை
கடற்பரப்பில் 26 °C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது.
அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது இதையே காற்றழுத்த தாழ்வு நிலை என்கிறோம்.
காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க காற்றழுத்த தாழ்வுநிலையானது படிப்படியாக வலுவடைகிறது.
காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.
காற்றானது மணிக்கு 32 - 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
காற்றானது மணிக்கு 52 - 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.
காற்றானது மணிக்கு 63 - 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.
காற்றானது மணிக்கு 88 - 117 கி.மீ வேகத்தில் வீசினால் தீவிர புயல்.
காற்றானது மணிக்கு 118 - 165 கி.மீ வேகத்தில் வீசினால் மிகத் தீவிர புயல்.
காற்றானது மணிக்கு 165 - 221 கி.மீ வேகத்தில் வீசினால் கடும் தீவிர புயல்
காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அதி தீவிர புயல்.
புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாகத் துறைமுகங்களில் 11 விதமான புயல் கூண்டுகள் ஏற்றப்படும் அதன் விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.
2ம் எண் கூண்டு: புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது.
3ம் எண் கூண்டு: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
4ம் எண் கூண்டு: துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் இது கடற்கரையை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை
5ம் எண் கூண்டு: துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
6ம் எண் கூண்டு: துறைமுகத்தில் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
7ம் எண் கூண்டு: துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை
8ம் எண் கூண்டு: ஏற்றப்பட்டால், புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையைக் கடந்து செல்லும்
9ம் எண் கூண்டு: புயலானது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
10ம் எண் கூண்டு: புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் புயலால் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11ம் எண் கூண்டு :11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள். எப்போதுமே அரபிக்கடலில் உருவாகுகிற புயலை விட வங்க கடலில் உருவாகுகிற புயலுக்கு பலம் அதிகம்.

தொகுப்பு : T.Raja (Admin Tamilnadu weather Blog)

International Bank Account Number (IBAN) & Uses ..

 


What Is an International Bank Account Number (IBAN)? 

An IBAN, or international bank account number, is a standard international numbering system developed to identify an overseas bank account. The number starts with a two-digit country code, then two numbers, followed by several more alphanumeric characters. Note that an IBAN does not replace a bank's own account numbering, as it’s only meant to provide additional information that helps in identifying overseas payments. 

Key Takeaways

•An international bank account number (IBAN) is a standard international numbering system for individual bank accounts around the world.

•Banks in Europe originally developed the system to simplify transactions involving bank accounts from other countries.

•An IBAN is used to identify an individual account involved in an international transaction.

•The IBAN also acts as a method of verifying that transaction details are correct.

 

 How International Bank Account Numbers Work 

 The IBAN number consists of a two-letter country code, followed by two check digits, and up to thirty-five alphanumeric characters. These alphanumeric characters are known as the basic bank account number (BBAN). It is up to the banking association of each country to determine which BBAN they will select as the standard for that country's bank accounts. However, only European banks use IBAN, although the practice is becoming popular in other countries.

 An IBAN number will be used when sending interbank transfers or wiring money from one bank to another, especially across international borders. In the register of countries currently using the IBAN system, several examples are as follows:

•Albania: AL47 2121 1009 0000 0002 3569 8741

•Cyprus: CY 17 002 00128 0000001200527600

•Kuwait: KW81CBKU0000000000001234560101

•Luxembourg: LU 28 001 9400644750000

•Norway: NO 93 8601 1117947

 Important:The U.S. and Canada are two major countries that do not use the IBAN system; however, they recognize the system and process payments according to the system.


Requirements for International Bank Account Numbers 

 The IBAN developed out of diverging national standards for bank account identification. Varying uses of alphanumeric forms to represent specific banks, branches, routing codes, and account numbers often led to misinterpretations and/or omissions of critical information from payments.

To smooth this process the International Organization for Standardization (ISO) published ISO 13616:1997 in 1997. Shortly after the European Committee for Banking Standards (ECBS) published a smaller version, believing the original flexibility allowed in the ISO version was unworkable. In the ECBS’s version, they allowed only upper-case letters and a fixed-length IBAN for each country.

 Since 1997, a new version, the ISO 13616:2003, replaced the initial ECBS version. A subsequent version in 2007 stipulated that IBAN elements must facilitate the processing of data internationally, in both financial environments and among other industries; however, it does not specify any internal procedures, including but not limited to file organization techniques, storage media, or languages.

  

 Who uses IBAN?

IBAN was first created to facilitate electronic payments between banks across the Eurozone. Since then, it has expanded worldwide, although not all banks and not all regions have joined the standard and you may still need to rely on an alternative system such as SWIFT instead. North American, Australian, and Asian countries do not use the IBAN for domestic money transfers, and will only do so when sending a payment to a country that has adopted the IBAN.

 

Why was IBAN created?

IBAN was developed to reduce errors and improve verification of cross-border payments  by reducing rejected payments, transfer delays, and associated bank charges and fees.

What does an IBAN number look like?

An IBAN number contains up to 34 alphanumeric characters. It is prefaced by a two-character country code, two check digits, and a Basic Bank Account Number (BBAN) that contains specific bank and account details. The format of the BBAN portion various from country to country, which will typically include a bank code and branch code.

 

How can I get an IBAN?

You can request an IBAN if you are a customer of a bank in an IBAN region. Note that an IBAN can only be used to receive payments, and is not used when making withdrawals.

Collection by M.Ajmal Khan

Wednesday 18 November 2020

அதிக நேரம் கணினியில் பணி செய்பவர்கள் முதுகு வலியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!!

 



இன்றைய இளைய தலைமுறையினர் முதல் வயதான முதியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியால் அவதிப் படுபவர்கள் ஏராளம். இந்த இடுப்பு வலிக்கு அவர்கள் செய்யும் வேலை கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகிறது. அதிலும் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் படுவதால் அவர்கள் தொடர்ச்சியான இடுப்பு வலியால் அவதிப் படுகிறார்கள். முறையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.


👉🏻இதற்கு தீர்வு என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.


நீங்கள் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்கள் என்றால்,

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட கணினி மேஜைகளை பயன்படுத்த வேண்டும்.கணினி மேஜையின் உயரத்தை ஏற்றி இறக்கி பயன்படுத்துவது போல் வடிவமைத்துக் கொண்டால் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்திற்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக் கொள்ள எளிதாக இருக்கும்.  தினமும் வேலை முடிந்ததும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 


கணினி முன் அமர்ந்து பணியாற்றும் போது நாற்காலியில் நன்றாக நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணியாற்ற வேண்டும். 

தொடர்ந்து ஒரே மாதிரி அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்பு பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு முதுகுத் தண்டின் ஜவ்வில் தேய்மானம் ஏற்படுவதாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.


நீங்கள் ஹை ஹீல்ஸ் அணியும் பழக்கம் உள்ளவர்கள் எனில் அதனால் கூட உங்களுக்கு இடுப்பு வலி முதுகு வலி ஏற்படலாம். உயரமான குதிகால் கொண்ட  செருப்புகளை அணிந்து நீண்ட நேரம் நடக்கும் பொழுது உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்துவதால் முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதனால் உயரமான குதிகால் கொண்ட செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.


  • 👉இதற்கான எளிய தீர்வுகள் என்ன?
  • ✍️கொள்ளை ரசம் வைத்துக் குடித்தால் இடுப்பு வலி குணமாகும். கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
  • ✍️மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி நீங்க வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
  • ✍️வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
  • ✍️மிளகை வறுத்து அதில் எள் எண்ணெய் கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.
  • ✍️உணவில் உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் இடுப்பு வலி சரியாகும். உளுந்தை களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
  • ✍️தளுதாளி இலையுடன் பூண்டு நல்லெண்ணெய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

Friday 13 November 2020

டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் புற்றுநோய் !!

 

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.


இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 

இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உண்டு நம் உடலுக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம்...

டீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) தெரிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. 

இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. 

மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது. 

இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரகபிரச்னைகள் உண்டாகிறது.

இத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது