Thursday 30 July 2020

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு மட்டும் ஏன் மத்தியரசை கடுமையாக எதிர்க்கிறது?

 வரைவு தேசிய கல்வி கொள்கை -2019 ...



இந்தியாவின் எல்லா மாநிலங்களும் அமைதியாக இருக்க தமிழ்நாடு மட்டும் ஏன் மத்திரசை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது?


அதுக்கு இரண்டு காரணம்,
1) ஒன்னு இங்கிருக்கும் Inclusive Growth
2) இரண்டு மத்தியரசின் கொள்கைகள் எவ்வகையிலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தொடர்பில்லாமல் இருப்பது
சமீபத்திய உதாரணம் புதிய கல்வி கொள்கை,
மத்திய அரசு நடத்திய உயர்கல்வி நிலையங்களுக்கான கணக்கெடுப்பு - AISHE 2018-19 அறிக்கை கீழே இருக்கு.
இதன் படி. . .
தமிழகத்தில் உயர்கல்வி ஆசிரியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 இலட்சம்!
வேற எந்த மாநிலமும் அந்த எண்ணிக்கைக்கு பக்கத்துல கூட இல்ல!!
நம்மை விட 3 மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசத்தில் 1.4 இலட்சம்,
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் 1.6 இலட்சம்
போலி போட்டோஷாப்புகள் மூலம் வளர்ந்த மாநிலமாக காட்டப்படும் குஜராத்தில் வெறும் 57 ஆயிரம்!
~~~
இப்போ நான் சொன்ன Inclusive Growth என்பதற்கு வருவோம்.
மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் பெண்கள் மட்டும். . .
தமிழ்நாடு - 48%
மகாராஷ்டிரா - 40%
உ.பி - 32%
குஜராத் - 40%
மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் OBC/SC/ST வகுப்பினர் மட்டும். . .
தமிழ்நாடு - 82%
உ.பி - 36%
மகாராஷ்டிரா - 35%
குஜராத் - 29%
இந்தியளவிலான மொத்த எண்ணிக்கை ஒப்பீட்டில். . .
OBC
தமிழ்நாடு - 30%
மகாராஷ்டிரா - 7.8%
உ.பி - 8.5%
குஜராத் - 2.3%
SC
தமிழ்நாடு - 17%
மகாராஷ்டிரா - 14%
உ.பி - 9%
குஜராத் - 2.6%
ST
தமிழ்நாடு - 1.3%
மகாராஷ்டிரா - 7%
உ.பி - 0.9%
குஜராத் - 7%
தமிழ்நாட்டின் ST Reservation என்பதே 1% தான் என்பதை கவனத்தில் கொண்டால், Open Competition மூலம் நாம் ST நுழைவை சாத்தியப்படுத்தியிருப்பது புரியும்.
சீரான வளர்ச்சி, பரவலான வளர்ச்சி என்பதெல்லாம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் மட்டும் சாத்தியமாகியிருக்கு என்பதை இந்த பட்டியலே சொல்லுதா?
இதர தென்மாநிலங்களோ, ஏன் நீண்டகாலம் கம்யூனிஸ்ட்கள் வசமிருந்த மேற்கு வங்கத்திலோ கூட இப்படியான சீரான, பரவலான வளர்ச்சி சாத்தியமாகவில்லை என்பதை இந்த பட்டியல் உங்களுக்கு உணர்த்தும்.
அப்போ, நமக்கான கல்விக் கொள்கையை வகுக்க இந்தியாவில் யாருக்கேனும் தகுதி இருக்கிறதா?
அதிலும் குறிப்பாக குஜராத் கூட்டத்துக்கோ, அதன் வழி நிற்கும் மத்தியரசுக்கோ தகுதி இருக்கிறதா என்று நீங்களே முடிவு செய்துக்கோங்க.
மத்த மாநிலங்கள் எல்லாம் காலம் காலமா தன்னிடம் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை தராம, தட்டு தடுமாறி தத்தி தவழ்ந்து படித்து மேல ஏற முயற்சிப்பவனிடமும் Merit, தகுதி, திறமை என்று எகத்தாளம் பேசி, தன்னிலை உணராமல் அவன் தங்களுக்கு அடிமையாகவே இருக்கனும் என்று இந்துத்துவாவை திணித்து,
வளர்ச்சி என்பதை ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனா நம்ம தமிழ்நாடு அப்படியில்லை என்பதை தான் மத்தியரசின் புள்ளியியல் விவரங்கள் நமக்கு சொல்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. . .இதில் அரசு & தனியார் துறை ஆசிரியர்கள் மொத்த பேரும் கணக்கில் எடுக்கப்பட்டிருக்காங்க. அதனால Reservation மூலம் மட்டுமே எல்லாரும் மேல வந்துட்டாங்கன்னு யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. காரணம் தனியார் கல்லூரிகளில் Reservation மூலம் யாரும் வேலைக்கு சேர்ந்துவிட முடியாது.

பள்ளியில் படிக்கும் போதே தொழிற்கல்வி கற்பிப்பது நல்லதுதானே என்று கேட்பவர்கள் உண்டு. இரண்டு விஷயங்களைக் கோர்த்துப் பார்த்தால் இதன் விபரீதம் புரியும்- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்துவிட்டார்கள். பொதுவாகவே எட்டாவது படிக்கும் போதே ‘தையல் பழகிட்ட இல்ல...திருப்பூர் போனா நல்ல சம்பளம் வரும்’ என்ற பேச்சு வரும். ஃபெயில் ஆனால் உறுதியாக நிறுத்திவிடுவார்கள். எலெக்ட்ரீசியன், ப்ளம்பர் என்று அரையும் குறையுமாகத் தெரிந்து கொண்டு ‘இதுவரைக்கும் படிச்சது போதும்’ என்று படிப்பைக் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதன் பாதிப்பு கிராமங்களிலும், எளிய மக்களிடமும்தான் அதிகமாக இருக்கும். மாணவிகள் நிலைமை இன்னமும் பரிதாபமாக இருக்கும். அடுத்த இருபதாண்டுகளில் டிகிரி கூட முடிக்காதவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் தேசிய மொழி(National Language) எது எனக் கேட்டால் பலர் இந்தி(Hindi) என்று பதில் கூறுகின்றனர்.வட இந்தியாவைச் சேர்ந்தவர் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர்.ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல.
இந்தியாவின் அரசு ஏற்பு பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று.வட மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது.அவ்வளவுதானே தவிர இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.
அரசியல் அமைப்பு பிரிவு 343(1) இன் கீழ் இந்தி மொழியானது மத்திய அரசின் மொழிகளுள் ஒன்றாகும்.
இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்,பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்கவில்லை.
அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.தேசிய அளவில் இந்தி அலுவல் மொழியாகவும்,ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன.
அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கான அலுவல் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் தமிழ்மொழி, கேரளாவில் மலையாளம்,கர்நாடகாவில் கன்னடம்,ஆந்திராவில் தெலுங்கு,குஜராத் மாநிலத்தில் குஜராத்தி என அந்தந்த மாநில மொழிகளே அலுவலக மொழியாக உள்ளன.
இப்ப நான் சொல்வது இந்தி அரசு பள்ளியில் இல்லை,தனியார் பள்ளிகள் மண்டி போடுகின்றனர்,அரசு பள்ளி மாணவன் வடநாடு போக மாட்டான் போனா தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி வெற்றியுடன் திரும்புவான்
இப்ப யாருக்கு இந்தி வேணுமோ அவங்க படிக்கட்டும் நமக்கு என்ன எரியுது....
ஆனா கட்டாயம படி னா எரியும் ஏன்னா எம் அரசு பள்ளி மாணவன் சென்னை தாண்ட மாட்டான்.அவனுக்கு தேவையும் பேசுவது குறைவுஇப்ப ஒன்னு ஒன்னு
இந்தி வேணுமா வேணாமானு படிக்கும் மாணவன் முடிவு பண்ணட்டும்
கணினி வந்தப்பவும் இப்படி தான் கூவிட்டு அலைஞ்சம் இப்ப வீட்ல படுத்துட்டு அலுவலக வேலை செய்யல ....
அட போங்கப்பவேணுமா வேண்டாமாங்கறது மாணவனின் தேவையை பொருத்தது உங்க கருத்து அதுல ஏத்தாதிங்க ...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது இப்படித்தான்!

எந்த தேர்வு வைத்தாலும் முதல் மதிப்பெண் வாங்கும் ஒரு மாணவனுக்கு, கடைசி மதிப்பெண் பெறும் மாணவன் கல்வி கற்பது எப்படி என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லக்கூடாது, சொல்ல முடியாது என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி.

புதிய கல்வி கொள்கை எங்களுக்கு தேவையில்லை!!! மத்திய அரசே ???
நீங்கள் கடைபிடித்துவரும் கல்வி கொள்கையின் நோக்கத்தை தமிழகம் எஏற்கனவே அடைந்துவிட்டது. அதை பின்பற்றி 50% தை அடைவைத விட்டு சந்தனத்தை ஏன சாக்கடையாடு கலக்க விரும்புகிறீர்கள் என்றால்...
எதோ தமிழகம் மிகவும் சட்டம் ஒழுங்கு கெட்டுகிடக்கும் மாநிலம்,
அதுவும் கல்வி கூடத்திலே இப்படி நடக்கிறதே என கேட்ப்பது அறிவில்லாத வாதம் வடக்கே, பல மாநிலத்தைச் சார்ந்த வர்கள் வந்து பயிலும் தமிழ்நாட்டில் , யாரோ ஒருவர் கத்தி எடுக்கிறார் என்பதெல்லாம் தமிழ் நாடு பாடத்திட்டம்.அல்ல .'' கத்தியைத் தீட்டாதே , உன் புத்தியைத் தீட்டு '' என்பது தான் இங்கு பாடம் . பாடம் புகட்டுவோர்க்கே பாடம் புகட்டுவது தான் நாட்டின் சாபக்கேடு .
புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?? எதிர்க்கிறதா???? இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் எதிர்க்கின்றன???
ஆதரிக்கின்றன???? கேரளா ஆந்திரா கர்நாடகா, மஹாராஷ்ட்ரா
ஆதரிக்கிறதா??? எதிர்க்கிறதா???
காத்திருந்து பார்போம் !!!!

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday 16 July 2020

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் எவ்வாறு குளிர்ச்சியடைகிறது?


குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் எவ்வாறு குளிர்ச்சியடைகிறது?

இதற்கான துல்லியமான விடையை அறிய வெப்பவியக்கவியலின் (thermodynamics) அடிப்படைகளை அறிதல் தேவை. (அதைப் பின்னால் விளக்குகிறேன்!)

எளிதாகச் சொல்வதென்றால் ‘வெப்பம்’ என்பது ஒருவகை ஆற்றல். ‘குளிர்’ என்பது வெப்பம் குறைந்த நிலை.

குளிரூட்டியின் உள்ளிருந்து வெப்பம் வெளியேற்றப்படுகிறது, இதனால் அதன் உள்ளே குளிர்ச்சி உண்டாகிறது. அதனுள் இருக்கும் பொருள்களும் குளிர்வடைகின்றன (வெப்பத்தை இழக்கின்றன!).

இப்போது வெப்பவியக்கவியலுக்கு வருவோம்,

வெப்பம் ஒருவகை ஆற்றல் என்றோம், ஆற்றல் அழிவின்மை விதி (conservation of energy) என்ற கோட்பாட்டைக் கேள்விபட்டிருப்பீர்கள்.

ஒரு அமைப்பின் ஒட்டுமொத்த ஆற்றல் மாறாமல் இருக்கும், அதன் இடைப்பட்ட நிலைகளில் ஒருவகை ஆற்றல் மற்றொருவகை ஆற்றலாக மாறலாம், ஆனால் ஒட்டுமொத்த அளவு மாறாது - இதுதான் ஆற்றல் அழிவின்மை விதி.

ஆனால், நடைமுறையில் இது மட்டும் செயலில் இல்லை என்பதை நாம் எளிதில் உணரலாம்.

எடுத்துக்காட்டாய், ஒரு கோப்பை சூடான தேநீரை மேசை மேல் வைத்திருந்தால் அது குளிரடையுமே தவிர மேலும் வெப்பமாவதில்லை.

அதாவது, தேநீரிலிருந்து வெப்ப ஆற்றல் சுற்றுச்சூழலுக்குச் செல்கிறதே தவிர, சுற்றுச்சூழலிலிருந்து வெப்ப ஆற்றல் தேநீருக்குள் நுழைவதில்லை.

(அவ்வாறு நுழைந்தாலும் ஆற்றல அழிவின்மை விதிக்கு எந்த பங்கமும் உண்டாகாது, ஆனால் அது நிகழ்வதில்லை!)

எனவே, ஆற்றல் அழிவின்மையைத் தாண்டி ஆற்றல் (குறிப்பாய் வெப்ப ஆற்றல்) பாயக்கூடிய திசைக்கும் ஒரு விதி இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

இதைத்தான் வெப்பவியக்கவியலின் இரண்டாவது விதி என்பர் (துல்லியமான விதியைச் சொல்லி உங்களைக் குழப்ப வேண்டா என்று எண்ணுகிறேன்! கருத்து மேலே சொன்னதுதான்! ஆற்றல் அழிவின்மைதான் வெப்பவியக்கவியலின் முதல் விதி! மூன்றாவது விதியும் ஒன்று உளது!)

ஆக, (குளிரூட்டு போன்ற) ஒரு பெட்டியை வைத்து, அதனுள் சூடான பொருளை வைத்தால் அது தன் சூட்டை இழந்து சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கே வரும். ஆனால், அதனால் அதற்கு மேல் குளிரடைய முடியாது. (நம்மூரில் சராசரி சுற்றுச்சூழல் வெப்பநிலை சுமார் 25 முதல் 30 பாகை செல்சியசு. இதனை ‘அறை வெப்பநிலை’ (room temperature) என்போம்.)

சுற்றுச்சூழலைவிட ஒரு பொருளைக் குளிரூட்ட வேண்டுமென்றால் நாம் ‘வேலை’ செய்ய வேண்டும் (இயக்க ஆற்றலை பயன்படுத்த வேண்டும்!)

ஒரு குளிரூட்டியில் நான்கு அடிப்படை கருவிகள் / அமைப்புகள் இருக்கும்.
அழுத்தி (Compressor)
ஒடுக்கி (Condenser)
விரிவாக்கி (Expander)
ஆவியாக்கி (Evaporator)

இவற்றின் ஊடாக ஒரு குளிர்பதனப் பொருள் (refrigerant) சுழற்சி முறையில் பாயும்.


குளிர்பதனப் பொருளின் கொதிநிலை (boiling point) மிகக் குறைந்ததாக இருக்கும் (0 பாகை செல்சியசிற்கும் குறைவு!)

அது ‘அழுத்தி’யினுள் செலுத்தப்பட்டு உயரழுத்தத்துடன் வெளிப்படும், உயரழுத்த ஆவியான அதை ’ஒடுக்கி’யினூடகச் செலுத்துகையில் அது திரவமாக மாறும்.

இந்நிலையில் அது ஒரு பகுதி வெப்பத்தை வெளியேற்றிவிடும் (ஒடுக்கியிலிருந்து வெப்பம் சுற்றுச்சூழலுக்கு வெளியேறும்)

பின்னர், உயரழுத்த திரவமான அதனை ’விரிவாக்கி’யினூடாகச் செலுத்துகையில் அது விரிவடையும், அவ்வாறு விரிவடைகையில் அதன் அழுத்தம் குறையும்,

அழுத்தம் குறைந்த அத்திரவம்

’ஆவியாக்கி’யில் செல்கையில் வெப்பமேற்று வாயுவாகும்.

ஆவியாக்கி குளிரூட்டிப் பெட்டியினுள் இருக்கும் (பொதுவாக இது உறைவறையின் (freezer) பெட்டியாக அமைக்கப்பட்டிருக்கும்!)

இங்குதான், குளிர்பதனப் பொருள் குளிரூட்டி அறையின் வெப்பத்தை ஏற்று ஆவியாகிறது.

ஆக, இந்தச் சுழற்சியில் குளிர்பதனப் பொருள் ஆவியக்கி மூலம் குளிரூட்டிக்குள் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, ஒடுக்கியின் மூலம் அதனை சுற்றுச்சூழலில் வெளியேற்றுகிறது.

இச்சுழற்சி தொடர்ந்து நிகழ நிகழ குளிரூட்டியினுள் இருக்கும் வெப்பம் மெல்ல குறைந்து கொண்டே வரும். (ஆனால் இதற்கு ஒரு எல்லை இருக்கிறது, ஒரு கட்டத்தில் குளிரூட்டியின் உட்பக்க வெப்பம் குளிர்பதனப் பொருளின் ஆவியாதல் வெப்பத்தைக் காட்டிலும் அதிகமாக குறைவாக இருக்கும், அப்போது குளிர்பதனப் பொருளால் மேற்கொண்டு வெப்பத்தை உறிஞ்ச இயலாத நிலை ஏற்படும், அதற்குக் கீழ் நம்மால் குளிரூட்ட இயலாது!)


இப்படத்தில் குளிரூட்டு உறுப்புகள் குளிரூட்டுப் பெட்டியில் (பொதுவாக) எங்கே அமைந்திருக்கும் என்று தோராயமாகக் காட்டியுள்ளேன்.

அழுத்தி என்பது கீழே இருக்கும். இதனோடு ஒரு விசைப்பொறி (motor) இணைக்கப்பட்டிருக்கும். குளிரூட்டி இயங்குகையில் நமக்குக் கேட்கும் ஒலி இதிலிருந்துதான் வருகிறது.

விரிவாக்கி என்பது ஒரு தனி கருவி அல்ல, அது ஒரு மிக நுண்ணிய புழை கொண்ட குழாய் அவ்வளவே, அந்த நுண்டுளை வழியாக வாயு வெளியேறுகையில் அழுத்தம் குறையும்.

ஒடுக்கி பெட்டியின் பின்புறம் இருக்கும். இதிலிருந்து வெப்பம் வெளியேறும். (எனவேதான், ஒரு குளிரூட்டியை ஒரு மூடிய அறைக்குள் திறந்த நிலையில் வைத்து இயக்கினால் அறை குளிராகாது மேலும் வெப்பமேறும்!)

இதே அடிப்படையில்தான் காற்பதனி/ குளிர்பதனியும் (Airconditioner, A/c) இயங்குகிறது. அதிலும் இதே உறுப்புகள் இருக்கும்.

ஆவியாக்கி அறைக்குள் இருக்கும். மற்ற பாகங்கள் தனிப்படுத்தப்பட்டு அறைக்கு வெளியே இருக்கும்.

அறைக்குள் இருக்கும் காற்று ஆவியாக்கியில் பட்டு குளிராகும். (ஆவியாக்கிக்குள் வரும் குளிர்பதனப் பொருள் அறைக்காற்றின் வெப்பத்தை ஏற்றுக்கொண்டு, ஒடுக்கி மூலம் அறைக்கு வெளியேவிடும்.)

இதில் கவனிக்க வேண்டியது, அறைக்காற்றின் வெப்பம் மட்டுமே வெளியேற்றப்படுகிறது, அறைக் காற்றே அல்ல! (அதாவது, குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் இருக்கும் காற்றே மீண்டும் மீண்டும் அவ்வறைக்குள் செலுத்தப்படும். உயிர்வளியின் அளவு குறையாமல் இருக்க வெளிக்காற்றைச் சற்று கலக்கும் படி அமைத்திருப்பர். மேலும், சரியான காற்றுச் சுழற்சிகளையும் அறையில் ஏற்படுத்தியிருத்தல் தேவை!)

வெப்பச் சுழற்சி மட்டுமின்ற மின், காந்தம் என்று வேறு பல முறைகளிலும் குளிரூட்டலாம். அறிவியல் சோதனைகளில் தேவைப்படும் மிக தாழ் வெப்பநிலைகளை உருவாக்க காந்தப் புல மாற்றங்களால் ஏற்படும் குளிர்வு கைக்கொள்ளப்படுகிறது.

Friday 10 July 2020

கல்வியின் மூலம்தான் மாற்றம் சாத்தியம் என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் !!!


CBSE, students


பொதுமுடக்கத்தால் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள கால விரையத்தை சரி செய்ய 2020 -21 க்கான CBSE வாரியத்தில் 9 - 12 ஆம் வகுப்புப் பாடங்கள் 30 சதவீதம் குறைப்பு என்ற பெயரில் இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையான கருத்துக்களை பாடத்திட்டத்திலிருந்து துணிச்சலாக நீக்கியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு.அரசமைப்பு சட்டத்தை முழுமையாக மாற்றுவதற்கு முன்னர் அதன் உயிரோட்டமுள்ள உறுப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் முயற்சியின் அடுத்தகட்ட நகர்வுதான் இது.
9 ஆம் வகுப்பு பாடத்தில் ஜனநாயக உரிமைகள் என்ற பாடம் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.
10 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து ஜனநாயகம்,பன்முகத்தன்மை,பாலினம்,சமயம், சாதி, இயக்கங்கள், போராட்டங்கள், மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான சவால்கள் ஆகிய அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
11 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய அத்தியாயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
12 ஆம் வகுப்பு பாடத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வெளியுறவு கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி,திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டங்களில் இருந்து இவற்றை நீக்குவதின் மூலம் இந்தியா என்ற மகத்தான பன்முக தேசத்தை கட்டமைக்கும் சித்தாந்தத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு முறைப்படி கடத்தும் முயற்சிக்கு தடை போட்டுள்ளனர்.
எவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டாலும் இழப்புகள் ஏற்பட்டாலும் இலக்கை நோக்கிய பயணத்திலிருந்து ஒரு நூல் அளவு கூட விலக மாட்டார்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் இந்த நாட்டில் முஸ்லிம்களின் குடியுரிமை, கலாச்சாரத் தனித்தன்மை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகிய அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்கள் என்ன திட்டத்தை நாம் வைத்திருக்கிறோம்.அதை நம்மில் எத்தனை பேருக்கு பயிற்றுவித்திருக்கின்றோம். இந்த நாட்டில் நமது பிள்ளைகளை எத்தகைய சூழலில் விட்டுச் செல்லப் போகின்றோம். தனியொரு முஸ்லிமாக உங்களின் சமூக இலக்கு எது?ஒரு சமூகமாக நமக்கான இலக்கு எது? இந்த நாட்டில் நமது பிள்ளைகளுக்கான இலக்கு என்று அவர்களுக்கு எதை கற்பிக்கின்றோம் ?
இன்றைய நமது வாழ்வாதார நெருக்கடிகள் இன்ஷா அல்லாஹ் நாளை மாறிவிடலாம் ஆனால் பெருகிவரும் கல்வி சமூக அரசியல் சிக்கல்களுக்கு தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தாமல் போனோம் என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

The Central Board of Secondary (CBSE) has reduced up to 30 per cent of the syllabus for the 2020-21 academic session for classes 9 to 12. The idea is to reduce the course load for studens in the wake of the global crisis.

According to the updated curriculum, the chapters deleted from the Class 10 syllabus are those dealing with democracy and diversity, gender, religion and caste, popular struggles and movement and challenges to democracy.

For Class 11, the deleted portions include the chapters on federalism, citizenship, nationalism, secularism and growth of local governments in India.

Similarly, Class 12 students will not be required to study the chapters on India's relations with its neighbours -- Pakistan, Myanmar, Bangladesh, Sri Lanka and Nepal, the changing nature of India's economic development, social movements in India and demonetisation, among others.


Source : https://www.business-standard.com/article/education/cbse-syllabus-reduced-list-of-chapters-deleted-in-history-political-science-know-complete-revised-cbse-syllabus-for-class-9-10-11-12-120070800661_1.html?fbclid=IwAR2wDN_Jhr1OaQWvFnwLjHQTUG33jqWnb3sgdmNgv466kHnlFr9f_Z2dA1s

Friday 3 July 2020

இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசி COVAXIN !!

இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசி covaxin -ஐக் கண்டு பிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். திருத்தணியைச் சேர்ந்த ஒரு விவசாயி மகன்.ஜிகா வைரஸ்ஸுக்கு எதிரான விலை குறைந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்தவரும் இவரே!கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில், உலகமெங்கும் அதற்கான மருந்து, தடுப்பூசி என பலரும் பலமுனைகளில் தீர்வு காண முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாதைச் சேர்ந்த ‘பாரத் பயோடெக்’ 'COVAXIN' என்ற முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளனர். இதுவே இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசி ஆகும்.
அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்று அங்கேயே தங்கிவிட இருந்தவரை, தாய் நாடு திரும்பி வரச் செய்தது அவரது அம்மாவின் அன்பு!
அவரது பெயர் டாக்டர் கிருஷ்ணா எல்லா.
பாரத் பயோடெக் என்ற ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ‘Covaxin' தடுப்பூசி தயாரிப்பின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக அடைந்து, இரண்டாவது கட்டமான மனிதப் பரிசோதனைக்குத் தயார் நிலையில் இருப்பதாக அண்மையில் அறிவித்தது. அதன்படி, தேசிய மருந்தக ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.
“இது இந்தியாவில் முற்றிலும் தயாரான முதல் உள்நாட்டுத் தடுப்பூசி. இதுவே அரசின் தற்போதைய தலையாயப் பணியாக உள்ளது.மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இதைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்,” என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசி மருந்தின் மனிதப் பரிசோதனை இம்மாதம் ஜுலை 7 தொடங்கி, அதில் திருப்திகரமான முடிவுகள் வந்த பின்னரே, இதற்கு உரிய அனுமதி வழங்கப்படும்.
“மனிதப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டால், வரும் ஆகஸ்ட் 15, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்படும். பாரத் பயோடெக் இந்தத் தேதியை மனதில் கொண்டு வேகமாக செயல்பட்டு வருகிறது. எனினும் மனிதப் பரிசோதனையில் ஈடுபடும் அனைவரின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இதன் முடிவுகள் அமையும்,” என ஐசிஎம்ஆர் இயக்குனர் தடுப்பூசியை அனுப்பிவைத்த மருத்துவமனைகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்கு உட் படுத்தப்படும் இந்தியாவின் 12 மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்கள்... விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவா!

Thursday 2 July 2020

கருப்பை நீர்கட்டி கரைய இயற்கை மற்றும் சித்த மருத்துவம் !!











மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) (pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது
.சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.

இப்போது இருக்கின்ற நிறைய பெண்களுக்கு PCOS / PCOD கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்கிறது. இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்கை முறை என்று தான் சொல்ல வேண்டும்.

சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.
பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கருப்பை நீர்கட்டி அறிகுறிகள் (Ovarian Cyst Symptoms) (Neer Katti Symptoms in Tamil): பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இயற்கை மருத்துவம்


பெண்களின் நீர் கட்டி சாக்லைட் கட்டி கருகுழாய் அடைப்புகளை சரிசொய்யும் மூலிகை கழச்சிக்காய் ஆகும் இந்ந கழச்சி சூரணம் சாப்பிட பலன் அடைந்தவர்கள் ஏராலம் எப்படி சாப்பிடவேண்டும் தெறியுமா கழச்சிசூரணம் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் ஒரு கிளாஸ் கோதி வெண்ணீரில் அரை ஸ்பூன் சூரணத்தை கலந்து இளம் சூடாக இருக்கும் பதத்தில் காலை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும் நீர்கட்டிகள் சிறிது சிறிதாக கரைந்து குழந்தை பேறு கிடைக்கும் கெமிக்கல் உணவை தவிர்த்து வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும் சிக்கள் முட்டை தூரித உணவை தவிர்க்கவும்.

பெண்களின் கருப்பைக்கு பலம் கொடுக்கும் அசோகமரபட்டை 5 மருத்துவ குறிப்புகள்:
1.பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது அசோக மரம். அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்து தூள் செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து காலை – மாலை இருவேளை உண்டுவர வேண்டும். 

2.இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி அசோக மரத்திற்கு உண்டு. 

3.ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் இருக்கும். இவர்கள் கால் கிலோ அசோகப்பட்டை, மாவிலங்கப்பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை – மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

4.100 கிராம் அசோகப்பட்டை தூளுடன் 25 கிராம் பெருங்காயத்துளை கலந்து வைத்து கொள்ளுங்கள். இதில் 2 கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும். 

5.அசோக மரத்தின் பட்டைகள் மற்றும் மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும். கருப்பை கோளாறுகளை சரிசெய்ய அசோக மரப்பட்டை, மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும்.




கர்ப்பப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் குணப்படுத்தும் மருத்துவத்தை நாம் இங்கு காண்போம்.

கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்:- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் இந்த கழற்சிகாய் நாட்டு மருத்துவ கடையில் கிடைக்கும். இந்த கழற்சிகாய் காயாகவும், பொடியாகவும் கிடைக்கும்.

இந்த கழற்சிகாய் பார்ப்பதற்கு ஒரு கோலிகுண்டு போல் இருக்கும். இவற்றின் மேல் புறம் மிகவும் கடினமாக இருக்கும்.

இவற்றின் மேல் புற ஓட்டை ஒரு பக்கவாட்டில் உடைத்தால் அவற்றின் உள்ளே ஒரு பருப்பு இருக்கும்.

இந்த கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும்.

இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகள் குணமாகும்.

முக்கிய குறிப்பு:

குறிப்பாக இந்த மருந்தை உட்கொள்ளும் போது வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் கச்சக்காய்


நீர்கட்டி கரைக்கும் உணவுகள் / கருப்பை நீர்க்கட்டி கரைய நாட்டு மருத்துவ கடையில் அதிகமாகவே கிடைக்கும் இந்த கச்சக்காயை உண்டு வர கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) கரையும். இந்த கச்சக்காயை தினமும் சாப்பிட்டு வர கருப்பையில் உள்ள கெட்ட நீர்கட்டிகள் வெளியேறும்.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் வெந்தியம்



நீர்கட்டி கரைக்கும் உணவுகள்....

 கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) உள்ள பெண்களுக்கு கனையத்தால் சுரக்கப்படும் இன்சுலின், ஹார்மோன்களால் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை.

இதனால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதனை குணப்படுத்த வெந்தியமும், வெந்திய கீரையும் பயன்படுகிறது. தினமும் வெந்தியத்தை இரவில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் உண்ண வேண்டும்.

அதே போல் மதிய உணவுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இந்த நீரை உண்ண வேண்டும்.

அதே போல் இரவு உணவுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இந்த நீரை உண்ண வேண்டும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வர நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் குணமாகும்.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் இலவங்கப்பட்டை



 கருப்பை நீர்க்கட்டி கரைய தினமும் அதிகளவு உணவில் இலவங்கபட்டை சேர்த்துக் கொண்டால் பெண்களுக்கு நீர்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது. ஆகையால் தினமும் இலவங்பட்டையை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் ஆளி


 கருப்பை நீர்க்கட்டி கரைய ஆளி விதையில் அதிகளவு ஒமேகா மற்றும் புரத சத்து அதிகம் உள்ளது.

இந்த ஆளி விதை குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

ஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் துளசி


 கருப்பை நீர்க்கட்டி கரைய தினமும் காலை வெறும் வயிற்றில், எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் நீர்கட்டிகள் பிரச்சனைகள் குணப்படுத்தப்படுகிறது.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் தேன்


 கருப்பை நீர்க்கட்டி கரைய உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் பெண்களுக்கு நீர்கட்டி உருவாகின்றது. எனவே இதை கட்டுப்படுத்த தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனை கலந்து ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.

இவ்வாறு குடிப்பதன் மூலம் உடல் எடை குறைக்கப்படுகிறது. உடல் எடை குறைவதன் மூலமாக நீர்க்கட்டிகளும் கரைகிறது.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் நெல்லிக்காய்


கருப்பை நீர்க்கட்டி கரைய நெல்லிக்காய் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்து வர இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.

மலைவேம்பு இலைகள்:


மலைவேம்பு கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்யும் ஒரு சிறந்த தாவரமாகும். எனவே கருப்பை நீர் கட்டி கரையை மலைவேம்பு இலைகளை ஒரு கொத்து எடுத்து நன்றாக மைபோல் அரைத்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருக வேண்டும்.

கர்ப்பப்பை கட்டிகள் கரைய மலைவேம்பு காசாயம் அருந்தும் முறை:

மாதவிடாய் வாய்ந்த முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் வரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இந்த முறையை முதல் மூன்று மாதங்களை வரை தொடரலாம். இவ்வாறு செய்வதினால் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாகும்.

இந்த கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயம் கருப்பை நீர் கட்டிகள் கரைய ஆரம்பிக்கும்.

எந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்?


நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நீர்க்கட்டி குணமாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீர் கட்டி குணமாக முடிந்த அளவு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்


மைதா, ரவை, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

கர்ப்பப்பை கட்டிகள் குணமாக உடற்பயிற்சி:


நீர் கட்டி குணமாக காலை, மாலை என்று இரண்டு வேளை நடந்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தளவு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல முறையாகும்.

நன்றி : டாக்டர் கோவிந்தம்மாள் ராஜகோபால் , பூமா நர்சிங்ஹோம்,மதுரை.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.