Thursday 2 July 2020

கருப்பை நீர்கட்டி கரைய இயற்கை மற்றும் சித்த மருத்துவம் !!











மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) (pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது
.சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.

இப்போது இருக்கின்ற நிறைய பெண்களுக்கு PCOS / PCOD கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்கிறது. இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்கை முறை என்று தான் சொல்ல வேண்டும்.

சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.
பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கருப்பை நீர்கட்டி அறிகுறிகள் (Ovarian Cyst Symptoms) (Neer Katti Symptoms in Tamil): பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இயற்கை மருத்துவம்


பெண்களின் நீர் கட்டி சாக்லைட் கட்டி கருகுழாய் அடைப்புகளை சரிசொய்யும் மூலிகை கழச்சிக்காய் ஆகும் இந்ந கழச்சி சூரணம் சாப்பிட பலன் அடைந்தவர்கள் ஏராலம் எப்படி சாப்பிடவேண்டும் தெறியுமா கழச்சிசூரணம் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் ஒரு கிளாஸ் கோதி வெண்ணீரில் அரை ஸ்பூன் சூரணத்தை கலந்து இளம் சூடாக இருக்கும் பதத்தில் காலை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும் நீர்கட்டிகள் சிறிது சிறிதாக கரைந்து குழந்தை பேறு கிடைக்கும் கெமிக்கல் உணவை தவிர்த்து வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும் சிக்கள் முட்டை தூரித உணவை தவிர்க்கவும்.

பெண்களின் கருப்பைக்கு பலம் கொடுக்கும் அசோகமரபட்டை 5 மருத்துவ குறிப்புகள்:
1.பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது அசோக மரம். அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்து தூள் செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து காலை – மாலை இருவேளை உண்டுவர வேண்டும். 

2.இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி அசோக மரத்திற்கு உண்டு. 

3.ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் இருக்கும். இவர்கள் கால் கிலோ அசோகப்பட்டை, மாவிலங்கப்பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை – மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

4.100 கிராம் அசோகப்பட்டை தூளுடன் 25 கிராம் பெருங்காயத்துளை கலந்து வைத்து கொள்ளுங்கள். இதில் 2 கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும். 

5.அசோக மரத்தின் பட்டைகள் மற்றும் மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும். கருப்பை கோளாறுகளை சரிசெய்ய அசோக மரப்பட்டை, மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும்.




கர்ப்பப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் குணப்படுத்தும் மருத்துவத்தை நாம் இங்கு காண்போம்.

கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்:- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் இந்த கழற்சிகாய் நாட்டு மருத்துவ கடையில் கிடைக்கும். இந்த கழற்சிகாய் காயாகவும், பொடியாகவும் கிடைக்கும்.

இந்த கழற்சிகாய் பார்ப்பதற்கு ஒரு கோலிகுண்டு போல் இருக்கும். இவற்றின் மேல் புறம் மிகவும் கடினமாக இருக்கும்.

இவற்றின் மேல் புற ஓட்டை ஒரு பக்கவாட்டில் உடைத்தால் அவற்றின் உள்ளே ஒரு பருப்பு இருக்கும்.

இந்த கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும்.

இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகள் குணமாகும்.

முக்கிய குறிப்பு:

குறிப்பாக இந்த மருந்தை உட்கொள்ளும் போது வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் கச்சக்காய்


நீர்கட்டி கரைக்கும் உணவுகள் / கருப்பை நீர்க்கட்டி கரைய நாட்டு மருத்துவ கடையில் அதிகமாகவே கிடைக்கும் இந்த கச்சக்காயை உண்டு வர கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) கரையும். இந்த கச்சக்காயை தினமும் சாப்பிட்டு வர கருப்பையில் உள்ள கெட்ட நீர்கட்டிகள் வெளியேறும்.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் வெந்தியம்



நீர்கட்டி கரைக்கும் உணவுகள்....

 கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) உள்ள பெண்களுக்கு கனையத்தால் சுரக்கப்படும் இன்சுலின், ஹார்மோன்களால் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை.

இதனால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதனை குணப்படுத்த வெந்தியமும், வெந்திய கீரையும் பயன்படுகிறது. தினமும் வெந்தியத்தை இரவில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் உண்ண வேண்டும்.

அதே போல் மதிய உணவுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இந்த நீரை உண்ண வேண்டும்.

அதே போல் இரவு உணவுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இந்த நீரை உண்ண வேண்டும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வர நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் குணமாகும்.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் இலவங்கப்பட்டை



 கருப்பை நீர்க்கட்டி கரைய தினமும் அதிகளவு உணவில் இலவங்கபட்டை சேர்த்துக் கொண்டால் பெண்களுக்கு நீர்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது. ஆகையால் தினமும் இலவங்பட்டையை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் ஆளி


 கருப்பை நீர்க்கட்டி கரைய ஆளி விதையில் அதிகளவு ஒமேகா மற்றும் புரத சத்து அதிகம் உள்ளது.

இந்த ஆளி விதை குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

ஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் துளசி


 கருப்பை நீர்க்கட்டி கரைய தினமும் காலை வெறும் வயிற்றில், எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் நீர்கட்டிகள் பிரச்சனைகள் குணப்படுத்தப்படுகிறது.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் தேன்


 கருப்பை நீர்க்கட்டி கரைய உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் பெண்களுக்கு நீர்கட்டி உருவாகின்றது. எனவே இதை கட்டுப்படுத்த தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனை கலந்து ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.

இவ்வாறு குடிப்பதன் மூலம் உடல் எடை குறைக்கப்படுகிறது. உடல் எடை குறைவதன் மூலமாக நீர்க்கட்டிகளும் கரைகிறது.

நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் நெல்லிக்காய்


கருப்பை நீர்க்கட்டி கரைய நெல்லிக்காய் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்து வர இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.

மலைவேம்பு இலைகள்:


மலைவேம்பு கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை சரி செய்யும் ஒரு சிறந்த தாவரமாகும். எனவே கருப்பை நீர் கட்டி கரையை மலைவேம்பு இலைகளை ஒரு கொத்து எடுத்து நன்றாக மைபோல் அரைத்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருக வேண்டும்.

கர்ப்பப்பை கட்டிகள் கரைய மலைவேம்பு காசாயம் அருந்தும் முறை:

மாதவிடாய் வாய்ந்த முதல் நாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் வரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இந்த முறையை முதல் மூன்று மாதங்களை வரை தொடரலாம். இவ்வாறு செய்வதினால் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை சரியாகும்.

இந்த கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வர நிச்சயம் கருப்பை நீர் கட்டிகள் கரைய ஆரம்பிக்கும்.

எந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்?


நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நீர்க்கட்டி குணமாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீர் கட்டி குணமாக முடிந்த அளவு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்


மைதா, ரவை, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

கர்ப்பப்பை கட்டிகள் குணமாக உடற்பயிற்சி:


நீர் கட்டி குணமாக காலை, மாலை என்று இரண்டு வேளை நடந்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தளவு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல முறையாகும்.

நன்றி : டாக்டர் கோவிந்தம்மாள் ராஜகோபால் , பூமா நர்சிங்ஹோம்,மதுரை.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment