Thursday 30 July 2020

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு மட்டும் ஏன் மத்தியரசை கடுமையாக எதிர்க்கிறது?

 வரைவு தேசிய கல்வி கொள்கை -2019 ...



இந்தியாவின் எல்லா மாநிலங்களும் அமைதியாக இருக்க தமிழ்நாடு மட்டும் ஏன் மத்திரசை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறது?


அதுக்கு இரண்டு காரணம்,
1) ஒன்னு இங்கிருக்கும் Inclusive Growth
2) இரண்டு மத்தியரசின் கொள்கைகள் எவ்வகையிலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தொடர்பில்லாமல் இருப்பது
சமீபத்திய உதாரணம் புதிய கல்வி கொள்கை,
மத்திய அரசு நடத்திய உயர்கல்வி நிலையங்களுக்கான கணக்கெடுப்பு - AISHE 2018-19 அறிக்கை கீழே இருக்கு.
இதன் படி. . .
தமிழகத்தில் உயர்கல்வி ஆசிரியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 இலட்சம்!
வேற எந்த மாநிலமும் அந்த எண்ணிக்கைக்கு பக்கத்துல கூட இல்ல!!
நம்மை விட 3 மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசத்தில் 1.4 இலட்சம்,
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மகாராஷ்டிராவில் 1.6 இலட்சம்
போலி போட்டோஷாப்புகள் மூலம் வளர்ந்த மாநிலமாக காட்டப்படும் குஜராத்தில் வெறும் 57 ஆயிரம்!
~~~
இப்போ நான் சொன்ன Inclusive Growth என்பதற்கு வருவோம்.
மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் பெண்கள் மட்டும். . .
தமிழ்நாடு - 48%
மகாராஷ்டிரா - 40%
உ.பி - 32%
குஜராத் - 40%
மொத்தம் ஆசிரியர் எண்ணிக்கையில் OBC/SC/ST வகுப்பினர் மட்டும். . .
தமிழ்நாடு - 82%
உ.பி - 36%
மகாராஷ்டிரா - 35%
குஜராத் - 29%
இந்தியளவிலான மொத்த எண்ணிக்கை ஒப்பீட்டில். . .
OBC
தமிழ்நாடு - 30%
மகாராஷ்டிரா - 7.8%
உ.பி - 8.5%
குஜராத் - 2.3%
SC
தமிழ்நாடு - 17%
மகாராஷ்டிரா - 14%
உ.பி - 9%
குஜராத் - 2.6%
ST
தமிழ்நாடு - 1.3%
மகாராஷ்டிரா - 7%
உ.பி - 0.9%
குஜராத் - 7%
தமிழ்நாட்டின் ST Reservation என்பதே 1% தான் என்பதை கவனத்தில் கொண்டால், Open Competition மூலம் நாம் ST நுழைவை சாத்தியப்படுத்தியிருப்பது புரியும்.
சீரான வளர்ச்சி, பரவலான வளர்ச்சி என்பதெல்லாம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் மட்டும் சாத்தியமாகியிருக்கு என்பதை இந்த பட்டியலே சொல்லுதா?
இதர தென்மாநிலங்களோ, ஏன் நீண்டகாலம் கம்யூனிஸ்ட்கள் வசமிருந்த மேற்கு வங்கத்திலோ கூட இப்படியான சீரான, பரவலான வளர்ச்சி சாத்தியமாகவில்லை என்பதை இந்த பட்டியல் உங்களுக்கு உணர்த்தும்.
அப்போ, நமக்கான கல்விக் கொள்கையை வகுக்க இந்தியாவில் யாருக்கேனும் தகுதி இருக்கிறதா?
அதிலும் குறிப்பாக குஜராத் கூட்டத்துக்கோ, அதன் வழி நிற்கும் மத்தியரசுக்கோ தகுதி இருக்கிறதா என்று நீங்களே முடிவு செய்துக்கோங்க.
மத்த மாநிலங்கள் எல்லாம் காலம் காலமா தன்னிடம் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை தராம, தட்டு தடுமாறி தத்தி தவழ்ந்து படித்து மேல ஏற முயற்சிப்பவனிடமும் Merit, தகுதி, திறமை என்று எகத்தாளம் பேசி, தன்னிலை உணராமல் அவன் தங்களுக்கு அடிமையாகவே இருக்கனும் என்று இந்துத்துவாவை திணித்து,
வளர்ச்சி என்பதை ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனா நம்ம தமிழ்நாடு அப்படியில்லை என்பதை தான் மத்தியரசின் புள்ளியியல் விவரங்கள் நமக்கு சொல்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. . .இதில் அரசு & தனியார் துறை ஆசிரியர்கள் மொத்த பேரும் கணக்கில் எடுக்கப்பட்டிருக்காங்க. அதனால Reservation மூலம் மட்டுமே எல்லாரும் மேல வந்துட்டாங்கன்னு யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. காரணம் தனியார் கல்லூரிகளில் Reservation மூலம் யாரும் வேலைக்கு சேர்ந்துவிட முடியாது.

பள்ளியில் படிக்கும் போதே தொழிற்கல்வி கற்பிப்பது நல்லதுதானே என்று கேட்பவர்கள் உண்டு. இரண்டு விஷயங்களைக் கோர்த்துப் பார்த்தால் இதன் விபரீதம் புரியும்- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்துவிட்டார்கள். பொதுவாகவே எட்டாவது படிக்கும் போதே ‘தையல் பழகிட்ட இல்ல...திருப்பூர் போனா நல்ல சம்பளம் வரும்’ என்ற பேச்சு வரும். ஃபெயில் ஆனால் உறுதியாக நிறுத்திவிடுவார்கள். எலெக்ட்ரீசியன், ப்ளம்பர் என்று அரையும் குறையுமாகத் தெரிந்து கொண்டு ‘இதுவரைக்கும் படிச்சது போதும்’ என்று படிப்பைக் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதன் பாதிப்பு கிராமங்களிலும், எளிய மக்களிடமும்தான் அதிகமாக இருக்கும். மாணவிகள் நிலைமை இன்னமும் பரிதாபமாக இருக்கும். அடுத்த இருபதாண்டுகளில் டிகிரி கூட முடிக்காதவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எழுதி வைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் தேசிய மொழி(National Language) எது எனக் கேட்டால் பலர் இந்தி(Hindi) என்று பதில் கூறுகின்றனர்.வட இந்தியாவைச் சேர்ந்தவர் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர்.ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல.
இந்தியாவின் அரசு ஏற்பு பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று.வட மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது.அவ்வளவுதானே தவிர இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.
அரசியல் அமைப்பு பிரிவு 343(1) இன் கீழ் இந்தி மொழியானது மத்திய அரசின் மொழிகளுள் ஒன்றாகும்.
இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்,பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்கவில்லை.
அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.தேசிய அளவில் இந்தி அலுவல் மொழியாகவும்,ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன.
அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கான அலுவல் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் தமிழ்மொழி, கேரளாவில் மலையாளம்,கர்நாடகாவில் கன்னடம்,ஆந்திராவில் தெலுங்கு,குஜராத் மாநிலத்தில் குஜராத்தி என அந்தந்த மாநில மொழிகளே அலுவலக மொழியாக உள்ளன.
இப்ப நான் சொல்வது இந்தி அரசு பள்ளியில் இல்லை,தனியார் பள்ளிகள் மண்டி போடுகின்றனர்,அரசு பள்ளி மாணவன் வடநாடு போக மாட்டான் போனா தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி வெற்றியுடன் திரும்புவான்
இப்ப யாருக்கு இந்தி வேணுமோ அவங்க படிக்கட்டும் நமக்கு என்ன எரியுது....
ஆனா கட்டாயம படி னா எரியும் ஏன்னா எம் அரசு பள்ளி மாணவன் சென்னை தாண்ட மாட்டான்.அவனுக்கு தேவையும் பேசுவது குறைவுஇப்ப ஒன்னு ஒன்னு
இந்தி வேணுமா வேணாமானு படிக்கும் மாணவன் முடிவு பண்ணட்டும்
கணினி வந்தப்பவும் இப்படி தான் கூவிட்டு அலைஞ்சம் இப்ப வீட்ல படுத்துட்டு அலுவலக வேலை செய்யல ....
அட போங்கப்பவேணுமா வேண்டாமாங்கறது மாணவனின் தேவையை பொருத்தது உங்க கருத்து அதுல ஏத்தாதிங்க ...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது இப்படித்தான்!

எந்த தேர்வு வைத்தாலும் முதல் மதிப்பெண் வாங்கும் ஒரு மாணவனுக்கு, கடைசி மதிப்பெண் பெறும் மாணவன் கல்வி கற்பது எப்படி என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லக்கூடாது, சொல்ல முடியாது என்பதை அனைவரும் உணர்ந்தால் சரி.

புதிய கல்வி கொள்கை எங்களுக்கு தேவையில்லை!!! மத்திய அரசே ???
நீங்கள் கடைபிடித்துவரும் கல்வி கொள்கையின் நோக்கத்தை தமிழகம் எஏற்கனவே அடைந்துவிட்டது. அதை பின்பற்றி 50% தை அடைவைத விட்டு சந்தனத்தை ஏன சாக்கடையாடு கலக்க விரும்புகிறீர்கள் என்றால்...
எதோ தமிழகம் மிகவும் சட்டம் ஒழுங்கு கெட்டுகிடக்கும் மாநிலம்,
அதுவும் கல்வி கூடத்திலே இப்படி நடக்கிறதே என கேட்ப்பது அறிவில்லாத வாதம் வடக்கே, பல மாநிலத்தைச் சார்ந்த வர்கள் வந்து பயிலும் தமிழ்நாட்டில் , யாரோ ஒருவர் கத்தி எடுக்கிறார் என்பதெல்லாம் தமிழ் நாடு பாடத்திட்டம்.அல்ல .'' கத்தியைத் தீட்டாதே , உன் புத்தியைத் தீட்டு '' என்பது தான் இங்கு பாடம் . பாடம் புகட்டுவோர்க்கே பாடம் புகட்டுவது தான் நாட்டின் சாபக்கேடு .
புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?? எதிர்க்கிறதா???? இந்தியாவில் எந்தெந்த மாநிலங்கள் எதிர்க்கின்றன???
ஆதரிக்கின்றன???? கேரளா ஆந்திரா கர்நாடகா, மஹாராஷ்ட்ரா
ஆதரிக்கிறதா??? எதிர்க்கிறதா???
காத்திருந்து பார்போம் !!!!

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment