Wednesday 28 October 2020

கிராம நிர்வாக அதிகாரியின் (V.A.O )பணி என்ன..? நாம் எத்தனை பேருக்கு தெரியும்..?

கிராம நிர்வாக அதிகாரியின் (V.A.O )பணிகள் !!


1. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
8. காலரா, டெங்கு, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தொற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
9. இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுகாத்தல்.
13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
15. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்து கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
23. அரசாங்கம் அவ்வப்பொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல்.

Thursday 8 October 2020

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை?

மனித உடல் மிகவும் அதிசயமாகவும் வியக்கத்தக்க விசயத்தை கொண்டு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என்பதே முதலில் அதிசமயமான ஒன்றுதான்.


உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.
ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.
மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.
பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.
அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.
நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.
ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.
இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.
ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே.
பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.
விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.
மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.




உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.
மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.
ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.
ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.
பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.
கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.
குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.
குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.
சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்...



உடலைப் பற்றியும் அதன் உறுப்புக்கள் பற்றியும், எனக்கு தெரிந்த படித்த சிந்திக்கவைக்க செய்த சில பதில்களை கேள்விகளாக தருகிறேன் .

1.நமது முலையின் அனிச்சை செயல் பள்ளி புத்தகத்தில் படித்ததில் இருந்து அதிசயமாக உள்ளது .

எ .கா. தீயின் அருகில் விரலை கொண்டு செல்லும்போது சூடான உடனே விரலை எடுப்பது.

2.உடலின் உள்ளுறுப்புகளை படலங்களை கொண்டு பாதுகாக்க செய்வது.

எ .கா . இதயத்தின் பெரிகார்டியம்

3.நாம் உண்ணும் உணவில் நீர்ச்சத்து மற்றும் இதர சத்துக்களை பிரித்து தேவையானவற்றை தேவையான இடத்திற்கு அனுப்புவது .தேவையில்லாதவற்றை மலமாக அனுப்புவது.

4.(அருவெறுப்பு உடையவர்கள் இதை படிக்காமல் அடுத்திற்கு போகலாம்)

உடலின் தேவையில்லாதவைகளை நீர்பொருளை சிறுநீராகவும் மற்றவைகளை மலகாவும் வெளியேற்றுகின்றது .இதில் வெளியேற்றும் நிகழ்வானது அனைத்து நேரத்திலும் வெளியேற்றாமல் ஒரு உணர்வின் முலம் வெளியேற்ற செய்வதும் அதிசயமானது தான்.மேலும் ஆசனவாய் பகுதியில் எவ்வித கருவிகள் இல்லாமல் உணர்வின் மூலம் மட்டுமே கழிவுகளை வெளியேற்றுவது ஒரு அதிசயமான உணர்வு .

5.உடலில் தூசி நுழைந்தால் அதை தும்மல் மூலமாக வெளியேற்ற செய்வது.

மேலும் தும்மும் பொது ஒரு வினாடி ஊழலில் செயல் நின்று துவங்கும் இதை என்றாவது கவனித்தது உண்டா.

6.கரு உருவாக்குதலில் தொடங்கி குழந்தையாக மாறி வெளியேறுவதும் அதிசயம் தான் .

7விலங்களில் இருந்து பரிணாமம் பெற்ற நாம் ,நம் நம் குழந்தைக்கு உடலில் ரத்தத்தை பாலாக மாற்றி உணவாக தரச்செய்யும் முறை அதிசயத்தின் அதிசயம் ஆகும்.

8.சுவாசத்தின் மூலம் மனிதனை இயக்க செய்வது அனைத்திற்கும் மேலான அதிசயம்.

இவ்வாறு உடலில் ஆயிரக்கணக்கான அதிசயங்கள் உள்ளது,சொலில்லிக்கொண்டே போகலாம்,இந்த மனித உடலே அதிசயத்தக்க விஷயம்தான். உடலில் உள்ள ஒவ்வொரு விஷயமும் அதிசயத்தக்க விஷயம்தான்,எவ்வளவு பெரிய அதிசயங்களைச் ஓவ்வொரு நிமிடமும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அப்பப்பா!