Wednesday 31 July 2019

தாழ்வு மனப்பான்மையை நீக்கி வாழ்வில் வெற்றி பெற சில வழிகள்(How to remove inferiority complex and get successful life)?

வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,மனஅமைதியையும் தேடுங்கள்... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப் போவதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........
வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்க கூடாது. வாழ்வில் போராடி ஜெயிப்பதுதான் உண்மைமையான வெற்றி...
நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான *போராட்டக் களத்திலே* வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...
மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
ஏழையாக எதோ ஒரு நினைவோட வாழ்ந்துவிட்டு போய்டலாம்,,
1.என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.*
2. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்து அதில் வெற்றி பெறுங்கள்.
4. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாது.
5. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
6. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. நீங்கள் அந்த மொழியில் பயிற்சி செய்து சிறப்பான முறையில் பேசிக் காட்டுங்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள். சிரித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
8. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள். நம் உடம்பிற்க்கும், உயரத்திற்கும், நிறத்திற்கும் அழகிற்கும், வயதிற்க்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள். யாருடனும் யாரையும் ஒப்பிடாதீர்கள். யார் என்ன சொன்னாலும், ரசித்தாலும், வெறுத்தாலும். நாம் நன்றாகவும், ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருப்பதாக உணருங்கள். உங்களை நீங்களே நம்புங்கள். நீங்கள் தன்நம்பிக்கையும், மனமகிழ்ச்சியும், மாற்றத்தையும் ஒவ்வொரு முறையும் உணர்வீர்கள்.
ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகையும், சிரிப்பும் ஒரு மருந்தாக இருக்கும்....
வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... 
அன்பை அதிகமாகவும்,கோபங்களைகஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...
அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும், அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது...
அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?
நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது நமக்கு புரிவதில்லை...
நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....
இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாதது.. ஏனெனில் ...இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம்...
இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக் கொள்கிறோம்...ஆனால் எத்தனை வயது ஆனாலும், “*எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!
வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை.
எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....
 வாழ்க்கை என்னவோ நரகத்தைப் போல வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....
இனி எதற்கும் " ஏன்" என கேள்வி கேட்காதீர்கள் என்று சொன்னால் ....அதற்கும் ... "ஏன்" என்று கேட்பார்கள்
சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.
தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்!
சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து உனை சீரழிக்கும் துரோகியை விட ... முறைத்துக் கொண்டே உன் முன்னிருக்கும் எதிரி மேலானவன்!.....
அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது
கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
பூனையை விட சிங்கம் வலிமையானது என்றுஎலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.
நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது.....
உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..
அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா " பிரச்சினைகளுக்கும் இந்த வாய் தான் காரணம்..!!!
வாழ்வோடு போராடிச் சாவதிலும் சாவோடு போராடி வாழ்வதிலுமே...வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!
வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வோம் நலமுடன் வளமுடன் என்னாளும்...
மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை மனதில் எளிதில் போக்கி வாழ்வில் வெற்றி பெறலாம்.

தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல் 

Monday 22 July 2019

அரபு நாட்டு வாழ்கை முன்பு போல் இல்லை....

உள்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதாலும், கச்சா எண்ணெயின் விலை பாதியாக குறைந்ததாலும் இந்தியா போன்ற வெளிநாட்டினருக்கு வேலையிழக்கும் அபாயம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தாலும் இனிவரும் காலங்களில் மேலும் அபாயத்தை எட்டும் என்பது தெரிகிறது.
அடுத்த 10 ஆண்டு(2030)களுக்குள் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையின்றி நாடு திரும்பும் ஆபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தயார் நிலைக்கு வந்து விடுவது சிறந்தது.
பணத்தை சேமித்து தொழில் தொடங்குங்கள். அதற்கு முன்பு முதலில் செலவை குறையுங்கள்.
ரூ 20 ஆயிரத்தில் குடும்பம் நடத்தியவர்கள் ரூ 14 ஆயிரத்தில் குடும்பம் நடத்த பழக வேண்டும்.
வீண் செலவுகளை குறைக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். சிக்கணமாக செலவு செய்ய வேண்டும். பணத்தை சேமிக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருக்கும்போதே இந்தியாவில் நம்பிக்கையான ஆள் இருந்தால் ஏதேனும் தொழில் தொடங்கி 6 மாதம், ஒரு வருடம் அதன் லாப, நஷ்டம் அறிந்து அதன் ஆழம் தெரிந்து இந்தியா வர வேண்டும்.
நம்பிக்கையான ஆள் இல்லாதவர்கள் சேமித்த பணத்தை ஊருக்கு வந்தவுடன் அனுபவம் இல்லாத தொழிலில் போடாமல், அந்த பணத்தை தனியாக பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அந்த பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தொடாமல், முதலில் உங்களுக்கான வேலையை இந்தியாவில் தேடிக்கொள்ளுங்கள். ரூ 10 ஆயிரம் சம்பளம் கிடைத்தாலும் போதுமானது. மாதா மாதம் நிரந்தர வருமானம் வரும் அளவுக்கு ஒரு வேலையை தேடிக்கொள்ளுங்கள். அந்த சம்பளத்தில் இரண்டு, மூன்று, நான்கு மாதங்கள் குடும்பம் நடத்தி, அதே கட்டத்தில் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எந்த தொழில் தொடங்கினால் அல்லது எந்த தொழிலில் முதலீடு செய்தால் லாபம் தருமோ அதை அனுபவப்பூர்வமாக அறிந்து அதில் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துங்கள்.
அடுத்தவர் பேச்சை கேட்காமல் அனுபவத்தை நேரடியாக களத்தில் நீங்களே உணர்ந்து முதலீடு செய்யுங்கள். பலரிடம் ஆலோசனை கேளுங்கள். முடிவை நீங்களே எடுங்கள்.
வெளிநாட்டு பணத்தை அகல கால் வைக்காமல் கொஞ்சம், கொஞ்சமாக முதலீடு செய்து முறையான வருமானம் வரும் வரை தேடிய வேலையை விட்டு விடாதீர்கள்.
குறைந்த பணம் ரூ 50 ஆயிரமும், கடின உழைப்பும் இருந்தால் இந்தியாவில் ரூ 20 ஆயிரம் தாராளமாக சம்பாதிக்கலாம்.
இந்தியாவில் ஹலாலான முறையில் பணம் சம்பாதிக்க ஆயிரம், பத்தாயிரம் தொழில் இருக்கிறது.
வெளிநாட்டிலுள்ளவர்கள் கவலைப்பட தேவையில்லை. அல்லாஹ் இருக்கிறான். தைரியமாக இருங்கள். ரிஜ்க் அளிப்பவன் அல்லாஹ்...